AnanyaDev
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்..
நான் அக்ஸரா தேவ்.. உங்கள் ஆதரவோடு ஒரு கதை எழுதலாம்னு வந்திருக்கேன்.. நிறையோ குறையோ வெளிப்படையா சொல்லிட்டீங்கன்னா இந்த குழந்த பிள்ளைக்கு அடுத்த லெவலுக்கு போக ரொம்ப உதவியா இருக்கும்.. கேட்ட உடனே த்ரெட் ஓபன் பண்ணி தந்த ஶ்ரீ மேம்க்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..
கதையின் பெயர் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
நாயகன் : சூர்யா
நாயகி : அனு மித்ரா
காதலை மட்டுமே மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்கள் சிலரின் சூழ்ச்சியால் பிரியும் நிலை வந்தால்?? அவர்களின் காதல் அவர்களை மீண்டும் சேர்க்குமா??
வாரத்திற்கு இருமுறை அப்டேட் தரேன்.. புதன்கிழமை முதல் அத்தியாயம் தரேன்.
இப்போ சின்னதா ஒரு டீசர் :
"நீ ஏன்டா என்னை விட்டுட்டு போன? நீ இல்லாத ஒவ்வொரு நிமிடமும் நரகமா இருக்குது.. என்னை பத்தி நினைக்கல சரி நம்ம பாப்பாவை பத்தியும் நினைக்க தோணலையா? நாங்க ரெண்டு பேரும் உனக்கு வேண்டாதவங்க ஆகிட்டோம்ல.. ஏன் இப்படி பண்ணுன? உன்னை உயிருக்கு உயிரா காதலிச்சதுக்கு நீ தந்த பரிசு இதுதானா? நீ இல்லாத என் வாழ்க்கை வெறுமைன்னு தெரிஞ்சும் எப்படிடா உன்னால என்னை விட்டுட்டு போக முடிந்தது? சொல்லு" என்று அவன் நெஞ்சில் அடித்து கதறி அழுதாள் அவள் அனு மித்ரா..
அவளின் மேல் அளவுக்கடந்த காதல் இருந்தும் அதை வெளியே சொல்ல முடியாத அதுவும் தன் மகவை சுமக்கும் இந்த நேரத்தில் அவளை அழ வைத்ததற்காக தன்னையே வெறுத்தவன் கண்களில் வழியும் கண்ணீரை அவளுக்கு காட்டாமல் இருக்க திரும்பி நின்றான் அவள் கணவன் சூர்யா.. அவளின் ஸ்ரீ..
"இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு கல்யாணம்.. இந்த நேரத்தில் இப்படி பேசுறது உனக்கு சரியாக படுதா அனு?" அவன் குரலில் கடுமையை கொண்டு வர நினைத்தாலும் முடியவில்லை..
"என்ன சொன்ன? அனுவா ? உன் மீராவை உன் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டியா? நான் உயிரோடு இருக்கும் போது உனக்கு இன்னொரு கல்யாணமா? அத நான் செத்ததுக்கு அப்புறம் நடத்து"...
அவள் பேசிக் கொண்டே செல்ல எல்லாவற்றையும் கேட்டவன் கடைசி வார்த்தையில் "ஏய்" என்று அடிக்க கை ஓங்கி விட்டான்.. அவள் கண்களில் மிரட்சியை கண்டவுடன் அவளை இழுத்து அணைத்து கொண்டான்..
அவன் தேகம் நடுங்கியது.. என்ன வார்த்தை சொல்லி விட்டாள்? அவள் இல்லாத ஒரு வாழ்வா? அவள் காதலை அணு அணுவாய் ரசித்து அனுபவித்தவன் ஆயிற்றே.. கவிதாவை திருமணம் செய்தாலும் அவனால் அவளுடன் ஒன்றி வாழ முடியாது.. ஆனால் அவன் மீராவை பிரிந்தே ஆக வேண்டும்.. அவன் குழந்தையை பிரிய வேண்டும்.. அவர்களுக்கு எமனே மீராவின் தந்தை தானே.. அவரிடம் இருந்து அவர்களை காப்பாற்ற வழி பிரிவு மட்டுமே..
"இங்க பார் அனு.. உன் கஷ்டம் எனக்கு புரியாமல் இல்லை.. ஆனால் நாம பிரிஞ்சே ஆகணும்.. நீ நம்ம குழந்தையை நல்ல படியாக வளர்க்கணும். அவன் அப்பா செத்து போய்ட்டான்னு சொல்லு" என்றவன் அவளை திரும்பியும் பார்க்காமல் நடந்தான்.. நாளை அவர்களின் விவாகரத்து.. மனம் கனக்க கண்களில் கண்ணீரோடு நடந்தான்..
அவன் சொன்ன வார்த்தைகளின் வீரியம் புரிந்த மீரா கத்தினாள்.. " இன்னும் அந்த ஒரே வாரத்தில் உன்னை நான் கல்யாணம் பண்ணி காட்டுறேன்.. அப்படி பண்ணலைனா நான் மிசஸ். சூர்யா இல்லை.. ஒரு வேளை நான் தோற்று போனால் அடுத்த நொடி உயிருடன் இருக்க மாட்டேன்" என்று கத்தியவள் தன் ஆறு மாத மேடிட்ட வயிற்றை தடவியவாறு நடந்து சென்றாள் ..
அவள் சொன்னதை கேட்ட சூர்யாவின் உதடுகள் சிரித்தன..
