அத்தியாயம் 01 [ A ]
அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபம் கலை கட்டியிருந்துதுன்னு நீங்க நெனச்சீங்கன்னா அதுதான் இல்ல....
அன்னிக்கின்னு பாத்து அது ரொம்ப பரபரப்பா இருந்துது.
ஏன்?????
அட நம்ம ஹீரோயினுக்கு கல்யாணம்
அய்யயோ அப்போ ஹீரோ எங்க போய்ட்டாரு???
பொண்ணுக்கு பக்கத்துல ஹண்ட்ஸம்மா ஒருத்தன் நிக்கிறானே அவனா இருக்குமோ????
வாங்க போய் விசாரிக்கலாம் நண்பா.....
அவன் அண்ணன் காரனாமே நண்பா...
பேரு அப்பறமா கேட்டுக்கலாம்....
நாம ஹீரோவ தேடலாம் வாங்க....
ஊஹூம் நம்ம ஹீரோ இன்னும் என்ட்ரியே ஆகல!!!
ஸ்டோரிக்கு வெளிய இருக்குறா மாறி பீல் ஆகுதில்ல...
ஓகே ஓகே உள்ள போலாம்.....
அழகுப் பதுமையாக மேடையில் அமர்ந்திருந்தவளின் கண்கள் மிரட்சியில் இருக்க உடல் வெளிப்படையாகவே நடுங்கிக் கொண்டிருந்தது.
அவள் அருகில் நின்று கொண்டிருந்தவனின் கண்கள் இரத்தமென சிவந்து நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது.
சலசலப்பிற்கு காரணமானவனோ வேஷ்டி சட்டையில் காலுக்கு மேல் கால் போட்டு தன் இரு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து உதட்டில் ஒரு இகழ்ச்சி சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.
"வேலு....ப்ளீஸ் என் மாப்பிள்ளய விட்டுடு.... என் பொண்ணு வாழ்க்க நாசமா போயிடும்.... எதுவா இருந்தாலும் தாலி கட்டினதுக்கு அப்பறம் பாத்துக்கலாம்....." கையெடுத்து கும்பிட்டு தன் மகள் வாழ்க்கைக்காக கெஞ்சினார் அந்தத் தந்தை.....
அவனிடம் சிறு சலனம் கூட இல்லை.....
"இன்னிக்கு இந்த கல்யாணம் நடக்கலன்னா இந்த ஜென்மதுல என் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது வேலு....." முகத்தை மூடிக் கொண்டு அவர் அழ அவரையே கூர்ந்து பார்த்தவன் தனக்கு அருகில் இருந்த தன் அடியாளுக்கு கண் காட்ட அடுத்த நிமிடம் கல்யாணப் பெண் அவன் முன் நிறுத்தப்பட்டிருந்தாள்.
அங்கே அண்ணன் இரண்டு தடியர்களிடம் திமிரிக் கொண்டிருக்க அவனை ஒரு பார்வை பார்த்தவன் எழுந்து தன் ஷரட்டை சரியாக்கி விட்டு திடுமென அவள் கழுத்தில் தாலியை கட்டி விட அதை எதிர்பாக்காத அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தார் அவள் தந்தை!!!
ஹாஸ்பிடல்......
"அப்பா...." கதறியழுத தங்கையை பார்க்க தன் கண்களும் கலங்கும் போல் இருந்தது ஆதர்ஷிற்கு....
(அதாங்க அவளோட அண்ணன்காரன் ஒருத்தன் இருந்தானே....அவனோட பேருதான் நண்பா)
அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடிக் கொடுக்க
"அ...அண்ணா....அ...அ...அப்பாக்கு ஒன்னும் ஆகாதுல்ல....?" நிமிர்ந்து கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்குமே சத்தியமாக புரியவே இல்லை....
"சொல்லுங்கண்ணா ப்ளீஸ்.... அ...அ.. அப்பாவுக்கு எதுவும் இல்லல்ல?"
"நோ அம்முகுட்டி.... நம்ம அப்பாவுக்கு எதுவுமில்லமா....நீ அழாத"
"எப்பிடிணா அழாம இருக்க முடியும்....எ... எனக்கு பயமா இருக்குணா...." அவள் மீண்டும் அழ அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
டாக்டர் வெளியே வராதது வேறு பதற்றமாகவே இருந்தது அங்கிருந்த அணைவருக்கும்....
தங்கையை பார்பதா அல்லது எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் தாயை பார்ப்பதா என குழம்பித் தவித்தவன் தன் நண்பனை அழைத்து தங்கையிடம் விட்டு விட்டு தாயிடம் விரைந்தான்.
அவர் தேவி....
அருகில் அமர்ந்தவன் அவர் கைகளை எடுத்து தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டு
"மா...அழுதுருமா....இப்பிடி இருக்காத ப்ளீஸ்....அம்மா...." அவர் தொள் தொட்டு உலுக்கினான் அவன்....
அவர்தான் இந்த உலகிலேயே இல்லையே....
பிறகு எப்பிடி அவன் சொல்வது கேட்டிருக்கும்???
"மா...." தன்னை மீறி கத்தவும் தான் அவரிடம் ஒரு திடுக்கிடலே வந்தது போலும்....
அவனை பார்த்து மலங்க மலங்க விழித்தவருக்கு கண்களிலிருந்து கரகரவென வழியத் துவங்கியது கண்ணீர்.....
***
அந்த பெரிய மாளிகையின் உள்ளே காலுக்கு மேல் கால் போட்டு நடுநாயகமாக அமர்ந்திருந்தான் அவன்!!!
கதிர்வேல்!!!
அவன் மனக்குமுறலை வெளியே தெரியாமல் மறைக்க பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பது அவன் கை முஷ்டிகளை மடக்கியிருப்பதிலிருந்தே தெரிந்து கொண்ட அவன் பீ.ஏ "ரித்விக் " எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு தான் மட்டும் அவனருகில் சென்று அமர்ந்தான்.
"கதிர்...." அவன் தோள் தொட நிமிர்ந்து தன் நண்பனை பார்த்தவனின் கண்களில் முதன்முறை கலக்கத்தை கன்டவன் துடித்தே போனான்.
(அட....நண்பனா....?)
"மச்சி....ப்ளீஸ்" கண்கள் கலங்க தன்னிடம் கெஞ்சியவனை பார்த்தவன் சடாரென தன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள குழப்பத்துடன் நண்பனை ஏறிட்டான் ரித்விக்....
"ஐ அம் ஆல்ரைட் ரித்விக்....நா தனிய இருக்க விரும்புறேன்..... யாரையும் டிஸ்டர்ப் பண்ண விடாத" அவன் முகம் பார்க்காமல் விறுவிறுவென்று அவன் மேலேறிச் சென்றிட உயிர் நண்பனை பார்த்து பெருமூச்சு விட்டான் அவன்.....
தன்னறைக்கு வந்தவன் தன் கோபத்தை எதில் காட்டுவதென்று தெரியாமல் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடிக்கு ஓங்கி குத்தினான்.
உடல் வலியை விட மன வலி மேலோங்கி இருந்ததில் கையிலிருந்து இரத்தம் கொட்டுவது கூட பெரிதாக தெரியவில்லை போலும் அந்த ஆறடி ஆண்மகனுக்கு....
கட்டிலில் தொப்பென அமர்ந்து தலையை தாங்கிக் கொண்டவனின் முன் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த கைக்கு சொந்தக்காரர் தனக்கு அருகில் இப்போது இல்லை என்ற உண்மை புரிந்ததில் மனம் கனத்துப் போனது அவனுக்கு....
கூடவே மனப்பாரம் நீங்க தலை சாய்த்த தாய்மடியும் சேர்ந்து கலைந்து போனதில் அந்த அஞ்சா நெஞ்சனின் கண்களிலிருந்தும் இரு சொட்டுக் கண்ணீர் துளிகள் உருண்டு விழுந்ததுவோ???
"அவன விட்டுடாதடா..." காற்றில் கரைந்து வந்து தன் செவிகளை தீண்டிய சகோதரனின் குரலில் விறைத்து இறுகியது அவன் தேகம்!!!
விழவா வேண்டாமா என தேங்கி நின்ற கண்ணீரை சுண்டி எரிந்தவன்
"விட மாட்டேன்பா...உங்கள அழிச்சவங்கள உறுத்தெறியாம அழிக்கும் வர நா ஓய மாட்டேன்" பழிவெறி மின்னியது அவன் கண்களில்!!!
***
ஹாஸ்பிடல்......
அவன் அவளுக்கு தாலி கட்டியதில் அதிக சந்தோஷப்பட்டது அவர் உள்ளம் மட்டும்தான்!!!
எங்கே தன் ஒரே சொந்தமும் தன்னை விட்டுப் போய்விடுமோ என அஞ்சிக் கொண்டிருந்தவருக்கு பால்வார்த்தது போல் இருந்தது அவன் செய்கை....
ஆனால் அதன் பிறகு தன் கணவன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்ததில் மொத்த சந்தோஷமுமே வடிந்து போனது அந்தத் தாய்க்கு.....
தன் மகனிடமே கதறித் தீர்தவரை தடுக்க முன் வர வில்லை அவன்...
அவர்கள் அனைவரின் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் டாக்டர் அறையிலிருந்து வெளியே வர தாயிடமிருந்து விலகி அவசரமாக அவரருகில் சென்றான் ஆதர்ஷ்.....
"டாக்டர்...அப்பா...?"
