Meerashalini
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன் 18
தனிமைக்கு
துணையென
உன்னை அழைத்தேன்..
ஆனால் ஏனோ
உன் நினைவுகளை
அளித்து சென்றாய்
எனக்கு..
"நீங்க மேல ஜாலியா நின்னுட்டு சீக்கிரம் வான்னு கூப்பிடுறீங்க..எல்லாம் உங்களுக்கு கால் நல்லா இருக்க திமிரு..கல்ல தூக்கி போடுறேன் பாருங்க..அப்புறம் தெரியும்.."
அவன் வருவதற்குள்..அவன் பேசிய மெதுவான குரலிற்கே பல மடங்கு சத்தமாய் பேசி விட்டு மேலே ஏறப்போனவள் ஏதோ தோன்ற சுற்றி பார்க்க அங்கு "ஆஷி டேடி..பேயி.." என மேலிருந்து எட்டிபார்த்தவண்ணம் நின்றிருந்த அனு உட்பட வீட்டில் இருந்த அனைவரும் பல குழப்ப இரேகைகள் முகத்தில் படர நின்றிருந்தனர்.
சனா அருகில் வந்திருந்த ஆதிஷ் சுற்றியிருந்த லதா நந்தினி பாட்டி வள்ளி மற்றும் அனுவை கவனித்து விட்டு..நிலைமை கைமீறியதை உணர்ந்து கொண்டான்.
மெதுவாக சனா அருகில் வந்து குனிந்து.."சனா நீ எதுவும் பேச கூடாது.." என்று விட்டு பெரிதாய் அங்கிருந்தவர்களை பார்த்து முழித்து கொண்டிருந்தவளை பதிலுக்காக பார்த்தான்.
அவளும் தலையை அவசர அவசரமாக டிங் டிங் என ஆட்ட.. அவளை ஒரு சந்தேகமாகவே பார்த்து விட்டு..அங்கு நின்றிருந்த லதாவின் பக்கமாய் திரும்பினான் ஆதிஷ்..
"ஆன்ட்டி இவ.."
"இவ உனக்கு நிச்சயம் பன்னிருந்த பொண்ணு தானபா ??" என்று லதா கேட்க..
"இல்ல ஆன்ட்டி இவ.."
"ஆமா அத்தை.. நான் சனா..நீங்க கூட வந்தீங்கலே அன்னைக்கி பொண்ணு பார்க்க வந்தப்போ.. பேசிட்டு இருக்கப்போ நாம கூட இனிப்பா முறுக்கு அம்மா செஞ்சது சாப்பிட்டோமே.. " பேச வேண்டாம் என்றதற்கே பல மடங்காகவும் அவருக்கு சந்தேகம் துளியேனும் வருவதற்கு கூட விடாது விளக்கமாய் கூறி முடித்திருந்தாள் சனா.
ஆதிஷ் செய்வதறியாது திகைத்து நிற்க.. லதா மென்னகை படர அவள் அருகில் வந்தார்.
"என்னமா இங்க..அய்யோ கையில எப்படி அடிபட்டது..ஆதிஷ் நீ முதல்ல கூட்டிட்டு போய் மருந்து போட்டு விடு..நந்தினி அண்ணா ரூம்க்கு அந்த மருந்து பாக்ஸ எடுத்து கொண்டு போய் கொடு..போமா..ஆதிஷ் கூட்டிட்டு போ.."
ஆதிஷ் அவளை ஒரு முறை முறைத்து விட்டு தட தட என படிகளில் ஏறி மேலே போக நந்தினியுடன் வளவளத்துக்கொண்டே அவனை பின்தொடர்ந்தாள் சனா.
"எங்க ஊருலயே டைகர் கேங்னா தெரியாத யாருமே இல்லையே.."
பேசிக்கொண்டே ஆதிஷ் அறைக்குள் நுழைய போனவள் முகத்தில் தடார் என கதவு வந்து அடைக்க..மூக்கை தடவிக்கொண்டே நந்தினியை பார்த்தாள்.
"என்ன நண்டு இப்படி பன்னுறாங்க.."
