All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மருத்துவர் பவித்ரனுடன் தனியே பேச அழைத்தார்.

நான் அவர் பொண்ணு டாக்டர். எதுவாயிருந்தாலும் சொல்லுங்க , என அழுதவாறு கூறினாள்.

நீ நினைக்கிற மாதிரி ஒரு பிரச்சனையும் இல்ல, கொஞ்சம் காத்திருங்க இதோ வந்துடுறோம் என பவித்ரனை உள்ளே அழைத்துச் சென்றார் மருத்துவர்.

தொலைக்காட்சியில் மத்திய அமைச்சர் துரையின் கார் விபத்துக்குள்ளானது என அதை படம் பிடித்து காட்டிக்கொண்டிருந்தனர். கார் மிக மோகமாக லாரியின் சக்கரங்களுக்குக் கீழே நசுங்கி இருந்தது.

ஒரு செய்தியாளர் காரின் நிலைமையைப் பார்த்தால், அமைச்சர் துரை உயிருடன் இருப்பார் என கூற முடியவில்லை என மனிதமே இல்லாமல் வெறும் செய்தியாக கூற, அதைப் பார்த்த ஜீவிதா கதறி அழுதாள்.

சூ.. என்ன சின்ன புள்ள மாதிரி அழுற, இது பொதுஇடம் என கண்டனக்குரல் கேட்டு திரும்பியவள் எதிரே கண்ணன் நின்றான்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

suganthi jawahar

Well-known member
Nice ud udhaya ma, anandhu marriage kandippa nikkum Da naaye, jeevikku Kannan thaan pair appa,pavi nee ennum wait pannanum Ranju ja kaipidikka eàger to wait next ud
 

jnc

Active member
சீக்கிரம் அடுத்த ud போடுங்க...wait பன்ன முடியல
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி ஒன்பதாம் பகுதி..

அழாத, அழுறத முதல்ல நிறுத்து. செஞ்சதெல்லாம் தப்பு, இப்ப அழுதா, உங்கப்பா திரும்ப பழைய படி வருவாரா?? என சற்று கடுமையாக ஜீவிதாவைச் சாடினான் கண்ணன்.

அவளுக்கு அவன் திட்டுவதில் அழுகை நின்றுவிட்டது. குழப்பம் தான் மேலோங்கி இருந்தது. நான் என்ன தவறு செய்தேன். அப்பா கார் விபத்துக்குள்ளானதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றாள் ஜீவிதா.

இருக்கு, நிறைய சம்பந்தம் இருக்கு, அத சொன்னா புரிஞ்சுக்குற அளவுக்கு உனக்கு அறிவில்லை என்றான்.

எதற்காக இவன் இங்கே வந்தான். என்னை எதற்காக அறிவு கெட்டவள் என்கிறான், ஒன்றும் புரியவில்லை ஜீவிதாவிற்கு.

கண்களை உருட்டி முழித்தாள். ஆனந்த் வேகமாக மருத்துவமனைக்குள் வர, அதைக் கண்ட கண்ணன், அவசரமாக பேசினான். அடுத்த குறி நீதான், நீ பொண்ணுங்குறதால இன்னும் ஜாக்கிரதையா இரு!!! என எச்சரித்தவன் முகத்தை அந்தப்புறம் திருப்பிக் கொண்டான்.

ஜீவி என ஆனந்த் அழைக்க இருக்கையில் இருந்து எழுந்து, ஆனந்தை நோக்கிச் சொன்றாள் ஜீவிதா.

மாமா எப்படி இருக்காங்க?? டாக்டர் என்ன சொன்னாங்க?? என்றான் கண்களில் பதட்டத்தை பூசிக்கொண்டு..

பவி அண்ணாதான் உள்ள போயிருக்காங்க, என்றாள் அழுதவாறு,

வா பாக்கலாம் என மருத்துவர் அறையை நோக்கி ஆனந்த் அவளை இழுத்துச் செல்ல, கண்ணன் ஞாபகம் வந்தவளாய், தன் இருக்கையை பார்த்தாள் ஜீவிதா. இப்போது அங்கே யாருமில்லை.

