Kirthika Balan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இட்ஸ் ஆல் ஹப்பெனிங் பிகாஸ் ஆஃப் தேம் இல்லயா " என இருவரையும் சுட்டிக்காட்டிய தாக்ஷியிடம் தலையாட்டி ஓப்புக்கொண்டாள் ஜெய்மி.
தத்தம் மனைவியின் மூலம் நட்பு பாராட்டிய அமிழன் எய்டன் இருவரின் எண்ண போக்கும் ஒரே மாதிரி அமைந்ததில் ஒருவரை மற்றவருக்கு உள்ளார்ந்து பிடித்து இருவருக்குமிடையே பிணைப்பு இறுகியது.
பேசி கொண்டு மரங்கள் அற்ற சமவெளிக்கு வந்தவர்கள் எதிர் பட்ட பள்ளத்தாக்கில் சாய்வாக ஒங்கி வளர்ந்த மலையில், செதுக்கிய வண்ணமாக பயிரிட்டிருந்த தேயிலை பாத்திகள் மீது பட்டு தெறித்த சூரிய கதிர்களின் ஒளி அவ்'எஸ்டேட் முழுவதும் பரவி இளமஞ்சள் கலந்த சிவப்பாக காட்சி அளித்து கண்ணுக்கு விருந்தளித்து.
பேச்சற்று மெய்மறந்து ரசித்து கொண்டிருந்த தோழிகள் இருவரின் அருகே வந்த நின்றனர் அவர்களின் துனைவர்கள்.
" வாவ்......என்ன ஒரு சீனரி..!
இத தூங்கி மிஸ் பண்ண பாத்துருக்கீங்க ரெண்டு பேரும்..
இங்க தூங்குறத அங்க வீட்டிலயே தூங்கிருக்கலாம்..." என வம்பிலுத்த எய்டனிடம் சண்டையிட தயாரான ஜெய்மி
அந்நாள் இரவை கூடாரம் ( tent ) அமைத்து செலவிடும் செயற்பாட்டிற்க்கு வந்த பிறகும் முடியவில்லை.
ரிசார்ட்டின் செயற்பாட்டில் ஒரு பகுதியான டெண்ட் கேம்ப்ங்'கில் இரவில் மலை முகட்டில் கூடாரம் அமைத்து
அனைவரும் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அன்றிரவை வெட்டவெளியில் நிலவொளியில் களித்து கொண்டிருந்தனர்.
ஜெய்மி, தாக்ஷி இருவரும் உடலை இறுக்கி கம்பிலியால் சுற்றி தங்களை குளிரில் இருந்து மறைத்து கொண்டிருந்தனர்.
சைட் சீனிங், சைக்கிளிங், ட்ரெக்கிங் என்ற பெயரில் பிளான்டேஷன் வாக் என கடந்து வந்தவர்கள் இப்போது 'குடிசை மொமெண்ட்டா' என்பது போல் நடுங்கும் குளிரில் கூடாரத்தில் இரவை களிக்க வைத்த ஆண்கள் இருவரின் மீது கோபம் கொண்டிருந்தவர்கள், சற்று தள்ளிருந்த அமிழன் எய்டனின் உரையாடலை கேட்டு பீதியாகினர்.
" என்ன ஒரு வியூ.. வாவ்... செம ப்ரோ.. லவ்லி ப்ளேஸ்.. இந்த ரிசார்ட் ரெக்கமெண்ட் பண்ண உங்க பிரெண்ட் கிட்ட தான்க்ஸ் சொல்லனும் ப்ரோ " என்ற எய்டனிடம்,
" அவன் சொன்னதை விட நாம ஃபீல் பண்ணும் போது தான் தெரியுது இவ்வளவு அழகுனு,
ஏன் ப்ரோ நாம நெக்ஸ்ட் ட்ரிப் கூர்க் ( coorg ) போன என்ன, என் பிரெண்ட் சொன்னான்
அங்க ட்ரீ ஹௌஸ் செம த்ரில்லா இருக்குமாம்"
" வாவ் சூப்பர் ப்ரோ.. நெக்ஸ்ட் நாம கூர்க் ட்ரிப் பிளான் பண்ணுறோம்,
ட்ரீ ஹௌஸ் போறோம், என்ஜாய் பண்ணுறோம்" என இருவரும் கை தட்டி கொண்டனர்.
இதனை கண்டு பீதியான ஜெய்மி
"தாக்ஷி உன்னை நான் டிவோர்ஸ் பண்ணுறேன்டி "
"தேவா........ ! நீயா பேசுற... "
"நானே தான் சூர்யா, இன்னும் இவங்கள ஒன்னு சேர விட்ட , நமக்கு தான் சேதாரம் அதிகமாகும்... அதுக்கு முதல நாம பிரியனும் சூர்யா.... "
" அதுவும் சரி தான் தேவா.. எதையும் பிளான் பண்ணி பண்ணறது தான் நமக்கும் நல்லது.... "
என தங்களுக்குள் தளபதி ரஜினி, மம்மூட்டி போல் சூளுரைத்து கொண்டிருந்தவர்களிடம் வந்த அமிழன்
" தாக்ஷி..... ஒரு வாக் போயிட்டு வரலாமா "
என கேட்கவும் அதிர்ச்சியுற்றாள் தாக்ஷி.
" வாக்'கா.... இப்பவா மாமா.. " என தனக்குள் விழுங்கினாள்.
" ஆமா தாக்ஷி செம க்ளைமேட் பாரு.. ஒரு மூன் வாக் போகலாம் வா... "
என கை நீட்டிய அமிழனிடம் கை கொடுத்து எழுந்தவள் தன்னை பார்த்து முகத்தை மறைத்து சிரித்து கொண்டிருந்த ஜெய்மியை முறைத்து விட்டு சென்றாள்.
இரவின் அழகான நிசப்தத்தில் நீரோடையின் சலசலப்பு சத்தத்தை தவிர சுற்றி எங்கும் நிசப்தமே..
குளிர் காற்று அவர்கள் இருவரையும் தழுவி ஊடுருவி சென்றன..
வேண்டாம் வெறுப்பாக முதலில் வந்தவள் இயற்கையின் அழகில் தன்னை மறந்து கால்களை எட்டி போட்டு லயித்து நடை பயின்றவளை திரும்ப மலையேத்தவென அமைந்தது அமிழனின் பேச்சு,
" தாக்ஷி, பாரேன் இவ்வளவு நாள் நாம டீ தப்பா போட்டுக்கிட்டு இருந்தருக்கோம்.."
சைட் சீனிங் என்ற பெயரில் நேற்று பாதி நாள் முழுவதும் மூணாறில் பிரிசித்து பெற்ற பழமையான தேயிலை தொழிற்சாலையான கண்ணன் தேவன் ஹில்ஸ்'லில் களித்தனர், ஆண்கள் பெருப்பான்மையான நேரம் தொழிற்சாலைக்குள்ளும் பெண்கள் இருவரும் தோட்டத்திலுமாக.
அவர்களுக்கு சுற்றி காட்டவென வந்தவரே தேனீர் தயாரிக்கும் முறைமையை விளக்கினார்.
தேயிலை'யை அதிகம் கொதிக்க வைக்க கூடாது என்றும், கொதித்த வெந்நீரில் தேயிலை போட்டு மூடி வைத்து விட வேண்டும். அதனை சிறிது நேரம் கழித்து வடிகட்டி அப்படியே பிளாக் டீ'யாக அருந்தலாம்... இல்லையென்றால் சூடான பாலில் தேயிலை தண்ணீரை கலந்து அருந்தலாம் என்றும், பாலையும் தேயிலையும் சேர்த்து கொதிக்க விட கூடாது என்றும் தெளிவாக விளக்கினார்.. அதை சிரமேற்றி தெளிவாக கவனித்து கொண்டார்கள் ஆணவர்கள்.
அதனையே இன்று திரும்ப அமிழன் வியந்து விளக்கவும் கோபம் கொண்டு கால்களை அழுத்தம் கொடுத்து தரையில் பதித்து நடந்தாள் தாக்ஷி..
நீரோடையின் சலசலப்பை மீறி தாக்ஷியின் கால்கள் கொடுத்த சத்தத்தில் அவளின் மேல் கண்களை பதித்த அமிழன் அவள் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து நடந்து சென்ற முறையில் ரசித்து
' இன்னும் நீ மாறவே இல்ல டுக்கு ' என தனக்குள் புன்னகைத்து கொண்ட அமிழனுக்கு
சற்றுமுன் எய்டனுடன் நடந்த உரையாடல் ஞாபகம் வந்தன..
