அத்தியாயம் 3 - ரேஷ்மா, அனு மற்றும் யாழினி
அடுத்த நாள் காலை வழமையை விட சீக்கிரமாகவே பாடசாலைக்கு கிளம்பிவிட்டாள் பிரியா. பாடசாலை வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக குழலியிடமும் வைஷ்ணவியிடமும் முந்தைய நாள் நடந்த சம்பவங்களைக்கூறினாள்.
"யார் செஞ்ச புண்ணியமோ அந்தப்பையன் அங்க வந்திருக்கான்" குழலி சொல்ல, "ஆமாடி, அந்த பாண்டிய ஏற்கனவே இப்பிடி தனியா போன பொம்பள பிள்ளைங்ககிட்ட வம்புக்கிழுத்தன்னு சொல்லி போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணியிருக்காங்க, நீ தப்பிச்சது பெரிய விஷயம்தான்" என்று வைஷ்ணவி தன் பங்கிற்கு பயமுறுத்தினாள்.
"சரி அவன்கூட ஏதாவது பேசினியா?" என்று குழலி கேட்டுக்கொண்டிருக்க வைஷ்ணவி இடைமறித்து "யாரு இவளா? மூச்சு விட்டிருக்கமாட்டாள். பயத்தில ஒரு தாங்க்ஸ் கூட சொல்லாமத்தான் வந்திருப்பாள்" என்று சொல்ல பிரியாவும் ஆம் என்பது போல் தலையசைத்தாள். பிரியாவின் இணைபிரியா தோழிக்கு அவளைப்பற்றி இது கூடவா தெரியாமலிருக்கும்.
"ஹேய் லூசுப்பிள்ளை, இண்டைக்கு ஸ்கூல் முடிஞ்சதுக்கப்புறம் அவனைக்கண்டு தாங்க்ஸ் சொல்லிடு, எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கான்........" என்று குழலி காட்டமாக சொன்னாள்.
அன்றைய நாள் முழுவதும் எப்போது பள்ளி முடிந்து அவனை சந்திக்கலாம் என்று ஆவலில் காத்திருந்தாள் பிரியா.
பிரியாவின் நீண்ட நேர தவிப்பிற்கு பின் ஒருவழியாக பள்ளியும் முடிந்தது, நெஞ்சம் படபடக்க தோழிகளை இழுத்துக்கொண்டு பள்ளியிலிருந்து வெளியேறினாள் பிரியா.
அன்றைய நாளை முடிப்பதற்கு பிரியா பட்ட அவஸ்தையை கண்கூடாக பார்த்த வைஷ்ணவியும் குழலியும் தங்களது கேலிப்பேச்சுக்களை தொடங்கினர்.
"ஐயோ ஏன்டி இவ்வளவு அவசரப்படற? நேற்றுதான் ஸ்பெஷல் கிளாஸ் லேட் ஆச்சு, இண்டைக்கு என்னடி பிரச்சன?" என்று வைஷ்ணவி ஏதும் விளங்காதவள் போல கேட்க குழலியும் "என்ன வைஷு உனக்கு மறந்துடுச்சா? இன்னைக்கு மேடம் அந்த பையன மீட் பண்ண போறாங்க. அதுக்குத்தான் இந்த அக்கப்போர்" என்று சொல்லிவிட்டு இருவரும் கொல்லென்று சிரித்தனர்.
இவர்களது கேலிப்பேச்சை கணக்கிலெடுக்காமல் வேகமாக நடக்கத்தொடங்கினாள் பிரியா.
"அவள் ஒரு தாங்க்ஸ் சொல்றதுக்காக மீட் பண்ண போறாள், அதுல என்ன நக்கல் வேண்டி கிடக்கு உனக்கு?" என்று மேலும் வைஷ்ணவி கலாய்க்க, பதிலுக்கு குழலியும் "ஒரு தாங்க்ஸ் சொல்றதுக்குத்தானா இன்னைக்கு பூரா மணிக்கூடையே பார்த்திட்டு இருந்தாள். நம்புறமாதிரி இல்லையே?" என்று சொல்லிவிட்டு மீண்டும் கோரஸ்ஸாக பற்களை காட்டினர் இருவரும்.
