saranya R
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொல்லாத காதல்
உன் கன்னக்குழியில் எழுதிடா
என் ஆசை முத்தம் காதல்
எழுதியும் உன் முகவரி சேரா
என் ஆயிரம் காகித கவிதைகள் காதல்
என் இதயம் கொன்ற இரக்கமற்ற
வலிகளாய் எழுதப்படாத
என் ஒருதலை காதல்......
சொல்லி தொலையா என் சொல்லாத காதல்...
............>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அவள் கண்கள் என்னும்
கருவறையில்
காதல் என்னும் உயிர் வளர்த்தேன்
உதித்த காதல் உயிர் உருபெறும்
முன்னே உதிர்ந்து போனது
காலம் கடந்த
என் சொல்லாத காதலால்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நேரத்தை வீணடித்து
நேர்த்தியாய் ஒரு கவிதை
கவிதையுடன் என் உள்ளம்
புதைத்த காதல்
விழிகள் நான்கும் நோக்க
இதயம் இரண்டும் இடமாற
மொழியாய் என் காதல் பிறக்கும் முன்னே
வலியாய் என் கண்ணீர் துளிர்த்ததால்
முடியாமல் போனது என் காதலை
உன்னிடம் சொல்ல...
.>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன்னுடன் மட்டுமே இனிதாய் பேசிய
என் இதழ்கள்
என்றும் விடாமல் உன் கரம் கோர்த்து நடந்த
என் கரங்கள்
அலை வந்து மோதும் அந்தி வான கடற்கரை
ஓரத்தில் உன்னுடன் மட்டுமே பயணித்த
என் கால்கள்
நான் உயிர் வாழ்கிறேன் என்பதற்கு ஆதாரமாய்
உனக்காய் மட்டுமே துடித்த
என் இதயம்
இவைகள் சொல்ல நினைத்த காதல்
உன் விழிகள் என்னும் தடையை தகர்த்த முடியாமல்
தவித்து நின்றது
ஏனெனில்
என் காதலின் பிம்பம் உன் விழியில்
பிரதிபளிக்காமல் போய்விடுமோ என்று…..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எப்போதும் கலைந்து கிடக்கும் என் அறை
அதன் ஓரத்தில்
என் மலரும் நினைவுகளாய் சிறு பெட்டி
அதில் பல காகித மடல்கள்
ஒவ்வொன்றும் பல கதை சொல்ல
ஒரு கடிதம் மட்டும் கையில் கணத்தது
கணத்த மனதுடன் திறந்தேன்
வெள்ளை நிறமாய் ஆரம்பித்து
இருள் நிறத்தில் முடிந்தது
அவள் கையெழுத்து
இரு துளி கண்ணீர் பட்டு கலைந்த
அக்கையெழுத்து சொன்னது
கண்ணீருடன் என்னவளின்
சொல்லாத காதலை….
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நித்தமும் உன்னுடன் பயணிக்க
நினைக்கிறேன்
உன் வேதனையில் நான் வலிக்கொண்டு
உன் மகிழ்வில் நான் புன்னகைத்து
உன் துயரில் நான் பங்குக்கொண்டு
முடிகற்றை நிறைந்த உன் நெஞ்சத்தை
மஞ்சமாய் கொண்டு
தோழியாய் தோள் தந்து
துணைவியாய் மடி தந்து
நித்தமும் உன்னுடன் பயணிக்க
நினைக்கிறேன்
இவ்வுணர்வுக்கு பெயர் என்னவோ
காதல் என்றால் அதை
சொல்ல நினைக்கிறேன்
சொல்லாமலும் தவிக்கிறேன்
எங்கே நீ மறுத்துவிடுவாயே என்று…..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
HI friend and sister romba naaluku apram oru kakitha padichi epdi irukunu sollunga kutham kurai irunthalum sollunga na thiruthikuren
கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... sisters & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
Last edited: