பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 28
சற்றுரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழரசி… ஒரு பணக்கார பிசாசோட சுயநலத்தால ஒரு குடும்பமே அழிஞ்சு போச்சண்ணி…! அந்த சம்பவத்துக்குப் பிறகு கதிரண்ணா ஆத்திரப்பட்டு அந்த மாயா மேலயும் அவங்க அப்பா மேலயும் போலீஸ்ல புகார் கொடுக்கனும்னு ஆவேசப்பட்டாரு ஆனா… அப்பா தான் தடுத்துட்டாரு…!?
“மாமா ஏன் அப்படி செஞ்சாங்க.. அண்ணி? ஒரு குடும்பத்தையே உருக்குலைச்சி இல்லாம பண்ணவங்களுக்கு தண்டனை வேணாமா…?!” என்று தாமரை மனத்தாங்கலோடு வினவ..
“இதையேத்தான் கதிரண்ணாவும் அப்பாட்ட கேட்டாங்க.. அதுக்கு அப்பா…
புகார் கொடுத்ததும் … போலீஸ் உடனடியா அவங்க மேல நடவடிக்கை எடுப்பாங்கன்னு நினைக்கிறயா கதிர்? அவங்களோட தற்கெலைக்கு நேரடியாகவே மாயாவும்…அவங்க அப்பாவும் தான் காரணம் அது நமக்குத் தெரியும்…! ஆனா போலீஸூம்… கோர்ட்டும் அதை ஏத்துக்கிட்டு அவங்களுக்கு தண்டனை வாங்கித் தரனும்னா… அதுக்கு பலமான ஆதாரம்… சாட்சி.. இதெல்லாம் வேணும்… அப்படி எந்த ஆதாரமோ சாட்சியோ நம்மகிட்ட இல்லாத போது எதை வச்சு அவங்க மேல நீ கொடுத்த புகாரை நிருபிச்சு அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்ப? ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலே மாயாவோட அப்பா மாதிரியான அரசியல்வாதிங்க ஈசியா தப்பிச்சு வெளியே வந்துடுவாங்க… ஒரு ஆதாரமும் இல்லாம நாம கொடுக்குற புகார் அடிப்படை ஆதாரமற்றதுன்னு கோர்டே தள்ளுபடி பண்ணிடும். இறந்து போன ஆனந்தும் சரி அவங்க குடும்பமும் சரி தங்களோட தற்கொலைக்கு மாயாவை காரணம் காட்டலை… ஏன்..? ஆனந்தே தன்னோட தற்கொலைக்கு தன் குற்றவுணர்வு தான் காரணம்னு தெளிவா எழுதிவச்சிட்டு செத்துப் போயிருக்கான்.. அது மிகப் பெரிய வீக் பாயிண்ட் இந்த கேஸூல?! என்றவரை கண்களில் வலியோடு ஏறிட்டவன்…
“ஆமால்ல… ஆனா… ஏம்பா அவன் தன்னோட சாவுக்கு மாயா தான் காரணம்னு இலட்டர்ல எழுதலை ?!” என்று மழலையாய் கதிரவன் வினவ….மகனது மனத்துயரை அறிந்தவராய் அவனைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்ட சொக்கநாதர்… ஆறுதலாய் அவனது தலையை வருடினார். பிறகு பெருமூச்சுடன்...
‘ஏன்..?’ இந்த கேள்வியை ஆனந்த் கிட்ட தான் கேட்கனும்…!! ஆனா ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது…இத்தனை நடந்த பிறகும் ஆனந்த் மாயாவை மனசார வெறுக்கலை… ஏன்னா அவன் அவளை உண்மையா காதலிச்சிருக்கான்…. அதனால்தான் அவளுக்கு தண்டனை கொடுக்கனும்னு நினைக்காம தன்னைத்தானே தண்டிச்சிக்கிட்டான். அவனோட காதலில் பிழையில்லை…ஆனா அதை தகுதியற்றவள் மேல வச்சது தான் அவன் செய்த பெரிய பிழை!!” என்று அப்பா எடுத்துச் சொல்லவும் அதன் பிறகு கதிரண்ணா ஒரளவு சமாதானமாயிட்டாங்க. ஆனா பணக்காரங்க மேல இருந்த வெறுப்பும் கோபமும் அவருக்கு கொஞ்சமும் குறையல. அதை மனசுல வச்சுக்கிட்டு தான் உங்க வீட்டு சம்மந்தத்தை அண்ணா ஆரம்பத்தில் மறுத்தாங்க. ஆனால் பரமேஷ்வரன் பெரியப்பா உங்க குடுமபத்தைப்பற்றியும் உங்க எல்லாரோட குணத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லவும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்பவே பிடிச்சிடுச்சி.
அப்பவும் தயங்கின கதிரண்ணாவை அம்மா ஓரளவு சமாதானம் பண்ணித்தான் பெண்பார்க்கவே கூட்டி வந்தாங்க. வந்த இடத்தில் உங்கள் வீட்டையும் அதன் பிரம்மாண்டத்தையும் பார்த்ததுமே எங்க எல்லாருக்கும் கொஞ்சம் அதிரச்சி தான்…அண்ணாவைப் பற்றி கேட்கவே வேணாம். அவன் இன்னும் டென்ஷனாயிட்டான். அப்புறம் அம்மா தான் அண்ணாவை ஒருவழியா சரிகட்டி உள்ளே கூட்டி வந்தாங்க…!” என்கவும் தாமரைக்கு பெண்பார்க்க வந்த அன்று பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்த போது முகத்தில் கடுமை விரவியிருக்க கோபத்துடன் தன்னை அன்னார்ந்து நோக்கிய கதிரவனின் முகம் சட்டென்று நினைவுக்கு வந்தது.
“ஆனா அத்தையும் மாமாவும் வாசலில் வந்து மரியாதையாக வரவேற்றதிலேயே அவங்களோட குணம் எங்களுக்கு விளங்கிடுச்சு அண்ணி… அதிலும் ஆர்பாட்டமில்லாம… அடக்கமா… அமைதியா… அழகா… நீங்க வந்து நின்ற விதத்திலேயே எங்க எல்லாருக்கும் உங்களை ரொம்பவும் பிடிச்சிடுச்சு!. அதுக்கப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே!. உங்களைப் பார்த்ததுமே உர்ருன்னு இருந்த கதிரண்ணா முகத்தில் திடீர்னு 1000 வாட்ஸ் பல்பு போட்டது மாதிரி ஒரு வெளிச்சம் …. அப்புறமென்ன 'பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…. அப்படின்னு இளையராஜா பேக்கிரவுண்ட் மியூசிக் வாசிக்க…குணா கமலைப் போல…கதிரண்ணா பரவசநிலையை அடைந்து… நிற்க…அப்புறம் அண்ணலும் நோக்க…. இந்த ஆரணங்கும் நோக்க…. அதில் கதிரண்ணா….வாயைப் பொளந்து தன்னோட வாட்டர் பால்ஸைத் திறந்து விட்டு மெய்மறந்து நின்றது தான் அன்றைய நாளின் ஹைலைட்டே! ஆனாலும் அவன் இப்படி தலைகுப்புற கவுருவான்னு நான் நினைச்சே பார்க்கலை! இன்னும் கொஞ்ச நேரம் நீங்க அங்கேயே நின்னிருந்தீங்க.. அண்ணா விட்ட ஜொள்ளுல நாங்கெல்லாம் மிதந்திருப்போம்!. நல்லவேளை எங்களைக் காப்பாத்திட்டீங்க…!” என்று தமிழரசி பொங்கி சிரிக்க.. அவளது கிண்டலில் தாமரைக்கு தன்னவனின் அன்றைய ஆர்வப்பார்வைகள் நினைவில் எழுந்து கன்னம் இரண்டும் அழகாய் சிவந்தது.
