All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கதை திரி..

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வடிவேலின்... மானே..!! மயங்குவதேனோ..!!

மான் - 1

'என்னுளே! என்னுள்ளே!
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற
ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ... மோகம்...!'


என சத்தமாய் ஒலித்த கைப்பேசியின் பாடல் ஒலியைக் கேட்டு.. கண்விழித்த இளமாறன், மேஜையின் மீதிருந்த கைப்பேசியை பற்றி, அதன் ஒலியை துண்டித்து மீண்டும் மேஜையின் மீது வைத்துவிட்டு, தன் மார்பில் முகம் புதைத்து, இரு கரம் கொண்டு தன்னை அணைத்து.. காதலுடன் துயில் கொள்ளும் தன்னவளை நோக்கினான்...

மதுமிதா...!!! சிறு குழந்தையைப் போல் அவனுள் அடைக்கலமாகியிருந்தாள்... காதலோடு அவள் முகத்தை நோக்கியவன் சற்று நிம்மதியடைந்தான்... காடு மேடு எல்லாம் சுற்றி அலைந்து திரிந்து, கடைசியில் தன் வீடு வந்து சேரும்பொழுது ஏற்படும் நிம்மதியை அவளது முகத்தினில் கண்டான்...

அவனுள்ளும் அதே நிலைதான்... நேற்றுவரை அவன் அறிந்திடாத உணர்ந்திடாத அமைதியை, ஆனந்தத்தை, நிம்மதியை இன்று முழுவதுமாய் உணர்ந்தான்...

அந்த நொடி இவள் என்னவள்... எனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற எண்ணமே அவனை கர்வம் கொள்ளச் செய்தது....

'என் உடலை விட்டு உயிர் பிரியும் தருணத்திலும் உனை மட்டும் பிரியேன்' என காதலோடு மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், அதே காதலோடு மென்மையாக அவளையணைத்து கன்னங்களை வருடினான்...

இளமாறனின் இந்த தொடுகையில் உறக்கத்திலிருந்து விழித்தவள், அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்ததும் வெட்கிச் சிவந்து போனாள்... மேலும் அவனை அணைத்துக் கொண்டு படுத்திருப்பதை எண்ணி, நாணம் அவளை பிடுங்கித் தின்றது.....

அதை உணர்ந்து கொண்டவன்.. மேலும் அவளை சோதிக்காமல், அவளது கண்களைப் பார்த்து,

"good morning மது..." எனக் கூற,

அதே புன்னகையுடன், "good morning இளா..." என பதிலுரைத்தாள்...

"மது, நீ போய் குளிச்சு ரெஃப்ரெஸ் ஆகிட்டுவா... புதுசா பிரஸ், பேஸ்ட், சோப் எல்லாமே வாங்கி வச்சிருக்கேன்... நான் அதுக்குள்ள கடைக்கு போய் பால் வாங்கிட்டு வர்றேன்..." எனக் கூறி எழுந்து கொண்டான்....

அவளும் எழுந்து குளியலறை வரை சென்று தயங்கியபடி நின்று இளமாறனை பார்த்தாள்...

அவளது தயக்கத்தை கண்டு கொண்டவன், அவள் அருகில் வந்து ஆறுதலாக அவள் கையைப் பற்றி,

"என்னடா...? வேற எதாவது வேணுமா...?" என வினவ,

'இல்லை' என்பது போல் அவள் மறுப்பாய் தலையசைத்தாள்...

'வேற என்ன...?'என கேள்வியாய் யோசித்தவன்,

"வீட்டு ஞாபகமா இருக்கா...? அம்மா அப்பாவ பார்க்கனுமா...?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..."

"அப்ப வேற என்ன பிரச்சனைன்னு நீ தான் சொல்லனும்... நீ சொல்லாம எனக்கு எப்படி தெரியும் மது..."

"அதில்லடா... அத எப்படி சொல்லறதுனு தெரியல..." என கைகளை பிசைந்து கொண்டு அவள் தயங்கிவாறே நின்றாள்...

"சரி சொல்ல தெரியலன்னா பரவாயில்லை... எழுதிக் காட்டு..." என இளமாறன் கூற...

"என்ன ஜோக்கா...? எனக்கு இப்ப சிரிப்பு வரல... உனக்காக வேணும்னா நாளைக்கு சிரிக்கறேன்..." என கோபமாக கூறினாள்... ஆனால், மருந்துக்கு கூட அவள் முகத்தில் கோபம் இல்லை... மாறாக, இதழ் முழுவதும் புன்னகையே நிறைந்திருந்தது...

"இளா... இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னு கேக்கப் போறியா...? இல்லையா...?"

அவளது புன்னகையை கண்டு கொண்டவன் அதே புன்னகையுடன்,

"அடியேய் அழகி...! அதைத்தான இத்தனை நேரமா கேட்டுட்டு இருக்கேன்...? நீதான் சொல்ல மாட்டேங்கிற... எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு..."

"போடா... நீதான் எதை எதையோ பேசி என்ன குழப்பி விட்டுட்ட... இப்ப நான் என்ன சொல்ல வந்தேனு சுத்தமா மறந்து போச்சு..." என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற...

"ஹா... ஹா... ஹா..." என இளமாறன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்

"இளா சிரிக்காத... அப்புறம் நிஜமாவே எனக்கு கோவம் வந்துரும்..." என மதுமிதா போலியாய் முறைக்க ஆரம்பித்தாள்...

"சரி... ஓகே... ரிலாக்ஸ்... நீ போய் ரெஃப்ரெஸ் பண்ணு... நான் கடைக்கு போய் பால் வாங்கிட்டு வறேன் சரியா...?" என இளமாறன் மறுபடியும் கூற....

அதை கேட்டவளின் முகமோ மலர்ந்து சுருங்கியது...

அதை கவனித்தவன், "ப்ச்... இப்ப என்னடா பிரச்சனை...?" என சலிப்பாய் கேட்க,

"ஞாபகம் வந்துருச்சு..." என்றாள் மெல்லிய குரலில்...

இளமாறனின் முகத்தில் மறுபடியும் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது...

ஏனெனில் மதுமிதாவை பற்றி அவன் நன்றாக அறிவான்... மதுமிதா இதுவரை யாரிடமும் எதற்காகவும் தயங்கியதில்லை... தன் மனதில் தோன்றியதை அப்படியே எடுத்துரைக்கும் தைரியமுள்ளவள்... பிறகு ஏன் தயங்குகிறாள்...? ஒருவேளை தன்மீது கொண்ட காதலால் வந்த தயக்கமோ...?

அவள் தன்னிடம் தன் காதலை சொன்ன தருணத்தை நினைத்துப் பார்த்தான்... அதை நினைத்ததும் அவனுக்கே சிலிர்த்தது...! (அவள் தன் காதலை வெளிப்படுத்தியவிதம் அப்படி...) இடவலமாக தலையை சிலுப்பி தன்னிலை உணர்ந்தவன்,

'டேய் இளா... கண்டிப்பா இவ மொக்கயா தான் சொல்லப் போறா... கண்ட்ரோல் யுவர் செல்ஃப்... சிரிச்சு தொலைச்சிடாத...' என மனதிற்குள்
நினைத்துக் கொண்டே அவன் மதுமிதாவை கூர்ந்து நோக்கினான்...


மதுமிதாவோ இவன் முகம் போன போக்கை கண்டு....

"என்ன சார்....? யோசனை எல்லாம் பலமா இருக்கு...? நீங்க எதையாவது மறந்துடீங்களா...?" என நக்கலாக கேட்க..

"நான் எதையும் மறக்கல மேடம்... நீங்க தான் மறந்துடேன்... ஞாபகம் வந்துருச்சுன்னு பதினாறு வயதினிலே கமல் மாதிரி, மாத்தி மாத்தி குழப்பிட்டு இருக்கறிங்க..." என நக்கலாக பதில் கூற, இருவருமே புன்னகைத்தனர்...

"சரி இப்ப சொல்லு மது... என்ன சொல்ல வந்த...?"

"எனக்கு சுத்தமா சமைக்க தெரியாது... ஒரு டீ காபி கூட போடத் தெரியாது... அதான் நீ பால் வாங்கறதுக்கு பதிலா... காபி..." என்று மதுமிதா இழுக்க...

"நெனைச்சேன்..... நீ இப்படி மொக்கையா தான் சொல்லுவேன்னு... இதுக்கு தான் இவ்வளவு பில்டஃப் கொடுத்தியா...? நானும் கூட என்னமோ, ஏதோன்னு நினைசேன்... தெரியலன்னா... தெரியலன்னு சொல்லு... நான் என்ன நினைப்பேனு யோசிச்சு, நீ உன்ன குழப்பிக்காத... சரியா..." என இளமாறன் அவளுக்கு புரியும்படி எடுத்து கூற...


"சரி..." என ஒப்புதலாய் தலையசைத்தவள்...

"அப்ப என் மேல உனக்கு கோவம் வரலையா...?" என கேட்டவளை வியப்பாய் பார்த்து தன்னருகில் வருமாறு சைகை செய்தான்... அதை புரிந்து கொண்டு அருகில் வந்தவளை கைகளில் ஏந்திக் கொண்டு போய் கட்டிலில் அமர்த்திவிட்டு தானும் அவளருகே அமர்ந்து அவள் கண்களை உற்று நோக்கினான்....

"எங்கடீ போனா என் ஜான்சி ராணி...? அந்த ஜான்சி ராணிக்குள்ள தான் இந்த அமூல் பேபி இருக்கான்னு சத்தியம் பண்ணி சொன்னாலும், சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க... எதுக்காக உன் மேல எனக்கு கோபம் வரணும் சொல்லு..."

"அது வந்து..." என்று அவள் சொல்லும் முன்னே....

"இரு....இரு... நீ பேசி கஷ்டப்பட வேண்டாம்... நானே சொல்லறேன்... கவனமா கேட்டுக்கோ.... என்ன சரியா...?" என அவன் சிரிப்புடனே கூற....

"ம்... சரிங்க சார்... சொல்லுங்க சார்..." என்று அவளும் பதிலுக்கு கேலி செய்தாள்

அவனும் அதை ரசித்து சிரித்துக் கொண்டே...

"மது... நான் உன்ன நேசிக்கிறேன்னா என்ன அர்த்தம்...?" என கேட்டுவிட்டு அவளை கேள்வியாய் பார்த்தான்...

அவளுக்கு கேள்வி புரியவில்லை... அவளும் அவனை கேள்வியாய் பார்த்தாள்....

"உன்னோடு சேர்த்து உன் குறை நிறைகளையும் நேசிக்கறேன்னு அர்த்தம்... சமையலில் மட்டும் இல்லை; எல்லா விசயங்களுக்கும் இது பொருந்தும்... சமையல் செய்யறது ஒன்னும் சந்திராயன ராகெட்ல அனுப்பற அளவு கஷ்டமில்லை... நீ கொஞ்சம் முயற்சி செஞ்சா கத்துக்கலாம்..."

"ஒருவேளை என்னால கத்துக்க முடியலனா....? "

"நானே உனக்கு சமைச்சு போடறேன்... ஓகேவா...?" என அவன் கேட்க..

"டபுள் ஓகே..." என சிரிப்புடன் கூறினாள்... அவளது சிரிப்பை ரசித்தவாறே,

"மது... சரி சீக்கிரம் ரெடியாகு... நாம கொஞ்சம் வெளிய போகணும்..." என்று சொல்லிட்டு இளமாறன் கிளம்பிவிட, அவளும் குளியலறையில் புகுந்து கொண்டாள்...

இளமாறன் பாலை வாங்கி வந்து, அதில் காப்பி கலந்து கோப்பையில் ஊற்றிக் கொண்டிருக்கும் போதே.. மதுவும் வந்துவிட, இளமாறன் ஒரு கோப்பையை அவளிடத்தில் நீட்டும் பொழுது....

"டிங் டாங் டிங் டாங்..." என அழைப்புமணி அதிர்ந்தது....

மயக்கம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்....2

கைகளில் காப்பிக் கோப்பையை ஏந்தியிருந்த இளமாறன், அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டு, கதவை திறக்கச் சென்றவள் இன்னும் வந்திராததை உணர்ந்து, சமையலறையில் இருந்தவாறே வாயிற் கதவை நோக்கினான்...

அங்கே, மதுமிதா சிலையாய் உறைந்து போய் நிற்பதையும், கதவின் அருகே நிழலாடுவதையும் கண்டு கதவை நோக்கிச் சென்றான்...

அங்கே நின்றிருந்தவருக்கு, சுமார் அறுபது வயது இருக்கும்... வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்கச் சங்கிலி.. கரடு முரடான தோற்றம், என மொத்ததில், காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவக வரும் நபர்-ஐ நினைவு படுத்தினார்...

'இவர் யாராக இருக்கும். இவரை பார்த்து மதுமிதா ஏன்..? பயம் கொள்ள வேண்டும்' என இளமாறன் நினைத்துக் கொண்டிருக்கையில்...

அவர்கள் இருவரையும்.. கூர்மயாய் ஒரு பார்வைப் பார்த்தவர்....

"நான் மதுமிதாவின் தாய் மாமா. உள்ளே போய் பேசலாமா.?" என வினவ...

அவரை பற்றிய யோசனையுடனே நின்றிருந்தவன், அவரின் இந்த பதிலால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, அருகில் நின்றிருந்த மதுமிதவை தோளோடு அணைத்தவாறு...

"உள்ள வாங்க சார்" என கூறினான்...

அதுவரை விலகியிருந்தவன், தான் யார் என்று தெரிந்த பின்பு, மதுமிதாவை அணைத்ததையும்; அவனது ஆதரவில் மதுமிதா தலைக் கவிழ்ந்து நிற்பதையும் கண்டு, கோபத்தில் முகம் இறுக...

மதுமிதாவை கோபமாய் முறைத்துவிட்டு, உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொள்ள.. அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்...

'அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை இளமாறன் உணர்ந்து கொண்டாலும், அவராகவே பேச்சை ஆரம்பிக்கட்டும்' என மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாகவே அமர்ந்திருந்தான்....

இளமாறனின் அமைதியை உணர்ந்தவராக...

"என்ன பத்தி கேள்விப் பட்டிருப்பனு நினைக்கிறேன்.. நான் எதுக்காக வந்திருக்கறேனு உனக்கே தெரியும்" என ஆணவமாய்க் கூறினார்....

அவரின் ஆணவமான பேச்சில் தூண்டப்பட்ட இளமாறன், தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு...

"இல்ல சார், உங்களை பத்தி எனக்கு எதுவும் தெரியாது.. அதில்லாம உங்க முகத்தைப் பார்த்து, நீங்க எதுக்காக வந்திருக்கறீங்கனு யோசிக்கறதுக்கு.. நான் ஒன்னும் ஜோசியக்காரன் கிடையாது.. அதனால நீங்கதான் சொல்லனும்" என அலட்சியாமாய் கூறினான்...