பிரியாவும் பொறுமை இழந்தவளாய் "சும்மா இருங்கடி தொண தொணன்னுட்டு இருக்காம, நானே டென்ஷன்ல இருக்கிறன்"
"இதில என்ன டென்ஷன் வேண்டி கிடக்கு?" என்று குழலியும் கொஞ்சம் சீரியஸாகவே கேட்டாள்.
"எப்பிடி போய் பேசுறதுன்னு தெரியல?"
"ஓகே, அப்ப நாங்களும் கூட வரவா? அப்பிடின்னா தைரியமா இருக்கும்தானே?" என்று வைஷ்ணவி சொல்ல....
"ஆணியே புடுங்க வேணாம், நானே பார்த்துக்கிறேன்"
பிரியாவின் இந்த பதிலை எதிர்பார்த்த தோழிகள் இருவரும் வாயை பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்கினர். பிரியாவிற்கு தான் ஏன் அவர்களை தவிர்க்கிறேன் என்று விளங்கவில்லை, ஆனால் தனியாகத்தான் சென்று பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
தெருமுனையில் பிரியாவின் கடைக்கண் பார்வைக்காக காத்துக்கொண்டிருந்தான் அந்தப்பையன். ஆனால் இன்று அவனது நண்பர்கள் அவனுக்கு துணையாக இல்லை. அதிலிருந்து அவனும் தன்னைப்போலவே இன்று யோசித்திருக்கின்றான் என்று பிரியாவிற்கு விளங்கியது.
இதுவரை வேறு எந்த ஆண் நண்பருடனோ கதைத்து பழக்கப்படாத பிரியா தோழிகளை சற்று முன்னே சென்று தனக்காக காத்திருக்குமாறு கூறிவிட்டு அவனை நோக்கி நடந்தாள். வழமையாக பிரியாவின் அழகில் சொக்கிப்போகும் அவன் இன்று அவள் தன்னை நோக்கி நடந்த்து வருவதைக்கண்டதும் மூர்ச்சையிழந்து நின்றான்.
அருகில் பிரியா வந்ததும் இருவருக்கும் பேசுவதற்கு எதுவும் வரவில்லை.
"ரொம்ப தாங்ஸுங்க, நேற்று நீங்க மட்டும் அங்க வரலனா என்ன நடந்திருக்குமோ தெரியல. நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு" பேச்சை தொடங்கியது ப்ரியாதான்.
"இட்ஸ் ஓகேங்க, இதிலென்னருக்கு......."
மறுபடியும் சில வினாடிகள் மௌனம்......... "உங்கள சில டைம்ல பார்த்திருக்கிறன். உங்க பெரு என்ன? எந்த ஸ்கூல்?" இந்த தடவையும் முந்தியது பிரியாதான்.
"அடிப்பாவி சில டைம் பார்த்திருக்கிறியா? உன் பின்னால நாய் மாதிரி ஆறு மாசமா சுத்திட்டிருக்கன்.... சில டைம்மாம்ல....." என்று மனசிற்குள் சிரித்துக்கொண்டே "என் பேரு ஹரி, பிரிட்டிஷ் இன்டர்நஷனல் ஸ்கூல்ல படிக்கிறன்"
"ஓ, என்னோட பேரு......" என்று பிரியா தொடங்கும்போதே ஹரி இடைமறித்து "ஆல் டீடெயில்ஸ் ஐ நோ" என்று புன்முறுவினான்.
ஹரியின் பேச்சில் மயங்கியவளாய் நின்றிருந்தாள் பிரியா. "மறந்துட்டேன், நேற்றே என் பேர சொல்லித்தான் கூப்பிட்டீங்கல்ல. சாரி"
தான் தெரு முனையில் அதிக நேரமாய் நிற்பதை உணர்ந்த பிரியா "டைம் ஆகுது, நான் கிளம்புறன்" என்று சொல்லியபோது அவளுக்கு போக இஷ்டமில்லை என்பது ஹரிக்கு புரிந்தது.
"இனி எப்ப மீட் பண்ணலாம்?" சரியான நேரம் பார்த்து தூண்டில் போட்டான் ஹரி.
இந்தக்கேள்வியை சற்றும் எதிர்பாராவிட்டாலும் பிடித்திருந்தது பிரியாவிற்கு. "இனி நான் எதுக்காக உங்கள மீட் பண்ணனும் ஹரி?" என்று கூறிவிட்டு சிட்டாக பறந்தாள் பிரியா.
தன்னை சத்யா அழைப்பதை கேட்டு திரும்பிய மணியும் திரும்ப அவர்களிருக்கும் இடத்திற்க்கு வந்தான்.
"உனக்கு ஆதிட தங்கச்சிய பற்றி என்ன தெரியும்?" மணி வந்ததும் வராததுமாக துகிரன் இந்தக்கேள்வியை கேட்க பதறாமல் பதிலளித்தான் மணி.
"சார் தங்கமான பொண்ணு சார். பேர் யாழினி. ஆதி சாருக்கும் தங்கச்சின்னா உயிர், அப்பப்ப எனக்கு நிறைய உதவிகளும் செய்யும் சார் அந்தப்பொண்ணு. கோடீஸ்வர வீட்டு பொண்ணுன்னு சின்ன பந்தா கூட இல்லாதவ" என்று யாழினியின் புகழ் பாடினான் மணி
"சரி கடைசியா எப்ப அந்த பொண்ண நீ பார்த்த?" என்று துகிரன் விசாரிக்க,
"சார் ....... அந்தப்பொண்ணும் மேலதான் சார் இருக்கு. நேற்று பார்ட்டிக்கு தன்னோட காதலனோடு வந்திருந்தா, போகும்போது என்ன நலம் விசாரிச்சிட்டுதான் போனா" என்று மணி கூற துகிரனுக்கும் சத்யாவிற்கும் தூக்கி வாரிப்போட்டது.
"டேய் உளறாத" சத்யா அதட்ட, "சத்தியமா சார்" மணி பொய் சொல்லவில்லை என்பது துகிரனுக்கு தெரிந்தது.
யாழினியும் அந்த பார்ட்டிக்கு வந்திருக்கிறாள் என்றால் அந்த விடயம் அவர்களின் அப்பாவிற்கு தெரியாதா? ஏன் மகள் மலேசியாவில் என்று பொய் சொல்ல வேண்டும்? யாழினியுடன் வந்தவன் யார்? போன்ற கேள்விகள் துகிரனின் மனதில் எழ, போதை தெளிந்தவர்களை விசாரிக்க மேலே சென்றான் துகிரன்.
10B அபார்ட்மென்ட்க்கு சென்ற துகிரனும் சத்யாவும் அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் போதையிலிருந்தவர்களின் நிலையினை கேட்டறிந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் போதை தெரிந்துவிட்டது என்பதை கான்ஸ்டபிள் உறுதிப்படுத்தியதும் அனைவரையும் ஒன்றன் பின் ஒன்றாக விசாரணைக்கு அனுப்புமாறு துகிரன் கான்ஸ்டபிளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.
"சத்யா இந்த இன்குவாரில என்ன நடக்கும்னு நினைக்கிறீங்க?"
"சார் இவங்கள்ல யாரோ ஒருத்தர் தான் கொலை செய்திருப்பாங்க, அந்த ஆள் நிச்சயம் பொய் சொல்லும்னு நினைக்கிறன்"
"எக்ஸ்சாட்லி"
"ஆனா அத பொய் எண்டு எப்பிடி கண்டுபிடிக்கிறது சார்?"
"அதையும் அந்த கொலை செய்த ஆள்கிட்ட இருந்து தான் தெரிஞ்சு கொள்ளனும்"
"புரியல சார்"
"போகப்போக புரியும். இப்ப அவங்கள டீப்பா ஆப்செர்வ் பண்ணுங்க" உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே "எக்ஸ்கியூஸ் மீ" என்றபடி முதலில் ஒருவன் போதை தெளிந்தும் தெளியாமலும் வந்து துகிரனுக்கும் சத்யாவிற்கும் முன்னால் வந்து உட்கார்ந்தான்.
பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பையன் போல இருந்தான். முறுக்கேறிய உடல். இடது கையில் டாட்டூ. ஆதி இறந்தது குறித்து அதிர்ச்சியும் சோகமும் குழப்பமும் அடைந்திருந்தான் என்பது தெளிவாக விளங்கியது
பெயர் ராபர்ட், வயது 28, ஆதியின் நண்பன், காலேஜில் ஒன்றாக படித்தவன். தொழிலதிபர் ராம்பிரசாத்தின் ஒரே மகன் மற்றும் வேறு சில தகவல்களையும் சொன்னான். ஆனால் அவை எதுவும் முக்கியமானதாக துகிரனுக்கு படவில்லை. சத்யாவோ அனைத்து வாக்குமூலங்களை ரெகார்டரில் பதிந்து கொண்டான்.
ராபர்ட்டை போல அடுத்தும் நண்பர்கள்தான்.சஞ்சய், வினோத், ரிஷி, ஹுசைன். பெரும் செல்வந்தர் வீட்டு பிள்ளைகள். சஞ்சய், வினோத் , ராபர்ட் ஆகியோர் ஆதியுடன் காலேஜில் ஒன்றாக படித்தவர்கள். ஹுசைன் ஏதோ ஒரு நைட் கிளப்பில் அறிமுகமானவன்.ரிஷியின் அப்பாவும் ஆதியின் அப்பாவும் நெருங்கிய சிநேகிதர்கள் . ஐவரும் முடா குடிகாரர்கள்.இரவு பார்ட்டியில் மூக்கு முட்ட குடித்துவிட்டு மட்டையாகிவிட்டனர் என்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரிந்தது. அதில் வினோத்தும் ரிஷியும் தங்களது கேர்ள் பிரெண்டுடன்தான் பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். வினோத்தின் கேர்ள் ப்ரெண்ட் லேகா, ரிஷியின் கேர்ள் பிரெண்ட் இஷா. ஆண்களுடன் ஈகுவாலிட்டியை குடியிலும் காட்டக்கூடியவர்கள்.
இவர்கள் ஒருவருக்கும் என்ன நடந்தது என்பது கூட தெரியவில்லை. அப்படித்தான் அவர்கள் சொல்கின்றனர். அதை அப்போதைக்கு துகிரனும் நம்பினான்.
அடுத்ததாக துகிரன் முன் வந்தாள் ஒரு பெண், அழகுப்பதுமையாக நின்றிருந்தாள். கண்களின் ஓரம் கண்ணீர்த்துளி வெளிவர தயாராக இருந்தது. ஏற்கனவே நிறைய கண்ணீர் விட்டுவிட்டாள் என்பதை அவளது சிவந்துபோன முகம் காட்டிக்கொடுத்தது. உள்ளத்தில் இருந்த பயத்தையும் அவள் முகம் காட்டிக்கொடுக்க மறுக்கவில்லை. இவற்றையெல்லாம் கவனித்த துகிரன் அவளை விசாரிக்கும்போது கூடுதல் கவனமெடுத்தான்.
"பேர் என்ன?"
"அனு"
"முழுப்பேர் அதுதானா?"
"அனுராதா"
"ஆதியை உங்களுக்கு எப்பிடி பழக்கம்?"
"நான் ஆதியோட லவ்வர். ரெண்டு பெரும் வன் இயரா ரிலேஷன்ஷிப்ல இருக்கிறம். அவர் என்னத்தான் கட்டிக்கிறதா இருந்தார்......." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்களிலிருந்து கண்ணீர் பீறிட்டது.
துகிரன் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தான்.
அனு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திய பின் துகிரன் தொடர்ந்தான்.
"நேற்று எதுக்கு பார்ட்டி?"
"நேற்று ஆதி அவரோட பிரெண்ட்ஸ்க்கு என்ன இண்ட்ரடியூஸ் பண்ணிவைக்கிறதுக்கு இந்த பார்ட்டிய அரேஞ் பண்ணியிருந்தார்"
"ஆதிட கேரக்டர் எப்பிடி?"