"ஓகே ப்ரோ.. நான் தாக்ஷிய கூட்டிட்டு ஒரு வாக் போயிட்டு வரேன்.."
"இங்க நியூலி மேரீட் கபில் யாருன்னு தெரில ப்ரோ... அப்பப்ப மறந்துடுது" என கேலி செய்து சிரித்த எய்டனிடம்,
"நியூலி மேரீட் கபில்'க்கு ப்ரைவஸி கொடுக்கலாம்னு தான் வாக் போலாம்னு தாக்ஷிய கூட்டிட்டு போறேன், வேணும்னா நீங்க ஜெய்மிய கூட்டிட்டு போங்க நான் இங்க இருக்கேன்..."
" ஏது இவளயா... தாக்ஷிம்மா'வாச்சும் நீங்க கூப்பிட்டதும் வருவா..
இவள நான் ஏற்கனவே மலை இறக்க கஷ்டப்படனும்..
இதுல வாக் போலாமனு கேட்டேன், இப்ப இருக்கிற மலையை விட்டு வேற மலைக்கு தாவிடுவா..
நீங்க கிளம்புங்க ப்ரோ "
அவனின் கூற்றில் சிரித்தவன் " எங்கள கிளப்ப வேகமா தான் இருக்கீங்க போங்க " என்ற அமிழனிடம்,
"ஆனாலும் ப்ரோ நீங்க எங்களுக்காக தான் தாக்ஷிம்மாவ வாக் கூட்டிட்டு போறீங்க சொல்றத நான் நம்பிட்டேன் "
என இதழ்களில் சிரிப்பை அடக்கினான் எய்டன்.
"ப்ரோ.... " என ஆரம்பித்த அமிழனிடம்
"அதான் நான் நம்பிட்டேனு சொல்றேனே ப்ரோ.. ஹாவ் அ சில் வாக்.. என்ஜாய்.... "
என கையசைத்து சிரித்தவனை கண்டு தானும் சிரித்ததை நினைவில் நிறுத்தி இப்போதும் தலைகோதி புன்னகைத்து கொண்டவன்..
தாக்ஷியின் கைகளை பிடித்து தன்னருகே நிறுத்தி,
" என்னவாம் டுக்கு'க்கு... கோபம் வந்தா தான இப்படி நடப்பீங்க.. சின்ன வயசுல
நீ இப்படி நடக்கிறத வச்சு தான உன்னை டக்……. " என கூற வந்தவனின் இதழ்களை தன் விரல்கள் கொண்டு மூடியவள்,
" போதும்.. அந்த பேர் சொல்ல வேணாம்.. சொன்னிங்க அவ்வளவு தான் பாத்துகோங்க "
என கூறிவயள் தன் விரல்களில் உணர்ந்த அவனின் வெப்பத்தினால் கைகளை விலக்கி
தள்ளி செல்ல முயன்றவளை இழுத்து பிடித்து தன் கைவலைகளுக்குள் நிறுத்தியவன்..
" எனக்கு வேற ஒரு டௌபட் இருக்கு அத கிளீயர் பண்ணிட்டு போ"
வெளியே ஊடுருவிய குளிர் காற்றுக்கு எதிர் வினையாய்
அவளிடம் அவன் கடத்திய வெப்பத்தில் லயித்தவளின் கண்கள் மேலெழுங்கி என்னவென்று வினவின.
" பட்டர்ஃபிளை கிஸ்'னா என்னது..."
என மிக தீவிரமாக முக்கியமான கேள்வியை போன்று கேட்ட அவனின் கேள்வியில் நாணம் கொண்டவள்,
"அய்யே மாமா போங்க.. இது தான் உங்க டௌபட்'டா"
என விலகி செல்ல முயன்றவளை தடுத்து தன் கைகளுக்குள்ளே நிறுத்தியவன்,
"நீயும் நீத்து குட்டியும் பேசுறத கேட்ருக்கேன்.. அது என்ன எனக்கு இல்லாம நீத்துக்கு மட்டும் பட்டர்ஃபிளை கிஸ் "
என புருவம் உயர்த்தி உரிமை பாராட்டும் சிறுகுழந்தையாக தன் முன் முகம் சுருக்கி நின்ற அமிழனை கண்டு உவகை கொண்டவள்.
"அது சின்ன பேபிஸ் கூட விளையாடுறது மாமா, நீத்துகுட்டி இங்க இருந்தப்ப அவளுக்கு அது பிடிச்சு போய் இப்போ வீடியோ கால்'ல கேக்குற.. சின்ன பிள்ளை கூட போட்டி போடுறீங்க நீங்க "
என கூறியவளை கண்டு இன்னும் முகம் சுருக்கங்களோடு நின்றவனின் மேல்சட்டையின் காலரை பிடித்து தன்னருகே நிறுத்தி அவர்களுக்குள் மிச்சம் இருந்த இடைவெளியயும் குறைத்தவள்,
" இப்ப என்ன உங்களுக்கும் பட்டர் ஃப்ளை கிஸ் வேணும் அவ்வளவு தான "
என அவளின் இடது கண்களை அவளின் எதிர்புறம் நின்ற அவனின் இடது கண்கள் அருகே கொண்டு சென்றவள் அவளின் இமைகளை அவனின் இமைகளோடு சேர்த்து சிமிட்டி பட்டர்ஃபிளை கிஸ் என்ன என்பதனை செயல்முறையில் விலக்கினாள்.
படபடத்த இருவரின் இமைகளையும் பிரித்தவள்,
"இப்ப புரிஞ்சுடுச்சா.. இதுக்கு போய் நீத்து குட்டியோட போட்டி போட்டுகிட்டு...
நீத்து விட ரொம்ப அடம் பிடிக்கிறீங்க நீங்க" என விலக்கியவளை தடுத்தவன்,
"உனக்கு தெரிஞ்சத நீ சொல்லிட்ட டுக்கு , இனி என் டர்ன் எனக்கு தெரிஞ்சத நான் சொல்ல வேணாமா .. " என அவனவளை இதழோடு அனைத்து கொண்டான்.
மண நிறைவோடு முடிந்த மூணாறு நாட்கள் இனி பெங்களூரில் தொடரும்!! (மா??)...
....................................
அப்புறம் மக்களே இதில் புதியதாக இரண்டு விஷயங்கள் சொல்லிருக்கேன்.
எல்லாரும் கத்துருப்பீங்க'னு நினைக்கிறேன.
கற்று கொடுத்த நிறைவோடு விடை பெறுகிறேன்..
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி
http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
தத்தம் மனைவியின் மூலம் நட்பு பாராட்டிய அமிழன் எய்டன் இருவரின் எண்ண போக்கும் ஒரே மாதிரி அமைந்ததில் ஒருவரை மற்றவருக்கு உள்ளார்ந்து பிடித்து இருவருக்குமிடையே பிணைப்பு இறுகியது.
பேசி கொண்டு மரங்கள் அற்ற சமவெளிக்கு வந்தவர்கள் எதிர் பட்ட பள்ளத்தாக்கில் சாய்வாக ஒங்கி வளர்ந்த மலையில், செதுக்கிய வண்ணமாக பயிரிட்டிருந்த தேயிலை பாத்திகள் மீது பட்டு தெறித்த சூரிய கதிர்களின் ஒளி அவ்'எஸ்டேட் முழுவதும் பரவி இளமஞ்சள் கலந்த சிவப்பாக காட்சி அளித்து கண்ணுக்கு விருந்தளித்து.
பேச்சற்று மெய்மறந்து ரசித்து கொண்டிருந்த தோழிகள் இருவரின் அருகே வந்த நின்றனர் அவர்களின் துனைவர்கள்.
" வாவ்......என்ன ஒரு சீனரி..!
இத தூங்கி மிஸ் பண்ண பாத்துருக்கீங்க ரெண்டு பேரும்..
இங்க தூங்குறத அங்க வீட்டிலயே தூங்கிருக்கலாம்..." என வம்பிலுத்த எய்டனிடம் சண்டையிட தயாரான ஜெய்மி
அந்நாள் இரவை கூடாரம் ( tent ) அமைத்து செலவிடும் செயற்பாட்டிற்க்கு வந்த பிறகும் முடியவில்லை.
ரிசார்ட்டின் செயற்பாட்டில் ஒரு பகுதியான டெண்ட் கேம்ப்ங்'கில் இரவில் மலை முகட்டில் கூடாரம் அமைத்து
அனைவரும் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அன்றிரவை வெட்டவெளியில் நிலவொளியில் களித்து கொண்டிருந்தனர்.