அவன் தவிப்பாக நிறுத்தவே
"பயப்பட்ற மாறி எதுவும் இல்ல மிஸ்டர்.ஆதர்ஷ்....பட்..." அவனுக்கு ஆறுதலாக கூரிவிட்டு அவர் நிறுத்த கலவரமானான் அவன்....
"டாக்டர்..."
"உங்க அப்பாவுக்கு இது ரெண்டாவது அட்டாக்.... இனி ஒரு தடவ வந்துதுன்னா அவர் பொழக்கிறது கஷ்டம்...." சத்தமில்லாமல் அவன் தலையில் இடியை இறக்க நிலைகுலைந்து போனவனது மனம் அவர் கூற்றை அவசரமாக மறுத்தது.
"நோ டாக்டர்....அப்பாவுக்கு இது மாதிரி வந்ததே இல்ல... அப்பறம் எப்பிடி?" இருந்துவிடக் கூடாதே என்ற மன்றாட்டம் அவன் குரலில்....
அதை தவிடுபொடியாக்கியது அவர் வார்த்தைகள்....
"நோ மிஸ்டர்.ஆதர்ஷ்....அவருக்கு ஏற்கனவே ஒரு தடவ வந்திருக்கு..... ஏன் அவரு உங்க கிட்ட மறச்சிட்டாரா?" அவர் கேள்வியில் பரிதாபமாக விழித்தவனின் கையை தட்டிக் கொடுத்தவர் அங்கிருந்து நகரவே தன்னைத் தவிர வேறு யாரும் கேட்டிருப்பார்களோ என எண்ணியவன் கலவரமாக திரும்ப அவன் நினைத்தது போலவே பேயறைந்தது போல் மயங்கிச் சரிந்தவளை திடீரென தாங்கிப் பிடித்தது இரு வலிய கரங்கள்....
அவள் அமிர்தவர்ஷினி!!!
டாக்டர் கூறியவற்றை எதிர்பாராமல் கேட்டு அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தவளை சட்டென வந்து தாங்கிக் கொண்டன அவள் கணவன் கரங்கள்!!!
தங்கை கணவனை அங்கு அதுவும் அந்நேரம் எதிர்பாரா அதிர்சியில் உறைந்தவன் சட்டென தெளிந்து அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டு விட்டு மற்றவனை உறுத்து விழித்தான்.
அவன் கோபம் அவனுக்கு சுவாரஷ்யத்தை கூட்டியதோ என்னவோ முகத்தில் சட்டென வந்து ஒட்டிக் கொண்டது ஒரு இகழ்ச்சிச் சிரிப்பு....
தங்கையை நண்பனிடம் ஒப்படைத்து விட்டு, வந்தவன் புரம் திரும்ப அவனோ ஹாஸ்பிடல் வராண்டாவில் போடப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டிருக்க வந்தவனின் திமிர் தோற்றத்தில் அவனுக்கு வந்ததே கோபம்!!!
கண்கள் சிவக்க வந்தவனின் சட்டையை கெத்தாகப் பற்ற அப்போதும் அவன் அசைந்தானில்லை....
அதை கண்டு ரித்விக் எகிறிக் கொண்டு வர அவனை ஒற்றைப் பார்வையில் அடக்கியவன் மீண்டும் தன் பார்வையை நிதானமாக திருப்பினான் ஆதர்ஷிடம்....
தன் சட்டையிலுள்ள அவன் கையை பார்த்து விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கை தானாக கீழிறங்கியது.
அதை பார்த்து மீண்டும் இகழ்ச்சியாய் சிரித்தவன் எழுந்து தன் ஷர்ட்டை சரியாக இழுத்து விட்டு
"அட மச்சானுக்கு கோபத்துல கண்ணு சிவந்திருக்கு பாருடா" ரித்விக்கை பார்த்து கேலி பேசியவனிடம் மீண்டும் கோபப்பட்டான் ஆதர்ஷ்....
"யாருக்கு யாருடா மச்சான்.... மரியாதையா போயிடு இங்க இருந்து.... இல்ல...நடக்குறதே வேற" அவன் அடிக்குரலில் சீற அவன் என்னவோ பெரிய ஜோக் சொல்லி விட்டது போல் கத்தி கத்தி சிரிக்க
"ச்சேஹ்...." அலுப்புடன் மொழிந்து விட்டு நகரப் போனவனை தேக்கியது அவன் வார்த்தைகள்.....
"ரித்விக்....என் மாமாவுக்கு சாவு காலம் நெருங்கிடிச்சாம்டா.... இப்போ தான் எனக்கு நிம்ம்ம்மதியா இருக்கு....கடவுள் இருக்கான்டா....கடவுள் இருக்கான்..." சொல்லிவிட்டு தன் நண்பன் கழுத்தில் கையை போட்டுக் கொண்டு சென்று கொண்டிருப்பவனையே வெறித்தது ஆதர்ஷின் பார்வை!!!
