All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இன்னார்க்கு இன்னாரென்று_ கதை திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

இது என்னோட அடுத்த கதை

இன்னார்க்கு இன்னாரென்று

முதல் கதையே ஒழுங்கா முடிக்கல அதுக்குள்ள அடுத்த கதையானு நீங்க கேக்குறது எனக்கு புரியுது என்ன பன்றது உங்கள டார்ச்சர் பன்ன அடுத்த கதையோட வந்துட்டேன்.

இந்த தலைப்பில் ஏதாவது கதை இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

அனைவருக்கும் #மகளிர் தின வாழ்த்துகள் 🙎#



இன்னார்க்கு இன்னாரென்று

'அவள் எப்படி என்னை பிடிக்கலனு சொல்லலாம் , என்ன‌ வேணாம்னு சொன்ன அவ வாழ்க்கைய நிம்மதியா இருக்க விடமாட்டேன். நீ யாரை கல்யாணம்‌ பன்னினாலும் உன்ன‌ சந்தோஷமா வாழ விடமாட்டேன்'.
-----------

" மச்சி உன் ஆளு இன்னைக்கு ஈவினிங் ஒரு பார்ட்டிக்கு போறான்". "தேங்க்ஸ் டி எங்க எந்த இடம்னு எனக்கு WhatsApp location share பன்னு" .
"வந்து என்ன பன்ன‌ போற அவன்ட்ட பேச கூட மாட்ட ஒரு மூலைல நின்னு பாத்துட்டு போயிடுவ இதுக்கு ஏன் ஷேர் பன்னனும்".
"ரொம்ப பன்னாதடி அப்பறம் உன்ன வேலைய விட்டு தூக்கிடுவேன்".
"அதை நீ முடிவு பன்ன கூடாது மச்சி என் பாஸ் அதான் உன்‌ லவ்வர் முடிவு பன்னனும்".
--------------
கதவை திறந்து வெளியே நின்றவளை பார்த்து ,"என்னடி இப்போ தான் வழி தெரியுதா என்ன வந்து பாக்க". "அப்டிலாம் இல்லடி உனக்கே தெரியும் எங்க வீட்ட பத்தி" என வருத்த படவும்
"ஏய் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் உன்ன ருத்ரா தான் ரொம்ப எதிர்பாத்தா , இப்போ தூங்குறா எழுந்திரிக்கிற நேரம் தான். அவ எழுந்தா இந்த பாலை குடு ,நான் பக்கத்தில கடை வரைக்கும் போயிட்டு வரேன் ,யாரு பெல் அடிச்சாலும்‌ லென்ஸ்ல பாத்துட்டு கதவை தெற".
-------------
வீட்டின் உள் செல்லும் அவனை கொரியர் பையன் ஒரு பார்சலை கையில் கொடுத்தான் . அந்த பாக்ஸை கையில் வைத்து கொண்டு காலிங்பெல்லை அழுத்தினான்.

அவனை பார்த்தவளோ அவன் பேசுவதற்கு முன் "ஒன்னும் வேண்டாம்" என்று கூறி கதவை சாத்தினாள். மீண்டும் பெல் அடிக்கவும் கதவை திறந்து கோபமாக பேசும் முன்.........

--------------
 
Top