சாஹித்யா வருண்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி - 7
நிலாவின் கண்ணீர் அவளின் கன்னத்து மேன்மையை நனைத்து கொண்டு வழிந்தோட, ஏதோ யோசனையாய் அமர்ந்தவளை கலைத்தது கதவு தட்டப்படும் சத்தம்..
கண்ணை அழுத்த துடைத்து கொண்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு கதவை திறக்க, கையில் தட்டுடன் பகலன் தான் நின்றிருந்தான்..
அவனை அப்படி பார்த்ததும் அவளுக்குரிய குறும்பு தலை தூக்க, "என்ன பகலன் சார் பார்ட் டைம் ஜாப் பார்க்கறீங்களா?? வீட்டுக்குள்ளயே தட்டை கைல வெச்சுட்டு சுத்துனா எப்படி காசு கிடைக்கும்.. நேரா வெளில போய் அங்கிருந்த முக்குல இருக்கற கோவில் கிட்ட நின்னா நல்லா கலெக்சன் ஆகும்" என்று கேலியாய் கூறியவளை முறைத்தே பஸ்பமாக்கி விடுபவன் போன்று முறைத்திருந்தான் பகலன்..
"உனக்கு போய் சாப்பாடு கொண்டு வந்தேன் பாரு ச்சீ போடி" என்று அவளை மீண்டும் ஒரு முறை முறைத்து விட்டு நகர போனவனின் கையை பிடித்தவள் "ரொம்பதான்டா.." என்று இழுத்து கொண்டு உள்ளே சென்றாள்..
உள்ளே சென்றவன் அவளிடம் தட்டை நீட்ட, அவளோ மறுத்து தலையசைத்து ஊட்டி விடு என்பது போல் வாயை திறக்க, அவள் தலையில் செல்லமாக கொட்டிய பகலன் சாப்பாட்டை வாயில் திணித்தான்..
"மெதுவாடா.. பாப்பாக்கு விக்கிக்க போகுது அப்பறம் என் அத்தை வந்து உன்னைய திட்டியே காதுல இருந்து ரத்தத்தை வர வெச்சிருவாங்க" என்று ஐந்து வயது குழந்தை போன்று முகத்தை வைத்து கொண்டு சொன்னவளை பார்த்து, "அடிப்பாவி அடிக்கடி எப்படிடி முகத்தை மாத்தறே??" என்று வாயை பிளந்தான்..
சாப்பாட்டை பிசைந்தபடி "ஏன் அழுதுருக்கே நிலா??" என்று அவளை பாராமலே பகலன் கேட்க, "நான் எதுக்குடா அழுக போறேன்" என்று அவனை சமாளிக்க முயன்றவளை நிமிர்ந்து கூர்மையாக நோக்கிய பகலனின் பார்வையில் "உன்னை நான் அறிவேன்" என்றிருக்க, நிலாவோ எதுவும் பேசாமல் சுவரை வெறித்து பார்த்தாள்..
"வேந்தனுக்கு உன்னைய பிடிக்கலனு அழுகறீயா??" என்று நேரடியாகவே பகலன் கேட்டு விட, அவனை விழி விரித்து நிலா பார்க்க, "எனக்கு முதல்லயே சந்தேகம் இருந்துச்சு இப்ப க்ளியர் ஆகிருச்சு.. என் நிலாவை யாருக்காவது பிடிக்காம இருக்குமா?? நீ திடீர்னு சொன்ன நாளா கூட அவன் அதிர்ச்சி ஆகிருக்கலாம்.. இல்ல மாமாவை நினைச்சு பேசிருக்கலாம்.. காதலை சொன்னதுமே ஏத்துக்கனும்னு ஏன்டி நினைக்கறீங்க?? எங்களுக்கும் நேரம் வேணுமல்ல?? அவனை நீ உண்மையா காதலிக்கறேனா அவனை சம்மதிக்க வைக்கறது என் சாமத்தியம் தான்.. அதையை விட்டுட்டு இப்படி ஒப்பாரி வெச்சுட்டு இருந்தா எல்லாம் சரியாகிருமா??" என்று பொரிந்தும் இன்னும் ஏதோ யோசனையில் இருந்தாள் நிலா..