சட்டென தங்கை நினைவு எழ அவளை தேடி ஓடியவன் சடாரென கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.
அவள் என்னமோ மயக்கத்திலிருந்து தெளிந்து அமர்ந்திருந்தாலும் வெளியே வெறித்துக் கொண்டிருந்த அவள் தோற்றத்தில் அண்ணன் தான் அதிகமாக துடித்துப் போனான்.
வீட்டில் அனைவருக்கும் செல்லம் அவள்....
என்றாலும் அவளிடம் அப்படி ஒரு அமைதி!!!
அதிர்ந்து கூட பேசத் தெரியாதவளுக்கு எல்லாமே அப்பா தான்....
அண்ணனுக்கும் அம்மாவுக்கும் செல்லம் தான் என்றாலும் ஏனோ தந்தையிடமே அவளுக்கு ஒட்டுதல் அதிகம்...
அவ்வளவு செல்லமாக வளர்க்கப்பட்டவளுக்கு இப்படி ஒருவன் தாளி கட்டி விடுவான் என அங்கிருந்த யாருமே எதிர்ப்பார்த்திருக்கவில்லை.....
நடந்து முடிந்த நிகழ்வில் கசப்பாக முறுவலித்துக் கொண்டவன் தங்கை அருகில் சென்று அமர்ந்தான்.
அருகில் அரவம் உணர்ந்து தன் பார்வையை திருப்பியவள் தன் சகோதரனை பார்த்து புன்னகைத்தாள்.
எவ்வளவு தான் நடந்தாலும் இந்த புன்னகை மட்டுமே அவளது பதிலாக இருக்குமென்று உணர்ந்து கொண்டவனுக்கு உள்ளம் வலித்தது.
"இப்போ எப்பிடி இருக்கு அம்மு?"
"ஐ அம் ஆல்ரைட்ணா...." மீண்டும் ஒரு முறுவல்....
"...."
"ஏண்ணா....அப்.. அப்பா.." தொண்டை அடைத்து கரகரவென கண்ணீர் வழிந்தது அவள் கண்ணத்தில்....
"ஷ்...அழக்கூடாது மா...." எழுந்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனுக்கும் மேற்கொண்டு எதுவும் பேசத் தோன்றவில்லை....
கதவு இலேசாக தட்டப்பட்டதில் இருவரும் ஒருசேர திரும்பியதில் அதற்கும் கலாய்க்கத் துவங்கினான் வந்தவன்!!!
ஆம் மீண்டும் வந்தது அவனே தான்....
கதிர்வேல்!!!
அவனைப் பார்த்து பொங்கியவனுக்கு உடல் வெளிப்படையாக நடுங்க தனக்குள்ளே ஒன்றிப் போய் இருந்தவளில் கவனம் பதிய அவசரமாக தங்கை புறம் பார்வையை திருப்பினான்.
கண்களில் மிரட்சியுடன் வந்திருந்தவனை பார்த்தவளின் பயம் அவனுக்கு கோபத்தை கொடுக்க இவன் ஆரம்பிப்பதற்குள் அவனே அருகில் வந்திருந்தான்.
"அட....மச்சான்....நீயும் இங்கேயா இருக்க....?" எள்ளல் வழிந்த அவன் குரலில் பல்லை கடித்தான் ஆதர்ஷ்.
நின்றிருந்த அவன் பார்வை சட்டென மனைவி புறம் திரும்ப திடீரென அவள் உடல் தூக்கிவாரிப் போட்டதில் வழமை போல் இகழ்ச்சியாய் வளைந்தது அவன் உதடுகள்....
"இப்பிடி பன்னிட்டீயே மச்சான்....?" அவன் திடுமென கேட்டதில் குழப்பமாய் சுருங்கியது ஆதர்ஷின் புருவங்கள்......
"பின்ன....தங்கச்சிக்கு கல்யாணம் நடந்துடிச்சுன்னு சொல்லவே இல்ல பாத்தியா?" என்றவனின் கேள்வியில் அதிர்ந்தது இருவருமே தான்....
தன்னை சுதாரித்தவன்
"நாங்க எதுக்குடா உன்கிட்ட அதெல்லாம் சொல்லிட்டு இருக்கனும்?" எகத்தாளமான ஆதர்ஷின் கேள்வியில் அதிர்வான் என இவன் நினைத்திருக்க அவனோ அதற்கு நேர்மாறாக வாய்விட்டுச் சிரிக்கவும் இவன் தான் மீண்டும் பல்லை கடிக்க வேண்டியதாய் போயிற்று.....
"குட் ஜோக்...." என்றவனின் சிரிப்பு சட்டென நின்று போய் அவன் அடுத்து சொன் வார்த்தையில் தன் தாலியை பயத்துடன் தன் கைகளுக்குள் பற்றினாள் அவன் மனையாள்....
