All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வாழ்க்கை வாழ்வதற்கே !

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதானமே விதானம்...!

வணக்கம் தோழிகளே! இன்று நாம் நிதானம் எப்படி நமக்கு விதானமாய் அமையும் என்பதை பார்க்கலாம்.


நிதானம் என்பது செயல்படுவதில் பரபரப்போ அவசரமோ இல்லாத நிலை.

பதறிய காரியம் சிதறிப் போகும் என்பது நம் வாழ்வில் நாம் கண்ட உண்மையே...!

ஒரு செயலை பதற்றத்துடன் செய்யும் போது அங்கு பிழைகள் நேர்வதே இயல்பு.

அதே ஒரு செயலை எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் நிதானமாக செய்தோமென்றால் அங்கு வெற்றி நிச்சயம்.

இன்றைய அவசர உலகில், நிதானம் என்ற சொல்லே அறியாத ஒன்றாகிவிடும் நிலை.


951195129513
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம் கோபங்களை வெல்லும் நிதானம்,
நம் பாவங்களை கொல்லும் நிதானம்,
உன் வாழ்வின் உயர்வில் மேற்கூரையாய் ...
விதானம் அமைத்தால், உலகம் உன் கையில்...!

951795189519
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதானம் என்ற விதானம்
தானத்தில் மட்டுமல்ல...
வானத்தினும் பெரிது...!

பூமியின் மேற்கூரை வானம்
புன்னகையின் மேற்கூரை நிதானம்!


வாழ்த்துக்கள் தோழிகளே!, நன்றி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பும் அறனும்...!

கற்று உயர்ந்த அறிஞர்க்கும், படிப்பறிவில்லா பாமரனுக்கும் வேண்டப்படும் உணர்வில் முதலாய் நிற்பது அன்பே!

அன்புக்கும் அறனுக்கும் ஏது சம்பந்தம்...?

அன்பை விதைத்துப் பார் ...., அறனை வளர்த்து விடுவாய்....!

மானுடா நீ அன்புக்கு பஞ்சமான உலகத்தில் இருந்தாலும், அன்புக்குப் பஞ்சமில்லா பாரதத்தின் மொழி அறிந்தவனே...!

அன்பென்னும் அரிச்சுவடி அன்னையவள் கை கொண்டால்,
பண்பெனும் பாசம் வளர்த்து, பாரம்பர்யம் வளர்க்கலாமே...!

அன்பெனும் அமுதத்தை அன்னையவள் ஊட்டிவிட்டால்
அன்பெனும் அறத்தை தந்தையவன் காட்டிவிட்டால்
அன்பெனும் அகிலத்தை பிள்ளைகளும் படைப்பாரோ....?

கேள்வியாய் நிற்கின்ற அன்பே...
கேலியால் துடிக்கின்ற அன்பே...
கேவலமாய் நடிக்கின்ற அன்பே...
கேட்பாரற்றுக் கிடக்கின்றாயே...?

மழலையின் சிரிக்கின்ற அன்பு
இளமையில் நடிக்கின்ற அன்பு
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்...... இங்கே.... பார்க்கலாமா?


11465 11466
11467
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையின் அன்பு

அன்னையிடத்தில்....

11468

பிள்ளையின் அன்பு...

பிடித்தவர்களின் நட்பு...!

11469
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதின் வயதில் அன்பு....

விளையாட்டின் வித்தகமே...!

11470114711147211473


முடக்கிவிட்ட பாவம்....!

விட்டுக்கொடுக்கா கோபம்...!

எல்லாம் எனக்கென்ற பிடிவாதம்...!

தனிமையின் மன அழுத்தம்...!

தாங்க முடியா உயர் அழுத்தம்...!


பருவ வயதில் தடுமாற்றம்....!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பருவ வயதின் அன்புத் தேடல் கிட்டாத நேரம்....

புரியாத மன வோட்டம்...!

ஏக்கத்தின் வெள்ளோட்டம்...!

எதிர் மறையாய் உரு மாற்றம்...!

தவறாய்ப் போன மன மாற்றம்...!



மூர்க்கத்தின் வெளியேற்றம்....!

11474114751147611477கோபம் அதன் பரிமானம்

1147911480


விளைவுகள் எல்லாம் வெகுமானமா...? புரிகின்றதா மானுடா...?

11481 11482


தடம் மாறிய மனிதன் .... காரணம் என்ன? அன்பற்ற தனிமை...!


அறியாத காதல்...!

புரியாத மோதல்...!
தெரியாத சாதல்....!
எல்லாம் கொண்ட வாழ்வில்
ஒன்றும் இல்லா தாழ்வில்
கை மீறிய கணங்கள்
மெய் மீறிய ரணங்கள்
கான இயலா கொடூரங்கள்...
வெறித்தனமாய் பயங்கரங்கள்...!


1148311484




காரணம் என்ன அன்பறியா குணங்கள்...!



அன்பெனும் அறன் வளர்க்கவா...? வேண்டுமா...? உணருங்கள் மானுடரே...! அன்பெனும் அறன் எவ்வளவு முக்கியம் என்று...!
 
Top