"ப்ச் இன்னும் என்னத்தடி யோசிச்சுட்டு இருக்கே?!" என்று அலுத்து கொண்டு கேட்டவனை பார்த்து, "உனக்கு எப்படிடா இவ்ளோ அறிவு வந்துச்சுனு தான்.. உன் காதலே டப்பா டேன்ஸ் ஆடிட்டு இருக்கறது தெரியாம என் காதலுக்கு நீ அட்வைஸ் சொல்ற பாரு.. அதையை தான்டா என்னால ஏத்துக்க முடில.. லேசா நெஞ்சு வேற வலிக்கற மாதிரி இருக்கு" என்று இச் கொட்டி சொன்னவளை பார்த்து ஏகபோக கடுப்பான பகலன் "ம்ம்ம்ம்க்கும் உன் கூட இருந்தும் என் லவ் செட்டாகும்னு இன்னுமா நீ நம்பிட்டு இருக்கே?? முதல்ல உன்னைய கலட்டி விட்டா தான் என் காதல் சக்ஸஸ் ஆகும்" என்றான் சலிப்புடன்..
"என்ன மாமா பொசுக்குனு இப்படி சொல்லிப்புட்டே?? என் காதலுக்கு நீ உதவி செஞ்சு என் கல்யாணத்தை முன்னால நின்னு நடத்தி.. வருச வருசம் ஒரு குழந்தையை நாங்க பெத்து தந்தா நீ அதையை எல்லாம் வளர்த்தி.. உனக்கு இன்னும் எவ்ளோ கடமை இருக்கு.. அதை எல்லாம் செய்யாம என்னைய இப்பவே கலட்டி விடறேனு சொல்றே??" என்று வராத கண்ணீரை துடைத்து விட்டவாறு நிலா சொல்ல, "ஆத்தி இவ சொல்றதை பார்த்தா அப்ப சம்பளமில்லாத ஆயா வேலை பார்க்க சொல்லுவா போல.. ஒரு வேளை அப்படியோ???" என்று யோசித்தவனின் மூளை எதிர்காலத்திற்கு சென்று விட்டது..
பத்து குழந்தைகளுக்கு நடுவில் பகலன் அமர்ந்திருக்க, முதலில் ஒரு குழந்தை "பெப்பு நேக்கு பசிகுது:" என்று அழுக ஆரம்பிக்க, அவனோ குழந்தையை சமாதானப்படுத்தி சாப்பாடு எடுத்து வருவதற்குள் மூன்று குழந்தைகள் போட்டிருந்த டவுசரை கலட்டியபடி நின்றிருக்க, இவனை பார்த்ததும், "பெரிப்பா எங்களுக்கு ஆய் கழுவி விடுங்க" என்று சொல்ல, பகலனுக்கு மயக்கமே வந்து விட்டது..
இன்னொரு குழந்தையோ ஏதோ கடிச்சுருச்சுனு கை காலை உதறி உருண்டு பிரண்டு அழுக தொடங்க, வேந்தனை போன்று இருந்த ஒரு குழந்தை பகலனை முறைத்து, "என் பாப்பாவை பார்த்துக்க கூட உங்களுக்கு என்ன???" என்று வயிற்றில் ஓங்கி குத்த, "அடியேய் நிலா குழந்தையை பெக்க சொன்னா பிசாசுகளை பெத்து வெச்சுருக்கே?? வந்து இதுகளை பாருடி" என்று கதறாத குறையாக கத்த," என் அம்மாவை ஏதாவது சொன்னீங்க??" என்று அவனை கீழே தள்ளி அவன் மீது அமர்ந்து கொண்டு அடிக்க தொடங்க, "அய்யய்யோ கொலை கொலை" என்று கதற தொடங்க, "அடேய்" என்று நிலா அவனை உலுக்கியதும் தான் தன்னிலைக்கு வந்த பகலன் அவளை பே வென்று பார்த்தான்..
"என்னடா இப்படி முழிக்கற???" என்று அவனை சந்தேகமாக நிலா பார்த்து வைக்க, "இப்ப நம்ம சொன்னோம் கலாய்ச்சே ஒரு வழியாக்கிருவா.. சோ கெத்தை மெய்ண்ட்டன் பண்ணுடா பகலு" என்று நினைத்து கொண்டு "அது எல்லாம் ஒன்னுமில்ல.. முதல்ல அவங்களைய பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுடி அதுக்கு அப்பறம் அவனை சம்மதிக்க வைக்கலாம்" என்றிட, "எனக்கு அது எல்லாம் தேவையில்லடா" என்றாள் உதட்டை குவித்தபடி..