நான் அக்ஸரா தேவ்.. உங்கள் ஆதரவோடு ஒரு கதை எழுதலாம்னு வந்திருக்கேன்.. நிறையோ குறையோ வெளிப்படையா சொல்லிட்டீங்கன்னா இந்த குழந்த பிள்ளைக்கு அடுத்த லெவலுக்கு போக ரொம்ப உதவியா இருக்கும்.. கேட்ட உடனே த்ரெட் ஓபன் பண்ணி தந்த ஶ்ரீ மேம்க்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..
கதையின் பெயர் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
நாயகன் : சூர்யா
நாயகி : அனு மித்ரா
காதலை மட்டுமே மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்கள் சிலரின் சூழ்ச்சியால் பிரியும் நிலை வந்தால்?? அவர்களின் காதல் அவர்களை மீண்டும் சேர்க்குமா??
வாரத்திற்கு இருமுறை அப்டேட் தரேன்.. புதன்கிழமை முதல் அத்தியாயம் தரேன்.
இப்போ சின்னதா ஒரு டீசர் :
"நீ ஏன்டா என்னை விட்டுட்டு போன? நீ இல்லாத ஒவ்வொரு நிமிடமும் நரகமா இருக்குது.. என்னை பத்தி நினைக்கல சரி நம்ம பாப்பாவை பத்தியும் நினைக்க தோணலையா? நாங்க ரெண்டு பேரும் உனக்கு வேண்டாதவங்க ஆகிட்டோம்ல.. ஏன் இப்படி பண்ணுன? உன்னை உயிருக்கு உயிரா காதலிச்சதுக்கு நீ தந்த பரிசு இதுதானா? நீ இல்லாத என் வாழ்க்கை வெறுமைன்னு தெரிஞ்சும் எப்படிடா உன்னால என்னை விட்டுட்டு போக முடிந்தது? சொல்லு" என்று அவன் நெஞ்சில் அடித்து கதறி அழுதாள் அவள் அனு மித்ரா..
அவளின் மேல் அளவுக்கடந்த காதல் இருந்தும் அதை வெளியே சொல்ல முடியாத அதுவும் தன் மகவை சுமக்கும் இந்த நேரத்தில் அவளை அழ வைத்ததற்காக தன்னையே வெறுத்தவன் கண்களில் வழியும் கண்ணீரை அவளுக்கு காட்டாமல் இருக்க திரும்பி நின்றான் அவள் கணவன் சூர்யா.. அவளின் ஸ்ரீ..
"இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு கல்யாணம்.. இந்த நேரத்தில் இப்படி பேசுறது உனக்கு சரியாக படுதா அனு?" அவன் குரலில் கடுமையை கொண்டு வர நினைத்தாலும் முடியவில்லை..
"என்ன சொன்ன? அனுவா ? உன் மீராவை உன் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டியா? நான் உயிரோடு இருக்கும் போது உனக்கு இன்னொரு கல்யாணமா? அத நான் செத்ததுக்கு அப்புறம் நடத்து"...
அவள் பேசிக் கொண்டே செல்ல எல்லாவற்றையும் கேட்டவன் கடைசி வார்த்தையில் "ஏய்" என்று அடிக்க கை ஓங்கி விட்டான்.. அவள் கண்களில் மிரட்சியை கண்டவுடன் அவளை இழுத்து அணைத்து கொண்டான்..
அவன் தேகம் நடுங்கியது.. என்ன வார்த்தை சொல்லி விட்டாள்? அவள் இல்லாத ஒரு வாழ்வா? அவள் காதலை அணு அணுவாய் ரசித்து அனுபவித்தவன் ஆயிற்றே.. கவிதாவை திருமணம் செய்தாலும் அவனால் அவளுடன் ஒன்றி வாழ முடியாது.. ஆனால் அவன் மீராவை பிரிந்தே ஆக வேண்டும்.. அவன் குழந்தையை பிரிய வேண்டும்.. அவர்களுக்கு எமனே மீராவின் தந்தை தானே.. அவரிடம் இருந்து அவர்களை காப்பாற்ற வழி பிரிவு மட்டுமே..
"இங்க பார் அனு.. உன் கஷ்டம் எனக்கு புரியாமல் இல்லை.. ஆனால் நாம பிரிஞ்சே ஆகணும்.. நீ நம்ம குழந்தையை நல்ல படியாக வளர்க்கணும். அவன் அப்பா செத்து போய்ட்டான்னு சொல்லு" என்றவன் அவளை திரும்பியும் பார்க்காமல் நடந்தான்.. நாளை அவர்களின் விவாகரத்து.. மனம் கனக்க கண்களில் கண்ணீரோடு நடந்தான்..
அவன் சொன்ன வார்த்தைகளின் வீரியம் புரிந்த மீரா கத்தினாள்.. " இன்னும் அந்த ஒரே வாரத்தில் உன்னை நான் கல்யாணம் பண்ணி காட்டுறேன்.. அப்படி பண்ணலைனா நான் மிசஸ். சூர்யா இல்லை.. ஒரு வேளை நான் தோற்று போனால் அடுத்த நொடி உயிருடன் இருக்க மாட்டேன்" என்று கத்தியவள் தன் ஆறு மாத மேடிட்ட வயிற்றை தடவியவாறு நடந்து சென்றாள் ..
அவள் சொன்னதை கேட்ட சூர்யாவின் உதடுகள் சிரித்தன..
Last edited by a moderator: