ஹாய் ஐஷு.
ராமனாய் வந்தவன்
நேர்மையின் திருவுருதான்...!
சீதையை வதைத்தாலும்
காதலில் கண்ணதான்...!
நேர்மையின் பாதையில்
கடமையை மதித்து
கண்ணியம் காக்க
காதலை தொலைத்து
கனவினில் தவித்தவன்தான்...!
அதிதியாய் வந்தவள்
ஆதிக்க நாயகிதான்...!
ஆதர்ஷ நாயகன்
ஆழ்மனம் வென்ற
அதிசய சுந்தரிதான்...!
நேர்மையின் பாதையில்
நட்பினை மதித்து
கண்ணியம் காக்க
காதலை தொலைத்து
நனவினில் தவித்தவள்தான்..!
ஊருக்கு நல்லவனும்
உண்மைக்கு நல்லவளும்
ஊமையாய் ஆடிய காதல் நாடகம்
உறவினில் உன்னதம் தான்!
மரபினில் சம்மதம் தான்!
முதல் காதல்
முடிவில்லா காதல்
முத்தான காதல்
முழுமையான காதல்
மௌனமாய் பேசிய பாஷைகள்
காலத்தின் இலக்கணமே...!
அருமையான கருவை அழகாய் சொல்லிய கதையின் வேகம் விவேகமே...! சுவை அறுசுவையே...!
வாழ்த்துக்கள் ஐசு, கதைக்குக் கதை வித்தியாசம் காட்டும் உங்கள் எளிய நடைக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி.
மேலும் பல நல்ல கருவுடன் வித்தியாசமான கதை தர என் இனிய வாழ்த்துக்கள், நன்றி.