"அப்படியே ஒரு அப்பு அப்புனா வெய்யு அவ்ளோ தான்.. லூசாடி நீ?? லூசானு கேட்கறேன்.. அவனை பத்தி ஏதும் தெரியாம கல்யாணம் பண்ண போறீயா?? ஒரு வேளை முன்னாடியே அவன் மனசுல ஒரு பொண்ணு இருந்தா???" என்று பகலனால் கூட அதை நினைத்து பார்க்க முடியாமல் தடுமாற, "அப்படி இருக்கறது தெரிஞ்சுச்சுனா அது தான் என்னோட கடைசி நாளா இருக்கும்" என்றாள் வெறித்து கொண்டே..
பகலன் பதறிபோக, "ஹேலூசு அப்படி எல்லாம் இருக்காது" என்றிட, "இந்த சிடுமூஞ்சி யாரை பார்த்து முறைச்சாலும் அவங்க நிற்காம பத்து கிலோ மீட்டருக்கு மேல ஓடிவாங்க இவனாவது லவ் பண்றதாவது?? ஏன்டா நீ காமெடி பண்ணிட்டு???" என்று பகலன் சொன்னது போன்று இருக்காது என தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொள்வது போன்று அவனிடம் சொல்ல, அவளை குழப்ப வேண்டாம் என்று நினைத்து பகலனும் அதோடு விட்டு விட்டான்..
எழுந்ததும் வேந்தனை எதிர்பார்த்து நிலா காத்திருக்க, அவனோ அவள் கண்ணில் படாமல் இருந்தான்.. "பார்த்துக்கறேன்டா" என்று அவனை கருவி கொண்டே பகலனோடு கிளம்பியும் விட்டாள்..
அவள் சென்றதுமே உள்ளே வந்த வேந்தனை அழைத்த ராசு, வனிதாவை கோவிலுக்கு அழைத்து செல்ல சொல்ல, வேந்தனும் சென்று காரை எடுத்தான்.. கோவில் வந்ததும் வனிதா உள்ளே செல்ல, வேந்தன் வெளியிலேயே நின்று கொண்டான்..
அவனை தாண்டி ரவுடி போல் இருந்த நால்வர் உள்ளே செல்ல, ஏதோ தவறு என்று தோன்றியதும் வனிதாவை தேடி கொண்டு இவனும் உள்ளே சென்றான்.. ஒவ்வொரு இடமாக வேந்தன் தேட தொடங்க, வனிதா தான் அவன் கண்களுக்கு அகப்படவில்லை.. சிறிது பயத்துடன் வேகமாக கோவிலை சுற்றி கொண்டே தேடியவனின் கண்ணில் தூரத்தில் வனிதா நிற்பது தெரிந்து விட நிம்மதியுடன் அவளிடம் சென்றான்..
பின்னால் இருந்து வனிதாவை ஒருவன் அடிக்க வர, வேகமாக வந்த வேந்தன் வனிதாவை தள்ளி விட்டு இரும்பு கம்பியால் அடித்த அடியை இவன் கையில் வாங்கி கொண்டு அடித்தவனை ஒரு உதை விட்டான்..
முறுக்கேறிய கையாக இருந்தாலும் சுள்ளென்று வலி எடுக்க தொடங்க, வனிதாவிற்கு தெரியாமல் வலியை கட்டுபடுத்த கையை உதறினான்..
"அய்யோ கண்ணா" என்று வனிதா பதறி அழுது விட, "எனக்கு எதுவுமில்ல மேடம்... உங்களுக்கு ஒன்னுமில்ல தானே??" என்று கனிவுடன் கேட்டவனிடம் வார்த்தை வராமல் இல்லையென்று தலையசைத்தாள்..
கண்ணில் ரவுத்திரத்துடன் திரும்பிய வேந்தன் அந்த ரவுடியை பார்க்க, அவன் பார்வையிலேயே வெலவெலத்து போன அவன் கம்பியை கீழே போட்டுவிட்டு நிற்காமல் ஓடியும் விட்டான்.. கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாததால் இதை யாரும் கவனிக்கவும் இல்லை..