உன்னால, எங்களை ஒன்னும் பண்ண முடியாது.. அதனால, என்ன சொல்ல வந்தியோ.. அத சொல்லிட்டு இடத்தை காலி பண்ணு, என்பது போல் இருந்தது இளமாறனின் பேச்சு...

அதை உணர்ந்து கொண்டவரின் முகம் நெருப்பாய் மாற...

"ஏய்..! உன்ன மாதிரி பசங்க, எதுக்காக பணக்கார வீட்டு பெண்களை காதலிக்கறிங்கன்னு.. எனக்குத் தெரியாதா..?" எனக் கூற...

"இல்ல சார்.. எனக்குத் தெரியாது. உங்க அளவு எனக்கு முன் அனுபவம் கிடையாது.. என்னனு சொன்னா நானும் தெரிஞ்சுக்கறேன்" என கேலியாகவே கூறினான்.

இளமாறனின் கேலியயை உணர்ந்து கொண்டவர்..

"எல்லாம் இந்த பணத்துக்காகதான... உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு... குடுக்கறேன்... வாங்கிட்டு மதுமிதாவ விட்டு போயிடு" எனக் கோபமாய் கூற...

அவர் இதைத்தான் கூறுவார் என எதிர்பார்த்திருந்த இளமாறன், அவரின் கண்களை பார்த்து...

"எவ்வளவு சார் தருவீங்க" என தயங்காமல் கேட்டான்...

இளமாறனிடம் இந்த பதிலை அவர் எதிர் பார்க்கவில்லை.. உங்கள் பணம் எனக்கு வேண்டாம். என் காதல்தான் எனக்கு முக்கியம். எதற்காகவும், யாருக்காவும் என் காதலை விட்டுத்தரமாட்டேன்... என சினிமாத்தனமான பதிலை எதிர் பார்த்தவருக்கு, அவனின் இந்த கேள்வியால் குழப்பம் அவரை சூழ்ந்து கொண்டது...

இளமாறனின் கண்களில் இருந்து, அவரால் எதையும் கனிக்க முடியவில்லை... குழப்பத்துடனே அவனைப் பார்த்து...

"எவ்வளவு வேணும்னு நீயே சொல்லு. அதை ஒரே அமௌண்ட்டா தறேன்" எனக் கூற...

"சார், எனக்கு பெற்றோர், சகோதர சகோதரி, உற்றார் உறவினர்.. இப்படி எந்த சொந்த பந்தங்களும் கிடையாது.." என அவன் கூற வந்ததை முழுவதும் கூறி முடிக்கும் முன்னே....

"உன்ன பத்தி, எதையும் நான் தெரிஞ்சுக்க விரும்பல... எவ்வளவு பணம்னு மட்டும் சொல்லு" என இடைமறித்துக் கூறினார்..

"அதைத்தான் சார் நான் சொல்லிட்டு இருக்கேன்... கொஞ்சம் அமைதியா கேளுங்க".. என கூறி விட்டு

"எனக்கு அம்மாவா, ஃபிரெண்டா, காதலியா, என் வாழ்கைல வந்தவதான் மதுமிதா.. இன்னும் கொஞ்சநாள்ல, மனைவியும் எனக்கான சகலமுமாய் மாறப்போறவ... அவளோட அன்புக்கு ஈடா.. உங்களால் எதை தரமுடியும்" என நிதானமாக கேள்வி எழுப்பினான்...

'சுற்றி வளைத்து மதுமிதாவை விட்டுச் சொல்ல முடியாது..' என கூறியவனை ஏறிட்டு...

"இந்தமாதிரி சினிமா டயலாக்கெல்லாம் நான் நிறையா தடவை கேட்டாச்சு. எனக்கு தேவை எதார்த்தமான.. தெளிவான பதில்" எனக்கூற..

"சினிமாத்தனமான கேள்விய.. நீங்க கேட்டுட்டு, எதார்த்தமான பதிலை என்கிட்ட இருந்து எதிர்பார்த்தா..? எப்படி சார். கேள்விய மாத்தி கேளுங்க" எனக் கூறினான்.

அதாவது விதை ஒன்றை விதைத்தால் செடி ஒன்றா முளைக்கும், என்பது போல் இருந்தது இளமாறனின் பதில்

அவர் சுத்தமாக குழம்பிப்போனார்.. இளமாறனை எப்படி கையாள்வது என்று அவருக்கு புரியவில்லை.

'தான் சந்தித்த மற்றவர்களைப் போல், பத்தோடு பதினொன்று அல்ல இளமாறன். இவன் சற்று தனித்துவமானவன்' என மனதில் நினைத்துக் கொண்டு...

"தம்பி...! இது வாழ்க்கை...! விளையாட்டு இல்லை. நாங்க சொல்லறத கேக்கலனா, விளைவுகள்.. விபரீதமா இருக்கும்" என எச்சரிக்கையாய் கூறினார்...

"சார், இது விளையாட்டு இல்லைனு எனக்கும் தெரியும்.. விளைவுகளை பத்தி நான் யோசிக்கறேன் சார்.. அதோட பின் விளைவுகளை பற்றி, நீங்களும் கொஞ்சம் யோசிங்க
சார்" என அவரை பதில் எச்சரிக்கை செய்தான்...


"முடிவா என்னதான் சொல்லறீங்க" என கேட்டவரைப் பார்த்து..

"அது உங்களுக்கே தெரியும். அதை நான் வேற சொல்லனுமா.?" எனக் கூறியவனை கண்டு

அவருக்கு பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் குறை. தலையை சோபாவின் பின்னால் சாய்த்து, கண்களைமூடி சரிந்து அமர்ந்து விட்டார்...

ஏனெனில், இதுவரை அவரிடம் யாரும் இப்படி பேசியது இல்லை.. அவரது பார்வை பட்டதும்; பொசுங்கிப் போனவர்கள்தான் அதிகம்.. இளமாறனோ, கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், பதிலாக ஒரு கேள்வியை கேட்டு.. அவரை குழப்பி கொண்டிருந்தான்...

ஆரம்பத்தில், தன் தாய்மாமாவை கண்டு பயத்தில் இருந்த மதுமிதா, இளமாறனின் சாதுர்யமான பேச்சால்.. இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள்..

' ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி.. தான் நினைத்ததை செய்து முடிக்க, எந்த எல்லைக்கும் சொல்லக் கூடியவர். தான் எதற்காக வந்தோம் என்பதே மறந்து போய்.. கண்மூடி அமர்ந்திருந்த, தன் தாய்மாமாவை கண்ட மதுமிதா... தனக்குள் புன்னகைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.'

கண்களைமூடி சிலநொடிகள் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டவர், இளமாறனைப் பார்த்து...

"சரி தம்பி, இன்னைக்கு என்னால் ஒரு முடிவுக்கு வர முடியல. நான் நாளைக்கு வந்து என் முடிவ சொல்லறேன்" எனக் கூறி எழுந்து கொள்ள...

அதற்கு மேலும் பேச்சை வளர்க்க அவனுக்கும் விருப்பமில்லை...

"நல்லது சார்" எனக் கூறி எழுந்து கொண்டான்

கதவு வரை சென்றவர், திரும்பி இளமாறனை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, வெளியே சென்று தன் காரை எடுத்துக்கொண்டு, வந்த வழியே கிளம்பினார்...

அவர் சென்றதும் சற்றும் தாமதிக்காமல் ஓடிச் சென்று, இளமாறனை அணைத்துக் கொண்டாள் மதுமிதா. அவனும் பதிலுக்கு அவளை அணைத்துக்கொண்டு...

"என்னடா பயமா இருக்கா.?" எனக் கேள்வியாய் வினவ..

"ம்"... என தலையசைத்து ஒற்றை வார்த்தையில் பதிலுரைத்தாள்..

"சரி வா, மொதல்ல காப்பி குடிக்கலாம். மத்ததை அப்புறம் பேசலாம்" என அவளை விடுவித்தவன்..

அவர்கள், குடிக்காமல் விட்ட காப்பியை எடுத்து வெளியே உற்றி விட்டு, மறுபடியும் பாலை சூடு பண்ணி காப்பி கலந்து , மதுமிதாவிடம் ஒன்றை கொடுத்து விட்டு, தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு, இருவரும் சோபாவில் அமர்ந்து காப்பியை உறிஞ்ச ஆரம்பித்தனர்

" சொல்லு மது..! எதுக்காக, உன் மாமாவை பார்த்து பயப்படுற.." என இயல்பாய் கேட்டவனைப் பார்த்து

எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருந்தாள்..

அவளின் பயம் என்ன..? என்பதை, இளமாறனும் அறியாமல் இல்லை. ஆனால், அந்த பயத்தை பற்றி, அவளாக பேசினால் மட்டுமே.. அதிலிருந்து அவளை வெளியே கொண்டு வர முடியும். அவளை பேசவைக்கும் பொருட்டு பேச்சை மாற்றினான்

" சரி, நான் உன் மாமா கிட்ட பேசியதப் பத்தி, என்ன நினைக்கற" அதை முதல்ல சொல்லு எனக் கூறினான்.

சற்றுநேரம் முன்பு, தன் மாமாவிடம்.. இளமாறன் பேசியது நினைவுக்கு வர, உதடுகளில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

" உனக்கு இந்தளவு நிதானமா பேசத் தெரியுமாடா.? அப்பறம் ஏன்டா என்கிட்ட மட்டும்.. எப்ப பார்த்தாலும் எரிஞ்சு, எரிஞ்சு விழுந்த" எனக் கேட்டவளை காதலோடு பார்த்தவன்..

" டார்லிங்..! நம்ம கடந்த காலத்த பத்தி பேச, எதிர்காலத்தில, நிறைய.. டைம் இருக்கு. இப்ப கரண்ட் மேட்டருக்கு வா" என நக்கலாய் கூறினான்

"என்னத்த சொல்ல, அவர நல்லா குழப்பி விட்டுட்ட. அவர பத்தி நினைச்சாலே, எனக்குள்ள நடுக்கம் வர ஆரம்பிச்சுடுது. அவர் எப்படி பட்டவர்னு.." மதுமிதா கூற ஆரம்பிக்கும் முன்னே...

" யம்மா தாயே...! உன் மாமாவ பத்தின ஹிஸ்ட்ரி, ஜியாகர்ஃபி எல்லாத்தையும், நான் அவர் கிட்டடையே கேட்டுக்கறேன். நாங்க பேசினத பத்தி உனக்கு என்ன தோணுதோ, அதை மட்டும் சொல்லு " என கேலியாய் கூறியவனைக் கண்டு

" எதடா சொல்லறது, குழப்பினது நீ... குழம்பினது அவர்... வேடிக்கைப் பார்த்தது மட்டும்தான் நான்... இதுல நான் சொல்லறதுக்கு என்ன இருக்கு." என சலிப்பாய் கூறியவளை கண்டு புன்னகைத்தவன்

" குட்... இந்த அளவு உனக்கு புரிஞ்சாதே போதும்... சரி, அவர ஏன் குழப்பினேனு உனக்கு தெரியுமா.? என கேள்வி எழுப்பினான்.

மதுமிதா இல்லை என்பதைப் போல் மறுப்பாய் தலையசைக்க

" இது கூட தெரியல.. நிஜமாவே நீ படிச்சுதான், பாஸ் பண்ணுனையா.? இல்ல காசு குடுத்து பாஸ் பண்ணுனையா..?" என்று நிறுத்தியவன்

" சரி சரி.. நானே சொல்லறேன், பொறுமையாய் கேளு” எனக் கூறி விட்டு தொடர்ந்தான்...

" தெளிவா இருக்கற ஒருத்தர, எப்படி மறுபடியும் தெளிய வைக்க முடியும். அதான் குழப்பி விட்டுருக்கேன். மறுபடியும் உன் மாமா வந்தா, தெளிய வச்சுருவேன். கவலைப் படாதே" என இயல்பாய் கூறினான்

இளமாறன் பெரிதாய் எதோ சொல்லப் போகிறான்.. என்று காதுகளை தீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவள், அவனின் இந்த பதிலால் கோபமமுற்று இளமாறனைப் பார்த்தவாறே..
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" மிஸ்டர் இளமாறன்...! நானும் போன போகுது, பொட்டப் புள்ளையா, அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு நினைக்கறேன். இப்படி எல்லாம் மொக்கையா காமெடி பண்ணி என்ன வெறுப்பேத்துனா, அப்புறம் உங்க உடம்பு தாங்காது..." என போலியாய் முறைத்தவளைக் கண்டு புன்னகைத்தவன்...

" இப்படி புரிஞ்சுக்காம அவசர பட்டா எப்படி மேடம்... இப்ப நான், உங்கமாமாவுக்கு ரெண்டு வாய்ப்பு கூடுத்துருக்கேன். அதுல, அவர் எதை தேர்ந்து எடுக்கிறாறோ..? அதை வச்சு நாம என்ன செய்யனும்னு முடிவு பண்ணலாம்" என அமைதியாய் கூறினான்

அவள் மறுபடியும் புரியாமல் முழிக்க....அவனே தொடர்ந்து கூறினான்

" நான் பேசினது, அவரின் கோபத்தையும் தூண்டிவிடும், அதே சமயம்.. நிதானத்தையும் தூண்டிவிடும்"

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு சொல்லுவாங்க... அவர் கோவப்பட்டா, கண்டிப்பா என்ன அழிக்கனும்னு நினைச்சு, என்னோட பலவீனத்த தேட ஆரம்பிப்பார்”...

" என் பலவீனம்தான் என் பலமே.... அதனால, அவர் தோண்டற குழியில் அவராவே விழுவார்.."

" நிதானமா யோசிச்சா, நம்மளை தொல்லை பண்ணாம விட்டுருவாங்க.. எதா இருந்தாலும், நாளைக்கு தெரியும். அதுவரை பொறுமையா இருக்கலாம்" என அமைதியாய் கூறியவனைக்கண்டு...

" சரிடா உன் பலவீனம் என்னனு சொல்லு... அத எப்படி பலமா மாத்தலாம்னு யோசிக்கலாம்" மதுமிதா கூற

"இப்போதைக்கு என் பலவீனமே நீதான் மது" என காதலோடு கூறியவனை அவளும் காதலோடு பார்த்தவாறே...

"உனக்கு எப்பவுமே விளையாட்டுதானா...? இல்ல எனக்குதான் புரியலையா.? பிளீஸ்டா என்ன குழப்பாம சொல்லுடா" என கூற..