“அந்த சம்பவத்துக்கு பிறகு காதல்…பொண்ணுங்கன்னாலே காத தூரம் விலகிப் போன கதிரண்ணாவை ஒரே பார்வையில் அப்படி என்ன தான் சொக்குப்பொடி போட்டு மயக்குனீங்க அண்ணி?! என்று மேலும் குறும்பு பேசியவளை….
“கல்யாணமே வேணாம்னு பிடிவாதமா இருந்த எங்க பாண்டியண்ணாவை பார்த்த ஒரே பார்வையில் மயக்கி…கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வச்ச நீங்க எந்த சொக்குப்பொடி போட்டீங்க!..முதல்ல அதை சொல்லுங்க!” என்று தாமரையும் தமிழரசியை பதிலுக்கு கலாய்க்க இப்போது முகம் சிவப்பது தமிழரசியின் முறையாயிற்று. அதன் பிறகு இருவரும் கலகலப்பாய் சற்று நேரம் உரையாடியவர்கள் உற்சாகத்துடன் விடைபெற்று இணைப்பை துண்டித்தனர்.
அந்த டி.ஐ.ஜி அலுவலகம் அன்று மிகுந்த பரபரப்போடு காணப்பட்டது. காரணம் விடுமுறையில் சென்றிருந்த ரத்னவேல் பாண்டியன் அன்று தான் திரும்பவும் பணிக்குத் திரும்புகிறான். தங்களின் மேலதிகாரியின் வரவை எதிர் நோக்கி.. அங்கே பணியிலிருந்த காவலர்கள் ஒருவித பரபரப்புடனும் இலேசான பதற்றத்துடனும் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சற்று நேரத்தில் சுனில் தன்னுடைய ஹீரோ ஹோண்டாவில் வந்து இறங்கி அவனும் பரபரப்புடன் அலுவலகத்துக்குள் நுழைந்தவன் தன் இருக்கையில் அமரவும் . அவனுக்காகவே காத்திருந்தது போல அவனுக்கு கீழே அடுத்த நிலைக் காவலர்களான தீபக்…பரத்.. ஜமால்.. அம்ரீத் ஆகிய நால்வரும் அவன் முன் வந்து நின்று அவனுக்கு சல்யூட் வைத்துவிட்டு கையில் வைத்திருந்த கோப்புக்களை அவன் முன் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றனர்.
சுனில் அவர்கள் கொண்டு வந்த பைலை பிரித்து…ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே வெளியே ஜீப் வந்து நிற்கும் ' க்ரீச்' ஒலி கேட்கவும்…அந்த ஒலியில் சட்டென்று எழுந்தவன் பைல்களை கையோடு எடுத்துக்கொண்டு வாயிலை நோக்கி விரைய அவனை பின்தொடர்ந்தனர் மற்ற நால்வரும்…
போலீஸ் ஜீப்பிலிருந்து காக்கிச் சட்டையும்… கருப்பு கூலர்ஸூமாய்…தான் வகிக்கும் பதவிக்குரிய மிடுக்கும் கம்பீரமுமாக இறங்கியவனை… பார்த்தவர்கள் விரைப்புடன் அவனுக்கு சல்யூட் வைத்து மரியாதையுடன் ஒதுங்கி நிற்க… சிறு தலையசைவில் அதை ஏற்றவாறு மின்னலாய் அலுவலகத்தில் நுழைந்தவனின் பார்வை அனைவரின் மீதும் ஆராய்ச்சியாய் படிய பணியிலிருந்த மற்ற காவலர்களும் அவனைப் பார்த்ததும் பணிவுடன் எழுந்து நின்றனர். பல்வேறு வழக்குகளுக்காக அங்கே குழுமியிருந்தவர்கள் அனைவரையும் தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தவாறே தன் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவன் தன் லாப்டாப்பை உயிர்பித்தவாறே… சுனிலை அழைத்தான். அவனது அழைப்புக்காகவே காத்திருந்தவனைப் போல உள்ளே வந்த சுனில்.. தன் கையிலிருந்த பைல்களை அவனுக்கு முன்னால் இருந்த மேசையில் வைத்தான். பைல்களில் பார்வை பதித்தவாறே…
“அவன் எங்கே?!” என்று வினவ…?
"லாக்கப்பில்.. சார்!!" ண என்றவன். அறைக்கு வெளியே நின்றிருந்தவர்களிடம் கண்ஜாடை காட்ட… லாக்கப்பில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவனின் சட்டையைப் பிடித்து… இழுத்து வந்து பாண்டியின் முன்பு… நிறுத்தினார்கள். பார்வையை கோப்பிலிருந்து உயர்த்தியவன்… எதிரே இருந்தவனை .. நிமிர்ந்து பார்த்தான். மாநிறத்துடன்.. பான்பீடாவால் காவியேறிய பற்களுடன்… நடுத்தரவயதில் திடகாத்திரமான உடற்கட்டோடு கலைந்த தலைமுடியும்…புதர் போல மண்டியிருந்த தாடியுடனும் தன்னெதிரில் நின்றிருந்தவனை பாண்டி.. துளைக்கும் பார்வை பார்க்க… அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்… தலைகுனிந்து நின்றவனை பாண்டி ஏளனமாய் நோக்கினான்.
பின்னர் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து வந்து மேசையின் மீது சாய்ந்து நின்றவன் … தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைத்துவிட்டு…. இருகைகளையும் கோர்த்து நெட்டி முறிக்க… அதைப் பார்த்தவாறு எதிரே நின்றிருந்தவனின் இதயம் தடதடத்தது. பயத்தில் நாக்கு உலர எச்சிலைக்கூட்டி விழுங்கியவன் பாண்டியை பயப்பார்வைப் பார்த்தான். நேற்று இரவு முழுவதும்... நடைபெற்ற போலீஸ் ட்ரீட்மெண்டின் போதும் அசராது மௌனம் காத்து அத்தனை அடிகளையும் வாங்கியவனின் உறுதி ரத்னவேல் பாண்டியனைப் பார்த்த கணத்திலிருந்தே சற்றே தளர்ந்ததில் அவனுள் குளிர் பரவியது.
அவனையே சிறிது நேரம் தீர்க்கமாய் அளவிட்ட பாண்டி…
“சொல்லு உன் பேரென்ன…? என்று பாண்டி உறுமும் குரலில் வினவ… அந்த குரலிலும் பார்வையிலும் எதிரே நின்றிருந்தவனின் தண்டுவடம் சில்லிட்ட உணர்வில்.... தன்னையும் மீறி..