"நண்டுவா.."
"ஆமா நானும் நீயும் ப்ரன்ஸ்ல..சரி அடைச்சிட்டாங்க பாரு.." சனா கூறிக்கொண்டே கதவு பிடியில் இருந்த சிறு துளை வழியே கண்ணை வைத்து பார்க்க..அவள் செய்கையில் வாய்விட்டு சிரித்த நந்தினி.."அண்..அது உள்ள நீங்க போங்க அண்ணா ஏசாது..நான் மருந்து எடுத்திட்டு வாரேன்.." என்று விட்டு சென்றாள்.
"நண்டு.. நீ அண்ணின்னே கூப்பிடு என்ன டன்.." அவளை பார்த்து கட்டை விரலை உயர்த்தி சனா கூற அவளும் தன் தடுமாற்றத்தை சனா கண்டு கொண்டதில் சிறு தயக்கம் படர சரி என தலையசைத்து விட்டு சென்றாள்.
அவள் சென்ற பின் சனா கதவை திறக்க போக.."ஏய்..." என ஒரு குரல் பின்னால் ஒலித்தது.
குரலிலே அது யாரென அறிந்து கொண்ட சனா..இத எப்படி மறந்தோம் என திரும்பி நின்றாள்.
முழங்கால் வரை குட்டி ஷார்ட்ஸும் குட்டி கையில்லாத சட்டையும்..தலையில் ஒரு பக்கமாய் முடியை சேர்த்து கட்டியவண்ணம் இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றிருந்தாள் அனு.
அவளது முடியை பார்த்து சிரிப்பு வர சிரிக்க ஆரம்பித்து விட்டாள் சனா.
"ஏய்..சியிக்காய.." உறுமலுடன் ஒலித்தது குட்டி குரல்.
"ஹாஹா அதென்ன உன் தலையில குடுமி.." மீண்டும் சிரித்தாள் சனா.
"ஆஷி டேடிடிடிடிடிடி.."
"நான் ஒன்னும் உன் டேடிக்கு பயமில்ல..எங்க வர சொல்லு உன் டேடி கண்ண எடுத்து கழுதைக்கு டின்னருக்கு போடுறன்.." என்று விட்டு சனா அறை கதவு பக்கம் திரும்ப
"டேடி யூம் போவாத நீ.."
"உன் டேடிய தூரத்தில பார்த்தாலே முடில இதுல நான் யூம் வேற பன்னி பாக்கவா..."
"ஏய்ய்ய்ய்.." சத்தமிட்டவண்ணம் பாய்ந்து வந்து சனாவின் முடியை பிடித்திருந்தாள் அனு.
"ஏய் பிசாசு விடு..வலிக்கிது.." அவளுடன் சனா போராட இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்திருந்த ஆதிஷ் தலையில் அடித்துக்கொண்டு..
"ஸ்டாப் இட்.." என்று சத்தமிட ஆனால் அனுவினதும் சனாவினதும் வீர சண்டை ஓசையில் அது யார் காதிலுமே விழாமல் மறைந்தே போனது.
அனுவை கஷ்டப்பட்டு தூக்கி இழுத்து என ஆதிஷ் பிரித்து எடுக்க இருந்தும் சனாவின் ஒரு நாலு முடியை பிடுங்கிக்கொண்டே தான் வந்தாள் அவள்.
"அனு பாட்டிகிட்ட போ.." கோபமாய் ஆதிஷ் கூற மறு பேச்சு இன்றி சனாவை முறைத்து விட்டு கையிலிருந்த முடியை உப் என ஊதி விட்டு அங்கிருந்து ஓடினாள் அனு.
அவள் கையிலிருந்து நலுவிய முடியை அப்போதுதான் கண்ட சனா.." என் முடி.." என அவள் பின்னால் ஓட போக..அவளை ஒரே இழுப்பில் அறைக்குள் இழுத்து கதவை அடைத்தான் ஆதிஷ்.
"அறிவு என்றது கொஞ்சமாவது இருக்கா உனக்கு.."
"உங்களுக்கு இல்லன்னு எனக்கும் இல்லன்னு நீங்க எப்பிடி அப்பிடி நினைக்கலாம்.."
