All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மெர்பீயின் ‘மாயப்புதிர்’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்! ஹலோ பிரண்ட்ஸ் 😍...

நான் தான் "மாயப்புதிர்" கதை எழுதப் போகிற 'மெர்பீ'...

என்னைய இங்க நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பிரச்சனையில்லை. இனி இக்கதை மூலம் தெரிந்துக் கொள்ளலாம்😇😇.
உங்கள் எல்லாருடைய ஆதரவுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
நிறைகுறை இரண்டில் எதுவானாலும் கூறி, இந்த வளரும் எழுத்தாளரை ஊக்குவிக்க உங்களை வரவேற்கிறேன்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கு முன்னாடி "ரகசியமேதினி" என்ற கதையை "எஸ்எம்எஸ் அழகிய சங்கமம்-2" -ல எழுதி இருந்தேன்.

அந்த கதையைப் போன்றே இந்த கதையையும் உங்களுக்கு பிடிக்கும் வகையில் என்னுடைய பல்வேறு கற்பனைகளைக் கலந்து எழுதப் போகிறேன்.

தொடர்ந்து கைக்கொடுத்து உதவுங்கள்👍👍...
 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயப்புதிர்

அத்தியாயம்-1



IMG_20220121_145602.jpg

வாசலில் நின்றுக் கொண்டிருந்த அஷ்வினியைத் தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்தாள் தர்ஷினி. உள்ளே வந்த அடுத்த நொடியில், தன்னுடைய ஐந்து விரலையும் அஸ்வினியின் முகத்தில் பதித்து இருந்தாள். தர்ஷினியின் முகமோ கோபத்தில் சிவந்து இருந்தது.


"அறிவு இருக்கா வினி உனக்கு? கீரை விக்கிற பாட்டிக்கிட்ட போய் என்கிட்ட சொன்னதைச் சொல்லப் போற. நீ சொல்றத நானே நம்ப மாட்டேன். நம்பவும் முடியல. அவங்கட்ட சொன்னா உன்ன பைத்தியம்னு தான் நினைப்பாங்க..." என்று அஷ்வினியை வார்த்தையால் புண்படுத்திக் கொண்டிருந்தாள் தர்ஷினி.


" அக்கா! அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்கக்கா... எப்பவும் நான் சொல்றதை யாரும் புரிஞ்சிக்க மாட்டிக்கீங்க. தயவுசெய்து இப்பவாவது புரிஞ்சுக்கோங்க. அக்கா என்ன நம்பு. இது உண்மை. நான் சொல்ற எல்லாம் உண்மை. இங்க இருக்கிற ஒவ்வொரு நொடியும் நம்ம உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வாக்கா இப்பவே நம்ம அங்க..." என்று பேசிக் கொண்டிருந்த அஷ்வினியை இடையிலேயே மறித்தாள் தர்ஷினி.



" ஐயோ! வினி நிறுத்து. நீ இப்படிப் பேசுறத கேட்கும்போது எனக்கே உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சோன்னு சந்தேகமா இருக்கு..." என்றாள் தர்ஷினி. இதை கேட்டதும் அஸ்வினிடம் மிச்சம் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் கண்ணீராய் வெளி வந்து, அவள் கன்னத்தை வருடியது.



" அழுகிறதால ஒன்னும் நடக்காது வினி. நீ சொல்றத நான் கண்டிப்பா நம்பவும் மாட்டேன். நாம இங்க தான் இருக்கப் போறோம். இங்க, இதே வீட்டில, இதே ஊர்ல, புரிஞ்சுதா..." என்று தனது குரலைச் சற்று உயர்த்திக் கேட்ட தர்ஷினியிடம் மறுத்துப் பேச முடியாமல் தலையை மட்டும் அசைத்து வைத்தாள் அஸ்வினி. ஆனால் அவளது மனமோ 'இந்த இடம் ஆபத்தானது' என்பதை மட்டும் அழுத்தமாக கத்திக் கூறிக் கொண்டு இருந்தது.



இதைக் கண்ட தர்ஷினியோ, பெருமூச்சு ஒன்றை மட்டும் விட்டுவிட்டு, ஓய்வெடுப்பதற்காக தன் அறையை நோக்கி சென்று விட்டாள்.



ஆனால், இங்கு அஸ்வினிக்கோ இந்த இரண்டு மாதத்தில் நடந்தவை யாவும் ஒன்றாக நினைவுக்கு வந்து, கண்முன் படமாக ஓடவே, கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, தலையைப் பிடித்தவாறு தரையில் மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டாள்.



அவள் மனமோ 'எல்லாம் போச்சு வினி. அவ்வளவுதான். நீ இத பார்த்த அன்னைக்கே அக்காட்ட சொல்லியிருக்கணும். தப்பு பண்ணிட்ட. பெரிய தப்பு பண்ணிட்ட. இப்ப எப்படி எல்லாரையும் காப்பாத்துவ? எப்படி காப்பாத்துவ? யாரையும் காப்பாத்த முடியாது. முடிஞ்சது... எல்லாம் முடிஞ்சுது... உன்னை நம்ப யாரும் இல்லை. எல்லாரும் அவங்க அழிவை அவங்களே தேடிக்கிட்டாங்க...' என்று அவளிடம் கூறியது.


(புதிர் தொடரும்)

 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயப்புதிர்

அத்தியாயம்-2


(இரண்டு மாதங்களுக்கு முன்பு)



அஸ்வினியும் தர்ஷினியும் தங்களது உடமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தாங்கள் புதிதாக வாங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி, தங்கள் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அம்மா அப்பா மரணத்திற்குப் பின், தங்கள் சொத்து பறிபோன பிறகு, தங்களின் சொந்த உழைப்பில் வாங்கிய முதல் வீடு என்பதால், இருவர் மனதிலும் மகிழ்ச்சி தானாகவே குடியேறி இருந்தது.



இருந்தாலும், அந்த வீட்டைக் குறித்து சுற்றியிருந்தவர்கள் கூறியவை அனைத்தாலும், சிறிது பயமும் இருவரையும் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது என்பதையும் மறுக்க இயலாது.



' என்னமா! நீங்க அந்த வீட்டையா வாங்கப் போறீங்க! பார்த்துமா... உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்... பேசாம வேற வீடு பார்த்துக்கோங்கமா...'



' ஐயோ! அந்த வீடா?! அந்த வீட்ட வாங்கி, அதுல தங்குன யாரும் இதுவரைக்கும் உயிரோடு இருந்ததே இல்லமா...'



'என்னோட பிள்ளைகள் மாறி நினைச்சு சொல்றேன்மா...
பேசாம நீங்க வாங்குன வீட்ட வேற யாருக்காவது வித்துட்டு, வேற வீட்டைப் பாருமா...'



இவ்வாறு வீட்டைப் பற்றி விசாரித்த போது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூறியவைகளை மனதுக்குள் அசை போட்டவாறே வந்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி.



" ஏய் வினி! என்ன ஆச்சு? ஏன் இப்படி முழிக்கிற? வீடு வந்துடுச்சி... எழுந்திரு... வீட்டுக்குள்ள போகலாம்..." என்று கூறிக்கொண்டே, உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள் தர்ஷினி.



ஏற்கனவே எல்லார் சொன்னதையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அப்பொழுது இரவு 8 மணி என்பதாலும் அஸ்வினியை பயம் தொற்றிக்கொள்ளவே, "ஏய் தர்ஷி நில்லு.... நானும் வரேன்..." என்று தன் அக்காவிடம் கூறிவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவள் பின்னே வேகவேகமாக ஓடினாள் அஸ்வினி.



" வினி மெதுவா வா.... நான் ஒன்னும் உன்ன வெளியே வச்சிப் பூட்டப் போறது கிடையாது..." என்ற தர்ஷியிடம்,



" அது இல்ல தர்ஷி.... பக்கத்து வீட்டுல இருக்கறவங்க எல்லாம் ஏதோ பேய் இருக்குன்னு சொல்றாங்க.... ஏதோ பிசாசு இருக்குன்னு சொல்றாங்க... அதான் தர்ஷி..." என்று சிரித்துக் கொண்டே கூறினாள் வினி.



" வினி! யூ சி... இப்படி மொக்க காமெடி பண்றது எல்லாம் கேட்க எனக்கு டைம் இல்ல... நான் மார்னிங் வேலைக்கு போகணும்... சோ டைம் வேஸ்ட் பண்ணாம போய் படு... நானும் என் ரூமுக்கு போறேன்..." என்று கடுப்புடன் கூறினாள் தர்ஷினி.



இதை கேட்டதும் அஷ்வினியின் முகம் வாடினாலும், 'என் ரூமுக்கு போறேன்' என்று தர்ஷி கூறியதைக் கேட்டதும் அவள் முகம் தானாக மலரத் தொடங்கியது.



" வாவ்! ஓகே தர்ஷி... அப்போ என் ரூம் எங்க இருக்கு?" என்று ஆர்வமாக கேட்ட வினியிடம்,



"யூ சி... நான் எனக்கு பிடித்த ரூமை மட்டும்தான் எனக்குன்னு பார்த்து வச்சிருக்கேன்... ஏன்னா மத்த ரூம்லாம் ரொம்ப அழுக்கா இருக்கு. சோ அதுல இப்ப ரெஸ்ட் எடுக்க முடியாது. சோ உன் ரூம்-அ நீயே செலெக்ட் பண்ணிக்கோ ஓகே..." என்ற தர்ஷியிம்,



"தர்ஷி! அப்போ அந்த அழுக்கான ரூம்ல நான் மட்டும் எப்படி தூங்க முடியும்... நான் வேணா இன்னைக்கு மட்டும் உன்கூட தூங்கிட்டா?" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் அஸ்வினி.



" வினி! நோ வே... ஐ காண்ட்... போய் படு. ஓ! நான் மறந்துட்டேன். நீ ஒரு வேலையும் உருப்படியா பண்ண மாட்டீல.... சாரி சாரி. பேசாமல் இன்னைக்கு ஒரு நாள் எப்படியாவது தூங்கு. நான் நாளைக்கு ஈவினிங் வந்து ரூம கிளீன் பண்ணி தரேன்... ஓகேவா"



தர்ஷினியின் இந்த வார்த்தை வினியை மிகவும் உறுத்தியதால், தர்ஷினியிடம் பதில் ஏதும் கூறாமல் தன் அறையைத் தேடி நடக்கத் தொடங்கிவிட்டாள்.



ஆனால் இதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத தர்ஷியோ, தன் அறைக்குச் சென்று விட்டாள்.



