Shrijo
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளோ மனிஷாவை விட்டு இம்மியும் நகர மறுத்துவிட்டாள்.
“என்னாச்சு நிஷா? பேபிக்கு என்ன கோபம்?”
“நான் கிளம்பினதும் என் கூட வர்றேன்னு ஒரே அடம், சரின்னு கூட்டிட்டு வந்தேன், இங்க காரை விட்டு இறங்கினதுல இருந்து அடம், மறுபடியும் கார்ல ரைட் போகனுமாம்”
“தனு... நீ அப்பாட்ட வருவியாம், நான் உன்னை கார்ல கூட்டிட்டு போவேனாம்”
அவனுடைய வார்த்தைகளில், மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்த தனுவின் கண்கள் அழுகையில் சிவந்து வீங்கி இருந்தது.
“அச்சோ... என் செல்ல குட்டில்ல.. அழக்கூடாது... பாருங்க என் பட்டு குட்டி கண்ணெல்லாம் எப்படி சிவந்து போயி இருக்கு, நீங்க அப்பாட்ட வாங்க, நாம ஜாலியா கார்ல சுத்தலாம்” என்று கை நீட்ட,
குழந்தை திரும்பி மனிஷாவைப் பார்த்தது.
“அப்பா கார்ல ரைட் கூட்டிட்டு போவாங்க... நான் இங்க தான் இருப்பேன்... உனக்கு ரைட் வேணும்ன்னா அப்பாட்ட போ... இல்லையா அம்மாட்ட இரு...” என்று அவளும் சொல்ல,
அடுத்த நொடி மானவிடம் தாவி இருந்தது.
அவன் குழந்தையை வாங்கி முத்தமிட்டுக் கொஞ்ச ஆரம்பிக்க, மனிஷா உணவை எடுத்துக்கொண்டு உள்ளிருந்த அறைக்குள் நுழைந்தாள்.
அவள் அவனுக்கு தட்டில் உணவை எடுத்து வைக்க, மானவ் மகளுடன் உள்ளே நுழைந்தான்.
“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?”
“ம்ம். நீங்க உட்காருங்க” என்றவள், “தனு அம்மாட்ட வா”
“ம்ஹும்..” என்பதாய் குழந்தை தலையசைத்துவிட்டு மானவை இறுக்கிக் கட்டிக்கொண்டது.
“அப்பா சாப்பிட்டதும், நாம கார்ல போகலாம்”
“ம்ஹும்..” என்று தலையசைத்துவிட்டு,
மானவ்வின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவனை இறுகக்கட்டிகொண்டது.
“அவ இப்போதைக்கு என்னை விட மாட்டா, பேசாம நீயே ஊட்டிவிடு” என்று கண்கள் மின்ன மானவ் சொல்ல,
“என்ன... நானா?” என்று அதிர்சியுடன் மனிஷா கேள்வி எழுப்பினாள்.
“பின்ன? இதுக்கு வேற யாரையாவதையா கூப்பிட முடியும்? நீ தான ஊட்டிவிடனும், எனக்குப் பயங்கர பசி, சீக்கிரம் ஊட்டிவிடு...”
வேறு வழியில்லாமல் அவளே ஊட்டி விட ஆரம்பிக்க, இருவரையும் கண்டு குழந்தைக்குப் பொறுமை பறக்க ஆரம்பித்தது.
பொறுமை குறைய குறைய அழுகை பெரிதாக ஆரம்பித்தது. அதனை சமாதானம் செய்யும் பொருட்டு மனிஷா கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“தனு இப்ப வெளிய பெரிய யானை வந்து அட்டகாசம் பண்ணுதாம், டோலக்பூர்ல இருந்து பீம் வந்து அந்த யானையை சங்கிலி போட்டு கட்டி வைச்சதுக்கு அப்புறம் தான் நாம வெளிய போக முடியும்”
“இப்ப போனா?”
“இப்ப போனா அந்த யானை நம்மல அதோட தும்பிக்கைலத் தூக்கி அப்படியே வீசிடும்”
“அச்சுச்சோ...”
“அப்பா சாப்பிட்டதும், நாம போகலாம்? சரியா?”
“பீம் கூட போத்தோ எடுக்காமா?”