"யூ யூ.."
"எஸ் மீ மீ.."
"ஷட் அப்.."
"முடியாது ஆஆஆஆ இப்படிதான் இருப்பேன்.."
வாயை முழுவதுமாக திறந்து காட்டினாள்.
ஆதிஷிற்கு கோபம் மறந்து சிரிப்பு வர அதை மறைத்து கொண்டு..
"சனா எனக்கு கோபம் வந்தா எப்படி இருக்கும் தெரியாது உனக்கு.."
என்றான் அடக்கிய குரலில்..அதாவது அவளுக்கு கொஞ்சமாவது பயத்தை வரவழைக்கும் என நினனத்தான்.
"எப்படி இருக்கும்..நாலு கண்..மூனு மூக்கு..இரண்டு வாய்.. இப்படியா.." என்றாள் சனா சீரியசாக.
"சனா.." என்று அவன் ஏதோ கூற முன் கதவு தட்டும் ஓசை கேட்க அவளை முறைத்து விட்டு கதவை திறந்தான். அங்கு நந்தினி நிற்க..அவளிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பெட்டியை வாங்கிக்கொண்டு கதவை அடைத்தான் ஆதிஷ்.
திரும்பி பார்க்க அங்கு விட்டு சென்ற இடத்தில் சனாவை காணவில்லை. சுற்றி பார்த்து விட்டு.."சனா.." என அழைக்க.."இங்க.." என பதிலுக்கு குரல் கொடுத்தாள்.
எங்கிருந்து குரல் வருகிறது என தேடிப்பார்க்க அறையிலிருந்த அலுமாரியின் பக்கமாய் இருந்த ஸ்டூலில் ஏறி நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள் சனா.
"அங்க என்ன பன்னுற கீழ வா.."
"ஆதிஷ் இங்க பாரு..இந்த பொம்மை அழகா இருக்குல்ல.." அலுமாரி மேலிருந்து பார்பி டாலை எடுத்து காட்டினாள்.
"ஆஹ் ஆமா.. வந்து மருந்து போட்டுக்கோ வா.. "
"இரு இன்னும் இருக்கு..பார்த்துட்டு வாரேன்.." கூறியவளுக்கு பின்னே ஆதிஷ் கூறியது உறைக்க.. எட்டி நின்று அலுமாரியின் தாண்டி ஆதிஷை பார்த்துவிட்டு தட தட என ஒரு காலை சுவற்றில் வைத்து மறுகாலை அலுமாரியில் வைத்து மேலே ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் மின்னல்வேகத்தில் ஏறியதை அதிசயமாய் பார்த்தவன்.."சனா என்ன பன்னுற நீ.." என்றான்.
"ம்ஹூம் நான் மருந்து போட்டுக்க மாட்டேன்.." என்றாள் கையை தன் ஷாலினுள் மறைத்தவண்ணம்.
"இங்க பாரு மருந்து போட்டா தான் அது சீக்கிரம் சரி ஆகும்.. " ஆதிஷ் அனுவிடம் கையாளும் முறையை ஆரம்பித்தான்.
"எனக்கு சீக்கிரம் சரி ஆக வேணாம்.. மெதுவாவே சரி ஆகட்டும்."
"அப்புறம் உனக்கு காயம் இருந்தா உன்னால ஸ்வீட் சாப்பிட முடியாது பரவாயில்லையா..?"
"ஏன் வாயால தான நான் சாப்பிட போறேன்.."
இரண்டு வழியையும் அவள் அடைத்து விட மூன்றாவதை எடுத்து வைத்தான்.
"நீ மருந்து போட்டுகிட்டா நீ என்ன கேட்டாலும் தருவேன்.."
அவன் நினைத்தது போலவே சனா இதைகேட்டதும் சற்று யோசித்தாள்.
"ம்ம் டீலா?" என்றாள் இழுத்துக்கொண்டே..
"யெஸ் டீல்.."
