மாயம் செய்தாயோ
5
காற்றும் காதில்
உன் பெயர்
சொல்லிட..
இருளிலும் உன்
விம்பம் என்
விழிகளில்..
முடிவில்லா
மாயங்களின்
ஆரம்பமாய் நீ..
"சதீஷ் என்னடா பன்ன போற?"
என பல முறை கிசுகிசுத்தவாறே அவனைப்பின்தொடந்தவள் பதில் கிடைக்காமல் போக சலிப்புடன் அவனை பிடித்து இழுக்க அதேநேரம், அவன் நேராய் மாடிப்படி ஏறிச்சென்று கடைசியாய் இருந்த அறைக்கதவை நெருங்கி பூட்டில் கை வைக்கவும் சரியாய் இருந்தது..
"ஐயோ சதீஷ்..வேணான்டா"
என்று அலரியவாறே அவனை தடுத்தாள் நிலா.
"உஷ் சும்மா இரு.." அவளை அமைதிப்படுத்தி விட்டு அவன் தன் வேலையை பார்க்க..
"ஓய் அண்ணா ரூம்டா சதீஷ்..இங்க க்ளீன் பன்னவே உள்ள வர கூடாது..இதுல இப்போ எதுக்கு நீ உள்ள போற?" பயம் சந்தேகம் என பலதையும் கண்களில் தேக்கி அதோடே இதுக்காக இருக்குமோ என்ற எண்ணத்தையும் சேர்த்து சதீஷை பார்த்தாள் அவள்.
"தாங்கள் என்ன எண்ணுகிறீறோ அதுவே நான் உள்ளே நுழைவதன் காரணமும்.." கண்களை மூடி ஏதோ வரம் அளிப்பது போன்ற பாவனையில் கூறினான் அவன்.
"அண்ணா சைன்ன கொபி பன்ன போறியா?"
உறுதிப்படுத்திக்கொள்ள கண்கள் விரிய அவனிடம் கேட்டவளிடம்..
"அதுவே" என்று அதே பாவனையில் கூறிவிட்டு மீண்டும் கதவைத்திறக்கப்போனான் சதீஷ்.
"டேய் டேய் இருடா..போய் சாமிக்கு ஒரு பூஜை பன்னிட்டே வந்து திறக்கலாம்."
மீண்டும் தடுத்தவாறே நிலா கூற..
"நாம என்ன பேய் ரூம்முக்கா போறம். அதோட பூஜைக்கெல்லாம் இங்க நேரம் கொட்டி கிடக்குது பாரு. இன்னும் one hour la அவன் வந்திடுவான் நீ பேசாம வா." அலள் தலையில் தட்டி அமைதிப்படுத்தி விட்டு அவன் கதவின் கைப்பிடியைத்திருகி திறக்க..பாரமான கதவாக இருந்தாலும் இலகுவாஇ இடம் விட.. இடைவெளிவிட்ட கதவை பட்டென இழுத்து மூடினாள் நிலா..
"அடுத்தது என்ன எரும..?"
அவள் செய்கையை பார்த்து சலிப்புடனே வினவினான் சதீஷ்
"ஒரு வேளை நாம மாட்டிக்கிட்டா.."
இடையில் அவனின் முறைப்பைக்கண்டு
"அதில்லடா எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும்ல..சோ அப்பிடி மாட்டிக்கிட்டா என்ன ப்ளான்...?" ஏதோ அட்வன்ச்சர் பயணம் போவது போன்ற பாவனை தான் அவள் முகத்தில்.
சிறிது நேரம் யோசித்தவன்..
"நம்ம ஜிம்மி உள்ள போயிரிச்சி அத பிடிக்க வந்தம் சொல்லலாம்." வழி கண்டுவிட்ட சந்தோஷத்தில் கண்கள் மின்ன சதீஷ் கூற
"ஏஹ் ? அது யார்டா ஜிம்மி?" புரியாது கேட்டாள் நிலா..
"அதான் நாம வளக்குற எலி ச்சச்ச இல்ல அணில்.." என்றான் சதீஷ்.
"நாம எப்போ வளர்த்தம் அத?"
அவள் மீண்டும் யோசிக்க..
"வளர்க்கல்ல தான்..இந்த one hour ற்கு தத்து எடுத்துக்கலாம்.."
இப்போது அவள் முறைக்க..
"இப்ப உனக்கு சைன் வேணுமா வேணாமா..சும்மா கேள்வி கேட்டுட்டே இருந்த போய்டுவேன் நான். மாட்டிக்கிட்டா நீ ஒன்னும் பேச கூடாது சொல்லிட்டன்.வாய மூடிக்கிட்டு இரு அது போதும். வா இப்போ"
மீண்டும் அவன் கதவை திறக்க போக.."சதீஷ் சதீஷ் இரு இருடா.." என்று தடுக்க அவன் முறைத்த முறைப்பில் "ஹி ஹி பைனல்டா.." என்று அவனை பார்த்து கண்சிமிட்ட
தலையில் அடித்துக்கொணடவன் "சரி கேளு இங்கயே one hour ஆகிறும் பாரு" என்று கதவில் சாய்ந்து நின்றான் சதீஷ்.
"அதெல்லாம் ஆகாது..நீ சொல்லு... என்னன்னா ஜிம்மி நாய்க்கு வைக்குற பெயர் போல இருக்கேடா.." நிலா இப்போதாவது எதாவது உருப்படியாக கேட்பாள் என நின்றிருக்க அவள் கேட்ட கேள்வியில் அதே கதவில் தலையை முட்டிக்கொண்டவன்..
"என் பொறுமைய நீ ரொம்பவே சோதிக்கிற..இதெல்லாம் ஒரு கேள்வியடி வேணும்டா டிம்மின்னு வச்சிக்கோ..இனிமே ஒரு கேள்வி கேட்டாலும் நான் போய்டுவன் சொல்லிட்டன். "
தலையை அவசர அவசரமாக ஆட்டியவள் வாயை மூடிக்கொள்ள..அவன் கதவைத்திறந்தான்..
கதவைத்திறந்து பூனை நடை போட்டு உள் நுழைந்த இருவரும் பிரம்மித்து தான் போனார்கள். அறை எல்லா அறைகளிலும் போல கட்டில் கப்போர்ட் டிவி ப்ரிஜ் மேசை அட்டேட்ச் பார்த் ரூம் என இருந்தாலும் இங்கு இவர்கள் பிரம்மிப்பின் காரணம் அறையின் ஒவ்வொரு சுவரில் கண்ணைப்பறித்திடும் அழகில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் தான்.
"சதீஷ்..இவனுக்கு இதெல்லாம் தெரியுமா அதவிடு இதெல்லாம் வரைவானா என்ன இவ்வளோ இரசனையோட"
வாய்பிளந்தவாறே நிலா கேட்க..அதனையே தான் ஆமோதித்தான் சதீஷும்..
"சரி சரி வா நாம அவன் சைன் தேடலாம்." அவசரமாய் முன்னே நடந்தான் சதீஷ்.
இருவரும் அதே ரூமில் ஒரு பக்கமாய் இருந்த இன்னொரு கதவைத்திறந்து அவன் ஆபிஸ் ரூமினுள் நுழைந்தனர். இருவரும் ஒருவாராக தேடி ஒரு பைலில் இருந்த அவன் கையெழுத்தை பார்த்து பார்த்து அந்த latter யில் அதே போல் வைக்க..அது சக்தியின் கையெழுத்திற்கு 80% ஒத்துப்போவதாய் தான் இருந்தது.
ஒருவாரு வேலையை முடித்து விட்டு இருந்த இடத்திலே அனைத்தையும் வைத்த பின் வெளியேற எழுந்தவர்களுக்கு அறைக்கதவு திறக்கும் சத்தம் துல்லியமாய் ஒலித்தது.
