1 நிலவின் இளங்கதிரே
காலை இளங்கதிரே உன்னை காணாமல் தேயும் நிலவை ஓர் முறை பார்த்துவிடு
என் வாழ்வின் வர்ணங்களை அள்ளிதந்திடும் உன் கைகளை நான் பற்றும் நாள் வரை காத்திருப்பேன். இந்த தேயும் நிலவும் உன்னால் அன்று முழுநிலவாகி போகும்...
அந்த அதிகாலை வேளையில் கோவையின் மத்தியப்பகுதில் இருந்த அந்த சிறிய பங்களாவின் கேட் முன் நின்றது கதிரின் கார் எப்பொழுதும் போல தொடர் ஹாரன் சத்தத்துடன்.. தோட்டத்தில் நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த முனியன் அந்த சத்தத்தை கேட்டு அவசரமாக வந்து கதவை திறந்து வைத்தான்.
"என்னப்பா முனியா கேட்டை திறக்க இவ்வளவு நேரமா",
முனியன் "மன்னிச்சிடுங்கயா தோட்டத்தில் இருந்தேன். அதான் லேட் ஆகிடுச்சு " என்றான்.
"எப்பொழுதும் ஒரு சாக்கு வைத்துக்கொள், ஆமா நீ தோட்டத்தில் இருந்தால் கேட்டை யார் பார்த்துப்பா..அதுக்கு வேற ஒரு புது ஆள் போட்டுக்கலாமா.".என்று வெடிகுண்டை கொளுத்தி போட்டுவிட்டு காரை பார்க் செய்ய போய்விட்டான்..முனியனுக்கு திக்கென்று இருந்தது...அந்த அதிர்ச்சி களைய சிறிது நேரம் கூட பிடித்தது..மனதில் இவரு விளையாட்டுக்கு சொல்லுகிறாரா இல்ல நிஜமாவே புதுசா ஆள் போட்டுடுவரோ என்று ..கதிருக்கு அது சுலபம் தான். ஆனால் முனியனுக்கு அப்படி இல்லேயே. காவல் வேலை, தோட்ட வேலை என இரு சம்பளம் வாங்கும் அவனுக்கு திக்கென்று தான் இருந்தது..தோட்டவேலை இரண்டுமணி நேரம் மற்றநேரங்களில் காவல் வேலை என செய்து கொண்டிருந்தான்.. அந்த வேலை பறிபோனால் சம்பளம் பத்தாதே..மாதாமாதம் குடும்ப செலவுக்கு இந்த வேலை கண்டிப்பாக வேணும்... அதனால் எதற்கும் அம்மாவிடம் சொல்லிரலாம். அம்மா சொன்ன சின்னையா கேட்பார்..தன்வேலை நிரந்தரமாகிவிடும் என்ற நம்பிக்கையில் கேட்டை மூடிவிட்டு தோட்டத்திற்கு போய் விட்டான்..
காரை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே சென்ற கதிர் முதலில் பார்த்தது ஹாலில் சாய்ந்தபடி உறங்கும் தன் அன்னையை தான்..எப்பொழுதும் போல கடிந்தபடி அவரிடம் சென்றான்..அரவம் கேட்டு விழித்த அபிராமி
"வந்திட்டியப்பா " என்றார் கனிவுடன்.
மகனோ "என்னம்மா உடம்ப கெடுத்துட்டு இப்படி ஹாலிலே தூங்கிட்டு இருக்கீங்க. எத்தனை தடவை சொல்லறது எனக்காக வெய்ட் பண்ணாதீங்கன்னு" என்றான் கோபமாக.
"இல்லப்பா கதிர். உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்னு தான் நைட்டு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..நீ வர லேட் ஆனதும் அப்படியே தூங்கிட்டேன் போல"..
இரண்டு வாரங்களாக மனதில் உருப்போட்டு நேற்றைய இரவு சொல்லலாம் என்று இருந்தால் மகனோ அதிகாலையில் வந்திருந்தான்...இவனிடம் இனி எப்படி அந்த விஷயத்தை ஆரம்பிப்பது...யோசனையில் இருந்தவரை கதிரின் குரல் நிகழ்வுக்கு கொண்டு வந்தது..