"சரி அப்போ எனக்கு ரெண்டு வேணும்.. ஒன்னு இந்த பார்பி டால்.. ரெண்டு இங்க நீ புதுசா ஓபன் பன்னிருக்கல்ல கம்பனி அங்க எனக்கு வேலை.. "
கேட்டது இரண்டுமே விபரீதமாய் இருக்க..ஆதிஷ் என்ன சொல்வது என யோசித்தான். முதலாவது டாலை கொடுத்தாள் அனுவை சமாளிக்க முடியாது.. இரண்டாவது அவன் இங்கு வந்ததே இவளிடம் இருந்து விலக தான் ஆனால் இவளோஅவனறையில் அலமாரியின் மேல் உட்கார்ந்திருக்கிறாள். இதில் கம்பனியில் வேலை என்றால் இந்த உறவு தொடர்ந்து கொண்டு தானே போகும்.. என பலவாரு அவன் யோசித்துக்கொண்டே நிமிர அவளது ஷாலை நனைத்துக்கொண்டிருந்தது அவள் காயத்திலிருந்து வலிந்த இரத்தம்.
ஏதோ அவனுக்கு வலிப்பது போல் தோன்ற சிந்தனைகளை தற்காலிகமாக ஒதுக்கி விட்டு.."சரி டீல்.." என்றான்... மனதில் பின் சமாளித்துக்கொள்ளலாம் என குறிக்க தவறவில்லை.
"ஏமாத்திட மாட்டல்ல.. தெரியும்ல ஏமாத்தினா மூக்கு நீளும்.." என்றாள் ஒரு விரலை நீட்டி எச்சரித்தவண்ணம்.
"மாட்டேன் மாட்டேன்..நீ கீழ வா.."
"எப்படி வாரது.." இலகுவாக ஏறியவளுக்கு இறங்க முடியாமல் கால் அடிபட்டது வலிக்க எட்ட முடியாமல் இருந்தது.
"ஏறின போல இறங்கு வா.."
"முடிஞ்சா மாட்டேனா.. ஆதிஷ் ஹெல்ப் மீ.. "என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு..
மறுக்க முடியாமல் ஆதி அருகில் வந்து கையை நீட்ட அவன் கையை பற்றி மெதுவாக காலை எட்டி எட்டி வைத்தாள். இருந்தும் கால் தான் எட்டவில்லை.
ஆதிஷ் ஏதோ தோன்ற பட்டென யோசிக்காது ஒரே இழுப்பில் சனாவை இழுக்க தடுமாறி விழப்போனவளை மறுநொடி அழகாக தன் கைகளில் ஏந்தியிருந்தான்.
அவன் கைகளில் தான் இருப்பதை இன்னும் நம்ப முடியாது கண்களை விரித்து வெகு அருகில் தெரிந்தவனை பார்த்தாள். அவனும் அவளது முகத்தை வெகு நெருக்கத்தில் காண அவனது பிடி அவனையறியாதே இறுக அவளை தன்னுடன் சேர்த்து அணைத்தது அவனது கரங்கள்.
"எ..ன்ன" அவள் ஏதோ கூற ஆரம்பிக்கவும் ஒரு விரலை அவளிதழில் வைத்து தடுத்தான் ஆதிஷ்.
உடல் சிலிர்க்க அசையவும் சக்தியற்று அதே நிலையில் சனா இருக்க தன் கையிலிருந்தவளை நோக்கி குனிந்த ஆதிஷ் அவள் பட்டு கன்னத்தில் அழுத்தமாய் தன் இதழை பதிக்கவும் இதை சற்றும் எதிர்பார்க்காத சனா கண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரித்து அவனை பார்த்தாள்.
அவன் மறுகன்னத்தை பார்த்து குனியவும் கதவை யாரோ பட பட என தட்டவும் சரியாக இருந்தது. சட்டென தன்னை சூழ்ந்திருந்த கட்டில் இருந்து விடுபட்டதை போல் உணர்ந்த ஆதிஷ்
கையிலிருந்த சனாவை காண எதுவும் யோசிக்காது முன் நடந்ததே கண்ணில் நிற்க அவளை தொப் என கீழே போட்டான்.
கருத்துக்களை பகிர
தனிமைக்கு
துணையென
உன்னை அழைத்தேன்..
ஆனால் ஏனோ
உன் நினைவுகளை
அளித்து சென்றாய்
எனக்கு..
"நீங்க மேல ஜாலியா நின்னுட்டு சீக்கிரம் வான்னு கூப்பிடுறீங்க..எல்லாம் உங்களுக்கு கால் நல்லா இருக்க திமிரு..கல்ல தூக்கி போடுறேன் பாருங்க..அப்புறம் தெரியும்.."
அவன் வருவதற்குள்..அவன் பேசிய மெதுவான குரலிற்கே பல மடங்கு சத்தமாய் பேசி விட்டு மேலே ஏறப்போனவள் ஏதோ தோன்ற சுற்றி பார்க்க அங்கு "ஆஷி டேடி..பேயி.." என மேலிருந்து எட்டிபார்த்தவண்ணம் நின்றிருந்த அனு உட்பட வீட்டில் இருந்த அனைவரும் பல குழப்ப இரேகைகள் முகத்தில் படர நின்றிருந்தனர்.
சனா அருகில் வந்திருந்த ஆதிஷ் சுற்றியிருந்த லதா நந்தினி பாட்டி வள்ளி மற்றும் அனுவை கவனித்து விட்டு..நிலைமை கைமீறியதை உணர்ந்து கொண்டான்.
மெதுவாக சனா அருகில் வந்து குனிந்து.."சனா நீ எதுவும் பேச கூடாது.." என்று விட்டு பெரிதாய் அங்கிருந்தவர்களை பார்த்து முழித்து கொண்டிருந்தவளை பதிலுக்காக பார்த்தான்.
அவளும் தலையை அவசர அவசரமாக டிங் டிங் என ஆட்ட.. அவளை ஒரு சந்தேகமாகவே பார்த்து விட்டு..அங்கு நின்றிருந்த லதாவின் பக்கமாய் திரும்பினான் ஆதிஷ்..
"ஆன்ட்டி இவ.."
"இவ உனக்கு நிச்சயம் பன்னிருந்த பொண்ணு தானபா ??" என்று லதா கேட்க..
"இல்ல ஆன்ட்டி இவ.."
"ஆமா அத்தை.. நான் சனா..நீங்க கூட வந்தீங்கலே அன்னைக்கி பொண்ணு பார்க்க வந்தப்போ.. பேசிட்டு இருக்கப்போ நாம கூட இனிப்பா முறுக்கு அம்மா செஞ்சது சாப்பிட்டோமே.. " பேச வேண்டாம் என்றதற்கே பல மடங்காகவும் அவருக்கு சந்தேகம் துளியேனும் வருவதற்கு கூட விடாது விளக்கமாய் கூறி முடித்திருந்தாள் சனா.
ஆதிஷ் செய்வதறியாது திகைத்து நிற்க.. லதா மென்னகை படர அவள் அருகில் வந்தார்.
"என்னமா இங்க..அய்யோ கையில எப்படி அடிபட்டது..ஆதிஷ் நீ முதல்ல கூட்டிட்டு போய் மருந்து போட்டு விடு..நந்தினி அண்ணா ரூம்க்கு அந்த மருந்து பாக்ஸ எடுத்து கொண்டு போய் கொடு..போமா..ஆதிஷ் கூட்டிட்டு போ.."
ஆதிஷ் அவளை ஒரு முறை முறைத்து விட்டு தட தட என படிகளில் ஏறி மேலே போக நந்தினியுடன் வளவளத்துக்கொண்டே அவனை பின்தொடர்ந்தாள் சனா.
"எங்க ஊருலயே டைகர் கேங்னா தெரியாத யாருமே இல்லையே.."
பேசிக்கொண்டே ஆதிஷ் அறைக்குள் நுழைய போனவள் முகத்தில் தடார் என கதவு வந்து அடைக்க..மூக்கை தடவிக்கொண்டே நந்தினியை பார்த்தாள்.
"என்ன நண்டு இப்படி பன்னுறாங்க.."
"நண்டுவா.."