“பீம் சண்டை போட்டு முடிச்சுட்டு பிரியா இருந்தா எடுக்கலாம்”
“ஐ... ஜாலி”
“நீ பிஸ்கட் சாப்பிடறியா?”
“வேணாம்...”
“சரி நீ என்ன பண்ணு, அப்பாவோட கைல இருக்கற வாட்சை கழட்டுவியாம், நாம எடுத்துட்டு போவோமாம்”
“ஏக்கு?”
“அப்பா கைல வாட்ச் இல்லைன்னா தாத்தா அப்பாவை அடிப்பாங்கள்ல”
“ப்பா பாவ்ம்”
“அப்பா நேத்து பாப்பா கூட விளையாடலைல்ல?
“ம்ம்”
“அதுக்கு பனிஷ்மென்ட்”
“ச்சேரி... பாப்பா கலட்டேன்”
அவள் வாட்சில் கவனமாக, மானவ் இருவரையும் ரசனையுடன் பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
இடையிடையில் தனு வாட்சைக் கழட்ட முடியாமல் அழ ஆரம்பிக்க, மனிஷா மீண்டும் பீம் கதையைச் சொல்லி சமாளித்துக்கொண்டே அவனுக்கு உணவை ஊட்டி முடித்திருந்தாள்.
பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டு வந்தவள், “சரி நாங்க கிளம்பறோம்” என்றவாறே பைகளை எடுத்துக்கொண்டு நகரப் போக,
“ஏய் இரு... இரு... இப்படியே எங்கப் போற?”
அவனுடைய பதட்டத்தில் அவள் புரியாமல் அவனைப் பார்க்க,
“பர்ஸ்ட் அதெல்லாத்தையும் கீழ வைச்சிட்டு அப்படியே உள்ள கண்ணாடில போயிப் பாரு”
அவள் குழம்பியவளாக, பைகளை கீழே வைத்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், நொடியில் பதறிப்போய் உடையைச் சரி செய்ய ஆரம்பித்தாள்.
“ப்ச் எப்ப இருந்து இப்படி இருக்கேன்னு தெரியலையே, எத்தனை பேரை கடந்து வந்தேன், போச்சு... என் மானமே போச்சு...” என்று கண்கள் கலங்க புலம்பிக்கொண்டே அவனுக்கு அருகில் வந்து தலையில் கைவைத்து அமர்ந்தவளைப் பார்த்தவன்,
அவளுடைய தோளில் கைபோட்டு அவன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டே, “ரிலாக்ஸ், நீ இந்த ரூம்க்குள்ள வர்ற வரைக்கும் நல்லாதான் இருந்த”
“அப்படின்னா?”
“உன் பொண்ணு பார்த்த வேலை இது... நான் அவளை வாங்க முயற்சி பண்றப்ப அவ தான் கலைச்சு விட்டா”
“ஷ்.. பயந்தே போயிட்டேன்... சரி அவ கலைக்கும் போது பார்த்தீங்கள்ல, இதை முதல்லையே சொல்ல வேண்டியதுதானே”
“சைட்டடிக்க சான்ஸ் கிடைக்கிறதே என்னிக்காவது ஒரு நாளைக்கு, அதை விடச் சொல்றியா?”
அவனது பதிலில் முகம் மாறியவள், பதில் பேசாமல், பைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மவுனமாக வெளியேறினாள்.
அவள் பின்னாலேயே எழுந்து வந்த மானவ், இன்டர்காமில் ரகுவையும், அவனது செக்கரட்டரியையும் அழைத்தான்.
உள்ளே நுழைந்த செக்கரட்டரியிடம் வேலைகளைத் தந்தவன், ரகுவிடமும் சில விஷயங்களைப் பேசிவிட்டு மகளுடன் அவனது இருக்கையில் இருந்து எழுந்தான்.
“நாங்க கிளம்பறோம்” என்று மனிஷா எழுந்துகொள்ள,“மூனு பேரும் தான் கிளம்பறோம். வா போகலாம்”
“எனக்கு ஹாஸ்பிட்டல்ல வொர்க் இருக்கு”
“சரி...”
“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிடுங்க, நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன்”
“நான் இப்ப வீட்டுக்கு போறேன்னு சொன்னேனா?”
