All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ஸ்ஸ் யார் அது .... இருளும் உன்மையும் !!

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே ,இந்த கதை முழுக்க முழுக்க உண்மையும் கற்பனையும் கலந்தது ரொம்ப நாலா யோசிச்சு கண்ணால் பார்த்தது , சொந்த அனுபவம் , கேட்டது எல்லாம் வச்சு எழுதின கதை . பேய் இருக்கா இல்லையா கடவுள் இருக்கிறாரா இல்லையா இப்படி இப்படி சில சமயம் நமக்கு குள்ள ஏக பட்ட கேள்வி இருந்துட்டே இருக்கும் அதி காலத்துல இருந்து இப்போ வரைக்கு இந்த விசையதுல படு தீவிரமா ஆராயச்சி பண்ணிட்டு தான் இருக்காங்க விடை தெரிஞ்சதா கேட்டா . சந்தேகம் ஆனா நமக்கு மேல ஒரு ஷக்தி இருக்கிறத நம்மால மறுக்க முடியாது , அது மாதிரி தான் இந்த கதையும் கொஞ்சம் நம்ம ஸ்டைல .

இதுல நாயகன் நாயகி வேற யார் எல்லாம் இருக்காங்க அப்படின்னு கதைலையே பார்ப்போம் .20190206_162759_0001.png
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1
மதுரை கூடல்நகர் கஸ்டம்ஸ் கோட்டர்ஸ் ,



அந்த அதி காலை வேலை , ராஜலக்ஷ்மி வாசலை தெளித்து கோலம் போட்டுவிட்டு அடுப்படி சென்று காலை உணவை செய்யும் வேளையில் இறங்க அப்போது தான் சந்திரன் அங்கே வந்து ராஜி டீ எடுத்துட்டு வா என செய்தித்தாள் எடுத்து பாடிக்க ஆரம்பித்தார்

சந்திரன் – மத்திய அரசு ஊழியர்

ராஜலக்ஷ்மி - பிரைவேட் ஸ்கூல் பிரின்சிபால்

இருவரின் செல்வங்கள் தான் இனியா இனியன் ,

பெரியவன் இனியன் . காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறான் , இனியா இப்போ தான் பிளஸ் 2 .



நாள் வருக்கும் சமையல் செய்து அதை டிபன் பாக்சில் கட்டி வைத்து கணவருக்கு அவர் கேட்ட டீயே குடுக்க வர அப்போதான் சந்திரன் செல் போன் அலறியது

அதை எடுத்து யாரு என்று பார்க்க ஏதோ புதியே எண்ணில் இருக்க யாரா இருக்கும் என யோசித்த படி அவர் போனை எடுத்து பேச ஆரம்பித்தார் ..



சொல்லுங்க மாமா எப்படி இருக்கிங்க ,

..............



அப்படியா சரிங்க மாமா நான் ராஜி கிட்ட பேசிட்டு சொல்லுறேன் உங்களுக்கு என சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தார்.

அது வரை அமைதியாக நின்று சந்திரன் பேசுவதை கேட்டுகிட்டு இருந்த ராஜி இப்போ, என்னவாம் உங்க மாமாக்கு என்னைக்கும் இல்லாம இப்போ போன் எல்லாம் பண்ணுறாங்க என கேட்க



அதான் ராஜி எனக்கும் புரியல இவ்வளோ வருஷம் கழிச்சு நமக்கு போன் பண்ணி ஊர்க்கு வா சொல்லுறாரு

சரிங்க நீங்க என்ன முடிவு பண்ண போறீங்க ஊருக்கு போறதா இல்ல ?

“ போலாம் ராஜி என்ன விஷயம் போய் பார்ப்போம் அது மட்டும் இல்லாம அங்க நம்ம பூர்விக நிலம் எல்லா கிடக்கே அது எல்லாம் விற்க...”



வேண்டாம்ங்க அது எல்லாம் விற்க வேண்டாம், அப்படியே இருக்கட்டும் உங்க சர்வீஸ் முடிஞ்சதுன்ன நாம சொந்த ஊருக்கே போயடலாம்ல அதுக்கு சொல்லுறேன் என ராஜி சொல்ல



ராஜியின் யோசனை சந்திரனுக்கு சரின்னு பட்டது ,சரி ராஜி நாம அங்கே போயிட்டு , நம்ம இடத்த என்ன பண்ணலாம் பார்க்கலாம் ,இப்போ நீ போய் மோதல ஒரு வராத்தக்கு தேவையான டிரஸ் எல்லாம் பாக் பண்ணிட்டு பசங்க எழுப்பி விடு.. இப்போ கிளம்பினா தான் நேரத்துக்கு போய் ஊர் சேர முடியும் என அவர் சொல்லி முடிக்க

இனியன் – இனியா எழுந்து வந்து விட்டார்கள் , இவர்கள் பேசுவதை கேட்டு , அப்பா –அம்மா நாம வெகேஷன் எங்கயும் போறோமா எதுக்கு பேக் பண்ணனும் என இனியன் கேட்க

“ ஆமா இனியன் , நாம நம்ம ஊருக்கு தான் போறோம் , மிச்சத அப்புறம் பேசலாம் நீங்க ரெண்டும் போய் உங்களுக்கு என்ன வேணுமோ எல்லா எடுத்து வையுங்க அப்புறம் அங்கே வந்து அது இல்ல இது இல்லைன்னு என்கிட்ட சொல்ல கூடாது ,என புரிஞ்சதா போங்க என தன் பிள்ளைகளுக்கு ராஜி வேலை கொடுத்து அனுப்பிவைத்து விட்டு , சந்திரன் இடம் , எங்க நீங்க போய் நான் சொல்லுற திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க வழில எங்கயும் நிறுத்த வேண்டாம் கார , என சந்திரனையும் கடைக்கு அனுப்பிவைத்துவிட்டு ஊருக்கு போவதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆராம்பித்தார் , ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டு பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் சென்று பார்க்க

அங்கே அவர்களும் எடுத்து வைத்துவிட்டு ஹப்பாடா என அமர்ந்து இருந்தார்கள் , அதை பார்த்து ராஜி... ஏய் என்ன இது.. ஒரு வாரம் தங்குறதுக்காக துணி எடுத்து வைக்க சொன்னா இப்பிடி ஒரு வருசத்துக்கு வேண்டியது எடுத்து வச்சு இருக்கீங்க... என அவர் கேலி செய்யே [ அவருக்கு தெரியவில்லை இனி அவர்கள் எப்போதும் இங்கே திரும்பி வரப்போவது இல்லை என்று .....................]


**************************


ஹாய் பிரெண்ட்ஸ் இதோ first epi pottachu, ithu chinna kaththai so epis konjam kammaiyaathaan irukkum
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1
மதுரை கூடல்நகர் கஸ்டம்ஸ் கோட்டர்ஸ் ,



அந்த அதி காலை வேலை , ராஜலக்ஷ்மி வாசலை தெளித்து கோலம் போட்டுவிட்டு அடுப்படி சென்று காலை உணவை செய்யும் வேளையில் இறங்க அப்போது தான் சந்திரன் அங்கே வந்து ராஜி டீ எடுத்துட்டு வா என செய்தித்தாள் எடுத்து பாடிக்க ஆரம்பித்தார்

சந்திரன் – மத்திய அரசு ஊழியர்

ராஜலக்ஷ்மி - பிரைவேட் ஸ்கூல் பிரின்சிபால்

இருவரின் செல்வங்கள் தான் இனியா இனியன் ,

பெரியவன் இனியன் . காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறான் , இனியா இப்போ தான் பிளஸ் 2 .



