நாயகி உயிரோட இல்லைன்ற உண்மையை ஆரம்பத்துலயே சொல்லிட்டீங்க. இனி எப்படி கதையை வாசிக்க....ன்னு, அப்போவே யோசிச்சேன்.. ஆனாலும் எப்டி நடந்தது என்ன ஆனதுன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்பு.. சரி வாசிப்போம்னு கதையை தொடர்ந்தேன்.. ராதையோட அன்புக்கு வாசிக்கிறவங்களும் வம்சி கிருஷ்ணாவும் மரியாதை குடுத்தே ஆகணும்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க!!!! வாசிச்ச எல்லாருமே குடுத்திருப்பாங்க.. நானும் கொடுத்துட்டேன்!! சுழன்று சுழன்று போச்சு கதை!! முடிவு ரொம்ப அருமையா இருந்தது!! எதிர்பார்ப்பற்ற அந்த அன்பு!!! 80 வயதுவரை வாழ்ந்தாலும் மனதால் மட்டும் உணர முடிந்த அன்பு!! நெகிழ்ச்சியா, நிறைவா இருந்தது!!! நிறைய எழுதுங்க!! வாழ்த்துகள்!!
ஆயுதம் செய்வாள் கதையை அடுத்து தொடருங்க!!