Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20:
அடுத்த நாள் வெண்ணிலாவிற்கு உடல் நிலை சரியாகி விட்டது..
ஒரு நாள் மட்டும் ஓய்வெடுத்துக்கொண்டு அவள் ட்ரைனிங் கிளம்பிவிட்டாள்..
பகலவன் தான் அவளை காலையில் சென்று இறக்கி விட்டான்..
அவளை விட்டுவிட்டு தன் அலுவலக வேலையை பார்க்க செல்பவன், மாலை அவளையும் அழைத்துக்கொண்டு தான் வீட்டிற்கு வருவான்..
சில நாட்கள் அவனுக்கு வேலை அதிகமாக இருந்தாலும், அவளை கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டே செல்வான்.
"நான் ஒரு கேப் புக் பண்ணி வந்துக்கறேன் வர்மா.. நீங்க அலையாதீங்க.." என வெண்ணிலா கூறியதை எல்லாம் அவன் காதில் வாங்குவதே இல்லை.
அதே போல் சமையலும் இருவரும் மாறி மாறி தான் செய்தனர்..
பொதுவாக பகலவன் இருந்தால் அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அவனே செய்வான்..
அவன் வர தாமாதமானால் மட்டுமே சமையலறை பொறுப்பை அவள் எடுத்துக்கொள்வது..
வார இறுதி நாள் என்றால் இருவரும் சேர்ந்தே செய்வார்கள்..
அன்றும் அப்படி தான் ஞாயிற்று கிழமை என்று இருவரும் எழுந்ததே தாமதமாக தான்..
முதலில் எழுந்து வெளியே வந்த வெண்ணிலா, ஹால் சோபாவில் படுத்து உறங்கி கொண்டிருந்த பகலவனை ஆசையாக பார்த்து கொண்டே சிறிது நேரம் நின்று விட்டாள்..
வந்த முதல் நாள் அவள் உடல் நலம் கருதி அவன் அவள் அருகில் படுத்ததோடு சரி, மறுநாளே, "வெளியில் தான் படுப்பேன்" என அடமாக கூறி விட்டான்.
"நான் உங்களை ஒன்னும் பண்ணிட மாட்டேன் வர்மா.. பேசாமல் இங்கேயே படுங்களேன்.." என அவள் கிண்டல் செய்த போதும்,
"வேண்டாம் பேபி.. எல்லாத்துக்கும் அடம் பிடிக்கக்கூடாது.." என அவளை அடக்கி விட்டவன், அவள் கெஞ்சியபோதும் ஒத்துக்கொள்ளவில்லை.
அவன் மேல் அவளுக்கு அலாதி நம்பிக்கை இருந்தது..
அவனுக்கும் நம்பிக்கை இருந்தாலும், "இது தப்பு பேபி" என்றுவிட்டு சென்றுவிட்டான்.
அவளும் அதிகம் வற்புறுத்தாமல் இதில் விட்டு விட்டாள்..
அவனை நினைத்து நெகிழ்வுடன் சிரித்துக்கொண்டவள், தன் தினப்படி வழக்கம் போல் அவன் முகத்தில் மென்மையாக ஊதி எழுப்ப, அவனும் மென்புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான்..
"வரேன் பேபி" என்றுவிட்டு சென்று ப்ரெஷ் ஆகி வந்தவன், நேரத்தை பார்க்க மணி பத்தாகி இருந்தது..
"ரொம்ப நேரம் தூங்கி விட்டேன் போலையே பேபி.. எழுப்பி இருக்கலாமே.." என கேட்டுக்கொண்டே பால்கனியில் அவள் கொடுத்த காபியுடன் அவன் அமர,
"ஆமா இங்கே வேலை பாலை போகுது பாருங்க.. பேசாம ரெஸ்ட் எடுங்க வர்மா.." என்றாள் வெண்ணிலா.
"ஹேய் நான் இத்தனை நேரமெல்லாம் தூங்கியதே இல்லை டி.. நீ என்னை சோம்பேறி ஆக்குகிறாய் பேபி.." சலிப்புடன் கூறியவனை பார்த்தவள்,
"சந்தோசமா வாழ வழி செய்கிறேன் என்று சொல்ல கூடாதா?" என்றாள் சீரியஸாக.
அவள் குரலின் வித்தியாசத்தில் தான் அவள் முகத்தை கவனித்தவன், "அஃப்கோர்ஸ் அஃப்கோர்ஸ் பேபி.. நான் இது போல் டென்ஷன் இல்லாமல் வாழ்ந்து பல வருடம் ஆச்சு டா.. நிஜமாவே ரொம்பவும் நிம்மதியா இருக்கேன்.. எல்லாம் என் பேபியால் தான்.." மனதார கூறிக்கொண்டே எழுந்தவன், அவளை மென்மையாக அணைத்துக்கொள்ள, அவன் தோளில் சாய்ந்துகொண்டவளுக்கு நிம்மதியாக இருந்தது..