"ஏன் மச்சான்.... புடிக்காத கல்யாணமா இருந்தா பேசாம உன் தங்கச்சிக்கு தாலிய கழட்டி எறிஞ்சிட சொல்லிடேன்"
கண்களை இறுக்க மூடித் திறந்தவன் ஒரு முடிவுடன் தங்கை புறம் திரும்ப தன் மனைவியையே கூர்மையாய் நோக்கத் துவங்கியது அவன் கண்கள்!!!
"அம்மு...." என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தெரிந்த பதற்றம் அவனை துணுக்குற வைத்தது.
"அந்த தாலிய கழட்டி என் கையில கொடுத்துடு" அவளை விலக்கி நிறுத்தி அவன் கைகளை நீட்ட தன் தாலியை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டவள் இரண்டடி பின்னால் நகர ஆதர்ஷின் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்ததென்றால் அவள் கணவன் முகம் பாறை போல் இறுகிப் போனது.
(( என்னடா இவன்.... அவ அப்பிடி பண்ணினதுல நியாயமா சந்தோஷப்பட்டிருக்கனும்.....இவன் என்னடான்னா....இவன புரிஞ்சிக்கவே முடில நண்பா....
உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிதூ......???))
மீண்டும் ஏதோ பேச வாயெடுத்தவன் அவன் விறுட்டென வெளியேறவும் அப்படியே நிறுத்தி விட்டான்.
***
"என்னங்க...."தன் கணவரின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் தேவி.....
"தேவி எதுக்கிப்போ தேவயில்லாம அழுதுகிட்டு இருக்க?" சற்றே கடிந்து கொண்டார் ராஜா!!!
அமிர்தவர்ஷினியின் தந்தை!!!
(( அதாங்க நம்ம ஹீரோ மாமனார் இருக்காருல்ல....அவரு பேரு....
என்னதூ.... உங்க எல்லோருக்கும் ஏற்கனவே தெரியுமா???
அது சரி.....ரீடர்ஸ் பத்தி தெரிஞ்சும் சொல்லிட்டிருக்கேன்ல.....எனக்கு நல்லா வேணும்....
வெட்டி பேச்சு பேசாம ஸ்டோரிகுள்ள வாங்க.....
அய்யய்யோ மொறக்கிறாய்ங்களே....))
"இப்போ நீ அழுதுகிட்டு இருந்தா நம்ம குழந்தைங்களுக்கு யாரு ஆறுதல் சொல்றது?" அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் வேலை செய்தது தான் போலும்....
வழிந்த கண்ணீரை துடைக்கவும் ஆதர்ஷ் அமிர்தவர்ஷினியுடன் வரவும் சரியாக இருந்தது.
"அப்பா...." ஓடி வந்து தந்தை பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள அவள் தலையை தன் நடுங்கும் கை கொண்டு வருடினார் அவர்....
"நா ரொம்ப பயந்துட்டேன்பா...." கேவலாக வெளிப்பட்டது அவள் குரல்.....
"ஷ்....அம்மு....என்னம்மா இது... அப்பாவுக்கு ஒன்னில்ல...
முதல்ல அழறத நிறுத்து"
"...."
"அம்மூ....ஐ அம் சாரிமா...."
"அப்பா...என்னப்பா நீங்க போய்...." பதறி மறுத்தாள் மகள்....
"இல்லம்மா....என் மேல தான் தப்பு.... உன் வாழ்க்கய நானே பாழாக்கிட்டேன்"
"...."
"அப்பிடி நடக்கும்னு நா எதிர்பாக்கலமா... மாப்பிள்ளய பத்தி விசாரிக்காம சரின்னு சொல்லிட்டேன்.....கடைசியில என்னென்னவோ நடந்துடுச்சு"
"விடுங்கப்பா அப்பறம் பேசிக்கலாம்" இடையிட்டான் ஆதர்ஷ்....
"ஆமாங்க....வீட்ல போய் பாத்துக்கலாம் நீங்க ரெஸ்ட் எடுங்க" தேவியும் ஆமோதிக்கவே அப்படியே அமைதியாகி விட்டார்.
"ஆதி..."
"என்னம்மா...."
"நீ அம்முவ கூட்டிட்டு வீட்டுக்கு போ...நா பாத்துக்குறேன்"
"இல்லமா...நீங்க அம்முவோட கிளம்புங்க நா பாத்துக்குறேன்...."
"இல்லடா நா...."
"அம்மா அதான் நா பாத்துக்குறேன்னு சொல்றேன்ல.... கிளம்புங்க..." அவரை கட்டாயப்படுத்தி தங்கையுடன் அனுப்பி வைத்து விட்டு வந்தவனுக்கு இதயம் பாரமாய் அழுத்தியது.
***
"மச்சான் அந்த பொண்ணு வந்திருக்காடா....." வெளியே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் சடாரென நண்பன் புறம் திரும்பினான்.
