மூன்றாம் பாகம்
ரஞ்சனியின் கடை ட்ரீம்ஸ் நகரத்தின் மையத்திலிருக்கும் எட்டு மாடிக்கட்டிடம், எட்டாவது மாடியில்அலுவலக அறை பாதிப்பகுதியையும், மீதிப் பகுதி ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பர்னீச்சர் பகுதி உடையது.
மற்ற பகுதிகளில் அது அதற்கான தளத்தில் பொருட்கள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ரஞ்சனியின் அலுவலக அறையின் உள்ளறை கேமரா கண்காணிப்பு, இதில் சுவரோடு சுவராக இருக்கும் ரகசிய கேமராக்களின் பதிவும் ஒருகுழுமம் 24 மணி நேரமும் தீவிரமாக கவனிக்கப்படுகிறது.
இப்படி 24 மணி நேரமும் கவனிக்கப்படுவது அங்கு வேலை பார்பவர்களுக்கே தெரியாத ரகசியம். அனைத்து இடங்களையும் போல் காட்சிகள் பதிவு செய்யப்படும் , தேவைப்பட்டால், பதியப்பட்ட காட்சிகள் எடுத்து பார்க்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்றே நினைத்தனர். இதற்க்கு மற்றொரு காரணம் அந்த அறையில் வேலை செய்பவர்கள் வந்நு செல்ல கார் செட்டிலிருந்து தனி லிப்ட் பயன் படுத்தப்பட்டது.
சூப்பர்வைசர் டிபாட்மண்டுக்கு கடையின் நடைமுறைகள் கவனிக்கப்படுவது , சில பல நிகழ்வுகளால் தெரிந்தாலும், அதை யாரிடமும் பகிர்ந்ததில்லை காரணம் பெரிய இடத்து விசயம் நமக்கெதுக்கு என்ற பயம்,
கடை ராஜன் கையிலிருந்து ரஞ்சனி கைக்கு மாறியது முதல் அவர்கள் அனாவசிய பேச்சுக்களை குறைத்துக் கொண்டனர், ரஞ்சனி யாரை எப்போது வேலையில் அலைக்கழிப்பாளோ, திடீ ரென வேலையை விட்டு எடுத்து விடுவாளோ என்ற பயம் அதிகம் இருப்பதனால், யாரும் வாயே திறப்பதில்லை.
ஆனால் மேலாளர் அணிக்கே முற்றிலும் தெரியாத ரகசியம் இந்த ரகசிய கேமரா, சுவற்றில் உள்ள டிசைன் போலவே ஆங்காங்கு பெறுத்தப்பட்டுள்ளதை அறியாமல், அதில் மாட்டியவர்கள் தான் செல்வியும் மணியும்.
ரஞ்சனி அலுவலக அறையில் அமர்ந்திருக்க கேமரா அறையில் குயில் கூவியது, அவள் தனது கணினியில் கனைக்சன் கொடுக்க, அதில் தற்போது தண்டனையறைக்கு ஒரு முதியவர் செக்யூரிட்டியால் அழைத்து செல்லும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
திருடு பவர்களுக்கும், ஏமாற்றுபவர்களுக்கும் அங்கே இருட்டறையில் ஒருநாள் முழுவதும் அடைத்துவிடுவர், அது அந்த கடையின் நடைமுறை, அங்கே கஸ்டமரின் கவனத்தை திருப்பாமல் இருக்கவும், அதே சமயம் ஏமாற்ற வருபவர்களை கண்டிக்கவும் இந்த நடைமுறை இருந்தது.
ரஞ்சனி அந்த முதியவரை அழைத்துச் செல்லும் செக்யூரிட்டியிடம் வயர்லெஸ்ஸிஸ் பேசியவள், தனது அறைக்கு அவரை அழைத்து வரும்படி கூறினாள்.
செக்யூரிட்டி அந்த முதியவரிடம், என்னையா பேசி பேசி மண்ட காய விடுற, இரு, உனக்கு இருக்கு டி, எங்கிட்ட சொன்ன மாதிரி பையன் வருவான் சாப்பிட்டதுக்கு பில் பே பண்ணுவான் ஆனா பையனோட போன் நம்பர் கூட தெரியாதுன்னு சொல்லிப் பாரு, பெண்புலி வேட்டைய பாப்ப டி என மிரட்டிய வாறு அழைத்து வந்தார்.