"என்னம்மா ஏதாவது முக்கியமானதா. ரொம்ப யோசனையாக இருக்குறீங்க"... என்றான்.
மகனின் முகத்தை பார்த்தார், இரவு முழுவதும் வேலை செய்த களைப்பு அதில் தெரிந்தது. அவனது குரலிலும் முகத்திலும் இருந்த களைப்பை பார்த்துவிட்டு,
"நீ பிரஷ் ஆகிட்டு வந்துடுப்பா அப்பறம் பேசிக்கலாம்".என்றார்
முக்கியமான விஷயம் ,களைப்புடன் இருப்பவனிடம் சொன்னால் கோபத்துடன்தான் பதில் வரும். கதிரோ,
"பரவாயில்ல சொல்லுங்கமா என்ன விசயம்"
என்றான்.
அவனுக்கு தெரிந்து அம்மா இவ்வளவு பீடிகை போடுபவர் அல்ல எந்த விசயத்தையும் நேருக்கு நேர் சொல்லி விடுவார்..ஆனால் அபிரமியோ மகன் பொறுமையாக கேட்க வேண்டும் அப்போதுதான் தான் நினைத்தது நடக்கும் என நினைத்துக்கொண்டார்..ஆகவே மகனிடம்," நீ போய் பிரஷ் ஆகிட்டு வா கதிர் அப்புறம் சொல்லறேன்" என உறுதியுடன் முடித்துவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார்...குழப்பத்துடன் இருந்த கதிரோ நேரே சென்றது பிருத்வியின் அறைக்கு... பிருத்வி இளங்கதிரின் நான்கு வயது இளவரசன்... தூக்கத்தில் சிரித்த மகனின் முகத்தை பார்த்தபோது, ஓய்வில்லாமல் இரவு முழுவதும் வேலை செய்த களைப்பு காணாமல் போனது..மகனின் தலையை மென்மையாக வருடிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்..அபிராமி குளித்துவிட்டு பூஜை அறையில் இருந்து வெளியே வரவும் அலுவலகம் செல்ல தயாராகி கதிர் கீழே வரவும் சரியாக இருந்தது..மாநிறத்தில் சற்று உயரமாக அதற்கேற்ற எடையுடன் தன் கணவன் ஆதீஸ்வரனின் சாயலுடன் வந்தவனை பார்த்தார்..முப்பது வயதில் இருந்தவனை மனைவியை இழந்த நான்கு வயது குழந்தைக்கு தகப்பன் என்று சொல்லி விட முடியாது...அப்படி இருந்தான் கதிர்...தன் இருபது வயதில் தந்தையை இழந்து அவரின் தொழிலை காக்க வேண்டி கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்..அந்த உழைப்பு ஐந்து வருடத்தில் முன்னேற்றி விட அதற்கடுத்த வருடம் சுப லேகா உடன் காதல் திருமணம் ..என அனைத்தும் நல்ல முறையில் நடைபெற்றது... யார் கண் பட்டதோ பிருத்விக்கு உயிர் கொடுத்து விட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் சுபா. சுபா லேகா அழகான பெண்..ஒல்லியான உடல்வாகு...அவளது நீண்ட கண்களின் ஓரத்தில் புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்கும்.கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி.. ஆனால் மருமகளாக இல்லாமல் மகளாகவே இருந்தாள்...அதனாலயே பிரசவத்தின் இறுதி நாட்களில் அவளின் மாற்றத்தை கணிக்க முடிந்தது... அவளது மனதில் ஏதோ ஒரு வலி இருப்பதை அறிந்து கொண்டு அவளிடம் கேட்டார்... ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை... பிருத்வி பிறந்த ஒரே மாதத்தில் சுபா இறந்து விட்டாள்... கதிருக்கும் ஒன்றும் தெரியாது... காரணம் தெரியாத மரணத்தில் துயரத்தின் உச்சிக்கு சென்றவன் தன் மகனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது முகத்தில் மென்மை, சிரிப்பு இவை இரண்டுமே தாயையும் மகனையும் பார்க்கும் போது மட்டுமே.. மற்றவர்க்கு கடுமையான முகம் மட்டுமே..தாயை பார்த்து புன்னகை ஒன்றை சிந்திவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான்...தட்டை வைத்து பரிமாறிய அவரிடம் சாப்பிட்டுகொண்டே,
"இப்போ சொல்லுங்கமா, என்ன விஷயம்"
"நீ சாப்பிடுப்பா நான் அப்புறம் சொல்லறேன்"
"ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு மா, நேரமாக போகணும், so இப்போவே சொல்லுங்க" என்றான் சாப்பிட்டுக்கொண்டே. பெருமூச்சை இழுத்து விட்டு, அபிராமி சொல்லத் துவங்கினார்,"நீ குன்னூர் போகணும் கதிர் "
"அம்மம்ம்மா" கிட்டத்தட்ட கத்தினான்.. கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்த அன்னமும் தோட்டத்தில் இருந்த முனியனும் சத்தத்தை கேட்டு ஓடி வந்தனர்..ஓடி வந்த இருவரையும் மௌனமாக இருந்த அன்னையையும் பார்த்து விட்டு, வந்தவர்களிடம் திரும்பி ,"ரெண்டு பேரும் போய் வேலையை பாருங்க" என்று விரட்டினான்..பிருத்வி அப்போது அவன் ரூமில் விளையாடிக்கொண்டிருந்ததால்அவனுக்கு கேட்கவில்லை... அதனால் அம்மாவிடம் திரும்பி,"மன்னிச்சுக்கோங்கம்மா ..கோபத்தில் கத்திட்டேன். என்னால அங்க போக முடியாது.. ஏன்னு உங்களுக்கே தெரியும்"...சற்று கோபத்தை தளர்த்தி தன்னிலை விளக்கத்துடன் முடித்தான்.. ஆனால் அபிராமி,"நீ போகத்தான் வேணும் கதிர். சுபாவுடைய தங்கைக்கு கல்யாணமாம். நீயும் பிரித்வியும் அதற்கு போகணும்..அம்மா சொல் பேச்சு கேளுப்பா"..
"நானே போகமாட்டேன்னு சொல்லறேன். இதுல ப்ரித்வியையும் கூட கூட்டிட்டு போக சொல்லரீங்க,".. மூக்கில் மீண்டும் கோபம் ஒட்டிக்கொண்டது.
அபிரமியோ, உன் கோபத்தை கண்டு நான் அலருவெனா என்று நினைத்து க்கொண்டு ,"நீயும் ப்ரித்வியும் நாளைக்கே குன்னூர் கிளம்புறீங்க.. நான் அவங்களுக்கு வாக்கு கொடுத்து இருக்கேன்..அவங்க பேரனை பார்க்கவும் கொஞ்சவும் அவங்களுக்கு உரிமை இருக்கு கதிர்..இத்தனை நாள் நீ அவங்களை அலட்சியப்படுத்தினத்துக்கு இந்த ஒரு வாரம் அவங்களுக்கு நிம்மதிய கொடுத்திட்டு வா கதிர்..சுந்தரம் அண்ணா (அவர் தாங்க சுப லேகாவோட அப்பா) ரொம்ப கஷ்டத்தில் இருக்காரு கதிர். போய் அவங்களோட ஆசையை நிறைவேத்து"..
அம்மா முடிவு எடுத்து விட்டார் இனி மாற்றம் கிடையாது.. அவங்களை கோபிக்கவும் முடியாது.. ஆனால்,"எல்லாம் ok தான் அம்மா. ஆனால் நான் சுபாவுக்கு கொடுத்த முதல் வாக்கு ..அங்க போகவே கூடாதுங்கிறதுதானே அம்மா" ..தனிவுடனே சொன்னான்.