"மதியத்துக்கு ஏதாவது செய்யவா பேபி?" என பகலவன் கேட்க,
"வெளியே போகலாமே வர்மா" என்றாள் வெண்ணிலா.
"சரி டா.. கிளம்பு.." என்றுவிட்டு அவனும் குளிக்க சென்றுவிட, அவன் குளித்து வந்ததும் அவளும் குளித்து கிளம்பி வந்தாள்..
இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருந்த பார்பிக்யூ ஹோட்டலுக்கு சென்றனர்..
பாணி பூரி ஸ்டாலிலேயே பத்து நிமிடத்திற்கு மேல் நின்றவளை, கடைசியில் பகலவன் தான் பிடித்து இழுத்து வந்து அமர வைத்தான்..
அவள் முறைத்ததில், "மத்ததெல்லாம் ட்ரை பண்ணனும் இல்லையா பேபி! இதிலேயே வயிறு நிரம்பி விட்டால் என்ன செய்வாய்?" என்று சொல்லி சமாளித்து வைத்தான்.
ஒருவாரு அங்கு உணவு முடிந்ததும், இருவரும் கிளம்பி வீட்டிற்கே வந்துவிட்டனர்..
வேலையாள் யாரும் வைக்காததால், இருவரும் தான் வீட்டை சுத்தம் செய்தனர்.
முக்கால் வாசி பகலவன் தான் செய்தான்..
அவள் ஏதோ சின்ன சின்ன உதவிகள் தான் செய்து கொண்டிருந்தாள்.
சாதா நைட் பேண்டும், டி ஷர்ட்டுமாக தலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ஒட்டடை அடித்து கொண்டிருந்தவனை, சோபாவில் அமர்ந்துகொண்டு லேஸ் கொறித்து கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் வெண்ணிலா..
தன் போனில் அவன் செய்துகொண்டிருந்த வேலையை வீடியோ எடுத்துக்கொண்டவள், "தி கிரேட் பகலவ வர்மன் எம். எல். எ செய்யும் வேலையை பாருங்கள் என்று, யு டியூபில் போட்டால் வீடியோ செம ட்ரெண்ட் ஆகும் வர்மா" என அவள் கிண்டல் செய்ய,
"போடேன்.. இந்த பகலவ வர்மன் மட்டுமில்லை, எப்படி பட்டவனும் வீட்டில் இந்த வேலை எல்லாம் செய்து தான் ஆக வேண்டும்.. ஐயாக்கு அதிக மரியாதை தான் கிடைக்கும்.." சுவரில் ஒரு கண்ணும், அவள் மீது ஒரு கண்ணுமாய் அவன் சிரித்துக்கொண்டே கூற,
"அப்போ போட மாட்டேன் போங்க" என முறுக்கி கொண்டாள் அவள்.
கையில் இருந்த ஒட்டடை குச்சியை கீழே வைத்துவிட்டு, தலையிலும் மூக்கிலும் கட்டி இருந்த துண்டை கழட்டி கொண்டே அவள் அருகில் வந்தவன், "நான் வேலை செய்வதை மட்டும் போட்டால் போதுமா பேபி? ரொமான்ஸ் செய்வதை எல்லாம் போட வேண்டாமா?" என கேட்டுகொண்டே அவள் அருகில் அமர,
"அதுக்கு நீங்க ஏதாவது பண்ணனும்!" என்றாள் அவள் நக்கலாக.
"ஒரு மனிதன் நல்லவனா இருக்க கூடாதா டி?"
ஒரு மாதிரி ஆழமான குரலில் கேட்டுக்கொண்டே அவன் அவள் முகத்தருகில் நெருங்க, அதுவரை வாயடித்து கொண்டிருந்தவள், அதற்கு மேல் பேச்சு வராமல் படபடப்புடன் அவனை பார்த்தாள்..
மெதுவாக அவள் அருகில் நெருங்கியவன், மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான்..
ஒற்றை விரலால் அவன் அவள் முகத்தில் கோலம் போட்டு கொண்டிருந்ததில், அவள் விழிகள் தானாக மூடி கொண்டது..
அடுத்து அவள் இரண்டு கண்களிலும் அவன் இதழ் பதிக்க, அவள் உடல் மென்மையாக சிலிர்த்தது.
அவன் உதடுகள் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிந்த போது, அவள் இமைகள் மேலும் அழுத்தத்துடன் மூடி கொண்டது..
உதடு துடிக்க ஒரு வித படபடப்புடன் அவள் அமர்ந்திருக்க, அது வரை ஒரு வித மோன நிலையில் இருந்த பகலவனும் சட்டென விலகி விட்டான்.
அவன் விலகியதில் அவள் மெதுவாக கண் திறக்க, "இதற்கு தான் ஒரே வீடு வேண்டாம் என்றேன் பேபி" என்றான் அவன் அவள் முகத்தையே பார்க்காமல்.
