அத்தியாயம் - 2
மாதுரி , துருவ், கதிர், ரேணு மற்றுமொரு முக்கிய நாயகன் பிரபா. இவர்கள் அனைவரையும் கல்லூரி வளாகம் "ஐந்தாம்படை எதற்கும் அஞ்சா படை" என்று பெயர் வாங்கிய நண்பர் பட்டாளம்.
வேறு வேறு துறையை சேர்ந்து படித்தாலும் எப்படியோ நண்பர்கள் ஆகிவிட்டனர்.யாரையும் சட்டையே செய்யமாட்டார்கள் பிரபா, துருவ், கதிர் இவர்களிடம் மயங்காத பெண்களே இல்லை.... அந்த அளவிற்கு கல்லூரி பருவத்திற்கே உரிய இளமை, துடிப்பு போன்றவை இருக்கும். இவர்களும் நித்தமும் பஞ்சாயத்து என்று பிரின்சிபாலிடம் வந்து நிற்பார்கள்.என்ன தான் வாலுத்தனமாய் சுற்றி திரிந்தாலும் படிப்பில் கெட்டி ஐவரும். ஆதலால் கல்லூரி நிர்வாகமும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். மாதுரி ரேணுவிடம் பல பெண்கள் பொறாமை கொள்வர். ஏனென்றால் மூன்று ஆண்களிடமும் வெகு சகஜமாக பழகுவதை கண்டு காழ்ப்புணர்ச்சியால் புகைவர்.
அன்று தமிழ்த்துறையில் "இலக்கிய மன்ற விழா" மாதுரி தன் துறை மாணவிகளை மிரட்டி சேலையில் வரவழைத்தாள் தானும் சேலை கட்டி அழகு பாவையாய் மிளிர்ந்தாள். பஸ்ஸ்டாப்பில் இறங்கியதும் கதிர் , துருவ் இருவரும் இவளைக் கண்டதும் சிரிப்பாய் சிரித்தனர்.
"ஏன்டா சிரிக்கிறீங்க" என்று கூச்சத்தில் நெளிந்தாள்.
" நடராஜ் பென்சிலுக்கு சேலையை சுத்துன மாதிரி இருக்க மாதுரி... உன் துறையில் உள்ள எல்லா பெண்ணையும் நாங்க இன்னைக்கு இந்த கண்றாவில தான் பார்க்கணுமா.... ஓ மை காட் கருப்பசாமி..... இந்த பாவியை மன்னித்தருளும் கருப்பசாமி ஆண்டவரே..... தோத்திரம் ஆண்டவரே...."
என சிலுவை போட்டுக்கொண்டான் கதிர்.
"ஏன்டா... அது ஸ்தோத்திரம் தானேடா"- துருவ்
"போடாங்.... அவகூட போன ஒரு பொண்ணு கூட நம்மள பார்க்காதுடா"
என்றவனை மாதுரி முறைக்க,
" போடி கருவாச்சி.... நீ தத்தித்தத்தி ரோட்ட அளந்து போறதுக்குள்ள ஒன் டிபார்ட்மெண்ட் பங்க்ஷன் முடிஞ்சு போகும்... வா மச்சான் நாம வேற நல்ல பிகரா பாத்து உசார் பண்ணலாம் "
என்று நக்கல் எடுத்தபடி துருவ்வை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டான் கதிர். "ம்க்கும் "என்று கழுத்தை நொடித்தபடி மெல்ல நடந்து வந்தாள் மாதுரி . தூரத்தில் பைக்கில் பிரபா வருவதைக் கண்டதும் பூவாய் மலர்ந்த முகம் இவனும் கலாய்ப்பானோ என்ற எண்ணத்தில் தலைகவிழ்ந்து நடந்து சென்றாள். யாரோ ஒரு சூப்பர் ஃபிகர் அம்சமாக நடந்து வருதே என ஆவலுடன் நெங்கியவன் அது, மாதுரி என அறிந்தவன் தன்னைப் பார்க்காது பூமியைப் பார்த்து அவள் நடந்தது வியப்பை அளித்தது. இவ இப்படிலாம் அச்சம் ,மடம், நாணம் உள்ள பெண்ணல்லவே....ஓஹோ... மேடம் சேலை கட்டி வந்த நாணமோ என உள்ளுள் நகைத்துக்கொண்டே அவள் அருகே வண்டியை நிறுத்தி
"மேடம் ஏறுங்க.... பங்ஷனுக்கு லேட் ஆச்சு"
பதில்பேசாது அவனை நிமிர்ந்து பாராமல் ஒருவித சங்கோஜத்துடன் பைக்கில் ஏறினாள். அதை கண்டதும் அவனுக்கு புது அனுபவமாய் தோன்றியது.பிரபா கலையரங்க வாசலில் அவளை இறக்கி விட்டதும் "தேங்க்ஸ்டா "என்ற அவளது சொல் விசித்திரமாகப் பட்டது. அறிமுகம் இல்லா நட்புக்குத்தான் சாரி , தேங்க்ஸ் இது போன்ற சொற்கள் தேவைப்படும் நல்ல நட்புக்கு இதெல்லாம் தேவைப்படாது என்று அடிக்கடி சொல்பவள் இன்று தேங்க்ஸ்டா என்ற சொல் வித்தியாசமாக அவனுக்கு தோன்றியது.இங்கிருந்து நித்தம் உன் கண்களுக்கு மட்டும் அழகாய் தெரிந்தாள் அவளை ரசிக்க ஆரம்பித்தான் . அவள் இயல்பாய் தொட்டால் கூட 'தொட்ட இடம் குளிர் இருந்தது' அவனது மாற்றங்கள் மெல்ல மாதுரி தவிர மற்ற அனைவருக்கும் புரிந்தது .துருவ் மட்டும் அவனைத் தனியே அழைத்துச் சென்று அறிவுரை கூறினான்
"வேண்டாம்.... மச்சான் நல்ல நண்பர்களா இருக்கோம்...இதுல காதல் வந்து ஏதாவது ப்ராப்ளமாகிட்ட என்ன பண்றது.. அவ அம்மா நம்மள நம்பி அனுப்பி இருக்காங்க... இது தெரிஞ்சா நம்மள கேவலமா நினைக்க மாட்டாங்களா. வேண்டாம்டா....நம் நட்புக்குனு ஒரு மரியாதை இருக்கு மச்சான் "
என்றவனின் கழுத்தை நெரித்தது பிரபாவின் கைகள்.
"டேய்.... என்னை என்ன பொம்பள பொறுக்கினு நினைச்சியா... பொண்ணுங்க பின்னாடி அலையற கிராக்கினு நினைச்சியா... இத்தனை நாளா அவமேல எனக்கு அந்த மாதிரி ஒரு உணர்வு வரல. இப்ப வந்து இருக்கு. அது காதல்னு புரிஞ்சிருக்கு "
என்றவனின் கை பிடி தளர்ந்து தொய்ந்து விழ நண்பனை கட்டிக்கொண்டு மனப்புலம்பலை கொட்டி விட்டான் கண்ணீருடன்.
" மாப்ள சாரிடா... அவள உண்மையாகவே லவ் பண்றேன். சொன்னா அவ ஏத்துக்க மாட்டா. ஆனா, மனசு கேட்கல மச்சான் "
என்றவுடன் நண்பனின் முதுகை தடவிக்கொடுத்தான் துருவ் .
அன்று கல்லூரி ஆண்டுவிழா. வெள்ளை நிறத்தில் சிவப்பு ஜரிகை போட்ட சேலையில் சிவப்பு மற்றும் வெள்ளை கற்கள் பதித்த எளிய நகை அலங்காரத்திலும், மல்லிகைப்பூவுமாய் அத்தனை அழகாய் தெரிந்தாள் மாதுரி. நட்பு வட்டாரங்கள் மாதுரி தங்களின் அழகின் ரகசியம் என்னவோ?....தங்களின் கற்பனை காதலன் காதல் ராட்சசனை நேரில் கண்டுவிட்டீரோ ராணியாரே ...மேனியில் பசலை நோய் பாய்ந்துவிட்டது என்பாரே....பசலை நோயால் மேனி பசுமை நிறமாக அல்லவா இருக்க வேண்டும்.... செம்மேனியாக உள்ளதே... காரணம் என்னவோ?... "என்று ரேணுவும் நண்பர்களும் சேர்ந்து கலாய்த்து ஒரே கலாட்டா தான் . "
ச்சீ.... போங்கடி"
என்று புன்னகையுடன் அவள் கடக்கையில் சொக்கிப் போய் நின்றது பிரபாகரன்தான்.
