All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்...!" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்...!" என்கிற புதிய கதையுடன் வந்துவிட்டேன் தோழமைகளே... திங்கள் முதல் அத்தியாயங்கள் வரும்... எப்போதும் போல உங்கள் ஆதரவை எதிர்நோக்கி... நான்.
உங்களது கருத்துக்களை பகிர்ந்து என்னோடு இணைந்து வர வேண்டும் நட்பூக்களே😍😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பொழுது தான் உமையவளின் காலை பார்த்தாள் மதிலா... அங்கு அவளின் ஒரு காலில் மட்டும் மெட்டி இல்லாததை பார்த்தவள்,
“அது எப்படி உனக்கு மட்டும் தினமும் மெட்டி கழண்டு போகும்... நாங்களும் தான் மெட்டி போடுறோம். ஆனா ஒரு நாள் கூட கலண்டதே இல்லை...” என்று திடுதிப்பென்று கேட்க, சட்டென்று நாணம் வந்து ஒட்டிக் கொண்டது உமையவளுக்கு.
“அது... அது...” என்று அவள் தடுமாற,
“ம்கும்... உன் மெட்டி உன் காலு... என்னவேணா பண்ணிக்க...” என்று சொன்னவள் போய்விட, அதன் பிறகே மூச்சு வந்தது இவளுக்கு.
உத்தமன் எழுந்த பிறகு தான் அறைக்குள் சென்று தேட முடியும்... இல்லையென்றால் இதை ஒரு காரணமாக வைத்து மறுபடியும் ஒரு கூடலை நடத்திடுவான் என்று இன்னும் முகம் சிவந்தவள் தன் அறையையே பார்த்தபடி நின்றாள். காலை வேலை எல்லாம் முடிந்து இருந்தது. அவளை அதிகம் காக்க வைக்காமல் தோளில் துண்டை போட்டுக்கொண்டு பின் பக்கம் சென்றான் உத்தமன். இவளை பார்த்து கண்ணடித்தபடி.
அவனது கண்ணடிப்பில் முகம் அந்தி வானமாய் சிவந்தவள் அவன் சென்ற அடுத்த கணம் அறைக்குள் நுழைந்து போர்வை எல்லாம் சுருட்டி எடுத்து வைத்தவள் மெட்டி எங்கே போனது என்று தேடி துலாவினாள். ம்ஹும்... அகப்படவே இல்லை... சட்டென்று வேர்த்துப் போனது...
“ப்ச்... எத்தனை மெட்டி தான் வாங்குவீங்க ஒரு மாசத்துல...” என்று மாமியார் பேசுவது காதில் விழ,
“ஹையோ இவரு என் மானத்தை தினம் தினம் வாங்குறாரு... எங்க தான் போனதோ இந்த மெட்டி...!” என்று அவள் கட்டிலின் கீழே தேடிக்கொண்டு இருக்க, சத்தம் எதுவும் இல்லாமல் அவளின் உள்ளங்காலில் குறுகுறுப்பு ஊட்டினான்.
“அவுச்...” என்று காலை இழுக்க பார்க்க இன்னும் குறுகுறுப்பு ஊட்டினான் அவளது உள்ளங்காலில்.
“ப்ச் லொள்ளு பண்ணாதீங்க ங்க...” என்று சிணுங்கியவள் தன் இழுத்துக் கொள்ள பார்த்தாள். அவன் விட மறுக்க பின்னால் திரும்பி அவனை முறைத்துப் பார்த்தாள்.
அதற்கெல்லாம் அவன் கொஞ்சம் கூட அசையாமல் கண்ணடித்து வைத்தவன் அவளை நன்றாக திருப்பி அமரவைத்தான்.
“காலையிலயே உங்க லொள்ளை ஆரம்பிச்சுட்டீங்களா? விடுங்கங்க வேலை இருக்கு... நானே மெட்டியை காணோம்னு இருக்கேன்” என்றவள் மீண்டும் தேட போக,
சத்தமில்லாமல் கண்ணாடி அருகில் எடுத்து வைத்திருந்த மெட்டியை அவளது கண் முன் காட்டினான் உத்தமன்.
“காலையில எடுத்து வச்சுட்டீங்களா... என் சமத்து குட்டி... குடுங்க” என்று கைநீட்டினாள்.
