நிலா-5
அவள் "யார் நீ" என்றதும்... அந்த அறையே அதிரும் வண்ணம் ராட்சசன் போல் சிரிக்க, வெளியில் அவர்கள் அறைக் கதவு உடைப்பது போன்று பலம் கொண்ட மட்டும் தட்டும் சத்தம் கேட்டது.
"நான் யார்னு உன் அருமை மாமனாரு சொல்லுவாரு, அவர் தான் இப்படி தட்டிகிட்டு இருக்காரு போய் திற" என்றான் அவன்.
நிறை மதி அவனை முறைத்துவிட்டு, கதைவை திறக்க, வரதனும், அருணனும் உள்ளே பிரவேசித்தவர்கள்..
அங்கு கால் மேல் கால் போட்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து எதுவும் நடவாதது போல், பயமின்றி அமர்ந்திப்பவனைக் கண்ட வரதனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ரௌத்திரம் வந்தததோ "அருச்சிகா.." என்று கத்திக் கொண்டுஅருகில் வேகமாகச் சென்றவர்.
அவன் சட்டைக் காலரைப் பற்றி தூக்கி.. "ராஸ்க்கல் திரும்பவும் என் குடும்ப நிம்மதிய கெடுக்க வந்துட்டியாடா, கொலைகார பாவி" என்று கன்னத்தில் அறையப் போக அவர் கையைப் பற்றி தடுத்து கீழே தள்ள, தடுமாறி கீழே விழப் போனவரை "அப்பா, மாமா" என்ற கூவலோடு அருணும், மதியும் தாங்கிப் பிடித்தனர்.
"என் மேலையே கையை வைக்கிறியாயா கிழவா, நான் யாரு தெரியும்ல இப்போ உன்னை விட பல ஆயிரம் கொடி சொத்துக்கு அதிபதி கிரேட் அருச்சிகன்.." என கர்ஜித்தான்.
"த்து.. நீ பல கோடி சொத்துக்கு அதிபதியா இருந்தா எனக்கு என்னடா, நீ செத்தா எனக்கு என்ன டா, ஏன் டா என் மகன் வாழ்க்கைகுள்ளையும், மருமகள் வாழ்க்கைகுள்ளையும் குறுக்க வந்தே.. இவனை இந்த வீட்லையே அடைச்சு வச்சுட்டு, திருட்டுத் தனமா தாலி கட்டிருக்கே.. உனக்கு வெட்கமாக இல்லை" என்று கூறினார்.
"நான் ஏய்யா வெட்கப்படணும்.. அவனுக்கு ஐந்து நிமிடம் முன்னாடி பிறந்தவன், நான் இருக்கும்போது எனக்கு கல்யாணம் பண்ணாமல், அவனுக்கு பண்ணி வைக்க பார்த்த நீ தான்யா.. தூக்குல தொங்கனும்"என்று அருச்சிகன் பதிலுக்கு சீறினான்.
"இதான் டா உன் புத்தி.. பெத்தவன் அப்படின்ற மரியாதை இல்லாமல் சாக சொல்றியே.. நீ எல்லாம் எனக்கு மகனே இல்லை டா.. அவனை அடைச்சுப் போட்டுட்டு தாலி காட்டுனா இந்தக் கல்யாணத்தை நான் ஏத்துக்கனுமா.. இப்போவே அந்த தாலிய அறுத்து உன் முகத்துல எறிஞ்சுட்டு, நாளைக்கே என் மகன் அருணனுக்கும், மதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் பாரு டா" என்று அவர் வேகமாக மதியை நெருங்க..
அதில் கோபம் கொண்ட அருச்சிகன்.. " என்னைத் தாண்டி ஒரு அடி எடுத்து வச்சு என் பொண்டாட்டி பக்கத்துல போனாலும் பெத்தவருன்னு கூட.. பார்க்காமல் தலையைத் துண்டாக்கிருவேன்" என்று கண்களில் கனல் கக்க கூற..