“அப்புறம்?”
“உன் வொர்க்கை முடிச்சுட்டு, மூனு பேரும் இன்னிக்கு ஜாலியா ஊரை சுத்தப் போறோம்”
“எனக்கு வேலை இருக்கு, நீங்க ரெண்டு பேரும் போங்க”
“இந்த பிகு பண்ற வேலையெல்லாம் வைச்சுக்காத, என்னைப்பத்தி உனக்குத் தெரியும், மூனு பேரும் இன்னிக்கு ஊர் சுத்தப் போறோம்” என்றவன்,
“வா போகலாம்” என்று சொல்லிக்கொண்டே அவனது அறையில் இருந்த விளக்குகள், ஏசி முதலியவற்றை அணைத்துவிட்டு, கோட்டையும், டையையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற, மனிஷாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
ரிசெப்ஷனிஸ்ட்டிடம் சென்றவன், “நிஷா உன் கார் கீ தா” என்று அவளது கார் கீயை வாங்கி அவளிடம் தந்தவன்,
“டிரைவர் மாதேஷை வரச்சொல்லி, நிஷா காரை வீட்ல விடச் சொல்லுங்க”
“ஓகே சார்”
“இப்ப வா போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு அவனது காரை நோக்கிச் சென்றான்.
“என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?”
“ஜாலியா ஊரை சுத்த கூட்டிக்கிட்டு போறது உனக்கு பனிஷ்மென்ட் மாதிரி இருக்கா?”
“திடீர்ன்னு என்ன? எல்லாத்தையும் ஒரே நாள்ல மாத்தறிங்க?”
“எல்லாமே மனசுக்குள்ள இருக்கு, வெளிய வர இவ்ளோ நாள் தேவைப்பட்டு இருக்கு”
“இப்ப மட்டும் வெளிய வர வேண்டிய தேவை என்ன? மாமா, அத்தை ஏதாவது சொன்னாங்களா?”
“அவங்க ஏதாவது சொன்னா, நானே உன்கிட்ட சொல்லி இருப்பேனே, ஏன் இப்படி மறைச்சு கூட்டிக்கிட்டு போறேன்”
“என்னாச்சு நிஷா? பேபிக்கு என்ன கோபம்?”
“நான் கிளம்பினதும் என் கூட வர்றேன்னு ஒரே அடம், சரின்னு கூட்டிட்டு வந்தேன், இங்க காரை விட்டு இறங்கினதுல இருந்து அடம், மறுபடியும் கார்ல ரைட் போகனுமாம்”
“தனு... நீ அப்பாட்ட வருவியாம், நான் உன்னை கார்ல கூட்டிட்டு போவேனாம்”
அவனுடைய வார்த்தைகளில், மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்த தனுவின் கண்கள் அழுகையில் சிவந்து வீங்கி இருந்தது.
“அச்சோ... என் செல்ல குட்டில்ல.. அழக்கூடாது... பாருங்க என் பட்டு குட்டி கண்ணெல்லாம் எப்படி சிவந்து போயி இருக்கு, நீங்க அப்பாட்ட வாங்க, நாம ஜாலியா கார்ல சுத்தலாம்” என்று கை நீட்ட,
குழந்தை திரும்பி மனிஷாவைப் பார்த்தது.
“அப்பா கார்ல ரைட் கூட்டிட்டு போவாங்க... நான் இங்க தான் இருப்பேன்... உனக்கு ரைட் வேணும்ன்னா அப்பாட்ட போ... இல்லையா அம்மாட்ட இரு...” என்று அவளும் சொல்ல,
அடுத்த நொடி மானவிடம் தாவி இருந்தது.
அவன் குழந்தையை வாங்கி முத்தமிட்டுக் கொஞ்ச ஆரம்பிக்க, மனிஷா உணவை எடுத்துக்கொண்டு உள்ளிருந்த அறைக்குள் நுழைந்தாள்.
அவள் அவனுக்கு தட்டில் உணவை எடுத்து வைக்க, மானவ் மகளுடன் உள்ளே நுழைந்தான்.
“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?”
