வதம்-11 a
இரவு உணவை முடித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு திரும்பிய நண்பர்கள், ஹாலில் விசிராந்தையாக அமர்ந்து, ஒய்வு எடுக்க ஆரம்பித்தார்கள்...
வினய்யின் மனமோ, சற்று முன் "பெண்ணவள், ஆரியின் அருகே நெருங்கி நின்று அவனுக்கு உணவு
பரிமாறியதிலேயே உழன்றது.... இதற்கு முன் ஆரி , எந்த பொண்ணையும் இவ்வளவு அருகில் அவனிடம் நெருங்க விட்டதில்லை, முதன் முதலில் பார்த்த இந்த பெண்ணை மட்டும் , அவ்வளவு நெருக்கமாக உணவை பரிமாற எத்தகைய கோவமும், முகச் சுழிப்பின்றி அனுமதித்து ஏன்?... ஆரி மனக்குழப்பத்தில் இருந்ததால் பெண்ணவளின் நெருக்கத்தை கவனிக்கவில்லையா?.. இல்லை காலையில் அந்த பெரியவர் சொன்னது போல் "ஆரி மனக்குழப்பத்தால் அடிக்கடி தன்னிலை இழக்கிறானா?.. உண்மையில அவனின் மனத் தடுமாற்றத்திற்கு காரணம் ஏதேனும் தீய சக்தியாக இருக்குமோ?. இப்படி பல்வேறு சிந்தனையில் இருந்த வினய்யின், மண்டையில் கொட்டினான் ஆரி...
அதில் அதிர்ந்து தன் முன்னே நின்ற ஆரியின் முகத்தை, "எதுக்கு கொட்டினாய்?'' .. என்பது போல் வினய் பார்க்க?....
" மாமா, இன்னைக்கு ரொம்ப அலைச்சல், ஸோ, தண்ணி அடிக்கலாமா?...
"டேய் மச்சி, நிஜாமா வாடா... வினய்யின் கண்ணில் ஜொல்லு வடிந்தது, தன்முன்னே இருந்த ஃபாரின் சரக்கு பாட்டிலை பார்த்து..
மீன் சிக்கிகுச்சுடா .. பிடிச்சி தண்ணீல நீந்த விட்டிடலாம்; இதை தான் எதிர்பார்த்தேன் என்பது போல் மனத்திற்குள் நினைத்து சிரித்த ஆரி..
இரு மாமு மிக்ஸிங்கு வாட்டர், எடுத்துட்டு வரேன்... என கண்ணாடி கிளாஸ்யுடன் கிச்சன்செல்ல திரும்பிய ஆரியின் கைப்பிடித்த வினய்
"எனக்கு மட்டும் மிக்ஸிங்க்கு தண்ணி , உனக்கு சோடா வா?.... இது இந்த ஊர் நியாமா?.... உன்ன நல்லவனு நினைச்சேன்... முகத்தை
அஷ்ட கோணலாக்கி கேள்வி கேட்டான் வினய் ..
" டேய் இதுல நீ குழந்தை டா .. இப்பத்தான் பழகி இருக்க.. சோடா மிக்ஸ் பண்ணினா மயக்கம் அதிகம் வரும், அது தான் உனக்கு தண்ணீர் கலக்கலாம்னு.. ஆரி ராகம் இழுத்தான்..
"நீ என் அம்மா போல, இல்ல அதுக்கும் மேலடா நீ., நான் குழந்தையாக இருந்த அப்போ., என் அம்மா பால் பவுடர்ல ... தண்ணீ கம்மியா கலக்கி .... குடுப்பாங்களாம் அதனால எனக்கு அடிக்கடி "டிஸ்என்ட்ரி போகுமாம்.. அதுனாலதான் நான் இப்படி நோஞ்சானா இருக்கனாம்.. அடிக்கடி பாலை கூட சரியாக கொடுக்க துப்பு இல்லைனு., அடிக்கடி அப்பா இதை சொல்லி
திட்டுவாறுடா அம்மாவை ... ஆனா நீ ....
அதற்கு மேல் பேச முடியாமல் வினய்யின் கண்கள் கலங்க..
சற்ற முன் வினய் பேசியதை கேட்டப்படியே, சமையலறைக்குச் சென்று, தண்ணீர் பிடித்து , அதனுள் தன் கையிலிருந்த மாத்திரையைப் போட்டு ஸ்பூனால் கலக்கியவன், மாத்திரை கரைத்ததும் ஸ்பூனை எறிந்து விட்டு வினய்யிடம் வந்தவன்.. கடைசியாக அவன் கூறியதைக் கேட்டு முதலில் சிரித்தவன், பிறகு தான் செய்யப் போகும் செயலால் மனம் தடுமாற, அதை தலையை உலுக்கி தன்னை சரிப்படுத்திக் கொண்டான் ஆரி...
அதன்பிறகுதன் கையிலிருந்த கிளாஸ்ஸில் சரக்கை ஊற்றி வினய்க்குக் கொடுத்து விட்டு, தனக்கும் ஒரு கிளாஸ்ஸில் ஊற்றிக் கொண்டு, வினய்யின் முன்னே அமர்ந்தவன்; குடிப்பது போல நடித்துக் கொண்டே வினய்யை பார்த்துக் கொண்டிருந்தான்.
அடுத்த சில நொடிகளில் மயங்கி சரிந்த வினய்யை, தூக்கிச் சென்று படுக்க வைத்துவிட்டு, போர்த்தி விட்டவன், ' ஜெர்க்கின் " அணிந்துக் கொண்டு, நவீன ரக துப்பாக்கியை தன் பையிலிருந்து எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு "டார்ச் லைட்டோடு வெளியேறிவன்... வீட்டைப் பூட்டி சாவியை தன் சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டு, வீட்டின் பின்புற இருளில் இறங்கி நீலிக் குகையை நோக்கி நடக்க வாரம்பித்தான்..
சுற்றிலும் அடர் கருமை பூசியிருந்த இருட்டில் .. சற்று மங்கலான
நிலவு வெளிச்சத்தில் வயல் வரப்பில் நடந்தவனின், காதில் காட்டுப் பூச்சிகளின் ரிங்காரமும், தவளைகளின் கத்தலுமே கேட்டுக் கொண்டிருக்க... இருபது நிமிட நடையில் வயல் பரப்பு முடிந்து .. பாக்குத் தோப்பு ஆரம்பிக்க அதனுள் புகுந்தவன் ... அடர்ந்த இருட்டில் . எந்தப் பக்கம் செல்வது என ஒரு நொடி நின்று யோசிக்க.. டார்ச்சை இயக்கி வழி பார்க்கலாம் என டார்ச்சில் கை வைக்க போகும் சமயம், அவன் பின்னே நாற்புறமும் சருகுகள் மிதிப்படும் ஒசை கேட்டதும் அதில் சற்று நிதானித்தவன்.. அப்படியே மரத்தில் சாய்ந்து ... கண்மூடி நின்றவன், சருகுகள் மிதிப்படும் ஒசையை வைத்து ... தன்னை பின் தொடர்வது மனிதர்களா?.. இல்லை விலங்குகளா?... என அவதானிக்க ஆரம்பித்தான்.
அவன் நின்றதும் அவ்வொலியும் நிற்க ., இப்பொழுது எத்திசையில் செல்வது என, யோசிக்க ஆரம்பித்தான் .
அவனின் வலப்புறம் .... சற்று தூரத்தில் நீர்வீழ்ச்சிலிருந்து நீர் வீழும், ஒலியை உள்வாங்கியவன் ... அந்தத் திசையை நோக்கி நடக்க ஆரம்பிக்கவும்.. மீண்டும் அந்த வித்தியாசமான ஒலிகள் அவனை பின் தொடர ஆரம்பித்தது.
பாக்கு மரங்கள் 'சலசலவென 'காற்றில் அசைந்து பெரும் சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன....
அதே நேரம் ...' செம் பூத்து, 'பறவைகள்..'க்ரிக், க்ரிக்' என கத்தியும்,
எங்கிருந்தோ, நரிகள் "ஊளையிடும் சத்தங்கள் அவ்விடத்தை அமானுஷியமாக காட்டிக்கொண்டிருந்தன...
தன்னை மீண்டும் தொடர்ந்த கால் அடிகளின், ஒலியில் அவைகள் என்னவாக இருப்பின் என அனுமானத்திற்கு வந்தவன் .... கும்மிருட்டு, வித்தியாசமான ஒலிகள், விலங்குகளின் கர்சனைகள் இவற்றினால் எந்தவித பயமும் இன்றி, "விக்கிரமாதித்தன் வேதாளத்தை சுமந்து மந்திரவாதி குகைக்கு செல்லும் வழியில், குறுக்கே ; பேய், பிசாகளும், யட்சிணிகளும், கிங்கர்களும் ,, கொலை நடுங்கும் ஒலி எழுப்பி, விக்கிரமாதித்தியன் பயந்த வேளை அவனை குத்தி, குதறி இரத்ததோடு புசிக்க பின் தொடர, அந்தோ! பரிதாபம், விக்கிரமதித்தியன் எதற்கும் அஞ்சாமல், தன் காரியமே கண்ணாக, '
துணிந்து சென்றதைப் போல், ஆரியும், தொடர்ந்து வரும் ஆபத்தையும், எதிரே உயிர் குடிக்க காத்திருக்கும் ஆபத்தையும் எதிர்நோக்க துணிந்து முன்னேறி கொண்டிருந்தான்.... ஆனால் முன்னவன் வேதாளத்தை சுமந்தான் ... பின்னவன் வேதாளத்தை வீட்டில் தூக்க மருந்தை கொடுத்து தூங்க வைத்துவிட்டு ,,, தனியாளாக நடக்கிறான்...
அடர்ந்த கரும் இருட்டு தோப்பிலிருந்து, கரடு முரடணான பரந்த வெளியில் ஆரியின் பாதங்கள் படவும்.. அய்யோ பாவம் இவன் .. என நிலவு மகள் சற்று கருணை காண்பித்து அவ்விடத்திற்கு நிலவொளியை வீச ஆரம்பித்தாள் ...
பரந்த வெளியில் இருபது நொடிகள் நடந்தவன்; மேகம் முட்டிய மலை ஆரம்பிக்கும் இடத்தில் நின்று; தலையை உயர்த்தி அம்மலையை பார்க்க.. ' மனிதரை புசிக்கும் அரக்கன்'ஒருவன் அமர்ந்திருப்பது போல காட்சியளிக்க, அதன் மீது ஏற காலை வைத்த நொடி; அவனின் முன் தோன்றியிருந்த உருவத்தைப் பார்த்து, ஒரு அடி பின்னால் வைத்து, நின்றான்.
அந்த நெடிய உருவம் ; தன் கையில் இருந்த கழியை ஆரியின் தலை மீது வைத்திருந்தது ...
_,,,,,,, x -,,,,,,,,X....,,,,,,,,,,,,,,,,,x.,,,,,,,,,,,,,,X.,,,,,,,,,,,,,,,,