"கொலை கார பாவிக்கு கொலை பண்ற புத்தி தானடா வரும், எங்க மேல அப்படி என்ன டா உனக்கு வன்மம், எங்களை விடுடா அந்த பொண்ணு என்னடா பண்ணுச்சு, அது வாழ்க்கையை கெடுக்க பார்க்குறியே டா பொறுக்கி நாயே" என்று திட்டியவர்..
கண்கலங்க நின்ற மதியின் அருகில் சென்று, "மதிமா இந்த மாமாவ மன்னிச்சுடுமா, இப்படி உன் வாழ்க்கையை பலி கொடுத்துட்டேன் டா" கண்கலங்க கூறினார் வரதன்..
"மாமா இவரு யாரு .." உணர்ச்சியற்ற கேட்டாள் நிறைமதி.
"இவனும் என் புள்ளை தான் மா, இவனும் அருணனும் ரெட்டை பிறந்தவங்க, இவன் ஒரு பொறுக்கி, குடிகாரன் மா.. என மகனைப் பற்றி நடத்தை சான்றிதழே கொடுத்தார்.
"நீங்க ஏன் மாமா என்கிட்ட முதலையே சொல்லல" உணர்ச்சி அற்ற குரலோடு கேட்டாள்.
"இவனை நானே தலை முழிக்கிட்டேன் மா,அப்புறம் எப்படி மா இவனைப் பத்தி உன்கிட்ட சொல்லறது.. இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை மா.. இந்த தாலியைக் கழட்டி அவன் முகத்தில வீசிட்டு வாம்மா.. உனக்கு புது வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறேன்."
"ச்சு.. ச்சு.. என்ன பொண்டாட்டி அதான் உன் மாம... னாரு சொல்றாருல, கழட்டி கொடு மா கேலியாகக் கூறியவன் முகம் அடுத்த நிமிடமே ஜிவு ஜிவு என்று சிவக்க "தாலில கையை வச்சு பாருடி அப்புறம் நீயும் உயிரோடு இருக்க மாட்டே அந்நியன் விக்ரம் போன்று பேசியவனை பார்த்து சற்று நடுங்கித் தான் போனாள் பேதையவள்!
அருணன் அருகில் சென்று "என்னடா நல்லவனே..! இத்தனை வருஷம் சந்தோசமா இருந்துட்டியா,இனி இருக்க மாட்டே, ஏன்னா உன்னோட மிகப் பெரிய சந்தோஷமான அவளையே நான் பறிச்சுக்கிட்டேன், இனி உனக்கு சொந்தமான ஒவ்வொன்றையும் நான் பறிப்பேன் டா" என அமைதியாக ஆழ்ந்த குரலில் அவன் காதருகில் கூறினான்.
பிறகு மதியை தனதருகில் பிடித்து இழுத்து நிறுத்தியவன், "இவளுக்கு இந்த ஜென்மத்துல புருஷன்னு ஒருத்தன் இருந்தான்னா, அது இந்த அருச்சிகன் மட்டும் தான், இதை மீறி அப்பனும், மகனும் எங்களுக்கு இடையில் வர பார்த்தீங்க காரியம் பண்ண எலும்பு கூட மிஞ்சாத அளவுக்கு செஞ்சுடுவேன்" அழுத்தமாக கூறினான்.
அருணனோ "இங்க பாருடா என் மேல கோபம் இருந்தால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு, ஆனால் மதிய எதுவும் கஷடப்படுத்திடாதே" என்க..
வரதனோ.. "என்ன டா மிரட்டுறியா.. எதுவாக இருந்தாலும் விடியட்டும் உன்னை வச்சுக்கிறேண்டா என்றவர், மதி வாம்மா போவோம்" என்று அழைத்தார்.
"யோவ்.. அறிவுகெட்ட வரதா நீயும் கல்யாணம் பண்ணி எப்படியா ரெண்டு பிள்ளைகளை பெத்தே அதுவும் ட்வின்ஸ், இன்னைக்கு எனக்கும் அவளுக்கும் நைட் மேட்ச் இருக்கு அது தெரிஞ்சும் அவளைக் கூப்பிடுற வெளிய போயா.."என்றான்.
