All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதியலின் வே(சோ)தனைகள் கதை திரி

Status
Not open for further replies.

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த நல்லிரவு வேளையில் நிலவொளியின் குளுமையில் தகிக்கும் மனதோடு நின்றிருந்தால் விகா…

நிலவின் குளுமை தேகத்தினை மட்டுமே குளிர்வித்தது அவள் மனதினை குளிரூட்ட முடியவில்லை…

அவளுள்ளம் வெந்தனலில் வெந்து பல நாள் ஆகின்றன…

சில மனிதமனங்கள் தான் எவ்வளவு குரூரமானது விகாரமானது என அவள் அறிந்த தருணமது…


முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டின் பொழுது நிகழ்ந்த ஓர் சம்பவம், இப்போது அதனை நினைத்தாலும் அவள் உயிரினையே உளுக்கி எடுத்து கசக்கி பிழியும் வலியினை உண்டாக்கும்.


அன்று தான் அவள் வாழ்வின் கறுப்பு தினம் என்றும் சொல்லலாம்…

ஆய்வகத்தில் தனது ஆய்வு சம்பந்தமாக சில செய்முறைகள் மற்றும் சோதனைகளை செய்துக் கொண்டிருந்ததில் நேரம் சென்றது கூட தெரியாமல் தனது வேலையில் மூழ்கி இருந்தாள்…

மாலை மங்கிய தருணம் தனில் தீடீரென்று எழுந்த சப்தம் கேட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தால் விகா. ஏதோ தவறு நிகழவிருப்பதாக அவளது ஆழ்மனம் எடுத்துரைக்க சப்தம் கேட்கும் திசையினை நோக்கி மெல்ல நடந்து சென்றாள், சிறுப்பெண் என்றும் பாராமல் சிறுமியை சீரழிக்கும் நோக்கத்துடன் கண்களில் ஒருவித வெறியோடு அவளை நெருங்கியபடி இருந்தான் அவன். இதனை கண்டு அவளது உள்ளம் உலைகளனாய் கொதிக்க அருகில் இருந்த கட்டையைக் கொண்டு அவனை தாக்கும் தருணத்தில் அவளை கண்டவன் சுதாரித்துக் கொண்டு அவளை தாக்கியதில் அவள் கீழே சரிந்தால்…

தானா வந்து இன்னொரு கிளி சிக்கிடிச்சு இருடி அவ கதைய முடிச்சிட்டு வரேன் என்று வன்மமாய் சிரித்தவன் அப்பெண்ணை இழுத்துச் சென்றான்.

கண் விழித்து பார்க்கையில் தான் எங்கு உள்ளோம் எனத் தெரியாமல் மலங்க மலங்க விழித்தவளது அருகில் அவளையே கண்களில் அத்தனை உணர்வுகளையும் தேக்கி விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தான் விவி.
 
Status
Not open for further replies.
Top