"ஆதிய பற்றி நிறைய தப்பான விஷயங்களை எல்லாரும் சொல்லுவாங்க. பட் அவர் என்னை காதலிக்க தொடங்கினதுக்கப்புறம் ரொம்பவே மாறிட்டாரு, நான்தான் அவரை மாத்திட்டேன்"
கேள்விகளை வேறு திசை நோக்கி கொண்டு சென்றான் துகிரன், "உங்கப்பா என்ன பண்றார்?
"எனக்கு அப்பா, அம்மா யாருமே இல்ல, என்ன சின்ன வயசில இருந்து பாட்டிதான் வளர்த்தாங்க. பாட்டி ஒரு வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அப்புறம் தனியாதான் இருக்கிறன்.
"எந்த ஏரியா?
"கேளம்பாக்கம்"
"எந்த காலேஜ்?
"ஸ்ரீ ராமச்சந்திரா இன்ஜினியரிங் காலேஜ்ல எம்.பி.ஏ படிச்சன்"
"ஓகே, எப்பிடி ஆதியோட பழக்கம்?"
"நான் அவரோட கம்பெனில தான் ஒர்க் பண்றன்"
"என்ன பொசிஷன்?"
"அவரோட பர்சனல் அசிஸ்டன்ட்"
இவர்களுக்குள் எவ்வாறு காதல் மலர்ந்தது என்று துகிரனுக்கும் சத்யாவிற்கும் புரிந்தது.
"எப்பயிருந்து உங்களுக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடுற பழக்கமெல்லாம்?"
"நான் அந்த மாதிரி டைப் இல்ல, நேற்று ஆதி கெஞ்சி கேட்டதால ஒரு தரம் எடுத்துகிட்டேன். முதல் தடவ என்றதால தலை சுத்தி மயக்கம் வந்திட்டு"
"அப்ப ஆதி உங்களோட இருக்கலயா?
"பார்ட்டி தொடங்கினதில இருந்து என்னோடதான் இருந்தார், பன்ரெண்டு மணிக்கு என்ன மொட்ட மாடிக்கு கூட்டி போய் ரிங் தந்து ப்ரபோஸ் பண்ணினார். அதுக்கப்புறம் கீழ வந்துதான் என்ன ட்ரின்க் பண்ண சொல்லி கேட்டார்.அப்பறமா என்ன நடந்திச்சுன்னே தெரியல. கண்ண முழிக்கிற நேரம் போலீஸ் இருந்திச்சு"
"ஓகே மிஸ்.அனு, ஆதிய யாரோ நேற்று மாடில இருந்து தள்ளிவிட்டிருக்காங்க. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? பயப்படாம சொல்லுங்க."
"நேற்று பார்ட்டிக்கு வந்திருந்தவங்க எல்லாருமே ஆதியோட பிரெண்ட்ஸ்தான். பட் பார்ட்டிக்கு இன்வைட் பண்ணாமலே ரேஷ்மா அவ பாய் பிரெண்டு கூட வந்திருந்தா"
"ரேஷ்மா யாரு?"
"ரேஷ்மா ஆதியோட பிரெண்ட்தான், எக்ஸ் லவ்வர். பட் அது ரேஷ்மாட வன் சைட் லவ்ன்னுதான் என்கிட்ட ஆதி சொல்லியிருக்கிறார். என்னாலதான் ஆதி அவகிட்ட இருந்து விலகிட்டார்ன்னு அவளுக்கு என்கிட்ட கோபமிருக்கு. நேற்று ஆதி கூட வந்து சண்டை பிடிச்சா. ஆதி என்ன பேசிக்கிட்டாங்க எண்டு சொல்லல. பிறகு திடீரெண்டு சைலன்ட் ஆகிட்டா. அவ ஏன் பாய்பிரெண்ட கூட்டி வந்தான்னும் தெரியல. அதுலதான் சின்ன சந்தேகமிருக்கு"
"ஓகே யூ மே கோ நவ், கான்டக்ட் நம்பர் அன்ட் அட்ரெஸ்ஸ குடுத்திட்டு போங்க, கூப்பிடுற நேரம் ஸ்டேஷன்க்கு வரவேண்டியிருக்கும்" என்று துகிரன் முதல்கட்ட விசாரிப்பை முடிக்க, அனுவும் விபரங்களை சத்யாவிடம் கொடுத்துவிட்டு கண்களின் ஓரத்தை கைக்குட்டையால் துடைத்தபடி வெளியேறினாள்.