“ம்ம். நீங்க உட்காருங்க” என்றவள், “தனு அம்மாட்ட வா”
“ம்ஹும்..” என்பதாய் குழந்தை தலையசைத்துவிட்டு மானவை இறுக்கிக் கட்டிக்கொண்டது.
“அப்பா சாப்பிட்டதும், நாம கார்ல போகலாம்”
“ம்ஹும்..” என்று தலையசைத்துவிட்டு,
மானவ்வின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவனை இறுகக்கட்டிகொண்டது.
“அவ இப்போதைக்கு என்னை விட மாட்டா, பேசாம நீயே ஊட்டிவிடு” என்று கண்கள் மின்ன மானவ் சொல்ல,
“என்ன... நானா?” என்று அதிர்சியுடன் மனிஷா கேள்வி எழுப்பினாள்.
“பின்ன? இதுக்கு வேற யாரையாவதையா கூப்பிட முடியும்? நீ தான ஊட்டிவிடனும், எனக்குப் பயங்கர பசி, சீக்கிரம் ஊட்டிவிடு...”
வேறு வழியில்லாமல் அவளே ஊட்டி விட ஆரம்பிக்க, இருவரையும் கண்டு குழந்தைக்குப் பொறுமை பறக்க ஆரம்பித்தது.
பொறுமை குறைய குறைய அழுகை பெரிதாக ஆரம்பித்தது. அதனை சமாதானம் செய்யும் பொருட்டு மனிஷா கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“தனு இப்ப வெளிய பெரிய யானை வந்து அட்டகாசம் பண்ணுதாம், டோலக்பூர்ல இருந்து பீம் வந்து அந்த யானையை சங்கிலி போட்டு கட்டி வைச்சதுக்கு அப்புறம் தான் நாம வெளிய போக முடியும்”
“இப்ப போனா?”
“இப்ப போனா அந்த யானை நம்மல அதோட தும்பிக்கைலத் தூக்கி அப்படியே வீசிடும்”
“அச்சுச்சோ...”
“அப்பா சாப்பிட்டதும், நாம போகலாம்? சரியா?”
“பீம் கூட போத்தோ எடுக்காமா?”
“பீம் சண்டை போட்டு முடிச்சுட்டு பிரியா இருந்தா எடுக்கலாம்”
“ஐ... ஜாலி”
“நீ பிஸ்கட் சாப்பிடறியா?”
“வேணாம்...”
“சரி நீ என்ன பண்ணு, அப்பாவோட கைல இருக்கற வாட்சை கழட்டுவியாம், நாம எடுத்துட்டு போவோமாம்”
“ஏக்கு?”
“அப்பா கைல வாட்ச் இல்லைன்னா தாத்தா அப்பாவை அடிப்பாங்கள்ல”
“ப்பா பாவ்ம்”
“அப்பா நேத்து பாப்பா கூட விளையாடலைல்ல?
“ம்ம்”
“அதுக்கு பனிஷ்மென்ட்”
“ச்சேரி... பாப்பா கலட்டேன்”
அவள் வாட்சில் கவனமாக, மானவ் இருவரையும் ரசனையுடன் பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
இடையிடையில் தனு வாட்சைக் கழட்ட முடியாமல் அழ ஆரம்பிக்க, மனிஷா மீண்டும் பீம் கதையைச் சொல்லி சமாளித்துக்கொண்டே அவனுக்கு உணவை ஊட்டி முடித்திருந்தாள்.
பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டு வந்தவள், “சரி நாங்க கிளம்பறோம்” என்றவாறே பைகளை எடுத்துக்கொண்டு நகரப் போக,
“ஏய் இரு... இரு... இப்படியே எங்கப் போற?”
அவனுடைய பதட்டத்தில் அவள் புரியாமல் அவனைப் பார்க்க,
“பர்ஸ்ட் அதெல்லாத்தையும் கீழ வைச்சிட்டு அப்படியே உள்ள கண்ணாடில போயிப் பாரு”
அவள் குழம்பியவளாக, பைகளை கீழே வைத்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், நொடியில் பதறிப்போய் உடையைச் சரி செய்ய ஆரம்பித்தாள்.