நீண்டதாய் ஒரு மூச்சை இழுத்து விட்டுவிட்டு

" உனக்கே என்னப் பத்தி முழுசா தெரியும்; இருந்தாலும் சொல்லறேன்... இப்ப என்னை கொலை பண்ணி தெருவுல வீசினாலும், ஏன்-னு கேள்வி கேக்க, எந்த நாதியும் இல்லாத அனாதை நான்.. இதுதான் என் பலவீனம்"

"அதே சமயம், அதுதான் என் பலமும் கூட... ஏன்னா, என் சம்பந்தபட்ட யாரையும்; பணயமா வச்சு என்ன மிரட்ட முடியாது.. நீ அவங்க வீட்டு பொண்ணு. அதனால உன்ன எதும் செய்ய மாட்டாங்க"

"மோதனும்னா, நேருக்கு நேர் என்கூட தான் மோதனும்.. பார்க்கலாம், உன் மாமா என்ன முடிவு எடுக்கறார்னு" என கூறிக் கொண்டே மதுமிதாவை பார்க்க அவளோ அழுது கொண்டிருந்தாள்...

" ஏய் மது... என்ன இது, சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு. நீ எதுக்கும் பயப்படாத... எனக்கு ஒன்னும் ஆகாது. நாம நூறு வருஷம் சந்தோஷமா வாழுவோம்" எனக்கூறி அவளை அணைத்து ஆருதல் படுத்தினான்....

இளமாறனின் அணைப்பில் அடங்கியிருந்தவள் அழுது கொண்டே அவனைப் பார்த்து

"சாரிடா, என்னால தான உனக்கு இந்த கஷ்டம். சாரிடா" எனக் அழுதபடியே கூறியவளை எப்படி சமாதானப் படுத்துவது என தெரியாமல் அவளின் இதழ்களை, தன் இதழ்களால் சிறை செய்தான்.

நிமிட நேரமே இந்த தாக்குதல் நீடித்தாலும், இருவரின் உணர்வுகளும் விழித்துக் கொள்ள... இருவருமே விலகிக் கொண்டனர்...

இளமாறனோ காதலோடு மதுமிதாவை பார்க்க, அவளோ நாணத்தில் தலை கவிழ்ந்திருந்தாள்..

"இனிமேல் நீ அழுதா, இப்படிதான் சமாதானம் பண்ணுவேன்" என குறும்பாய் கூற

அவளும் சரி என்பது போல், நிமிர்ந்து பார்க்காமல் சம்மதமாய் தலையசைத்தாள்...

அவளின் கூச்சத்தை உணர்ந்து கொண்டவன்.. அவளது முகத்தை கைகளில் ஏந்தி, அவளது கண்களைப் பார்த்து...

" மது, என் இத்தனை வருட தனிமை தவத்திற்கு, வரமாய் வந்த தேவதை நீ... யாருக்காவும் உன்னை இழக்க மாட்டேன்... அதனால, இப்படி ஒன்னும் இல்லாத விசயத்துக்கு அழறத விட்டுட்டு.. எப்பவுமே சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்கனும் சரியா" என காதலோடு கூறியவனை பார்த்து, புன்னகையுடனே சரி என்பது போல் தலையசைத்தாள்...

"சரி மது எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு... உனக்கு இப்ப சாப்பிடறதுக்கு எதாவது வாங்கி குடுத்துட்டு, என் வேலைய முடிச்சுட்டு மதியத்திற்குள்ள வறேன். நாம வெளிய போய் உனக்குத் தேவையானத வாங்கிட்டு வரலாம். என்ன சரியா" எனக் கூற...
அவளும் சரி என ஒப்புதலாய் தலையசைத்தாள்...


இளமாறனும் எழுந்து வெளியே சென்று, அங்கிருந்த பைக்கில் ஏறி அமர்ந்து.. அதற்கு உயிர் கொடுக்க, பைக்கும் அவனை சுமந்து கொண்டு ஹோட்டல் நோக்கிச் சீறிப் பாய்ந்தது...

இளமாறன் வெளியே சென்றதும்தான், மதுமிதாவிற்கு மூச்சு சீரானது... கதவை சாத்திவிட்டு, முகம் கழுவி அவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்...

சரியாய் அரைமணி நேரத்தில் வந்தவன், அவளிடம் வாங்கிய உணவு பொட்டலங்களை குடுத்து.. சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு கிளம்பினான்

அவன் கிளம்பியதும் கதவை சாத்தி விட்டு சாப்பிட அமர்ந்தவளால், ஒருவாய் கூட சாப்பிட முடியவில்லை. அவன் தந்த முத்தம் அவளை பாடாய் படுத்தியது...

ஏதோ, அவசர அவசரமாய் சாப்பிட்டு விட்டு... அனைத்தையும் எடுத்து வைத்து ஒழுங்கு படுத்தியதும், நேராக படுக்கையறை சென்று படுத்துக் கொண்டாள்...

' நேற்றிரவு இளமாறன் சொன்னதை நினைத்து பார்த்தவள், இனி உன் கட்டுப்பாடு என்னிடம் சொல்லாது இளா... நான் வழிய வந்து காதல சொல்லியும் எத்தனை நாள் என்னை அழ வச்ச...'

' இனிதாண்டி இருக்கு உனக்கு கச்சேரி.. நீ தொலைஞ்சடா மகனே' என மனதிற்குள் நினைத்துக் கொண்டே.. இளமாறனை தான் சந்தித்த நாளை நினைவு கூர்ந்தாள்..

இளமாறனுக்கோ... என்னவென்று சொல்ல முடியாத அவஸ்த்தை.. அவனது தேகம் நெருப்பாய் மாறி இருந்தது.. அதைவிட நேற்றிவு மதுமிதாவிற்கு சொன்ன கட்டுபாட்டை, தன்னால் காப்பாற்ற முடியுமா...? என்று அவனுக்கே சந்தேகம் வந்துவிட்டது... இந்த இம்சையான உணர்வை ரசித்தவாறே பைக்கை விரட்டிக் கொண்டிருந்தான்.

முதல் முத்தம்..! எந்த சந்தர்ப்பத்தில் பரிமாறிக் கொண்டாலும், என்றுமே காதலர்களுக்கு அது சிறப்புதான்.. அந்த முத்தம் அவர்களின் உறவுக்கான முதல் அத்தியாயத்தை எழுத தொடங்கியிருந்த சமயத்தில், இளமாறன் தன் கடந்த காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தான்...

மயக்கம் தொடரும்...
 
Last edited:

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்.....3

(கடந்த காலத்தை நோக்கிய பயணம்)

தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகரம்...!!

தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையிலுள்ள நகரம்..!!

தென்னிந்தியாவின் ‘மான்ச்ஸெட்டர்’ என்றுஅழைக்கப்படும் நகரம்..!!

தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள, நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்கும் நகரம்..!!

’’கோவை’’ மாநகரம்..!!..

நேரம் இரவு 1.30 ஐ தாண்டியிருந்தது...

ஜுலை மாதம் தொடங்கியிருந்ததால், தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் ஆரம்பித்திருந்தது. இதுவரை நிலவிவந்த 'உஷ்ணமான’' சீதோஷண நிலைமாறி, குளுமை கூடியிருந்தது...

மழைக்கான கார்மேகங்கள், நிலவை சிறை செய்து.. ஒளியை மறைத்து, இருளைப் பரப்பிக் கொண்டிருக்க, ஆங்காங்கே இருந்த சோடியம் வேப்பர் விளக்குகள், ஒளியை உமிழ்ந்து.. தங்களால் முடிந்தவரை இருளை விரட்டிக் கொண்டிருந்தது...

பகல் பொழுதில், பரபரப்பாக இயங்கிக் கொண்டு, கோவையின் மையப் பகுதியாக விளங்கும் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம், இரவில்.. தனது பரபரப்பைத் தொலைத்துவிட்டு, அமைதியை துனைக்கு அழைத்திருந்தது...

இடைவிடாது அடைமழை பெய்ததால், மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல், எங்கும் ஒரே மயான அமைதி நிலவியது...

பேருந்து நிலையத்தின் நுழைவாயிலின் வலதுபுறம், ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தியிருக்க, மழை மற்றும் குளிரின் காரணமாக.. ஓட்டுநர் அனைவரும் அவரவர் ஆட்டோவில் அமர்ந்திருந்தனர்...

எப்பொழுதும் ஓசூரில் இருந்து 1.40-க்கு வரும் பேருந்து, இன்று சற்று முன்னதாகவே வந்திருந்தது... பேருந்தில் இருந்து பயணிகள், ஒவ்வொருவராக இறங்கி, ஆட்டோக்கள் நிறுத்தியிருந்த இடத்தை
நோக்கி வந்து கொண்டிருக்க...


தட,, தட,, தட,, தடவென்ற சத்தத்துடன் வந்த ஒரு ஆட்டோ, வரிசையின் கடைசியில் போய் நின்று கொண்டு, தனது இயக்கத்தை நிறுத்தியது... மற்ற ஓட்டுநர்கள் அந்த ஆட்டோவை திரும்பி ஒருபார்வைப் பார்த்துவிட்டு, பேருந்திலிருந்து ஆட்டோவை நோக்கி வரும் பயணிகளை கவனிக்க ஆரம்பித்தனர்...


அந்த ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்தது வேற யாருமில்லை, நம்ம நாயகன் இளமாறன் தான்... தனது 29-வது வயதில் அடியெடுத்து வைத்த இளமாறன், மேற்கொண்டு பத்து நாட்களை காலி செய்திருந்தான்... ஆறடிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். மாநிறம். உடற்பயிற்சியின் உதவியால் இரும்பைப் போல் இருகிப்போன தேகம்... (தேகம் மட்டும் தானா.??) ஒரு சாயலில் நடிகர் ’விஷால்’ போல இருப்பான்...

டிப்ளமோ படித்திருக்கிறான். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மற்றும் கணினி சம்பந்தப்பட்ட துறைகளில் கைதேர்ந்தவன். (அப்புறம் ஏன்..? ஆட்டோ ஓட்டணும்னு நீங்க நினைக்கறது புரியுது.... wait மக்களே) தற்சமயம் தனிமை எனும் சொந்தத்தை தவிர, வேறு எந்த சொந்தமும் அவனிடம் இல்லை. சரி கதைக்கு போவோம்..

அந்த பேருந்தில் வந்ததே பத்து பேர்தான்.. அதில் ஒரு ஃபேமிலி முதல் ஆட்டோவின் அருகில் வந்ததும், முதல் ஆட்டோவில் இருந்த விக்னேஷ்...

"வாங்க சார்.. ஆட்டோ வேணுமா?.. எங்க.? சார் போகணும்"
என எப்பொழுதும் போல் எதார்த்தமாக கேட்க...


அந்த நபருக்கு என்ன.? கோபமோ.!

" இந்த நேரதுல எல்லாரும் சுடுகாட்டுக்கா.? போவாங்க. வீட்டுக்குதான் போறேன்... ஆட்டோ வேணும்னா நானே கேட்பேன்.. நீ உன் வேலைப்பாரு.." என காட்டமாய் கூறினார்..

'அடங்க... ஹாஃபாயில் தலையா, என் வேலையே இதுதாண்டா' என மனதில் நினைத்துக் கொண்டு..

" யோவ்.! நானும் உன்ன சுடுகாட்டுக்கு கூப்பிடல, உன் வீட்டுக்குதான் கூப்பிட்டேன்" என காட்டமாகவே பதில் கூறினான்...

அதற்கு அவர்.. ஒரு முறைப்பை மட்டும், அவனை பார்த்து பதிவு செய்துவிட்டு அங்கிருந்து அகன்றார்

அதற்குள் அடுத்த பயணி, அவனிடம் எதோ ஒரு விலாசத்தை சொல்லி அதற்கு வாடகை எவ்வளவு.? என்று விசாரிக்க, விக்னேஷ் கூறியது அவருக்கு கட்டுபடியாகவே, அவரை ஏற்றிக் கொண்டு நேராக இளமாறனிடம் வந்தவன்..

" டேய்.! இளா, நான் இப்படியே வீட்டுக்கு போறேன். உனக்கு டிப்பன் வாங்கி சீனி அண்ணா கிட்ட குடுத்துருக்கேன்.. லேட் பண்ணாம சாப்பிடு.. நீ மனசுல எதையும் போட்டு குழப்பிக்காத.. காலைல நான் வீட்டுக்கு வறேன் சரியா " என ஆருதலாய் கூற...

இளமாறனும் சரி என ஒப்புதலாய் தலையசைத்தான்...

அதற்குமேல், அந்த பேருந்திலிருந்து சவாரி ஏதும் இல்லாததால், இரண்டாவது ஆட்டோவில் அமர்ந்திருந்த சீனியும் ஆனந்தும், டீ குடிக்கலாம் வா... என இளமாறனை பார்த்து சைகை செய்ய, அதை கவனித்தவன்... அவர்களை நோக்கிச் சென்றான்...

" டேய் மாப்ள!... ஒன்பது மணிக்கு போய்ட்டு, ரெண்டு மணிக்கு வர.. எங்கயாவது லாங்கா சவாரி மாட்டிகிச்சா.?" என இளமாறனை பார்த்து, ஆனந் கேள்வியாய் வினவ...

அதற்கு பதில் கூறாமல் போலியாய் புன்னகைத்தவாறே, டீ கடைக்குள் நுழைந்தான்

இருளில் யாரும் அவனை சரியாக கவனிக்கவில்லை... டீக்கடைகுள் நுழைந்ததும், அங்கிருந்த விளக்கின் வெளிச்சத்தில் அவனை கவனித்த சீனி.....

" டேய்.! இளா என்னடா... சர்ட் எல்லாம் ஒரே ரத்தமா.? இருக்கு" என பதற...

அதன் பின்பே அவனை கவனித்த ஆனந்தும்...

"டேய்.! மாப்ள... என்னடா.? இவ்வளவு ரத்தம்... வண்டி எதாவது.? ஆக்சிடெண்ட் ஆயிடுச்சா” என பதறினார்

அவர்களின் பதட்டதைக் கண்ட இளமாறன்...

"அண்ணா.! ஆக்சிடெண்ட்தான்.. ஆனா, எனக்கு இல்லண்ணா பயப்படாதிங்க... நான் பொறுமையா சொல்லறேன்.. இப்ப டீ குடிக்கலாம் .. பயங்கர தலைவலியா இருக்கு-னு” இளமாறன் சொல்ல..

"அப்ப என் வண்டிலதான் டிப்பன் இருக்கு.... சாப்பிட்டு ஒரு மாத்திரை சாப்பிடு சரியாயிடும்"

"இல்லண்ணா, என் மேலயெல்லாம் ஒரே ரத்த வாசம். நான் வீட்டுக்கு போய் குளிச்சுட்டு சாப்பிடறேன். இப்ப டீ மட்டும் போதும்" என இளமாறன் கூற

மேற்கொண்டு அவனை கட்டாயப் படுத்தாமல் மூவருக்கும் டீ சொல்லிவிட்டு, அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டனர்...