ஜெய்மி, தாக்ஷி இருவரும் உடலை இறுக்கி கம்பிலியால் சுற்றி தங்களை குளிரில் இருந்து மறைத்து கொண்டிருந்தனர்.
சைட் சீனிங், சைக்கிளிங், ட்ரெக்கிங் என்ற பெயரில் பிளான்டேஷன் வாக் என கடந்து வந்தவர்கள் இப்போது 'குடிசை மொமெண்ட்டா' என்பது போல் நடுங்கும் குளிரில் கூடாரத்தில் இரவை களிக்க வைத்த ஆண்கள் இருவரின் மீது கோபம் கொண்டிருந்தவர்கள், சற்று தள்ளிருந்த அமிழன் எய்டனின் உரையாடலை கேட்டு பீதியாகினர்.
" என்ன ஒரு வியூ.. வாவ்... செம ப்ரோ.. லவ்லி ப்ளேஸ்.. இந்த ரிசார்ட் ரெக்கமெண்ட் பண்ண உங்க பிரெண்ட் கிட்ட தான்க்ஸ் சொல்லனும் ப்ரோ " என்ற எய்டனிடம்,
" அவன் சொன்னதை விட நாம ஃபீல் பண்ணும் போது தான் தெரியுது இவ்வளவு அழகுனு,
ஏன் ப்ரோ நாம நெக்ஸ்ட் ட்ரிப் கூர்க் ( coorg ) போன என்ன, என் பிரெண்ட் சொன்னான்
அங்க ட்ரீ ஹௌஸ் செம த்ரில்லா இருக்குமாம்"
" வாவ் சூப்பர் ப்ரோ.. நெக்ஸ்ட் நாம கூர்க் ட்ரிப் பிளான் பண்ணுறோம்,
ட்ரீ ஹௌஸ் போறோம், என்ஜாய் பண்ணுறோம்" என இருவரும் கை தட்டி கொண்டனர்.
இதனை கண்டு பீதியான ஜெய்மி
"தாக்ஷி உன்னை நான் டிவோர்ஸ் பண்ணுறேன்டி "
"தேவா........ ! நீயா பேசுற... "
"நானே தான் சூர்யா, இன்னும் இவங்கள ஒன்னு சேர விட்ட , நமக்கு தான் சேதாரம் அதிகமாகும்... அதுக்கு முதல நாம பிரியனும் சூர்யா.... "
" அதுவும் சரி தான் தேவா.. எதையும் பிளான் பண்ணி பண்ணறது தான் நமக்கும் நல்லது.... "
என தங்களுக்குள் தளபதி ரஜினி, மம்மூட்டி போல் சூளுரைத்து கொண்டிருந்தவர்களிடம் வந்த அமிழன்
" தாக்ஷி..... ஒரு வாக் போயிட்டு வரலாமா "
என கேட்கவும் அதிர்ச்சியுற்றாள் தாக்ஷி.
" வாக்'கா.... இப்பவா மாமா.. " என தனக்குள் விழுங்கினாள்.
" ஆமா தாக்ஷி செம க்ளைமேட் பாரு.. ஒரு மூன் வாக் போகலாம் வா... "
என கை நீட்டிய அமிழனிடம் கை கொடுத்து எழுந்தவள் தன்னை பார்த்து முகத்தை மறைத்து சிரித்து கொண்டிருந்த ஜெய்மியை முறைத்து விட்டு சென்றாள்.
இரவின் அழகான நிசப்தத்தில் நீரோடையின் சலசலப்பு சத்தத்தை தவிர சுற்றி எங்கும் நிசப்தமே..
குளிர் காற்று அவர்கள் இருவரையும் தழுவி ஊடுருவி சென்றன..
வேண்டாம் வெறுப்பாக முதலில் வந்தவள் இயற்கையின் அழகில் தன்னை மறந்து கால்களை எட்டி போட்டு லயித்து நடை பயின்றவளை திரும்ப மலையேத்தவென அமைந்தது அமிழனின் பேச்சு,
" தாக்ஷி, பாரேன் இவ்வளவு நாள் நாம டீ தப்பா போட்டுக்கிட்டு இருந்தருக்கோம்.."