ரஞ்சனி அறையில் கதவு தட்டப்பட்டது, யெஸ்.. கம் என்ற குரலையடுத்து, பயந்தவாரே அந்த சீனியர் சிட்டிசனும், செக்யூரிட்டியும் நுழைந்தனர்,
செக்யூரிட்டி, பில் பே பண்ணல மேம், என்றார்.
ரஞ்சனி, ம். .. ஐ நோ, நீங்க போலாம், நான் பாத்துக்கிறேன் என்றவள், கணினியை விட்டு, பார்வையை திருப்பவும் இல்லை, அந்த பெரியவரை கவனிக்கவும் இல்லை, கணினியில் கவனமாக இருந்தாள்.
அந்த பெரியவருக்கு அந்த அறையின் அமைதியே, மனதில் பீதியை கிளப்பியது, கதவோடு கதவாக ஒட்டி நின்றவர், ரஞ்சனி என்ன சொல்வாளோ என அவளை கவனித்தவாறு பயந்து நின்றார்.
கேமரா கதவின் வழியாக ஒரு பெண் உள்ளே நுழைந்தாள், மேம் ஒரு எமர்ஜென்சி பிளீஸ் கம் என்றாள்.
பெரியவர் அப்போதுதான் அந்த அறையை கவனித்தார், அய்யையோ அந்த ரூம்ல வச்சுத்தா அடிப்பாங்களோ,, என நினைத்தவர், பயப்பந்து தொண்டையை அடைக்க, அந்த அறையை பார்த்தார்.
ரஞ்சனி பேர் என்ன என்று கேட்க அவளை திரும்பி பார்த்தவர், ராமசாமி என்றார் எழும்பாத குரலில்,
யெஸ், ராமசாமி, சிட் என தன் முன்னிருந்த இருக்கையை சுட்டியவள், பேப்பர் பேடை அவர்புறம் நீட்டினாள்,
அதை வாங்கி அவர் இருக்கையில் அமர்ந்து, கேள்வியாய் பார்த்தார். சாப்பாட்டு நேரமாச்சு, உங்களுக்கு தேவையானத ஆர்டர் பண்ணுங்க நா இப்ப வர்றேன் என்றவள், அந்த பெண்ணுடன் கண்காணிப்பு அறைக்குள் சென்றாள்,
அந்த மங்கிய வெளிச்சமுள்ள அறை அவர்கள் சென்றவுடன் மூடிக்கொண்டது,
பெரியவருக்கு ஒன்றுமே புரியவில்லை, காலை உணவிற்கு காசு கட்டாதவனை தண்டனைக்காக அழைத்துவந்து, மதிய உணவுக்கு ஆர்டர் எழுத சொல்கிறார்களே என குழம்பினார். சாப்பிட்டு தெம்பானவுடன் அடிப்பாங்களோ, என நினைத்தவுடன் பகீரென்றது அவருக்கு.
ரஞ்சனியின் குரல் அந்த நிலையின் நிசப்தத்தை குலைத்தது, சி-40, சைலண்டா எல்- 17 ன வாட்ச் பண்ணுங்க, அவன் கையில லைட்டர் இருக்கு, அவனோட முழிசரியில்ல, குடௌன கொழுத்தீரப் போறான், இப் இட், கேட்ச் கிம், இம்மீடியட்லி என்றாள்,
அறையிலிருந்து வெளியே வந்த ரஞ்சனி, கணினியில் கண்காணிப்பு செட் செய்து அதை கவனித்தாள். ராமசாமி, அவளின் சிவந்த விழிகளை கண்டு திக் திக் என அமர்ந்திருந்தார்.
அந்த ஆளை கையும் லைட்டருமாக, அசம்பாவிதம் நடப்பதற்கு சில வினாடிகள் முன் பிடித்துவிட்டனர். உதட்டில் சிறு சிரிப்பு தோன்றி மறைய, நிமிர்ந்தவள், போயடித்த மாதிரி விழித்த ராமசாமியைப் பார்த்து, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, என்ன? என்றாள்.