"அவங்க அம்மா கூட வந்திருக்காங்...." அவன் கூறி முடிக்கவில்லை அவன் காலரை கெத்தாக பற்றியிருந்தான் கதிர்....
"என்னடா சொன்ன?" கண்கள் சிவக்க கேட்டவனை கண்டு ரித்விக்கே ஒரு கணம் பயந்து போனான்.
"ம...மச்சான்...." அவன் திணற அவனை உதறித்தள்ளி விட்டு தடதடவென கீழே இறங்கிச் சென்றவனை கண்டு இன்னுமின்னும் கலக்கம் அதிகரித்தது அந்த நண்பனுக்கு.....
........
கோபமாய் கீழிறங்கி அவன் வர தன் அருகில் நடுங்கிக் கொண்டிருந்த மகளையும் சடாரென எழுப்பி விட்டு தானும் எழுந்து நின்றார் தேவி!!!
அவன் பேச வாயெடுக்கு முன் அவனை கைநீட்டி தடுத்திருந்தார் அவர்...
"இருங்க சார் நா பேசிட்றேன்" அழுத்தமாக வந்து விழுந்த வார்த்தைகளில் அவன் வாய் தானாக மூடிக் கொண்டது.
"கல்யாணம் எப்பிடி நடந்திருந்தாலும் என் பொண்ணு இப்போ உங்களுக்கு மனைவிதான் சார்"
"...."
"நீங்க ஏத்துக்க முடியாதுன்னு சொன்னாலும் இவள இங்க தான் நான் விட்டுட்டு போக போறேன்"
"வாட்....?" அவன் கோபத்தில் கத்த அவளோ தாயை உச்சகட்ட அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள்.
"தன் மனைவிய நடு ரோட்டுல விட்ற அளவுக்கு நீங்க மோசமானவர் இல்லன்னு நெனக்கிறேன் சார்" அவர்கள் இருவரும் என்னவென்று கிரகிப்பதற்குள் அவர் வாசல் தாண்டியிருக்க திடீரென தெளிந்தவள் அவர் பின்னே அழுது கொண்டே ஓடினாள்.
கேட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தவரின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டு அழுதாள் அவள்....
"மா...ப்ளீஸ் மா.... என்ன விட்டு போய்டாத....எனக்கு பயமா இருக்குமா.... ப்ளீஸ் மா...."
"...."
"மா எனக்கு அவங்கள பாத்தாலே பயமா இருக்குமா....நா எப்பிடிமா இருப்பேன்....ப்ளீஸ் உன்கூட என்னயும் கூட்டிட்டு போய்டுமா..." அவள் கேள்வியில் அவளை திரும்பிப் பார்த்தவர்
"சரி....நீ சொல்ற மாறியே பண்ணிட்றேன்...." மலர்ந்த முகம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தது அவர் அடுத்து சொன் வார்த்தைகளில்.....
"அப்பிடி நீ என்கூட வர்றேன்னா இப்போ இந்த நிமிஷத்தோட அவரு கட்டின தாலிய கழட்டி கொடுத்துட்டு வந்துடு...." தன் வளர்ப்பை பற்றி தெரிந்தே அவளை தாக்கினார்.
அவர் நினைத்தது தான் நடந்தது!!!
கழுத்தில் தொங்கிங் கொண்டிருந்த தாளியை இறுக்கப் பற்றியவாறே
"நா இங்கேயே இருக்கேன்மா....நீ போ...." என்றவளை பார்த்து அவர் கண்களில் அப்படி ஒரு நிம்மதி!!!
நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் கடவுளுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது???
.......
இரவு ஒரு மணியை தாண்டியும் வெளியே போனவன் திரும்பி வரவும் இல்லை வெளியே நின்றவள் உள்ளே வரவும் இல்லை...
நடுவில் ரித்விக் தான் திண்டாடிப் போனான்.
அவனும் எவ்வளவு தான் கெஞ்சுவது???
அவளும் அசைந்து கொடுக்க வேண்டுமே???
ஒரே ஒரு தலையசைப்பை தவிர வேறு எந்த பதிலுமே அவளிடமிருந்து வருவதாகவே தெரியவில்லை....
நூறாவது முறையாக தன் முன் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் வர்ஷினி....
"ராத்திரி ஒன்ன தாண்டுதுமா... ப்ளீஸ் பண்ணி உள்ள வா"
"...."
"அவன் கோபப்படுவான்னு பயப்பட்றியா.. அவன் எதுவும் சொல்ல மாட்டான் நீ வாமா" அவளிடம் மாட்டேன் எனும் தலையாட்டல் மட்டுமே....
"டைம் பாருமா.... ப்ளீஸ் உள்ள வா"
"எனக்கு அப்பாவ பாக்...." வந்ததற்கு பேசப் போன போன முதல் வார்த்தையும் சர்ரென்ற பைக் சத்தத்தில் அப்படியே தேங்கிப் போனது
புஜங்கள் இறுகி கண்கள் சிவக்க வந்து இறங்கியவனை பார்த்து அவள் ரித்விக்குக்குப் பின்னால் மறைந்து கொள்ள அவன் பற்களை நறநறவென கடித்தான்.