அவன் பேசியதில் கோபம் பொங்க மதி பார்க்க.. வரதனோ "ச்சீ.. அப்பன் கிட்ட பேசுற மாதிரி பேசுறியா டா.." முகத்தை சுளித்துக் கொண்டு கூற..
நீ அப்பன் மாதிரி நடந்துகிட்டியாய.. வரதா.. என் பொண்டாட்டிய முதல் இரவு அதுவுமா பிரிக்க பார்க்குறியே வெளிய போயா.. "என்க..
வரதனை மரியாதை இல்லாமல் விழிப்பதை பார்த்து பொறுக்காதவள்.. "மாமா.. நீங்க போங்க நான் சமாளிச்சுகிறேன்" என்றாள் மதி.
அவளை மனம் இல்லாமல் வரதன் விட்டுச் செல்ல.. அருணனோ அவளை இயலாமையோடு பார்த்துவிட்டுச் சென்றான்.
அவர்கள் சென்றதும் கதைவை தாழ்பால் போட்டவன் "என்ன நிலா நைட் மேட்ச ஆரம்பிச்சுடலாமா..? " கண் சிமிட்டிக் கேட்க..
"உன்னோட பொறுக்கித் தனத்தை எல்லாம் வேற எங்கையாவது வச்சுக்கோ, என்கிட்ட வேண்டாம்.நீ என் கழுத்துல தாலி தாண்டா கட்டிருக்கே ஆனால், அருணன் எனக்கு முத்தாமே.."என்பதற்குள் அவள் குரல் வலையைப் பிடித்தவன்..
"இனி ஒரு தடவை அவன் பேரு உன் வாயில வரக்கூடாது, வந்தா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது" என உதறியவன்.
அவள் அருகில் கீழே அமர்ந்து.. "டாக்டர்க்கு படிச்சுக்கிட்டு இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கியே பேபி.."
"அவன் என்னைக்காவது உன்னை நிலான்னு கூப்பிட்டுருக்கானா.."என்றவனை.
குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்து "அப்படின்னா அது நீயா..? "
"இப்பவாவது பல்பு எரிஞ்சதே.. அன்றைக்கு ஹோட்டல்க்கு வந்திங்களே ரெண்டு பேரும் , அவன் உனக்கு ப்ரொபோஸ் பண்ண போற சமயத்தில் ஒரு முக்கியமான கிளைன்ட்ட கால் பண்ண வச்சேன், அவனும் அந்த கால அட்டென்ட் பண்ண போய்ட்டான், அவன் போன் சைலென்ட்ல இருந்ததால உனக்கு சத்தம் கேட்கல, அப்போ உனக்கு இந்த மோதிரத்தை போட்டு ப்ரொபோஸ் பண்ணது நான் தான், நீ பார்த்து மயங்குன கண்ணு இந்த கண்ணதான், நீ உணர்ந்தது அவன் உருவம் மாதிரியே இருக்கின்ற என்னைத்தான்" என்றவன்
"சும்மா சொல்லக்கூடாது நல்லாவே கிஸ் அடிச்ச.."என்றவனை முறைத்தாள் மதி.
"அப்புறம், நீ அன்னைக்கு கனவுன்னு நினைச்சுகிட்டு இருந்தியே ஒரு ரொமான்டிக் சீன் அது எல்லாம் ரியலா நடந்ததுதான், நீ கண் விழித்து புலம்பும்போது, கட்டிலுக்கு பின்னாடி தான் இருந்தேன்" என்றதும்.
நிறை மதிக்கு கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய.. "நீ எப்படி வீட்டுக்குள்ள வந்த? " பதட்டத்தோடு கேட்டாள்.
ஹா...ஹா என்று சிரித்தவன் "என் வீட்டுக்குள்ள வர்றது எனக்கு என்ன கஷ்டம்."