நாள் வருக்கும் சமையல் செய்து அதை டிபன் பாக்சில் கட்டி வைத்து கணவருக்கு அவர் கேட்ட டீயே குடுக்க வர அப்போதான் சந்திரன் செல் போன் அலறியது

அதை எடுத்து யாரு என்று பார்க்க ஏதோ புதியே எண்ணில் இருக்க யாரா இருக்கும் என யோசித்த படி அவர் போனை எடுத்து பேச ஆரம்பித்தார் ..



சொல்லுங்க மாமா எப்படி இருக்கிங்க ,

..............



அப்படியா சரிங்க மாமா நான் ராஜி கிட்ட பேசிட்டு சொல்லுறேன் உங்களுக்கு என சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தார்.

அது வரை அமைதியாக நின்று சந்திரன் பேசுவதை கேட்டுகிட்டு இருந்த ராஜி இப்போ, என்னவாம் உங்க மாமாக்கு என்னைக்கும் இல்லாம இப்போ போன் எல்லாம் பண்ணுறாங்க என கேட்க



அதான் ராஜி எனக்கும் புரியல இவ்வளோ வருஷம் கழிச்சு நமக்கு போன் பண்ணி ஊர்க்கு வா சொல்லுறாரு

சரிங்க நீங்க என்ன முடிவு பண்ண போறீங்க ஊருக்கு போறதா இல்ல ?

“ போலாம் ராஜி என்ன விஷயம் போய் பார்ப்போம் அது மட்டும் இல்லாம அங்க நம்ம பூர்விக நிலம் எல்லா கிடக்கே அது எல்லாம் விற்க...”



வேண்டாம்ங்க அது எல்லாம் விற்க வேண்டாம், அப்படியே இருக்கட்டும் உங்க சர்வீஸ் முடிஞ்சதுன்ன நாம சொந்த ஊருக்கே போயடலாம்ல அதுக்கு சொல்லுறேன் என ராஜி சொல்ல



ராஜியின் யோசனை சந்திரனுக்கு சரின்னு பட்டது ,சரி ராஜி நாம அங்கே போயிட்டு , நம்ம இடத்த என்ன பண்ணலாம் பார்க்கலாம் ,இப்போ நீ போய் மோதல ஒரு வராத்தக்கு தேவையான டிரஸ் எல்லாம் பாக் பண்ணிட்டு பசங்க எழுப்பி விடு.. இப்போ கிளம்பினா தான் நேரத்துக்கு போய் ஊர் சேர முடியும் என அவர் சொல்லி முடிக்க

இனியன் – இனியா எழுந்து வந்து விட்டார்கள் , இவர்கள் பேசுவதை கேட்டு , அப்பா –அம்மா நாம வெகேஷன் எங்கயும் போறோமா எதுக்கு பேக் பண்ணனும் என இனியன் கேட்க

“ ஆமா இனியன் , நாம நம்ம ஊருக்கு தான் போறோம் , மிச்சத அப்புறம் பேசலாம் நீங்க ரெண்டும் போய் உங்களுக்கு என்ன வேணுமோ எல்லா எடுத்து வையுங்க அப்புறம் அங்கே வந்து அது இல்ல இது இல்லைன்னு என்கிட்ட சொல்ல கூடாது ,என புரிஞ்சதா போங்க என தன் பிள்ளைகளுக்கு ராஜி வேலை கொடுத்து அனுப்பிவைத்து விட்டு , சந்திரன் இடம் , எங்க நீங்க போய் நான் சொல்லுற திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க வழில எங்கயும் நிறுத்த வேண்டாம் கார , என சந்திரனையும் கடைக்கு அனுப்பிவைத்துவிட்டு ஊருக்கு போவதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆராம்பித்தார் , ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டு பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் சென்று பார்க்க

அங்கே அவர்களும் எடுத்து வைத்துவிட்டு ஹப்பாடா என அமர்ந்து இருந்தார்கள் , அதை பார்த்து ராஜி... ஏய் என்ன இது.. ஒரு வாரம் தங்குறதுக்காக துணி எடுத்து வைக்க சொன்னா இப்பிடி ஒரு வருசத்துக்கு வேண்டியது எடுத்து வச்சு இருக்கீங்க... என அவர் கேலி செய்யே [ அவருக்கு தெரியவில்லை இனி அவர்கள் எப்போதும் இங்கே திரும்பி வரப்போவது இல்லை என்று .....................]


**************************


ஹாய் பிரெண்ட்ஸ் இதோ first epi pottachu, ithu chinna kaththai so epis konjam kammaiyaathaan irukkum[/QUOTES good start is ithu inresta irukkum sammaiya ezHunthunga vazhthukal akka but ilove it but namba neshi and kumarana apdiye vittutathinga pls love you akka keep rocking
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2
எப்பிடிம்மா இருக்க ,
நல்லா இருக்கேன் அண்ணே நீங்க எப்படி இருக்கீங்க எவ்வளோ வருஷம் ஆச்சு ஊருக்கு வந்து என தேவி சந்திரனை நலம் விசாரித்து கொண்டு இருந்தார்
அவர்கள் பேசிகிட்டு இருக்கும் போதே ராஜி பிள்ளைகள் உடன் சந்திரன் அருகில் வந்து நின்று, என்ன தேவி எப்பிடி இருக்க என கேட்க
“ அண்ணி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க இது தான் நம்ம பசங்களா , சின்ன வயசுல பார்த்தது எப்படி வளர்ந்துடாங்க வாடா கண்ணுங்களா நல்லா இருகிங்களா வாங்க அண்ணி அண்ணா உள்ளற போய் பேசலாம் என அனைவரையும் வீட்டின் உள்ளே சென்றார் தேவி

எல்லோரும் உட்கார்வதற்கு தேவி ஒரு ஓலை பாயே எடுத்து விரித்து போட, நால்வரும் அந்த பாயில் அமர்ந்தார்கள் , வீட்டை உட்காந்த வாக்கில் இனியன் சுற்றி பார்த்து வீடு சூப்பரா இருக்கு அப்பா என சொல்ல

ஆமா இனியன் , அந்த காலத்து வீடு எங்க தாத்தா காலம் அப்போ கட்டினது இப்போ எல்லாம் இப்படி ஸ்ட்ரோங் பில்டிங் யாரு கட்டுறா , என அந்த வீட்டை பற்றி பெருமையா சொன்னார் சந்திரன்’

தேவி , எல்லாருக்கும் குடிக்க மோர் எடுத்துட்டு வந்து குடுத்து அவர்கள் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தால்
அப்புறம் அண்ணே வழி எல்லாம் சரியா கண்டு பிடிச்சு வந்துடிங்க தானே ஒன்னும் கஷ்டமா இல்லையே என கேட்க
அது எல்லாம் ஒரு கஷ்டம் இல்லம்மா அது எல்லாம் சரியா கண்டுபிடிச்சு வந்துட்டேன் ஆமா எங்கே ம்மா சித்தப்பா வந்ததுல இருந்து அவர பார்க்க முடியலை என சந்திரன் கேட்க
அப்போது தான் தோட்டம் வேலையே எல்லாம் முடித்துவிட்டு தேவின் கணவர் ரமேஷ் அங்கே வந்து என்ன மச்சான் தெரியாத மாதிரி கேட்குறிங்க மாமா இறந்து போய் ஒரு வருஷம் ஆச்சே நீங்க தான் நான் சொல்லி அனுப்பியும் வரல என சொல்ல
அதை கேட்ட சந்திரனின் மற்றும் ராஜி அதிரிந்து போய் இருந்தார்கள் அப்போ அந்த போன் சித்தப்பா மாதிரி பேசியது யாரு..........??

hai friends kuty eppi thaan coz , interview kaga suthite irukken athukaana preparation naan konjam busy..............

eppidi , story poguhtunu solunga

friends please post your valuable comments in the comment box yenna enake confuse aaguhtu naama update podalaiye notfication varuthey nu bayama vera irukku so my dearies pls post your comments in comment box
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3

என்ன ரமேஷ் சொல்லுற சித்தப்பா இறந்து போயிட்டாரா , எனக்கு சொல்லி அனுப்பி இருந்திங்களா , எப்போ , எனக்கு எந்த தகவலும் வரலையே , எப்போ இறந்தாரு என சந்திரன் பதற அவருக்கு தனக்கு யார் போன் பண்ணி பேசியது என தெரியே வேண்டியது இருந்தது , யாரும் தங்களை திட்டம் தீட்டி இங்கே வர வைத்தார்களோ என்கிற யோசனையும் அவருள் ஓடியது அது மட்டும் இல்லாமல் தன்னோட சொந்தம் என்று சொல்ல இருந்த ஒருவரும் இப்போ இல்லை அந்த தகவலும் தனக்கு வந்த சேரவில்லை என்கிற குழப்பம் அவரை மேலும் கேள்வி கேட்க துண்டியது

அவரது எல்லா கேள்விகளுக்கும் ரமேஷ் , விடுங்க மச்சான் போனது பற்றி பேசி ஒரு லாபம் இல்லை ரொம்ப தூரம் ட்ரவேல் பண்ணிட்டு வந்து இருக்கீங்க முதல போய் ரெஸ்ட் எடுங்க பிறகு மனைவி பக்கம் திரும்பி தேவி , வந்தவங்களுக்கு சாப்பாடு எடுத்து வை , நான் இப்போ வந்துறேன் என சொல்லிவிட்டு சென்று விட்டார் .

அப்பாவை பற்றி பேச்சு வந்த உடனே தேவியும் கண் கலங்கி தானே போனாள் அவளும் தன் கண்களை துடைத்து கொண்டு , போங்க அண்ணி போய் கை கால் அலம்பிண்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என அவரும் அடுப்படிக்கு சென்று உணவு எடுத்து வைக்க போய்விட

இனியா மற்றும் இனியன் அந்த வீட்டின் ஒவ்வரு அறையாய் பார்த்து அங்கே நின்று செல்பி எடுத்து கொண்டு இருந்தார்கள் அவர்களை அழைத்து ராஜி உணவை சாப்பிட சொல்ல

அவர்களும் மறு பேச்சு ஏதும் பேசாமல் தேவிடம் பேசியே படி சாப்பிட்டார்கள் .

சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லாரும் அவர் – அவருக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் போக



இனியா , இனியனிடம் , ஏன் அண்ணா இப்போ தேவி அத்தை என்னமோ சொன்னாங்களே , சின்ன தாத்தா இறந்து போய்டாங்க அப்புறம் எப்பிடி அவர் கால் பண்ணி நம்மள இங்கே வர சொல்லி இருபாரு , யாரோ நம்மள வச்சு ப்ளே பண்ணுறாங்களோ , என சந்தேகம் கேட்க



ஆமா பாப்பா எனக்கும் அதே சந்தேகம் தான் விடு என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என இருவரும் உறங்க ஆரம்பித்தார்கள் . சற்று நேரத்தில் வேகமாக கற்று வீச ஆரம்பித்தது , காற்றின் வேகத்தில் அடைத்து வைத்து இருந்த ஜன்னல்கள் திறந்துகொண்டு பட படவேன அடிக்க ஆரம்பிக்க