"மச்சான்....அது...." அவனை கை நீட்டி தடுத்தவன்
"ஏன் அம்மணிக்கு பார்டி காட் வேற முன்னால நிக்கனுமோ?" என்றான் எகத்தாளமாக....
அவன் வார்த்தைகளில் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த கண்ணீர் மீண்டும் கரகரவென வழியத் துவங்க ரித்விக்கை விட்டு சற்றே நகர்ந்து நின்றாள் பெண்ணவள்!!!
"மச்சான் ஏன் இப்பிடி பண்ற...நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லடா....பாவம் அவங்க..." பொறுக்கமாட்டாமாமல் கேட்டவனை அசட்டை செய்தவன் அவனை உறுத்து விழித்தான்.
"நீ இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க?"
"நா என்னமோ பண்றேன்...நீ எங்க போன?" பதில் சொல்லாமல் கேள்வி கேட்பவனை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்...
"இவங்க இன்னும் சாப்புட கூட இல்ல"
"ஸோ வாட்?"
"என்னடா இப்பிடி கேக்குற....நா இவங்க இன்னும் சாப்புடலன்னு சொல்லிகிட்டு இருக்கேன்" அவனும் கோபத்தில் கத்த இவன் கோபம் கரையை கடந்தது.
"அதுக்கு தான் நானும் கேக்குறேன்.... இந்த *** வ சாப்புடலன்னு நா என்ன பண்ணனும்குற?" சிதறிய வார்த்தைகளில் விக்கித்துப் போனது அவன் மனையாள் மட்டுமல்ல அவன் நண்பனும் கூடவே!!!
ஏன் இப்படி ஒரு வெறுப்பு???
யாரோ செய்த தப்பிற்கு இவளுக்கு தண்டனை தருவதில் அப்படி என்ன நியாயத்தை கண்டுவிட்டான் தன் நண்பன்!!!
மனம் கனத்தது நண்பன் செயலில்.....
நண்பனை நிமிர்ந்து பார்த்த அவன் பார்வையில் மனதில் குற்ற உணர்ச்சி எழ முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான் கதிர்....
"சாரிடா...." மனம் கேட்காமல் சட்டென மன்னிப்பு யாசித்தவனை ஆச்சரியத்துடன் ஏறிட்டன அவன் மனையாள் கண்கள்....
போலியாய் புன்னகைத்து விட்டு நகரப் போனவனின் கையை பற்றி தடுத்தவன்
"அதான் சாரி சொல்றேன்லடா" மீண்டும் கேட்டான்.
அவன் முகம் தெளியாததை கண்டவனுக்கு விலகியிருந்த கோபம் மீண்டும் துளிர் விட கையை உதறித் தள்ளியவன் மீண்டும் அவனின் ராயல் என்ஃபீல்டை எடுத்துக் கொண்டு சென்று விட இவனுக்குத் தான் என்னடாவென ஆகிப் போனது.
திரும்பி அந்த பாவப்பட்ட ஜீவனை பார்த்தான்...
ஆச்சரியம் மறைந்து வேதனை குடி கொண்டிருந்ததில் அவனுக்கு மீண்டும் ஏதோ பிசையும் உணர்வு.....
"அ...வந்து....அவனுக்காக நா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேங்க....
மனசுல வெச்சுகாதிங்க ப்ளீஸ்.... ஏன் இப்பிடி பண்றான்னு எனக்கும் புரிய மாட்டேங்குது.....அகைன் சாரிங்க...."
"அ...அப்பிடியெல்லாம் இல்லணா...." அதற்கு மேல் பேச முடியாமல் அவள் முகத்தை மூடி அழ அவள் அண்ணா எனும் அழைப்பில் பூரித்துப் போன மனது அவள் முகத்தை மூடி அழுததில் அப்படியே வடிந்து போயிற்று....
"ஐ...ஐ...ஐ அம் ரியலி சாரி வர்ஷினி.....ப்ளீஸ் அழாதிங்க"
"...."
"அவன் ஏதோ கோபத்துல அப்பிடி சொல்லி இருப்பான்.... மத்தபடி அவன் அப்பிடி கிடையாதுங்க" கோபமே இருந்தாலும் நண்பனுக்காக பேசினான் அவன்....
"நீங்க முதல்ல உள்ள வாங்க ப்ளீஸ்... இத அப்பறமா பாத்துக்கலாம்"
"...."
"என்ன அப்போ சும்மா தான் அண்ணன்னு கூப்டிருக்க?"
"அச்சோ அ...அப்பில்லாம் இல்லணா..."
