All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 6

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
6 கலாப காதலா

மறுநாள் வழக்கம் போல விடிய பூர்ணி எழுந்தவுடன் நினைவில் வந்தது சித் தான்
" இன்னேரம் முழிச்சு இருப்பாங்கள எப்படி இருக்காங்கனு தெரியலையே "

பிரியா " என்னடி முழிச்சுடே கனவு காணுற "

பூர்ணி " ஆங் ஒன்னுமில்ல டி அவருக்கு எப்படி இருக்குனு நினைச்சுட்டு இருக்கேன் "

பிரியா " எவருக்கு "

பூர்ணி " அதான் டி நேத்து அடிபட்டதுல அவருக்கு தான் "

பீர்த்தி " நீ ஏன் அவர பத்தியே யோசிசுட்டு இருக்க உனக்கு வேற இல்ல அத பாரு முதல "

பூர்ணி " ஏய் அதுக்கு இல்லடி என்னால தான் "

பிரியா " பூர்ணி எனக்கு கூட பீர்த்தி சொலுறது தான் சரின்னு படுது உன்னால அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு அதுக்கு பரிகாரமா நீ போய் ஹாஸ்பிடல் சேர்த்து பணம் கட்டிட்டு வந்துட்ட அப்புறம் என்ன இதோட இத மறந்துட்டு உன் வேலைய மட்டும் பாரு "

தோழிகளின் அறிவுரை கேட்க அதன்படி நடக்க முடிவு செய்த போது அவளது மொபைல் அவளை அழைத்தது...

வீட்டில் இருந்த அவளது தாய் சுமதி அழைத்திருந்தார் " ஏன்டி ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமா அப்படி என்ன டி தூக்கம் உனக்கு "

பூர்ணி " மா காலையிலையே ஆரம்பிக்காத விஷயம் என்னனு சொல்லு மா "

சுமதி " நம்ப ரவி அண்ணன் பொண்ணு நந்தினி இருக்கால அதான் டி உன் பிரென்ட் "

பூர்ணி " ஆமா அவளுக்கு என்ன இப்ப "

சுமதி " அவளுக்கு நாளைக்கு நிச்சயம் நீ ஊருக்கு வரியா "

பூர்ணி " என்னமா சொல்லுற அதுகுள்ளயா இப்ப தான படிச்சுட்டு இருக்க "

சுமதி " ஆமாம் டி படிக்க போன இடத்துல படிச்சோமா வந்தோமானு இருக்கனும் காதல் கத்திரிக்கானு போனா அப்படி தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க "

பூர்ணி " என்ன மா சொல்லுற அவ லவ் பண்ணுறால அவ ஒரு புள்ளி பூச்சி மா "

சுமதி " அவ காதல் விஷயம் தெரிஞ்சு சொந்தகாரர் மாப்பிள்ளை பாத்து உடனடியாக கல்யாணம் பண்ணுறாங்க நீ வந்தா அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குனு உன்ன வர சொல்ல சொன்னாங்க "

பூர்ணி " சரி மா காலேஜ் ல ஒன்னும் வேல இல்ல நான் நாளைக்கு காலையில வரேன் "

ஃபோன் பேசி முடித்து வைக்க
பீர்த்தி " வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வீடுல ஜெயின் எங்கனு கேட்டா என்ன சொல்லுவ "

பூர்ணி " நீ வேற ஏதாவது சொல்லி பயமுற்றாத "

பீர்த்தி " போக கூடாது தான் நினைச்சோம் வேற வழி இல்ல போ போய் அவருகிட்ட பேசி ஜெயின வாங்கிட்டு வா "

பின் ஒரு முடிவு வந்தவலாக கிளம்பி ஹாஸ்பிடல் சென்றாள்...
அவன் இருக்கும் அறையை தெரிந்து கொண்டவள் மெதுவாக அறை கதவை தட்டினான்..

சித் " எஸ் கமென் "

பூர்ணி " சார் நான் "

சித் " என்ன நர்சா டாக்டரா நான் நல்லா தான் இருக்கேன் போ போயிட்டு அப்புறம் வாங்க "
என கடுகடுப்புடன் கூற...

பூர்ணி " சார் நான் தான் அது நான் தான் உங்கள காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்தது "
என கூறி முடிக்க..

