All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

17 என் கலாப காதலா

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17 கலாப காதலா
" சார் இந்த பொண்ணு தான் பூர்ணி இவள தான் காணும் கம்பிளைண்ட் கொடுக்க வந்தோம் "
என அஜய் விளக்க
" சாரி சார் இவங்கள நேத்து அந்த மாதிரி இடத்துல நின்னுட்டு இருக்கும் போது அர்ஸ்ட் பண்ணோம் "
" ஸ்டாப் அப் ஸ்டாப் அப் "
என வெறி கொண்ட வேங்கையாக சித் கத்த அவனின் கத்தலில் மொத்த ஸ்டேஷனும் ஆடி போனது.....
" சார் இவ எங்க வீட்டு பொண்ணு என்னாச்சு "
" சித் போலாம் சித் அசிங்கமா இருக்கு போலாம் என்ன கூட்டிட்டு போ "
என அவனின் நெஞ்சில் அடித்து அணைத்து கொண்டே கூற
தன்னவளை தாங்கி கொண்டே இடத்தை விட்டு நகர்ந்தான்...
காரில் ஏறியவளின் முகத்தை பிடித்து திரும்பியவன்
" அதான் நான் வந்துட்டேன்ல பட்டு நீ அழ கூடாது "
" சித் சித் அங்க "
" வேணாம் பட்டு எதும் வேணாம் நீ அமைதியா இரு "
அவளை அமைதிபடுத்தியவன் தன் மீது சாய்த்து கொள்ள அஜய் பார்மலாடிஸ் முடித்துவிட்டு வர கார் எடுக்க மூவரும் எதும் பேசி கொள்ளாமல் வீடு வந்தனர்...
வரும் போதே பிரியாவிற்கு கால் செய்து பூரணி கிடைத்த விபரத்தை கூறினான். கிடைத்தால் மட்டும் என்றே கூறினான் மறந்தும் வேறு எதும் கூறவில்லை...
பூர்ணி சித் தோளை விட்டு முகத்தை எடுக்கவே இல்லை...
வீடு வர
" மச்சான் சின்ன வேல இருக்கு நீ உள்ள போ நான் முடிச்சுட்டு வரேன் "
" நீ எங்க போறேனு எனக்கு தெரியும் நானும் வரேன் "
" வேணாம் மச்சான் பூரணிக்கு நீ கூட இருக்கனும் நான் மட்டும் போறேன் "
பூர்ணியை அழைத்து வந்து அறையில் படுக்க வைக்க அவனின் கையினை பிடித்து இழுத்தாள்...
" என்ன டி "
" பசிக்குது "
அவள் கேட்ட அந்த நொடி இதயமே நின்றது போல உணர்ந்தான் சித் கோடி கோடியாய் பணம் வைத்து இருந்தும் தன்வளின் பசியை போக்க ஓடினான்...
கிச்சன் சென்றவன் என்றோ அஜய் உடன் செய்த மேகி நினைவுக்கு வர அதையே செய்து எடுத்து வந்தான்...
பூரணியை தாங்கி பிடித்து அவளுக்கு ஊட்டிவிட்டவன் மடி மீது தாங்கி தூங்க வைத்தான்....
படுக்க வைத்தவன் அவள் தூங்கியதை உறுதி செய்து வெளியே வந்து அஜய்க்கு கால் செய்தான்...
" மச்சி சொல்லு "
" என்னா டா என்னனு தெரிஞ்சுதா "
" ஆள் யாருனே தெரியும் வந்து சொல்றேன் பூர்ணி என்ன பண்ணற "
" அழுது அழுது இப்ப தான் தூங்குறா "
" சரி நான் வரேன் நீ அவ கூடவே இரு "
உள்ளே சத்தம் கேட்டு சித் செல்ல
" ஐய்யோ பிளிஸ் என்ன விடுங்க பிளிஸ் நான் அப்படி இல்ல பிளிஸ் "
என தூக்கத்தில் கதறியவளை நெஞ்சோடு அணைத்து கொண்டவன்...
பூர்ணி நடந்ததை கூற தொடங்கினாள்
அஜய் வர....