சைட் சீனிங் என்ற பெயரில் நேற்று பாதி நாள் முழுவதும் மூணாறில் பிரிசித்து பெற்ற பழமையான தேயிலை தொழிற்சாலையான கண்ணன் தேவன் ஹில்ஸ்'லில் களித்தனர், ஆண்கள் பெருப்பான்மையான நேரம் தொழிற்சாலைக்குள்ளும் பெண்கள் இருவரும் தோட்டத்திலுமாக.
அவர்களுக்கு சுற்றி காட்டவென வந்தவரே தேனீர் தயாரிக்கும் முறைமையை விளக்கினார்.
தேயிலை'யை அதிகம் கொதிக்க வைக்க கூடாது என்றும், கொதித்த வெந்நீரில் தேயிலை போட்டு மூடி வைத்து விட வேண்டும். அதனை சிறிது நேரம் கழித்து வடிகட்டி அப்படியே பிளாக் டீ'யாக அருந்தலாம்... இல்லையென்றால் சூடான பாலில் தேயிலை தண்ணீரை கலந்து அருந்தலாம் என்றும், பாலையும் தேயிலையும் சேர்த்து கொதிக்க விட கூடாது என்றும் தெளிவாக விளக்கினார்.. அதை சிரமேற்றி தெளிவாக கவனித்து கொண்டார்கள் ஆணவர்கள்.
அதனையே இன்று திரும்ப அமிழன் வியந்து விளக்கவும் கோபம் கொண்டு கால்களை அழுத்தம் கொடுத்து தரையில் பதித்து நடந்தாள் தாக்ஷி..
நீரோடையின் சலசலப்பை மீறி தாக்ஷியின் கால்கள் கொடுத்த சத்தத்தில் அவளின் மேல் கண்களை பதித்த அமிழன் அவள் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து நடந்து சென்ற முறையில் ரசித்து
' இன்னும் நீ மாறவே இல்ல டுக்கு ' என தனக்குள் புன்னகைத்து கொண்ட அமிழனுக்கு
சற்றுமுன் எய்டனுடன் நடந்த உரையாடல் ஞாபகம் வந்தன..
"ஓகே ப்ரோ.. நான் தாக்ஷிய கூட்டிட்டு ஒரு வாக் போயிட்டு வரேன்.."
"இங்க நியூலி மேரீட் கபில் யாருன்னு தெரில ப்ரோ... அப்பப்ப மறந்துடுது" என கேலி செய்து சிரித்த எய்டனிடம்,
"நியூலி மேரீட் கபில்'க்கு ப்ரைவஸி கொடுக்கலாம்னு தான் வாக் போலாம்னு தாக்ஷிய கூட்டிட்டு போறேன், வேணும்னா நீங்க ஜெய்மிய கூட்டிட்டு போங்க நான் இங்க இருக்கேன்..."
" ஏது இவளயா... தாக்ஷிம்மா'வாச்சும் நீங்க கூப்பிட்டதும் வருவா..
இவள நான் ஏற்கனவே மலை இறக்க கஷ்டப்படனும்..
இதுல வாக் போலாமனு கேட்டேன், இப்ப இருக்கிற மலையை விட்டு வேற மலைக்கு தாவிடுவா..
நீங்க கிளம்புங்க ப்ரோ "
அவனின் கூற்றில் சிரித்தவன் " எங்கள கிளப்ப வேகமா தான் இருக்கீங்க போங்க " என்ற அமிழனிடம்,
"ஆனாலும் ப்ரோ நீங்க எங்களுக்காக தான் தாக்ஷிம்மாவ வாக் கூட்டிட்டு போறீங்க சொல்றத நான் நம்பிட்டேன் "
என இதழ்களில் சிரிப்பை அடக்கினான் எய்டன்.
"ப்ரோ.... " என ஆரம்பித்த அமிழனிடம்
"அதான் நான் நம்பிட்டேனு சொல்றேனே ப்ரோ.. ஹாவ் அ சில் வாக்.. என்ஜாய்.... "
என கையசைத்து சிரித்தவனை கண்டு தானும் சிரித்ததை நினைவில் நிறுத்தி இப்போதும் தலைகோதி புன்னகைத்து கொண்டவன்..