சித் " அப்படியா ரொம்ப தேங்க்ஸ் போங்க போய்ட்டு வாங்க "

பூர்ணி வாய் பிளந்து
" சார் அது இல்ல "

சித் " ம்ச்ச் என்ன பிரச்சினை உனக்கு "
என நிமிர்ந்து அப்போது தான் அவளை பார்த்தான்...

இளநீல நிற காட்டன் சுடி அணிந்து ஒரு பக்கம் ஷாலை தொங்கவிட்டு காதில் மொத்தமான வளையம் அணிந்து சுற்றி பரந்த கூந்தலை இருபக்கமும் மேடி எடுத்து ஒற்றை கிளிப்பில் அடுக்கி இருந்தவளை கண்டான்...

சித் " என்னமா பிரச்சினை உனக்கு என்ன வேணும் அதான் தேங்க்ஸ் சொல்லிடனே "

தைரியம் வந்தவளாய் " அது இல்ல சார் என் செயின் வைச்சு தான் உங்க ஹாஸ்பிடல் பில் கட்டின இப்ப ஊருக்கு வர சொல்லி வீட்டுல இருந்து போன் வந்துச்சு அதான் என் செயின கேட்டு வந்தேன் "
என அவனை நிமிர்ந்து பார்க்காமல் கடகடவென ஓப்பித்தவளை பார்த்து அவளுக்கு தெரியாமல் சிரித்தான்...

அவளுடன் விளையாட எண்ணியவன்
" அப்படியே அது நீ ஏதோ சேவை மாதிரி பண்ணணு நெனைச்சேன் இப்ப வந்து திருப்பி கேக்கற "

பூர்ணி " சேவையா சரியா போச்சு போங்க "
என தலையில் கை வைத்தவள் அவனது அருகில் சென்று
" சார் எங்க வீட்டுல சும்மாவே என்ன நம்ப மாட்டாங்க அதுவும் எங்க அம்மா சுத்தம் நான் ஏதோ செயின வித்து வாங்கி சாப்பிட்டேனு நினைப்பாங்க "
" என் பக்கம் அவ்வளவு வீக்கு "

அவளது பேச்சில் சிரித்தவன்
" இப்ப தீடிரெனு வந்தா நான் என்ன பண்ணுவேன் நான் ஹாஸ்பிடல் விட்டு வெளியே போனதுக்கு அப்புறம் பாக்கலாம் "

பூர்ணி " சார் அப்படிலா சொல்லாதிங்க சார் இன்னைக்கு ஊருக்கு போகனும் எனக்கு தெரியும் சார் என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு "
என தான் உளறியதை நிறுத்தியள் நாக்கு கடித்து அவன் முகம் பார்க்க....

அவளின் பேச்சினை கவனித்தவன் அவனின் கூர் பார்வையினை கண்டு சற்று மிரண்டாள்.......
" அடியே பூர்ணி உனக்கு நாக்குல தான் டி சனி வேற எதுலயும் இல்ல "

சித் " அப்ப உன்னால தான் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு "

பூர்ணி " அப்படி இல்ல அது தெரியாம "

சித் " அப்ப நீ தான் என் கார் முன்னாடி உன் துணிய தூக்கி போட்ட "

பூர்ணி " தூக்கிலா போடல தெரியாம பறந்து வந்து விழுந்துடுச்சு "
என பாவமாக முகத்தை வைத்து கூற...

சித் " உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு "
சற்று யோசித்தவன்
" சரி உன் நம்பர் அட்ரஸ் எழுதி கொடுத்துட்டு போ நான் வெளியே வந்து பேசுறேன் "

பூர்ணி " சார் இன்னைக்கு ஊருக்கு போறேன் "
" அதுவும் இல்லாம பொண்ணோட நம்பர் ல "
என தயங்க...

சித் " ஓஓஓஓ நீ பண்ணதே தப்பு சரி போனா போதும்னு பாவம் பாத்தா நீ என்னயே சந்தேகபடுறியா "

பூர்ணி " ஐய்யோ சார் ஆள விடுங்க இந்தாங்க என் நம்பர் அட்ரஸ் "
என அங்கிருந்த தாளில் எழுதியவள் ஓரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.....