முதல் நாள் இரவு
" என்ன மேடம் செம குஷி போல "
" பின்ன என் ஆளு கூட இன்னைக்கு ஃபுல் டே இருந்தேன் ல அதான் "
" அப்புறம் பர்த்டே பார்ட்டி எப்படி போச்சு அண்ணா என்ன கிஃப்ட் கொடுத்தாங்க "
என கண்ணடித்து பிரியா கேட்க
" ச்சி போடி "
என முகத்தில் கை வைத்து மறைத்தவளை
நண்பிகள் இருவரும் கதை அளக்க
பூர்ணி ஃபோன் அடித்தது..
" என்ன டி அண்ணாவா இப்ப தான விட்டுட்டு போனாங்க அதுக்குள்ள ஃபோன் "
" ஏய் அவரு இல்ல டி வேற யாரு புது நம்பர் "
என்றவள் கால் எடுத்து காதில் வைத்து பேச..
" ஹலோ ஹலோ "
" ஏய் இங்கதான் டவர் கிடைக்காதுல வெளியே போய் பேசுடி "
" ம்ம் சரி "
என்றவள் ஃபோன் எடுத்து கொண்டு வெளியே வர
" ஹலோ யாரு "
" ஹலோ ஹலோ "
" மேடம் பூர்ணி மேடமா "
" எஸ் சொல்லுங்க "
" மேடம் சித் சார்க்கு‌ ஆக்ஸிடென்ட் ஆகிட்டு நீங்க வர முடியுமா "
" என்ன சொல்றிங்க இப்ப தான் ட்ராப் பண்ணாங்க "
" மேடம் இப்ப தான் நீங்க கொஞ்சம் வர முடியுமா உங்கள தான் சார் காண்டாக்ட் பண்ண சொன்னாங்க "
காதல் கொண்ட மனது உண்மை என நம்பி அவசர அவசரமாக
" இப்ப எப்படி இருக்காரு என்னாச்சு நான் பேச முடியுமா "
" மேடம் சார் கொஞ்சம் மயக்கத்துல தான் இருக்காரு நீங்க உடனே வாங்களேன் "
யாரிடமும் சொல்லாமல் அவசரமாக கிளம்பி பஸ் நிறுத்தத்திற்கு செல்ல
அவளது கெட்ட நேரம் அது அந்த மாதிரி பெண்கள் நிற்கும் இடம் என தெரியாமல் செல்வதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என பார்த்து கொண்டு இருந்தாள்....
சரியாக அங்கு வந்த போலிஸ் அனைவருடன் அவளையும் இழுத்து செல்ல
" என்ன பண்ணுறிங்க விடுங்க விடுங்க என்ன "
" ஏய் என்ன ரொம்ப வம்பு பண்ணுற போ போய் இரண்டு நாள அனுப்பி விட்டுட்டுவோம் "
" மேடம் நீங்க நினைக்கிற பொண்ணு இல்ல பிளிஸ் என்ன விடுங்க "
" சும்மா பிகு பண்ணாம போ புதுசா வரவ எல்லாம் இதையே சொல்லுங்க "
" பிளிஸ் மேடம் விடுங்க மேடம் "
அவள் கத்தலை காதில் வாங்காமல் இழுத்து சென்று லாக்அப்பில் தள்ளினர்...
" மேடம் பிளிஸ் மேடம் என் லவ்ர் க்கு ஆக்ஸிடென்ட் நான் போகனும் பிளிஸ் விடுங்க "
என அவள் கேட்டு கொண்டே இருக்க அங்கிருந்த பெண் போலிஸ்
" ஏய் எதுக்கு சும்மா கத்துற "
" மேடம் அவருக்கு ஆக்ஸிடென்ட் போகனும் மேடம் "
" யாருக்கு பேரு என்ன "
" சித்தார்த் வர்மா "
பெயரை கேட்டதும் அனைவரும் சிரிக்க
" எது அவ்வளவு பெரிய பணக்காரர் உனக்கு லவ்ர் இத நம்பனும் "
" பிளிஸ் நம்புங்க நீங்க கால் பண்ணி கேளுங்க பிளிஸ் "
சரி என ஒத்து கொண்டவர் சித் பிஏ க்கு அழைப்பு விடுத்து
" வணக்கம் சார் நான் ஸ்டேஷன் லேந்து இன்ஸ்பெக்டர் பேசுறேன் ‌"
" சொல்லுங்க இந்த நேரத்துல என்ன "
" இல்ல சித்தார்த் சார்க்கு ஆக்ஸிடென்ட் ஏதாவது "
" அதலா ஒன்னும் இல்ல சார் நல்லா தான் இருக்காரு ரெஸ்ட் எடுக்குறாறு கூப்பிடவா "
" அதலா வேணாம் சார் நாங்க அப்புறம் பேசுறோம் ஏதோ ராங் இன்பர்மேஷன் போல "
பூர்ணி பற்றி பேசி இருந்தால் இந்த நிலைமை அவளுக்கு வந்து இருக்காதோ என்னவோ.....