"அப்பிடி இல்லணா வீட்டுக்குள்ள நீ வரணும்" என்றான் கட்டளை போலும்....
"...."
"ஒனக்கு என்னமா பிரச்சின?" அவன் கனிவில் மீண்ட கண்ணீரை கஷ்டப்பட்டு விழுங்கியவள்
"என்னால உள்ள வர முடியாதுணா" என்றாள் உறுதியாய்....
அவள் பதிலில் நெற்றி சுறுக்கியவன்
"ஏன்?" ஏதோ கேட்கப் போய் பாதியில் நிறுத்தி விட்டான் புரிந்து கொண்டவனாய்.....
"நீ நெனக்கிறதுல தப்பு இல்ல தான்..... இருந்தும் அவனா வந்து உன்ன வீட்டுக்குள்ள கூப்டுவான்னு நீ எப்பிடி நம்புற?"
"எனக்கு நம்பிக்க இருக்குணா அவங்க மேல.... அவங்க அவ்வளவு மோசமானவங்க இல்லன்னு என் மனசு சொல்லுது" இலேசாய் புன்னகைத்தவனுக்கு மனதில் அப்படி ஒரு அமைதி!!!
"நீங்க போய் தூங்குங்கண்ணா..." அவள் கூற்றில் அவளை முறைத்தவனை கண்டு கப்பென வாயை மூடிக் கொண்டாள் காரிகை.......
......
மணி அதிகாலை ஐந்தை தாண்டிக் கொண்டிருந்தாலும் அவன் வரும் சுவடு மட்டும் தெரியவே இல்லை....
அருகிலிருந்த தூனில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தவளை பார்த்து பெருமூச்சு விட்டவனுக்கு நண்பன் மேல் கடுப்பாக வந்தது.
மீண்டும் மீண்டும் அழைப்பெடுத்தும் அவன் அழைப்பை ஏற்காததில் ஏற்கனவே கடுப்பில் இருந்தவனுக்கு இந்த செய்கை எறிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் இருந்ததில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.....
காலை.....
மணி ஏழு....
ஊஹூம்.....அவன் வரவே இல்லை....
தூங்கி எழுந்தவள் மலங்க மலங்க விழித்துப் பார்க்கவும் ஒருவனை வரவழைத்து காபி கொண்டு வந்து கொடுத்தான்.
வீட்டை சுற்றி எப்போதுமே அடியாட்கள் இருந்து கொண்டே தான் இருப்பர்.
நேற்றைய சம்பவத்தில் அவள் கண்களில் மிரட்சியை கண்டவன் எல்லோரையும் வீட்டுக்கு சற்றே தள்ளி இருக்குமாறு சொல்லி விட்டான்.
(( கதிர்னு நீங்க தப்பு கணக்கு போட்டிங்கன்னா அது தான் இல்ல நண்பா....அவன் அவ முகத்தயே பாக்கல இதுல எங்க இருந்து கண்ணுல இருந்து படிக்கிறது???
எல்லாம் நம்ம ரித்விக் வேல தாங்க....))
நெரம் சென்று கொண்டிருந்ததில் இருந்த கோபம் மறைந்து அங்கே சற்றே பதற்றம் குடி கொண்டதில் அவனை தயங்கி நோக்கினாள் பாவை.....
இலேசாய் கலைந்து போன கூந்தல்.....
நீளமான முக அமைப்புக்கு பொறுந்தியிருந்த கயல்விழிகளில் அத்தனை சோகம்!!!
வில்லாய் வலைந்த புருவ மத்தியில் சின்னதாய் ஒரு பொட்டு..... கூர் நாசிக்கு கீழே இருப்பதே தெரியாமல் செப்பு இதழ்கள்....
முன்னால் வந்து விழுந்த கட் முடிக்கற்றைகளை பின்னால் ஒதுக்கியவள் அவனை நெருங்கினாள்.
"அண்...அண்ணா..."
"என்னமா?"
"எனக்கு அப்பாவ பாக்கணும்" அழுதழுது கண்ணீரும் வற்றி விட்டது போல் அவளுக்கு....
கண்கள் மட்டும் கலங்கி அழத் தயாராய் இருந்தது.
"ப்ளீஸ் என்ன அப்பாகிட்ட கூட்டிகிட்டு போறீங்களா?" அவனுக்கு மட்டும் இப்படி எதுவும் பேசாமல் இருக்க ஆசையா என்ன???
வீட்டிற்கு வந்ததற்கே இந்தளவு பேசி விட்டுச் சென்றவன் அவளை கூட்டிச் சென்றால் கொன்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பான் என அறிந்த மனம் அமைதி காத்தது.
"ப்ளீஸ் ணா.... ப்ளீஸ்..." கையெடுத்து கும்புடப் போனவளின் கையை கையை சட்டென பிடித்தவன் கை தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு திரும்பினான்.
தொடரும்.....
23-06-2021.