அபிரமிக்கு கோபம் வந்து விட்டது.."அப்படீன்னா உயிரோட இருக்குற நான் கொடுத்த வாக்கை விட உன் மனைவிக்கு நீ கொடுத்தது தான் உனக்கு முக்கியம் இல்லயாப்பா...போதும்ப்பா. இனி எப்போதும் என்னோடு பேசாதே ஆனால் சுபாவின் இறுதி ஆசையும் அதுதானே.. சந்தர்ப்பம் அமையும் போது நீ போகவேண்டும் என்பது.. அதையும் நியாபகம் வைத்து யோசிப்பா"...கோபத்தில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்து உள்ளே சென்று விட்டார்...கதிருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. திருமணத்தன்று சுபா வாங்கிய சத்தியம் நியாபகம் வந்தது..சுபாவுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. தன்னுடைய பிடிவத்தால் எதையும் சாதித்து கொள்வாள்..பிடிவாதமாக திருமணத்திற்கு பிறகு குன்னூர் செல்வதை தவிர்த்தாள்.. ஏன் என்று கேட்டால் காரணம் சொல்லவும் மாட்டாள்..பிறகு தானும் செல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள். அப்போதுதான் கதிருக்கு இன்னொன்றும் நியாபகம் வந்தது.. சுபா இறக்கும் தருவாயில் கடைசி நிமிடங்களில் கதிரிடம்,
" நீங்க எனக்கு ஒரு ப்ரோமிஸ் பண்ணனும் கதிர்"
பதட்டத்துடன்,"என்ன சுபா சொல்லு"
"ஊரிலுள்ள என்னோட தங்கைக்கு இந்த லெட்டர கொடுத்துடுங்க...நீங்க அங்க போகுற சூழ்நிலை வந்தால் மட்டும் கொடுங்க.. இல்லேன்னா வேண்டாம்.. ஆனால் எந்த சூழ்நிலைலயும் சந்திரா படிக்காமல் நீங்க இந்த லெட்டர படிக்கக்கூடாது"..
"சந்திராவா ஆனால் உன்னோட சிஸ்டர் பேரு சூர்யா தானே" என்றான் குழப்பத்துடன். சுபாவின் குடும்பபின்னணி கதிருக்கு அவ்வளவாக தெரியாது என்பது மட்டுமே உண்மை.. ஊட்டியில் அவளை முதன்முதலாக பார்த்ததும் பிடித்திருந்தது.. அவளையே பின்தொடர்ந்து பார்த்ததில் அவள் கோவையில் கல்லூரியில் படிப்பது தெரிந்தது..தினமும் அவளுக்கு பாடிகார்டு வேலை பார்த்ததில் கிடைத்த ஒரே தகவல் அவள் ஊர் குன்னூர் என்பது மட்டுமே.. மற்றபடி அவள் பெயரை கூட சேகரிக்க முடியவில்லை...பிறகு அந்த ஊரில் தேடுதல் வேட்டை ஆரம்பித்து ஒரு வழியாக ஒரு சில விஷயங்களை தெரிந்து கொண்டான்..அவனுக்கு தெரிந்த வரையில் சுபாவின் அம்மா சுபாவின் பத்து வயதில் காய்ச்சல் வந்து இறந்திருந்தார்.. அப்பா சுந்தரம் மெக்கானிக்.. தங்கை சூர்யா லேகா அப்போதுதான் கல்லூரி முதலாம் ஆண்டு..அவன் சேகரித்த தகவல்கள் அவ்வளவே...இறுதியில் அம்மாவுடன் பெண் கேட்க போய் விட்டான்..பிறகு திருமணம் நடந்தது.. .... இப்போது இங்கே நிற்கிறான்...
பெருமூச்சொன்றை இழுத்து விட்டு சுபா பேசினாள்.
"இல்லேங்க சூர்யா என்னோட மூன்றாவது தங்கை..சந்திராவும் நானும் ட்வின்ஸ்"
"அப்படியா ஆனால்"...கதிர் ஏன் இதுவரை சொல்லவில்லை என்று கேட்க நினைத்தான்..ஆனால் சுபாவோ,
" பிளீஸ் இதுக்கு மேல கேட்காதீங்க...அங்க போகுற சூழ்நிலை வந்தால் மட்டும் லெட்டர குடுங்க..போதும்"..அதற்கு மேல் அவன் கேட்கவில்லை...அவளால் மூச்சு சீராக விட முடியவில்லை... கதிர் பதட்டத்துடன்,
"சரிம்மா நான் குடுத்துடறேன்.. பிளீஸ் நீ ஸ்டரைன் பண்ணிக்காத"..