யாரிவன்?? எதற்கு வந்தான்??? எங்கு சென்றான்?? என யோசித்தவாறு மருத்துவர் அறைக்குள் நுழைந்தாள்.

மருத்துவரிடம், மாமாக்கு எப்படி இருக்கு டாக்டர் என்றான் பதட்டமாக, மருத்துவர் பவித்ரனைப் பார்க்க, அவனும் அவரைத்தான் பார்த்தான்.

ரொம்ப மோசமான நிலைமைலதான் இருக்கார். இன்னும் நினைவு திரும்பல என்றார் மருத்துவர் பொதுவாக..

ஜீவிதாவின் அழுகை அதிகரிக்க, அவளை ஒரு கையால் அணைத்த ஆனந்த், இது என்ன சாதாரண மயக்கமா?? நினைவு திரும்பியதும் சரியாகும்னு சொல்றதுக்கு, என்ன அடி?? எங்க அடிபட்டிருக்கு?? எதாவது இரத்தம், அறுவைசிகிச்சை எதுவும் தேவைப்படுமா?? விளக்கமா சொல்லுங்க டாக்டர்??? என அவனின் தேவையை அக்கறையான கேள்விபோல் மாற்றிக் கேட்டான்.

ஜீவிதா தலைநிமிர்ந்து மருத்துவரைப் பார்த்தாள். மருத்துவரின் அடுத்த வார்த்தைக்காக பயத்துடன் காத்திருந்தாள்.

கால், கைகளில் எலும்பு முறிவு, உடலில் பலத்த சிராப்புகள், தலையில் அடி, பலத்த இரத்த சேதம் என மருத்துவர் அடுக்க, ஜீவிதா கதறி துடித்தாள்.

இதற்காகத்தான், நாங்கள் பொதுவாக சொல்வது என ஜீவிதாவின் அழுகையை சுட்டிக்காட்டியவர், இரத்தம் ஏற்றுவது, பிற எல்லா செயல்களும் நாங்களே பார்த்துக் கொள்வோம், சிகிச்சை இன்னும் ஆரம்பிக்கவில்லை. முதலுதவிதான் செய்து கொண்டுள்ளனர். அடுத்த கட்ட சிகிச்சைக்கு அவரை பரிசோதித்துக் கொண்டுள்ளனர் என்றார் மருத்துவர்.

அவரை நாங்கள் பார்க்கலாமா?? என்றான் ஆனந்த்.

இப்போதைக்கு முடியாது. போலீஸ் ரிப்போட் செய்த பிறகு, அவர்கள் அனுமதித்தால், பார்க்கலாம் என்றார் மருத்துவர்.

போலீசா??? நாங்கள் எந்த புகாரும் கொடுக்கவில்லையே என ஜீவிதாவைப் பார்த்தான் ஆனந்த்.

நான் தான் கொடுத்தேன். சில மாதங்கள் முன்பு ஜீவிதாவின் அண்ணனும் இதே போன்ற விபத்தில் மரணமடைந்தார். இப்போது, அங்கிளும் அதேபோல் கார் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமுற்று இருக்கிறார். அதனால் எனக்கு சந்தேகம் வந்ததால், போலீசில் புகார் செய்துள்ளேன் என்றான் ஆனந்தை கண்களால் துளைத்த வண்ணம் பவித்ரன்.

ஜீவிதா உனக்கு போலீசில் புகார் கொடுத்தது தெரியுமா??? என்றான் ஆனந்த்.

அவள் இடவலமாக தலையசைத்தாள்.

ஆனந்த் கோபத்தில் அடுத்த வார்த்தை பேச வர, மருத்துவர் முன்னால் இருக்கவே, சரி என விட்டுவிட்டான்.

அமைச்சர் தீவிர சிகிச்சையில் இருக்க, அறைக்கு வெளியே ஜீவிதா கண்ணீர் கோடுகளுடன் சோகமாக அமர்ந்திருந்தாள்.

ஆனந்த் குறுக்கும் நெடுக்குமாக பலத்த யோசனையில் நடந்து கொண்டிருந்தான்.