அனு வெளியில் போனதும் கான்ஸ்டபிளிடம் சிறிது நேரத்தின் பின்னர் அடுத்த நபரை உள்ளே அனுப்புமாறு சொன்ன துகிரன் அவளது வாக்குமூலத்தை மீட்டி பார்க்க தொடங்கினான்.
"சேர் அனு சொல்றத வச்சு பார்த்தா ரேஷ்மால தான் டவுட் வருது" என்று சத்யா சொல்ல, துகிரனோ எதுவும் பேசாமல் இருந்தான்.
சிறிது நேரத்தின் பின்னர் "சத்யா எதையும் உடனே முடிவெடுக்க வேணாம், இப்ப இங்க விசாரிக்கிற எல்லாரையும் அவங்கதான் கொலை பண்ணியிருப்பாங்க என்ற கோணத்தில விசாரியுங்க. இங்க ஒருத்தர் மாத்திரம் தான் பொய் சொல்லுவாங்க எண்டில்ல, நிறைய பேர் பொய் சொல்லலாம், மே பி இந்தக்கொலைல கூட நிறைய பேர் சம்பந்தப்படலாம். ஸோ வெரி கேர் புல்" என்று அறிவுறுத்தினான் துகிரன்.
துகிரனும் அடுத்ததாக ரேஷ்மாவினை உள்ளே வரச்சொல்லுமாறு கான்ஸ்டபிளுக்கு கட்டளையிட்டான்
காண்போரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கன்னியென துகிரனின் முன் வந்தமர்ந்தாள் ரேஷ்மா. மேலைத்தேய சீமாட்டிகள் அணியும் உடையணிந்து, எப்பேர்ப்பட்ட ஆடவனையும் தன் அழகிலும் கவர்ச்சியிலும் கட்டிப்போடும் வல்லமை கொண்டவளாக வந்திருந்தாள் அவள். ரேஷ்மாவுடன் ஒப்பிடும் போது அனு அழகில் கொஞ்சம் குறைவுதான் என துகிரனும் எண்ணிக்கொண்டான்.
மறுபுறம் சத்யா வந்த வேலையை மறந்து ரேஷ்மாவின் வனப்பில் மதிமயங்கி நிற்க, துகிரன் அவள் கண்களில் குடி கொண்டிருந்த பயத்தினை தெளிவாக கண்டு கொண்டான். கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்ததற்கான தடமில்லை.
துகிரனும் சத்யாவின் கவனத்தை கலைக்கும் முகமாக "சத்யா ஸ்டார்ட் பண்ணுங்க" என்றதும் சுயநினைவுக்கு வந்தவனாக கேள்விகளை கேட்க தொடங்கினான்.
"உங்க பேரு மிஸ்?"
"ரேஷ்மா"
"வயசு?"
"இருபத்துமூணு"
"எந்த ஏரியால இருக்கிறீங்க?"
"வளசரவாக்கத்தில........." என்று ரேஷ்மா கூறிக்கொண்டிருக்கும் போதே துகிரனுக்கு சத்யாவின் கேள்விகள் எதற்காக கேட்கப்படுகின்றன என்று விளங்கிவிட்டது. இன்னும் அவன் மயக்கத்தில் இருக்கிறான் என்பதும் விளங்கியது.
உடனே துகிரன் இடைமறித்து "உங்களுக்கு எப்பிடி ஆதிய பழக்கம்?" என கேள்வியின் திசையை மாற்றினான்.
"நானும் ஆதியும் ஒருத்தர ஒருத்தர் மூணு வருசமா காதலிச்சிட்டு இருந்தோம்"
"அப்பிடின்னா அனுராதா என்கிறது யாரு?"