(டீ.. வரும் முன் இளமாறனின் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்வோம்... சீனி, ஆனந்.. இருவரும் இளமாறனுக்கு மூத்தவர்கள்... சக ஓட்டுனர்கள்... எப்பொழுதும் அவனுக்கு ஆதரவாக இருப்பவர்கள்...

விக்னேஷ் என்கிற விக்கி... அவனது நெருங்கிய நண்பன்... அவனுக்காகவே தான் செய்து கொண்டிருந்த வேளையை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான்...(காரணத்தை நீங்களே கண்டு பிடிங்க)

( இன்னும் சிலர் இருக்கிறார்கள்... அவர்களை பற்றி கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம்.. )

டீ வந்ததும், அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு கிளாஸை கையில் எடுத்துக்கொண்டு, இளமாறனை பார்க்க, ஏதோ யோசனையாய் இருந்தவன், அதை கைவிட்டுவிட்டு டீ கிளாஸை கையில் எடுத்துக்கொண்டு, நான்குமணி நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தை.. விரிவாக கூறத் தொடங்கினான்

"நான் ஒன்பது மணிக்கு இராமநாதபுரத்துக்கு வாடகைக்கு போய்ட்டு, சுங்கம் வழியா திரும்பி வந்துட்டு இருந்தேன்"

"சரியான மழை. ரோடு ஃபுல்லா சாக்கடைத் தண்ணி, ரோடே சரியாத் தெரியல. ஆட்டோல வர நானே, பம்மி பம்மி வறேன். ரெட்ஃபீல்ட்ல இருந்து பைக்ல வந்தவன், சர்ர்ர்னு வந்து ரைட் சைடு திரும்பினான்..."

"அங்க இருந்த டிவைடர கவனிக்கமா.? நேரா கொண்டு போய் டிவைடர்லயே அடிச்சு பறந்து விழுந்தான்.."

" நான் கிட்ட போய் பார்த்தா.? அவனுக்கும் என் வயசுதான் இருக்கும். சரி மூச்சு இருக்குதானு பார்தேன். நல்லவேளை உயிரோடதான் இருந்தான். ஆனா, தலை-ல நல்லா அடிபட்டு ரத்தம் வழிஞ்சுட்டு இருக்கு..."

"மழை பெருசா வந்ததுனால, எனக்கு உதவி பண்ணவும் ஒருத்தனும் இல்ல. சரி, ஆம்புலென்ஸ்க்கு போன் பண்ணலாம்னு பார்த்தா, கண்டிப்ப இந்த மழைக்கு.. ஆம்புலென்ஸ் டைமுக்கு வந்து சேராது..."

"அதனால, அவன துக்கி ஆட்டோல போட்டுட்டு, நேரா பெரிய ஆஸ்பத்திரி வந்து ஐ.சி.யு-வுக்கு கொண்டு போய் பார்த்தா.? "

"அவனுக்கு சுத்தமா பேச்சு மூச்சே இல்லை.. ஒருநிமிஷம் எனக்கே எனக்கே பயமாய்டுச்சு"

"கன்னத்துல மெதுவா ரெண்டு தட்டு தட்டுனேன்... சின்ன அசைவு தெரிஞ்சுது.."

"அப்புறம் அவன கொண்டு போய் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டு, அவன் பர்ஸ்ல இருந்த லைசென்ஸ்-ல அவன பத்தின டீடெய்ல் இருந்துச்சு... அத வச்சு போலீஸ் ஸ்டேசன் போய் கம்பிளைண்ட் குடுத்துட்டு, அவன் வீட்டுக்கு தகவல் சொல்லாம்னு அவனோட மொபைல எடுத்துப் பார்த்தா, அது ஒடைஞ்சு போய் இருந்துச்சு..."

"அவன் மொபைல் இருந்து சிம்ம கலட்டி என் மொபைல்-ல போட்டு, சிம்-ல இருந்த சில நம்பருக்கு கால் பண்ணி, அவனுக்கு அடி பட்ட விசயத்தை சொன்னேன். அவனை பத்தி யாருக்காவது தகவல் தெரிஞ்சா, அவங் வீட்டுக்கு இன்ஃபாம் பண்ணுங்கனு சொல்லிட்டு, ஏதவது தகவல் தேவைனா கூப்பிட சொல்லுங்கனு என் நெம்பர்ரையும் குடுத்தேன்"

"கொஞ்ச நேரத்துலையே அந்த பையனோட அப்பா கூப்பிட்டார். அவர் வரும்வரை என்ன அவங்க பையன் கூட இருக்க சொன்னார். நானும் சரினு சொல்லிட்டு ஐ.சி.யு-க்கு உள்ள போனேன்" என இளமாறன் கூறி நிறுத்த...

அதுவரை பொருமையாக கேட்டுக் கொண்டிருந்த இருவரும், கதையை கேட்கும் ஆவலில்

"சரிடா... அப்புறம் என்னாச்சு.?" என கேள்வியாய் வினவ
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ம்ஹும்... என், பொழப்பு பெரிய ஆஸ்பத்திரில சிரிப்பா சிரிச்சுருச்சு.." என, தலைக்கவிழ்ந்து இளமாறன் கூறினான்...

இளமாறன் கூறிய விதமே, அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது...

"ஹா ஹா ஹா ஹா அப்படி என்னடா.? ஆஸ்பத்திரில பண்ணின" என சிரித்துக் கொண்டே.. கேள்வியாய் வினவ..

"நான் சொல்லறத கேட்டுட்டு, நீங்க ரெண்டு பேரும் சிரிக்க கூடாதது. சிரிக்காம இருப்பீங்கன்னா நான் சொல்லறேன். சிரிச்சா சொல்ல மாட்டேன்" என பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூற...

அதை பார்த்ததும், அவர்களின் சிரிப்பு இன்னும் அதிகமாகியது. ஒரு வழியாக அவர்கள் சிரிப்பு ஓய்ந்ததும், அவர்களை பார்த்து புன்னகைத்தவாறே கூற தொடங்கினான்

" நான் ஐ.சி.யு-க்குள்ள போகிறப்ப, அவனுக்கு தலைல அடிபட்ட இடத்துல ஸ்டிச் போட, அவன ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.."

" நானும், சும்மாதான் போய் அவன் பக்கத்துல நின்னேன். அப்ப என்ன பார்த்து, ஆட்டோகாரரே.. இங்கவாங்க. இவர் தலைய ஆடமா புடிச்சுக்கோங்கனு.. ஒரு நர்ஸ் அக்கா கூப்பிட்டாங்க.."

"அந்த நர்ஸ் அக்கா, பாக்கறதுக்கு.. அப்படியே தூள் படத்துல வர சொர்ணாக்கா மாதிரி இருந்துச்சு.."

"நானும் தலையை ஆடாம பிடிச்சுகிட்டு நின்னேன்.. முதல்ல வலி தெரியாம இருக்கறதுக்கு ஒரு ஊசி போட்டாங்க. அது தலை-ல ஏறாம வளைஞ்சு போச்சு. அப்பவே எனக்கு கண் எல்லாம் இருட்டு ஆயிடுச்சு. எப்படியோ என்னை சமாளிச்சுகிட்டே நின்னேன்.."

"அடிபட்ட இடத்தை ஸ்டிச் பண்ணறதுக்கு, ஒரு ஊசிய எடுத்து.. மறுபடியும் அதே இடத்துல குத்துச்சு சீனிண்ணா. அவ்வளவுதான், அத பார்த்ததும் சுத்தமா கண்னு தெரியல. பொத்துனு கிழே விழுந்தது மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருக்கு"

"நான் கண் திறந்து பார்கிறப்ப, அவனுக்கு பக்கத்தில் இருந்த பெட்-ல என்னை படுக்க வச்சு, எனக்கு ஒரு பாட்டில் டிரிப்ஸ் போட்டு விட்டுடாங்க"

"அங்க இருந்த டாக்டர், நர்ஸ் எல்லாருக்கும்.. நான் தெரிஞ்ச முகம் ஆயிட்டேன். யாரப் பார்த்தாலும், என்ன பார்த்து சிரிக்கற மாதிரியே இருந்துச்சு. ஆசிங்கமா போச்சு சீனிண்ணா" என இளமாறன் கூறி முடிக்கும் முன்

ஹா ஹா ஹா ஹா இருவரும் சத்தமாக, வயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டிருந்தனர்...

"ஏண்டா.. எவனையோ அட்மிட் பண்ண போய், கடைசில நீ அட்மிட் ஆகிட்டயா.?" என சிரித்துக் கொண்டே சீனி கேக்க....

"ஆமாண்ணா, எனக்கு ஊசினாலே சின்ன வயசுல இருந்து பயம். அதில்லாம, பத்துநாளா நான் சரியா சாபிடாம இருந்தது. துக்கம் இல்லாம இருந்தது-னு, எல்லமே சேர்ந்து என் மானத்தை வாங்கிருச்சு" என சோகமாய் கூறினான்..

"சரிடா, இதெல்லாம் ஒரு பெரிய விசயமா.? ஆமா, அவனுக்கு இப்ப எப்படி இருக்கு.. அவன் பேர் என்னனு தெரியுமா.? அவன் வீட்டுல இருந்து யாராவது வந்தாங்களா.? என இளமாறனை சகஜ நிலைக்கு கொண்டு வருவதாய் எண்ணிக் கொண்டு, அவனது மனநிலை புரியாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போக...

இளமாறனின் முகமோ பாறை போல் இருகியது...

" இல்லண்ணா, அவனுக்கு எப்படி இருக்குனு எனக்கு தெரியல. நானே விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன். அவங்க வீட்டுல இருந்து வந்த யாரையும் நான் பார்க்கல.. அவன் பேர் லைஸென்ஸ்-ல் தான் இருந்துச்சு. அப்படியே போலீஸ் ஸ்டேசன்ல குடுத்துட்டேன், சரியா கவனிக்கல” என(பொய்யுரைத்துவிட்டு) கூறிவிட்டு

"சரிண்ணா நான் வீட்டுக்கு போறேன்." என சொல்லிக் கொண்டு, அவர்களின் பதிலை கூட எதிர்பார்க்காமல் நேராக தன் ஆட்டோவை நேக்கிச் சென்றவன், அதை உயிர்ப்பித்து... தான் வாழும்.(?) கல்லறையை நேக்கிச் செலுத்தினான்

உயிரோடும், உணர்வுகளேடு வாழ்ந்தால் தானே அது வீடு. வெரும் உயிரை மட்டும் வைத்துக் கொண்டு, உணர்வுகளற்ற பிணமாய் வாழ்ந்தால் அது கல்லறைதானே....

வழியெங்கும் அவளின் நினைவுகளே இளமாறனை கொல்லாமல் கொன்றது...

யாரை தன் வாழ்நாளில், சந்திக்கவே கூடாது என்றிருந்தானோ.. அவளை சந்திக்க, தான் செய்த உதவியே காரணமாய் அமையும், என அவன் எண்ணி பார்க்கவில்லை..

ஒருவேளை தெரிந்திருந்தால், அதை தவிர்த்து இருக்க முடியுமோ.?அதற்கும் அவனிடம் பதில் இல்லை

அதனால் தான், அவர்களை பற்றிய எந்த தகவல்களையும் அவன் தெரிவிக்கவில்லை.. மருத்துவமனையில் நடந்த சம்பவத்தில், அவன் சம்பந்த பட்ட விசயத்தை மட்டுமே கூறியிருந்தான். மற்றதை நினைக்க கூட அவன் தாயாரக இல்லை.. ஆனால் எவ்வளவு முயன்றும்.. அவளை தவிற வேறு எதையும் அவனால் நினைக்க முடியவில்லை

கடந்த பத்து நாட்களாக, தான் இந்த பூமியில் வாழ்வதற்கு அருகதையற்றவன், என்ற முடிவுகே வந்துவிட்டான்....

பத்து நாட்களுக்கு முன், இளமாறன் ஒன்றும்.. இராஜபோக வாழ்கை வாழவில்லையென்றாலும், நிம்மதி என்ற ஒன்று, பெயரளவிலாவது இருந்தது... இப்பொழுது அதுவும் அவனை விட்டு விலகி சென்றுவிட்டது

தான் தெரியாமல் செய்த தவறை போல், அவளும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட்டாள், என அவனுக்கும் தெரியும். இப்பொழுது வரை அவளின் மீது எந்த கோபமோ, பகைமை உணர்வோ அவனிடத்தில் இல்லை. மாறாக, தன்நிலையை எண்ணியே அவனது கோபம் இருந்தது

வீட்டிற்குள் நுழைந்து நேராக கட்டிலில் சென்று விழுந்தவன், தலையை பிடித்துக் கொண்டு படுத்திருந்தான்... கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து தலையனையை நனைத்தது.. அதற்கு மேலும் அவனால் தன்னை கட்டு படுத்த முடியவில்லை

நேராக தன் தாயின் படத்திற்கு முன் வந்தவன்.. இருகைகளையும் கூப்பி

அம்மா... நான் உங்களுக்கு புடிக்காத பையனாம்மா.?
நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா.?ம்மா
உங்களுக்கு பிடிக்கலனா கருவுலயே என்ன கொன்னுருக்கலாம்ல....
ஏம்மா என்ன இந்த நரகத்துல விட்டுட்டு போனிங்க...
என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்கமா..
எனக்கு தெரியாம கூட யாருக்கும் எந்த கெடுதாலும் செஞ்சது இல்ல...
அப்புறம் ஏம்மா எனக்கு இந்த தண்டனை
என்னால தாங்க முடியலம்மா...
உங்களோட பாசத்த தவிற நான் உங்க கிட்ட எதையுமே எதிர் பார்க்கலம்மா...


பாட்டி நீ கூட என்ன அநாதையா விட்டு போய்ட்டல
என் மேல அன்பு காட்ட வேண்டாம் உரிமையோடு திட்டறதுக்கு கூட எனக்குனு யாருமில்லை பாட்டி. உனக்காவது என்மேல பாசம் இருந்தா... நீயாவது என்ன கூட்டிட்டு போ பாட்டி...


என தன் தாயின் படத்திற்கு முன் கண்ணிரால் கரைந்தவன்... உடல் சோர்வு மனச்சோர்வு எல்லாம் ஒன்றாய் தாக்க அப்படியே மயங்கிச் சரிந்தான்..

இத்தனை நாளாய் தனக்குள்ளே கதறியவன்...கடந்த பத்து நாட்களுக்கு முன், தன் பிறந்தநாள் அன்று நடந்த சம்பவத்தால், ஏற்பட்ட மனவேதனையினால் வாய் விட்டே கதறிவிட்டான்...