"அப்போ அன்னைக்கு துணிகடைக்கு வந்தது..? "
"அதுவும் அடியேன் தான்.. அவனை ஆபீஸ்ல லேட் பண்ண வச்சு, நான் தான் உன் கூட இருந்தேன், உனக்கு எல்லார் முன்னாடியும் முத்தம் கொடுத்ததும் நான் தான்" என்றான் அமர்த்தலாக..
"இன்னொரு முக்கியமான விஷயம், நான் எப்படி அருண் இடத்துக்கு வந்தேன்னு நீ தெரிஞ்சுக்கணுமே, சிம்பிள் பேபி உன் ஆசை மச்சான் பேச்சலர் பார்ட்டி முடிச்சுட்டு தள்ளாடிகிட்டே வந்தானா கோழி அமுக்கிற மாதிரி.. அமுக்கி யாருமே அதிகம் போகாத ரூம்ல அடைச்சு வச்சுட்டேன் எப்படி "என்றவன்..
"ஆனாலும், பரவாயில்லை பேபி என்னைக் கண்டுபிடிச்சுட்ட, இதோ இந்த தழும்பை வச்சுதானே என்னை அருணன் இல்லைன்னு கண்டுபிடிச்ச" என்று தன் புருவத்தின் மேல் உள்ள வெட்டு தழும்பைக் காண்பித்தான்.
"நீ என்னை துணிக் கடையிலையே கண்டு பிடிச்சிருப்பேன்னு நினைச்சேன், நீ வெட்கப்பட்டுகிட்டே தலை குனிந்திருந்ததால் முடியாமல் போச்சு, பாவம் பேபி நீ என்றவன் ஆனாலும் அந்த வெட்கம் உனக்கு அழகா இருந்தது" ஆழ்ந்த குரலில் கூறினான்.
"உங்க குடும்ப பிரச்சனையில, என்னை ஏன் இப்படி பலிகடா ஆக்குனிங்க" என மதி கேட்டாள்.
"ஏன்னா அருணன் ஆசைப்பட்டது எதுவும் அவனுக்கு கிடைக்கக் கூடாது."
"அதுக்கு நீங்க கல்யாணத்தை நிறுத்திருக்கலாமே, ஏன் என் கழுத்துல தாலி கட்டுனிங்க..? "
"அவனுக்கு பிடிச்ச பொருளை, அவன் முன்னாடியே உரிமை கொண்டாடுறதே பார்த்து அவன் துடிக்கனும் அதுக்குத்தான் வக்கிரமாக" கூறினான்.
"ச்சீ... ஏன்டா உங்களுக்கு எல்லாம் ஒருத்தனை பழி வாங்குறதா இருந்தா புராண காலத்துல இருந்து இப்போது வரைக்கும் பொண்ணுங்க மேல தான் கை வைப்பிங்களா டா, வெட்கம இல்லை."
"என்ன டி.. ஓவரா பேசுற.. இந்த கிளாஸ் எடுக்கிறது எல்லாம் அந்த அருண் பைய்யனோட நிறுத்திக்கனும், என் கிட்ட வேற விசயத்தைப் பற்றி லெக்சர் எடுத்தா போதும்" கண் சிமிட்டிக் கூறி, அவள் இடையோடு கை கொடுத்து இழுத்து, அவள் மலர் இதழ்களோடு தன் வன்மையான இதழ்கள் கொண்டு சிறை செய்தான்.
அவன் பிடியில் இருந்து விலக திமிறியவளை வன்மையாக அடக்கியவன் சில நிமிடங்கள் கழித்தே விடுவித்தான்.. அவன் இவ்வாறு நடந்து கொண்டது பொறுக்காது அவனை அடிக்க கையை ஓங்க.. அதைப் பற்றியவன் முகம் சிவக்க.. "என்ன டி ஏதோ பிடிக்காத மாதிரி நடிக்கிற, அன்னைக்கு நல்லாத்தானே ஒத்துழைச்சே" என்று கேலியாக கூறினான்.
