sivanayani
விஜயமலர்
மிக மிக நன்றி சாந்தி. எப்போதும் போல ரசனையான உங்கள் பதிவு கண்டு ரசித்து மகிழ்ந்தேன். இன்று அவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கையின் ஆரம்பம் பதிவிடுவேன். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கையில் எல்லாம் நினைவாகவே இருக்கும்எப்படி இருக்கீங்க சிவா? நிரந்தரியை திருமணம் செய்து அழைத்து வந்தாலும் சர்வா தள்ளி நின்று அவளின் நிலையை புரிந்து நடந்து கொள்ளும் பதிவு...
குலவேந்தர் இருவரின் நிலையையுமே புரிந்து எவ்வளவு அழகாக அவர்களுக்கு கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாமல் நடந்து ஒரு சிறந்த அன்புடைய அழகான மனம் கொண்ட மனிதர் என்று நிரூபித்து விட்டார்... அற்புதமான மனிதர்...
குளித்து விட்டு வந்த சர்வாவை அந்தரி ரசித்து வெட்கப்படுவது அழகென்றால் அவளை ஈர உடையில் கண்ட சர்வா மொத்த அழகும் குத்தகைக்கு எடுத்து அழகு ரதியாய் நிற்கும் தன்னவளை கண்டும் அந்த நிலையிலும் அவளை புரிந்து தன்னிடம் வர காத்திருக்கும் கண்ணியம் அழகோ அழகு..
எப்போதும் அசம்பாவிதங்களையே தன் குடும்பத்தில் கண்ட அந்தரிக்கு எதிர்மறை எண்ணம் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை... ஆனாலும் இந்த காதல் கொண்ட மனம் இருக்கே சில மணி துளிகளிலேயே காணாது எதிர்மறை எண்ணங்கள் தோன்றி தவிக்கிறது? சர்வா அவளின் இவ்வெண்ணத்தை மாற்றுவானா? எங்கு சென்றான் சர்வா அவளிடம் சொல்லாமல்?
சிவா ஏதாவது இருவருக்கிடையில் பெரிய பள்ளமா? அச்சோ! எங்கே போனான் சர்வா என்று எங்களையும் தவிக்க வைக்கிறீர்களே இது நியாயமா?
அருமையான பதிவு சிவா..