அப்போது தான் தூங்க ஆரம்பித்த இனியா அவசரமாக எழுந்து திறந்த ஜன்னகளை அடைத்துவிட்டு வந்து படுத்தாள் , மீண்டும் காற்று வேகமாக வீச அதில் ஜன்னல்கள் மீண்டும் திறந்து கொண்டு பட படவேண அடிக்க ஆரம்பித்தது , பிறகு அந்த அறையில் யாரோ அணத்தும் சத்தம் வேற கேட்க ஆரம்பிக்க , அதை அரை தூக்கத்தில் இருந்த இனியா , தன் அண்ணன் தான் அனத்துகிறான் என்று கண்களை திறக்காமலே “ டேய் அண்ணா துங்காமா என்ன பண்ணுற பேசாம தூங்கு என சொல்லிவிட்டு துங்க முயன்றாள் ஆனால் ஜன்னல் காற்றில் ஆடும் சத்தமும் , யாரோ அனத்தும் சத்தமும் கூடி போக அதில் பட்டேனே எழுந்து உட்காந்து இனியனை திரும்பி பார்த்தாள் அவன் நன்றாக உறங்குவது தெரியே மனதுக்குள் அப்போ யாரு சத்தம் அது என ஒருமுறை அறையே சுற்றி கண்களை சுழல விட்டாள் அனால் ஏதும் அவள் கண்களுக்கு தெரியவில்லை , இந்த ஜன்னல் வேற என அவள் , அடைக்க போக அப்போது பார்த்து அங்கே ஒரு நிழல் மின்னல் வேகத்தில் மறைந்து போனது அந்த நிழலை பார்த்த இனியா ... யாரு அது ... என ஜன்னல் வழியாக எட்டி பார்க்க .. அந்த உருவவும் வந்த வேகத்தில் காற்றில் காணாமல் போனது ..

அதை பார்த்த இனியா , வேகமாக இனியன் அருகில் வந்து அண்ணா எழுந்திரி . சீக்கிரம் , என தமயனை எழுப்ப

அவனோ கும்பகர்ணனின் பேரப்பிள்ளை போல் எவ்வளோ எழுப்பியும் எழுந்திற்க்கவே இல்லை .. வேற வழி இல்லாமல் கட்டில் அருகில் வைத்து இருந்த தண்ணி கூஜாவை எடுத்து அவன் தலையில் ஊத்திவிட்டாள்

தலையில் ஈரம் பட்ட உடன் அடித்துபிடித்து எழுந்து உட்காந்த இனியன் , தங்கையே பார்த்து, “ ஏய் லூசு என்ன பண்ணி வச்சு இருக்க பாரு பேட் எல்லாம் ஈரம் ஆகிபோச்சி . என கத்த



இனியாவோ ., “ ஐயோ அண்ணா கொஞ்சம் கத்தாதே , நான் சொல்லுறத கொஞ்சம் கேளு என அவள் ஜன்னலை பார்த்த படி சொல்ல

தூக்கம் களைந்து போன கடுப்பில் என்ன சொல்லணும் அதுவும் இந்த நேரத்துல இவ்வளோ நேரம் பேசிட்டு தானே தூங்கினோம். என திட்ட ஆரம்பிக்க

ஐயோ எரும அண்ணா நான் சொல்லுறத கொஞ்சம் கத்தாம கேளு, இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி ரொம்ப வேகமா காத்து அடிச்சது நான் போய் ஜன்னல் சாத்த போனேனா அப்போ அங்கே ஒரு ஒருவரும் வேகமாக போய் காணாமல் போயிடுச்சு அண்ணா அத சொல்ல தான் உன்ன எழுப்பேன் என அவள் ஒரு வித பதட்டமாக சொல்ல

அதை கேட்டு இனியன் . சிரித்து , காத்து நிழல் ஐயோ ஹஹ்ஹஹா என உருண்டு புரண்டு நிழல் , காற்று என மீண்டும் சொல்லிக்கொண்டே சிரித்த இனியனை

இனியா கோபமாக முறைத்து , டேய் நான் என்ன சொன்னேன்னு நீ இப்படி விழுந்து சிரிக்கிற , அப்போ நான் சொன்னத நீ நம்பள அப்படி தானே என அழும் குரலில் கேட்க