அவன் பிடியிலிருந்து கையை உருவிக் கொண்டவள்.. "நீயெல்லாம் மனுஷனா இருந்தால் உன்கிட்ட பேசலாம், அதான் மாமா சொன்னாரே கொலைகாரன், பொறுக்கி, குடிக்காரான்னு "என்று வார்த்தையை விட்டாள்.
அதில் மேலும் கோபம் கொண்டவன், "நிலா.." என்று அடிக்க கையை ஓங்க.. அவன் அடித்துவிடுவானோ என்ற பயத்தில் கண்கள் மூடி நின்றவளைப் பார்த்ததும் "ச்சே.." என்று கையை உதறி "இனிமேல் ஒரு வார்த்தை உன் வாயில் இருந்து வந்துச்சு கொன்னுடுவேன் டி " என்று போய் மெத்தையில் படுத்துக் கொண்டான்.
ஒரு மூலையில் மடங்கி அமர்ந்த மதி.. "நான் யாருக்கு என்ன பண்ணேன், ஏற்கனவே, நான் யாருன்ற பாதி தெரியாமல் இருக்கேன், இவன் வேற எங்கிருந்தோ வந்து கொஞ்சம் இருந்த நிம்மதியையும் கெடுக்க பார்க்குறான்னே ராட்சசன்.." என திட்டி தீர்த்தவள், தலை வலிக்க ஆரம்பிக்க அப்படியே கண்கள் மூடி தூங்க ஆரம்பித்தாள்.
காலையில் கண்விழித்த நிறை மதி எழ முயற்சி செய்ய.. அது முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள்.ஏனென்றால் அருச்சிகன் அவளை இறுக்கி அணைத்தவாறு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.
'நான் அங்க தானே தூங்குனேன்.. இங்க எப்படி வந்தேன்..' அவன் முகத்தைப் பார்த்து 'ஒரு வேளை இவன் தூக்கிட்டு வந்துருப்பானோ, அப்படியாகத்தான் இருக்கும் பொறுக்கி ராஸ்க்கல், நல்ல மலை மாடு மாதிரி இருக்கான், கையைக் கூட தூக்க முடியல' முணுமுணுத்துக் கொண்டே மூச்சு வாங்க அவன் கையை பிரித்து மெத்தையில் போட்டவள், 'இனி இந்த பொறுக்கி ராஸ்க்கல் இருக்கிற வீட்ல இருக்க கூடாது, மாமாகிட்ட சொல்லி ஹாஸ்டலுக்கு போய்டணும்' என முடிவு எடுத்துக்கொண்டவளாக படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
குளித்து விட்டு வந்த மதி, வீட்டில் இருந்தால் இவன் முகத்தைக் காண வேண்டும், கல்லூரிக்குச் சென்று விடலாம் என நினைத்து சாதாரண காட்டன் புடவையில் கிளம்பி கண்ணாடி முன் நின்று பொட்டு வைத்துக் கொண்டிருந்தவளின் இடையை இரு வன் கரங்கள் அணைத்தது, ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நின்றவள் பின் சுதாரித்து அவன் கரத்தை பலம் கொண்டு மட்டும் விலக்க போராடியளை பார்த்து சிரித்தவன் "ஏன் இப்படி முயற்சி பண்ற, நீ என்னைக்கும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது" என்றவன் அவளைத் திருப்பி அருகில் இருந்த குங்கும சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து வைக்க போனவனின் கையை தட்டி விட.. அந்த குங்குமம் அவன் மேல் சிதறி விழுந்தது.
அவள் செய்கையில் அவளை உறுத்து விழித்து பார்க்க, அதில் நடுங்கியவள் "சா.. சாரி தெரியாமல் பண்ணிட்டேன்" என்று துடைக்க சென்றவளின் கை பற்றி தடுத்தவன், திரும்பவும் குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்துவிட்டு.