இளமாறனின் இந்த வேண்டுதல் அவனின் தாயின் ஆத்மாவிற்கு எட்டியதோ என்னவோ.?

இவன் தனக்கு யாருமில்லை எனக் கண்ணிரில் கரைந்து கொண்டிருக்க
இவனுக்காக மட்டுமே ஒரு உயிர் உருகிக் கொண்டிருந்தது..


மயக்கம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்....4

நேரம் காலை பதினொன்றைத் தாண்டியிருந்தது... இரவு அழுதபடியே மயங்கிச் சரிந்த இளமாறன், அப்படியே உறங்கியும் போனான். காலையில் ஆட்டோ ஸ்டேண்டிற்கு சென்ற விக்னேஷ், இளமாறன் இன்னும் வந்திராதைக் கண்டு...

"அண்ணா, இளா நைட் எத்தனை மணிக்குப் போனான்.." என சீனியிடம் வினவ....

"இளா, நைட் 3.00 மணிக்கு போனான்... ஏண்டா, இன்னும் வரலையா...? காலைல நீ இளா வீட்டுக்கு போகலையா...?"

"இல்லண்ணா... என் வொய்ஃப செக்கப்புக்கு ஆஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு இப்பத்தான் வறேன்..."

"நைட், இளா சாப்பிடானானு பார்த்திங்களா...?"

"இல்லடா.... ஆட்டோல டிப்பன் வாங்கி வச்சுருக்கு.. சாப்பிடுன்னு சொன்னேன். சாப்பிடானானு தெரியல..." எனக்கூறி

'மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை பற்றி இளமாறன் கூறியதையும், அதனால் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுக் கொள்வதாக கூறியதையும் கூறினார்...'

'விக்னேஷ் யோசனையாய், சீனியின் ஆட்டோவின் பின்புறம் சென்று பார்க்க... அவன் வாங்கி வைத்த பார்சல் அப்படியே இருந்து...'

"ம்ப்ச்... இவன் ஏண்ணா...? இப்படி பண்ணறான்" என சலித்துக் கொண்டவன்...

தன் கைபேசியில் இளமாறனைத் தொடர்புகொள்ள... அது அணைத்து வைக்கப்பட்டதன் அடையாளமாய், "ஸ்விட்ச் ஆஃப்" எனக்கூறியது...

'இளமாறன் வீட்டில் இருப்பானா...? அல்லது வெளியே எங்கும் சென்றிருப்பானா...?' என விக்னேஷ் யோசித்துக் கொண்டிருக்க...

"விக்கி நானும் ஒருவாரமா, அவன பாத்துட்டேதான் இருக்கேன்.. இளா நார்மலா இல்லடா...மறுபடியும் எதாவது பிரச்சனையா...?" என சீனி வினவ...

"அவரது கேள்விக்கு நீண்ட மவுனத்தை பதிலாய் தந்துவிட்டு, நான் இளா வீட்டுக்குப் போறேன்... ஒருவேளை அவன் இங்க வந்தா...? எனக்கு போஃன் பண்ணுங்க..." எனக்கூறி ஆட்டோவில் ஏற...

அவனது இந்த அமைதியில் எதுவோ ஒன்று மறைந்திருப்பதாக தோன்ற சற்றும் தாமதிக்காமல்

"இருடா நானும் வறேன்..." எனக்கூறி சீனியும் ஏறிக்கொள்ள, அவரை நேருக்குநேராக பார்த்து தனக்குள்ளேயே யேசித்தவன், அவர் கூட வருவதும் சரியெனத் தோன்ற, இருவரும் இளமாறனின் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்...

அரைமணி நேரத்தில் இளமாறன் வீட்டிற்கு சென்றவர்கள்.. அங்கே இளமாறனின் ஆட்டோ நிற்பதைக்கண்டு.... சற்று நிம்மதியடைந்தவாறு கதவை தட்ட, கதவு வெறுமனே சாத்தியிருந்ததால் உடனே திறந்து கொண்டது...

'கதவை தாழ் போடாம தூங்கறானா...?' என யோசித்தவாறே இருவரும் உள்ளே நுழைய

அங்கே தரையில் மயங்கி விழுந்து கிடந்தவனை கண்டதும், பதறிப்போய் அவனருகில் சென்ற விக்னேஷ்..

"டேய் இளா...." என அவன் கன்னத்தை தட்ட, அதற்கு அவனிடம் எந்த அசைவும் இல்லாது போனதைக் கண்டு, சுற்றிலும் பார்வையை வீசியவன்... அருகில் இருத்த பாட்டிலை பார்த்ததும்...

"சீனிண்ணா" என பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தான்...

இளமாறன் மயங்கி கிடந்ததை பார்த்ததுமே, சீனியையும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ள, வேகமாக சமையலறைக்கு சென்று தண்ணிர் எடுத்துக்கொண்டிருந்தவர், விக்னேஷின் அலறலைக் கேட்டு, மேலும் பதறிப்போய் அவர்களின் அருகில் வந்தார்...

கலங்கிய விழிகளுடன், இளமாறன் அருகில் அமர்ந்திருந்த விக்னேஷை சட்டை செய்யாமல், தண்ணீரை இளமாறனின் முகத்தில் தெளிக்க, அதை உணர்ந்து கொண்டவனிடம் சிறு அசைவு தென்பட்டது

மீண்டுமொருமுறை தண்ணீரைத் தெளிக்க, நன்றாக விழித்துக் கொண்டவன், இருவரையும் ஏறிட்டுப் ஒருபார்வை பார்த்தான்.. பின் அருகிலுள்ள சுவரில் சாய்ந்தவாறு எழுந்து அமர்ந்துக் கொண்டு விக்னேஷை பார்த்தவாறு...

" மச்சான் நான் இன்னும் சாகலையா...?" எனக்கூறிய வார்த்தையில் இருந்தது மிதமிஞ்சிய விரக்தி மட்டுமே..

அவ்வளவு நேரம் இளமாறனை நினைத்துக் கவலையுடன் கலங்கியபடி இருந்தவன், இளமாறனின் விரக்தியான பேச்சைக் கேட்ட ஆத்திரத்தில், அவன் முகத்தை நோக்கி கையை வீச... இருவரும் அருகருகே அமர்ந்திருந்ததால் சரியாக, அதேசமயம் சற்று பலமாக "பளார்" என இளமாறனின் இடது கன்னத்தில் பதிந்தது...

கடந்த சிலநாட்களாக பலவிதமான மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருந்தவன், இந்த எதிர்பாராத தாக்குதலை தாங்கும் திராணியின்றி தானாக விழிகள் மூடிக்கொள்ள... உதட்டில் சிறு புன்னகையுடன் மயங்கிச் சரிந்தான்...

நொடிப்பொழுதில்... நடந்த சம்பவத்தின் தாக்கம் புரிய தன்னையே வெறுத்தவன்...

"ஐயோ..! மச்சான் சாரிடா... எழுந்திரிடா..." என பெருங்குரலில் கதற ஆரம்பித்தான்...

"உனக்கு அறிவே கிடையாதா..? அவன் எந்தநிலைல இருக்கான்னு தெரிஞ்சும் எப்படிடா..? உன்னால அவன அடிக்க முடிஞ்சுது" என விக்னேஷை கோபமாய் கடிந்துகொண்டவர்..

மீண்டும் தண்ணீரை தெளித்து இளமாறனை எழுப்ப முயற்சிக்க, இந்தமுறை அவனிடம் எந்தவொரு அசைவும் தென்படாது போகவே... சீனியும் பயந்துபோய் விக்னேஷை பார்க்க...

"அண்ணா முதல்ல இளாவ ஆஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்.. அவன தூக்குங்கண்ணா.." எனக்கூற இருவரும் சேர்ந்து இளமாறனை தூக்கிக்கொண்டு வெளியே நின்றிருந்த அவர்களின் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு... விக்னேஷிடம் இருந்து ஆட்டோவின் சாவியை வாங்கி அதை உயிர்ப்பிக்க, அதற்கு அடையாளமாக தட தடவென சத்தத்துடன் மருத்துவமனை நோக்கிப் சீறிப்பாய்ந்து...

எந்த அசைவும் இல்லாமல் தன் மடியில் தலைவைத்து படுத்திருந்த தன் நண்பனைக் கண்டு, அழுது கொண்டே அமர்ந்திருந்தவன்.. அவனின் இந்த நிலைக்குத் தானே காரணம் என்றுரைக்க தனைத்தானே நொந்துக்கொண்டான்...

சரியாக இருபது நிமிடத்தில் மருத்துவமனைய அடைந்ததும்.. இளமாறனை ஆட்டோவிலே விட்டுவிட்டு, நேராக மருத்துவமனையின் உள்ளே சென்று.. அங்கிருந்தவர்களிடம் நிலைமையை சொல்லி, தானே ஸ்டெச்சரை தள்ளிக்கொண்டு வந்தவன், இளமாறனை படுக்கவைத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றான்...

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நர்ஸ் அவனை வெளியே நிற்குமாறு பணித்துவிட்டு ஸ்டெச்சரைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல

சோர்ந்துபோய் அருகிலிருக்கும் நாற்காலியில் அமர்ந்தவன், தன்னை நிதானமாக்கும் பொருட்டு தலையை பின்புறமாக சாய்த்து கண்களை மூடிக்கொண்டான். விக்னேஷின் எண்ணங்களில், கடைசியாக இளமாறன் புன்னகையுடன் கண்களை மூடியது நினைவு வர.... அவனையும் மீறி கண்களில் கண்ணீர் பெருகி, கன்னங்களை நனைத்து..

ஆட்டோவை ஓரமாய் நிறுத்திவிட்டு வந்தவர் விக்னேஷை தேட, அங்கிருந்த நாற்காலியில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தவன் பார்வைக்கு கிடைக்க, அவனை நோக்கி சென்றார்

அதற்குள் இளமாறனை பரிசோதித்துவிட்டு வெளிய வந்த மருத்துவர் நேராக விக்னேஷிடம் வந்து

"இளமாறனை, யார்..? அடிச்சது..." என வினவ

"நான்தான் டாக்டர்" என தலைகவிழ்ந்தபடி கூறியவனை ஆச்சர்யமாக பார்த்தார்... ஏனெனில் அவர்களின் நட்பை பற்றி அவரும் நன்கு அறிவார்...

இளமாறனும், விக்னேஷும் இந்த மருத்துவமனைக்கு நன்கு பரிச்சயமானவர்கள்.. இந்த மருத்துவமனையில் இருக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கணினிகள் மின்தடையினால், பழுதடையாமல் பாதுகாக்கும்.. ups எனும் சாதனத்தை நிறுவுவதற்கு, தாங்கள் வேலை செய்த நிறுவனத்தின் வயிலாக அடிக்கடி இங்கு வந்திருக்கிறார்கள்

(அதை தவிர இளமாறனுக்கும் இந்த மருத்துவமனைக்கும்
வேறொரு தொடர்பும் உண்டு அடுத்த சில பதிவுகளில் அதை தெரிந்துகொள்ளுங்கள் )


"விக்னேஷ்... இளாக்கு இப்ப பல்ஸ் ரொம்ப காமிய இருக்கு.. இரத்த அழுத்தமும் கமியா இருக்கு...
ரொம்ப வீக்கா இருக்கான்... அதனால்தான், நீ அடிச்சத தாங்க முடியாம மயக்கமாயிட்டான்.. நான் பெரிய டாக்டருக்கு இன்பார்ம் பண்ணிட்டேன்... அவர் வந்து செக் பண்ணிட்டு என்ன பண்ணறதுன்னு சொல்லுவார்... ஒருநாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்... அப்புறமா வார்டுக்கு மாத்திக்கலாம்... பயப்பட வேண்டாம்.." எனக்கூற


"டாக்டர் விஷம்... அந்தமாதிரி எதையாவது இளா, சாப்பிட்டுருக்கானு பார்த்திங்களா...?" என தயங்கியவாறே கேட்ட, விக்னேஷை பார்த்து புன்னகைத்தவர்..

"இபோதைக்கு அப்படியேதும் தெரியல... ட்ரிப்ஸ் போட்டுருக்கேன்.. சில லேப் டெஸ்ட்டுக்கு எழுதிருக்கேன்... ரிப்போர்ட் வந்ததும் பார்த்துக்கலாம்.." எனக்கூறி அவர்களிடம் விடை பெற்றார்...

டாக்டர், அங்கிருந்து சென்றதும்.. இருவரும் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள...

"விக்கி இளாவ பத்தி, உனக்கு தெரிஞ்சாத இப்பவாச்சும் சொல்லு.. அவனுக்கு இருக்கற திறமைக்கும், படிப்புக்கும்.. அவன் எப்படியெல்லாமோ இருக்க வேண்டியவன்..."

"..... ... ...."

"எதுக்காக..? நீங்க ரெண்டுபேரும் செஞ்சுட்டு இருந்த வேலைய விட்டுட்டு, ஆட்டோ ஓட்டிட்டு இருக்கறிங்க. நீ என்கிட்ட சொல்லறதுனால எல்லாமே மாறிடுமான்னு கேட்டா...? எனக்கு தெரியாது.. ஆனா என்னால முடிஞ்சாத கண்டிப்பா செய்வேன்..."

".... .... ...."

"நீ அமைதியா இருக்கறதுனால இளாவுக்குதான் ஆபத்து அவன இப்படியே விட்ட கண்டிப்பா தற்கொலை பண்ணிக்குவான் " என சீனி கூற

அதுவரை அமைதியாய் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தவன், கடைசியாக அவர் கூறியது சரியாய் அவனது மூளையில் சென்று தாக்க அவரை நிமிர்ந்து பார்த்தவன்...

"இங்க பேச வேண்டாம்... வாங்க கேண்டின் போய் பேசிக்கலாம்" எனக்கூறிவிட்டு, இருவரும் கேண்டின் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்...

அவர்கள் மருத்துவமனையில் நுழைந்தில் இருந்து அவர்களை கண்காணித்துக் கொண்டும் அவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்தவள்.. அவர்களின் அடுத்த உரையாடல்களை கேட்க அவர்களை முன்னால் செல்லவிட்டு... அவர்களை பின்தொடர்ந்தவாறு சென்றாள்...

இந்த நிமிடத்திலிருந்து தன் வாழ்கை போராட்டமாய் மாறப்போவதை, அவள் அறிந்திருக்கவில்லை....


மயக்கம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்....5

கோயமுத்தூரில் உள்ள, பெரிய மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்று. சகல விதமான வியாதிகளுக்கும்.. இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், எப்பொழுதும் மக்கள் வெள்ளம் நிரம்பியிருக்கும்...