ராமசாமி ஒன்றுமில்லை என பயந்த வாறு தலையசைத்தார், ஆர்டர் எழுதியாச்சா என ரஞ்சனி கேட்ட பின் தான், அவருக்கு அவள் கையில் கொடுத்த போப்பர் பேட் ஞாபகம் வந்தது,
எனக்கு ஒரு பிரைடு ரைஸ் சேத்து எழுதுங்க, என்றவள், அதை சொல்லி முடிக்கும் முன் கதவு தட்டப்பட்டது,
யெஸ், கம் ..என்றாள் ரஞ்சனி. அறைக்குள் நான்கு பேர் ஒரு தொழிலாளியை இழுத்து வந்தனர். அவன் கண்ணத்தில் கை ரேகைத்தடம் இருந்தது, அதை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர் பயந்து எழுந்தார்.
அவரை கை நீட்டி அமருமாறு சைகை செய்தவள், முகம் கடுமையை தத் தெடுத்தது, அதைக் கண்டு பயந்த பெரியவர், மடமடவென ஆர்டரை எழுத ஆரம்பித்தார்.
செக்யூரிட்டி, லைட்டரை டேபிள் மேல் வைத்தார், அது ஒரு பேனா போன்று இருந்தது, உற்று நோக்கினால் அன்றி அதை லைட்டர் என்றே கண்டுபிடிப்பது கடினம், மிகவும் விலைமதிப்பான கண்ணாடியால் தயாரிக்கப்பட்டு இருந்தது.
சொல்லு, எதுக்கு குடௌன இருக்குற பொருள்ல தீ வைக்கப் பாத்த, யார் சென்னது என அவனிடம் கேள்வி கேட்டார் மேலாளர், அவன் மௌனமாக இருக்கவும் சரமாரியாக அடி விழுந்தது,
வலியால் சத்தம் வந்ததே ஒழிய வேறு எந்த விதமான பதிலும் அவனிடத்தில் இல்லை. ரஞ்சனி அடித்துக் கொண்டிருந்த செக்யூரிட்டியை கைநீட்டி தடுத்தாள், அவனிடம் பேர் என்ன? என்றாள்.
அவன் ரவி என முணுமுணுத்தான்.
சிட் என தன் முன்னிருந்த இருக்கையை சுட்டினாள்.
அவன் நடந்து வந்து, பெரியவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்தான்.
பெரியவருக்கு பகீரென்றது. இதே போல்தான் தனக்கும் நடந்தது என நினைத்தவர், அவன் உதட்டிலிருந்து வழிந்த இரத்தத்தை கண்டவர், பிடித்திருந்த பேனாவை இருக்கப் பற்றி பயத்தை குறைக்க முயன்றார்.
அப்போது சில வினாடிகள் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ரஞ்சனியின் குரல் வெளிப்பட்டது.
ரொம்ப காஸ்லியான லைட்டர், யார் கொடுத்தது?
...
வாய் திறந்து பதில் செல்லமாட்ட, சரி இத நான் ஒருமுறை பயன்படுத்த வேண்டி இருக்கு, எடுத்துக்கவா?என லைட்டரை கையில் எடுத்தாள் ரஞ்சனி.
ரவிக்கு மனதில் திகில் சூழ நிமிர்ந்து பார்த்தான்.
வேற ஒன்னுமில்ல ஒரு சின்ன டெஸ்டுக்கு, மிஸ்ஸஸ் கல்யாணின்னு ஒருத்தங்க, அவங்க நினைக்கிறாங்க, என் குடோன்ல உள்ளது மட்டுந்தா பத்திக்கும், எரியும் னு, நான் சொல்றேன், அவங்க புடவையும் எரியும், அவங்களையும் சேத்து எரிக்கும்னு, நீங்க சொல்லுங்க ரவி எரியுமா ? எரியாதா? உண்மையத்தான் சொல்லல, அட்லீஸ்ட் இதையாவது சொல்லுங்க,
ரவிக்கு, கண்கள் கலங்கியது, பதற்றமானான்.