"ம்ஹ்ம்.. இத்தனை நல்லவராக இருந்தால் நீங்க தேருவது ரொம்பவும் கஷ்டம் மிஸ்டர் வர்மா" நக்கலாக கூறியவளை ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவன்,
"உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு பேபி.." சீரியஸாக அவன் கூறியதில், அவனை நெருங்கி அமர்ந்தவள்,
"என்னிடம் ஏன் இந்த சங்கடம் வர்மா?" என மெதுவாக கேட்க, அவளை ஒருமாதிரி பார்த்தவன்,
"ஒன்னும் இல்லை பேபி.. நான் துணி காய போட போறேன்" என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
அவன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் உறுத்தி கொண்டே தான் இருந்தது.
அவன் காதலை சொன்ன போதே அவள் ஏற்று கொண்டிருந்தால் அவனும் இயல்பாக இருந்திருப்பான்.
ஆனால் அவளோ முதலில் மறுத்துவிட்டு, பின் திடீரென்று அல்லவா ஏற்று கொண்டாள்..
மனதில் ஏதேனும் நினைக்கிறாளோ என்ற சந்தேகம் இருந்தாலும், அது என்னவாக இருக்கும் என்று அவனால் கணிக்க முடியவில்லை.
அதனாலேயே சற்று எச்சரிக்கியுடனே இருந்தான்..
அவன் எழுந்து சென்றதும் வெண்ணிலா முகமும் வேதனையுடன் கசங்கி தான் போயிற்று..
தன்னால் அவன் இயல்பாக இருக்க முடியாமல் தவிக்கிறான் என புரியாத அளவு அவள் முட்டாள் இல்லையே!.
"சாரி வர்மா" என மனதார அவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டவள் தன் கையில் இருந்த போனை பார்த்தாள்..
அது இத்தனை நேரம் கட் ஆகாமல், அவன் கொடுத்த இதழ் ஒற்றல்கள் வரை அழகாய் சேவ் ஆகி இருந்தது..
மேலும் சில நாட்கள் அமைதியாக ஓட, அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு சரியாக வெண்ணிலாவை எழுப்பினான் பகலவன்.
"பேபி.. பேபி.." என அவன் அவளை உலுக்க, தூக்கத்தில் இருந்து விழிக்கும் எண்ணமே இல்லாமல் அவன் மடியில் சாய்ந்து படுத்தவள்,
"பர்த்டே தானே கொண்டாட போறீங்க வர்மா.. நாளை காலை கொண்டாடிப்போம்.. இப்போ தூக்கம் வருது.." என்றாள் கண்களையே திறக்காமல்.
அவள் கூற்றில் ஒரு நொடி அதிர்ந்து விழித்தவனுக்கு, அடுத்த நொடி சிரிப்பு வந்துவிட்டது.
"உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த என்னை தான் பேபி அடிச்சுக்கணும்" என அவன் புலம்ப,
"நீங்க அடித்தால் வலிக்கும்.. நான் வேணும்னா அடிக்கவா?" என அவன் கன்னத்தில் தட்டினாள் வெண்ணிலா.
"தூக்கத்திலும் நக்கல் குறைகிறதா பார்?" என சிரித்துக்கொண்டவன்,
"ஹேய் பேபி, ஆசையா கேக் எல்லாம் வாங்கிட்டேன் டி.. கொஞ்சம் வாயேன்.." என மீண்டும் கெஞ்ச,
"எழுந்தே ஆகணுமா?" என கேட்டுக்கொண்டே மேலும் அவனுடன் ஒன்றினாள் வெண்ணிலா.
"பேபி ப்ளீஸ் டி.." மேலும் மேலும் அவன் கெஞ்சவும் அவனை கஷ்டப்படுத்த விரும்பாமல் கண்ணை கசக்கி கொண்டு எழுந்துவிட்டாள்..
நன்றாக சிவந்திருந்த அவள் கண்களை பார்த்தவன், "நல்லா தூங்கி விட்டாயா பேபி? சாரி டா... கண்ணெல்லாம் சிவந்து போச்சே.." என வருத்தப்பட,
"எழுப்பிவிட்டுட்டு உங்களுக்கு என்ன பீலிங்.. எனக்கு தான் பீலிங்.. வாங்க போய் கேக் சாப்பிடுவோம்.." என்று கூறிக்கொண்டே அவள் முன்னால் இறங்கிவிட, அவனும் அவளை தொடர்ந்து இறங்கினான்.
வெண்ணிலா முதல் வேலையாக சென்று முகத்தை அலம்பி கொண்டு தான் வந்தாள்..
மேலும் அவன் ஏதாவது கேட்டு வைத்தால் வம்பில்லையா..!
அழுதேன் என்று உண்மையையா சொல்ல முடியும்..!
தூக்கம் என்று அவன் நம்பும் வரை தான் அவளுக்கு நல்லது..
இருவரும் ஹாலுக்கு வர, அங்கு இதயவடிவ மெழுகுவர்த்திகளுக்கு நடுவில் அழகான கேக் வாங்கி வைத்திருந்தான் பகலவன்..