வேந்தனை பார்த்து பதறிய வனிதா, "கண்ணா ரொம்ப வலிக்குதா?? நம்ம வேணா ஹாஸ்பிட்டல் போலாமா?? நா வாங்க வேண்டிய அடியை நீ எதுக்கு கண்ணா வாங்குனே??" என்று கண்ணீருடன் கேட்ட வனிதாவை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன் "என் கண்ணு முன்னாலேயே என் அம்மா மாதிரி இருக்கற உங்களைய அடி வாங்க விட்டுருவானா??" என்று கேட்டான் பரிவுடன்..
அவனின் பதிலில் மகிழ்ந்த வனிதா, "ஆனா என்னால நீ அடி வாங்கிட்டியே??" என்று ஆதங்கம் தாளாமல் கேட்டவரிடம், "எனக்கு அந்த அடி சாதாரண கொசுகடி மாதிரி தான் மேடம்.. நீங்க மட்டும் அந்த அடியை வாங்கிருந்தீங்க இன்னேரம் ரத்தம் வெள்ளமே ஓடிருக்கும்" என்றான் கேலியாய்..
தன்னை சமன்படுத்த முயல்வதை உணர்ந்த வனிதா, "அப்ப எனக்கும் இனி ஜிம் டிரைனிங் குடு கண்ணா.. இந்த மனுசன் கிட்ட இருந்துட்டு உயிர் வாழனும்னு ஆசைப்பட்டா இது ஒன்னுதான் வழி.." என்று பாவமாக சொல்ல, அவர் கூற்றில் வேந்தனோ வாய்விட்டு சிரித்து விட்டான்..
அவனின் சிரிப்பை அன்புடன் பார்த்த வனிதா, முகத்தை மாற்றி கொண்டு, "என்னைய பார்த்தா சிரிப்பா இருக்குல்ல??" என்று கேட்க, இல்ல "இல்ல மேடம் உங்களைய நினைச்சா பெருமையா இருக்கு" என்றான் சிரிப்பை அடக்கியபடி..
"என்னைய தனியா விட்டராத கண்ணா.. அப்பறம் நான் முழுசா வீட்டுக்கு போக முடியாது போல.. அப்படியே என் பின்னாடி வந்து என் உயிரை காப்பாத்தி குடு.." என்று கிண்டலாக கூறிவிட்டு முன்னால் நடக்க, "இப்பதான் புரியுது அந்த லூசு பேசற பேச்சு எல்லாம் எங்கிருந்து வந்துருக்கும்னு" என்று நினைத்தபடி இவனும் வனிதாவின் பின்னே சென்றான்..
கோவிலை சுற்றி விட்டு இருவரும் வந்தமர, சரியாக வனிதாவின் போனும் அடித்தது.. எடுத்து பார்த்தவள் முகத்தை சுழித்தபடி காதில் வைத்தவர் "ம்ம்ம்ம்" என்று மட்டும் சொல்ல, அந்த புறம் என்ன கேட்டதோ இவர் கடுப்புடன் பதிலேதும் சொல்லாமல் கட் செய்து விட, ஒன்னும் புரியாமல் வேந்தன் அவரை பார்த்திருந்தான்..
அவனை பார்த்தவர் பெருமூச்சுடன், "என் அண்ணன்தான்.. ஊர் வம்பு, உலக வம்புனு எல்லாத்தையும் வாங்கிட்டு வருவாரு.. ஆனா அதுனால எங்களுக்கு என்ன ஆகும்னு கூட யோசிக்கறது இல்ல.. இப்ப நடந்தது அவரு காதுக்கு போய்ருச்சு போல அதான் ஒன்னுமில்லயானு கேட்க போன் பண்ணிருக்காரு எனக்கு வர்ற கோவத்துக்கு கேவலமா திட்டிருவேனு தான் கட் பண்ணிட்டேன்.. போன ஜென்மத்துல நான் பண்ணுன பாவமோ என்னவோ இந்த மனுசனுக்கு தங்கச்சியா பிறந்து தொலைஞ்சுட்டேன்" என்று விரக்தியாய் சொன்னவரின் குரலில் வலிகள் இருப்பது இவனுக்கும் உரைத்திட, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் அமர்ந்திருந்தான்..
இந்த முறை வேந்தனின் போன் அடிக்க, எடுத்து பார்த்தவன் வனிதாவை ஒருமுறை பார்க்க, "என்ன அந்த மனுசனா?? வந்து தொலையறோம்னு சொல்லு" என்று கடுப்புடன் சொன்ன வனிதாவை நினைத்து மெலிதாய் புன்னகைத்து கொண்டவன், "அப்ப போலாம் மேடம்" என்றான் சின்ன சிரிப்புடன்..