"ஆமா நானும் நீயும் ப்ரன்ஸ்ல..சரி அடைச்சிட்டாங்க பாரு.." சனா கூறிக்கொண்டே கதவு பிடியில் இருந்த சிறு துளை வழியே கண்ணை வைத்து பார்க்க..அவள் செய்கையில் வாய்விட்டு சிரித்த நந்தினி.."அண்..அது உள்ள நீங்க போங்க அண்ணா ஏசாது..நான் மருந்து எடுத்திட்டு வாரேன்.." என்று விட்டு சென்றாள்.
"நண்டு.. நீ அண்ணின்னே கூப்பிடு என்ன டன்.." அவளை பார்த்து கட்டை விரலை உயர்த்தி சனா கூற அவளும் தன் தடுமாற்றத்தை சனா கண்டு கொண்டதில் சிறு தயக்கம் படர சரி என தலையசைத்து விட்டு சென்றாள்.
அவள் சென்ற பின் சனா கதவை திறக்க போக.."ஏய்..." என ஒரு குரல் பின்னால் ஒலித்தது.
குரலிலே அது யாரென அறிந்து கொண்ட சனா..இத எப்படி மறந்தோம் என திரும்பி நின்றாள்.
முழங்கால் வரை குட்டி ஷார்ட்ஸும் குட்டி கையில்லாத சட்டையும்..தலையில் ஒரு பக்கமாய் முடியை சேர்த்து கட்டியவண்ணம் இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றிருந்தாள் அனு.
அவளது முடியை பார்த்து சிரிப்பு வர சிரிக்க ஆரம்பித்து விட்டாள் சனா.
"ஏய்..சியிக்காய.." உறுமலுடன் ஒலித்தது குட்டி குரல்.
"ஹாஹா அதென்ன உன் தலையில குடுமி.." மீண்டும் சிரித்தாள் சனா.
"ஆஷி டேடிடிடிடிடிடி.."
"நான் ஒன்னும் உன் டேடிக்கு பயமில்ல..எங்க வர சொல்லு உன் டேடி கண்ண எடுத்து கழுதைக்கு டின்னருக்கு போடுறன்.." என்று விட்டு சனா அறை கதவு பக்கம் திரும்ப
"டேடி யூம் போவாத நீ.."
"உன் டேடிய தூரத்தில பார்த்தாலே முடில இதுல நான் யூம் வேற பன்னி பாக்கவா..."
"ஏய்ய்ய்ய்.." சத்தமிட்டவண்ணம் பாய்ந்து வந்து சனாவின் முடியை பிடித்திருந்தாள் அனு.
"ஏய் பிசாசு விடு..வலிக்கிது.." அவளுடன் சனா போராட இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்திருந்த ஆதிஷ் தலையில் அடித்துக்கொண்டு..
"ஸ்டாப் இட்.." என்று சத்தமிட ஆனால் அனுவினதும் சனாவினதும் வீர சண்டை ஓசையில் அது யார் காதிலுமே விழாமல் மறைந்தே போனது.
அனுவை கஷ்டப்பட்டு தூக்கி இழுத்து என ஆதிஷ் பிரித்து எடுக்க இருந்தும் சனாவின் ஒரு நாலு முடியை பிடுங்கிக்கொண்டே தான் வந்தாள் அவள்.
"அனு பாட்டிகிட்ட போ.." கோபமாய் ஆதிஷ் கூற மறு பேச்சு இன்றி சனாவை முறைத்து விட்டு கையிலிருந்த முடியை உப் என ஊதி விட்டு அங்கிருந்து ஓடினாள் அனு.
அவள் கையிலிருந்து நலுவிய முடியை அப்போதுதான் கண்ட சனா.." என் முடி.." என அவள் பின்னால் ஓட போக..அவளை ஒரே இழுப்பில் அறைக்குள் இழுத்து கதவை அடைத்தான் ஆதிஷ்.
"அறிவு என்றது கொஞ்சமாவது இருக்கா உனக்கு.."
"உங்களுக்கு இல்லன்னு எனக்கும் இல்லன்னு நீங்க எப்பிடி அப்பிடி நினைக்கலாம்.."