"இங்கே பெரிதா ஒன்றும் செய்ய முடியவில்லை பேபி" கவலையுடன் அவன் கூற,
"இதுவே பெரிது வர்மா" என அவனை தேற்றிவிட்டு கேக்கை வெட்டினாள் வெண்ணிலா.
சிறு துண்டெடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்ள, "ஹாப்பி பர்த்டே மை டியர் மூன் பேபி.. அடுத்த வருஷம் நம்ம குழந்தையுடன் இதே போல் நீ பர்த்டே கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" குறும்புடன் அவன் கூற, அதில் மென்மையாக சிரித்துக்கொண்டவள்,
"என் ஆசையும் அதே தான் வர்மா" என்றாள் சீரியஸாக.
"இரு பேபி வரேன்" என்றுவிட்டு சமையல் அறைக்குள் சென்றவன், சிறிய கப்பில் ஏதோ எடுத்து வந்தான்.
"பேபி ஆ காட்டு" என பகலவன் கூற, அவளும் என்ன ஏதென்று கேட்காமல் வாயை திறந்தாள்.
ஒரு சின்ன ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்டியவன், "எப்படி இருக்கு பேபி?" என்று கேட்க,
"ம்ம் சூப்பர் வர்மா.. பாஸந்தி எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எங்கே வாங்கினீங்க.." என்று கேட்டுக்கொண்டே அமர்ந்தாள் வெண்ணிலா.
அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு தொடர்ந்து ஊட்டியவன், "நானே தான் செய்தேன் பேபி" என்றான்.
"இப்படி எல்லாம் சமைக்க தெரிந்த ஒருவர் கிடைக்க நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் வர்மா.." குறும்பாக கூறியவளை பார்த்து சிரித்தவன்,
"நீ தான் பேபி எனக்கு முதல்.. மற்ற எல்லாமே அப்புறம் தான்.. உனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போகிறேன்.." மனதார தான் அவன் கூறினான்.
"நிஜமாவா வர்மா?" சந்தேகம் போல் கேட்டவளை முகம் சுருங்க பார்த்தவன்,
"என் மேல் நம்பிக்கை இல்லையா பேபி?" என்றான்.
"நிறையவே இருக்கு வர்மா" என சிரித்துக்கொண்டே அவள் கூறியதில் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
"சின்ன கிபிட் பேபி" என அவன் ஒரு சிறிய கிபிட் டப்பாவை நீட்ட,அதை வாங்கி பிரித்து பார்த்தாள் வெண்ணிலா..
அதில் அழகிய வைர தோடு இருந்தது..
ஒற்றை கல் காதிலும், ஒற்றை ட்ராப்ஸ் கீழும் தொங்குவது போல் கச்சிதமாக அத்தனை அழகாக இருந்தது.
"ரொம்ப அழகா இருக்கு வர்மா.. ஆனால் வைரமா..?" என அவள் தயங்க,
"பேபி ப்ளீஸ்..." என்றான் அவன் கோபப்பட முடியாமல்.
அதில் அவளும் சட்டென முகத்தை மாற்றி கொண்டாள்..
"போட்டுக்கவா?" என அவள் கேட்க,
"அஃப்கோர்ஸ் பேபி" என்றவன் குரலில் உற்சாகம் மீண்டிருந்தது..
தன் காதில் இருந்த தங்கத்தை கழட்டிவிட்டு, அவன் கொடுத்த தோடை போட்டுக்கொண்டவள், "நல்லா இருக்கா வர்மா?" என இருபக்கமும் திருப்பி திருப்பி காட்ட,
"அழகு டி" என அவளை அணைத்துக்கொண்டான் பகலவன்..
"வர்மா இந்த கிபிட் இருக்கட்டும்.. நாளை நான் ஒரு கிபிட் கேட்பேன்.. அதுவும் வாங்கி தரணும்.." அவன் அணைப்பில் வாகாய் ஒன்றிக்கொண்டு அவள் கேட்க,
"உனக்கு இல்லாததா பேபி? வாங்கிட்டா போச்சு.. என்ன வேணும் என் பேபிக்கு?" என்றான் அவன்.
"அது நாளைக்கு தான் கேட்பேன்.. இப்போ தூக்கம் வருது" என்றவள் அப்படியே அவன் மீதே தூங்கியும் போனாள்.
அவனும் எப்போதும் போல் அவளை தூக்கி சென்று உள்ளே விட்டுவிட்டு அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு படுத்துவிட்டான்..
மறுநாள் அவள் பிறந்த நாள் பரிசு கேட்கிறேன் பேர்வழி என அவனுக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சியாக கொடுத்தாள்..
இவளிடம் அவசரப்பட்டு வாங்கி தருவதாக கூறி இருக்க கூடாது என பகலவன் தன்னை தானே தான் நொந்துகொள்ள வேண்டி இருந்தது..
குளிரும்..
அடுத்த நாள் வெண்ணிலாவிற்கு உடல் நிலை சரியாகி விட்டது..