ஒருவித அழுத்தமான மனநிலையுடனே, இருவரும் கேண்டினில் நுழைந்தனர். அந்த மருத்துவமனைக்கு ஏற்றார்போல், விலாசாமான பெரிய உணவுக்கூடமே என்றாலும், மதிய வேலையில், எங்கு காணினும் மனித தலைகளாக, கேண்டின்.. சற்று பரபரப்பாக இருந்தது.
கேண்டினை சுற்றிலும் ஒருபார்வை பார்த்தவன், தாங்கள் பேசுவதற்கு இந்த இடம் சரிவராது எனத் தோன்ற, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை உழியர்கள் அமரும் ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை நோக்கிச் சென்றனர்...


மரத்தடி நிழலில், இயற்கையான சூழலில், சுற்றிலும் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்க, இடையிடையே தனித்தனியாக மேஜை அமைத்து, பார்பதற்கே அழகான ஓவியம் போன்று அமைத்திருந்தனர்... அதைக் கண்டவுடன் அவனது உடலும் மனதும் சற்று அமைதியடைய, ஒரு மரத்தடியில் இருந்த மேஜையை நோக்கி இருவரும் சென்று அமர்ந்தனர்

வெளி நபர்களுக்கு அங்கு அனுமதி இல்லாததால், காக்கி உடையில் இருவர் அமர்ந்திருப்பதை கண்டவுடன், அங்கு பணிபுரியும் ஒருவன், யார் இவர்கள்...? என்ற கேள்வியுடனே அவர்களை நோக்கி சென்றான். விக்னேஷை கண்டவுடன் முகத்தில் புன்னகை படர,

"வாங்க பட்டாசு பாலு சார்...! எப்படி இருக்கிங்க...! என்ன சார் ரொம்ப நாளா ஆளையே காணோம்.." என நலம் விசாரித்தான்

அவனது கேள்விகளுக்கு புன்னகையை பதிலாக தந்துவிட்டு...

"நீ எப்படி இருக்க ரவி..."

"எனக்கு என்ன சார், நான் நல்லா இருக்கேன். சொல்லுங்க சார் என்ன சாப்பிடரிங்க" என வினவ

விக்னேஷ், சீனியை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதுபோல் பார்க்க, எனக்கு ஒரு காப்பி போதும்... என முடித்துக் கொண்டார்

ரவியிடம் ரெண்டு காப்பி எனக்கூற... இரண்டு நிமிடத்தில் அதைக்கொண்டு வைத்துவிட்டு இரண்டடி நகர்ந்தவன், அவர்களுக்கு பின்புறம் இருந்த இருக்கையில் தனியாக அமர்ந்து தனது கைப்பேசியில் எதையோ துலாவிக் கொண்டு, அமர்ந்திருந்தவளைக் கண்டதும், துணுக்குற்றவன்... பிறகு அவரும் ஒரு மருத்துவராக இருக்ககூடும் என எண்ணியவாறு அங்கிருந்து அகன்றான்....

எங்கே அவன் தன்னை கண்டுகொள்வானோ...? என அச்சத்தில் அமர்ந்திருந்தவளுக்கு, அவன் அங்கிருந்து அகன்றதும்தான் மூச்சு சீரானது. தன்னையும் ஒரு மருத்துவர் என எண்ணிக்கொண்டான்.. என நினைக்கையில், அவளையும் மீறி உதடுகளில் புன்னகை வழிந்தது.. அவளது தோற்றத்தை வைத்து, ரவி அவ்வாறு கணித்ததில் எந்த வியப்பும் இல்லை...

புன்னகயுடனே, கையோடு தான் வாங்கி வந்திருந்த குளிர் பானத்தை பருகிய படியே இளமைறனை பற்றித் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்தாள்..

காப்பியை ஒருவாய் பருகியவன்.. பின் அதை மேஜை மீது வைத்துவிட்டு, நிதானமாக சீனியை பார்க்க...

அவரோ... இன்று நீ பேசாமல் உன்னை விடப்போவதில்லை என்று உறுதியுடன், அவனைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார்...

அவருடைய முகத்தில் தெரிந்த உறுதியை கண்டு தனக்குள் புன்னகைத்தவாறு....

"சொல்லுங்கண்ணா...? இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்"

விக்னேஷின் இந்த கேள்வியில் கடுப்பனவர்...

"ம்...ஒபாமாவுக்கு, உப்புமா பிடிக்குமா..? பிடிக்காதனு..? தெரியனும்.. கேட்டு சொல்லறியா..." எனக் கடுப்புடன் கூற

"ஹா ஹா ஹா ஹா ... எனக்கு எங்க அப்பா அம்மாவ பத்திதான் தெரியும். ஒபாமாவ பத்தி நான் எங்கபோய் கேக்கறது" என புன்னகையுடன் கூறினான்..

"விளையாடாத விக்கி.. இளாவ உனக்கு எப்படி பழக்கம்... ஏன் அவன் இந்த அளவு விரகத்தில இருக்கான்...? அவன் வாழ்கைல அப்படி என்னதான் நடந்துச்சு..?" என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக...

சில வினாடிகள் அவரை உற்றுப் பார்த்தவன்... பின் தலைகவிழ்ந்தவாறே....

"காலைல, நான் ஏன் இளாவ அடிச்சேன்னு தெரியுமாண்ணா...?"

"ம்ஹூம் " தெரியாது என்பது போல் மறுப்பாய் தலையசைத்தார்...

"இந்த பத்து நாள்ல எட்டு தடவை, இளா தற்கொலை பண்ண முயற்சி பண்ணிட்டான்.." எனக்கூறியவன் அதற்கு மேல் எதையும் கூற முடியாமல் அழ ஆரம்பித்தான்

அவன் கூறியதைக் கேட்ட இருவருமே ஒருநொடி திகைத்தனர்... ஆம் இருவர்தான்... ஒருவர் சீனி. மற்றொருவர், அவர்கள் இருவரும் பேசுவதை, அவர்களுக்கு பின்னால் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த மதுமிதா....

நேற்றிரவு விபத்தில் இளமாறன் உதவி செய்தது, மதுமிதாவின் அண்ணன் அரவிந்திற்குதான்... மருத்துவமனையில் அரவிந்தின் பெற்றோரிடம், புன்னகையுடன் பேசிக்கொண்டு இருந்தவன், சற்று தாமதமாய் வந்த மதுமிதாவை.. இவள் என் மகள் மதுமிதா... அரவிந்தோட தங்கை என அறிமுகப்படுத்த... ஒருகணம் அவளை நோக்கியவன், அவளை கண்டுகொண்டவுடன் அவனது எண்ணங்கள் ரணமாய் மாறி, அவனது இதயத்தை அறுத்தெறிய, அவளை ஏறிட்டும் பார்க்காது ஒருநொடிகூட தாமதிக்காமல் அங்கிருந்து அகன்றான்

அதன் பிறகு ஆட்டோ ஸ்டேண்டிற்கு வந்து சகஜமாக நடந்ததை சொல்லிக்கொண்டு இருந்தவன்... அரவிந்தின் குடும்பத்தினர் பற்றிய சீனியின் கேள்வியால், மிண்டும் தன் கடந்த கால நினைவுகளுக்குள் சென்று சிக்கிக் கொண்டவன், அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் தன் வீட்டை நோக்கி கிளம்பினான்...

இளமாறன் செல்லும் வழியெங்கும் இரு முகங்கள் மாறிமாறி அவன் கண்முன்னே வந்து செல்ல, ஒரேயொரு பெயர் மட்டும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது

"ஹாய் I'M DOCTOR MATHUMITHA"

மதுமிதா இளமாறனை அங்கு எதிர்பார்க்கவில்லை... தன் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தவனை கண்டதும், ஒருநொடி திகைத்தவள்... அவர்கள் பேசுவதிலிருந்தே விபத்தில் காயமடைந்த தன் அண்ணனுக்கு, இவன்தான் உதவி செய்து காப்பற்றியிருக்கிறான் என தெரிந்ததும்.. தான் அன்றைக்கு, அவனிடம் நடந்து கொண்ட விதத்தை எண்ணி வெட்கினாள்...

தன்னை கண்டதும் அங்கிருக்கப் பிடிக்காமல் சென்றவனைக் கண்டு... மனதிற்குள் ஏமாந்தாலும், அவனது கோபம் நியமாகத் தோன்ற, என்றாவது ஒருநாள் அவனை சந்திக்க நேர்ந்தால் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்

அவன் சென்ற பிறகு, தன் குடும்பத்தினர் வாயிலாக அவனது பெயர் இளமாறன் என்றும்... தற்சமையம் ஆட்டோ ஓட்டுகிறான் என்றும், அரவிந்தின் காயத்திற்கு தையல் போடுகையில் மயங்கி விழுந்ததையும் அறிந்துகொண்டவள் தனக்குள் புன்னகைத்தவறே
"ச்சோ ஸ்வீட்" என மனதிற்குள் கூறிக்கொண்டாள்


அரவிந்தை, அரசு மருத்துவமனையில் இருந்து, இந்த மருத்துவமனைக்கு நேற்றிரவே மாற்றியிருந்தனர்... தன் அண்ணனை காண வந்தவள், எதற்சையாக இளமாறனை அங்கு அந்நிலையில் கண்டதும், நேற்றிரவு அவன் சோர்வாக இருந்ததை எண்ணி, அதற்கு மருத்துவம் பார்க்க வந்திருப்பான்.. என எண்ணிக்கொண்டு விக்னேஷையும் சீனியையும் நோக்கி சென்றாள்

அவர்கள் இருவரும் பேசியதிலிருந்து, இளமாறனை பற்றிதான் பேசப்போகிறார்கள் எனத் தெரிந்ததும்.. அவனை பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவர்களை பின்தொடர்ந்தாள்

கடந்த பத்து நாட்களாகதான்.. இளமாறன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான் என தெரிந்ததும்... தான் அவனை சந்தித்து பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்... ஒருவேளை தான் அவ்வாறு நடந்து கொண்டது அதற்கு காரணமாக இருக்குமோ, என நினைக்கையில் அவளையும் அறியாமல்.. அவளது கண்கள் கண்ணிரை சிந்தியது...

எந்த எதிர்பார்ப்புமின்றி உதவி செய்யும் ஒருவரை, தனது அவசர புத்தியால் தற்கொலைக்கு துண்டிவிட்டதை எண்ணுகையில் துக்கம், அவளது நெஞ்சை அடைத்தது..

இளமாறனின் தற்கொலை முயற்சிக்கு.. அவளும் ஒரு சிறு காரணமே தவிர, அவள் மட்டுமே காரணமில்லை என்பதை, அப்போது அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை

அழுதுகொண்டிருந்தவனை பரர்த்து.. அவனை எப்படி தேற்றுவது என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த சீனிக்கு, விக்னேஷ் கூறியதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை... இளமாறனை தான் சந்தித்த நாளை நினைவுக் கூர்ந்தார்...

விக்னேஷின் தாய்மாமாவும் சீனியும் பால்யகால சிநேகிதர்கள்.. இருவரும் சேர்ந்து நெடுநாட்களாக ஏலச்சிட்டு நடத்தி வந்தனர்.. அந்த வகையில், இரு குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு இருந்தது.. அதனால் விக்னேஷை குழந்தை பருவத்திலிருந்தே சீனிக்கு தெரியும்..

ஆறு மாதத்திற்கு முன்னால், சீனியை தேடி வந்த விக்னேஷ் ...அண்ணா நானும் என் பிரெண்டும் ஆட்டோ ஓட்டப் போறோம்... அதுக்கு நீங்கதான் உதவி பண்ணனும்.. ஏன்..? எதுக்குன்னு...? எந்த காரணமும் கேக்காதிங்க... நேரம் வரப்ப நானே சொல்லறேன் எனக்கூறி சென்றவன்... அடுத்தநாளே ஆட்டோவுடன் இளமாறனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்...

ஆட்டோ ஸ்டேண்டிலோ... மற்ற உறுப்பினர்கள், உறுப்பினர் அல்லாத ஒருவர் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்கவில்லை. விக்னேஷை அங்கிருந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.. ஏனெனில் அங்கிருந்த பெரும்பாலானோர் விக்னேஷின் தாய்மாமாவிடம் வரவு செலவு வைத்திருப்பவர்கள்.. ஆதலால் அவனை ஏதும்சொல்லாமல், இளமாறனை ஏற்க மறுத்தனர்

விக்னேஷோ பிடிவாதமாக இருக்க, சீனி தலையிட்டு அனைவரையும் சமாதானம் செய்து இளமாறனை ஏற்றுக்கொள்ள வைத்தார்

ஆரம்பத்தில் சீனிக்கும் கூட இளமாறனை பிடிக்கவில்லை... அதில்லாமல் நன்கு படித்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவன்... அதை விடுத்து ஏன் ஆட்டோ ஓட்ட வரவேண்டும்...? இதில் இளமாறன் யாரு..? அவனுக்காக, இவன் ஏன் இந்தளவு மெனக்கெடனும்..? என்ற கேள்வி அவரை குடைய அதை விக்னேஷிடம் கேட்டேவிட்டார்..

அவன் உயிரோட இருக்கணும் அண்ணா... தனியா அவன விடமுடியாது... மக்களோட மக்களா இருந்து தன் சுயத்தை அவன் தேடிக்கணும்... அவன் இப்ப இருக்கற மனநிலையில் இருந்து வெளிய வரணும்... வேற எதையும் கேக்காதிங்க... என முடித்துக் கொண்டான்...

பின் வந்த நாட்களில் இளமாறனை பற்றி சீனி அறிந்து கொண்டது... இளமாறனுக்கு பெற்றோர், உடன் பிறந்தோர், உற்றார் உறவினர் இப்படி யாரும் இல்லை என்றும், அவனும் விக்னேஷின் அளவிற்கு படித்தவன், இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் என்றும், காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்றவனின் தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்டெடுக்க, மருத்துவரின் அறிவுரைப்படி பொதுமக்களிடம் அன்றாடம் தொடர்பில் உள்ள இந்த தொழில் அவனை நுழைத்தும்... அவனை பாதுகாக்கவே விக்னேஷும் ஆட்டோ ஓட்ட வந்ததைப் புரிந்து கொண்டார்...