சதீஷ் சட்டென வாட்ச்சை பார்க்க அது அழகாக ஐந்து என காட்டிக்கொண்டிருந்தது. சதீஷ் திரும்பி நிலாவை முறைத்து வைத்தான். அவள் இப்போது இதற்கு நேரமல்ல இது என்பது போல் சைகை செய்து விட்டு கதவை காட்ட..சதீஷும் அதுவும் சரி தான் என்பது போல் மெல்ல கதவு பக்கம் நகர்ந்தான்.
கதவில் காதை வைக்க அங்கே கேட்ட காலடியோசை அவன் வரவு நிஜம் தான் என்பதை உணர்த்திட நிலாவும் சதீஷும் தங்களையே சமன் செய்தபடி மூச்சை ஆழமாக இழுத்து விட்டனர்..
"டோன்ட் வொரி அவன் குளிக்க போவான்ல் அதுவரை இங்க இருந்துட்டு எஸ் ஆகிடலாம்." என சதீஷ் கூறவும் நிலாவும் சரி என புதிதாய் உதித்த நம்பிக்கொயோடு தலை ஆட்ட..
இருவரும் அவன் குளியலரைக்குள் செல்வதற்காய் தவமிருந்தனர்.
ஒருவாரு அவன் குளியலரைக்குள் செல்வது அந்த கதவின் ஓர் பக்கமாய் இருந்த கண்ணாடி வழியே தெரிய..இருவரும் அடித்துப்பிடித்துக்கொண்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு ஓடினர் அறைக்கதவுப்பக்கமாய்.. சதீஷ் அப்போது தான் கவனித்தான் அறையின் கதவில் கைப்பிடியே இல்லை என்பதை.."அப்போ இத அவனால மட்டும் தான் திறக்க முடியுமா.. " முணங்கியவாறே அவன் நிலாவைப்பார்க்க அவளோ இவனுக்கு பின்னால் எதையோ கண்டு பேய் அறைந்தாற் போல் நின்று கொண்டிருந்தாள்.
*****************
"பெரியவரே இது தான் அந்த புள்ள.."
பெரிய ஐயா பணிவாய் அறிமுகப்படுத்த அழகுப்பதுமையாய் முன்னால் வந்து நின்று கை கூப்பினாள் சாரு.
பெரியவர் அவள் அணிந்திருந்த ஆடையை மெச்சுதல் பார்வை பார்க்க..சாருவிற்கோ அனிதா கூறி அனுப்பியது மனதினுள் ஓடியது..
"இங்க பாருடி அவ்வளோ சொன்னேன் கேட்டியா இப்ப அந்த கொப்பி பெரியவுக கையில இருக்கு பாரு.. போதாத்துக்கு நீ வேற இந்த துணியோட வந்திருக்க இப்ப உன்ன அவங்க புடிச்சி ஜெயில்ல போட்ருவாகலாம்..மீனாட்சிக்காட நான் போய் கேட்டேன். அஞ்சு வருஷத்துக்கு உன்னால வரவே முடியாதாம்..தோல உறிச்சிருவாக..ஏதாவது பன்னி தப்பிச்சிடு என்ன"
அனிதாவின் சொற்கள் கற்பனையாய் விரிய எச்சில் கூட்டி விழுங்கி அதனை அப்போதைக்கு ஒதுக்கி விட்டு..
"அய்யா வர சொல்லிருந்தீங்க.."மெதுவாய் கேட்க..
"அது இந்த புத்தகம்.." அவர் கையிலிருந்த புத்தகத்தை காட்டி ஆரம்பிக்கையிலேயே..ஓடிச்சென்று அவள் காலில் விழுந்தாள் சாரு..
"ஐயா ஜெயில் எல்லா வேணா ஐயா..சும்மாதான் இப்படி வரஞ்சன்..இனிமே பாவட தாவணியே போட்டுக்குறன்..இந்த துணி எல்லா எறிச்சிர்ரன்."
