All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டேய் உன்னை காணவில்லையே என்று அவள் பதறிப் போய் தேடினால் அவளை அறைகிறாயே. உன்னோடு அவள் சந்தோஷமாக வாழ ஆசை படுகிறாள் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்
நிச்சயமா வைத்துக் கொள்வான். எங்கே தப்பா முடிவு எடுத்திடுவாளோ என்கிற பயம்தான் இப்படி பண்ணிடுச்சு :love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? நல்ல மனிதரின் அன்பு எங்களுக்கு புரிந்த து என்றால், சர்வாவின் ஆழமான காதல் அவனின் செயலால் அந்தரி புரிந்து கொண்ட பதிவு...

குலவேந்தர் இது போல் தன்னலமற்ற அன்பையும் பாசத்தையும் திக்கற்று நின்ற அந்தரி மேல் காட்டிய இவர் உத்தமர்... என்னவொரு பாசம்... இவர்கள் பிள்ளைகள் என்பதாலேயே பிரகாஷூம் தாமரையும் அவள் மேல் ஆழமான அன்பை வைத்தார்களோ? அவள் பேசிய பாஷையை சர்வா புரிந்து கொண்டு குலவேந்தருக்கு சொன்னதை கேட்ட அவர் சர்வா அவள் மேல் வைத்துள்ள ஆழமான காதலை அந்நொடியில் புரிந்து கொண்டார்... அதனால் நிரந்தரி வாழ்க்கை தங்கு தடையின்றி சீராக அவளுக்கு தந்தையாக அறிவுரை.. அவரின் அன்பை கண்டு கண் கலங்கி விட்டது சிவா... அற்புதமான மனிதர்...

அந்தரியும் சர்வாவும் தனியாக பயணம்... நேற்று எல்லை மீற நினைத்தவன் இன்று அவள் வேதனையை கண்டு தள்ளி நிற்கிறான் சர்வா... அவன் அவளுக்கு கால் கொலுசை அணிவித்து முத்தமிட்டது அழகென்றால் அவள் வெட்கம் அழகோ அழகு... அதுவரை வெளியே பார்த்து கொண்டிருந்தவள் அவன் தூங்கியவுடன் அவன் தலை முதல் கால் வரை கண்டு ரசிக்கிறாள் பாருங்க.. அழகு சிவா.. அப்படியே அக்காட்சியை எங்கள் கண் முன் கொண்டு வந்துடீங்க... அற்புதம் சிவா...

இரயிலை விட்டு இறங்கி சென்ற சர்வாவை காணாமல் தவிக்கும் அந்தரி...கதவோரத்தில் அந்தரி தவிப்போடு நின்று கொண்டிருப்பதை கண்ட சர்வாவின் இதயம் நின்று துடித்தது அவள் தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாள் என்று... இதனால் செயலிழந்து அவளை அடிக்க மற்றும் அணைக்க... அப்பப்பா!! அவன் தவிப்பு எங்கள் கண் எதிரில் சிவா.. எப்படி சிவா? எந்த உணர்ச்சிகளையும் அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்து எழுதறீங்க...

சர்வா எதற்கு கோப ப்பட்டான் என்று புரிந்து கொண்ட நிரந்தரி அவன் ஆழமான காதலையும் அதனால் உண்டான தவிப்பையும் புரிந்து கொண்டு அவளாகவே அவனுக்கு கொடுத்த முதல் முத்தம்... அபாரம் சிவா...
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? நல்ல மனிதரின் அன்பு எங்களுக்கு புரிந்த து என்றால், சர்வாவின் ஆழமான காதல் அவனின் செயலால் அந்தரி புரிந்து கொண்ட பதிவு...

குலவேந்தர் இது போல் தன்னலமற்ற அன்பையும் பாசத்தையும் திக்கற்று நின்ற அந்தரி மேல் காட்டிய இவர் உத்தமர்... என்னவொரு பாசம்... இவர்கள் பிள்ளைகள் என்பதாலேயே பிரகாஷூம் தாமரையும் அவள் மேல் ஆழமான அன்பை வைத்தார்களோ? அவள் பேசிய பாஷையை சர்வா புரிந்து கொண்டு குலவேந்தருக்கு சொன்னதை கேட்ட அவர் சர்வா அவள் மேல் வைத்துள்ள ஆழமான காதலை அந்நொடியில் புரிந்து கொண்டார்... அதனால் நிரந்தரி வாழ்க்கை தங்கு தடையின்றி சீராக அவளுக்கு தந்தையாக அறிவுரை.. அவரின் அன்பை கண்டு கண் கலங்கி விட்டது சிவா... அற்புதமான மனிதர்...

அந்தரியும் சர்வாவும் தனியாக பயணம்... நேற்று எல்லை மீற நினைத்தவன் இன்று அவள் வேதனையை கண்டு தள்ளி நிற்கிறான் சர்வா... அவன் அவளுக்கு கால் கொலுசை அணிவித்து முத்தமிட்டது அழகென்றால் அவள் வெட்கம் அழகோ அழகு... அதுவரை வெளியே பார்த்து கொண்டிருந்தவள் அவன் தூங்கியவுடன் அவன் தலை முதல் கால் வரை கண்டு ரசிக்கிறாள் பாருங்க.. அழகு சிவா.. அப்படியே அக்காட்சியை எங்கள் கண் முன் கொண்டு வந்துடீங்க... அற்புதம் சிவா...

இரயிலை விட்டு இறங்கி சென்ற சர்வாவை காணாமல் தவிக்கும் அந்தரி...கதவோரத்தில் அந்தரி தவிப்போடு நின்று கொண்டிருப்பதை கண்ட சர்வாவின் இதயம் நின்று துடித்தது அவள் தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாள் என்று... இதனால் செயலிழந்து அவளை அடிக்க மற்றும் அணைக்க... அப்பப்பா!! அவன் தவிப்பு எங்கள் கண் எதிரில் சிவா.. எப்படி சிவா? எந்த உணர்ச்சிகளையும் அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்து எழுதறீங்க...

சர்வா எதற்கு கோப ப்பட்டான் என்று புரிந்து கொண்ட நிரந்தரி அவன் ஆழமான காதலையும் அதனால் உண்டான தவிப்பையும் புரிந்து கொண்டு அவளாகவே அவனுக்கு கொடுத்த முதல் முத்தம்... அபாரம் சிவா...
வாவ் வாவ் வாவ்... நீங்கள் என் கதைக்கு ரசிகை என்றால், உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நான் மிக்ப பெரும் ரசிகையாகிவிட்டேன் சாந்தி. எத்தனை அழகாக ரசித்து உங்கள் கருத்தைப் போடுகிறீர்கள். மிக மிக நன்றிமா. மனம் நெகிழ்ந்தேன் மகிழ்ந்தேன்... சுவைத்தேன். :love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? நிரந்தரியை திருமணம் செய்து அழைத்து வந்தாலும் சர்வா தள்ளி நின்று அவளின் நிலையை புரிந்து நடந்து கொள்ளும் பதிவு...

குலவேந்தர் இருவரின் நிலையையுமே புரிந்து எவ்வளவு அழகாக அவர்களுக்கு கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாமல் நடந்து ஒரு சிறந்த அன்புடைய அழகான மனம் கொண்ட மனிதர் என்று நிரூபித்து விட்டார்... அற்புதமான மனிதர்...

குளித்து விட்டு வந்த சர்வாவை அந்தரி ரசித்து வெட்கப்படுவது அழகென்றால் அவளை ஈர உடையில் கண்ட சர்வா மொத்த அழகும் குத்தகைக்கு எடுத்து அழகு ரதியாய் நிற்கும் தன்னவளை கண்டும் அந்த நிலையிலும் அவளை புரிந்து தன்னிடம் வர காத்திருக்கும் கண்ணியம் அழகோ அழகு..

எப்போதும் அசம்பாவிதங்களையே தன் குடும்பத்தில் கண்ட அந்தரிக்கு எதிர்மறை எண்ணம் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை... ஆனாலும் இந்த காதல் கொண்ட மனம் இருக்கே சில மணி துளிகளிலேயே காணாது எதிர்மறை எண்ணங்கள் தோன்றி தவிக்கிறது? சர்வா அவளின் இவ்வெண்ணத்தை மாற்றுவானா? எங்கு சென்றான் சர்வா அவளிடம் சொல்லாமல்?

சிவா ஏதாவது இருவருக்கிடையில் பெரிய பள்ளமா? அச்சோ! எங்கே போனான் சர்வா என்று எங்களையும் தவிக்க வைக்கிறீர்களே இது நியாயமா?

அருமையான பதிவு சிவா..
 
Top