அதன் பின் இளமாறனின் அமைதியான சுபாவம் மரியாதையான பேச்சு, அவனது உதவும் குணம், அவனது திறமை, எல்லாம் சேர்ந்து அங்கிருந்த பலரை கவர்ந்து விட, இளமாறனை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்

விக்னேஷ் எதிர்பார்த்தது போலவே இளமாறனும் மெதுவாக தன் நிலையை உணர ஆரம்பித்து, அவனிடம் இருந்த வலியை மறந்து (மறைத்து) அனைவரிடமும் நன்றாக பழக ஆரம்பித்திருந்தான்

ஆனால் இந்த பத்து நாளில் மறுபடியும் என்ன ஆயிற்று..? சீனியின் இந்த கேள்விக்கு விக்னேஷிடம் தான் பதில் கிடைக்கும்.. ஏனெனில் இளமாறன் விக்னேஷிடம் எதையும் மறைக்க மாட்டன்... மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் மாட்டன்... அதனால் அழுது கொண்டிருந்தவன் அவனாக அழுகையை நிறுத்தும் வரை காத்திருந்தார்

தான் செய்த பிழையால் தன் நண்பனின் வாழ்கையே கேள்விக்குறியானதை எண்ணி அழுதுகொண்டிருந்தவன் பின் தன்னை சமன் செய்து கொண்டு... சீனியை பார்த்து

"விரக்தியான வாழ்கை வாழற இளமாறனைத் தான உங்களுக்கு தெரியும்"

" ... ... ... "

"எதுமே இல்லைனாலும் தனக்கு கிடைத்த வச்சு சந்தோஷமா இருந்த இளமாறனை உங்களுக்கு தெரியுமாண்ணா...?"

" ... ... ... "

"உள்ளுக்குள்ள எவ்வளவு வேதனை இருந்தாலும் எப்பவுமே சிரிச்சு.. இதுதான் எனக்கு என்ன பெற்றவங்க குடுத்த வரம்னு, தைரியமா அத ஏத்துக்கிட்டு வாழ்ந்த இளமாறனை உங்களுக்கு தெரியுமாண்ணா...? என கூறியவனை அமைதியாக பார்தவர்...

பிறகு எதோ சொல்ல முற்பட... சைகையால் அவரை தடுத்தவன்...

"நான் சொல்லி முடிச்சுடறேன் " எனக் கூறியவனை கண்டு மிண்டும் அமைதியானார்...

தலையை திருப்பி தான் அமர்ந்திருந்த இடத்தையும் மருத்துவமனை வளாகத்தையும் ஒரு பார்வை பார்த்தவன் ... பின் சீனியை பார்த்தவாறே...

"எனக்கும், இளாவுக்கும் இந்த ஆஸ்பிடல் ரொம்ப பரிச்சியம் சீனி அண்ணா "

"இந்த ஆஸ்பிடல்ல இருந்த ஒருத்திதான், வார்த்தையால இளாவ குத்தி கிழிச்சு அவன நடைபிணமாய் மாத்திட்டு போனா.."

"அதுக்கு முழு காரணமும் நான்தான்... நான் மட்டும்தான்... நான் மட்டும் அன்னைக்கு அப்படி சொல்லாம இருந்திருந்தா...? இந்நேரம் அவன் சந்தோஷமா இல்லாட்டியும், இப்படி உயிரோட இருக்கிற பிணமா இருந்திருக்க மாட்டன்..."

"என்ன மன்னிச்சுடு இளா... உன்ன பாதுகாக்க வேண்டிய நானே உன் உயிருக்கு எமனா ஆயிட்டேன் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்" என வாய்விட்டு கதற ஆரம்பித்தான்....

மயக்கம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்....6

ஒருவழியாக அழுது அழுது ஓய்ந்தவன், எழுந்து கைகழுவுகிற இடத்தை நோக்கிச் சென்று, அங்கு பொருத்தியிருந்த கண்ணாடியில்.. தன் முகத்தைப் பரர்க்க, அழுததில் கண்கள் சிவந்து, முகம் வீங்கியிருந்தது...

குழாயில் தண்ணீரை திறந்து விட்டவன், தன் இரு கைகளில் தண்ணீரை ஏந்தி.. நான்கைந்து முறை முகத்தில் அறைந்தவாறு.. முகத்தைக் கழுவியபின், மீண்டும் கண்ணாடியை ஏறிட்டுப் பார்க்க, புத்துணர்ச்சி இல்லையென்றாலும் முன்பிருந்த சுணக்கம் நீங்கியிருந்தது...

கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தபடியே.. சீனியை நோக்கி வர, அவர் யாருடனோ..? தனது அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். பேசுவதிலிருந்து, அது ஆனந் எனக் கண்டுகொண்டவன்... அவர் பேசிமுடிக்கும்வரை அமைதியாய் இருந்தான்...

பேசி முடித்து கைபேசியை தனது சட்டையில் திணித்தவர், விக்கியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்... ஏனெனில், இப்படி தன்னை சுற்றியுள்ள சூழ்நிலையை கூட, மறந்து அழும் விக்கியை.. அவர் இதுநாள் வரை கண்டதில்லை... அதிலும் அவனின் நண்பனுக்காக கலங்கியவனைக் கண்டு, அவர்களின் நட்பின் ஆழத்தை எண்ணி உள்ளுக்குள் வியந்தார்....

விக்னேஷ் ஏதோவொரு குற்றவுணர்வில் தவிக்கிறான், என அவன் பேசியதிலிருந்து புரிந்து கொண்டவர்... அதிலிருந்து வெளியே வரவேண்டுமேயானால், அவனை பேசவைத்தேத் தீரவேண்டும்.. என மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தவருக்கு, எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது எனப் புரியவில்லை... அவரது முகத்தைப் பார்த்தே அவரின் மனதைப் படித்தவன்....

"ரொம்ப யோசிக்காதிங்க..? சீனிண்ணா, நானே சொல்லறேன்... அப்படியாவது என் மனபாரம் குறையட்டும்.." எனக்கூறியவன்....

நீண்டதாய் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவாறே... அவர்களின் குழந்தைபருவத்தை நினைவிற்கு கொண்டு வந்து தொடர்ந்து கூறலானான்...

"இளமாறனை எனக்கு ஐந்து வயசுலிருந்தே தெரியும்ண்ணா... எங்க வீட்டுக்கு எதிர்லதான் குடிவந்தாங்க... நாங்க ரெண்டுபேரும் ஒரே வயசுதான்.. அவனது சந்தோஷம், துக்கம் ரெண்டுமே அவன் அப்பா அம்மாதான்.. அவங்க ரெண்டு பேர்தான் அவன் உலகம். அவங்க சிரிச்சா.. இவனும் சிரிப்பான் அவங்க அழுதா..?. இவன் அழமாட்டான்.. எதுமே பேசாம உம்முன்னு இருப்பான் சரியான அழுத்தக்காரன்.."

"இளமாறனுக்கு அழுகறது சுத்தமா பிடிக்காது... அவனை பொறுத்தவரை அழுகறது என்பது, நாம தோல்விய..! ஏத்துக்க முடியாம.. அதை மறைக்கிறதுக்காக, நமக்குநாமே போடும் வேஷம்னு சொல்லுவான்.. "

"இன்னைக்கு இளாவுக்காக நான் அழுகறத பார்த்து உங்களுக்கே ஆச்சரியமா..! இருக்கும்... ஆனா, என்னோட முதல் எதிரி இதே இளமாறன்தானு சொன்னா உங்களால நம்பமுடியுமா..?" எனக்கூறி நிறுத்தியவன் சீனியை ஏறிட்டான்...

"என்னடா..? சொல்லற... " என ஆச்சரியமாய் கூறியவரை கண்டு தன்னக்குள் புன்னகைத்தவாறு

"அதுதான் உண்மை சீனிண்ணா... இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா..! எப்படிண்ணா.."

"இளமாறனுக்கு அப்பா அம்மா கூடப்பிறந்தவங்கதான் இல்லையோ தவிற... சொந்தபந்தத்தப் பத்தி, ஒரு பெரிய லிஸ்ட்டே போடலாம்.."

"இன்னைக்கு ஐம்பதுக்கும் நூறுக்கும் ஆட்டோ ஓட்டற இதே இளமாறனுக்கு, பத்து தலைமுறை உட்காந்து சாப்பிடாலும் அழியாத சொத்து, அவனோட அம்மா அப்பா வழில இருக்குனு சொன்னா உங்களால நம்பமுடியுமா...?" எனக் கேட்டு சீனியை பார்க்க

சீனிக்கு மயக்கம் வராதது ஒன்றுதான் குறை... அவரது காதுகள் கேட்ட செய்தியை, அவரால் இன்னும் நம்ப முடியவில்லை... அந்த அதிர்சியில் வார்த்தைகள் தடுமாற்றமாய் வந்து விழுந்தது

"என்ன...டா..? சொல்லற.. நீ சொல்ல..றது நிஜமா..? உனக்கு எப்படி தெரியும்..." என தடுமாற

"இளமாறனோட அப்பா அம்மா ரெண்டுபேறும், தனித்தனியா இளமாறனுக்காக டைரி எழுதி வச்சுருந்தாங்க..."

" நாங்க பத்தாவது படிக்கும்போது, ஒருநாள் இளாவோட வீட்ட சுத்தம் பண்ணறப்ப.. எங்க கைல கிடைச்சுது"

"அதுல இளமாறனின் அம்மா யாரு, அப்பா யாரு, அவனோட உறவுகள் யாரு, அவனோட பூர்விகம் என்ன, இப்படி எல்லாமே எழுதி இருந்துச்சு" எனக் கூறியவனிடம்

" அப்பறம் ஏண்டா..? அவன் இப்படி கஷ்டப்படனும்.. பேசாம அவன் சொந்தங்களை தேடித் போக வேண்டியதுதானே" என இடைமறித்துக் கேட்டார்...

"இத நானும் அன்னைக்கே கேட்டேன் சீனிண்ணா... அதுக்கு அவன் சொன்ன பதில்தான் அவனுக்கும் எனக்குமான எங்க நட்பை இன்னைக்கும் உயிர்ப்போடு வச்சுருக்கு.." எனக் கூறியவனிடம்...

"போடா, நீங்க தப்பு பண்ணிட்டிங்க... எல்லாம் இருந்தும் ,அவன் அனாதையா இத்தனை நாள் கஷ்டப்படனும்-னு அவனுக்கு தலைல எழுதிருக்கு... நீ கூட இருந்தும் அதை மாத்த எந்த முயற்சியும் செய்யல..." என சலித்துக்கொண்டே கூறினார்...

"இளாவ பத்தி... அவன் அப்பா அம்மாவ பத்தி அவன் வளர்ந்த சூழ்நிலையை பற்றி முழுசா தெரிஞ்சுகிட்டு அப்புறம் பேசுங்க சீனிண்ணா... அதுவரை பொறுமையா கேளுங்க..." எனக் கூறியவன்... தொடர்ந்து கூறலானான்


இடம்... டெல்லி,
வருடம்...1987..

அதிகாலை நேரம். டெல்லி மாநகரம் முழுவதையும், இயற்கை தனது 'வெண்பனி' எனும் போர்வையால் போர்த்தியிருந்தது... தெருவில் பொருத்தியிருந்த இருந்த இரவு விளக்குகளின் ஒளி வெள்ளம், எவ்வளவு முயன்றும் தரையை தழுவ முடியாமல் போராடிக் கொண்டிருக்க, மரத்தில் இருந்த இலைகளின் வழியே வழிந்துகொண்டிருந்தத பனித்துளி, மரத்தின் கிழே, தலையை இடதுபுறமாக சரித்துப் படுத்திருந்த, நாயின் காதுகளில் சரியாக விழுந்தது... அதுவரை அமைதியாய் உறங்கிகொண்டிருந்த அந்த ஜீவன், கரண்ட அடித்தது போல் உடலை உதறிக்கொண்டு எழுந்து.. தன் கால்களால் காதினை சொறிந்து.. தன்னை சமன் செய்து கொண்டு உறக்கம் கலைந்ததால், எதையோ தேடி அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தது..

எங்கும் ஒரே நிசப்தமான சூழ்நிலை நிலவியிருக்க அந்த நிசப்தத்தை கலைக்கும் விதமாக சர்ர்ர்ர்ர்ர்ர்.. என்று சென்ற ஒரு இராணுவ வாகனம், இராணுவ குடியிருப்பு வளாகம், டெல்லி கண்டோன்மெண்ட்... என்று பொன் எழுத்துகளால் எழுதியிருந்த பனிரெண்டு அடி இரும்புக் கதவின் முன் நின்று தன் இயக்கத்தை நிறுத்தியது... அந்த வாகனத்தின் பின்பகுதியில் இருத்து இறங்கிய ஒரு இராணுவ வீரர், கதவை நோக்கிச்சென்று அங்கு காவலுக்கு இருந்த சென்ட்ரியிடம் ஏதோ கூற, அதுவரை சாத்தியிருந்த கதவு, பாதி திறந்து அந்த இராணுவ வாகனத்தை தனக்குள் அனுமதித்து மீண்டும் சாத்திக்கொண்டது

அந்த இராணுவ குடியிருப்பு வளாகத்தை ஒட்டி, இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருந்த இடத்தில், நடுநாயகமாக அமைந்திருந்தது.. அந்த சிறிய மாளிகை. அந்த மாளிகையின் கீழ்த்தளத்தில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க, சமையற்கட்டில் இருந்து வெளிப்பட்ட கண்ணம்மா, கைகளில் காப்பிக் கோப்பையை ஏந்தியவாறு மாடிப்படிகளில் ஏறிச் சென்று, அங்கிருந்த கதவை திறந்து விளக்குகளை உயிர்ப்பித்து, அங்கே உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் சென்று.....

"பிரபாம்மா" என மெதுவாக அழைத்தாள்...

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் தன்னை அழைத்ததை கண்டுகொண்டவள், போர்த்தியிருந்த போர்வையை விலக்காமலே

"ம்ம்ம்ம்" என்றவாறு பதிலுரைத்தாள்...

"அம்மா மணி நாலு ஆயிடுச்சு. இப்ப எழுந்தாதான் நிங்க சரியான நேரத்துக்கு கிளம்பமுடியும். இல்லனா பிளைட்ட தவற விட்டுருவிங்க.? எந்திரிங்கம்மா" என மென்மையாக கூறினாள்...

இந்தமுறை பதில் ஏதும் சொல்லாமல், படுத்திருந்தபடியே உடலை இப்படியும் அப்படியுமாய் வளைத்து.. ஒருவராக சோம்பலைப் போக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தவளை, நவம்பர் மாத 'குளிர்' உடலையும் ஊடுருவிச்சென்று.. எலும்புகளையும் சேர்த்துத் தாக்க, அந்த குளிரில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள, தன் போர்த்தியிருந்த போர்வையை இழுத்து தலை முதல் கால்வரை போர்த்திக்கொண்டு, மீண்டும் படுத்துக்கொண்டாள்...

எழுந்து இரண்டு நொடி மட்டுமே அமர்ந்து.. அதற்குள்ளாகவே குளிர்தாங்க முடியாமல் மிண்டும் படுத்துக்கொண்டவளை பார்த்தவளுக்கு.. உதட்டின் ஓரமாய் புன்னகை எட்டிப் பார்க்க, அதை கட்டுப்படுத்திக் கொண்டவள்...