தாக்ஷியின் கைகளை பிடித்து தன்னருகே நிறுத்தி,
" என்னவாம் டுக்கு'க்கு... கோபம் வந்தா தான இப்படி நடப்பீங்க.. சின்ன வயசுல
நீ இப்படி நடக்கிறத வச்சு தான உன்னை டக்……. " என கூற வந்தவனின் இதழ்களை தன் விரல்கள் கொண்டு மூடியவள்,
" போதும்.. அந்த பேர் சொல்ல வேணாம்.. சொன்னிங்க அவ்வளவு தான் பாத்துகோங்க "
என கூறிவயள் தன் விரல்களில் உணர்ந்த அவனின் வெப்பத்தினால் கைகளை விலக்கி
தள்ளி செல்ல முயன்றவளை இழுத்து பிடித்து தன் கைவலைகளுக்குள் நிறுத்தியவன்..
" எனக்கு வேற ஒரு டௌபட் இருக்கு அத கிளீயர் பண்ணிட்டு போ"
வெளியே ஊடுருவிய குளிர் காற்றுக்கு எதிர் வினையாய்
அவளிடம் அவன் கடத்திய வெப்பத்தில் லயித்தவளின் கண்கள் மேலெழுங்கி என்னவென்று வினவின.
" பட்டர்ஃபிளை கிஸ்'னா என்னது..."
என மிக தீவிரமாக முக்கியமான கேள்வியை போன்று கேட்ட அவனின் கேள்வியில் நாணம் கொண்டவள்,
"அய்யே மாமா போங்க.. இது தான் உங்க டௌபட்'டா"
என விலகி செல்ல முயன்றவளை தடுத்து தன் கைகளுக்குள்ளே நிறுத்தியவன்,
"நீயும் நீத்து குட்டியும் பேசுறத கேட்ருக்கேன்.. அது என்ன எனக்கு இல்லாம நீத்துக்கு மட்டும் பட்டர்ஃபிளை கிஸ் "
என புருவம் உயர்த்தி உரிமை பாராட்டும் சிறுகுழந்தையாக தன் முன் முகம் சுருக்கி நின்ற அமிழனை கண்டு உவகை கொண்டவள்.
"அது சின்ன பேபிஸ் கூட விளையாடுறது மாமா, நீத்துகுட்டி இங்க இருந்தப்ப அவளுக்கு அது பிடிச்சு போய் இப்போ வீடியோ கால்'ல கேக்குற.. சின்ன பிள்ளை கூட போட்டி போடுறீங்க நீங்க "
என கூறியவளை கண்டு இன்னும் முகம் சுருக்கங்களோடு நின்றவனின் மேல்சட்டையின் காலரை பிடித்து தன்னருகே நிறுத்தி அவர்களுக்குள் மிச்சம் இருந்த இடைவெளியயும் குறைத்தவள்,
" இப்ப என்ன உங்களுக்கும் பட்டர் ஃப்ளை கிஸ் வேணும் அவ்வளவு தான "
என அவளின் இடது கண்களை அவளின் எதிர்புறம் நின்ற அவனின் இடது கண்கள் அருகே கொண்டு சென்றவள் அவளின் இமைகளை அவனின் இமைகளோடு சேர்த்து சிமிட்டி பட்டர்ஃபிளை கிஸ் என்ன என்பதனை செயல்முறையில் விலக்கினாள்.
படபடத்த இருவரின் இமைகளையும் பிரித்தவள்,
"இப்ப புரிஞ்சுடுச்சா.. இதுக்கு போய் நீத்து குட்டியோட போட்டி போட்டுகிட்டு...
நீத்து விட ரொம்ப அடம் பிடிக்கிறீங்க நீங்க" என விலக்கியவளை தடுத்தவன்,
"உனக்கு தெரிஞ்சத நீ சொல்லிட்ட டுக்கு , இனி என் டர்ன் எனக்கு தெரிஞ்சத நான் சொல்ல வேணாமா .. " என அவனவளை இதழோடு அனைத்து கொண்டான்.
மண நிறைவோடு முடிந்த மூணாறு நாட்கள் இனி பெங்களூரில் தொடரும்!! (மா??)...
....................................
அப்புறம் மக்களே இதில் புதியதாக இரண்டு விஷயங்கள் சொல்லிருக்கேன்.
எல்லாரும் கத்துருப்பீங்க'னு நினைக்கிறேன.
கற்று கொடுத்த நிறைவோடு விடை பெறுகிறேன்..
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி
http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417