இங்கு வினியோ, 'அவ்வளவுதான். எனக்கு இன்னைக்கு ஏதாவது ஒரு அழுக்கு ரூம்தான். பேசாமல் கொஞ்ச நேரத்தில் வேகவேகமாக ரூம கிளீன் பண்ணிட்டு அடுத்து படுத்துக்கிடலாம். ஓ! வெயிட்.... அதுக்கு முதலில் நான் ரூம் செக்ட் பண்ணனும்ல...' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே, ஒவ்வொரு அறையாய் நோட்டம் விட்டுக்கொண்டே சென்றுக் கொண்டிருந்தாள்.



ஏனென்றால், அவர்கள் வாங்கியது இரண்டு அடுக்கு வீடு. கீழ் அடுக்கில் நடுவில் 'பா' வடிவில் இடைவெளி இருக்கும். அதை சுற்றியும் ஐந்து அறைகள் உண்டு. வீட்டினுள் நுழைந்ததும் இடதுபுறம் முதலில் ஒரு சிறிய அறையும், அதைத் தொடர்ந்து ஒரு சமையலறையும் உண்டு. வாசலுக்கு நேராக ஒரு அறை உண்டு. அது கீழே இருக்கும் மற்ற அறைகளை விட சற்று விசாலமானதாக இருக்கும். அந்த அறைக்குள்ளேயே கழிப்பறை வசதியும் உண்டு. வீட்டுக்கு புதிய ஆட்கள் வரப் போகிறார்கள் என்பதை அறிந்ததும், அந்த அறையை மட்டும் சுத்தம் செய்து கொடுத்திருந்தார் அந்த வீட்டின் பழைய உரிமையாளர். ஏனென்றால், அந்த அறையில் இரண்டு ஆட்கள் படுக்கத்தக்க கட்டில் போட முடியும்.



ஆனால், இவையாவும் தெரிந்தும், தர்ஷி வினியிடம் வேறு அறையில் தூங்குமாறு கூறினார். பின் வலது புறம் 2 அறைகள் உண்டு. ஒன்று குளியலறை. மற்றொன்று பழைய பொருட்கள் போடும் அறை. மாடியிலோ மொத்தம் ஆறு அறைகள். அதில் ஒன்று மட்டும் அந்த வீட்டில் உள்ள எல்லா அறைகளையும் விட விசாலமானதாக இருக்கும். அந்த ஒரு அறையின் உள்ளேயே, ஒரு சமையலறையும் ஒரு குளியல் அறையும் உண்டு. மொத்தத்தில் அந்த ஒரு அறை மட்டும் ஒரு குட்டி வீடு போன்றது. இதையும் தர்ஷி முதலிலேயே அறிவாள்.



ஆனால், அந்த அறை அழுக்காக இருந்ததால் அந்த அறையை தனக்கு என்று அவள் தேர்ந்தெடுக்கவில்லை. மற்ற ஐந்து அறைகளில் 2 அறைகள் குளியலறைகள். மீதி மூன்று அறைகளும் சிறிய சிறிய அறைகள். அந்த 'பா' வடிவ இடமோ, சோபா போன்ற பொருட்களைப் போடத்தக்க இடமாக இருந்தது.



இங்கு வினியோ, கீழிருக்கும் எந்த அறையும் பிடிக்காததால் மாடி அறையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு அறையாய் பார்த்துக் கொண்டிருந்த வினி, கடைசியில் அந்த பெரிய அறை இருக்கும் இடத்துக்கு முன் வந்து நின்றாள். பின் மெதுவாக தன் கைகளால் அந்த அறையின் கதவைத் திறந்தாள். பின் உள்ளே சென்ற வினியோ, அங்கே இருப்பவைகளைப் பார்த்துப் பேச்சு மூச்சின்றி நின்றாள்.



ஏனென்றால், அந்த அறை ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. பூதக் கண்ணாடியை வைத்துப் பார்த்தால் கூட, ஒரு சின்ன தூசியைக்கூட கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது அந்த அறை. மேலும் அந்த அறையில் நுழைந்த அடுத்த நொடி அந்த அறையில் விளக்குகள் அனைத்தும் தானாகவே ஒளிரவே, வினி ஒரு நொடி பயந்துப் போய்விட்டாள்.



பின் இயல்பு நிலைக்குத் திரும்பிய வினி, அந்த அறையைச் சுற்றியும் நோட்டமிட்டாள். அந்த அறையின் அலங்காரமும் வடிவமைப்பும் வினிக்கு என்றே செய்தது போன்று இருந்தது. அந்த அறையின் நடுவில் இருவர் படுக்கத்தக்க மெத்தைக் கட்டில் ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும் ஓடிச் சென்று அதில் படுத்துக்கொண்டாள்.



எப்பொழுதும் தனிமை என்றால் வினிக்கு மிகவும் பயம். அதனால்தான் தர்ஷியிடம், 'உன்கூட படுக்கட்டா?' என்று கேட்டாள். ஆனால் இப்பொழுதோ, இவ்வளவு பெரிய அறையில் எந்த ஒரு தயக்கமும் இன்றி படுத்திருந்தாள். மேலும் ஒரு நிமிடத்திலேயே ஆழ்ந்த உறக்கமும் அவளை ஆட்கொண்டது.



அவள் தூங்கிய அடுத்தநொடி, அந்த அறையின் மின்விளக்குகள் அனைத்தும் தானாகவே அணைந்துவிட்டன. பின் இருட்டில் ஒரு உருவம் வினி படுத்து இருந்த மெத்தையின் அருகே வந்து நின்றது. அப்போது வெளியே தோன்றிய திடீர் இடி, மின்னல் காரணமாக அந்த உருவத்தின் தங்க நிற கண்கள் மட்டும் அந்த இருட்டிலும் ஜொலிஜொலித்தது.



பின் அந்த உருவம் வினியினை நோக்கி தன்னுடைய கரங்களைக் கொண்டு சென்றது. வினிக்கும் அந்த உருவத்தின் கைகளுக்கும் இடையில் மில்லி மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது. பின் அந்த உருவம் என்ன நினைத்ததோ, தன் கைகளை பின் இழுத்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டது.



ரோஜாத் தோட்டத்தின் நடுவில் அன்று தான் மலர்ந்த ரோஜாவைப் போல மகிழ்ச்சியாக வலம் வந்துக் கொண்டிருந்தாள் வினி. பலவர்ண ரோஜாக்களின் மத்தியில் தன்னை மறந்து நின்றுக் கொண்டிருந்தாள். இதுபோன்ற ஒரு பேரமைதி பல வருடங்களுக்குப்பின் கிடைத்ததால் அவள் மனம் ஏனோ முயலைப் போன்று துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. இனி தனது வாழ்நாள் முழுவதும் இந்த அமைதி தனது உற்ற நண்பனாய் எப்பொழுதும் இருக்கும் என்ற எண்ணமே அவளை மேலும் உற்சாகப்படுத்தியது.



இப்படி எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்த இடத்தின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்த ஆரஞ்சு நிற வானத்தை மெதுமெதுவாக கருமை நிறம் சூழத் தொடங்கியது. இதனால் திடீரென என்ன என்று அறிய முடியாத ஒரு பயம் வினியை வந்துத் தொற்றிக் கொண்டது. 'மறுபடியும் வேண்டாம்... மறுபடியும் வேண்டாம்...' என்பதை மட்டும் அவளது மனம் விடாது சொல்லிக்கொண்டே இருந்தது.



ஆனால் அந்த கருமையோ, தொலைவில் இருந்து நான்கு மூலைகளில் இருந்தும் மெதுமெதுவாக வினியை நெருங்கிக் கொண்டே வந்தது. வினிக்கு வேர்க்கத் தொடங்கியது. இன்னும் ஒரு நொடிதான் பின் அந்த கருமை வினியை முற்றிலும் சூழ்ந்துவிடும்....



(புதிர் தொடரும்)
 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயப்புதிர்

அத்தியாயம்-3



சடாரென தன் உடல் முழுவதும் வேர்த்து விறுவிறுக்க, அதனால் தனது உடை பாதி அளவு நனைந்த நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள் வினி.



' சே! கனவாக்கும்... நான் கூட ஒரு நிமிசத்துல நிஜம் என்று நினைச்சு பயந்தே போயிட்டேன். இந்த வீட வாங்குறதுக்கு முன்னாடி எல்லாரும் சொன்னதையெல்லாம் நினைச்சிக்கிட்டே தூங்குனது தப்பாப் போச்சே...' என்று கூறிவிட்டு, தன் தலையில் தானே அடித்துக் கொண்டாள் வினி.



' ஆனால் ரெம்ப ரியலா இருந்ததே' என்று குழம்பிக் கொண்டிருந்த வினி, அப்பொழுது தான் கடிகாரத்தைப் பார்க்க, அது காலை 11:00 மணி என்பதை அழகாகக் காட்டிக் கொண்டிருந்தது. இதை பார்த்ததும் வினிக்கு தூக்கிவாரிப் போட்டு விடவே, கனவை அப்படியே மறந்து விட்டு, அவசர அவசரமாய் படியில் இருந்து கீழே இறங்கினாள்.



அவள் நினைத்த மாதிரியே தர்ஷியோ ஏற்கனவே வேலைக்குச் சென்றுவிட்டாள். வினிக்கு இது ஒன்றும் புதிது கிடையாது. ஏனென்றால், எப்பொழுதும் வினியிடம் காலையில் எதுவும் சொல்லாமல் தான் தர்ஷி வேலைக்குச் செல்வாள். ஆனால் மறக்காமல் ஒரு துண்டு சீட்டில் தான் சொல்ல நினைத்த அனைத்தையும் எழுதி வைத்துவிட்டு தான் போவாள். இவை யாவும் வினி ஏற்கனவே அறிந்தது தான்.



எனவே வினி உடனே தனது வீடு முழுவதும் அந்த துண்டுச் சீட்டை சல்லடைப் போட்டுத் தேடத் தொடங்கினாள். அரைமணி நேரமாகியும் எங்கும் அந்த துண்டுச் சீட்டு கிடைக்காமல் போகவே, 'துண்டுச் சீட்டு முக்கியமா! இல்ல சோறு முக்கியமானு! பார்த்தா, நமக்கு சோறு தான் முக்கியம்' என்று நினைத்தப்படியே, தனது காலை உணவை மதியம் 12:10-க்கு சாப்பிடுவதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள் வினி.