அவ்வளோ நேரம் சிரித்து கொண்டு இருந்த இனியன் , தங்கையின் குரல் மாற்றத்தை கவனித்து. இங்கே பாரு டா பாப்பு , நீயே ,ஜன்னல் எங்கே திறந்து இருக்கு என அவன் ஜன்னலை காட்ட

அதை பார்த்து இனியா , இப்போ தான் அடைச்சுட்டு வரேன் , காற்றுக்கு திரும்ப திரும்ப திறந்தடுச்சா அதான்

“ என்ன இந்த ஜன்னலா இங்கே வா என இனியன் அவளை அந்த ஜன்னல் அருகே அழைத்து சென்று திறக்க முயலை அவன் நாள் அதை திறக்க முடியவில்லை அதை பார்த்து இனியா மேலும் அதிர்ந்து போனாள் அதுமட்டும் இல்லாமல் தன்னோட சந்தேகத்தை வாய் விட்டே கேட்டே விட்டாள் எப்படி அண்ணா நான் பார்க்கும் போது திறந்தே இப்போ அதை திறக்க முடியலேன்னா .. என சொன்னவளின் கண்ணில் பயம் தாண்டவம் ஆடியது.

அதை கவனித்த இனியன் , ஹே இனியாம்மா எதுக்கு இப்படி பயபடுற அது எல்லாம் ஒன்னும் இல்லை முதல இப்படி பயப்படுறத நிறுத்து நீயி , காலைல இருந்து இதே விஷையமா பேசினது நால உனக்கு அப்படி தோணி இருக்கு அவ்வளோ தான் என தங்கையே சமாதனம் படுத்தி உறங்க செய்தான்

சிறிது நேரம் அவள் அருகில் அமர்ந்து இருந்தவன் அவள் உறங்கிவிட்டாள் என உறுதி படுத்தி கொண்டு மீண்டும் அந்த ஜன்னல் அருகே சென்று திருக்க முயன்றான் , இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தவன் [ மனதுக்குள் , எல்லாம் அவளோட மன பிரமை என தன் முடியே கொதிவிட்ட படி திரும்ப ]

பட், என அந்த ஜன்னல் திருந்து கொண்டது அவளின் கோரமான சிரிப்பு சத்தத்துடன் ...



ஹஹஹஹஹா , விட மாட்டேன் ஒருத்தரையும் விட மாட்டேன் ... ஹஹ்ஹஹா

அந்த சிரிப்பு சத்தத்தில் இனியன் அப்பிடியே உறைந்து போய் நின்றான்...


**********

யார் அது ..........................!!
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
epi-4


காலை, வெகு நேரம் ஆகியும் இனியன் எழுந்து கொள்ளாமல் இருந்தான்.
அதை இனிய அண்ணன் இவ்வளோ நேரம் தூங்க மாட்டானே , என அவன் அருகில் சென்று, டேய் அண்ணா அண்ணா, எழுந்திரி , அப்பா உன்ன கிழே
கூப்பிடுறாங்க , என எழுப்பும் போது தான் இனியன் காய்ச்சலில் இருப்பது தெரிந்தது , , ஐயோ என்ன இப்பிடி சுடுது , டேய் அண்ணா என்ன பண்ணுது அண்ணா உனக்கு .. என அவள் பலம் கொண்டு எழுப்ப ஆனால் அவன் தான் கண்ணை திறக்கவே முடியாமல் படுத்து கிடந்தான் .

அவளுக்கு பயம் பிடித்து வேகமாக கிழே சென்று தந்தை இடம் , “ அப்பா அண்ணனுக்கு ரொம்ப மேல் சுடுது ப்பா சிக்கிரம் வாங்க எழ்ந்துக்கவே மாட்டேன்குறான் பயமா இருக்கு அப்பா சீக்கிரம் வாங்க என எல்லாரையும் இனியன் இருந்த அறைக்கு அழைத்து வந்தாள்,