பவித்ரனுக்கு ஆனந்தின் பதட்டம், அதைமறைக்க அவன் திணறுவது , குரூர திருப்தியை அளித்தது.

பவித்ரன் ஜீவிதாவை சாப்பிட அழைத்தான். இல்லண்ணா எனக்கு பசிக்கல, நான் வரல என்றாள். வா ஜீவிதா அப்பாவை அவங்க பாத்துப் பாங்க, சாப்பிட்டு வந்துடு என்றான்.

இருந்தாலும், எனக்கு இங்க அப்பா பக்கத்திலிருந்து வர முடியாது. எனக்கு எதுவும் வேண்டாம். சொன்னா கேளுங்க என்றாள்.

ஆனந்த், போலீஸ்ல புகார் கொடுக்கப்பட்டிருக்கு, இடத்தை விட்டு நகராம இங்கேயே உட்கார்ந்திருந்தாலும், அவர் கண்முழுச்சாலும் கூட பார்க்க முடியாது, போ சாப்பிடு என்றான்.

ஜீவிதா, பவித்ரனைப் பார்த்து அப்படியா அண்ணா! என்றாள்.

அவன் ஆம்! என தலையசைக்க, தன்னை நம்பாமல் அவனிடம் என்ன கேள்வி என கடுப்பானான் ஆனந்த்.

உன்னைக் கேக்காமல் புகார் செய்து, உன்னை உங்க அப்பாவை பார்க்க விடாமல் செய்த அவர்க்கிட்டையே கேள்வி கேக்குற, ரொம்ப நல்லா இருக்கு. மாமா கண்ணுமுழிச்சு உன்னை தேடுனாக்கூட சொல்ல மாட்டாங்க என்றான் அவளை அதிர்ச்சியடையவைக்க.

ஆனால், ஜீவிதாவிடம் அதிர்ச்சி இல்லை. மாறாக பலத்த சிந்தனை இருந்தது. உன்னை சுற்றி இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இரு என கண்ணன் சொல்வது போல் ஒரு பிரமை அவளது காதில் ஒலித்தது.

முதலில் புகாரை திரும்ப பெறச்சொல் என்றான் ஆனந்த் கட்டளையாக, அப்போதுதான் உன் தந்தையை நீ பார்க்கவாவது முடியும்.

தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என திரும்பிப் பார்த்தவள் எதிரே, பவித்ரனின் கவலையான முகமும், ஆனந்தனின் பதட்டமான முகமும் இருந்தது.

இரண்டுமே தன் தந்தைக்காகத்தானே, இதில் யாரை சந்தேகிப்பது என அவளுக்கு புரியவில்லை.

இருவரும் நல்லவர்கள் என்றே தோன்றியது. இதில் முடிவெடுக்க முடியாமல் , அப்பா சிகிச்சைல தான இருக்காங்க, இருக்கட்டும். அவங்க அப்பாவைப் பார்க்க அனுமதிக்கவே மாட்டேன் என்று எதுவும் சொல்லவில்லையே, அப்படி சொன்னா அப்பறமா பாப்போம் என ஒத்திவைத்தாள்.

சரி. நீ சொல்றதும் சரிதான். நேரமாச்சு, நான் இருந்து மாமாவ பாத்துக்கிறேன். நீ அடம் பிடிக்காம வீட்டுக்குப் போயிட்டு காலையில் வா!! என்றான்.

இவன் இங்கே தங்குவதா, என மனதில் கணக்கிட்ட பவித்ரன், நீங்க வீட்டு மாப்பிள்ள ஆனந்த். நீங்க போங்க, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.

ஆனந்த் மனதில் நகைத்துக் கொண்டான். தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க தயாரானான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவிதா குளித்துவிட்டு , தன் அறையில் மாட்டப்பட்டிருந்த, தன் அன்னையின் புகைப்படத்தின் முன் நின்றாள்.

ஈரத்துண்டு தலையை சுற்றியிருக்க, மனம் தாங்காமல் மண்டியிட்டு அழுது கொண்டிருந்தாள்.