அங்கு காலை உணவாக இருந்த ஐந்து இட்லிகளிலிருந்து நான்கை மட்டும் தனக்கு என்று எடுத்துக் கொண்டாள். பின் அங்கே ஒரு சிறிய பாத்திரத்தில் இருந்த தேங்காய் சட்னியை அதில் இருந்த சிறிய கரண்டி உதவியுடன் இரண்டு முறை ஊற்றிக் கொண்டாள். பின் தனது டம்ளரில் தனக்கு குடிக்கத் தேவையான தண்ணீரையும் எடுத்துக் கொண்டாள். பின் ஏதோ பரிட்சையில் கடைசி நிமிடத்தில் ஞாபகம் வந்த பத்து மதிப்பெண் வினா போன்று வேக வேகமாக சென்று ஒரு குட்டிக் கிண்ணத்தை எடுத்து, அதில் ஒரு இட்லிப் பொடி பாக்கெட்டை உடைத்து, அனைத்து பொடியையும் கொட்டினாள். பின் அதில் நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றிவிட்டு, அதை தன் விரல்களால் கிளரியவாறே வந்து சாப்பாட்டு மேசையை அமர்ந்தாள்.



" எப்பா.... என்னமோ பத்து வருசம் சாப்பாடே பார்க்காத மாதிரி என்ன டேஸ்டா இருக்கு...பா... சான்ஸே இல்லை..." என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டே, சாப்பாடு மட்டுமே குறியாய், வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் ஒரே குறியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் வினி.



பின் கால் மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தாள். என்ன 4 இட்லி சாப்பிட 15 நிமிசமான்னு தான யோசிக்கீங்க. நம்ம வினி மெதுவாக தான்ங்க சாப்பிடுவாள்.



பின் தான் சாப்பிட்டு முடித்த பாத்திரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து அப்பொழுதே கழுவியும் வைத்தாள். கடைசியாக தனது தண்ணீர் டம்ளரை எடுக்கும்போது தான் அதைப் பார்த்தாள் வினி. உடனே வேகவேகமாய் தனது தண்ணீர் டம்ளரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டு, அதனை தன் கைகளில் எடுத்து, அதை சுற்றியும் முற்றியும் நான்கு பக்கங்களிலும் பார்த்தாள்.



" என்ன இது பார்க்க ஏதோ டைரி மாதிரியே இருக்கு. ஆனா ஏன் இவ்வளவு பழசா இருக்கு. வெயிட்.... இதுல என்ன ஒரு துண்டுச் சீட்டு" என்று கூறியவாறே, அந்த பழைய டைரியில் இருந்த துண்டுச் சீட்டை தன் கைகளில் எடுத்து பார்த்தாள்.



" ஓ! இது தர்ஷி எழுதின துண்டுச் சீட்டு ஆச்சே... இது எப்படி இதுக்குள்ள? சரி சீட்டுல என்ன எழுதி இருக்குனு பார்க்கலாம்" என்றவாறே, அந்த துண்டுச் சீட்டில் இருப்பவற்றை படிக்கத் தொடங்கினாள் வினி. அதிலோ



" இந்த டைரியை மட்டும் படிக்கவே படிக்காதே வினி"



என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது.



நமக்கு நான் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதை செய்துதானே பழக்கம். நம்ம வினியும் நமது இனம்தான் என்பதை நிரூபிக்கிற மாதிரி, தர்ஷி படிக்கக் கூடாது என்று சொன்ன அந்த டைரியை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். அதன் முதல் பக்கத்தைத் திருப்பிய வினி அதனைப் படிக்கத் தொடங்கினாள். அந்த டைரியிலோ



" நானும் வினியும் எங்களது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் புதிதாக வாங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி, எங்கள் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். அம்மா அப்பா மரணத்திற்குப் பின், எங்கள் சொத்து பறிபோக பிறகு, எங்களின் சொந்த உழைப்பில் வாங்கிய முதல் வீடு என்பதால், இருவர் மனதிலும் மகிழ்ச்சி தானாகவே குடியேறி இருந்தது.



இருந்தாலும் அந்த வீட்டைக் குறித்து, சுற்றி இருந்தவர்கள் கூறியவை அனைத்தாலும், சிறிது பயமும் எங்கள் இருவரையும் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது என்பதையும் மறுக்க இயலாது.



' என்னமா நீங்க அந்த வீட்டையா வாங்கப் போறீங்க? பாத்துமா... உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். பேசாம வேற வீடு பாரத்துக்கோங்கமா.." என்று ஆரம்பித்து,



" எப்பொழுதும் தனிமை என்றால் வினிக்கு பயம். அதனால்தான் என்னிடம் 'உன் கூட படுக்கட்டா?' என்று கேட்டாள் வினி. ஆனால் இப்பொழுதோ அவ்வளவு பெரிய அறையில் எந்த ஒரு தயக்கமும் இன்றி படுத்து இருந்தாள் வினி. மேலும் ஒரு நிமிடத்திலேயே ஆழ்ந்த உறக்கமும் அவளை ஆட்கொண்டது" என்பது வரை, நேற்று நடந்த அனைத்தும் ஒன்றுவிடாமல் எழுதப்பட்டு இருந்தது.



உடனே மீண்டும் அந்த டைரியில் இருந்த எழுத்துக்களைப் பார்த்த வினியை," இது தர்ஷி எழுத்தாச்சே! ஆனா நேத்து அவதான் வேகமாவே படுக்கப் போயிட்டாளே?? பிறகெப்படி... அதுக்கு அப்புறம் நடந்த எல்லாத்தையும் இவ்வளவு கரெக்டா எழுதியிருக்கா? அதுவும் முக்கியமா எனக்கு நடந்த எல்லா விசயத்தையும் ஏதோ கண்ணால நேர்ல பார்த்த மாதிரியே எழுதி இருக்கா? அப்படின்னா நேத்து அவ உண்மையிலேயே படுக்க போகலையா? இல்ல... படுக்க போயிட்டு, பிறகு நான் போன பிறகு மறுபடியும் வெளிய வந்து நான் என்ன பண்றேன்னு பார்த்தாளா? அப்படின்னாலும் அவ எதுக்கு அப்படி பண்ணனும்? எதுக்கு என்ன பாக்கணும்?" என்று பல கேள்விகள் ஒரே நேரத்தில் வந்து மிகவும் குழம்பியது.



மேலும் " அதெல்லாம் சரி. இது என்ன டைரி? இந்த மாதிரி டைரியை நான் எந்த கடையிலும் பார்த்ததே இல்லயே? அதுவும் பார்க்க ரெம்ப பழைய டைரி மாதிரி இருக்கு" என்ற எண்ணமும் உதைத்தது. ஆம்! இது மிகப் பழைய டைரி என்பதை உணர்த்துமாறு அந்த டைரியைச் சுற்றி பல இடங்களில் தூசி குடியேறி இருந்தது.



கடைசியில் எந்த விடையும் கிடைக்காமல் போகவே, அந்த கேள்விகளைத் தூக்கி வீசிவிட்டு, "என்ன இருந்தாலும் இருக்கட்டும். அதுக்குனு இப்படியா டைரியில ஒரு நாள் விசயத்தைப் பத்து பக்கம் எழுதுறது.... பிறகு ஒரு வருசத்துக்கு இந்த டைரி எப்படி பத்தும்..." என்று கூறியவாறே அந்த டைரியை ஏற்கனவே இருந்த இடத்தில் சிறிதும் வித்தியாசம் இல்லாதவாறு வைத்தாள் வினி. 'பிறகு யாரு டைரிய படிச்சதுக்கு தர்ஷிக்கிட்ட திட்டு வாங்குவது' என்ற விசயத்தால் தாங்க நம்ம வினி இப்படி டைரிய நல்ல பிள்ளை மாதிரி எடுத்த இடத்திலேயே வைத்துக் கொண்டு இருக்காள்.



பின் மணி மதியம் 'இரண்டு முப்பது' என்பதை பார்த்த வினி வேக வேகமாக தனது மதிய உணவையும் உண்டு முடித்தாள். அதாங்க வேக வேகமாகன்னா அரை மணி நேரத்தில் சாப்பிட்டுட்டா. பிறகு மணி மூன்று தான் என்பதை பார்த்தவுடன், வினிக்கு தர்ஷி எப்பொழுதும் ஆறு அல்லது ஆறு முப்பது மணிக்கு தான் வேலை முடித்து வீட்டுக்கு வருவாள் என்பது ஞாபகம் வரவே, தனது அறையை நோக்கி நடந்தாள்.



அறைக்கு சென்றபின், எப்போதும் போல் வரைய தேவையான பொருட்களை எடுத்து வந்து, அந்த 'ப' வடிவ இடத்தில் வைத்து வரையத் தொடங்கினாள் வினி. ஆமாங்க! அந்த 'குறிப்பிட்ட நாளுக்கு' பிறகு, தனிமை மட்டுமே வினிக்கு உற்ற தோழனாய் மாறிப் போனது. அப்ப இருந்து அந்த இனிமையான தனிமை நேரத்தில் எல்லாம் வினி தனக்கு ரொம்ப பிடித்த விசயங்களான ஓவியம் வரைவது மற்றும் கவிதை எழுதுவது, இந்த மாதிரி விசயங்கள் தான் அதிகமாக செய்வாள்.



மேலும் எப்பொழுதும் தனக்கு கஷ்டமான நேரத்தில் எல்லாம் அவள் தனது கஷ்டத்தை எல்லாம் கவிதையாய் தான் வெளிப்படுத்துவாள். அதனால்தான் அவள் கவிதை எவ்வளவு நயமாக இருந்தாலும், அது கஷ்டம், துக்கம், துயரம் மற்றும் வேதனை என்பவற்றை உணர்வுப்பூர்வமாக உணர்த்துவதாய் மட்டுமே இருக்கும்.



ஆனால் ஓவியம் அதற்கு மாறாய் அவளின் சந்தோசமான நேரங்களை உணர்த்துவதாய் மட்டுமே அமையும். உடனே ஏதாவது நிகழ்ச்சியை அப்படியே வரைவாளோ என்று யோசிக்கிறீர்களா? இல்லை இல்லை... அப்படியெல்லாம் இல்லை. அவள் வரையும் அனைத்திலும் ஒன்று மட்டும்தான் பொதுவாய் இருக்கும். இன்னும் சொல்லப் போனால், அந்த ஒன்று மட்டும் தான் இருக்கும். அது வேறு ஒன்றும் இல்லை.



" ஒரு மான்"



ஆம்! ஒரு அழகான தங்க நிற மான். அதன் கொம்புகள் பல வளைந்தும் நெளிந்தும் அழகியதாய் இருக்கும். இது மட்டுமே அவள் எப்பொழுதும் வரைவாள். அதுவும் மிகவும் தத்ரூபமாக வரைவாள். ஏதோ உண்மையாய் அந்த மான் நம்மை பார்ப்பது போன்று இருக்கும். ஆனால் எல்லா ஓவியமும் ஒரே மாதிரி இருக்காது.



ஒன்றில் அந்தமான் மேற்கூறியவாறு இருந்தால், அடுத்ததில் அது பூக்களால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும். இன்னும் ஒன்றில் பல கல் பதித்த நகைகள் அணிந்து இருக்கும். வேறு ஒன்றில் வைரம் போல் ஜொலிக்கும். இவ்வாறு வேறுபடும். ஆனால் எல்லா ஓவியத்தில் இருப்பது ஒரே மான் என்று நம்மால் எளிதில் சொல்ல முடியும். ஏனென்றால், எல்லா படத்திலும் அந்த மானின் நெற்றியில் பலவர்ண கல் பதித்த பூ போன்ற ஒரு நகை இருக்கும்.



இவ்வாறு அவள் அந்த மானை மட்டும் பல முறை வரைவதற்கு காரணம் " அந்த மானுக்கும் அஷ்வினிக்கும் இடையிலான பிரிக்க முடியாத ஒரு மாயப் பிணைப்பு தான்". இன்றும் அவ்வாறே அந்த மானுக்கு பூவால் ஆன கிரீடம் தலையில் இருப்பது போன்ற ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து கொண்டிருந்தாள் வினி. திடீரெனத் தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு வரவே எல்லா பக்கமும் பார்த்தால் வினி. ஆனால் யாரும் இல்லாமல் போகவே, அது தன் கற்பனையாய் இருக்கும் என்று நினைத்து விட்டு, மீண்டும் தன் ஓவியத்தைத் தொடர்ந்தாள்.



ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தங்க நிறக் கண்களுடைய உருவமோ, எதையோ சாதித்தது போன்ற ஒரு மர்மப் புன்னகையை உதிர்த்து விட்டு, அங்கிருந்து மறைந்தது.



( புதிர் தொடரும்)
 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயப்புதிர்

அத்தியாயம்-4



இங்கு வினியோ தான் வரைய வேண்டிய ஓவியத்தை பத்து நிமிடத்திலேயே வரைந்துவிட்டு, 'அப்பாடா... ஒரு வழியா முடிச்சுட்டேன்' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆமாங்க... நம்ம வினிக்கு எப்பவும் எவ்வளவு பெரிய ஓவியமாய் இருந்தாலும் வரைவதற்கு 10 நிமிடங்கள் போதும்.



பின் மணியைப் பார்த்த வினி, 'அடச்சே! இப்பதான் மணி 3:10-ஏ ஆகுதா.... ஐயோ தர்ஷி வர இன்னும் நிறைய நேரம் இருக்கே' என்று அலுத்துக் கொண்டாள்.



' சரி! பேசாம நாம போய் கொஞ்ச நேரம் தூங்கலாம். தர்ஷி வந்ததும் எந்திச்சிக்கலாம். டயர்டா இருக்கு' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டே, மாடியில் இருக்கும் தன் அறையை நோக்கிச் சென்றாள். ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த தங்க நிறக் கண்களுடைய உருவமோ, அவள் அறியாவண்ணம் அவளை பின்தொடர்ந்தது.



இங்கு வினியோ, தூங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தான் வெளியே எடுத்து வைத்திருந்த ஓவியத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைக்காமல், அப்படியே போட்டு வைத்துவிட்டு வந்து இருந்தாள். பின் அறையை அடைந்தவுடன் தானாகவே அவளை தூக்கம் ஆட்கொள்ளவே, அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கத் தொடங்கினாள். அடுத்த நொடியே உறங்கியும் போனாள்.



அவள் தூங்கிய பின் நேரமோ, முயலைப் போன்று வேகமாக ஓடத் தொடங்கியது. 3 நிமிடம் தான் ஆனது போன்று இருந்தது. ஆனால் அதற்குள்ளாக மணியோ 6:30-ஐ தொட்டு இருந்தது.



தர்ஷி தன்னிடம் இருந்த சாவியைப் பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் வீட்டுக்குள் வந்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. பிறகு எப்படி இல்லாமல் இருக்கும். அவ்வளவு பெரிய மொத்த வீடும் தூசி எல்லாம் எடுக்கப்பட்டு, இப்பொழுதுதான் கட்டப்பட்ட வீடு போன்று சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் மாலையில் எரிய வேண்டிய அத்தனை விளக்குகளும் ஏற்கனவே போடப்பட்டும் இருந்தது.



' இதையெல்லாம் வினியா ஒத்த ஆளா பண்ணா??? என்னால நம்பவே முடியலையே... எப்படி பண்ணியிருப்பா? இதற்கு வாய்ப்பே இல்லையே?! ஒரே ஆச்சரியமா இருக்கே...' என்று நினைத்த தர்ஷி, பின் தண்ணீர் தாகம் மிகவும் எடுக்கவே, சமையலறைக்குச் சென்று தண்ணீர் அருந்தினாள்.



பின் சாப்பாட்டு மேசையும் சுத்தமாக இருப்பதைப் பார்த்த தர்ஷி, 'பரவாயில்லையே... எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்காளே...' என்று நினைத்தாள். தர்ஷி இப்போது வினி தூங்கிக் கொண்டுதான் இருப்பாள் என்பதை ஏற்கனவே அறிவாள்.



எனவே தானும் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாமே என்று நினைத்த தர்ஷி, தன் அறைக்கு சென்று கட்டிலில் அப்படியே பொத்தென்று போய் விழுந்தாள். அப்பொழுது அவள் முதுகில் ஏதோ ஒன்று கனமாக அழுத்தவே, வேகமாக எழுந்து தன் அறையின் விளக்குகளை உயிர்ப்பித்தாள்.



பின் விளக்குகளின் ஒளி மத்தியில், அவளது கட்டிலில் இருந்த பொருளைப் பார்த்ததும், தர்ஷியை ஒரு பெரிய குழப்பம் வந்து ஆட்கொண்டது.



'ஹே.... இது என்னது ஏதோ பழைய டைரி மாதிரி இருக்கு. இது எப்படி இங்க வந்தது. இத நான் இங்க வைக்கலையே...' என்று நினைத்த தர்ஷி, 'சரி போகட்டும்.... அது யாருடைய டைரி அப்படின்னு படித்துப் பார்க்கலாம்' என்று கூறியவாறே, அந்த பழைய டைரியைத் தன் கைகளில் எடுத்து, அதிலிருந்த தூசிகள் அனைத்தையும் தன் கைகளால் முதலில் தட்டி விட்டாள்.



பின் அந்த டைரியைத் திறந்துப் பார்த்தாள். அதை திறந்துப் பார்த்த உடனேயே, அந்த டைரியில் இருந்த எழுத்துக்கள் அனைத்தும் அது யாருடையது என்பதை உணர்த்துமாறு, எழுதப்பட்டு இருந்தது. அதை பார்த்த தர்ஷியோ அதிர்ச்சியுடனேயே ' இவ ஏன் இத இங்க வச்சி இருக்கா? எத்தனை தடவ தான் நான் அவட்ட சொல்ல... உன் பொருள் எதையும் எப்பவும் என் இடத்தில் வைக்காதன்னு...' என்று கூறினாள்.



பிறகு 'பரவாயில்லை வினி. இது உன் டைரியாவே இருக்கட்டும். பட் இது இப்ப என் ரூம்ல இருக்கு. சோ இத நான் இப்ப படிக்கப் போறேன்' என்று கூறிய தர்ஷி, அந்த டைரியில் எழுதப்பட்டு இருப்பவைகளை படிக்கத் தொடங்கினாள்.



ஆமாம்! அந்த டைரியில் இருந்த எழுத்துக்கள் வேறு யாருடையதும் இல்லை. நம்ம வினியின் எழுத்துக்கள் தான்.



படிக்கலாம் என்று ஆவலாக தர்ஷி அந்த டைரியைத் தன் கைகளில் எடுத்தபோது, அதிலிருந்து ஒரு துண்டுச் சீட்டு நழுவி கீழே விழுந்தது. உடனே தர்ஷி தன் கைகளில் இருந்த டைரியை கீழே வைத்துவிட்டு, அந்த துண்டுச் சீட்டை தன் கைகளில் எடுத்துப் பார்த்தாள்.



பின் அதில் எழுதி இருப்பதைப் படித்துப் பார்த்தாள்.



" வினி, நான் வீட்ல உனக்கு காலை மற்றும் மதிய உணவை ஏற்கனவே பண்ணி வச்சிட்டேன். மறக்காம சாப்பிட்ரு. முக்கியமா மிச்சம் வைக்கக் கூடாது. இது எல்லாத்தையும் விட முக்கியமா நீ இருக்கிற ரூமை மட்டுமாவது சுத்தம் செய்து வை.



இப்படிக்கு,
தர்ஷி"



' அட! இது நான் காலையில் டிவிக்கு பக்கத்தில் எழுதி வைத்திருந்த துண்டுச் சீட்டாச்சே... இது எப்படி இங்க? ஓ! ஒருவேளை, இதை படிச்சு முடிச்சுட்டு டைரி எழுதி இருப்பா போல. அதான் துண்டுச் சீட்டை டைரிக்குள்ளேயே வச்சிட்டுப் போயிருக்கா... ஆனால் பரவாயில்லையே... நான் அவளை ஒரு ரூம் தான் கிளீன் பண்ண சொன்னேன். ஆனால் அவ இப்படி மொத்த ரூமையும் சுத்தம் பண்ணி வச்சுட்டா.... என்னாலேயே இத நம்ப முடியல...' என்று நினைத்த தர்ஷி, பின் மறுபடியும் டைரியின் ஞாபகம் வரவே, துண்டுச் சீட்டை மறுபடியும் டைரிக்கு உள்ளேயே வைத்துவிட்டு, டைரியைப் படிக்கத் தொடங்கினாள். அந்த டைரியிலோ,



" நானும் தர்ஷியும் எங்களது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் புதிதாக வாங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி, எங்கள் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். அம்மா அப்பா மரணத்திற்கு பின், எங்கள் சொத்து பறிபோன பிறகு, எங்களின் சொந்த உழைப்பில் வாங்கிய முதல் வீடு என்பதால், இருவர் மனதிலும் மகிழ்ச்சி தானாகவே குடியேறி இருந்தது.



இருந்தாலும் அந்த வீட்டைக் குறித்து, சுற்றியிருந்தவர்கள் கூறியவை அனைத்தாலும், சிறிது பயமும் எங்கள் இருவரையும் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது என்பதையும் மறுக்க இயலாது.



' என்னமா! நீங்க அந்த வீட்டையா வாங்க போறீங்க... பாத்துமா... உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்... பேசாம வேற வீடு பார்த்துக்கோங்கமா...' " என்று ஆரம்பித்து,



" தர்ஷியின் இந்த வார்த்தை என்னை மிகவும் உறுதியதால், தர்ஷியிடம் பதில் ஏதும் கூறாமல், என் அறையைத் தேடி நடக்கத் தொடங்கி விட்டேன்.



ஆனால் இதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத தர்ஷியோ, தன் அறைக்குச் சென்று விட்டாள்" என்பது வரை எழுதப்பட்டு இருந்தது.



இதை பார்த்ததும் தர்ஷியின் முகம் கோபம் மற்றும் கவலையின் காரணத்தால் சிவந்தது.



' வினி ஒரு டைரி வாங்குனா, அதுல உன் விசயத்தை பத்தி மட்டும் எழுத மாட்டியா? இப்படிதான் அடுத்தவங்களப் பற்றி எழுதுவதா? அதுவும் கரெக்டா நேத்து எனக்கு நடந்த வரைக்கு மட்டும் எழுதி இருக்க... உனக்கு நடந்ததை எழுத மாட்டியா? எவ்வளவு கொழுப்பு உனக்கு...' என்று கவலையில் ஆரம்பித்து, கோபத்தில் வந்து சொல்லவேண்டிதை சொல்லி முடித்த தர்ஷி, கோபத்தில் தன் கையில் இருந்த அந்த டைரியை வேகமாக சுவரை நோக்கி வீசினாள்.



இதனால் அந்த டைரியின் முகப்பு பக்கம் சுவரில் பட்டுத் தெரித்து, கீழே விழுந்தது மட்டுமில்லாமல், அந்த டைரியின் முகப்பு பக்கத்தில் இருந்து ஒரு வகையான சிவப்பு நிற திரவமும் வெளிவரத் தொடங்கியது. ஆனால் இதை கவனிக்காத தர்ஷியோ, தன் ஆத்திரம் குறையாமல்,



" வினி உனக்கு அறிவில்லையா? எத்தன தடவ சொல்றது உனக்கு... எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைன்னு..." என்று சத்தமாக கத்தினாள்.



இதனால் திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்த வினிக்கு, அப்பொழுதுதான் அவள் தன்னுடைய ஓவியப் பொருட்களை கீழே வைத்துவிட்டு வந்தது நினைவு வரவே, அவசர அவசரமாக அதை எடுக்க கீழே ஓடினாள். பின் கீழே வந்த வினியின் உதடுகள் ஆச்சரியத்தில் பேச்சின்றி நின்றது.



' என்ன இது இப்பதான மணி 7:45 ஆகுது. தர்ஷி வந்து ஒன்னே கால் மணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ளே எப்படி தர்ஷி மொத்த வீட்டையும் கிளீன் பண்ணா?' என்ற கேள்வி வினியின் மூளையைக் குடைந்துக் கொண்டிருக்க, ' அடச்சே! அவ கிளீன் பண்ணதால தான் என்னுடைய டிராயிங் திங்க்ஸ் எல்லாம் கீழ போட்டூ வச்சி இருக்கிறத பாத்து கோபமாகிட்டா போல. சரி! பேசாம வேகமா போய் எடுத்து வச்சிடலாம்...' என்று தனக்குத்தானே கூறிவிட்டு, வேகவேகமாய் தன்னுடைய பொருட்களை வைத்த இடத்தை நோக்கி ஓடினாள் வினி.



"அட! இங்க தான எல்லாத்தையும் வைத்தேன்... அதுக்குள்ள எங்க போயிருக்கும்..." என்று நினைத்த வினி, அங்கு தன்னுடைய பொருட்கள் இல்லை என்பதால், கீழே வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். ஆனால் தான் தேடியவை கீழே எங்கும் கிடைக்காமல் போனவே, பேசாமல் தர்ஷியிடமே 'சுத்தம் செய்யும் போது எங்க வைத்தாய்?' என்று கேட்டு விடலாமா? என்று நினைத்தாள். ஆனால் தர்ஷியின் கோபத்தை ஏற்கனவே வினி அறிந்திருந்ததால், அந்த எண்ணத்தை அப்படியே குழி தோண்டி புதைத்து விட்டாள் வினி.



பின் நாளைக்கு இதைப் பற்றி தர்ஷிகிட்ட கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துவிட்டு, தன் அறையை நோக்கி சென்றாள் வினி.



இங்கு தர்ஷிக்கோ, திடீரென அவள் தலையிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியதால், தலைசுற்றலாய் இருக்கிறது என்று கண்களை இறுக்கி மூடிக் கொண்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.



மேலே தன் அறைக்குச் சென்ற வினியோ, தன் அறையைத் திறந்துப் பார்த்தது தான் தாமதம், தன் கட்டிலில் ஏற்கனவே அழகாக அடுக்கப்பட்டிருந்த தனது ஓவியத்திற்குத் தேவையான பொருட்களைப் பார்த்து ஒரு குழம்பிய மனநிலையில் நின்றுக் கொண்டிருந்தாள்.



' அட! இது எப்படி மேல வந்திருக்கும்... தர்ஷியும் அவ ரூம்ல இருக்கா... சோ கண்டிப்பா அவளால் இத இங்க வச்சிருக்க முடியாது... என் ரூம்க்குமம் அப்படின்னா யாரும் போயிருக்க முடியாதே... ஏன்னா நானும் அக்காவும் மட்டும் தான் இந்த வீட்ல இருக்கோம்...' என்று யோசித்தவாறே, எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வினிக்கு, மேலும் அதிர்ச்சித் தரும் விதமாய், காலையில் அவள் பார்த்த டைரி அவளின் ஓவியப் பொருட்களுக்கு நடுவிலிருந்து அவள் கைகளில் கிடைத்தது.



(புதிர் தொடரும்)
 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயப்புதிர்

அத்தியாயம்-5


அந்த டைரியைத் தன் கைகளில் ஏந்திய வினி, 'இந்த தர்ஷி என்ன பொறுப்பே இல்லாம இப்படி அவ டையரிய என்னுடைய ஓவியப் பொருட்களோட வச்சிருக்கா? சரி, இருக்கட்டும். பிறகு சாப்பிட கீழே போவோம்ல அப்ப எடுத்துட்டு போயி அவட்ட கொடுத்திடலாம்' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு, தான் பாதியில் விட்டுச் சென்ற தனது தூக்கத்தை தொடர்வதற்காக மெத்தையை தஞ்சம் அடைந்தாள்.



இரண்டடி தூரத்தில் இருக்கும் நபர் கூட யார் என்று தெரியாதவாறு அந்த இடம் கருமையை தனது உடையாய் தரித்தவாறு காணப்பட்டது. சுற்றிலும் மரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் அனைத்தும் இன்று நம்ப முடியாத மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போவதை முன்னதாகவே அறிந்ததாலோ ஏனோ, ஒருவித மர்ம சப்தங்களை எழுப்பியவாறு இருந்தன. இதனால் தானாகவே அந்த இடத்தை ஒருவித மர்மமும் சூழ்ந்து இருந்தது.



ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாமல், ஒரு கார் மிக விரைவாக அந்த சாலையில் சென்று கொண்டு இருந்தது. அந்த காரின் உள்ளே இருந்த நால்வர் முகத்திலும் வெளியே இருக்கும் சூழ்நிலைக்கு சிறிதும் பொருத்தமில்லாதவாறு மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.



" அப்பா! அப்பா! எப்பப்பா நாம கன்னியாகுமரிக்கு போவோம். இன்னும் எவ்வளவு நேரம்பா?" என்று தனது மழலை மொழியில் தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள், அந்த வீட்டின் எட்டு வயது கடைக்குட்டி.



" இன்னும் கொஞ்ச நேரம் தான்டா... அங்க போயிடலாம்..." என்று அவளை சமாளிக்க முயன்ற அந்த வீட்டின் குடும்பத் தலைவரைப் பார்த்து,



" போங்கப்பா... அப்ப இருந்து இப்படித்தான் சொல்றீங்க... நீங்க என்னை ஏமாத்திட்டே இருக்கீங்க.." என்று தனது உதடு குவித்து கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள், அந்த வீட்டின் கடைக்குட்டி.



இதைப் பார்த்து அந்த வீட்டின் குடும்பத் தலைவியும், 14 வயது மூத்த மகளும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கவே, தனது முகத்தை காரின் ஜன்னல்புறம் நோக்கி திருப்பி கொண்டாள், அந்த சிறுபெண்.



இதைக் கண்ட மூத்த மகளோ, "வினி! இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும். நீ வெயிட் பண்ணிட்டு இருந்தா டயர்டு ஆயிடுவ. பேசாமல் கொஞ்ச நேரம் தூங்கு" என்று கூறினாள்.



இதை கேட்ட அச்சிறுபெண்ணோ, "தர்ஷி கூட மட்டும் தான் நான் பேசுவேன்... மத்தவங்க எல்லார் கூடயும் நான் 'கா'.... ஏன்னா அவ மட்டும் தான் என்ட உண்மையைச் சொல்றா.." என்று கூறியவாறு தன் கைகளால் சண்டை என்று கூறிவிட்டு, தன் தாயின் மடியில் தலை சாய்த்தாள்.



அவளின் தாயோ மகளின் தலையை ஆதரவாக கோதி விட்டவாறே, தன் கணவரைப் பார்த்து "ஏங்க என்ன என்றாலும் நம்ம காலையில கிளம்பி வந்திருக்கலாமோன்னு என் மனசு சொல்லிட்டே இருக்குங்க... எனக்கு ஏனோ மனசே சரியில்ல... ஏதோ தப்பா இருக்கிற மாதிரியே தோனுதுங்க...." என்று சன்னமான குரலில் கூறினாள்.



இதை கேட்ட கணவரோ, "அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.... நீ எதையும் போட்டு குழப்பிக்காத... நாம இப்போ கன்னியாகுமரி வரைக்கும் டூர் போயிட்டு இருக்கோம். அதுவும் நம்ம குழந்தைங்ககூட... இப்ப நம்ம சந்தோசமா இருக்கணும்.... இந்த நேரத்தில் எதையும் யோசிக்காதே..." என்று சமாதானப்படுத்தினான்.



இருந்தும் கணவரின் வார்த்தைகளை மனைவியின் மனம் ஏற்க மறுக்கவே, ஏதோ ஒரு உந்துதல் காரணமாக, அந்த நட்டநடு ராத்திரியில் நெடுஞ்சாலையில், "உடனே வண்டியை நிறுத்துங்கங்க... அதுவும் இந்த நொடியே... இங்கேயே..." என்று இடிபோல் தன் கணவரை நோக்கி முழங்கினாள் மனைவி அவள்.