"அம்மா இன்னைக்கு நீங்க உங்க சொந்த ஊருக்கு போகணும்.. உங்க அப்பா அம்மா உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பாங்கமா... எந்திரிங்கம்மா" என காரியமே கண்ணாக விடாமல் கூறினாள்...

'தூக்கத்திலிருந்து லேசாக விடுபட்டாலும், குளிருக்கு இதமாக இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும் சுகத்தை.. கண்மூடி அனுபவித்துக் கொண்டிருந்தவள், தன் இன்று சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க.. தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு, படுக்கையிலிருந்து தன்னை பிய்த்து எடுக்காத குறையாக எழுந்து அமர்ந்தவள்... கண்ணம்மாவின் கையிலிருந்த காப்பிக் கோப்பையை வாங்கி உறிஞ்சியவாறே கண்ணம்மாவை பார்க்க, அவள் தன்னைப் பார்த்து சிரிப்பதைக் கண்டதும் போலியாய் கோபத்தை வரவழைத்துக் கொண்டு...

"ஏய்! கண்ஸ், இங்க என் மூஞ்சிய பார்த்து சிரிச்சுட்டு இருக்காம, போய் ஹீட்டர ஆன் பண்ணி குளிக்கறதுக்கு தண்ணி ரெடி பண்ணு... என் டிரெஸ்ஸ எல்லாம் எடுத்து பேஃக் பண்ணிவை... கார் டிரைவர் வந்தாச்சா.?.. கார, இப்பவே ஸ்டார்ட் பண்ணி செக் பண்ண சொல்லு, நான் கிளம்பறப்ப கார் ஸ்டாட் ஆகாம அதுவதுங்கம்மானு... அவன் மண்டைய சொரிஞ்சுட்டு இழுத்தானு வை அவனும் காலி நியும் காலி" என முதலாளியாக மாறி போலியாக மிரட்டிக் கொண்டிருந்தாள்....

"சரிங்கம்மா" என புன்னகையுடனே கூறியவள், குளியலறை சென்று ஹீட்டரை ஆன் செய்துவிட்டு அவள் குளிப்பதற்கு தேவையானவைகளை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்து பிரபா குடித்து விட்டு வைத்த காப்பிக் கோப்பையை எடுத்துக் கொண்டு மீண்டும் அவளை பார்த்து புன்னகைத்தவறே மற்ற வேலைகளை கவனிக்க சென்றாள்...

ரத்தினவேல் செல்லம்மாளின் செல்ல மகள்... பிரபா என்கிற பிரபாவதி... தொழில் போட்டி காரணமாக தன் மகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று பிரபாவை பத்து வயதிலே இங்கு கொண்டுவந்து தங்கவைத்து காவலுக்கு சிலரையும் வேலைக்கு சிலரையும் நியமித்துவிட்டு ரத்தினவேல் சென்றுவிட்டார்... ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் வந்து பார்த்து சில நாட்கள் தங்கிவிட்டு சென்று வந்தவர்கள் பிரபா வளர வளர அவர்களின் தொழிலும் வளர கூடவே பகையும் சேர்ந்தே வளர்ந்தது... மாதம் ஒருமுறை என்றிருந்தது பின்பு இருமாதங்களுக்கு ஒருமுறை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என சுருங்கி கடைசியில் வருடத்திற்கு இருமுறை என நிரந்தரமானது...

ரத்தினவேல் இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் அவரின் உயிர் தோழன் சண்முகம் ராணுவத்தில் பெரிய அதிகாரியாக இருக்கிறார்... அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் அன்னியர்கள் யாரும் அவ்வளவு எளிதில் அங்கு நுளைத்து விடமுடியாது... பிரபாவை தன்னுடனே தங்கவைத்துக் கொள்வதாய் சண்முகம் எவ்வளவோ சொல்லியும் ரத்தினவேல் மறுத்துவிட்டார்.. தன் மகள் யாரிடமும் எதையும் எதிர் பார்த்து நிற்பதையோ அவள் சுதந்திரம் தடைபடுவதையோ அவர் விரும்பவில்லை... அதனால் தான் அந்த இராணுவ குடியிருப்புக்கு அருகில் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி சகலவிதமான வசதிகளுடன் ஒரு பங்களாவை கட்டி பிரபாவை தனியே தங்க வைத்தார்

பிரபாவின் பத்து வயதிலிருந்தே கண்ணம்மாதான் அவளை பார்த்துக் கொள்கிறாள்... ஆரம்பத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்த பிரபா, கண்ணம்மாவின் பாசமான கவனிப்பில் சிறிது சிறிதாக நிலைமையை புரிந்து கொண்டு இந்த தனிமை வாழ்விற்கு தன்னை பழக்கப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்..

ஆரம்பத்தில் கண்ணம்மாவிடம் அதிகார தோரணையுடன் பேசி வந்தவள், எதற்கும் மறுத்து பேசாமல் புன்னகையுடனே அனைத்தையுமே எதிர் கொண்ட கண்ணம்மாவை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது... விட்டில் வேலைக்கு பலர் இருந்தாலும் கண்ணம்மாவைத் தவிர வேறு யாரும் அவளிடம் நெருங்க முடியாது...

பத்து வயது சிறுமியாக இங்கு வந்தவள், தனது பள்ளிப்படிப்பை கேந்திரிய வித்தியாவில் படித்து விட்டு இளங்கலை அறிவியலை யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லியில் முடித்து பட்டம் பெற்று முதுகலை அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பித்து விட்டு இன்று இருபத்திமுன்று வயது பருவ மங்கையாக தன் சொந்த ஊருக்கு செல்லப் போகிறாள்

கனவுபோல் ஒருமுறை தன் வாழ்கையை திரும்பிப் பார்த்தவள், நேரம் குறைவாக இருப்பது நினைவுக்கு வர, விருட்டென எழுந்தவள் நேராக குளியலறைக்குள் புகுந்துகொண்டு குளித்துவிட்டு நேர்த்தியாக உடை அணிந்து அளவாக தன்னை அலங்கரித்துக் கொண்டு ஒருவித அழுத்தமான மனநிலையுடனே கிழே வந்தவள் நேராக சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்...

அவள் அமர்ந்தவுடன் கையில் பால் மற்றும் பிரெட்டுடன் வந்த கண்ணம்மாவை பார்த்தவள்.. அவள் முகம் எப்பவும் போல் அமைதியாக இருக்க அவளிடம் விளையாடும் விதமாக

"ஒய்! கண்ஸ்... நான் ஊருக்குப் போறதப் பத்தி உனக்கு கொஞ்சம் கூட கஷ்டமா இல்லையா..? பதிமூனு வருஷம் கழிச்சு உன்ன பிரியப் போறேன் நீ கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்க... ஒருவேளை என் தொல்லை கொஞ்சநாள் ஒழிஞ்சுதுனு சந்தோஷமா இருக்கறையா..?" என கண்ணம்மாவை பார்க்காமலே தலையை குனிந்து கொண்டு கேட்க,

அதுவரை கட்டுப்படுத்திய அவளது உணர்வுகள் வெடித்து சிதறியது...

"பிரபாம்மா" எனக் கதறியவாறே அவளைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்...

அதற்கு மேலும் பிரபாவாலும் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை அவளும் கண்ணம்மாவை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்

[ஒருவழியாக இருவரும் அழுது ஓய்ந்ததும் முதலில் தன்னை சுதாரித்துக் கொண்ட பிரபா....

"ச்சு! என்ன கண்ஸ், நான் கிளம்பறப்ப இப்படி அழுதுட்டு இருக்க.. நான் என்ன அங்கயேவா இருக்கப் போறேன்.. ஒரு ரெண்டு மாசம் இருந்துட்டு இங்கதான் வரப்போறேன்" என கூறி சமாதனம் செய்து விட்டு ப்ரெட்டை சாப்பிட்டு பாலை குடித்து விட்டு எழுந்தவள்

"வீட்டை பார்த்துக்க கண்ஸ் உன்னையும் பார்த்துக்க.. எதாவது தேவைனா.? என் வீட்டுக்கு போன் பண்ணு... நான் கிளம்பறேன்னு" அவளிடம் கூறி விடை பெற்றுவிட்டு அங்கிருந்த மற்றவர்களையும் பார்த்து கிளம்புவதாய் தலையசைத்து காரில் ஏறினாள்...

அவள் ஏறி அமர்ந்ததுமே கார் விமான நிலையத்தை நோக்கிக் கிளம்பியது... தலையை பின்னால் சாய்த்து கண்ணை மூடி அமர்ந்திருந்தவள் மனதின் ஓரம் என்னவென்று சொல்ல முடியாத ஏதோவொரு உணர்வு அவளை ஆட்கொண்டது...

மயக்கம்... தொடரும்
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மான்...6.1"

'பதிமூன்று வருடம் கழித்து தான் பிறந்த ஊருக்கு செல்கிறோம், தன்னை பெற்றவர்களை காணப் போகிறோம் என்ற ஆவல்..! ஒருபுறம் இருந்தாலும், ஏதோவொன்று பிரபாவின் மனதை அரித்துக் கொண்டிருந்தது... தன்னை பெற்றவர்களின் முகமும் இத்தனை வருடம் தன்னை ஒருமகளாக பாவித்து அக்கறையுடனும் பாசத்துடனும் தன்னை கவனித்துக் கொண்ட கண்ணம்மாவின் முகமும் மாறி அவள் மனக் கண்ணின் முன்னே வந்து சென்றது...'

'இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை தான் மன்றாடிப் பார்த்தும் தன்னை அங்குவர அனுமதிக்காத தன் தந்தை, இருதினங்களுக்கு முன் அவராகவே தொலைப்பேசியில் அழைத்து இன்று கிளம்பி வர சொல்ல காரணம் என்ன..?.. பெற்றோர் உற்றார் உறவினர் என அனைவரும் இருந்தும், எதற்காக..? தனக்கு இந்த தனிமை வாழ்க்கை... தன் தந்தையிடம் அதைப் பற்றி எதாவது கேட்டால்.. உன் பாதுக்காப்புக்கு தான் என்று ஒரு வார்த்தையில் பதிலுரைத்து அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்... சிறுமியாக இருந்த போதே தன் உயிருக்கு ஆபத்து என்றிருந்த நிலையில் இன்று தன் பாதுகாப்பு அங்கு எந்த நிலையில் உள்ளது... இப்படி விடைதெரியா கேள்விகள் பல இருந்தும் எதற்கும் அவளிடம் பதில் இல்லை'

'தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராய் தன் தந்தை இருந்தாலும், இந்த தனிமை வனவாசத்தை தவிர்த்து தனக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொண்ட தன் தந்தையின் மீது எந்த கோபமும் இல்லை... அதே சமயம் பாசம் இருக்கிறதா..? என்று கேட்டால் அவளுக்கே தெரியவில்லை...'

இப்படி பலவிதமான எண்ணங்களின் பிடியில் சிக்கி உழன்றுகொண்டிருந்த மனதை...

"அம்மா..! ஏர்போர்ட் வந்துருச்சுமா.." என்ற தன் டிரைவரின் அழைப்பில் தன் சிந்தனையில் இருந்து விடுபட்டவள், மூச்சை ஆழமாக உள்ளிழுத்து பெரிதாய் அதை வெளியேற்றி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, கதவைத் திறந்து காரில் இருந்து இறங்கியவள்... தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கடைசியாக டிரைவரிடமும் விடைபெற்று விமான நிலையத்தின் உள்ளே நுழைந்தாள்...

இந்திராகாந்தி பண்ணாட்டு விமான நிலையம்... இந்தியாவின் முதன்மையான விமானநிலையம்.. உள்நாட்டு விமானப் போக்குவரத்தை இந்தியன் ஏர்லைன்ஸ்,, ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் கவனித்துக் கொண்டிருக்க.... பண்ணாட்டு விமான சேவையை ஏர்இந்தியா, காண்டினெண்டல் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் கவனித்துக் கொண்டிருந்தன...

அந்த அதிகாலை வேளையிலும் எங்கு காணினும் மனித தலைகளாக விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது... விமான நிலையத்தில் உள்ளே நுழைந்தும் நேராக உடமைகளை பரிசோதிக்கும் இடத்தை நோக்கி சென்றவள்... அங்கிருந்த இயந்திரத்தின் ஒருபுறம் தன் உடமைகளை பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு மறுபுறம் சென்று நின்று கொண்டாள்...

பரிசோதனை முடிந்து வெளியேவந்த உடமைகளை சரிபார்த்து எடுத்துக்கொண்டு அடுத்ததாக பயணசீட்டு சரிபார்க்கும் கவுண்டரின் வரிசையில் வந்து தனது பயணசீட்டை சரிபார்த்து தனது பயணத்தை உறுதி செய்துகொண்டு பயணிகள் காத்திருக்கும் அறையை நோக்கிச் சென்று அங்கு காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்....

"மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து கிளம்பிச் செல்லும் அனைத்து விமானங்களும் ஒருமணிநேரம் தாமதமாக புறப்படும்... பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம்" என விமான நிலைய ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர...

"ம்ப்ச்" என சலித்துக் கொண்டவள்...

விமான நிலையத்தின் உள்ளே அமைந்திருந்த duty paid shop சென்று சிறிது நேரத்தை செலவிடலாம் என்று எழ நினைக்கையில்... தனக்கு நேரெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவனைக் கண்டதும் ஒருகணம் அதிர்ந்தவள்... தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்து அவன் தன்னை தான் பார்கிறான் என உறுதி செய்து கொண்டவள், அவனை பார்த்து ஒரு முறைப்பை பதிவு செய்தது விட்டு விருட்டென எழுந்து அங்கிருந்த கடைக்குள் சென்று மறைந்தாள்....

எந்த குடும்பத்தின் பார்வை அவள் மீது பட்டுவிடக் கூடாது என்று பெற்றோர் உற்றார் உறவினரை பிரிந்து அவள் தனிமை வனவாசம் அனுபவித்தாலோ அந்த குடும்பத்தின் வாரிசான சந்திரசேகர் தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்...

அவனுக்கும் அதே நிலைமைதான் எந்த குடும்பத்தினால் அவன் வெளிநாட்டிற்கு சென்றானோ.? அந்த குடும்பத்தின் செல்ல மகள் பிரபாவதி தான் அவனின் கவனத்தை ஈர்த்தாள்

பதிமூன்று வருடங்களாக விதியிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த இரு குடும்பத்தினருடன் சேர்ந்து பொறுமையாக காத்திருந்த விதி... இப்பொழுது இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்து தனது ஆட்டத்தை நிதானமாக ஆரம்பித்துவிட்டது

மனிதர்களின் கணக்கு ஒன்றாக இருக்க விதியின் கணக்கோ வேறொன்றாக இருந்தது....

மயக்கம் தொடரும்...
 
Status
Not open for further replies.
Top