அனுவின் பெயரைக்கேட்டதும் ரேஷ்மாவின் சிவந்த முகம் மேலும் செந்நிறமாகியதை இருவரும் அவதானித்தார்கள்.
"அவள் தான் என்னையும் ஆதியையும் பிளான் பண்ணி பிரிச்சவள், இப்பவரைக்கும் ஆதியும் அனுதான் அவனோட உயிருன்னு சொல்லிட்டு இருந்தான். இல்ல இல்ல அப்பிடி என்ன வசியம் செய்தாளோ தெரியல" என்று கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.
"ஸோ உங்களுக்கும் ஆதிக்கும் எப்ப பிரேக் அப் ஆச்சு?"
"அனு எங்க லைஃப்ல வந்த பிறகுதான், கிட்டத்தட்ட வன் இயர் ஆகிடிச்சு"
"ஸோ லாஸ்ட் வன் இயரா உங்களுக்குள்ள எந்த கனேக்க்ஷனும் இல்ல. ஆம் ஐ ரைட்?"
"ஆமா, பட் நான் இன்னும் ஆதியத்தான் விரும்புறன், அவனில்லாம என்னால வாழ முடியாது. அதனாலதான் நேற்று அவன் பார்ட்டி குடுக்கிறான்னு தெரிஞ்சிக்கிட்டு எனக்கொரு முடிவு கேட்கிறதுக்காக இங்க வந்தன்"
"ஆதி அனுவத்தான் மேரேஜ் பண்ணிக்கப்போறான்னு தெரிஞ்சதும் கோபத்துல அவன மாடில இருந்து தள்ளிவிட்டுடீங்க. அப்பிடித்தானே?"
துகிரனின் இந்தக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ரேஷ்மா சற்று பதறினாலும் பதற்றத்தை வெளிக்காட்டாமல் பதிலளித்தாள்.
"எனக்கு அந்தளவுக்கு தைரியமெல்லாம் இல்ல சார், அதோட ஆதிய கொலை பண்றதால எனக்கு என்ன லாபம்? அனுவுக்கு தான் நிறைய லாபமிருக்கு. அவளோட தான் ஆதியும் நேற்று முழுக்க குட்டி போட்ட நாய் மாதிரி பின்னால திரிஞ்சான். இல்லன்னா ஆதிட அருமைத்தங்கச்சி அவள்ட புருஷனோட சேர்ந்து கதையை முடிச்சிருப்பாள். அவங்களுக்கு தான் ஆதிய கொல்ல வேண்டிய தேவை இருந்திருக்கும். இதில என்ன ஏன் சந்தேகப்படுறீங்க சார்?" என்று உளறிக்கொட்டினாள் ரேஷ்மா.
"ஆதிட தங்கச்சிக்கு ஏன் ஆதில கோபம்?"
"யாழினி சரியான பிடிவாதக்காரி. லாஸ்ட் இயர் அவங்க வீட்ல வேலை செய்த கார் டிரைவர யாழினி லவ் பண்ற விஷயம் ஆதிக்கு தெரிய வந்திச்சு. ஆதி உடனே அவன போலீஸ்ல சொல்லி வீட்ல தங்க நகைய திருடிட்டான்னு பொய் கேஸ் குடுத்து லாக் அப்ல வச்சு லாடம் காட்டினார். அதுக்கப்புறம் அவன் உயிர்ப்பிச்சை கேட்டு ஊரை விட்டு ஓடிட்டான். அப்புறமா ரெண்டு மாசத்தால யாழினியும் அவன் கூட ஓடி போய்ட்டா. பட் ஆதிட பேமிலி யாழினி மலேசியா போய்ட்டான்னு ஊரை ஏமாத்திட்டு இருக்காங்க. அன்னைக்கப்புறம் நேற்றுதான் அவ அந்த டிரைவர் கூட திரும்பி வந்திருக்காள். பழி வாங்க வந்திருக்கலாம். அவளும் அவள்ட புருசனும் ஆதியும் லிப்ட்ல மேல போனதையும் நான் பார்த்தன்"
"எத்தன மணிக்கு மேல போனாங்க?"