இந்த திடீர் சத்தத்தின் காரணமாக என்னமோ ஏதோ என்று தன் தாயின் மடியிலிருந்து எழுந்து பதட்டத்துடன் முழித்தாள் வினி. தர்ஷி அவள் தந்தையுடன் முன் இருக்கையில் அமர்ந்திருக்கவே, அவர்கள் இருவருமே ஒருவாறு பதட்டத்துடன் வண்டியை நிறுத்திவிட்டு குரல் வந்த திசையை நோக்கி தங்கள் முகத்தை திருப்பினர்.



அங்கோ வண்டி நின்ற அடுத்த நொடியில் கதவை திறந்த வினி மற்றும் தர்ஷியின் தாய், வினியை உடனடியாக காரை விட்டு இறங்க வைத்துவிட்டு, "வினி தள்ளிப் போய் நில்லு... உன்னால இந்த காரைவிட்டு எவ்வளவு தூரம் தள்ளி நிற்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி நில்லு..." என்று ஆக்ரோஷமாக கத்தினாள்.



இதனால் பயமுற்ற வினியோ, "ஆனால் எதுக்குமா?" என்று கேட்க, "சொன்னதை மட்டும் செய் வினி..." என்று தாயிடம் இருந்து அதட்டல் வரவே, வேக வேகமாக காரில் இருந்து 10 அடி தொலைவில் போய் நின்றுக் கொண்டாள்.



பின் தர்ஷியையும் பார்த்த அவர்களின் தாய்," தர்ஷி! வினிக்கு சொன்னதுதான் உனக்கும்.... உடனடியா இங்கே இருந்து இறங்கி வினிகிட்ட போய் நில்லு போ..." என்று அதட்டினாள்.



ஆனால் தர்ஷியோ, கீழே இறங்காமல் மீண்டும் மீண்டும் "எது..க்காக அம்மா? அம்மா எது..க்காக? இப்படி சொல்றீங்க?" என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.



மேலும் இவர்களின் தந்தையும் "என்ன ஆச்சும்மா? எதுக்கு இப்ப பிள்ளைகளை எல்லாம் இறங்க சொல்லிட்டு இருக்க?" என்று கேட்டுக்கொண்டே இருக்கவே, வேறு வழியில்லாமல் , "என்னன்னு சொல்ல தெரியலைங்க... ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் இந்த காரில் இருந்தா ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதம் நடக்கப் போகுதுன்னு மட்டும் எனக்கு தோணுதுங்க... அதனால் தயவு செஞ்சு பிள்ளைகளை வண்டியைவிட்டு இறங்க சொல்லுங்க..." என்று அழுதவாறு கூறினாள்.



இதை கண்ட தர்ஷிக்கோ நிலைமையின் வீரியம் புரியவே, காரை விட்டு கீழே இறங்கினாள். இருந்தும் அவள் மனது ஒத்துக் கொள்ளாமல் போகவே, மீண்டும் கார்புறம் திரும்பி, "நீங்களும் வெளிய வாங்கம்மா வாங்கப்பா..." என்றாள்.



உடனே பெற்றோர் இருவரும் காரை விட்டு வெளியேற நினைக்கும் வேளையில், எங்கு இருந்தோ ஒரு சிவப்பு நிற ஒளி வேகமாக வருவதுபோல் தெரியவே, வேகமாக வினியை நோக்கி ஓடத் தொடங்கினாள் தர்ஷி.



அதேவேளை இவர்களின் தாய் தந்தை இருந்த வாகனமோ அவர்கள் இருவரும் வெளியே வரும் முன்னரே நம்பமுடியாதவாறு சீர் குலைந்து போய் இருந்தது.



இதை கண்ட தர்ஷி மற்றும் வினி இருவர் கண்களிலும் கண்ணீர் அருவியென வழிந்தது.



சடாரென தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தாள் வினி. அவள் உடலோ வியர்வையில் குளித்து இருந்தது. பின் ' சே! மறுபடியும் அதே கனவு...' என்று நினைத்தவாறு தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே, தனது மூச்சை சீர்படுத்த எண்ணி அருகே இருந்த மேசையிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள். இந்த 'குறிப்பிட்ட நாளான' இவர்களின் பெற்றோர் இருவரின் மரணத்திற்கு பிறகு தான், வினியின் வாழ்வில் பல மாற்றங்களும் நம்ப முடியாத நிகழ்ச்சிகளும் ஏற்பட்டது.



பின் " வினி! கீழ சாப்பிட வா..." என்ற தர்ஷியின் குரல் கேட்டு, சடசடவென கீழே சாப்பிடுவதற்காக ஓடினாள் வினி.



இங்கோ, சடாரென்று தனது கண்களைத் திறந்த அந்த தங்க நிற கண்களுக்கு உரிமையானவனோ, "இதோட ரொம்ப தடவை வினிக்கு இந்த கனவு வருது... அவ அவங்க பேரண்ட்ஸ ரொம்ப மிஸ் பண்றா போல..." என உச்சிக் கொட்டியவாறே தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

(புதிர் தொடரும்)
 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயப்புதிர்

அத்தியாயம்-6



கீழே சாப்பிடுவதற்காக ஓடிய வினி, ஒரு நிமிடம் ஓட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, 'சே! வினி உனக்கு அறிவே இல்ல. இப்படியேவா கீழ சாப்பிட போகப் போற? பிறகு தர்ஷி ஏன் முகம் வாடி இருக்கு என கேட்டா என்ன சொல்லுவ? அதைவிட முக்கியமா நான் அம்மா அப்பாவ நெனச்சுதான் சோகமா இருக்கேன்னு தெரிஞ்சா அவளும் சோகமாகிடுவா' என்று எண்ணியவாறே, தனது முகத்தில் இருந்த சோகத்தைத் தூரத்தில் வீசிவிட்டு, புன்னகை என்ற முகமூடியை முகத்தில் தரித்தவாறே கீழே செல்லத் தொடங்கினாள்.



கடைசி படியை அடைந்த நிலையில் அந்த படியில் இருந்தவாறே சாப்பாட்டு மேசையைப் பார்த்த வினிக்கு ஒரே அதிர்ச்சி தான். ஏனென்றால், ஏற்கனவே வீடு முழுவதையும் தர்ஷிதான் சுத்தம் செய்து வைத்தாள் என்று நினைத்து இருந்தாள் வினி. இப்போதோ அது போதாது என்று தர்ஷி சாப்பாட்டு மேசை நிரம்பி வழியும் அளவுக்கு பல்வேறு வகையான அசைவ உணவுகளை சமைத்து வைத்து, அருகே ஒரு நாற்காலியில் சாப்பிடுவதற்காக வினிக்கு காத்திருந்தவாறே அமர்ந்து இருந்தாள்.



தூரத்திலிருந்து முதலில் உணவு வகைகளை மட்டுமே பார்த்தால், வினி தர்ஷியை சரியாக கவனிக்காமல், சாப்பாட்டு ஆர்வத்தில் வேகமாக சாப்பாட்டு நாற்காலியை இழுத்துப் போட்டு, தர்ஷிக்கு அருகில் அமர்ந்தாள். ஆனால் இப்போது தான் வினி மிகவும் அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் அதற்கும் மேலாக ஒரு வித பதட்டமும் பயமும் அவளை ஆட்கொண்டது. ஏனென்றால், வினி தூரத்திலிருந்து பார்த்த அசைவ உணவு வகைகள் அனைத்தும் சமைக்காமல் பச்சையாக இரத்தம் சொட்ட சொட்ட ஒவ்வொரு பாத்திரத்திலும் வைக்கப்பட்டு சாப்பாட்டு மேசைமீது வைக்கப்பட்டு இருந்தது.



இவை அனைத்திற்கும் மேலாக டம்ளரில் தண்ணீருக்குப் பதிலாக பச்சை மாமிச இரத்தமானது இருந்தது. இதை கண்டதும் ஒரு நொடியில் வினிக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது. அவளது கைகளோ தானாக நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. மெதுவாக தனது ஓரக்கண்களால் அருகில் இருக்கும் தர்ஷியைப் பார்த்தாள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இப்பொழுதுதான் தர்ஷியை ஒழுங்காக பார்க்கிறாள்.



பார்த்ததுதான் தாமதம், வினியின் கண்கள் பயத்தில் அகல விரிந்தன. ஏனென்றால், தர்ஷியின் கண்களோ டம்ளரிலிருக்கும் இரத்தத்திற்கு ஒப்பாக சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. அவள் முகத்திலும் ஒருவித மூர்க்கவெறி தெரிந்தது. இவை அனைத்திற்கும் மேலாக இவ்வளவு நேரமும் ஒரு நொடி கூட விடாமல் கண்ணிமைக்காமல் வினியையே பார்த்துக் கொண்டிருந்தான் தர்ஷி. ஆனால் வினி தன்னை பார்த்த உடனேயே மட்டும் தனது முகத்தைத் தட்டை நோக்கி திருப்பிக் கொண்டாள்.



மேலும் பின் மெதுவாக அருகே தட்டில் இரத்தம் சொட்ட சொட்ட இருந்த மாமிசங்களில் ஒன்றை தனது கைகளில் எடுத்த தர்ஷி, சிறிதும் யோசிக்காமல் அதனை தனது வாயில் போட்டு தின்னத் தொடங்கினாள். பின் இதனால் வாயின் ஒரு ஓரத்திலிருந்து இரத்தம் சொட்டும் நிலையில் வினியைப் பார்த்து திரும்பிய தர்ஷி,



"நீயும் வா, சாப்பிடு வினி. ரொம்ப நல்லா இருக்கும்...." என்றாள்.



ஆனால் அந்த குரலில் அன்பைவிட ஒருவித பயமுறுத்தும் தன்மையே அதிகமாக இருந்தது. இதனால் அதிர்ந்த வினிக்கோ, 'இது கண்டிப்பாக தர்ஷி கிடையாது' என தோன்றவே, அவ்விடத்தை விட்டு நகர எண்ணி மெதுவாக நாற்காலியிலிருந்து எழுந்து, தன் அறையை நோக்கி படிகளில் ஏறத் தொடங்கினாள்.



ஆனால் மூன்று படி ஏறிய நிலையிலோ, அவளது வலது தோள்பட்டை மீது யாரோ கையை வைப்பது போல் தோன்றவே, தனது தோள்பட்டையைப் பார்த்தாள் வினி. அங்கோ, பல்வேறு கீரல்களுடனும் நகங்களுக்கு இடையில் மாமிசத் துண்டுகள் சிக்கிய நிலையிலும் உள்ள நீளமான நகங்களுடனும் அந்த நகங்களின் நுனியில் இருந்து இரத்தமானது சொட்டியவாறும் இருந்த ஒரு கை தான் அவளை மேலே போக விடாமல் தடுத்து இருந்தது.



மேலும் அந்த நகங்களில் இருந்து வழிந்த இரத்தமோ, மெதுவாக அவளது ஆடைகளின் வழியே வழிந்து, தரையில் சொட்ட ஆரம்பித்து இருந்தது. அங்கோ, சிவப்பு நிற உடை இரத்தத்தால் நனைக்கப்பட்ட நிலையில், தலைமுடிகளின் ஊடே ஒற்றை சிவப்பு கண் மட்டும் தெரியுமாறு நின்று கொண்டிருந்தாள் தர்ஷி.



பின் தர்ஷியின் உடலிலிருந்து அவளின் குரலுக்கு சற்றும் பொருந்தாதவாறு ஏதோ பல்வேறு பூச்சிகள் ஒன்றாக சேர்ந்து பேசுவது போன்ற குரலுடன்," டைரிய படிச்ச பிறகும் தைரியமா இங்கேயே இருக்கன்ன? என்னைய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? உன்ன இந்த வீட்ல இருக்க விட்டுடுவேன்னு நினைச்சியா? அதுவும் நான் உங்க ரெண்டு பேரையும் நிம்மதியா இருக்க விட்டுடுவேன்னு நினைச்சியா? கொன்னுடுவேன். உங்க ரெண்டு பேரையும் நிச்சயம் கொன்னுடுவேன். ஒழுங்கா என் இடத்தை விட்டு போயிடுங்க...." என்ற வார்த்தைகள் வெளி வந்தது.அந்தக் குரலோ, வினியின் உடலை புல்லரிக்கச் செய்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த வினியோ, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பின்னே திரும்பி பார்த்தாள். அவள் திரும்பிய அடுத்த நொடி தர்ஷியைப் போன்று இருந்த அப்பெண்ணின் முடிகள் அனைத்தும் காற்றுக்கு வேகமாக பின்னோக்கி பறந்தன. இதனால் அப்பெண்ணின் முகத்தில் இருந்த பல்வேறு கீரல்கள் மற்றும் அதிலிருந்து சொட்டு இரத்தம் அனைத்தும் வினியால் பார்க்க முடிந்தது. பின் நொடிப்பொழுதில் அப்பெண்ணின் சிவப்புநிற நாக்கானது மிக நீளமாக வினியின் இரத்தத்தை உறிஞ்சுவது போன்று அவள் முகத்திற்கு மிக அருகில் வந்தது.



பின் சிறிதும் தாமதிக்காமல் தன் தோள்பட்டை மீது இருந்த அந்த கையை தட்டி விட்டு விட்டு, முழு வேகத்தில் தனது அறையை அடைந்து, அதன் கதவை அடைத்துக் கொண்டாள் வினி. அப்போது கீழிருந்த அந்தப் பெண்ணோ, திடீரென அவளின் கொடிய பயமுறுத்தும் குரலில் மிகவும் சத்தமாக கத்தினாள். பின் சிறிது நேரத்திலேயே அவளிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.



இப்போது மொத்த அறையும் வீடும் அமைதியாக இருக்க, வினிக்கு அவளின் இதய துடிப்பை மட்டுமே மிக தெளிவாக கேட்க முடிந்தது. பின் வினி தன் இதய துடிப்பை சரிபார்த்துவிட்டு, உடையிலிருந்த இரத்தக்கறை காரணமாக விரைவாக சென்று உடைமாற்றி வந்தாள். பின் தன்னை சமநிலைக்கு கொண்டுவர எண்ணி, மெத்தையின் மீது தலை சாய்த்தாள். ஆனால் பின் ஒரு நிமிடத்தில் கீழே தர்ஷி மட்டும் அவள் அறையில் தனியாக உள்ளாள் என்பது நினைவு வரவே, பதட்டத்துடன் கண்களை திறந்த வினி, அரக்கப்பரக்க கீழே ஓடினாள். கீழே அப்பெண் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, பின் வேகமாக சென்று தர்ஷி அறை கதவைத் திறந்தாள்.



அதன் பின்பு தான் அவளுக்கு மூச்சே வந்தது. ஆம்! அப்பெண் தர்ஷி அறைக்குச் சென்று அவளை ஏதாவது செய்து இருப்பாளோ? அதனால்தான் கீழே எந்த சட்டமும் இல்லையோ? என்று பயந்திருந்த வினி,தர்ஷி மயக்கத்தில் மட்டும் தான் இருக்கிறாள் என்பதை அறிந்ததும் தான் நிம்மதியாய் இருந்தது. அதன் பின் தர்ஷி நெற்றியில் இரத்தம் வடிவதை பார்த்து விட்டு வேகமாக முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து அவள் காயங்களை சரி செய்தாள்.



பின் விரைவாக சென்று தண்ணீரை எடுத்து வந்து தர்ஷியின் முகத்தில் அடித்தாள். இதனால் திடீரென தலையிலிருந்து வடிந்த இரத்தத்தால் மயக்கத்திலிருந்த தர்ஷி, தலையை தன் கைகளால் தாங்கி பிடித்தவாறே மெதுவாக கண் திறந்தாள். தர்ஷி இருக்கும் நிலையைப் பார்த்ததும் வினி, 'இன்று நடந்ததை இப்பவே சொன்னா அவளுக்கு கூட கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடும். அதனால வேறு ஒரு நாள் சொல்லிக்கிடலாம்' என்று நினைத்தவாறு, " தர்ஷி! மணி ஒன்பது சாப்பிட்ற நேரம். ஆனால் நீ சாப்பிட வரல. அதான் உன் ரூமுக்கு வந்தேன். இப்போ பரவாயில்லையா? வா சாப்பிட போகலாம். சாப்பிட்டு டேப்லெட் போட்டு படுத்துக்கோ...." என்று மட்டும் கூறினாள்.



'நல்ல வேளை நம்மகூட எப்பவுமே நம்ம தங்கச்சி இருக்கா.... இல்லாட்டா இந்த மாதிரி உடம்பு சரியில்லாதப்ப என்னை யார் பாபப்பா?' என்று நினைத்த தர்ஷியோ, கலங்கிய கண்களோடு தன் தங்கையை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.



சிறிது நேரத்திற்குபின் இருவரும் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தர்ஷியின் முகம் மிகவும் வாடி இருப்பதை பார்த்த வினி அந்த சோக முகத்தை மாற்றி எண்ணி, "தர்ஷி! யாரோ முக்கியமான ஒருத்தவங்கள நாளைக்கு எனக்கு இன்ட்ரோ பண்றேன்னு சொன்னியே யாராது?" என்று கண்ணடித்தவாறே கேட்டாள். இதனால் தர்ஷியின் முகத்தில் ஒரு சிறு புன்னகை அரும்ப அதனை மறைக்க நினைத்து, "அவங்களை நான் நாளைக்கு நேர்ல உனக்கு காமிக்கேன். இப்ப நீ அமைதியாய் சாப்பிடு..." என்று கூறி, வினியை அடக்க முயன்றாள்.



ஆனால் அதனை ஏற்கனவே கவனித்துவிட்ட வினியோ, தர்ஷியைக் கேலி செய்து ஒரு வழி ஆக்கிவிட்டாள். பின் வேறு வழியின்றி அதை ஒரு காதில் வாங்கியவாறே சாப்பிட்டு முடித்தாள் தர்ஷி. பின் இருவரும் அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.


(புதிர் தொடரும்)
 
Last edited:

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயப்புதிர்

அத்தியாயம்-7

அடுத்த நாள் காலைப்பொழுது பறவைகளின் பாடல்களுக்கு மத்தியில் மிகவும் அழகாக ஆரம்பித்தது. அது மட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தர்ஷிக்கும் இன்று விடுமுறை.



இந்த நிலையில் காலை 10 மணிக்கு சோம்பல் முறித்தவாறே கட்டிலில் எழுந்து அமர்ந்தாள் வினி. பின் நேரத்தைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாய் குளித்துவிட்டு கீழே இறங்கி வந்தாள். கீழே வந்த பிறகு கருமமே கண்ணாய் சமையலறைக்கு சென்றவள், காலை உணவை முடித்து விட்டு மெதுவாக வந்து சோபாவின் மீது அமர்ந்தாள்.



இதுவரை பசி மயக்கத்தில் இருந்த வினிக்கு இப்பொழுதுதான் தர்ஷியின் நினைவு வரவே, அப்போது தான் அந்த முக்கியமான நபரை அழைத்து வர அவள் சென்று இருக்கிறாள் என்பதும் நினைவுக்கு வந்தது. பின் சிறிது நேரத்தில் ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலாக மாற்றத் தொடங்கினாள் வினி.



அவ்வாறு அவள் தொலைக்காட்சியை பார்க்க தொடங்கியதில் இருந்து அரை மணி நேரத்திற்குப் பிறகு வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்கவே, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு வாசலை நோக்கி சென்றாள்.



அங்கோ ஆறடி உயரத்தில் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் அணிந்த அழகான இருபத்தி ஏழு வயது இளைஞன் ஒருவன் தர்ஷியின் கைகளோடு தனது கைகளை கோர்த்தவாறு, வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். மேலும் இருவர் முகத்திலும் புன்னகை பூக்கள் பூத்துக் குலுங்கின.



பின் தர்ஷி அருகில் இருந்த இளைஞனைப் சிறுபுன்னகையுடன் பார்த்தவாறே, வினியை நோக்கி "வினி! இவங்க பெயர் நதீன். இவங்களதான் நான் உனக்கு இன்ட்ரோ பண்றேன்னு சொல்லிட்டு இருந்தேன். உனக்கு பிடிச்சிருக்கா? உனக்கும் ஓகே தானே?" என்று கேட்டாள்.



தன் அக்கா அவள் மணம் முடிக்கப் போகும் நபரை இன்று அழைத்து வருவேன் என்று சொல்லி இருந்த நிலையில், இப்போது அந்த நபரோ வினி கண்முன்னே நின்று கொண்டு இருக்கிறார். ஆனால் தர்ஷிக்கு இவ்வளவு பொருத்தமான அழகான அன்பான பண்பான ஒரு நபர் கிடைத்துள்ளார் என்று நினைத்து மகிழ வேண்டிய வினிக்கு ஏனோ மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிர்ச்சிதான் ஏற்பட்டது. அதிர்ச்சியுடனேயே தர்ஷி கேட்ட கேள்விக்கு 'இல்லை' என தலையை ஆட்டினாள் வினி.



இதனால் அதிர்ச்சி அடைந்த தர்ஷியோ, வினியின் தோள்பட்டையை தனது இரு கைகளாலும் அழுந்தப் பற்றி, அவளை ஒரு குலுக்கு குலுக்கியவாறே, "என்ன வினி? எதுக்கு இப்படி சொல்ற? நதீன் கிட்ட என்ன இல்லன்னு நீ அவங்களை பிடிக்கலன்னு சொல்ற?" என்று கேட்டாள்.