"டேய் வழியாதடா....அவ பார்த்தா செருப்ப சாணில ஊறவைத்து அடிப்பாடா......."என்றான் துருவ் சிரிப்புடன்.
பிரபா,
"வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் இருக்கிறா இல்லடா" என்றான் அவனது சட்டை நூலைப் பிரித்துக் கொண்டே வெட்கத்துடன். அவனது வெட்கத்தை காணச் சகிக்காம,
" தேவதை ......அவ.....நல்லா புளிய மரத்தில் இருந்து இறங்கிவந்த மோகினி பிசாசு மாதிரி இருக்கா..... தேவதை மாதிரி இருக்காலாம்... டேய் நீ என்ன எழவு வேணுமானாலும் பண்ணு... ஆனால் வெட்கம் மட்டும் படாத பாக்க முடியல" என்றான் அவனது வெட்கத்தை காண சகிக்காமல்.
அந்த ஆண்டிற்கான சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை தட்டிச் சென்றாள். அவளது வார்த்தை உச்சரிப்பும், எதுகை,மோனையில் பேசும் பாவமும், மென்குரலும் அந்த விருதிற்கு அவள் தகுதியானவள் தான் என்று பறைசாற்றியது.
அதைக் கொண்டாடும் வகையில் மாலை "டீ விருந்து" ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவும் சிறப்பாக நடந்தேறிய பொழுது எதிர்பாராவிதமாக மாதுரி என்ற குரல் கேட்டு திரும்பியவளுக்கு காலுக்கடியில் மண்டியிட்டு கையில் நீலக்கல் பதித்த மோதிரம் ஏந்தி,
" மாதுரி இவ்வளவு நாள் நல்ல தோழியாயிருந்த.... இப்போ எனக்கு நீ நல்ல காதல் மனைவியாகவும் இருப்பாயா என் கண்மணி"
என்றவனின் கண்களில் காதல் கொட்டிக்கிடந்தது. அது கனவா நனவா என புரியாமல் அதிர்ந்து நின்றாள் மாதுரி. ஓய்.... என அவளை உலுக்க தலைதிருப்பி ரேணுவை பார்த்ததும் அவளின் புன்னகையில் மேலும் அதிர்ந்து என்ன என்பது போல் பார்க்க அவன் காதலை ஏற்றுக்கொள் என்பதுபோல் ரேணுகா பிரபாவை கண்களால் சுட்டிக்காட்டிய அதே கணம் சுற்றி இருந்த அத்தனை மாணவ கூட்டங்களும் ஆர்ப்பரிக்க ஏதும் புரியாமல் பிரபாவை நோக்கினாள். பிரபா மெல்ல அவளது கருமேகம் வெண்டை விரலை பற்றி மோதிரம் அணிவித்தான். இதெல்லாம் அதிர்ந்திருக்கும் நேரத்திலேயே நடந்து முடிந்துவிட்டது.சிலகணங்களே அதிலிருந்து மீண்டு அவளின் கண்கள் சுழல்வது போன்ற பிரமையை உண்டாக அருகில் இருந்த நாற்காலியில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். இருநாட்கள் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கல்லூரிக்கும் விடுப்பு சொல்லிவிட்டு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். நட்பு வட்டாரம் உடம்பு சரியில்லை என்று நினைக்க மேலும் விடுமுறை நீள பயம் தொற்றிக்கொள்ளவே கதிர் ் தான் மாதுரி வீட்டிற்கு அருகில் இருப்பவன் என்பதால் வீட்டிற்கு சென்று பார்த்தான்.
"வாயா....மாதுரிக்கு உடம்பு சரியில்லை....அன்னைக்கு சேல கட்டிட்டு போனால்ல... அப்ப எல்லாரும் இவள வச்ச கண்ணு வாங்காம பாத்தாளுவ..... அவ வீட்டு பொண்ணெல்லாம் நகைநட்டு போடாமல இருக்குது.... என் புள்ள போட்டா மட்டும் வயிறு எரியுது போல.... நாம வம்பாடுபட்டு உழைக்கிறவுகளுக்குல தானே வருத்தம் தெரியும் .... காபி போடுறேன்... மாதுரி உள்ளதான் இருக்கா.... போய் பாருயா..." என்று மாதுரி தாயார் வடிவு பொரிந்து தள்ளிவிட்டு சென்றார்.