பேசியவர் பூர்ணி யிடம் திரும்பியவர்
" இந்த பொண்ணு சும்மா கத உடாத அவரு நல்லா இருக்காரு நீ ரொம்ப நடக்காம வாய் மூடிட்டு போ "
தன்னை சுற்றி ஏதோ தவறாக பட அழுது அழுது அடுத்து என்ன செய்ய என புரியாமல் இருந்தாள்...
நடந்ததை அழுது கொண்டே சொல்ல கண்களில் கோபம் தெறிக்க
அழுது கொண்டு இருந்தவளை சமதானபடுத்தியவன் தூங்க வைத்துவிட்டு இடத்தை காலி செய்ய...
வந்தவன் கோபத்தில் அங்கிருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைத்தான்...
" யாரு மச்சான் யாரு அது என் பூர்ணிய அசிங்கபடுத்த நினைச்சவன் யாரு "
" மச்சான் பூர்ணிய அசிங்கபடுத்த நினைக்கல தூக்க நினைச்சுருக்காங்க வெய்ட் பண்ண நேரம் போலிஸ் வந்து தூக்கிடாங்க‌ "
" என்னடா சொல்லுற பூர்ணியவா யாரு டா "
" நேத்ரா "
" வாட் "
அங்கே
" ஏய் இடியட் சொன்ன வேலைய ஓழுங்கா செய்ய தெரியாதா "
" மேடோம் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு மேடோம் நான் தூக்க வேண்டிய நேத்துல போலிஸ் குறுக்கா புந்து புடிச்சுட் போயிட்டாங்க "
" உன்ன நம்பி ஒரு வேலைய ஓப்படைச்சேன் பாரு என்ன சொல்லனும் "....
" வாட் நேத்ரா இத பண்ணாலா "
" அவளே தான் அவள் என்ன பண்ணுறேன் பாரு "
என்று கிளம்பி சென்றவளின் கைபிடித்தவன்
" ஏய் ஏன்டா என்ன தடுக்குற இப்பவும் அவள விட சொல்றியா "
" நானும் வரேன் "
சட்டென கண்விழித்த அஜய்
" நேத்ரா "
அவனின் அருகில் அமர்ந்த நித்யா
" என்ன அஜய் "
" நேத்ரா ஏன் இத பண்ணிருக்க கூடாது "
" நேத்ரா வா ஆனா அவ தான் பாரின்ல இருக்காலே "
" அவ இந்த மாதிரி பண்ணுறவ தான் சித் கிடைக்கலனு இப்படி பண்ணிடாலா "
கிளம்பி இருவரும் விக்ரம் வீட்டுக்கு செல்ல
" விக்ரம் "
" விக்ரம் "
என கத்தியவனை அடக்கிய நித்யா
" அஜய் காம் டௌண் அஜய் "
" ஏய் விடுடி விக்ரம் விக்ரம் வெளிய வா "
சத்தம் கேட்டு விக்ரம் மற்றும் அவனது தாய் வெளியே வர..
தொடரும்....
வணக்கம்
கதை எல்லாருக்கும் புரியுதா எங்கயாவது குழப்புறனா நிகழ்காலும் இறந்தகாலமும் மாறி மாறி வரதால குழப்புற மாதிரி இருந்தா சொல்லுங்க பிளிஸ் உங்களோட கருத்துகள என்னோட பகிர்ந்த்துக்கோங்க அப்தான் எனக்கு புரியும்...
சூப்பர் நைஸ் இந்த மாதிரி கமெண்ட் கூட வேற ஏதாவதும் சொல்லுங்க பா பிளிஸ்....
 
Status
Not open for further replies.
Top