உடனே பதட்டத்தில் நடுங்கிய குரலுடன், "உனக்கு இப்ப நான் சொன்னாலும் ஒன்னும் புரியாது. ஆனால் நான் நோ சொன்னது எதுக்குன்னா, அவங்க கண் சிவப்பு நிறத்தில் இருந்ததை நான் பார்த்தேன்" என்றாள் வினி.



இதனை கேட்ட தர்ஷி, வேகமாக திரும்பி நதீன் கண்களைப் பார்க்க, அதுவோ கருப்பு நிறத்தில் அழகாக மின்னிக் கொண்டிருந்தது. இதனால் கோபமடைந்த தர்ஷி, வினியைப் பார்த்து, "வினி! உனக்கு எத்தன தடவ நான் சொல்லனும்? கண்டத சும்மா சும்மா கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காதன்னு? எனக்கு ஞாபகம் இருக்கு உனக்கு 'போஸ்ட் ட்ராமாடிக் ஸ்ட்ரெஸ் கோளாறு (PTSD)' என்கிற சைக்ககாலஜிக்கல் பிரச்சனை இருக்கு என்பது. ஆனால் கற்பனை பண்றதுதான் பண்ற. அத வச்சு எதுல விளையாடனும் அப்படின்னு ஒரு லிமிட் இருக்கு. இப்படி என் பர்சனல் வாழ்க்கையில இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத" என்று கத்தினாள்.



"ஆனால் தர்ஷி! நான் உண்மையாவே பார்த்தேன்..." என்று மீண்டும் அதே புராணத்தைப் பாடத் தொடங்கிய வினியை கோபத்தில் அறைய ஓங்கிய கையை தடுத்து பிடித்து இருந்த நதீன் "தர்ஷி! ரிலாக்ஸ்... வினி தெரியாமல் சொல்லி இருப்பாள். நான் அத ஒன்னும் பெருசா எடுத்துக்கல" என்றான்.



இதனால் சற்று நிதானம் அடைந்த தர்ஷி, "பாத்தியா வினி? நதீன் எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கன்னு... ஒழுங்கா வாய மூடிட்டு உன் ரூமுக்கு போ" என்று கூறினாள். இதனால் கண்கள் கலங்கிய நிலையில் தன் அறைக்குச் சென்றாள் வினி.



வினி தன் அறைக்கதவை மூடிய அடுத்த நொடி, நதீன் தான் பிடித்து வைத்திருந்த தர்ஷியின் கைகளை விடுவித்தான். பின் தர்ஷியும் நதீனும் ஒருவரையொருவர் பார்த்து ஒரு மர்ம புன்னகையை வீசிக் கொண்டனர். இருவரின் கண்களும் இரத்த சிவப்பு நிறத்தில் மின்னியது.



" தர்ஷி! இன்னும் எத்தனை நாள் இப்படியே அவள பேசவிடாமல் பண்ண போற?" என்ற நதீனிடம்,



"பிறகு இத எல்லாரிடமும் சொன்னா நமக்குத்தான பிரச்சனை நதீன்" என்றாள் தர்ஷி.



"ஆனாலும் வினி சொல்றது எல்லாம் உண்மை தான தர்ஷிமா. பிறகு எதற்கு இந்த 'போஸ்ட் ட்ராமாடிக் ஸ்ட்ரெஸ் கோளாறு (PTSD)' சைக்காலஜிக்கல் பிரச்சினை டிராமாலாம்?" என்றான் நதீன்.



"ஆனால் இது எல்லாம் அவளோட கற்பனை என்று அவ நினைக்கிற வரை தான் நமக்கும் நல்லது அவளுக்கும் நல்லது நதீன்" என்றாள் தர்ஷி உதட்டில் தோன்றிய சிறுபுன்னகையுடன்.



பின் தர்ஷியும் நதீனும் சிறிது நேரம் ஒன்றாக செலவழித்த பின், தர்ஷி நதீனை வழி அனுப்பிவிட்டு, அவள் அறைக்குச் சென்றுவிட்டாள். இங்கு நதீனும் தன் இடத்தை நோக்கி சென்றான். ஆனால் இருவர் மனமும் தான் இந்த பிரிவை தாங்க முடியாமல் வேதனையுற்றது.


________________________________________________________


இங்கோ, ஒரு அறையில் சுற்றிலும் புத்தகங்கள் சிதறிக் கிடக்க, நாற்காலியின் பின்பகுதி முதுகை சாய்த்து வைக்க என்று யாரடா சொன்னது? அது தலைக்கு மட்டும் தான்டா என்பது போல், தலையை மட்டும் நாற்காலியின் பின்பகுதியில் வைத்தவாறு, உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் சோபாவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, காலையோ கம்யூட்டர் டேபிள்மீது நலம் விசாரிக்குமாறு அனுப்பி வைத்திருந்தான் அவன்.



அவனது கைகளோ வேகவேகமாக செல்போனை தடவிப் பார்த்துக் கொண்டு இருந்தது. அதாவது அவனது கைகள் செல்போனுடன்(செல்போனில்) விளையாடிக் கொண்டிருந்தது.



இந்நிலையில் அந்த அறையின் கதவு படாரென உடைக்கப்பட்டு, அதன் வழியாக கோபமாக உள்ளே வந்தான் நதீன். இந்த திடீர் நிகழ்ச்சியோ, செல்போனுடன் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு தீவிரவாத கும்பல் தாக்க வருவதை போன்ற ஒரு செயலை நினைவூட்டுவதாய் அமையவே, பதட்டத்தில் தன் கையிலிருந்த செல்போனை தரையில் போட்டான். அந்த செல்போனோ 'ஹப்பா... ஒரு வழியா இவன்கிட்ட இருந்து விடுதலை கிடைத்துவிட்டது' என்று நினைத்தோ என்னவோ, உடனடியாக தனது கண்களை மூடி நித்திரை நிலையை அடைந்தது.



"டேய்! டின் டப்பா... இப்ப எதுக்குடா கதவ உடைச்சிட்டு வர, மெதுவா கதவ திறந்து வந்தா என்னடா... உன்னால என் போன் தூங்கிடுச்சு போடா..." என்று வராத கண்ணீரைத் துடைத்தவாறே பேசிய அவனிடம்,



"ஆமாம்... ஆமாம்... நான் இப்ப உடைச்சிட்டு வந்ததால தான் உன் போன் தூங்கிட்டு பாரு... அதுவே சார்ஜ் இல்லாம கண்ண மூடி இருக்கும்னு எனக்கு தெரியும்டா... ஓவரா பேசாம விஷயத்துக்கு வாடா... நான் எதுக்கு வந்து இருக்கேன்னு உனக்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும்..." என்றான் நதீன்.



"ஓகே... ஓகே... ஓகே... ஒத்துக்கிறேன்டா.... என் செல்லக்குட்டி சார்ஜ் இல்லாம தான் தூங்கிட்டுன்னு..." என்றவனிடம்,



" டேய்... டேய்... விசயத்துக்கு வாடா... அத விட்டுட்டு வேற எல்லாம் பேசுவான். ஓகே நானே கேட்கிறேன். சார் அப்படி என்ன வெட்டி முறிச்சீங்கன்னு என்ன மாட்டிவிட பார்த்தீங்க?" என்ற கேள்வியைத் தொடுத்தான் நதீன்.



"டேய்! நான் உன்ன மாட்டிவிட நினைப்பேனா? அது ஆக்சிடென்ட்டா நடந்ததுடா. கொஞ்சம் அதிகமா போன்குள்ள மூழ்கிட்டேன்னா அதான் உன்ன மறந்துட்டேன்டா..." என்று அவன் அதற்கு பதிலளிக்க,



"ஆமாம்! சார் அப்படியே பெரிய விஞ்ஞானி. கண்டுபிடிப்பு பற்றி யோசிட்டு இருந்தாரு. அதான் என்ன மறந்துட்டாரு. ரீசன் சொல்றத பாரு. நீ பண்ண காட்டியதால வினி நம்மள கண்டுபிடிச்சி இருப்பாடா. சரி விடு... இனிமேலாவது அங்க நான் இருக்கும்போது ஒழுங்கா சக்தியைப் பயன்படுத்துடா... அப்ப தான் என் கண்ணோட நிறம் கருப்பாவே இருக்கும். ஆமாம்! அடுத்து இன்னொரு விசயம் டேய் கொஞ்சம் வால அடக்கி வை. நீ எக்கச்சக்கமா எதுவும் பண்ணி, எனக்கு ஆப்பு வச்சிடாத. அமைதியா இரு" என்றான் நதீன்.



"ஓகே... ஓகேடா... கவலைப்படாத... இனிமேல் ஒழுங்கா நான் என் சக்தியை யூஸ் பண்றேன். ஆனா... நான் போன்குள்ள மூழ்கினதால உன்ன மறந்துட்டேன்னு தான் சொன்னேன். என் சக்திய நிறுத்தல. எனக்கு தெரிஞ்சி வினிக்கு 18 வயசு வந்துட்டு என்பதால்தான் இப்படி அவளால இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் பார்க்க முடியுதுன்னு நான் நினைக்கேன்டா..." என்றவனின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.



"டேய் தம்பி... உன் முகம் திடீர்னு சரியில்லையே. ஏன்டா பல்ல காட்டுற?" என்ற நதீனிடம்,



"அவளுக்கு பதினெட்டு வயது ஆகிட்டு. அப்படினா அவ இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜுக்கு வந்துடுவா. அதுவும் என் காலேஜ்-க்கு தான் வரான்னு நீ சொன்னீல்ல அதான்டா..." என்றவனை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நதீன்.



"டேய் அண்ணா... ரொம்ப யோசிக்காத... எல்லாம் நன்மைக்கே...." என்று கூறிக் கண்ணடித்தான் அந்த தங்க நிறக் கண்ணழகன்.



பின் தன் அண்ணனை பார்த்து " ஓகே... எல்லாம் சரிதான். என் ரூம்ல இருந்து போறதுக்கு முன்னாடி அதை சரி பண்ணிட்டு போடா..." என்று அங்கு பரிதாபமாக நொறுங்கிக் கிடந்த கதவை நோக்கி கை நீட்டியவாறே கூறினான்.



இதனைக கேட்ட நதீன் தனது கைகளைக் கீழே கிடந்த கதவை நோக்கி, சரியாக சொல்ல வேண்டுமென்றால் கதவுத் துண்டுகளை நோக்கி சொடுக்கிட, அது நொடிப்பொழுதில் தனது பழைய நிலையை அடைந்து இருந்தது.


(புதிர் தொடரும்)
 
Last edited:
Status
Not open for further replies.
Top