குல்தீப்..சார்..! என்க
ஓ.…குல்தீப்.! சரி சொல்லு..! ஏர்போர்ட்ல யார் சொல்லி என்னை சுட்ட.. ?! புயலை உள்ளடக்கிய குரலில் அவனை துளைக்கும் பார்வை பார்த்து பாண்டி வினவ…
அதில் உள்ளுக்குள் மிரண்ட போதும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல அவன் மௌனம் சாதிக்க… பொறுமையிழந்து ஆவேசத்துடன் அவனை நெருங்கிய பாண்டி…அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டதில்… அவனது பற்கள் உடைந்து வெளியில் தெறிக்க வாயிலிருந்து இரத்தம் கொட…கொடவென வழிந்தது.. கண்கள் இருட்டிக்கொண்டு வர….காதுகளில் ‘ங்கொய்ய்ய்…’ என்ற பேரிரைச்சல் எழுந்தது. தலையை உதறி தன்னை சமன் செய்ய முயன்று தோற்று மெல்ல மயங்கிச் சரிய முற்பட்டவனின் முகத்தின் மீது குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டது. அடுத்த நொடி அவனது வாய்க்குள் தன் கன்னை(gun) நுழைத்த பாண்டி….
“இன்னும் அஞ்சு நொடிக்குள்ள நீ வாயைத் திறக்கலை…. உன்னை போட்டுத் தள்ளிட்டு பைல க்ளோஸ் பண்ணிட்டு போய்டேயிருப்பேன்…! என்றவன் கர்ஜனையில்… சொன்னதை செய்துவிடும் ஆவேசம் இருக்க….அதில் சகலமும் நடுங்க…! வேரறுந்த மரம் போல் பாண்டியின் கால்களில் விழுந்தவன்… அனைத்து விவரங்களையும் மெல்ல கூறத்தொடங்கினான். அவன் கூறிய தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாய்…. வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
அனைத்தையும் கேட்ட பாண்டியின் மனமோ…எரிமலையாய் கொந்தளிக்க முகம் செந்தணலாய் சிவக்க …. வேட்டைக்கு புறப்பட்ட வேங்கையின் சீற்றத்துடன்….அவனையே உறுத்து விழித்தவனின் உதடுகள்… “உபேந்தர்….கவுண்ட் யுவர் டேஸ்….!” என்று ஆத்திரத்தோடு முணுமுணுத்து பின்பு ஏளனமாய் வளைந்தது. சற்றுப் பொறுத்து…சுனிலை அவன் திரும்பிப் பார்க்க… அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் அவன் பரத்திற்கு சைகை காட்ட… அவன் கீழே விழுந்து கிடந்த குல்தீப்பை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று மறுபடியும் லாக்கப்பில் அடைத்தான்.
அதன் பிறகு அடுத்து அவர்கள் செய்ய வேண்டியவை குறித்து சுனிலுக்கும்…. மற்றவர்களுக்கும் கட்டளைகளை பிறப்பித்ததும்…. அவர்கள் அறையை விட்டு வெளியேற… பிறகு தன் மடிக்கணினியில் பார்வையை பதித்த பாண்டி பணியில் தீவிரமாய் மூழ்கிப் போனான். மதிய நேரம் வரை தன் பணியைத் தொடர்ந்தவனின்… அலைபேசி ஒலிக்க எடுத்துப் பார்க்க… கமிஷ்னரிடமிருந்து அழைப்பு என்றதும் உடனடியாக அழைப்பை ஏற்க… அவருடன் பணி பற்றி சிறிது நேரம் உரையாடியவன்…யோசனையோடு இணைப்பை துண்டித்தான்.
அவனே கமிஷ்னரை சந்தித்து பேச எண்ணியிருக்க… அவரே நாளை தன்னை சந்திக்க அழைத்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் யோசனையிலிருந்து வெளி வந்து மணிக்கட்டைத் திருப்பி கைக்கடிகாரத்தை பார்த்தவனுக்கு மதிய உணவிற்கு தனக்காய் காத்திருக்கும்,..மனைவியின் ஞாபகம் எழுந்தது சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்… அலுவலகத்திலிருந்து வெளியேறி ஜீப்பினுள் ஏறி அமரவும்… அவன் வருகைக்காகவே காத்திருந்த அவனுடைய ஜீப் டிரைவர் ராம் தேவ் சட்டென்று வண்டியை கிளப்பினார்.
அடுத்த அரைமணி நேரத்தில் பாண்டியின் இந்திரபுரி அபார்ட்மெண்டை அடையவும் அதிலிருந்து இறங்கியவன். அவரை மறுநாள் காலை வருமாறு பணித்துவிட்டு தன் இல்லம் நோக்கி வேக நடையுடன் சென்றுவிட்டான்.
யோசனையோடு வீட்டுக்குள் நுழைந்த பாண்டியின் பார்வை மனைவியைத் தேட... ஹாலில் அவளைக்காணாது தங்கள் படுக்கையறையில் நுழைந்தான். அங்கேயும் மனைவியைக் காணாமல் பால்கனிக்குச் சென்றான். அங்கே.. மூங்கில் ஊஞ்சலில் இவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்தாள் தமிழரசி. அதுவரை இருந்த இறுக்கம் மனைவியை கண்டநொடியே மறைய..அவளை சத்தமின்றி நெருங்கினான். அவள் மென்குரலில் ஏதோ பேசும் சத்தத்தில் சற்றே எட்டிப்பார்க்க.. அவளோ அலைபேசியை கையில் வைத்துக்கெண்டு அதிலிருந்த பாண்டியின் புகைப்படத்திடம் தான் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஆர்வத்துடன் அவளை மேலும் நெருங்கியவன் அவளது பேச்சை கவனிக்கலானான். அலைபேசியில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் அவன் முகம் சட்டென்று மலர்ந்தது. அது அவளை பெண்பார்க்க சென்ற அன்று தான் எடுத்திருக்க வேண்டும் என்பதை தான் அணிந்திருந்த உடையை வைத்தே கணித்தவனின் மனம்… “கள்ளி..எனக்கே தெரியாம.. என்னை திருட்டுத்தனமா போட்டோ எடுத்திருக்கா..!” என்று எண்ணியவனின் மனம் சிறகின்றி விண்ணில் பறக்க…மனைவியின் குரல் அவனை ஈர்த்தது.
“டேய் … வேலு!! உன்னால அண்ணிகிட்ட என் மானமே போச்சுப் போடா..! பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு அப்படியாடா ஆளை முழுங்கறதைப்போல அப்படி பார்த்து வைப்ப..! அதுவும் சுற்றி அத்தனைப் பேரை வச்சிக்கிட்டு.. கண்ணடிக்கறதும்…ப்ளையிங் கிஸ் கொடுக்குறதும்…ஆனாலும் உனக்கு லொள்ளு அதிகம்டா!. இப்ப பார்த்தியா அண்ணி அதையே சொல்லி என்னைக் கலாய்க்குறாங்க எல்லாம் உன்னால தான்!.... செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு எப்படி சிரிக்கிறான் பாரு ராஸ்கல்… பெரிய மன்மதன்னு நினைப்பு! மூஞ்சைப்பாரு!! என்று செல்லக்கோபத்துடன் பொரிந்தவளின் குரலில் மருந்துக்கும் கோபமில்லை..மாறாக குரல் குழைந்து கொஞ்சியது…அவளது விரல்களோ அவனது முகவடிவை ஆசையாய் வருடியது.
இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தவனுக்கு…அதற்குமேல் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.அவள் அமர்ந்திருந்த ஊஞ்சலை தன்னை நோக்கி அவன் திருப்ப… முதலில் யாரோ என்று பயந்தவள் கணவனைக்கண்டதும் சற்றே ஆசுவாசமடைந்தாள்
“ஆமா இவன் எப்ப வந்தான் தெரியலையே..? அச்சச்சோ…! நான் இதுவரை பேசிட்டிருந்ததை எல்லாம் கேட்டிருப்பானோ?!” என்று கணவனின் முகத்தை ஆராய்வதைப்போல உற்று நோக்கியவள் சட்டென்று ஊஞ்சலைவிட்டு துள்ளி எழந்து நின்றாள்.
“நீ…நீங்க எப்….ப வந்தீங்க…? என்று திக்கித் திணற… மனைவியின் திணறலை மனதுக்குள் ரசித்தவன் கள்ளச்சிரிப்போடு…
“ஜஸ்ட் இப்ப தான் பேபி…என்க! அதில் சற்றே நிம்மதியடைந்தாள்…தமிழரசி.
“ஆமா… நான் உள்ள வரும்போது நீ யாருகிட்டயோ பேசிட்டிருந்த மாதிரி இருந்ததே?” என்று ஒன்றும் தெரியாதவனைப்போல அவன் வினவ… அதில் திகைத்தவள்.
“அதெல்லாம் ஒ….ஒண்ணுமில்லையே சும்மா தான் போன்ல கேம் விளையாடிட்டிருந்தேன் அந்த சத்தம் தான்” என்றவளை… என்று அவன் நம்பாத பார்வை பார்க்க…அவனது பார்வையில் தடுமாறியவள்…
“நா…ன் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்க பிரஷ்ஷப் ஆயிட்டு வாங்க சாப்பிடலாம்!” என்ற சட்டென்று நழுவி அவள் உள்ளே ஓட அவள் பின்னால் வந்தவன் அவளை சட்டென்று தாவிப் பிடித்து இழுக்க…அதில் அவன் மார்பில் மோதி நின்றவளை இறுகத் தழுவிக் கொண்டவன்.
“எங்கடி ஓடப் பார்க்குற..?! என்றவன் அவளது இடையை சுற்றிவளைத்து …தன் கைவளைவில் வைத்துக்கொண்டு “அப்ப என்னடி சொன்ன..?! அதை இப்ப சொல்லு…? என்று அவன் வினவ…அதிலேயே அவன் தான் பேசியதனைத்தையும் கேட்டுவிட்டான் என்பதை உணர்ந்துகொண்ட போதும்..
“எ…..தை.சொ…சொல்றீங்க..! எனறு அவள் புரியாதவளைப்போல வினவினாள் அவளது கண்களோடு தன் கண்களைக் கலக்க விட்டவன்..
“ஏண்டி போலீஸ்காரங்கிட்டேயே பொய்சொல்றியா?”என்று அவளை மேலும் தன்னோடு இறுக்கியவனின் கரம் அவளது இடையின வழுவழுப்பை சோதிக்க… அதில் சிலிர்த்து அவன் நெஞ்சில் முகம் புதைத்தவளின் தோள்வளைவில் முகம் புதைத்தவன்..
“ஏண்டி உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா புருஷன்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம என்னை வாடா…. போடான்னு சொல்லுவ…? அதுமட்டுமா அப்புறம் என்ன சொன்ன ஹான்… நான் ராஸ்கலாடி…?!!” என்றுஅவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து வினவியவனின் குரலில் சிறிதும் கோபமில்லை….கணவனின் வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தை அவள் உற்றுப்பார்க்க…மனைவியின் பார்வையை சட்டென்று கவ்விக்கொண்டவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வழக்கம்போல கண்சிமிட்டினான்.
“என்னடி? நல்லாப் பார்த்துக்கிட்டியா…உன் புருஷன் மன்மதன் தானா?!” என்று கள்ளச்சிரிப்போடு அவன் வினவ…அதில் “மக்கும்!” என்று நொடித்து தன் உதட்டை அவள் சுழிக்க அதில் வழக்கம் போல கிளர்ந்தவன் தாபத்தோடு அவள் முகம் நோக்கி ஆசையாய் குனிய… அவளது இதழை நெருங்கிய வேளையில் ஒற்றை விரல் வைத்து தடுத்தவள்...
“ வேலு…போய் பிரஷ்ஷப் ஆகிட்டு வாங்க முதல்ல பசிக்குது சாப்பிடலாம் என்று தடை போட்டவளை… சலிப்போடு பார்த்தவன்… அவளது காதோரம் நெருங்கி எதையோ கிசுகிசுக்க.. அதில் முகம் சிவந்தவள்… செல்லமாய் அவனை முறைத்து அவனது கைப்பிடியிலிருந்து லாவகமாய் விலகி…. கதவருகே சென்றவள் அவனைத் திரும்பிப் பார்த்து வக்கலம் காட்டிவிட்டு ஓடிவிட்டாள். மனைவியின் குழந்தைத்தனமான செயலில் முகம் விகசிக்க…..தலையை ஆட்டி புன்னகைத்தவாறே குளியலறைக்குள் நுழைந்தான் பாண்டி.
முகம் கழுவி. வேறு உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவன் சமையலறையில் எதையோ உருட்டிக்கொண்டிருந்த மனைவியை பின்னோடு அணைத்தான். இதழ்கள் அவளது கழுத்து வளைவில் உரச..”என்ன பண்ற பேபி…! என்ற கணவனின் தொடுகையில் உருகிக் குழைந்த தன்மனதை கட்டுப்படுத்திக் கொண்டவள்..அவனை விட்டுவிலகி…
“வேலு..! நீங்க முதல்ல இங்கிருந்த கிளம்புங்க! சமைக்கும் போது இப்படியெல்லாம் தொந்தரவு பண்ணா அப்புறம் சமையல் சொதப்பிடும்… ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வர்றேன் நீங்க டைனிங் டேபிளுக்கு போங்க…!” என்றவள் அவனது தோளில் கைவைத்து கையோடுஅவனை சமையலறையில் இருந்து வெளியேற்றினாள்.
“வர வர ரொம்பவே பண்றடி நீ!” என்று சலித்தாலும் நல்லபிள்ளையாய் டைனிங் சேரில் சென்று அமர்ந்தவனைப் பார்த்து புன்னகைத்தவள்..அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆம்லெட்டை சுடச்சுட போட்டு எடுத்துவந்தவள் கணவனுக்கு தட்டை வைத்து உணவை பரிமாறிவிட்டு அவன் முகத்தையே ஆவலோடு பார்க்க… ஒரு வாய் உண்டவனின் புருவம் வியப்பாய் உயர்ந்து மனைவியை பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்ட…அதில் முகம் மலர்ந்தவள்… தானும் அவனருகே அமர…வழக்கம் போல சில பல சில்மிஷங்களோடு திருப்தியாய் உண்டு முடித்தவன் வரவேற்பரையில் சென்று அமர்ந்து கொண்டான். சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கணவனைத் தேடி தமிழரசி வரவேற்பறைக்கு செல்ல அங்கே அவனைக்காணாமல் திகைத்து அறைக்குள் சென்று தேடியவளை பின்னிருந்து அணைத்துத் தூக்கிக்கொண்டான் அவளது கணவன்.
சற்றுரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழரசி… ஒரு பணக்கார பிசாசோட சுயநலத்தால ஒரு குடும்பமே அழிஞ்சு போச்சண்ணி…! அந்த சம்பவத்துக்குப் பிறகு கதிரண்ணா ஆத்திரப்பட்டு அந்த மாயா மேலயும் அவங்க அப்பா மேலயும் போலீஸ்ல புகார் கொடுக்கனும்னு ஆவேசப்பட்டாரு ஆனா… அப்பா தான் தடுத்துட்டாரு…!?
“மாமா ஏன் அப்படி செஞ்சாங்க.. அண்ணி? ஒரு குடும்பத்தையே உருக்குலைச்சி இல்லாம பண்ணவங்களுக்கு தண்டனை வேணாமா…?!” என்று தாமரை மனத்தாங்கலோடு வினவ..
“இதையேத்தான் கதிரண்ணாவும் அப்பாட்ட கேட்டாங்க.. அதுக்கு அப்பா…
புகார் கொடுத்ததும் … போலீஸ் உடனடியா அவங்க மேல நடவடிக்கை எடுப்பாங்கன்னு நினைக்கிறயா கதிர்? அவங்களோட தற்கெலைக்கு நேரடியாகவே மாயாவும்…அவங்க அப்பாவும் தான் காரணம் அது நமக்குத் தெரியும்…! ஆனா போலீஸூம்… கோர்ட்டும் அதை ஏத்துக்கிட்டு அவங்களுக்கு தண்டனை வாங்கித் தரனும்னா… அதுக்கு பலமான ஆதாரம்… சாட்சி.. இதெல்லாம் வேணும்… அப்படி எந்த ஆதாரமோ சாட்சியோ நம்மகிட்ட இல்லாத போது எதை வச்சு அவங்க மேல நீ கொடுத்த புகாரை நிருபிச்சு அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்ப? ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலே மாயாவோட அப்பா மாதிரியான அரசியல்வாதிங்க ஈசியா தப்பிச்சு வெளியே வந்துடுவாங்க… ஒரு ஆதாரமும் இல்லாம நாம கொடுக்குற புகார் அடிப்படை ஆதாரமற்றதுன்னு கோர்டே தள்ளுபடி பண்ணிடும். இறந்து போன ஆனந்தும் சரி அவங்க குடும்பமும் சரி தங்களோட தற்கொலைக்கு மாயாவை காரணம் காட்டலை… ஏன்..? ஆனந்தே தன்னோட தற்கொலைக்கு தன் குற்றவுணர்வு தான் காரணம்னு தெளிவா எழுதிவச்சிட்டு செத்துப் போயிருக்கான்.. அது மிகப் பெரிய வீக் பாயிண்ட் இந்த கேஸூல?! என்றவரை கண்களில் வலியோடு ஏறிட்டவன்…
“ஆமால்ல… ஆனா… ஏம்பா அவன் தன்னோட சாவுக்கு மாயா தான் காரணம்னு இலட்டர்ல எழுதலை ?!” என்று மழலையாய் கதிரவன் வினவ….மகனது மனத்துயரை அறிந்தவராய் அவனைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்ட சொக்கநாதர்… ஆறுதலாய் அவனது தலையை வருடினார். பிறகு பெருமூச்சுடன்...
‘ஏன்..?’ இந்த கேள்வியை ஆனந்த் கிட்ட தான் கேட்கனும்…!! ஆனா ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது…இத்தனை நடந்த பிறகும் ஆனந்த் மாயாவை மனசார வெறுக்கலை… ஏன்னா அவன் அவளை உண்மையா காதலிச்சிருக்கான்…. அதனால்தான் அவளுக்கு தண்டனை கொடுக்கனும்னு நினைக்காம தன்னைத்தானே தண்டிச்சிக்கிட்டான். அவனோட காதலில் பிழையில்லை…ஆனா அதை தகுதியற்றவள் மேல வச்சது தான் அவன் செய்த பெரிய பிழை!!” என்று அப்பா எடுத்துச் சொல்லவும் அதன் பிறகு கதிரண்ணா ஒரளவு சமாதானமாயிட்டாங்க. ஆனா பணக்காரங்க மேல இருந்த வெறுப்பும் கோபமும் அவருக்கு கொஞ்சமும் குறையல. அதை மனசுல வச்சுக்கிட்டு தான் உங்க வீட்டு சம்மந்தத்தை அண்ணா ஆரம்பத்தில் மறுத்தாங்க. ஆனால் பரமேஷ்வரன் பெரியப்பா உங்க குடுமபத்தைப்பற்றியும் உங்க எல்லாரோட குணத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லவும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்பவே பிடிச்சிடுச்சி.
அப்பவும் தயங்கின கதிரண்ணாவை அம்மா ஓரளவு சமாதானம் பண்ணித்தான் பெண்பார்க்கவே கூட்டி வந்தாங்க. வந்த இடத்தில் உங்கள் வீட்டையும் அதன் பிரம்மாண்டத்தையும் பார்த்ததுமே எங்க எல்லாருக்கும் கொஞ்சம் அதிரச்சி தான்…அண்ணாவைப் பற்றி கேட்கவே வேணாம். அவன் இன்னும் டென்ஷனாயிட்டான். அப்புறம் அம்மா தான் அண்ணாவை ஒருவழியா சரிகட்டி உள்ளே கூட்டி வந்தாங்க…!” என்கவும் தாமரைக்கு பெண்பார்க்க வந்த அன்று பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்த போது முகத்தில் கடுமை விரவியிருக்க கோபத்துடன் தன்னை அன்னார்ந்து நோக்கிய கதிரவனின் முகம் சட்டென்று நினைவுக்கு வந்தது.
“ஆனா அத்தையும் மாமாவும் வாசலில் வந்து மரியாதையாக வரவேற்றதிலேயே அவங்களோட குணம் எங்களுக்கு விளங்கிடுச்சு அண்ணி… அதிலும் ஆர்பாட்டமில்லாம… அடக்கமா… அமைதியா… அழகா… நீங்க வந்து நின்ற விதத்திலேயே எங்க எல்லாருக்கும் உங்களை ரொம்பவும் பிடிச்சிடுச்சு!. அதுக்கப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே!. உங்களைப் பார்த்ததுமே உர்ருன்னு இருந்த கதிரண்ணா முகத்தில் திடீர்னு 1000 வாட்ஸ் பல்பு போட்டது மாதிரி ஒரு வெளிச்சம் …. அப்புறமென்ன 'பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…. அப்படின்னு இளையராஜா பேக்கிரவுண்ட் மியூசிக் வாசிக்க…குணா கமலைப் போல…கதிரண்ணா பரவசநிலையை அடைந்து… நிற்க…அப்புறம் அண்ணலும் நோக்க…. இந்த ஆரணங்கும் நோக்க…. அதில் கதிரண்ணா….வாயைப் பொளந்து தன்னோட வாட்டர் பால்ஸைத் திறந்து விட்டு மெய்மறந்து நின்றது தான் அன்றைய நாளின் ஹைலைட்டே! ஆனாலும் அவன் இப்படி தலைகுப்புற கவுருவான்னு நான் நினைச்சே பார்க்கலை! இன்னும் கொஞ்ச நேரம் நீங்க அங்கேயே நின்னிருந்தீங்க.. அண்ணா விட்ட ஜொள்ளுல நாங்கெல்லாம் மிதந்திருப்போம்!. நல்லவேளை எங்களைக் காப்பாத்திட்டீங்க…!” என்று தமிழரசி பொங்கி சிரிக்க.. அவளது கிண்டலில் தாமரைக்கு தன்னவனின் அன்றைய ஆர்வப்பார்வைகள் நினைவில் எழுந்து கன்னம் இரண்டும் அழகாய் சிவந்தது.