அம்மா, ஏம்மா என்னக் கொடுமைப்படுத்துற, இருப்பதிலே மிகப்பெரிய கஷ்டம், தன்னை சார்ந்தவர்கள் இறப்பை கண்ணால் காண்பது. முதல்ல அண்ணன எடுத்துக்கிட்ட, எனக்குன்னு இருக்குறது அப்பா மட்டும் தான். அவரை காப்பாத்தி குடுத்துவிடு மா என அழுதாள்.

பின்னிருந்து ஒருகரம் அவளை அணைக்க திடுக்கிட்டு திரும்பினாள் ஜீவிதா.

கண்ணன் அவளது கண்ணீரைத் துடைத்தான். ஏனோ அன்னை நினைவில் இருந்தவளுக்கு, அவனது சிறிய செய்கை பெருத்த ஆறுதலைத் தர, ஒரு நிமிடம் முழுதாக மௌனத்தில் கழித்தாள். பின்பு தான் இருக்கும் நிலை நினைவு வர, பட்டென அவன் கையை தட்டிவிட்டு, அறையின் பிரகாசமான விளக்கை ஒளிவித்தாள்.

அறை முழுவதும் வெளிச்சம் பரவியது. அவள் அறை அழகிய இளஞ்சிவப்பு நிறத்தில் திரைச்சீலை முதல், சுவர், கார்பெட் என அழகாக, சீராக, சுத்தமாக இருந்தது.

உன் அறை நன்றாக இருக்கிறது என்றான்.

அவனை புருவம் சுருக்கிப் பார்த்தவள். எதுக்கு?? இந்த நேரத்தில் இங்கே வந்தீங்க?? என்றாள்.

உன்னைக் காப்பாற்ற...

வீட்டில் வாட்ச்மேன், ஆயா எல்லாரும் இருக்கும் போது, நீங்க வந்து தான் என்னைக் காப்பாத்தனுமா???

இருக்கிறாங்க, ஆனால் அவங்களால உன்னை காப்பாற்ற முடியாது. ஏன் என்னாலும் முடியாது.

பிறகு எதற்காக வந்தீங்க??.

உன்னை எச்சரிக்க, உன்னால் மட்டுமே உன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றவன், பட்டென அவள் புறம் வந்து விளக்கை அணைத்தான்.

பழைய படி அறையில் மங்கிய வெளிச்சம் உண்டானது.

அவளை அலேக்காக தூக்கியவன், அவள் வாய் திறந்து சத்தமிடும் முன் அவளது வாயை தன் வாய் கொண்டு மூடினான். கைகால்களை உதறியவளை கட்டிலில் கிடத்தியவன், மனமே இல்லாமல் தனது வாயை தளர்த்தியவன், அவனது வாயை அடுத்து தன் கைகொண்டு மூடினான்.

அவனது கண்ணத்தில் இடியென இறக்கினாள் தனது வலக்கரத்தை ஜீவிதா.

அவன் கோபப்படுவதற்கு பதிலாக சிரித்தான். அவனது சிரிப்பில் அவளது கண்களில் அனல் கக்கியது.

அவனது குரல் இரகசியமாக மாறியது. இவ்வளவு பலமும் , கோபமும் உனக்கா..?? அதுதான் எனக்கு வேணும். இந்த நிலைமையில் உனக்கு அதுதான் கைகொடுக்கும். யார் உன்னைத் தொட்டாலும் இதே மாதிரி அடி!, யாரா இருந்தாலும் அடி!! என்றவன், ச்சூஊஊ சத்தம் போடாதே!! என இடக்கையை அவளது வாயிலிருந்து எடுத்தவன், மறுகையால் அவள் தலையில் கட்டியிருந்த ஈரத்துண்டை எடுத்துக்கொண்டு அலமாரியின் பக்கவாட்டில் மறைந்தான்.

என்ன இவன்!!இப்படி செய்கிறான்?? ஒன்றும் புரியவில்லை. கட்டிலிருந்து எழுந்து அவனை நோக்கி நடந்தாள்.

அதற்க்குள் கதவு தட்டும் ஒசை கேட்டது. இந்த நேரத்தில், யார்?? கடவுளே!! என்றவாறு கதவைத் திறந்தாள். எதிரே கவலையான முகத்துடன் ஆனந்த் நின்றிருந்தான்.

இவரா??? ஐயோ! உள்ளே அவன்!! கடவுளே, என நினைத்தவள் முகத்தில் பதட்டம் தெரிந்தது.

ஆனந்திற்கு ஜீவிதாவின் பதட்டம் குழப்பமளித்தது. இவள் அழுது கொண்டிருப்பாள். வருத்தத்தில் இருப்பாள், இவளை சமாதானப் படுத்தி தன்வசம் வரச்செய்துவிடலாம் என நினைத்தான்.

என்னங்க, இந்த நேரத்துல என வாசலை மறித்த வண்ணம் கேள்வி கேட்டாள்.

கண்ணனின் காது அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தது, மூக்கு ஜீவிதான் துண்டில் இருந்த அவளது கூந்தலின் வாசத்தை உள்ளிழுத்து, அவனது மனம் முழுவதும் நிரப்பியது.

எனக்கு தூக்கம் வரல, மாமாக்கு இப்படி ஆயிடுச்சேன்னு நினைச்சேன். நீவேற இன்னிக்கு ரொம்ப அழுதியா, எப்படியும் நீயும் கவலைலதான் இருப்ப, அதனால உனக்கு துணையா இருக்கலாம்னு வந்தேன் என்றான் ஆனந்த்.

ஜீவிதாவின் கவனம் ஆனந்தின் வார்த்தைகளில் இல்லை. மனம் திக்திக்கென, ஒளிந்திருப்பவனை நினைத்து அடித்துக்கொண்டது.

மெதுவாக ஜீவிதாவின் தோளில் ஆனந்த் கைபோட்டதும், உயர் இரத்த மின்சாரம் பாய்ந்தது போல் நிமிர்ந்தாள் ஜீவிதா.

வருத்தப்படாதே, மாமாக்கு ஒன்றும் ஆகாது என அவளது தோள்களில் கையை படறவிட்டான் ஆனந்த்.

ஜீவிதாவை அப்படியே உள்நோக்கி தள்ளிச் செல்ல முயன்றவனின் கையை பட்டென தட்டிவிட்டவள், என்ன நினைத்தாலோ, ஆனந்த் சுதாரிக்கும் முன் அவனை அறை விட்டாள்.

கண்ணனின் காதுகளுக்கு அந்த சத்தம் இனிமையாக கேட்டது.

ஜீவிதா... என்றான் இதை சற்றும் எதிர்பார்க்காத ஆனந்த்.

சாரி ஆனந்த் தூக்கத்துல, ஏதோ உங்க கை உருத்தின மாதிரி இருந்ததுல, சாரி என சமாளித்தாள் ஜீவிதா.

வாங்க காபி போட்டு தரேன் என , ஞாபகமாக அவளது அறையை பூட்டிவிட்டு முன்னறைக்கு அவனை கூட்டிவந்து சோபாவில் அமர்த்திவிட்டு சமையலறைக்குள் மறைந்தாள்.

ஸ்டோர் ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும், ஆயாவை எழுப்பி ஆனந்த் வந்திருப்பதாகவும், ஒரு காபிபோட்டுத் தா ஆயா என்றாள்.

ஆயாவிற்கு தூக்க கலக்கம், எப்போதும் ஆனந்த் வந்தால், நான் செய்கிறேன் என ஆர்வமாக செய்பவள், இன்று தன்னை அழைப்பதை, ஒரு வளர்ப்பு தாயாக அவர் சரியாக கணித்தார்.

இந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயத்தில் வந்திருக்கும் இளைஞனை நினைத்து பயப்படுகிறாள் என நினைத்தவர் தூக்கம் பறந்தது.

அவர் காபி போடும் போதும், அவள் அடுப்பறையை விட்டு நகரவில்லை. நான் எடுத்துட்டு போறேன் நீயும் வந்து உட்காரேன் என்றவாறு முன் நடந்தாள் ஜீவிதா.

ஜீவிதா ஆயாவோடு வருவது ஆனந்திற்கு எரிச்சல் மூட்டியது. தனது காரியம் நிறைவேறாமல் போனதில் கோபம் கொண்டான். வந்ததற்கு இரண்டொரு வார்த்தை ஆறுதல் கூறிவிட்டு, தள்ளி நின்றே பேசிவிட்டு கிளம்பினான்.