"ம்ம்ம்..என்னங்க"
"என்னம்மா சொல்லு"
"I love you"
"Me too"
" என்ன எப்போவுமே தப்பா நினைக்கமாடீங்கல்ல"
கண்ணீருடன், "மாட்டேன்மா, you are my love.. and you are my life.."
அதுவே அவள் கேட்ட கடைசி வார்த்தைகள்.. கண்களில் கண்ணீருடன் உதட்டில் சிறு புன்னகையுடன் அவள் உயிர் பிரிந்திருந்தது...அதன் பிறகு கதிர் சுபாவின் வீட்டினர் பற்றி நினைக்கவே இல்லை.. ஆனால் இப்பொழுது தன் கடமையை செய்யும் நேரம் வந்து விட்டது .
வேறு வழி இல்லாததால் அம்மாவுக்காக போகலாம் கூடவே அந்த லெட்டரையும் குடுத்து விடலாம் என்று முடிவெடுத்தான்...ஆனால் சுபாவுடைய எந்த தங்கைக்கு திருமணம் அம்மாவிடம் கேட்க மறந்துட்டேனே..ஊருக்கு போறேன்னு முடிவு பண்ணினது அம்மாகிட்ட சொல்லணும்.. அம்மாவை தேடி அவங்க ரூமுக்கு போனான்..
கதவை தட்டிவிட்டு, அம்மாவை பார்த்தான்.. அபிராமி சாயும் நாற்காலியில் உட்கார்ந்து ஜன்னலை பார்த்துக்கொண்டிருந்தார்..இவர் இன்னும் சிறுபிள்ளை தான் என்று நினைத்துக்கொண்டு , அம்மா என்று அழைத்தான்.
அவன் அழைப்பை கேட்டு திரும்பியவர்,
"என்ன கதிர்?'
"நாங்க கல்யாணத்துக்கு போறோம் ok வா"
அபிராமி புன்னகைத்தார். அவருக்கு தெரியும் மகன் இந்த முடிவைத்தான் எடுப்பான் என்று.
"சரி போயிட்டுவாங்க "
"அம்மா சுபாவுடைய எந்த தங்கைக்கு கல்யாணம்?"
"சூர்யாக்கு கதிர்"
"அப்படினா அந்த பெண் சந்திராக்கு திருமணம் முடிந்துவிட்டதா..நம்மையெல்லாம் கூப்பிட்டதாக நினைவில்லையே"..
அபிராமி,'கதிரிடம் இப்போது எதுவும் சொல்லவேண்டாம்' என நினைத்து கொண்டு,
"நீ அங்க போனால் தெரியப்போகுது... அப்புறம் கதிர் நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு காலைலயே நேரமா கிளம்பிடுங்க அப்போது தான் சரியாக இருக்கும்.. நான் அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிடறேன்..சரியாப்பா" என்றார்..
வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு இந்த ஞாயத்துக்கிழமையே போக சொல்லுகிறார்.. மீண்டும் ஏதாவது சொன்னால் அம்மா கோபித்துத்துக்கொள்ளக் கூடும்.. அதனால்,
"சரிங்கம்மா..அப்போ நான் ஆபீஸ் போய் கொஞ்சம் ஒர்க் இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன்..லேட் ஆகும்.. எங்க ரெண்டு பேருக்கும் ட்ரெஸ் மட்டும் பேக் பண்ணிடறீங்களா மா"
"சரிப்பா நீ போய்ட்டு வா"
கதிர் ஆபீஸ் கிளம்பிவிட்டான்.. அபிராமி போன் செய்து சுந்தரத்துக்கு தகவல் சொன்னார்..மறுநாள் இருவரும் அபிராமியிடம் சொல்லிவிட்டு கிளம்ப வந்தனர்...
"அம்மா நாங்க கல்யாணத்துக்கு போய்ட்டுவறோம்..ok வா.."
"ஹ்ம்ம் போட்டுவாங்கப்பா"...
அபிராமி திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக சொல்லியதால் கதிரும் பிருத்வியும் சென்றனர்..