அவள் காலில் விழுந்ததுமே பதறிக்கொண்டு எழுந்த பெரியவர் அவள் கூறுவதில் தலையும் புரியாது வாலும் புரியாது "முதல்ல நீ எழுந்திருமா..என்ன சொல்லுற..முதல்ல எழுந்திரி" அவளை எழுப்ப முயலோ அவளோ "நீங்க மன்னிச்சிட்டேன் சொல்லுங்க அப்போ தான் எழுந்திரிப்பேன்." சாரு நல்லாதான் பன்னுற என்று தன்னையே மெச்சியவாறு அவர் காலை இறுக்கப்பற்றி கண்ணை மூடிக்கொண்டாள்..
"எதுக்கு மன்னிப்பு..என்ன ஐயா நீங்க சும்மா பார்த்திட்டு இருக்கிங்க முதல்ல இந்த பொண்ண எழுந்திருக்க சொல்லுங்க."
பெரிய ஐயாவிற்கு இவளது முதலைக்கண்ணீர் தெரிந்த விடயம் என்பதால் அதுவரை அமைதியாய் இருந்தவர். "சாரு மொதல்ல எழுந்திரி" என்றார்.
வராத கண்ணீரை கஷ்டப்பட்டு எப்போதும் செய்வது போல் கண் சிமிட்டாதே இருந்து வரவழைத்துக்கொண்டு மூக்கை சத்தமாய் உறிஞ்சியவாரே எழுந்து நின்றாள்.
"இப்ப சொல்லு எதுக்கு மன்னிப்பு?"
பெரியவர் கேட்க..மெதுவாய் நிமிர்ந்து பெரிய ஐயாவை ஒரு பார்வை பார்த்து விட்டு...
"அது நான் இப்பிடி உடுப்பு எல்லாம் போட கூடாதுன்னு ஐயா சொல்லிருக்காங்க..நான் கேட்காம போட்டுருவன்..அதுக்கு உங்கள்ட சொல்லி என்ன அஞ்சு வருஷம் ஜெயில்ல போட போறாங்களாம்." இடையிடையே பெரிய ஐயாவை பார்த்தவாறே திக்கித்திக்கி அவள் கூறி முடியவும் பெரியவர் விழுந்து விழுந்து சிரிக்க பெரிய ஐயாவும் சேர்ந்து கொண்டார்.
ஒருவாரு சிரித்து முடித்தவர்..
"என்னடாம்மா நீ இப்பிடி இருக்க..அப்படி எல்லாம் இல்ல உன் திறமைக்கு நீ இங்க இருக்க வேண்டியவ இல்ல..என்னோட எங்க ஊர்க்கு போய் எங்க கம்பனிலே உனக்கு வேலை தாரன். அதிலும் உனக்கு அந்த வேலை தேவையோ இல்லையோ எங்க கம்பனிக்கு நீ தேவை..அதுனால இன்னக்கே கிளம்பலாம் தயாராகு என்று சொல்லதான் வர சொன்னன்."
அவர் கூறி முடிக்க ஹப்பா அப்போ ஜெயில் எல்லாம் இல்ல என்று நிம்மதியடைந்தவள்..அவர் கூறியதன் பின்பகுதி அப்போது தான் உறைக்க..
"என்னது நான் பட்டணத்துக்கா.."
பெரிதாய் அதிர்ச்சியடைந்தவள்..
"ஐயா இல்ல ஐயா எங்க ஊருல.."
அவள் ஆரம்பிக்கவும் அவளை தடுத்தவர்
"அதெல்லாம் உங்க ஐயாகிட்ட நான் பேசியாச்சி" என்க அவள் பெரிய ஐயாவைப்பார்த்தாள்.
அவரும் கண்களாலே தன் சம்மதத்தை தெரிவிக்க..சாருவிற்கோ நடப்பதை நம்பவே முடியவில்லை..
"ரொம்ப நன்றி ஐயா.." இருவரிடமும் கூறிவிட்டு சந்தோஷம் தலைக்கேற துள்ளிக்குதித்து ஓடினாள் தன் பெற்றோரைத் தேடி சாருமதி.
கருத்துக்களை பகிர