ஜீவிதா ஆயா நீ தூங்கு, நானும் தூங்குறேன் என தன் அறைக் கதவை பயந்தவாறு திறந்தாள்.

அறையை தாள் போட்டுவிட்டு, எப்படி வந்தயோ, அப்படியே போய்டு என கதவை இருக்கிப்பிடித்தவாறு பேசினாள்.

என்ன சத்தத்தையே காணோம், உன் பேர் என்னடா?? வெளிய வா!! என தனியாக பேசினாள்.

பின்பு அறையில் விளக்கை ஒளித்தவள், அவன் ஒளிந்திருந்த இடத்தை போய் பார்த்தாள். யாருமில்லை. பாத்ரூம், பால்கனி என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தாள், எங்குமில்லை.

எங்கே போனான்??? சே!! இவனுக்கு இதே வேலையாப்போச்சு என முணுமுணுத்தாள் ஜீவிதா.

பலியாவாளா?? பலகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பதாம் பகுதி..

டீரீம்ஸ் கடையில் முக்கியமான மின்தூக்கி பழுதுபட்டது. ராஜா உடனே நம்ம வாடிக்கையான நிறுவனத்தில் சொல்லி சரிபாருங்கள் என்றான்.

ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்க, ஒருவன் வந்தான். வலுக்கை தலையும் திருட்டு முழியுமாக

ராஜா, அவரை சந்தேகித்து, ஒரு புகைப்படம் எடுத்து, அவர்கள் நிறுவனத்திற்கு அனுப்பினான். இவன்தான் நீங்கள் அனுப்பிய டெக்னீசியனா?? என்ற கேள்வியுடன்.

உடனே பதில் இல்லை என வந்தது.

ராஜா அவனைப் பிடித்து, அறைக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டான். வந்தவனிடம், யார் அனுப்புனா?? சொல்லு, போலீச கூப்பிடவா?? என கேள்விகேட்டான்.

நடுத்தர வயதுக்காரனோ உடனே சட்டையில் மறைத்து வைத்திருந்த தூப்பாக்கியை கையிலெடுத்தான். அவனது குறி நேராக ராஜாவை குறிவைத்தது.

அறையில் அவனை கூட்டிவந்த ஆட்களும் பயந்து விலகினர். அங்க துப்பாக்கியை கண்டதும் சில நொடி நிசப்தமானது.

ராஜாவின் அறைக்கு ஏதோ வேலை விசயமாக ஒரு பெண்வந்து கதவைத்திறந்தாள்.

எல்லோரும் உறைந்து நிற்க, அவளைப் பிடித்துக்கொண்டு குறியை அவளுக்கு மாற்றினான் அந்த வலுக்கை தலை.

என்னை ஒழுங்காக போக விடு, என அவன் ரிகரை பின்புறம் இழுக்க, என்னானதோ, துப்பாக்கி மேல் நோக்கி வெடித்தது. வந்தவன் சுருண்டு கிடந்தான். அவனது துப்பாக்கியை பிடித்திருந்த கரம், இரத்தம் வலிந்து கொண்டிருந்தது.

துப்பாக்கி அவன் கையிலிருந்து எம்பி முன்னால் விழுந்தது.

அதை அவன் எடுக்கப் போகும் முன், அந்த பெண் அவன் மீது ஏறி அமர்ந்து, அவனது இரு கரத்தையும் பார்சல் செலோ டேப்பால் சுற்றிவிட்டு, வெற்றிகரமாக எழுந்தாள்.

அறையிலுள்ள ஆண்கள் அந்தப் பெண்ணை வியந்து பார்த்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் அவனை தாக்கிவிட்டு, எதுவும் நடவாதது போல், அவன் இழுத்ததில் சிதறிய காகிதங்களை அடுக்கி ராஜாமேஜையில் வைத்துவிட்டு நகரப்போனால்.

ஹே!! உனக்கு ஒன்னும் ஆகலயே என ராஜா அந்தப் பெண்ணிடம் கேட்க, இல்ல சார் உங்களுக்கு?? என்றாள் அவள்.

