ருத்ரனின் காதலி -2
இரவு 7 மணி , ருத்ரன் கமிஷ்னர் கொடுத்த பைலுடன் தன் கோட்டைக்கு வந்திருந்தான். அது ஒரு கட்டி முடிக்காத வீடு, மேல் தளம் மட்டும் கட்டி இருந்தது ஆனால் சிமன்ட் பூசவில்லை, பெயின்ட் அடிக்கவில்லை. கீழே 3 அறைகள் மட்டும் இருந்தது.. ஒன்று ருத்ரனின் அலுவல் அறை, இரண்டு அறை காலியாக இருந்தன.
மேலே முதல் தளம் பூசப்படாமல் இருந்தாலும் உள்ளே அழகான இன்டீரியர்ஸ் செய்யப்பட்டிருந்தது.. அது மூன்று படுக்கை அறை கொண்ட அழகான வீடு.
தன் நந்துவுடன் வாழ்வதற்காக, ஆசையாய் அவன் கட்டிய வீடு , இப்பொழுது இந்த நிலையில்...
அந்த பைலில் , குறிப்பு எதுவும் அவ்வளவாக இல்லை.. தப்பி சென்றவனின் பெயர் ஷமீத்.. அவனின் புகைப்படம் மற்றும் அவன் ஜெயிலிருந்த தப்பிய வாகனம் பற்றிய விபரங்கள் இருந்தது..
அவன் தப்பி வந்த போலீஸ் ஜீப்பும் டில்லியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தள்ளி ஒரு ஹைவேஸில் கண்டு பிடிக்கப்பட, வேறு எந்த வாகனத்தில் தப்பினான் என்ற தகவல் ஏதுமில்லை.. அவன் இலங்கை தப்பி செல்லக்கூடும் என்ற சந்தேகம் ஏனெனில் ஷமீதின் இதர பல சொத்துக்கள் அங்கு தான் உள்ளது.
சுங்கச் சாவடியிலுள்ள சிசிடிவிக்களின் தகவலின் படி , பதினாறு வாகனங்கள் டில்லியிலிருந்து சென்னை வரும் ரூட்களில் அதே நேரம் பயணிக்கின்றன..
ருத்ரன் , கன்ட்ரோல் ரூமிற்கு அழைத்து, அந்த வாகனங்களின் எண்களை கூறி, அதனை ட்ராக் செய்ய கூறினான்.
தன் நண்பன் கிஷோருக்கு அழைத்தவன் உடனே தான் இருக்கும் இடத்திற்கு வருமாறு கூறினான்.
கிஷோர் இரவு உணவுடன், ருத்ரனின் இடத்திற்கு வந்தான்.
ருத்ரன், " டேய் , வாடா.. "
கிஷோர் , " டேய் பர்த் டே அதுமா இங்க என்ன பண்ற ? அம்மா உனக்காக காத்துட்டு இருக்க மாட்டாங்களா ? "
ருத்ரன், " அத விடுடா.. ