AnuCharan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
.
அத்தியாயம் 8
அந்த வீடே வெறிச்சோடிக் கிடந்தது... வந்த சொந்த பந்தங்கள் எல்லாம் எதிர்பாராமல் நிகழ்ந்த இரண்டு மரணங்களுக்கும் துக்கம் விசாரித்துவிட்டு சென்றிருக்க ஸ்ரீ யின் குடும்பத்தினர் ஆளுக்கொரு மூலையில் அடைந்திருந்தனர்..
பெரியவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கேளாது ரவி,ராம் விஷ்ணு மூவரும் சென்னை கிளம்பியிருந்தனர் ஸ்ரீ இறந்த பத்து நாட்களில்....
அன்று...
ஸ்ரீ யின் உடல் மதியம் தாண்டியே பொள்ளாச்சியை அடைந்தது. உடன் ராமநாதனும் வந்திருந்தார். வர்ஷினி கண் விழித்ததால் கலைச்செல்வியே பார்த்துக் கொள்வதாய் கூற கோபால் எவ்வளவோ தடுத்தும் கிளம்பி வந்துவிட்டார்.
அதற்குள் ராமும் ரவியும் வந்திருந்தனர். பெரியவர்கள் ஒரு பக்கம் சின்ன வர்கள் மறுபக்கம் என யார் யாரை தேற்றுவது என்ற வழியறியாது அழுது கொண்டு இருந்தனர். இதில் சவிதா வேறு ஸ்ரீ யின் உடலை கண்டு மயங்கி விழ இன்னும் களோபரம் ஆனாது.
ராம் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் வைராக்கியமாய் நின்றிருந்தான். சிறுவயதில் இருந்தே இரட்டையர்கள் போல் ஒன்றாய் திரிந்தவர்கள்... அதில் அவள் இல்லை என்பதை அவனால் முழுதாய் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
பங்காளிகள் என ஸ்ரீ யின் உடலை தூக்க வர அதனைத் தடுத்து ராம் ரவி நவீன் நரேன் என அண்ணன் தம்பிகளே அவளின் இறுதியாத்திரையை முடித்து வைத்தனர்.
சுந்தரம் தாத்தாவிற்கு அன்றிரவு அதீத நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருந்தார். ஒன்றிற்கு இரண்டு மரணம் நிகழ்ந்திருக்க அங்கிருந்தவர்கள் ஒருவர் கண்ணிலும் ஜீவனில்லை...
அடுத்தநாள் அவருக்கான காரியங்களும் முடிந்திருக்க உடலின் சக்தி மொத்தமும் வடிந்ததுபோல் அனைவரும் இருந்தனர்... உணவு, தூக்கம், சுற்றுபுறம் மறந்து இன்ன பிற அன்றாட வேலைகளையும் மறந்து ஒரு வாரம் அனைவருக்கும் போனதே தெரியவில்லை..
இறுக்கமாகவே இருந்த ராம் உறவினர் ஒருவர் ஸ்ரீ மற்றும் சுந்தரம் படத்திற்கு மாலை அணிவிப்பதை பார்த்து ஆவேசமானான்.
வேகமாக சென்று ஸ்ரீ க்கு போடப்பட்ட மாலையை கழட்டி வீசி எறிந்தான். அதை கண்ட அனைவரும் சுயவுணர்வு பெற்று வந்து ராமை தடுக்க அதற்குள் ஸ்ரீ புகைப்படத்தில் வைக்கப்பட்டிருந்த பொட்டையும் அழித்திருந்தான்.
சில இடங்களில் இறந்தவர்க்கு குறிப்பிட்ட நாட்கள் வரை அவர் படத்திற்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றுவது வழக்கம். அதேபோல் தான் எண்ணி அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இவர்கள் வருந்துவதைப் பார்த்து விட்டு அவரே ஹாலில் இருந்த படங்களை எடுத்து சுத்தம் செய்து பொட்டிட்டு மாலையிட்டார் ஆனால் ராமின் ஆவேசத்தில் அவரே பயந்து ஒதுங்கி கொண்டார்.
மூர்த்தி "ஏன் இப்படி நடந்துக்கற ராம்.. இதெல்லாம் வழக்கமா செய்யர முறைதான நாம தான் கவலைல மறந்துட்டோம் அதான் அவங்க பண்றாங்க நீ ஏன் தடுக்கற " என்றார் குரல் கமற.
ராம் " பெரியப்பா என்ன பேசுறீங்க ...ஸ்ரீ நம்மல விட்டு எங்கயும் போகல அவ நம்ம கூட தான் இருக்கா ... இருப்பா ... எப்பவும்.... நீங்க எல்லாம் மொதல்ல அழறத நிறுத்துங்க ... இப்படி எல்லாம் நீங்க அழறீங்கனு தெரிஞ்சாலே அவ ரொம்ப வருத்தப்படுவ அவ ஆத்மா கூட சாந்தி அடையாது.. எல்லாரும் போய் அவங்க அவங்க வேலைய பாருங்க " என்றான் திடமான குரலில் கூறியவன் அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டான்.
அவன் குரலில் இருந்த கட்டளையே அனைவரையும் எழும்ப வைத்தது..இதுவரை விளையாட்டு தனமாய் இருந்தவன் இவ்வளவு பொறுப்பாய் பேசுவதைக் கண்டு வாயடைத்து போயினர்.
விஷ்ணுவும் ரவியும் அவன் பின்னாலேயே சென்றவர்கள் அவன் வயலையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்து அவன் தோளைத் தொட்டு திருப்பினர்" எங்களை விட ஸ்ரீ உனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று எங்களுக்கு தெரியும் ராம் அவ இல்லைங்கறத ஏத்துக்கோ ... வாய்விட்டு அழுதுரு டா ... துக்கத்தை மனசுக்குள்ளையே வச்சுக்காம அழு டா... மனசு கொஞ்சம் லேசாகும்...எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லற ஆனால் உன்னோட வருத்தத்தை வெளிக் காட்டாம பெரிய மனுஷன் மாறி நடந்துக்கற.." என்றான் விஷ்ணு.
அவர்களை நோக்கி ஒரு வலி நிறைந்த புன்னகையை சிந்தியவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான். அவன் செல்வதைப் பார்த்த இருவரும் பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றனர்.
அன்று இரவு விஷ்ணுவிற்கு அழைத்த ராமநாதன் கூறிய விசயத்தில் விஷ்ணு,ரவி, ராம் மூவரும் அடித்து பிடித்து அடுத்தநாள் சென்னை கிளம்பியிருந்தனர்..
--------------------------------------
அந்த இரவின் தனிமையில் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள் வீல்.. என அலறியிருந்தாள். அங்கு முகம் மற்றும் உடல் முழுவதும் இரத்தக் கறையுடன் நின்ற உருவம் அவளை நொக்கி வர இவளோ நடுக்கத்துடன் பின்னால் நகர்ந்தாள்.
"அக்கா பயப்படாதீங்க ... பயக்காம என்னை பாருங்க பயந்தால் என் உருவம் அகோரமாகதான் தெரியும் " என்ற மழலை குரலில் அந்த உருவம் பேச முதலில் பயந்து பின்னோக்கி நடந்தவள் அந்த உருவம் தன் நடையை நிறுத்தியதும் அதில் இவளும் சற்று தள்ளி நின்று பயத்தை போக்க ஆழ்ந்து மூச்செடுத்தவள் கண்களை மூடித்திறக்க தற்போது அவளின் இடுப்பளவே உள்ள ஏறத்தாழ பத்து வயதுடைய சிறுவன் நிற்க ஸ்ரீ யோ விழிவிரித்து அவனைப் பார்த்தாள்
'சிறிது முன் அவனின் தோற்றம் என்ன தற்போதுள்ள தோற்றம் என்ன எப்படி இப்படி ஆனது ஏதோ மேஜிக் மாறி இருக்கு...' என எண்ணி வியந்தாள்.
அவனோ " அக்கா என்னைப் பார்த்து பயப்படாதீங்க நானும் உங்களை மாதிரி தான்" என்றான் சர்வசாதாரணமாக.
அவன் கூறியது புரியவே ஸ்ரீ க்கு சில நிமிடங்கள் ஆனது புரிந்ததும் அவளுக்கு இன்னும் மனதில் பாரம் ஏறிக் கொண்டது. ஓடியாடி விளையாட வேண்டிய இந்த சிறு வயதிலேயே இந்நிலையில் உள்ளான் என்றால் இந்த மரணம் தான் எத்தனை கொடியது என்றே ஸ்ரீ யின் மனதில் தோன்றியது.
--------------------------------------
இங்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட எத்தனையோ அதிசயங்கள் இவ்வுலகில் நடந்திருக்கிறது.. நடந்துகொண்டும் உள்ளது. இங்கு பல விசயங்கள் விடை தெரியாத மர்மங்களாகவே உள்ளது.. அதற்கான எத்தனையோ விளக்கங்கள் அறிவியல் பூர்வமாக கூறினாலும் மர்மங்கள் தீர்ந்தபாடில்லை..
அப்படி பட்ட இடம் தான் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் பகுதி சுமார் 12 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட காடு தான் மதிகெட்டான் சோலை.. சாதரணமாக காட்சியளிக்கும் இந்த வனாந்தர பகுதி பல மனிதர்களையும் சித்தர்களையும் காவு வாங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது..
மருத்துவ செடிகளைத் தேடியும் காட்டை ஆராயவும் என்று சென்ற ஒருவரும் திரும்பி வரவில்லை. அறிவியல் பூர்வமாக அவர்கள் திரும்பி வராததற்கு அங்குள்ள ஒருவகை மூலிகைதான் அவர்களின் மதியை மயக்கி காட்டில் இருந்து வெளிவர இயலாமல் செய்து கொல்கிறது என பல அறிஞர்கள் கூறினாலும் இங்கு பல்வேறு விசயங்கள் மர்மமாகவே உள்ளது
அதனால் நம் அரசாங்கமே அந்த 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டை சுற்றியும் கம்பி வேலி அமைத்து தடைசெய்யப்பட்ட பகுதி என பிரசங்கப்படுத்தியுள்ளது.. சூரிய ஒளியை உள்ளே விடாமல் அந்த அடர் வனப்பகுதியின் நடுவே நடுநாயகமாக நின்று கொண்டிருந்தான் அவன்.
பல நூறு ஆண்டுகளாக இந்த காட்டை ஆட்சி செய்பவன் உள் நுழையும் ஒருவரையும் விட்டு வைத்ததில்லை அவர்களின் ஆவி கூட அந்த காட்டை விட்டு வெளியே செல்ல அவன் அனுமதித்ததில்லை...
தற்போது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மரக்கிளைகள் இருபுறமும் அரண் போல் வளர்ந்து இருக்கக் முட்கள் நிரப்பப்பட்ட அந்த தரைக்கு பத்தடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்தவன் உடல் முழுதும் செதில்கள் போலவும் அகோரமாய் வளர்ந்திருக்க செய்த தவம் நிறைவுபெற முன்தின இரவே கண்விழித்து இருந்தான்.
ஒரு ஆன்ம சக்தியின் மூலம் ஆறடிக்கு மேல் மூன்று இன்ச் அதிகமான உயரமும் வசீகரமான முகத்துடன் பார்க்க முப்பது வயது இளைஞன் போல் இருக்கும் தன் இளமையை மீட்டு எடுத்து இருந்தான் அவன் ஆதிலிங்கம்..
அவனின் சிவப்பு நிற விழிகள் வேட்டையாட போவது போல் பளபளத்தது.
அவனால் தீயசக்திகளாக மாற்றப்பட்டு பிசாசுகளாக இருந்த இரண்டு ஆத்மாக்களை அழைத்தவன் அக்காடே அதிரும் வண்ணம் அகோரமாய் சிரித்தான்.
"இத்தனை வருட தவத்தில் எனக்கு தேவையானது கிடைக்கப் போகிறது... இன்னும் சில நாட்களில் நான் சாப விமோசனம் பெற்று விடுவேன்... அதன் பின் இந்த உலகமே என் கட்டுப்பாட்டில்" என்று கண்கள் மின்ன கூற அந்த பிசாசுகளும் தன் கோரப்பற்களைக் காட்டி சிரித்தது..பின் தன் இரையை பற்றிய விவரங்கள் கூறியவன் அது இருக்கும் திசையையும் கூறி அதனை இழுத்து வர கட்டளையிட்டான்.
கதையின் போக்கை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே
அனுசரணின் "உயிரின் தேடல் நீய(டா)டி" - கருத்துத் திரி
"உயிரின் தேடல் நீய(டா)டி" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.srikalatamilnovel.com