ரஞ்சனி தொடந்தாள், உங்களுக்கும் தெரியலையா? நோ பிராப்ளம், டெஸ்ட் பண்ணியே பாப்போமா? எரியுதா? அணையுதான்னு?
பிளீஸ் மேடம், எங்கம்மாவுக்கும் இதுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, என்ன என்னவேனா பண்ணுங்க என்றான் பதறிய குரலில்.
சரி அவங்களுக்கு சம்பந்தம் இல்ல, வேற யாரு இத செய்யச் சொன்னது? ம்.. சொல்லு இல்ல இந்த லைட்டர நான் பயன்படுத்த வேண்டி வரும், நீ நினைக்கிறத விட சேதாரம் அதிகமா இருக்கும், ஆதாரம் தான் கிடைக்காது என்றாள்.
மேடம் நாங்க மிடில் கிளாஸ், நான் வெறும் உயிரற்ற பொருளத்தான் எரிக்க முயன்றேன், நீங்க என்னோட அம்மாவ கொல்ல நினைக்கிறீங்க . அந்த பாவம் உங்கள சும்மா விடாது,
நானும் புடவைய மட்டுந்தான எரிக்க யூஸ் பண்ணுவேன், நீதான ஆளக்கொன்னா பாவம்ன, சோ ஒன்லி சோரி நாட் அ பியூபிள் என்றாள் சற்று எகத்தாளமாய்.
சற்றே கடுமையை தத்தெடுத்தவள், ஓ நீ குடௌன கொழுத்தினா அது சின்னது, கடை எரிஞ்சு நான் கஷ்டப்பட்டா அது சின்னது, அதே உங்க வீட்டோட ஒரே ஒரு சேரின்னாலும் அது பெரிசு, ஏன்னா நீ மிடில் கிளாஸ்,
புடவையோட உங்கம்மா இறந்தா அது பெரிசு, என்ன நம்பி வேலைக்கு வந்த என்னோட வொர்கர் உயிர்னா உனக்கு ஒன்னுமில்ல, அது எத்தன உயிரா இருந்தாலும் ரைட்? என்றாள்,
முட்டாள் அது எவ்வளவு சீக்கிரம் பத்திக்கும்னு தெரியுமா, நீயும் சேந்து புணமாயிருப்படா பரதேசி. எதையும் பத்தி தெரியாத முட்டாள், உன்ன ஏவினவனுக்கு எல்லாம் தெரிஞ்சுதான், எனக்கும் சேதாரம் பன்னி உன்னையும் கொன்னு , அவன் எல்லா குற்றங்களிலிருந்தும் தப்பிக்க நினைச்சுருக்கான். இது தெரியாம உன்ன கொல்ல நினச்சவனையே காப்பாத்துறதக்கு அடிவாங்கீட்டு இருக்க, அதுவும் உன் உயிர காப்பாத்தின எங்கிட்ட உண்மைய மறைக்கிறதுக்கு, அடிமுட்டாள் டா நீ.
ரவியின் கண்கள் இப்போது யோசனையை தத்தெடுத்தது, அதைக் கண்ட ரஞ்சனி தனக்குள் சிரித்துக்கொண்டு, அவனின் யோசனைக்கு தூபம் போட்டாள்.
எப்படி நான் சாவேன்னு யோசிக்கிறயா? இந்த லைட்டர்ல உள்ள கெமிக்கல் அப்படி, மத்த லைட்டர் மாதிரி கிடையாது, இது நெருப்பு பட்டவுடன், வெடிக்கும் தன்மையுடையது, இது லிட்டில் பாம் போல செயல்பட்டு, சுத்தி இருக்கிற இடத்துல சிதறி, எல்லா இடங்களையும் தனித்தனியா கொள்ளி வைக்கும், அப்படி கொளுத்தும் போது, யூ ஆர் த ஃபஸ்ட்டு ப்ர்சன் டு டை, அடுத்துதான் பொருட்கள்.
நிஜமா மேடம் என்றான் பதறிய குரலில், நீ என்னோட வொர்க்கர், சோ சொன்னேன், நம்புறதும் நம்பாததும் யூவர் விஷ்,என்றாள்.