அறையில் கட்டிலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் அவள்.
" மாது"
"வா....கதிர் ".
என்றாள் புன்னகையுடன்.
" என்ன ஆச்சு... ஏன் காலேஜ்க்கு வரல"
என்றதும் அவள் முகம் இருண்டது. அதைக் கண்டதுமே, விஷயம் புரிந்து போனது.
" நாளைக்கு காலேஜ்ல பேசிக்கலாம்"
" பரவால்ல"
அப்போது, மாதுரி தாயார் காபியுடன் உள்ளே வந்தார் குடியா என்ற தந்து விட்டு மகளை ஒருதரம் பார்த்துவிட்டு சென்றார். தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பேசினான் கதிர். "இப்போ சொல்லு"
" என்ன சொல்ல கதிர்.... நான் ஏற்கனவே என் மனசுல எனக்கு கணவனாக வரப்போகிறவர் பத்தி நானே உருவகப்படுத்தி கற்பனை வச்சிருக்கேன். என் பிரெண்ட்ட எப்படி லவ் பண்ண முடியும்....நெனச்சாலே ஒரு மாறி இருக்குடா.... இத நான் அம்மாட்ட சொன்னா என் அம்மா எப்படிடா உங்க கூட சகஜமாக பழக விடுவாங்க. அவனை என்னால அந்த மாதிரி நினைச்சுக்கோ முடயாது...அவன் கிட்ட சொல்லி புரிய வையுங்க" என்று இரு கரம் கூப்ப இறைஞ்சினாள். எப்போதும் அதிகம் சிரிக்க விட்டாலும் எப்போதும் கம்பீரமாக இருக்கும் பெண்ணிடத்தில் அவளது கண்களில் கண்ட இறைஞ்சுதல் கதிரை என்னவோ செய்தது. கூப்பிய கைகளை அழுந்தப் பற்றி தோள்களைத் தட்டிக் கொடுத்துவிட்டு வெற்றுப் புன்னகையுடன் மாதுரியை கடந்து சென்றான் அவளது தோழன் கதிர். மாதுரி சொன்னவற்றை ஒன்றும் விடாமல் அப்படியே ஒப்புவித்தான் தன் நண்பர்களிடம் பிரபா எல்லாவற்றையும் உள்வாங்கி கொண்டவன் மறுநாளே இனி அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று எண்ணி அவன் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினான். காலேஜுக்கு வந்தமாதுரி நண்பர்களை தான் தேடினாள்.
"பிரபா எங்கே?..."
" முன்னாடி நீ இப்ப அவன் அப்படியே செய்ங்க நல்லா இருக்கும்" என்று கடிந்து கொண்டாள் ரேணு.இப்படியே நாட்கள் செல்ல பிரபா எங்கு சென்றான் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. எப்போதும் போல்
கலகலப்பு நண்பர்களிடத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவதை அனைவருமே உணர்ந்தனர். மூன்று மாதங்களுக்குப் பின் நண்பர்கள் நான்கு பேரையும் புது வாட்ஸ்அப் குழுவில் இணைத்தது ஒரு வெளிநாட்டு நம்பர். புரொபைலில் ப பிரபாகரன் முகத்தை கண்டதும் உடனே வீடியோ கால் போட்டு பேசி மகிழ்ந்தனர் நண்பர் கூட்டம். அப்போது பிரபா தன்னைத் தான் அதிகம் பார்த்து, பேசுவது போல் தோன்றியது மாதிரிக்கு. பிரபா படிப்பை பாதியில் விட்டுவிட்டு தன் அண்ணனுடன் சிங்கப்பூர் தொழிலில் முனைந்துவிட்டான். அவனுக்கும் இதுவே ஏற்றது போல் தோன்றிற்று. எல்லோரும் வெற்றிகரமாக டிகிரி முடிக்க நண்பர்கள் இருவரும் படித்தது போதும் என்று எண்ணியவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி பிரபுவுடன் இணைந்து கொண்டனர் துருவும் கதிரும். தோழிகளான மாதுரி, ரேணுகா மேற்படிப்பை தொடர்ந்தனர். தோழி ஒருத்தியின் திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரும் கூடினர். மாப்பிள்ளை வீட்டார் வெகு ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினர்.
