All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எண்ண அலைகள்.......

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்மனம்......

வாங்கிவிட்டேன் அழகிய பரிசில்
தாயென்று!
தாங்கிவிட்டேன் காட்டிய வாழ்வில்
மரு மகளென்று!
ஏங்கிவிட்டேன் உயரிய அன்பில்
மகளென்று!
மயங்கிவிட்டேன் மருவிய காதலில்
தாரமென்று!
தயங்கிவிட்டேன் உருகிய பாசத்தில்
பெண்ணென்று!
வழங்கிவிட்டேன் பழகிய பண்பில்
மனுஷியென்று!
தாயாய்,தாரமாய்,
மகளாய், மருமகளாய்,
பெண்ணாய், மனுஷியாய்
எத்தனை செய்தாலும்
அத்தனை செயலிலும்
பித்தனை போலே
தவிக்கின்ற மனமே!

அதுதானோ பெண்மனம்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆணினம்.....

அப்பாவி ஆணினம்
அடங்கிப் போகுதே
அடக்குமுறை
அல்லி தர்பாரிலே!
திருந்தாத ஆண்மனம்
திமிரி வாழுதே
திறன் மிகு
திருமதி வாழ்விலே!
பகட்டான ஆண்மனம்
படர்ந்து சாகுதே
பழகு கின்ற

பரிதாப போதையிலே!
 
எண்ண அலைகள்.......

எண்ணத்தின் அலைகள் எண்ணில் அடங்காது - அதன்
வண்ணத்தின் நிலைகள் உன்னில் அடங்காது!


எண்ணத்தின் வண்ணங்கள்
வாழ்க்கையின் சின்னங்கள் .....!


எண்ணத்தின் அழகில் எல்லாம் அழகு!


இனி வரும் காலம் எண்ணத்தின் ஏட்டில் வண்ணம் தீட்டட்டும்.

இசை மீட்டும் எண்ணத்தில் எதிர்காலம் சிறக்கட்டும்.

எண்ணம் போல் வாழ்க்கை!
Supreeeeeee
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மரணத்தின் ஓலம்.....

காப்பாற்று காப்பாற்று என்று கை தொழுதோம்
இறையடி சேர அந் நாளிலே!
காப்பாற்று காப்பாற்று என்று கை தொழுதோம்
மனையடி சேர இந் நாளிலே!
விரட்டும் வாகனங்களின் வேகத்திடமா?
அச்சுறுத்தும் நோய்களின் வேதனையிடமா?

மிரட்டும் மரணத்தின் ஓலத்திடமா?
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உருப்படுமா...?

விவேகம் இல்லா வேகமும்,

உத்வேகம் இல்லா செயலும்,
அன்பு இல்லா நெஞ்சமும்,
பண்பு இல்லா வாழ்க்கையும்,
பாசம் இல்லா உறவுகளும்,
நேசம் இல்லா காதலும்,

உருப்பட்டதாய் தெரியவில்லை!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொல்லைகள்.....
தொல்லை என்று உன் செல்லை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் நட்பை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் காதலை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் தாய்தந்தையை
நீ சொல்வதேனோ?
உன்னை பெற்றதற்கா?
உன்னை வளர்த்ததற்கா?
உன்னை படிக்க வைத்ததற்கா?
உன்னை தலை நிமிர்த்தி நடக்க வைத்ததற்கா?

உனக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பதற்கா?
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொல்லைகள்.....
தொல்லை என்று உன் செல்லை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் நட்பை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் காதலை
நீ சொல்ல வில்லை!
தொல்லை என்று உன் தாய்தந்தையை
நீ சொல்வதேனோ?
உன்னை பெற்றதற்கா?
உன்னை வளர்த்ததற்கா?
உன்னை படிக்க வைத்ததற்கா?
உன்னை தலை நிமிர்த்தி நடக்க வைத்ததற்கா?

உனக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பதற்கா?
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உச்சம்....!

வாசம் வீசும் மலர் கூட்டம்!
நேசம் பேசும் மலழைக் கூட்டம்!
பாசம் காட்டும் உறவுக் கூட்டம்!
வேசம் போடும் மனிதர் கூட்டம்!
கூட்டம் கூடினால்
கூச்சல் கூடும்!
கூச்சலும் கும்மாளமும்

சந்தோசத்தின் உச்சம்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மணிக் கதவு...!

திறந்தே இருக்கட்டும்
உன் மனக் கதவு-
அன்புக்கும், பண்புக்கும்!
பாசத்துக்கும், நேசத்துக்கும்!
உண்மைக்கும், நன்மைக்கும்!
கடமைக்கும், கண்ணியத்திற்கும்!
வருங்காலம் திறந்து வைக்கும் உனக்காக

நிம்மதி என்னும் மணிக் கதவை!
 
Top