உன்ன போலீஸ்ல பிடிச்சுக் குடுக்க ஆதாரம் கேக்கல, உன்ன காப்பாத்தத்தான் கேக்கிறேன். அவனுக்கு நீ மாட்டிகிட்டது தெரிஞ்சுருக்கும், நீ இங்க உண்மைய சொன்னாலும், இல்லாம போனாலும், அவன் நீ மாட்டிக்கிட்டதால உன்ன நிச்சியம் கொன்னுடுவான், சோ அவன் கிட்ட இருந்து உன்னையும் உன்னோட பேமிலியையும் காப்பாத்தத்தான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கேன்.
ரவி, நிசம்மாவா மேடம், இவ்வளவு பெரிய கடைய நஷ்டப்படுத்த உன்ன தேர்ந்தெடுத்த மாதிரி, உன்ன உளவு பாக்க ஒருத்தன செலக்ட் பண்ணீருக்க மாட்டானா? நீயே யேசி...
எனக்கு பயமா இருக்கு மேடம், பயப்படாத அவன அரெஸ்ட் பண்ணீரலாம், உனக்கு தெரிஞ்சத சொல்லு.
இது ஒரு கொரியர் ல வந்தது, எங்கிருந்து வந்ததுன்னு எழுதல, அதோட ஒரு லெட்டரும், இந்தமாதிரி உங்க கடைல செய்யச் சொன்னாங்க,
கொரியர் கவர் எங்க,
ரூம்ல...
எவ்வளவு பணம் கொடுத்தான்?
அது...
சொல்லு , அவன பத்தி தெரிஞ்சுக்கத்தான், ம்..
ஐம்பதாயிரம் அக்கவுன்ட்ல போட்டாங்க, வேல முடிஞ்சதும் அதே மாதிரி, இரண்டு லட்சம் போடுறதா சொன்னாங்க, என்றான் தயங்கியவாறே..
ரஞ்சனி உறுத்து விழிக்கவும், சாரி மேடம், என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு பணம் பிரட்ட முடியல அதனால தான் இத செஞ்சுட்டேன். மண்ணிச்சுடுங்க மேடம்,
சி- 20, இவனோட இவன் ரூமுக்கு போய் கவர், லெட்டர், அக்கவுண்ட் பாஸ் புக் எல்லாத்தையும் கலைட் பண்ணுங்க, எனவும் அவனை இழுத்துக்கொண்டு அவர் வெளியேறினார்.
பெரியவர் நடந்த விசாரணையை ஒரு திகில் மனதோடு பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரும் சென்ற பின்னும் அவர் அசையவில்லை.
ரஞ்சனி, ராமசாமி எழுதூட்டூங்களா? எனவும், ம்.. மேடம் என எழுதியதை நீட்டினார்.
அவரின் படபடப்பை கண்டவள், தனக்குள் சிரித்துக் கொண்டு, முதல்ல சாப்புடுவோம், அடுத்து உங்க கேச கவன்..னிக்கிறேன் எனவும்,
அவர் பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தார்.
அவர்களுக்கான உணவும், சி-20 யும் ஒரே சமயத்தில் நுழைந்தனர்.
உணவை ராமசாமியிடம் நீட்டியவள், ம்.. சாப்புடுங்க என மிரட்ட , கீ கொடுத்த பொம்மை போல வோகவோகமாய் செயல்பட்டார்.
மேடம் என கைப்பற்றியதை டேபிளில் வைத்தார் சி-20 , மேடம் அவன என்ன செய்ய, என்றார்.
அக்கவுண்ட் டிபாட்மெட்ல சொல்லி கணக்கு முடிங்க, கடைலையோ, இல்ல வெளியிலேயோ மேட்டர் லீக் ஆகக் கூடாது ஓகே,
அவன அப்படியே விட்டுடவா?
ஏன் அவனோட காயத்துக்கு மருந்து தடவி விடனுமா...
சி-20 வாயை மூடிக்கொண்டார். அவன நான் பாத்துக்கிறேன், இப்போதைக்கு அமைதியா இருப்போம், ஓகே...
யெஸ் மேடம்.
யூ கேன் கோ...