எனக்கு என்ன?? அதல்லாம் ஒன்னுமில்லை. எப்படி?? இவ்வளவு வேகமா அவன் கைய கிழிச்ச?? என்று வியந்து கேட்டான் ராஜா. அறையில் இருப்பவர்களுக்கும் அதே கேள்விதான்.

இங்கே இவன் துப்பாக்கி நீட்டியது, கேமரா அறையில் பார்த்துவிட்டு எனக்கு தகவல் கொடுத்தார்கள்.

சரியாக நானும் உங்கள் அறைக்குதான் வரப் போனேன். இவனை தாக்குவதற்கு தயாராக சிறு கத்தியுடன் தான் வந்தேன். இவன் நேரம், இவனே என்னைப் பற்றி தெரியாமல் என் பக்கத்தில் வந்தான். நான் கராத்தே பெஸ்ட் ஸ்டூடெண்ட் என்றாள்.

அதற்குள் அவன் கைகால்களை நாற்காலியுடன் கட்டியிருந்தார்கள் .

துப்பாக்கி காரனிடம் வந்தவள், அவசரமாக உன்னை தாக்க கத்தியுடன் வந்தேனா, அது துருபிடித்த கத்தி, சாரி!! போலீஸ் வந்ததும் முதல்ல டாக்டர்ட போய் ஊசி போட்டுடு, இல்லனா செப்டிக் ஆயிடும் பாத்துக்க! என்றவள். ரஞ்சனி மேடத்துக்கு பலம் சேர்க்க இங்க நிறையா தூண் இருக்கு, நொடில உன்ன முடிச்சுடுவோம், அவங்க வேண்டாம் சொன்னதால நீ பிழச்ச, என்றவள் ராஜாவைப் பார்த்து, துப்பாக்கிய போலீஸ்ல குடுத்துடாதீங்க, எதுக்கும் உங்க, பாதுகாப்புக்கு எடுத்து வச்சுக்கோங்க என்றாள் கேலியாக, அறையில் அனைவரும் லேசாக சிரித்தனர்.

நான் என் சீட்டுக்கு போறேன் சார். அது இந்த மாச, பில் ரிப்போட் என அவனது டேபிளில் அவள் வைத்த காகிதத்தை சுட்டி காட்டிவிட்டு, வெளியேறினாள்.

ராஜாவிற்கு புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது. ஆனால் புயல் இன்னும் ஓயவில்லை என அடுத்தடுத்த காரியங்கள் காட்டின.

அதே மின்தூக்கியை பழுது பார்க்க அடுத்த பத்தாவது நிமிடத்தில் மற்றொருவன் வந்தான். வந்ததும் தனது அடையாள அட்டையை ராஜாவிடம் நீட்டினான் அந்த இளைஞன்.

பின்பு ஒரு மணிநேரம் பழுது பார்த்துவிட்டு, கிளம்பினான்.

அவன் வாயிலை அடையும் முன் செக்யூரிட்டி அவனை அழைத்து , உள்ளே அழைப்பதாக கூறினார்.

அவனோ அவரை கண்டும் காணமல் பேசியை காதில் வைத்த வண்ணம் நகரப் பார்த்தான்.

அடுத்ததாக அவனை பிடித்து, ராஜாவின் அறைக்கு அழைத்து வந்தனர்.

என்ன சார் இது?? உங்க வேலைதான் முடுஞ்சதே, என்ன எதுக்காக கூட்டீட்டு வந்தீங்க என சீறினான் அவன்.

சரியாயிடுச்சுனு நீங்க ஒருமுறை ஓட்டிக் காட்டுங்க, என்றான் ராஜா.

ஓ.. அவ்வளவு தானா! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, சரி சீக்கிரம் வாங்க ஓட்டிக்காட்டீட்டு நான் கிளம்பனும் என அவசரப்பட்டான்.

அவன் மின் தூக்கியில் ஏற வர, ஏற்கனவே பல முட்டைகள் அதில் ஏறியிருந்தது.

அதை பார்த்து அவன் தயங்கி நின்றான்.