இளம் ரோஜா வண்ண பட்டு சேலையில் மகாலட்சுமி உருவம் பொருத்திய ஆரம் சின்னஞ்சிறு தங்க இலைகளை , தங்க நார்களால் இணைத்து பூவை தாங்குவது போன்ற அழகான நெக்லஸ்
அதற்கு பொருத்தமான தோடு வளையல் என அணிந்து நீண்ட கூந்தலை தளரப் பின்னி தலை நிறைய மல்லிகை சூடி அந்த ஆடம்பர திருமணத்திற்கு தானும் தகுதியானவள்தான் என்று நிரூபித்து கொண்டிருந்தாள் மாதுரி . ரேணுவும் சேலையில்தான் வந்திருந்தாள். நண்பர்கள் மூவரும் வெள்ளை வேஷ்டியும் கூலிங்கிளாஸ்-மாக பட்டையைக் கிளப்பினர். கல்யாண வீட்டில் இவர்கள் தான் ஹைலைட்.பிரபா மாதுரியை விட்டு விலகி இருந்தாலும் அவள் மீதான காதல் இல்லாமல் இல்லை என்பதை உணர்த்தியது அவனது பார்வை.
திருமணம் மற்றும் வரவேற்பு விழா எல்லாம் முடிந்ததும் பிரபா மாதுரியிடம் வந்து நின்றான்.
" எனக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே"
" அது ஏற்கனவே கதிரிடம் சொல்லிவிட்டேன் "
"நான் கதிர் கிட்ட என் காதலை சொல்லவில்லை"
என்ற அவனை முறைத்தாள்.
"எனக்கு இஷ்டம் இல்லை "
"ஏன்"
" நீ என் பிரண்டு மட்டுமே காதலன் இல்லை" என்று விட்டு அங்கிருந்து செல்ல முற்பட்டவளின் கரம் பற்றி, "உனக்கு என்னைப் பற்றிய நல்லாவே தெரியும் .நான் இஷ்டப்பட்டது எனக்கு கிடைக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன். அதுபோல்தான் நீயும்"
" உனக்கும் இந்த ரதி மாதிரி யாருன்னு தெரியும் பி கேர்ஃபுல்"
என்ற சீறியவள் தனது கையை உதறி தள்ளிவிட்டு கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்துக் கொண்டே,"உனக்கு என்னை காதலிக்க என்ன தகுதி இருக்கிறதுனு கேட்கும் தகுதி எனக்கில்லை பிரபா.....உன் பணம், அந்தஸ்து, ஊர் மரியாதை இதற்கெல்லாம் பொருந்த கூடிய ஆள் நானில்லை....அப்பாவோட சம்பாத்தியத்துல வாழும் நீ எங்கே.....அன்றாடக்காய்ச்சியின் மகளான நானெங்கே?...." என்றாள் சீற்றத்துடன்.
"அதெல்லாம் என் அப்பா பாக்க மாட்டார்.....என் அப்பா பத்தி உனக்கு தெரியாதா அப்புறம் ஏன் இப்படி பேசுற...
" புரியாம பேசாத பிரபா ....இது சரியா வராது...."
"ஏன்???"
"என்ன ஏன்
உயிர்த்தோழிகிட்ட வந்து காதல் கத்தரிக்காய் புளியங்காய்னு புலம்புற...இவ்வளவு நாள் இந்த மாதிரி கீழ்த்தரமான உடல்மோக எண்ணத்தோடு தானே என்னை பாத்துருப்ப.... என்று கூர்நாக்கால் கூறுப்போட்டாள்.
அவள் பேசும்போது கலங்கிய கண்களுடன் கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றவன்தான் ஒரேடியாக சென்று விட்டான்.
ஆமாம்.... ரோட்டோரத்தில் காரை நிறுத்தி டிக்கியில் வைத்திருந்த மதுபாட்டிலின் மூடியை கழற்றி வீசிவிட்டு அப்படியே வாயில் சரித்தான். அவள் பேசிய வார்த்தைகளை மனதுள் உருப்போட்டபடி போதையில் வண்டியை தாறுமாறாக ஓட்ட எதிரே பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த லாரியில் விட்டுவிட்டான்.
"மாதூ....."என்ற உச்சரிப்போடே அவன் உயிர் பிரிந்தது.