காருண்யாவை விட சென்றவர்களை அவளின் பெற்றோர்கள் பிடித்து கொண்டு பாயாசம் குடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, "அட என்னமா முதல்லயே பாயாசம் இருக்கும்னு சொல்லிருந்தா நீங்க கூப்பிடாமயே நான் உள்ளே போய்ருப்பேனே??" என்று விட்டு முதல் ஆளாக நிலா உள்ளே ஓடி விட, " அடியேய் தினமும் பஞ்சாயத்தை கூட்டறதையே வேலையா வெச்சிருக்கே போல?? அந்த மனுசன் என்ன கத்து கத்த போறாரோ??!" என்று புலம்பி கொண்டே இவனும் உள்ளே சென்றான்..
ரன்யாவை ஒரு கண்ணால் சைட் அடித்து கொண்டே பகலன் பாயாசம் குடித்திருக்க, அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவள் தடுமாறி கொண்டிருந்தாள்.. "இப்ப எல்லாம் இவன் எனக்கு புதுசா தெரியறானே?? ஒரு வேளை நானும் காதலிக்க தொடங்கிட்டனோ??" என்று நினைத்தபோதே அவளின் கன்னங்கள் செழுமை பூசியது போன்று சிவந்து போனது..
நேரங்காலம் தெரியாமல் நிலா வேறு, "என்ன காரு மேக்கப் இல்லாம உன் கன்னம் இப்படி சிவந்துருக்கு எனக்கும் எப்படினு கொஞ்சம் சொல்லேன்" என்று கேட்டு விட, நிலாவின் கேள்வியில் பகலனுக்கு புரையேறி விட, ரனுவோ திருதிருவென முழித்தாள்..
"இது உண்மையாவே லூசா?? இல்ல லூசு மாதிரி நடிக்குதா?? நானே கஷ்டப்பட்டு இத்தனை வருசத்துக்கு அப்பறம் அவளை வெக்கப்பட வெச்சா இது வேற நேரங்காலம் தெரியாம?? டேய் பகலு உனக்கு எதிரி வெளில இருந்து எல்லாம் வர தேவையில்லடா.. கூடவே வெச்சு சுத்திட்டு இருக்க பாரு உன் புத்தியை பிஞ்ச செருப்பாலயே அடிச்சுக்க.. அப்பவாவது உனக்கு புத்தி வருதானு பார்ப்போம்.." என்று நொந்து கொண்டிருந்தவனின் கதறலை கலைக்கவே அவனின் கைப்பேசி அடித்தது..
யோசனையுடன் எடுத்து பார்த்த பகலன்," அய்யய்யோ ஹிட்லர் தான்.. எல்லாம் உன்னால தான்டி" என்று சின்சியராய் பாயாசம் குடித்து கொண்டிருந்த நிலாவிடம் எகிற, அவளோ "எடுத்து பேசி தொலைடா இல்ல கட்டாகிர போகுது" என்றாள் சாதாரணமாக...
அவளை முறைத்து கொண்டே எடுத்தவன், அடுத்த நொடியே "இதோ வந்தறோம் மாமா" என்று விட்டு நிலாவை இழுக்காத குறையாக இழுக்க, அவளோ பாயசம் குடிக்காம நான் வர மாட்டேன் என்பதை போல் அமர்ந்திருந்தாள்..
"அடியேய் அங்க உன் அப்பா பாயசாத்தோட பொங்கலும் வெக்க காத்துட்டு இருக்காங்க வந்துதொலைடி" என்று கடுப்புடன் கத்த, "போடா அதைய விட இதுதான் டேஸ்ட்டா இருக்கு" என்று பாயாசத்தை ஸ்பூனில் குடித்தபடி சொல்ல, "அய்யோ இவளை" என்று தலையில் அடித்து கொண்டவன்,
"எம்மா ஷியா இந்த கிண்ணத்தை நாளைக்கு வாங்கிக்கமா.. அதை எடுத்துட்டு இப்பவாவது வந்து தொலைடி" என்று காலில் விழாத குறையாக அவளிடம் கெஞ்ச, நிலாவோ பெரிய மனது செய்ததை போன்று எழுந்தவள் அவனோடு கிளம்பினாள்..
தொடரும்..