“ம்ஹும்.. அவ்வளவு சுலபமா என்கிட்டே இருந்து வாங்கிட முடியுமாடி... மாமன் கேக்குறதை முதல்ல குடு. அதுக்கு பிறகு தான் மெட்டி உன் காலுக்கு வரும்” என்றான்.
“ப்ச்... சேட்டை பண்ணாதீங்க ங்க... இன்னும் நீங்க குளிக்கவே போகலையா? போச்சு ஆபிஸ்க்கு லேட்டா கிளம்புவீங்க... அப்புறம் வண்டியை வேகமா ஓட்ட வேண்டியது. இந்த லொள்ளை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு இரவுக்கு பார்த்துக்கலாம். இப்போ கிளம்புங்க” என்றவளின் பேச்சை காதிலே வாங்காமல் அவளை சாய்த்து அவளின் மீது பரவி படர்ந்தான். அவனை தன் மீது இறக்கி கீழே இரக்க பார்க்க ஒரு குட்டி சண்டை நடந்தது இருவருக்கும்.
வெற்று தரையில் இருவரும் அதுவும் கட்டிலுக்கு அடியில் ஒருவர் மேல் ஒருவர் புரண்டுக் கொண்டு தனக்கு அவளிடம் வேணும் அளவுக்கு முத்தத்தை வாங்கிக் கொண்டவன் அவளை விட்டு நீங்காமல் அவள் மேலே சொகுசாக படுத்துகொண்டு இருந்த நேரம், வெளியே உமை என்று சத்தம் கேட்க பட்டென்று அவனை கீழே தள்ளிவிட்டு எழப்போனவளை இறுக்கி அணைத்தவன்,
“நான் இருக்கும் போது என்னோட மட்டும் இருடி...” என்று அவளது கழுத்தில் வன்மையாக கடித்து வைத்தான்.
“அச்சோ வலிக்குதுங்க...” என்று அவனது மீசையை பிடித்து இழுத்தாள்.
“நான் கேட்கிறதுக்கு முன்னாடி நீ குடுத்து இருந்தா இநேரம் உன்னை விட்டு இருப்பேன். என்ன அடிதடி பண்ணி எடுத்துக்க வச்சல்ல அதுக்கு பழிக்கு பழி..” என்றான் உல்லாசமாக... அவனது மார்பில் படர்ந்து இருந்தவளின் அவசரம் புரியாமல் அவன் வம்பிழுக்க,
“படுத்தாதீங்க மாமா..” என்று கெஞ்சினாள்.
மறுபடியும் “உமை...” என்று வெளியே இருந்து சத்தம் கேட்டது...
“இதோ வரேன்...” என்று குரல் கொடுத்தவளின் முந்தானை அவனது கரத்தில் இருந்தது...
பாவமாய் அவள் பார்த்து வைக்க, “ரொம்ப பாவமா பார்க்காதடி...” என்று அவளின் நெற்றியில் முட்டியவன், அவளது கண்களை பார்த்துக்கொண்டே அவளது கால் விரலை பிடித்து, முதல் முறை மெட்டி போடுவது போல போட்டு விட்டவனை பெருகிய காதலுடன் பார்த்தாள்.
கொஞ்சம் காலோடு விலகி இருக்கக் கண்டு “ப்ச்... போய் கொறடு எடுத்துட்டு வரணுமா?” என்றபடியே எழ போக, அவனது முரட்டு கரம் அவளது காலை பிடித்து கால் விரலில் இருந்த மெட்டியை சற்றே நெருக்கி விட்டது.
அந்த பிடியில் முகம் சிவந்தவள் அவன் சற்றே அதிகமாக நெருக்கி விட்டதில் வலியில் சுறுங்கியது. “ஸ்...” என்ற சத்தத்தில் அவளை நிமிர்ந்து பார்த்தான் உத்தமன். அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் கண்களில் அவனது பார்வை விழ உள்ளுக்குள் பெரிதும் படபடத்துப் போனாள். ஒரு கணம் அப்படியே உறைந்து தான் இருவரது உலகமும்...

அவனது பார்வையில் மூச்சடைத்துக் கொண்டு வந்தது. தேகத்தில் ஒரு மெல்லிய நடுக்கமும் எழ விழிகள் ஆசையுடன் அவனது கண்களை எதிர் நோக்கியது. அவனது கண்களில் அவளிடம் இருந்த அதே பரவசம் நிறைந்து இருந்தது...
 
Last edited:
Status
Not open for further replies.
Top