“அந்த சம்பவத்துக்கு பிறகு காதல்…பொண்ணுங்கன்னாலே காத தூரம் விலகிப் போன கதிரண்ணாவை ஒரே பார்வையில் அப்படி என்ன தான் சொக்குப்பொடி போட்டு மயக்குனீங்க அண்ணி?! என்று மேலும் குறும்பு பேசியவளை….
“கல்யாணமே வேணாம்னு பிடிவாதமா இருந்த எங்க பாண்டியண்ணாவை பார்த்த ஒரே பார்வையில் மயக்கி…கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வச்ச நீங்க எந்த சொக்குப்பொடி போட்டீங்க!..முதல்ல அதை சொல்லுங்க!” என்று தாமரையும் தமிழரசியை பதிலுக்கு கலாய்க்க இப்போது முகம் சிவப்பது தமிழரசியின் முறையாயிற்று. அதன் பிறகு இருவரும் கலகலப்பாய் சற்று நேரம் உரையாடியவர்கள் உற்சாகத்துடன் விடைபெற்று இணைப்பை துண்டித்தனர்.
அந்த டி.ஐ.ஜி அலுவலகம் அன்று மிகுந்த பரபரப்போடு காணப்பட்டது. காரணம் விடுமுறையில் சென்றிருந்த ரத்னவேல் பாண்டியன் அன்று தான் திரும்பவும் பணிக்குத் திரும்புகிறான். தங்களின் மேலதிகாரியின் வரவை எதிர் நோக்கி.. அங்கே பணியிலிருந்த காவலர்கள் ஒருவித பரபரப்புடனும் இலேசான பதற்றத்துடனும் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சற்று நேரத்தில் சுனில் தன்னுடைய ஹீரோ ஹோண்டாவில் வந்து இறங்கி அவனும் பரபரப்புடன் அலுவலகத்துக்குள் நுழைந்தவன் தன் இருக்கையில் அமரவும் . அவனுக்காகவே காத்திருந்தது போல அவனுக்கு கீழே அடுத்த நிலைக் காவலர்களான தீபக்…பரத்.. ஜமால்.. அம்ரீத் ஆகிய நால்வரும் அவன் முன் வந்து நின்று அவனுக்கு சல்யூட் வைத்துவிட்டு கையில் வைத்திருந்த கோப்புக்களை அவன் முன் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றனர்.
சுனில் அவர்கள் கொண்டு வந்த பைலை பிரித்து…ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே வெளியே ஜீப் வந்து நிற்கும் ' க்ரீச்' ஒலி கேட்கவும்…அந்த ஒலியில் சட்டென்று எழுந்தவன் பைல்களை கையோடு எடுத்துக்கொண்டு வாயிலை நோக்கி விரைய அவனை பின்தொடர்ந்தனர் மற்ற நால்வரும்…
போலீஸ் ஜீப்பிலிருந்து காக்கிச் சட்டையும்… கருப்பு கூலர்ஸூமாய்…தான் வகிக்கும் பதவிக்குரிய மிடுக்கும் கம்பீரமுமாக இறங்கியவனை… பார்த்தவர்கள் விரைப்புடன் அவனுக்கு சல்யூட் வைத்து மரியாதையுடன் ஒதுங்கி நிற்க… சிறு தலையசைவில் அதை ஏற்றவாறு மின்னலாய் அலுவலகத்தில் நுழைந்தவனின் பார்வை அனைவரின் மீதும் ஆராய்ச்சியாய் படிய பணியிலிருந்த மற்ற காவலர்களும் அவனைப் பார்த்ததும் பணிவுடன் எழுந்து நின்றனர். பல்வேறு வழக்குகளுக்காக அங்கே குழுமியிருந்தவர்கள் அனைவரையும் தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தவாறே தன் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவன் தன் லாப்டாப்பை உயிர்பித்தவாறே… சுனிலை அழைத்தான். அவனது அழைப்புக்காகவே காத்திருந்தவனைப் போல உள்ளே வந்த சுனில்.. தன் கையிலிருந்த பைல்களை அவனுக்கு முன்னால் இருந்த மேசையில் வைத்தான். பைல்களில் பார்வை பதித்தவாறே…
“அவன் எங்கே?!” என்று வினவ…?
"லாக்கப்பில்.. சார்!!" ண என்றவன். அறைக்கு வெளியே நின்றிருந்தவர்களிடம் கண்ஜாடை காட்ட… லாக்கப்பில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவனின் சட்டையைப் பிடித்து… இழுத்து வந்து பாண்டியின் முன்பு… நிறுத்தினார்கள். பார்வையை கோப்பிலிருந்து உயர்த்தியவன்… எதிரே இருந்தவனை .. நிமிர்ந்து பார்த்தான். மாநிறத்துடன்.. பான்பீடாவால் காவியேறிய பற்களுடன்… நடுத்தரவயதில் திடகாத்திரமான உடற்கட்டோடு கலைந்த தலைமுடியும்…புதர் போல மண்டியிருந்த தாடியுடனும் தன்னெதிரில் நின்றிருந்தவனை பாண்டி.. துளைக்கும் பார்வை பார்க்க… அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்… தலைகுனிந்து நின்றவனை பாண்டி ஏளனமாய் நோக்கினான்.
பின்னர் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து வந்து மேசையின் மீது சாய்ந்து நின்றவன் … தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைத்துவிட்டு…. இருகைகளையும் கோர்த்து நெட்டி முறிக்க… அதைப் பார்த்தவாறு எதிரே நின்றிருந்தவனின் இதயம் தடதடத்தது. பயத்தில் நாக்கு உலர எச்சிலைக்கூட்டி விழுங்கியவன் பாண்டியை பயப்பார்வைப் பார்த்தான். நேற்று இரவு முழுவதும்... நடைபெற்ற போலீஸ் ட்ரீட்மெண்டின் போதும் அசராது மௌனம் காத்து அத்தனை அடிகளையும் வாங்கியவனின் உறுதி ரத்னவேல் பாண்டியனைப் பார்த்த கணத்திலிருந்தே சற்றே தளர்ந்ததில் அவனுள் குளிர் பரவியது.
அவனையே சிறிது நேரம் தீர்க்கமாய் அளவிட்ட பாண்டி…
“சொல்லு உன் பேரென்ன…? என்று பாண்டி உறுமும் குரலில் வினவ… அந்த குரலிலும் பார்வையிலும் எதிரே நின்றிருந்தவனின் தண்டுவடம் சில்லிட்ட உணர்வில்.... தன்னையும் மீறி..