அங்கே சந்திரன் மகனை எழுப்ப , அவன் இடம் அசைவு இல்லை போக அவரும் பதறி தான் போனார், என்ன ஆச்சு குட்டி ம்மா மகளிடம் விசாரிக்க அவளும் அழுத படி இரவில் நடந்ததை ஒன்று விடாமல் சொன்னாள்

சந்திரனின் தங்கை , அண்ணே கொஞ்சம் பொறு என வெளியே சென்றவர் ஒரு வயதான மூதாட்டியே அழைத்து வந்தார், அவரிடம் ,” அப்பத்தா , கொஞ்ச என்ன அச்சுன்னு பாருங்க புள்ள ரொம்ப நேரமா பேச்சு மூச்சு இல்லாம கிடக்கான் என சொல்ல

அவர் இனியனை பார்த்து, சந்திரனை திரும்பி பார்த்து, செஞ்ச பாவத்துக்கு அள்ளி கட்டிக்க வேண்டியே நேரம் வந்துருச்சு போல சந்துரு , என இனியனின் நாடியே பிடித்து பார்த்தார்,
ஆனால் அவர் சொன்ன வார்த்தை சந்திரனை மேலும் பயம் கொல்ல வைத்தது , ஊருக்கு போனை நம்பி வந்தது தப்போ என அவர் மனம் பயத்தில் வேகமாக அடித்து கொண்டது மனைவியே அவர் திரும்பி பார்க்க அவரோ , விடுங்க பார்த்துக்கலாம் என்கிறது போல் சந்திரனை பார்த்து வைத்தார்.

அந்த வயதானவர் , விபூதி எல்லாம் போட்டு சிறிது நேரத்தில் இனியன் மெல்ல கண் விழித்து எழுந்தான் , அப்பா என அவன் தந்தையே தேட

சொல்லு கண்ணா இப்போ எப்படி இருக்கு என்ன ப்பா ஆச்சு ,ஊருக்கு போயிடலாம் ப்பா எனக்கு இங்க இருக்க பிடிக்கல என அவன் அனத்த ஆரம்பிக்க

பெரியவர் , இல்லை கண்ணு ஊர் திருவிழா வேற வருது எல்லாம் முடிச்ச பொறவு போகலாம் வர வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வாங்க என அவர் சொல்லிவிட்டு எழுந்து கொண்டார் , அவர் கூடவே சந்திரனின் தங்கை வந்து, என்ன அப்பத்தா ஏதும் பிரச்சனையா உங்க முகமே சரி இல்லையே

“ என்னத்த சொல்ல , புள்ள அரண்டு போய் கிடக்கான், நான் சொல்லுற வரைக்கும் அவன தனியா விடாதிங்க யாரவுது கூடவே இருங்க , அப்புறம் பின் விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை அப்புறம் இந்தா எலுமிச்சை பழம் ஆத்தா பாதத்துல வச்சது தலைக்கு வச்சு படுத்த வை , மறுக்கம வெள்ளிகிழமை அழைச்சுக்கிட்டு வந்துரு அங்கே வச்சு எல்லாம் சொல்லுறேன் என அவர் சென்று விட”

சந்திரன் தங்கை இடம் வந்து என்ன சொல்லிட்டு போறாங்க அவங்க என கேட்க
கோவிலுக்கு வர சொல்லிடு போறாங்க அண்ணா, நாம வெள்ளிகிழமை போல போகணும்.இப்போ தம்பி கூட யாரவது இருக்க சொல்லி இருக்காங்க என தேவி சொல்லிக்கிட்டு இருக்கும் போதே

இனியன் அம்மா...ஆ ஆ.... என அலறினான்,
அவனின் அலறல் சத்தம் கேட்டு கிழே நின்னு பேசி கொண்டு இருந்த அனைவரும் மேலே இருந்த அறைக்கு சென்று பார்க்க அங்க இனியன் அமைதியாக உறங்கி கொண்டு இருந்தான்.

******************
ஸ்ஸ்.. யாரு அது
 
Status
Not open for further replies.
Top