"யூ யூ.."
"எஸ் மீ மீ.."
"ஷட் அப்.."
"முடியாது ஆஆஆஆ இப்படிதான் இருப்பேன்.."
வாயை முழுவதுமாக திறந்து காட்டினாள்.
ஆதிஷிற்கு கோபம் மறந்து சிரிப்பு வர அதை மறைத்து கொண்டு..
"சனா எனக்கு கோபம் வந்தா எப்படி இருக்கும் தெரியாது உனக்கு.."
என்றான் அடக்கிய குரலில்..அதாவது அவளுக்கு கொஞ்சமாவது பயத்தை வரவழைக்கும் என நினனத்தான்.
"எப்படி இருக்கும்..நாலு கண்..மூனு மூக்கு..இரண்டு வாய்.. இப்படியா.." என்றாள் சனா சீரியசாக.
"சனா.." என்று அவன் ஏதோ கூற முன் கதவு தட்டும் ஓசை கேட்க அவளை முறைத்து விட்டு கதவை திறந்தான். அங்கு நந்தினி நிற்க..அவளிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பெட்டியை வாங்கிக்கொண்டு கதவை அடைத்தான் ஆதிஷ்.
திரும்பி பார்க்க அங்கு விட்டு சென்ற இடத்தில் சனாவை காணவில்லை. சுற்றி பார்த்து விட்டு.."சனா.." என அழைக்க.."இங்க.." என பதிலுக்கு குரல் கொடுத்தாள்.
எங்கிருந்து குரல் வருகிறது என தேடிப்பார்க்க அறையிலிருந்த அலுமாரியின் பக்கமாய் இருந்த ஸ்டூலில் ஏறி நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள் சனா.
"அங்க என்ன பன்னுற கீழ வா.."
"ஆதிஷ் இங்க பாரு..இந்த பொம்மை அழகா இருக்குல்ல.." அலுமாரி மேலிருந்து பார்பி டாலை எடுத்து காட்டினாள்.
"ஆஹ் ஆமா.. வந்து மருந்து போட்டுக்கோ வா.. "
"இரு இன்னும் இருக்கு..பார்த்துட்டு வாரேன்.." கூறியவளுக்கு பின்னே ஆதிஷ் கூறியது உறைக்க.. எட்டி நின்று அலுமாரியின் தாண்டி ஆதிஷை பார்த்துவிட்டு தட தட என ஒரு காலை சுவற்றில் வைத்து மறுகாலை அலுமாரியில் வைத்து மேலே ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் மின்னல்வேகத்தில் ஏறியதை அதிசயமாய் பார்த்தவன்.."சனா என்ன பன்னுற நீ.." என்றான்.
"ம்ஹூம் நான் மருந்து போட்டுக்க மாட்டேன்.." என்றாள் கையை தன் ஷாலினுள் மறைத்தவண்ணம்.
"இங்க பாரு மருந்து போட்டா தான் அது சீக்கிரம் சரி ஆகும்.. " ஆதிஷ் அனுவிடம் கையாளும் முறையை ஆரம்பித்தான்.
"எனக்கு சீக்கிரம் சரி ஆக வேணாம்.. மெதுவாவே சரி ஆகட்டும்."
"அப்புறம் உனக்கு காயம் இருந்தா உன்னால ஸ்வீட் சாப்பிட முடியாது பரவாயில்லையா..?"
"ஏன் வாயால தான நான் சாப்பிட போறேன்.."
இரண்டு வழியையும் அவள் அடைத்து விட மூன்றாவதை எடுத்து வைத்தான்.
"நீ மருந்து போட்டுகிட்டா நீ என்ன கேட்டாலும் தருவேன்.."
அவன் நினைத்தது போலவே சனா இதைகேட்டதும் சற்று யோசித்தாள்.
"ம்ம் டீலா?" என்றாள் இழுத்துக்கொண்டே..
"யெஸ் டீல்.."