குல்தீப்..சார்..! என்க
ஓ.…குல்தீப்.! சரி சொல்லு..! ஏர்போர்ட்ல யார் சொல்லி என்னை சுட்ட.. ?! புயலை உள்ளடக்கிய குரலில் அவனை துளைக்கும் பார்வை பார்த்து பாண்டி வினவ…
அதில் உள்ளுக்குள் மிரண்ட போதும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல அவன் மௌனம் சாதிக்க… பொறுமையிழந்து ஆவேசத்துடன் அவனை நெருங்கிய பாண்டி…அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டதில்… அவனது பற்கள் உடைந்து வெளியில் தெறிக்க வாயிலிருந்து இரத்தம் கொட…கொடவென வழிந்தது.. கண்கள் இருட்டிக்கொண்டு வர….காதுகளில் ‘ங்கொய்ய்ய்…’ என்ற பேரிரைச்சல் எழுந்தது. தலையை உதறி தன்னை சமன் செய்ய முயன்று தோற்று மெல்ல மயங்கிச் சரிய முற்பட்டவனின் முகத்தின் மீது குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டது. அடுத்த நொடி அவனது வாய்க்குள் தன் கன்னை(gun) நுழைத்த பாண்டி….
“இன்னும் அஞ்சு நொடிக்குள்ள நீ வாயைத் திறக்கலை…. உன்னை போட்டுத் தள்ளிட்டு பைல க்ளோஸ் பண்ணிட்டு போய்டேயிருப்பேன்…! என்றவன் கர்ஜனையில்… சொன்னதை செய்துவிடும் ஆவேசம் இருக்க….அதில் சகலமும் நடுங்க…! வேரறுந்த மரம் போல் பாண்டியின் கால்களில் விழுந்தவன்… அனைத்து விவரங்களையும் மெல்ல கூறத்தொடங்கினான். அவன் கூறிய தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாய்…. வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
அனைத்தையும் கேட்ட பாண்டியின் மனமோ…எரிமலையாய் கொந்தளிக்க முகம் செந்தணலாய் சிவக்க …. வேட்டைக்கு புறப்பட்ட வேங்கையின் சீற்றத்துடன்….அவனையே உறுத்து விழித்தவனின் உதடுகள்… “உபேந்தர்….கவுண்ட் யுவர் டேஸ்….!” என்று ஆத்திரத்தோடு முணுமுணுத்து பின்பு ஏளனமாய் வளைந்தது. சற்றுப் பொறுத்து…சுனிலை அவன் திரும்பிப் பார்க்க… அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் அவன் பரத்திற்கு சைகை காட்ட… அவன் கீழே விழுந்து கிடந்த குல்தீப்பை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று மறுபடியும் லாக்கப்பில் அடைத்தான்.
அதன் பிறகு அடுத்து அவர்கள் செய்ய வேண்டியவை குறித்து சுனிலுக்கும்…. மற்றவர்களுக்கும் கட்டளைகளை பிறப்பித்ததும்…. அவர்கள் அறையை விட்டு வெளியேற… பிறகு தன் மடிக்கணினியில் பார்வையை பதித்த பாண்டி பணியில் தீவிரமாய் மூழ்கிப் போனான். மதிய நேரம் வரை தன் பணியைத் தொடர்ந்தவனின்… அலைபேசி ஒலிக்க எடுத்துப் பார்க்க… கமிஷ்னரிடமிருந்து அழைப்பு என்றதும் உடனடியாக அழைப்பை ஏற்க… அவருடன் பணி பற்றி சிறிது நேரம் உரையாடியவன்…யோசனையோடு இணைப்பை துண்டித்தான்.
அவனே கமிஷ்னரை சந்தித்து பேச எண்ணியிருக்க… அவரே நாளை தன்னை சந்திக்க அழைத்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் யோசனையிலிருந்து வெளி வந்து மணிக்கட்டைத் திருப்பி கைக்கடிகாரத்தை பார்த்தவனுக்கு மதிய உணவிற்கு தனக்காய் காத்திருக்கும்,..மனைவியின் ஞாபகம் எழுந்தது சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்… அலுவலகத்திலிருந்து வெளியேறி ஜீப்பினுள் ஏறி அமரவும்… அவன் வருகைக்காகவே காத்திருந்த அவனுடைய ஜீப் டிரைவர் ராம் தேவ் சட்டென்று வண்டியை கிளப்பினார்.
அடுத்த அரைமணி நேரத்தில் பாண்டியின் இந்திரபுரி அபார்ட்மெண்டை அடையவும் அதிலிருந்து இறங்கியவன். அவரை மறுநாள் காலை வருமாறு பணித்துவிட்டு தன் இல்லம் நோக்கி வேக நடையுடன் சென்றுவிட்டான்.
யோசனையோடு வீட்டுக்குள் நுழைந்த பாண்டியின் பார்வை மனைவியைத் தேட... ஹாலில் அவளைக்காணாது தங்கள் படுக்கையறையில் நுழைந்தான். அங்கேயும் மனைவியைக் காணாமல் பால்கனிக்குச் சென்றான். அங்கே.. மூங்கில் ஊஞ்சலில் இவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்தாள் தமிழரசி. அதுவரை இருந்த இறுக்கம் மனைவியை கண்டநொடியே மறைய..அவளை சத்தமின்றி நெருங்கினான். அவள் மென்குரலில் ஏதோ பேசும் சத்தத்தில் சற்றே எட்டிப்பார்க்க.. அவளோ அலைபேசியை கையில் வைத்துக்கெண்டு அதிலிருந்த பாண்டியின் புகைப்படத்திடம் தான் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஆர்வத்துடன் அவளை மேலும் நெருங்கியவன் அவளது பேச்சை கவனிக்கலானான். அலைபேசியில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் அவன் முகம் சட்டென்று மலர்ந்தது. அது அவளை பெண்பார்க்க சென்ற அன்று தான் எடுத்திருக்க வேண்டும் என்பதை தான் அணிந்திருந்த உடையை வைத்தே கணித்தவனின் மனம்… “கள்ளி..எனக்கே தெரியாம.. என்னை திருட்டுத்தனமா போட்டோ எடுத்திருக்கா..!” என்று எண்ணியவனின் மனம் சிறகின்றி விண்ணில் பறக்க…மனைவியின் குரல் அவனை ஈர்த்தது.
“டேய் … வேலு!! உன்னால அண்ணிகிட்ட என் மானமே போச்சுப் போடா..! பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு அப்படியாடா ஆளை முழுங்கறதைப்போல அப்படி பார்த்து வைப்ப..! அதுவும் சுற்றி அத்தனைப் பேரை வச்சிக்கிட்டு.. கண்ணடிக்கறதும்…ப்ளையிங் கிஸ் கொடுக்குறதும்…ஆனாலும் உனக்கு லொள்ளு அதிகம்டா!. இப்ப பார்த்தியா அண்ணி அதையே சொல்லி என்னைக் கலாய்க்குறாங்க எல்லாம் உன்னால தான்!.... செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு எப்படி சிரிக்கிறான் பாரு ராஸ்கல்… பெரிய மன்மதன்னு நினைப்பு! மூஞ்சைப்பாரு!! என்று செல்லக்கோபத்துடன் பொரிந்தவளின் குரலில் மருந்துக்கும் கோபமில்லை..மாறாக குரல் குழைந்து கொஞ்சியது…அவளது விரல்களோ அவனது முகவடிவை ஆசையாய் வருடியது.
இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தவனுக்கு…அதற்குமேல் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.அவள் அமர்ந்திருந்த ஊஞ்சலை தன்னை நோக்கி அவன் திருப்ப… முதலில் யாரோ என்று பயந்தவள் கணவனைக்கண்டதும் சற்றே ஆசுவாசமடைந்தாள்
“ஆமா இவன் எப்ப வந்தான் தெரியலையே..? அச்சச்சோ…! நான் இதுவரை பேசிட்டிருந்ததை எல்லாம் கேட்டிருப்பானோ?!” என்று கணவனின் முகத்தை ஆராய்வதைப்போல உற்று நோக்கியவள் சட்டென்று ஊஞ்சலைவிட்டு துள்ளி எழந்து நின்றாள்.
“நீ…நீங்க எப்….ப வந்தீங்க…? என்று திக்கித் திணற… மனைவியின் திணறலை மனதுக்குள் ரசித்தவன் கள்ளச்சிரிப்போடு…
“ஜஸ்ட் இப்ப தான் பேபி…என்க! அதில் சற்றே நிம்மதியடைந்தாள்…தமிழரசி.
“ஆமா… நான் உள்ள வரும்போது நீ யாருகிட்டயோ பேசிட்டிருந்த மாதிரி இருந்ததே?” என்று ஒன்றும் தெரியாதவனைப்போல அவன் வினவ… அதில் திகைத்தவள்.
“அதெல்லாம் ஒ….ஒண்ணுமில்லையே சும்மா தான் போன்ல கேம் விளையாடிட்டிருந்தேன் அந்த சத்தம் தான்” என்றவளை… என்று அவன் நம்பாத பார்வை பார்க்க…அவனது பார்வையில் தடுமாறியவள்…
“நா…ன் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்க பிரஷ்ஷப் ஆயிட்டு வாங்க சாப்பிடலாம்!” என்ற சட்டென்று நழுவி அவள் உள்ளே ஓட அவள் பின்னால் வந்தவன் அவளை சட்டென்று தாவிப் பிடித்து இழுக்க…அதில் அவன் மார்பில் மோதி நின்றவளை இறுகத் தழுவிக் கொண்டவன்.
“எங்கடி ஓடப் பார்க்குற..?! என்றவன் அவளது இடையை சுற்றிவளைத்து …தன் கைவளைவில் வைத்துக்கொண்டு “அப்ப என்னடி சொன்ன..?! அதை இப்ப சொல்லு…? என்று அவன் வினவ…அதிலேயே அவன் தான் பேசியதனைத்தையும் கேட்டுவிட்டான் என்பதை உணர்ந்துகொண்ட போதும்..
“எ…..தை.சொ…சொல்றீங்க..! எனறு அவள் புரியாதவளைப்போல வினவினாள் அவளது கண்களோடு தன் கண்களைக் கலக்க விட்டவன்..
“ஏண்டி போலீஸ்காரங்கிட்டேயே பொய்சொல்றியா?”என்று அவளை மேலும் தன்னோடு இறுக்கியவனின் கரம் அவளது இடையின வழுவழுப்பை சோதிக்க… அதில் சிலிர்த்து அவன் நெஞ்சில் முகம் புதைத்தவளின் தோள்வளைவில் முகம் புதைத்தவன்..
“ஏண்டி உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா புருஷன்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம என்னை வாடா…. போடான்னு சொல்லுவ…? அதுமட்டுமா அப்புறம் என்ன சொன்ன ஹான்… நான் ராஸ்கலாடி…?!!” என்றுஅவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து வினவியவனின் குரலில் சிறிதும் கோபமில்லை….கணவனின் வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தை அவள் உற்றுப்பார்க்க…மனைவியின் பார்வையை சட்டென்று கவ்விக்கொண்டவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வழக்கம்போல கண்சிமிட்டினான்.
“என்னடி? நல்லாப் பார்த்துக்கிட்டியா…உன் புருஷன் மன்மதன் தானா?!” என்று கள்ளச்சிரிப்போடு அவன் வினவ…அதில் “மக்கும்!” என்று நொடித்து தன் உதட்டை அவள் சுழிக்க அதில் வழக்கம் போல கிளர்ந்தவன் தாபத்தோடு அவள் முகம் நோக்கி ஆசையாய் குனிய… அவளது இதழை நெருங்கிய வேளையில் ஒற்றை விரல் வைத்து தடுத்தவள்...
“ வேலு…போய் பிரஷ்ஷப் ஆகிட்டு வாங்க முதல்ல பசிக்குது சாப்பிடலாம் என்று தடை போட்டவளை… சலிப்போடு பார்த்தவன்… அவளது காதோரம் நெருங்கி எதையோ கிசுகிசுக்க.. அதில் முகம் சிவந்தவள்… செல்லமாய் அவனை முறைத்து அவனது கைப்பிடியிலிருந்து லாவகமாய் விலகி…. கதவருகே சென்றவள் அவனைத் திரும்பிப் பார்த்து வக்கலம் காட்டிவிட்டு ஓடிவிட்டாள். மனைவியின் குழந்தைத்தனமான செயலில் முகம் விகசிக்க…..தலையை ஆட்டி புன்னகைத்தவாறே குளியலறைக்குள் நுழைந்தான் பாண்டி.
முகம் கழுவி. வேறு உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவன் சமையலறையில் எதையோ உருட்டிக்கொண்டிருந்த மனைவியை பின்னோடு அணைத்தான். இதழ்கள் அவளது கழுத்து வளைவில் உரச..”என்ன பண்ற பேபி…! என்ற கணவனின் தொடுகையில் உருகிக் குழைந்த தன்மனதை கட்டுப்படுத்திக் கொண்டவள்..அவனை விட்டுவிலகி…
“வேலு..! நீங்க முதல்ல இங்கிருந்த கிளம்புங்க! சமைக்கும் போது இப்படியெல்லாம் தொந்தரவு பண்ணா அப்புறம் சமையல் சொதப்பிடும்… ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வர்றேன் நீங்க டைனிங் டேபிளுக்கு போங்க…!” என்றவள் அவனது தோளில் கைவைத்து கையோடுஅவனை சமையலறையில் இருந்து வெளியேற்றினாள்.
“வர வர ரொம்பவே பண்றடி நீ!” என்று சலித்தாலும் நல்லபிள்ளையாய் டைனிங் சேரில் சென்று அமர்ந்தவனைப் பார்த்து புன்னகைத்தவள்..அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆம்லெட்டை சுடச்சுட போட்டு எடுத்துவந்தவள் கணவனுக்கு தட்டை வைத்து உணவை பரிமாறிவிட்டு அவன் முகத்தையே ஆவலோடு பார்க்க… ஒரு வாய் உண்டவனின் புருவம் வியப்பாய் உயர்ந்து மனைவியை பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்ட…அதில் முகம் மலர்ந்தவள்… தானும் அவனருகே அமர…வழக்கம் போல சில பல சில்மிஷங்களோடு திருப்தியாய் உண்டு முடித்தவன் வரவேற்பரையில் சென்று அமர்ந்து கொண்டான். சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கணவனைத் தேடி தமிழரசி வரவேற்பறைக்கு செல்ல அங்கே அவனைக்காணாமல் திகைத்து அறைக்குள் சென்று தேடியவளை பின்னிருந்து அணைத்துத் தூக்கிக்கொண்டான் அவளது கணவன்.