“ப்ச் எப்ப இருந்து இப்படி இருக்கேன்னு தெரியலையே, எத்தனை பேரை கடந்து வந்தேன், போச்சு... என் மானமே போச்சு...” என்று கண்கள் கலங்க புலம்பிக்கொண்டே அவனுக்கு அருகில் வந்து தலையில் கைவைத்து அமர்ந்தவளைப் பார்த்தவன்,
அவளுடைய தோளில் கைபோட்டு அவன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டே, “ரிலாக்ஸ், நீ இந்த ரூம்க்குள்ள வர்ற வரைக்கும் நல்லாதான் இருந்த”
“அப்படின்னா?”
“உன் பொண்ணு பார்த்த வேலை இது... நான் அவளை வாங்க முயற்சி பண்றப்ப அவ தான் கலைச்சு விட்டா”
“ஷ்.. பயந்தே போயிட்டேன்... சரி அவ கலைக்கும் போது பார்த்தீங்கள்ல, இதை முதல்லையே சொல்ல வேண்டியதுதானே”
“சைட்டடிக்க சான்ஸ் கிடைக்கிறதே என்னிக்காவது ஒரு நாளைக்கு, அதை விடச் சொல்றியா?”
அவனது பதிலில் முகம் மாறியவள், பதில் பேசாமல், பைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மவுனமாக வெளியேறினாள்.
அவள் பின்னாலேயே எழுந்து வந்த மானவ், இன்டர்காமில் ரகுவையும், அவனது செக்கரட்டரியையும் அழைத்தான்.
உள்ளே நுழைந்த செக்கரட்டரியிடம் வேலைகளைத் தந்தவன், ரகுவிடமும் சில விஷயங்களைப் பேசிவிட்டு மகளுடன் அவனது இருக்கையில் இருந்து எழுந்தான்.
“நாங்க கிளம்பறோம்” என்று மனிஷா எழுந்துகொள்ள,“மூனு பேரும் தான் கிளம்பறோம். வா போகலாம்”
“எனக்கு ஹாஸ்பிட்டல்ல வொர்க் இருக்கு”
“சரி...”
“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிடுங்க, நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன்”
“நான் இப்ப வீட்டுக்கு போறேன்னு சொன்னேனா?”
“அப்புறம்?”
“உன் வொர்க்கை முடிச்சுட்டு, மூனு பேரும் இன்னிக்கு ஜாலியா ஊரை சுத்தப் போறோம்”
“எனக்கு வேலை இருக்கு, நீங்க ரெண்டு பேரும் போங்க”
“இந்த பிகு பண்ற வேலையெல்லாம் வைச்சுக்காத, என்னைப்பத்தி உனக்குத் தெரியும், மூனு பேரும் இன்னிக்கு ஊர் சுத்தப் போறோம்” என்றவன்,
“வா போகலாம்” என்று சொல்லிக்கொண்டே அவனது அறையில் இருந்த விளக்குகள், ஏசி முதலியவற்றை அணைத்துவிட்டு, கோட்டையும், டையையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற, மனிஷாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
ரிசெப்ஷனிஸ்ட்டிடம் சென்றவன், “நிஷா உன் கார் கீ தா” என்று அவளது கார் கீயை வாங்கி அவளிடம் தந்தவன்,
“டிரைவர் மாதேஷை வரச்சொல்லி, நிஷா காரை வீட்ல விடச் சொல்லுங்க”
“ஓகே சார்”
“இப்ப வா போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு அவனது காரை நோக்கிச் சென்றான்.
“என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?”
“ஜாலியா ஊரை சுத்த கூட்டிக்கிட்டு போறது உனக்கு பனிஷ்மென்ட் மாதிரி இருக்கா?”
“திடீர்ன்னு என்ன? எல்லாத்தையும் ஒரே நாள்ல மாத்தறிங்க?”
“எல்லாமே மனசுக்குள்ள இருக்கு, வெளிய வர இவ்ளோ நாள் தேவைப்பட்டு இருக்கு”
“இப்ப மட்டும் வெளிய வர வேண்டிய தேவை என்ன? மாமா, அத்தை ஏதாவது சொன்னாங்களா?”
“அவங்க ஏதாவது சொன்னா, நானே உன்கிட்ட சொல்லி இருப்பேனே, ஏன் இப்படி மறைச்சு கூட்டிக்கிட்டு போறேன்”