நினைவிலும் நீதானடி என்னுயிரே
அத்தியாயம் ----4
நித்தமும் நிழலாக
வருகிறேன் உனக்காக
நிழலை நீங்க வழியில்லை
வெறுத்தாலும் அன்பே..
இயற்கை கொஞ்சும் பேரழகாக நெடுநெடுவன வளர்ந்த மரங்கள் கிளைப் பரப்பி வெயிலுக்கு குடைப் பிடித்தது சாலையோரங்களில்.. சாலையை கடந்து மண்பாதையில் காரில் சென்று கொண்டிருந்தான் அனலரசு. தன் தோட்ட வீட்டின் முன் நிறுத்தினான்.
வானுயர்ந்த தென்னை மரங்கள் போர்வீரர்கள் போல வரிசையில் நிற்க, மாமரத்தில் அஞ்சகங்கள் கொஞ்சி மகிழும் சத்தமும் ,மாதுளை ,கொய்யா பல வகை பழமரங்களும் வாழைமரங்களும், வயலில் நெற்கதிர்கள் மன்னவனின் பார்வையிலே தலைசாய்ந்து இன்றோ நாளையோ அறுவடைக்கு காத்திருக்க..கரும்பு தோட்டத்தில் சரம் சரமாக கரும்பு கணைகள் வெட்டப்பட்டு டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருக்க அதைப் பார்த்ததும் காரை விட்டு இறங்கிய அனலரசைப் பார்த்த ராசு "சின்னய்யா" வாங்க கூப்பிட்டான்.
என்ன ராசு இன்றையக்கே முடிந்துவிடுமல்லவா வேலை ..டிராக்டரில் நேராக நம் ஆலைக்கு அனுப்பிவிடு கரும்பை..
நாளைக்கு நெற்கதிர்களை அறுவடை செய்ய ஆட்களை வரச் சொல்லிவிடு.. மஞ்ச காட்டிற்கு நாளைக்கு மறுநாள் ஆட்களை வரச் சொல், மடமடவென வேலையை சொல்லியவன் ,இந்த வாரம் கூலியும் சரிபார்த்து கொடுத்துவிடு காரில் ஏறி கிளிம்பினான்.
அதுவரை அவன் பார்வை அங்கிருந்த அழகான பழைய காலத்தில் கட்டிய வீட்டையோ முன்னாடி பெரிய வாசலும் இருபக்கமும் பெரிய தூண்களை கொண்டு திண்ணையும், உள் நுழைந்தும் அழகிய பட்டாசாலையும் ஓடிவிளையாட தோதாக பெரிய தூண்கள் தாங்கி கொண்டு நிற்க தேக்கில் செதுக்கிய ஊஞ்சல் கம்பீரமாக அழகாகவும், வளைந்த மாடிப்படி மரத்தாலே செய்து அழகுற இத்தனை அழகான வீட்டைக் கூட ஏறுயெடுத்து பார்க்காமல் எங்கோ பார்த்து சொல்லி விட்டு கிளிம்பினான். அவன் செல்வதைப் பார்த்த ராசு சின்னய்யா எப்ப நீங்கள் பழையப்படி மாறுவீங்க..வருடக்கணக்காக இந்த வீட்டில் சத்தமே இல்லாமா பாழடைந்து கிடைக்கிறதே..தனக்கு தானே புலம்பியபடி கரும்பு தோட்டத்தை நோக்கி சென்றான் ராசு.
அனலரசின் மனதில் தோட்டத்திற்கு செல்லும்போது எல்லாம் பழைய ஞாபகங்கள் அவனுள் தீயாக எரிகிறது..எத்தனை எத்தனை காலங்கள் கடந்து சென்றாலும் இந்த ஞாபகங்கள் மறையாதா... வண்டியை ஓட்டியவன் ஸ்டீரிங்கில் ஒங்கி குத்தினான்..
மனமோ பலதை யோசித்து யோசித்து
கொதிகலனா கொண்டியிருந்தது. மறக்கவும் வழியில்லாமல் குண்டூசியில் ஒவ்வொரு செல்லிலும் குத்தி குத்தி ரணமாக மாறியது மனம்.. எத்தனை எத்தனை சந்தோஷங்கள் அவ்வீட்டில்..எல்லாமே போய்விட்டதே..எதனால் யாரால்...தெரிந்து இருந்தும் அக்காலத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியாத கோழை சிறுவனாக இருந்தேனே.. இழந்தற்கும் இல்லாமல் போனதற்கும் காரண காரியங்களை எங்கின அறிய அறிந்தாலும் அந்நாளில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது . மனக்குமறலாக பலதை யோசித்து அக்கோபத்தை வண்டி ஓட்டுவதில் காட்டினான்.. காரும் காற்றைப் போல சீறிக் கொண்டு சென்றது..அத்தனை கோபமும் அவனுள் இருந்தாலும் அதை தொழிலிலும்,வேலை செய்பவர்களிடம் காட்டாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதில் திறமைசாலி தான்..