"இதை நான் செத்த பிறகு கீழே தட்டிவிட்டுக்கோ, இல்லை உனக்கு பிடிச்சவனைக் கூட வச்சுவிட சொல்லு,நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உன் வகிட்டில இந்த குங்குமம் இல்லாமல் இருக்க கூடாது" எனக் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.
அவன் பேச்சில் அதிர்ச்சியில் உறைந்து நின்றவள், நேரமானதை உணர்ந்து கீழே சென்றாள்.
அங்கு அருச்சிகன் சாப்பாட்டு மேஜையில் இருக்கையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க, அப்போது வரதனும், அருணனும் ஆஜராகினர்.
அவனை முறைத்துக் கொண்டே வரதன் இருக்கையில் அமர.. அருணனோ மாடிப் படிகளையே பார்த்துக் கொண்டிருக்க.. அவன் எதிர்பார்த்தது போல் மதியும் இறங்கி வர அவன் முகம் பிரகாசமாவதைக் கண்ட அருச்சிகன், "ராதாம்மா, நல்லா நல்லி எழும்பா எடுத்து சூப் வைங்க.. நைட் மேட்ச் ஆடி உடம்பு எல்லாம் டயர்ட் ஆயிடுச்சு" என கையை மேலே தூக்கி சோம்பல் முறிக்க, அருணனின் முகம் தொங்கி போனது.
மதியோ மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு 'மற்றவர்கள் முன்னால் அவனிடம் சண்டையிட்டால் அதற்க்கு ஏதாவது இட்டு கட்டி கூறுவான்' என்பதை உணர்ந்தவள்.. வரதனின் அருகில் வந்து "மாமா நான் ஹாஸ்டலுக்கு போய்டலாம்னு இருக்கேன்" என்றாள்
"என்னமா சொல்ற, இந்த பொறுக்கி ராஸ்கலுக்கு பயந்துகிட்டு, நீ ஏன் மா ஹாஸ்டலுக்கு போகனும், அவன் இந்த வீட்டை விட்டு வெளில போகட்டும்."
"எல்லார் வீட்லையும் மருமகளைத்தான் வெளில அனுப்ப பிளான் போடுவாங்க. ஆனால், இந்த வீட்ல மட்டும் தான் மகனே அனுப்ப பிளான் பண்றிங்க என்ன ஒரு புரட்சிகரமானா குடும்பம்"கேலியாக கூறினான் அருச்சிகன்.
"உன்ன மாதிரி ஒருத்தனைப் பெத்தா புரட்சி பண்ண வேண்டியதாதானே இருக்கு"என்று வரதன் கூற..
"மாமா எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்" என்று மதி கிளம்ப..
"மை டியர் நிலா... இன்னும் பேபியாவே இருக்கியே, நீ மட்டும் ஹாஸ்டலுக்கு போய்த்தான் பாரேன், அங்கையே வந்து குடும்பம் நடத்துவேன் அப்புறம் உன் அருமை மாமானாரு மரியாதை காத்துல பறக்கும் வசதி எப்படி..? "என்க
"இங்க பாரு அருச்சிகா தேவை இல்லாமல் பிரச்சனை பண்ணாதே.. ஒழுங்கா உன் ரூம்க்கு போ" என்று அருணன் சமாதானம் பேச..
"என்னடா வரதன் மகனே.. சமாதானம் பேசுறியா.. ரொம்ப சந்தோசமாக இருந்துட்டெல்ல, இனி இருக்க மாட்டே" என்று கூறவும் அருணன் போன் ஒலி எழுப்பவும் சரியாக இருந்தது.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் அந்த பக்கம் கூறிய செய்தியில் அதிர்ச்சியோடு எப்போ, எப்படி நடந்துச்சு உடனே வர்றேன் என்று கூற..
அருச்சிகனோ "ஹா.. ஹா.. "என்று சிரிக்க அனைவரும் அவன் சிரிப்பை பயத்தோடு பார்த்தனர்.
நிலா வருவாள்..!!
ஹாய் பிரண்ட்ஸ்...
அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.
போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.
கருத்துத் திரி