அவள் சென்றபின் அவளை நினைத்து சிரிக்க உள்ளே வந்தான் அஜய்
" என்ன மச்சான் தனியா சிரிக்கற "

சித் " மச்சான் செம காமெடி டா இங்க "
என நடந்ததை கூறி அவளை போலவே முகத்தையும் பாவமாக வைத்து கொண்டு கூறினான் சித்...

இதனை கேட்ட நண்பர்கள் இருவரும் சிரிக்க அஜய் அவள் எழுதிய பேப்பரை எடுத்தான்...

அஜய் " பூர்ணி __________ காலேஜ் ஹாஸ்டல் "

சித் " என்ன பூரி யா "

அஜய் " டேய் பூர்ணி டா "

சித் " பூர்ணியா பட் அவ பாக்க நல்ல பூரி மாதிரி குண்டா தா மச்சான் இருக்கா "

அஜய் " சரி மச்சான் எப்போ செயின் கொடுக்க போற "

சித் " டிஸ்சார்ஜ் ஆனதும் "

அஜய் " ஓஓஓஓ சார் அப்படியே டேரா போடலாம்னு நினைப்பா எல்லாம் முடிச்சுட்டு வாங்க சார் வீட்டுக்கு போலாம் "

சித் " அதுகுள்ளயா இன்னும் நாலு நாள் ரெஸ்ட் எடுக்கலானு பாத்தேன் சரி வா போகலாம் "

கிளம்பும் போது மறக்காமல் பூர்ணி எழுதிய சீட்டை எடுத்து கொண்டான் வழியிலேயே அவளது செயினையும் மீட்டவன் வீடு வந்தான்....

நித்யாவுடனா பேச்சில் முழ்கி இருந்த அஜய் இதனை கவனிக்க தவறினான்.....

பூர்ணி " வருவாரா டி பயமா இருக்கு "

பிரியா " தெரிலயே நீ அவரு நம்பராவது கேட்டு வாங்கிட்டு வந்துருக்கனும் அதவிட்டுட்டு இப்ப போய் "
என ஹாஸ்டல் வாசலில் நின்று பேசி கொண்டு இருந்தனர்....

பூர்ணி " நீ வேற டி என்னாமா கேள்வி கேக்குறாறு கொல நடுங்கிடுச்சு பயந்து போய் விட்ட போதும்னு ஓடி வந்துட்டேன் "

பேசியபடி நிற்க இவர்களை இடிப்பது போல வந்தது கார் ஒன்று..

பூர்ணி " ஏய் இடியட் எப்படி வண்டி ஓட்டுற கண்ணு தெரியல "

அவளை முறைத்தபடி காரில் இருந்து இறங்கி வந்தான் சித்தார்த்...

அவனை கண்ட பூர்ணி " ஐய்யயோ இவரா "
என நொந்தவாறே பார்க்க...

சித் " ஓஓஓஓ உங்களுக்கு ரொம்ப கண்டு நல்லா தெரியுமா மேடம் நீங்க தான் பேசிட்டே நடு ரோட்ல நிக்குறிங்க "

அதன்பின்னே இருவரும் பார்க்க பேச்சு சுவாரசியத்தில் நகர்ந்து சற்று ரோட்டு பக்கம் வந்து இருப்பதை.....

பூர்ணி " சாரி சார் தெரியாம "
என்றவள்
" என்னைக்கு எல்லா இடத்தலயும் சொதப்புது " என மனதில் நினைத்தவள் பிரியாவிடம் கண் காட்டினாள்....

சித் " எங்க போற "

பூர்ணி " அதான் சொன்னேனே சார் ஊருக்கு போறனு "
என மென்று முழுங்க..

சித் " சரி வா நான் உன்ன ட்ராப் பண்ணுறன் "

அதிர்ச்சி அடைந்தவள்
" சார் அதலாம் வேணாம் "

சித் " அப்போ உனக்கு இப்பயும் என் மேல நம்பிக்கை இல்ல அப்படி தான என்ன இருந்தாலும் நீ எனக்கு ஹேல்ப் பண்ணிருக்க அது மனசுல வைச்சு தான் நான் உன்ன ட்ராப் பண்ணுறனு சொன்னேன் மத்தபடி வேற எதும் இல்லை "

அவனது பேச்சில் சமதானம் அடைந்தவள் தோழியிடம் சொல்லிவிட்டு அவனுடன் காரில் ஏறி சென்றாள்.......


தொடரும்.....
 
Status
Not open for further replies.
Top