"சரி அப்போ எனக்கு ரெண்டு வேணும்.. ஒன்னு இந்த பார்பி டால்.. ரெண்டு இங்க நீ புதுசா ஓபன் பன்னிருக்கல்ல கம்பனி அங்க எனக்கு வேலை.. "
கேட்டது இரண்டுமே விபரீதமாய் இருக்க..ஆதிஷ் என்ன சொல்வது என யோசித்தான். முதலாவது டாலை கொடுத்தாள் அனுவை சமாளிக்க முடியாது.. இரண்டாவது அவன் இங்கு வந்ததே இவளிடம் இருந்து விலக தான் ஆனால் இவளோஅவனறையில் அலமாரியின் மேல் உட்கார்ந்திருக்கிறாள். இதில் கம்பனியில் வேலை என்றால் இந்த உறவு தொடர்ந்து கொண்டு தானே போகும்.. என பலவாரு அவன் யோசித்துக்கொண்டே நிமிர அவளது ஷாலை நனைத்துக்கொண்டிருந்தது அவள் காயத்திலிருந்து வலிந்த இரத்தம்.
ஏதோ அவனுக்கு வலிப்பது போல் தோன்ற சிந்தனைகளை தற்காலிகமாக ஒதுக்கி விட்டு.."சரி டீல்.." என்றான்... மனதில் பின் சமாளித்துக்கொள்ளலாம் என குறிக்க தவறவில்லை.
"ஏமாத்திட மாட்டல்ல.. தெரியும்ல ஏமாத்தினா மூக்கு நீளும்.." என்றாள் ஒரு விரலை நீட்டி எச்சரித்தவண்ணம்.
"மாட்டேன் மாட்டேன்..நீ கீழ வா.."
"எப்படி வாரது.." இலகுவாக ஏறியவளுக்கு இறங்க முடியாமல் கால் அடிபட்டது வலிக்க எட்ட முடியாமல் இருந்தது.
"ஏறின போல இறங்கு வா.."
"முடிஞ்சா மாட்டேனா.. ஆதிஷ் ஹெல்ப் மீ.. "என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு..
மறுக்க முடியாமல் ஆதி அருகில் வந்து கையை நீட்ட அவன் கையை பற்றி மெதுவாக காலை எட்டி எட்டி வைத்தாள். இருந்தும் கால் தான் எட்டவில்லை.
ஆதிஷ் ஏதோ தோன்ற பட்டென யோசிக்காது ஒரே இழுப்பில் சனாவை இழுக்க தடுமாறி விழப்போனவளை மறுநொடி அழகாக தன் கைகளில் ஏந்தியிருந்தான்.
அவன் கைகளில் தான் இருப்பதை இன்னும் நம்ப முடியாது கண்களை விரித்து வெகு அருகில் தெரிந்தவனை பார்த்தாள். அவனும் அவளது முகத்தை வெகு நெருக்கத்தில் காண அவனது பிடி அவனையறியாதே இறுக அவளை தன்னுடன் சேர்த்து அணைத்தது அவனது கரங்கள்.
"எ..ன்ன" அவள் ஏதோ கூற ஆரம்பிக்கவும் ஒரு விரலை அவளிதழில் வைத்து தடுத்தான் ஆதிஷ்.
உடல் சிலிர்க்க அசையவும் சக்தியற்று அதே நிலையில் சனா இருக்க தன் கையிலிருந்தவளை நோக்கி குனிந்த ஆதிஷ் அவள் பட்டு கன்னத்தில் அழுத்தமாய் தன் இதழை பதிக்கவும் இதை சற்றும் எதிர்பார்க்காத சனா கண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரித்து அவனை பார்த்தாள்.
அவன் மறுகன்னத்தை பார்த்து குனியவும் கதவை யாரோ பட பட என தட்டவும் சரியாக இருந்தது. சட்டென தன்னை சூழ்ந்திருந்த கட்டில் இருந்து விடுபட்டதை போல் உணர்ந்த ஆதிஷ்
கையிலிருந்த சனாவை காண எதுவும் யோசிக்காது முன் நடந்ததே கண்ணில் நிற்க அவளை தொப் என கீழே போட்டான்.
கருத்துக்களை பகிர