ஒரு நாள் மட்டும் ஓய்வெடுத்துக்கொண்டு அவள் ட்ரைனிங் கிளம்பிவிட்டாள்..
பகலவன் தான் அவளை காலையில் சென்று இறக்கி விட்டான்..
அவளை விட்டுவிட்டு தன் அலுவலக வேலையை பார்க்க செல்பவன், மாலை அவளையும் அழைத்துக்கொண்டு தான் வீட்டிற்கு வருவான்..
சில நாட்கள் அவனுக்கு வேலை அதிகமாக இருந்தாலும், அவளை கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டே செல்வான்.
"நான் ஒரு கேப் புக் பண்ணி வந்துக்கறேன் வர்மா.. நீங்க அலையாதீங்க.." என வெண்ணிலா கூறியதை எல்லாம் அவன் காதில் வாங்குவதே இல்லை.
அதே போல் சமையலும் இருவரும் மாறி மாறி தான் செய்தனர்..
பொதுவாக பகலவன் இருந்தால் அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அவனே செய்வான்..
அவன் வர தாமாதமானால் மட்டுமே சமையலறை பொறுப்பை அவள் எடுத்துக்கொள்வது..
வார இறுதி நாள் என்றால் இருவரும் சேர்ந்தே செய்வார்கள்..
அன்றும் அப்படி தான் ஞாயிற்று கிழமை என்று இருவரும் எழுந்ததே தாமதமாக தான்..
முதலில் எழுந்து வெளியே வந்த வெண்ணிலா, ஹால் சோபாவில் படுத்து உறங்கி கொண்டிருந்த பகலவனை ஆசையாக பார்த்து கொண்டே சிறிது நேரம் நின்று விட்டாள்..
வந்த முதல் நாள் அவள் உடல் நலம் கருதி அவன் அவள் அருகில் படுத்ததோடு சரி, மறுநாளே, "வெளியில் தான் படுப்பேன்" என அடமாக கூறி விட்டான்.
"நான் உங்களை ஒன்னும் பண்ணிட மாட்டேன் வர்மா.. பேசாமல் இங்கேயே படுங்களேன்.." என அவள் கிண்டல் செய்த போதும்,
"வேண்டாம் பேபி.. எல்லாத்துக்கும் அடம் பிடிக்கக்கூடாது.." என அவளை அடக்கி விட்டவன், அவள் கெஞ்சியபோதும் ஒத்துக்கொள்ளவில்லை.
அவன் மேல் அவளுக்கு அலாதி நம்பிக்கை இருந்தது..
அவனுக்கும் நம்பிக்கை இருந்தாலும், "இது தப்பு பேபி" என்றுவிட்டு சென்றுவிட்டான்.
அவளும் அதிகம் வற்புறுத்தாமல் இதில் விட்டு விட்டாள்..
அவனை நினைத்து நெகிழ்வுடன் சிரித்துக்கொண்டவள், தன் தினப்படி வழக்கம் போல் அவன் முகத்தில் மென்மையாக ஊதி எழுப்ப, அவனும் மென்புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான்..
"வரேன் பேபி" என்றுவிட்டு சென்று ப்ரெஷ் ஆகி வந்தவன், நேரத்தை பார்க்க மணி பத்தாகி இருந்தது..
"ரொம்ப நேரம் தூங்கி விட்டேன் போலையே பேபி.. எழுப்பி இருக்கலாமே.." என கேட்டுக்கொண்டே பால்கனியில் அவள் கொடுத்த காபியுடன் அவன் அமர,
"ஆமா இங்கே வேலை பாலை போகுது பாருங்க.. பேசாம ரெஸ்ட் எடுங்க வர்மா.." என்றாள் வெண்ணிலா.
"ஹேய் நான் இத்தனை நேரமெல்லாம் தூங்கியதே இல்லை டி.. நீ என்னை சோம்பேறி ஆக்குகிறாய் பேபி.." சலிப்புடன் கூறியவனை பார்த்தவள்,
"சந்தோசமா வாழ வழி செய்கிறேன் என்று சொல்ல கூடாதா?" என்றாள் சீரியஸாக.
அவள் குரலின் வித்தியாசத்தில் தான் அவள் முகத்தை கவனித்தவன், "அஃப்கோர்ஸ் அஃப்கோர்ஸ் பேபி.. நான் இது போல் டென்ஷன் இல்லாமல் வாழ்ந்து பல வருடம் ஆச்சு டா.. நிஜமாவே ரொம்பவும் நிம்மதியா இருக்கேன்.. எல்லாம் என் பேபியால் தான்.." மனதார கூறிக்கொண்டே எழுந்தவன், அவளை மென்மையாக அணைத்துக்கொள்ள, அவன் தோளில் சாய்ந்துகொண்டவளுக்கு நிம்மதியாக இருந்தது..
"மதியத்துக்கு ஏதாவது செய்யவா பேபி?" என பகலவன் கேட்க,
"வெளியே போகலாமே வர்மா" என்றாள் வெண்ணிலா.
"சரி டா.. கிளம்பு.." என்றுவிட்டு அவனும் குளிக்க சென்றுவிட, அவன் குளித்து வந்ததும் அவளும் குளித்து கிளம்பி வந்தாள்..
இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருந்த பார்பிக்யூ ஹோட்டலுக்கு சென்றனர்..
பாணி பூரி ஸ்டாலிலேயே பத்து நிமிடத்திற்கு மேல் நின்றவளை, கடைசியில் பகலவன் தான் பிடித்து இழுத்து வந்து அமர வைத்தான்..
அவள் முறைத்ததில், "மத்ததெல்லாம் ட்ரை பண்ணனும் இல்லையா பேபி! இதிலேயே வயிறு நிரம்பி விட்டால் என்ன செய்வாய்?" என்று சொல்லி சமாளித்து வைத்தான்.
ஒருவாரு அங்கு உணவு முடிந்ததும், இருவரும் கிளம்பி வீட்டிற்கே வந்துவிட்டனர்..
வேலையாள் யாரும் வைக்காததால், இருவரும் தான் வீட்டை சுத்தம் செய்தனர்.
முக்கால் வாசி பகலவன் தான் செய்தான்..
அவள் ஏதோ சின்ன சின்ன உதவிகள் தான் செய்து கொண்டிருந்தாள்.
சாதா நைட் பேண்டும், டி ஷர்ட்டுமாக தலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ஒட்டடை அடித்து கொண்டிருந்தவனை, சோபாவில் அமர்ந்துகொண்டு லேஸ் கொறித்து கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் வெண்ணிலா..
தன் போனில் அவன் செய்துகொண்டிருந்த வேலையை வீடியோ எடுத்துக்கொண்டவள், "தி கிரேட் பகலவ வர்மன் எம். எல். எ செய்யும் வேலையை பாருங்கள் என்று, யு டியூபில் போட்டால் வீடியோ செம ட்ரெண்ட் ஆகும் வர்மா" என அவள் கிண்டல் செய்ய,
"போடேன்.. இந்த பகலவ வர்மன் மட்டுமில்லை, எப்படி பட்டவனும் வீட்டில் இந்த வேலை எல்லாம் செய்து தான் ஆக வேண்டும்.. ஐயாக்கு அதிக மரியாதை தான் கிடைக்கும்.." சுவரில் ஒரு கண்ணும், அவள் மீது ஒரு கண்ணுமாய் அவன் சிரித்துக்கொண்டே கூற,
"அப்போ போட மாட்டேன் போங்க" என முறுக்கி கொண்டாள் அவள்.
கையில் இருந்த ஒட்டடை குச்சியை கீழே வைத்துவிட்டு, தலையிலும் மூக்கிலும் கட்டி இருந்த துண்டை கழட்டி கொண்டே அவள் அருகில் வந்தவன், "நான் வேலை செய்வதை மட்டும் போட்டால் போதுமா பேபி? ரொமான்ஸ் செய்வதை எல்லாம் போட வேண்டாமா?" என கேட்டுகொண்டே அவள் அருகில் அமர,
"அதுக்கு நீங்க ஏதாவது பண்ணனும்!" என்றாள் அவள் நக்கலாக.
"ஒரு மனிதன் நல்லவனா இருக்க கூடாதா டி?"
ஒரு மாதிரி ஆழமான குரலில் கேட்டுக்கொண்டே அவன் அவள் முகத்தருகில் நெருங்க, அதுவரை வாயடித்து கொண்டிருந்தவள், அதற்கு மேல் பேச்சு வராமல் படபடப்புடன் அவனை பார்த்தாள்..
மெதுவாக அவள் அருகில் நெருங்கியவன், மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான்..
ஒற்றை விரலால் அவன் அவள் முகத்தில் கோலம் போட்டு கொண்டிருந்ததில், அவள் விழிகள் தானாக மூடி கொண்டது..
அடுத்து அவள் இரண்டு கண்களிலும் அவன் இதழ் பதிக்க, அவள் உடல் மென்மையாக சிலிர்த்தது.
அவன் உதடுகள் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிந்த போது, அவள் இமைகள் மேலும் அழுத்தத்துடன் மூடி கொண்டது..
உதடு துடிக்க ஒரு வித படபடப்புடன் அவள் அமர்ந்திருக்க, அது வரை ஒரு வித மோன நிலையில் இருந்த பகலவனும் சட்டென விலகி விட்டான்.
அவன் விலகியதில் அவள் மெதுவாக கண் திறக்க, "இதற்கு தான் ஒரே வீடு வேண்டாம் என்றேன் பேபி" என்றான் அவன் அவள் முகத்தையே பார்க்காமல்.
"ம்ஹ்ம்.. இத்தனை நல்லவராக இருந்தால் நீங்க தேருவது ரொம்பவும் கஷ்டம் மிஸ்டர் வர்மா" நக்கலாக கூறியவளை ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவன்,
"உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு பேபி.." சீரியஸாக அவன் கூறியதில், அவனை நெருங்கி அமர்ந்தவள்,
"என்னிடம் ஏன் இந்த சங்கடம் வர்மா?" என மெதுவாக கேட்க, அவளை ஒருமாதிரி பார்த்தவன்,
"ஒன்னும் இல்லை பேபி.. நான் துணி காய போட போறேன்" என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
அவன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் உறுத்தி கொண்டே தான் இருந்தது.
அவன் காதலை சொன்ன போதே அவள் ஏற்று கொண்டிருந்தால் அவனும் இயல்பாக இருந்திருப்பான்.
ஆனால் அவளோ முதலில் மறுத்துவிட்டு, பின் திடீரென்று அல்லவா ஏற்று கொண்டாள்..
மனதில் ஏதேனும் நினைக்கிறாளோ என்ற சந்தேகம் இருந்தாலும், அது என்னவாக இருக்கும் என்று அவனால் கணிக்க முடியவில்லை.
அதனாலேயே சற்று எச்சரிக்கியுடனே இருந்தான்..
அவன் எழுந்து சென்றதும் வெண்ணிலா முகமும் வேதனையுடன் கசங்கி தான் போயிற்று..
தன்னால் அவன் இயல்பாக இருக்க முடியாமல் தவிக்கிறான் என புரியாத அளவு அவள் முட்டாள் இல்லையே!.
"சாரி வர்மா" என மனதார அவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டவள் தன் கையில் இருந்த போனை பார்த்தாள்..
அது இத்தனை நேரம் கட் ஆகாமல், அவன் கொடுத்த இதழ் ஒற்றல்கள் வரை அழகாய் சேவ் ஆகி இருந்தது..
மேலும் சில நாட்கள் அமைதியாக ஓட, அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு சரியாக வெண்ணிலாவை எழுப்பினான் பகலவன்.
"பேபி.. பேபி.." என அவன் அவளை உலுக்க, தூக்கத்தில் இருந்து விழிக்கும் எண்ணமே இல்லாமல் அவன் மடியில் சாய்ந்து படுத்தவள்,
"பர்த்டே தானே கொண்டாட போறீங்க வர்மா.. நாளை காலை கொண்டாடிப்போம்.. இப்போ தூக்கம் வருது.." என்றாள் கண்களையே திறக்காமல்.
அவள் கூற்றில் ஒரு நொடி அதிர்ந்து விழித்தவனுக்கு, அடுத்த நொடி சிரிப்பு வந்துவிட்டது.
"உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த என்னை தான் பேபி அடிச்சுக்கணும்" என அவன் புலம்ப,
"நீங்க அடித்தால் வலிக்கும்.. நான் வேணும்னா அடிக்கவா?" என அவன் கன்னத்தில் தட்டினாள் வெண்ணிலா.
"தூக்கத்திலும் நக்கல் குறைகிறதா பார்?" என சிரித்துக்கொண்டவன்,
"ஹேய் பேபி, ஆசையா கேக் எல்லாம் வாங்கிட்டேன் டி.. கொஞ்சம் வாயேன்.." என மீண்டும் கெஞ்ச,
"எழுந்தே ஆகணுமா?" என கேட்டுக்கொண்டே மேலும் அவனுடன் ஒன்றினாள் வெண்ணிலா.
"பேபி ப்ளீஸ் டி.." மேலும் மேலும் அவன் கெஞ்சவும் அவனை கஷ்டப்படுத்த விரும்பாமல் கண்ணை கசக்கி கொண்டு எழுந்துவிட்டாள்..
நன்றாக சிவந்திருந்த அவள் கண்களை பார்த்தவன், "நல்லா தூங்கி விட்டாயா பேபி? சாரி டா... கண்ணெல்லாம் சிவந்து போச்சே.." என வருத்தப்பட,
"எழுப்பிவிட்டுட்டு உங்களுக்கு என்ன பீலிங்.. எனக்கு தான் பீலிங்.. வாங்க போய் கேக் சாப்பிடுவோம்.." என்று கூறிக்கொண்டே அவள் முன்னால் இறங்கிவிட, அவனும் அவளை தொடர்ந்து இறங்கினான்.
வெண்ணிலா முதல் வேலையாக சென்று முகத்தை அலம்பி கொண்டு தான் வந்தாள்..
மேலும் அவன் ஏதாவது கேட்டு வைத்தால் வம்பில்லையா..!
அழுதேன் என்று உண்மையையா சொல்ல முடியும்..!
தூக்கம் என்று அவன் நம்பும் வரை தான் அவளுக்கு நல்லது..
இருவரும் ஹாலுக்கு வர, அங்கு இதயவடிவ மெழுகுவர்த்திகளுக்கு நடுவில் அழகான கேக் வாங்கி வைத்திருந்தான் பகலவன்..