என்ன நின்னுட்ட, ஓட்டிக்காட்டீட்டு போ, இது எட்டாவது மாடிக்கு போக வேண்டிய பார்சல், இதையும் சேர்த்து எடுத்துட்டு போய் சேர்த்துவிடு என்றான் ராஜா கூலாக,

வந்தவனோ, மின்தூக்கியில் ஏறவே இல்லை. இவ்வளவு எடையை மின்தூக்கி தாங்காது என்றான்.

இது இருவது போர் உபயோகிக்கும் மின்தூக்கி, அப்படி கணக்கிட்டால், ஆயிரம் கிலோவிற்குமேல் தாங்கும். இது வெறும் ஆயிரம் கிலோ தான் என்றான் ராஜா.

அந்த இளைஞன் முகம் வெளுத்தது. பின்னோக்கி நகர்ந்தான்.

என்னப்பா, உனக்கு நேரமாகுமே, சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு கிளம்பு என அவனை முன்னோக்கி தள்ளினான் ராஜா.

இல்ல சார் எட்டாவது மாடிக்கு போய் பார்சலை இறக்கி வருவதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் , நான் கிளம்புறேன் படபடத்தவாறு நகர்ந்தான்.

ராஜா பட்டென அவனது சட்டைப் பையிலிருந்து செல்லை எடுத்தான்.

என்ன சார் இது?? என்னோட செல்லை எதுக்கு எடுக்குறீங்க ?? என எகிறினான் அவன்.

அந்த நேரம் பார்த்து , செல் போன் ஒலித்தது. ராஜா அதை ஸ்பீக்கரில் போட, மறுமுனையில் இருந்தவனும் படபடத்தான்.

என்னடா, வேலை ஆச்சா?? இல்லியா?? சீக்கிரம் இடத்தை காலிபண்ணு, நீ இருக்கும் போதே யாராவது லிப்ட்ல ஏறி, அது அறுந்தா, உன்ன விடமாட்டங்க மாப்பிள்ள, அங்க இருக்குற ராஜா ரொம்ப மோசமானவன் டா என்றான்.

அதுக் கேட்ட ராஜாவும் ஊழியர்களும் அவனை சூழ்ந்தனர். வந்த இளைஞன் வெடவெடத்து நின்றான்.

எனக்கு இது உடனே சரியாகணும், இதே பார்சலோட எனக்கு ஓட்டிக் காட்டீட்டு போ, இல்ல , போன்ல சொன்னானே மோசமானவன்னு, அந்த ராஜா நான்தான், அத நீ பாக்கணுமா என்றான் ராஜா.

இல்ல சார். நானே சரி பண்றேன் என மண்டியிட்டான் அந்த இளைஞன். அந்த நேரத்தில் அவனுக்கு வேறுவழியும் இருக்கவில்லை.

ராஜா நடந்ததை ரஞ்சனிக்கு போனில் தெரிவித்தான்.

ரஞ்சனிக்கு அதிர்ச்சி இல்லை. அவள் கதை கேட்பதைப் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

என்ன மேடம் ஸ்சாக்கா இல்லையா என்றான் ராஜா.

இல்லை. ஏன்னா இந்த செய்தியை தேவி இப்பத்தான் சொன்னா. தேவி சொல்லும் போதும் எனக்கு அதிர்ச்சி இல்லை. ஏன்னா இது ரொம்பவே சாதாரணம்.

இதைவிட பெரிதாகவும் நடக்கலாம், பாத்து இருங்க, என்றாள் ரஞ்சனி.

சரி மேடம், தேவி யாரு?? என்றான் ராஜா மெதுவாக.

தெரியாதா?? கராத்தே பொண்ணு. அவதான் என்ற ரஞ்சனி, கடையின் சில நிலவரங்களை கேட்டறிந்து கொண்டாள்.

வந்த இருவரையும் போலீசில் ஒப்படைத்து விட்டதாக ராஜா சொன்னான்.

ராஜாவை பாராட்டிவிட்டு , இன்னும் விழிப்புடன் இருங்கள் என்று கூறிவிட்டு, பேச்சை முடித்தாள் ரஞ்சனி.
 
Top