தன் கரும்பு ஆலைக்கு சென்றவன் அங்குள்ள வேலைகளை பார்வையிட்டவன் தனக்காக ஒதுக்கி அறையில் அமர்ந்தவன் எதுவும் செய்யாமல் அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தான்... எப்பவும் மனதினுள் ஒரு குரல் ஒலித்து கொண்டே இருக்க ''மாமா.. எங்கயிருக்க'' கேட்டபடி கவுன் அணிந்து கால்களில் அணிந்த கொலுசு சத்ததுடன் ஓடி வர அவனோ ''ஏய் கண்ணாம்மா விழுந்து விடாதே ''நானே வரேன் ஓடி வாரியணைத்து பஞ்சு கன்னத்தில் முத்தமிட்டான்... மாமா மாமா குழந்தையும் அவனுடைய இரு கன்னங்களில் முத்தமிட்டு கொஞ்சியது...மனதில் ஓடிய எண்ணத்தை ஒதுக்கவே முடியாதா மறக்க முடியாதா கலங்கி தான் போனான் அனலரசு...கலங்கி கண்கள் ரௌத்திரமாக மாறியது . தீயாக எரிய கண்களோ குருதியின் நிறத்தில் மாறியது...
மாலை வரை அங்கிருந்து வேலைகளை முடித்தவன் வீட்டிற்கு கிளிம்பினான்..
ஆற்றங்கரையில் தண்ணீர் சலசலவென்று ஓடும் ஒலியும், ஆற்று மீன்கள் துள்ளி துள்ளி குதித்து நீந்துவதும் இதமான மெல்லிய காற்று தேகத்தை சிலிர்க்க வைக்க அங்குள்ள பாறையில் அமர்ந்திருந்தாள் அன்பினி.. அமைதிக்கு பெயர் அன்பினியா...இல்லை எப்பவும் அந்த மீனைப் போல துள்ளி குதித்து கால்கள் தரையில் படாமல் காற்றாய் பறப்பவளே.... ஆனால் இப்ப மனமோ பல சிந்திக்க ஆற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..
'' அன்பு ஏய் அன்பு ..'' சத்தமாக கூப்பிட திரும்பாமல் அமர்ந்திருந்தவளை பார்த்த தேன் மொழி செவியின் அருகே சென்று ஊ...ஊ..ஊ சத்தமிட திடுக்கிட்ட அன்பு..விருட்டென்று எழுந்தவள் உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் பக்கத்தில் வந்து கத்தாதே ..அவளை துரத்த ஆமாம்டி நானும் வந்தலிருந்து ''அன்பு அன்பு'' கூப்பிட்டுகிட்டு இருக்கேன் திரும்பி பார்க்காமல் எந்த கோட்டை பிடிக்க யோசித்து கொண்டுயிருக்க கேட்டபடி பாறையில் மூச்சு வாங்க அமர்ந்தாள்... அவள் அருகில் அமர்ந்த அன்பினியும் மூச்சு வாங்கி படி உனக்குத் தெரியாதா ஹனி.. குரல் தழுதழுக்க சொல்ல அருகில் அமர்ந்தவளை தோளை சுற்றி கைப் போட்டு தன்னுடன் இறுக்கியவள் எல்லாம் சரியாகும் இப்படி முகத்தை வைத்துக் கொள்ளாதே...தட்டிக் கொடுத்தாள்..
இப்ப உங்க மாமா என்ன சொல்லறாங்க ..கேட்க ம்ம்...அவர் என்ன சொல்கிறார்..பார்த்தாளே பயமா இருக்கு பக்கத்தில் நெருங்க முடியல... அவர் அருகில் போனாலே நான் எரிந்து விடுவனோ பயமா இருக்குடி கண் கலங்க பேசினாள்.
அவள் பேசுவதை கேட்ட ஹனி...ஏய் அவர் மாறிவிடுவார் சரியாகி விடும்.. சொன்னவள் .. இனி வேறு யோசிக்கலாம் ..இருவரும் பேசியபடி எழுந்து வீட்டை நோக்கி நடந்தனர்..