"இங்கே பெரிதா ஒன்றும் செய்ய முடியவில்லை பேபி" கவலையுடன் அவன் கூற,
"இதுவே பெரிது வர்மா" என அவனை தேற்றிவிட்டு கேக்கை வெட்டினாள் வெண்ணிலா.
சிறு துண்டெடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்ள, "ஹாப்பி பர்த்டே மை டியர் மூன் பேபி.. அடுத்த வருஷம் நம்ம குழந்தையுடன் இதே போல் நீ பர்த்டே கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" குறும்புடன் அவன் கூற, அதில் மென்மையாக சிரித்துக்கொண்டவள்,
"என் ஆசையும் அதே தான் வர்மா" என்றாள் சீரியஸாக.
"இரு பேபி வரேன்" என்றுவிட்டு சமையல் அறைக்குள் சென்றவன், சிறிய கப்பில் ஏதோ எடுத்து வந்தான்.
"பேபி ஆ காட்டு" என பகலவன் கூற, அவளும் என்ன ஏதென்று கேட்காமல் வாயை திறந்தாள்.
ஒரு சின்ன ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்டியவன், "எப்படி இருக்கு பேபி?" என்று கேட்க,
"ம்ம் சூப்பர் வர்மா.. பாஸந்தி எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எங்கே வாங்கினீங்க.." என்று கேட்டுக்கொண்டே அமர்ந்தாள் வெண்ணிலா.
அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு தொடர்ந்து ஊட்டியவன், "நானே தான் செய்தேன் பேபி" என்றான்.
"இப்படி எல்லாம் சமைக்க தெரிந்த ஒருவர் கிடைக்க நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் வர்மா.." குறும்பாக கூறியவளை பார்த்து சிரித்தவன்,
"நீ தான் பேபி எனக்கு முதல்.. மற்ற எல்லாமே அப்புறம் தான்.. உனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போகிறேன்.." மனதார தான் அவன் கூறினான்.
"நிஜமாவா வர்மா?" சந்தேகம் போல் கேட்டவளை முகம் சுருங்க பார்த்தவன்,
"என் மேல் நம்பிக்கை இல்லையா பேபி?" என்றான்.
"நிறையவே இருக்கு வர்மா" என சிரித்துக்கொண்டே அவள் கூறியதில் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
"சின்ன கிபிட் பேபி" என அவன் ஒரு சிறிய கிபிட் டப்பாவை நீட்ட,அதை வாங்கி பிரித்து பார்த்தாள் வெண்ணிலா..
அதில் அழகிய வைர தோடு இருந்தது..
ஒற்றை கல் காதிலும், ஒற்றை ட்ராப்ஸ் கீழும் தொங்குவது போல் கச்சிதமாக அத்தனை அழகாக இருந்தது.
"ரொம்ப அழகா இருக்கு வர்மா.. ஆனால் வைரமா..?" என அவள் தயங்க,
"பேபி ப்ளீஸ்..." என்றான் அவன் கோபப்பட முடியாமல்.
அதில் அவளும் சட்டென முகத்தை மாற்றி கொண்டாள்..
"போட்டுக்கவா?" என அவள் கேட்க,
"அஃப்கோர்ஸ் பேபி" என்றவன் குரலில் உற்சாகம் மீண்டிருந்தது..
தன் காதில் இருந்த தங்கத்தை கழட்டிவிட்டு, அவன் கொடுத்த தோடை போட்டுக்கொண்டவள், "நல்லா இருக்கா வர்மா?" என இருபக்கமும் திருப்பி திருப்பி காட்ட,
"அழகு டி" என அவளை அணைத்துக்கொண்டான் பகலவன்..
"வர்மா இந்த கிபிட் இருக்கட்டும்.. நாளை நான் ஒரு கிபிட் கேட்பேன்.. அதுவும் வாங்கி தரணும்.." அவன் அணைப்பில் வாகாய் ஒன்றிக்கொண்டு அவள் கேட்க,
"உனக்கு இல்லாததா பேபி? வாங்கிட்டா போச்சு.. என்ன வேணும் என் பேபிக்கு?" என்றான் அவன்.
"அது நாளைக்கு தான் கேட்பேன்.. இப்போ தூக்கம் வருது" என்றவள் அப்படியே அவன் மீதே தூங்கியும் போனாள்.
அவனும் எப்போதும் போல் அவளை தூக்கி சென்று உள்ளே விட்டுவிட்டு அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு படுத்துவிட்டான்..
மறுநாள் அவள் பிறந்த நாள் பரிசு கேட்கிறேன் பேர்வழி என அவனுக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சியாக கொடுத்தாள்..
இவளிடம் அவசரப்பட்டு வாங்கி தருவதாக கூறி இருக்க கூடாது என பகலவன் தன்னை தானே தான் நொந்துகொள்ள வேண்டி இருந்தது..
குளிரும்..
அருணாவின் "பகலவ நிலவே" கருத்து திரி ✒️✒️
ஹாய் செல்ல குட்டிஸ், "பகலவ நிலவே" கதைக்கான உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி அருணா
www.srikalatamilnovel.com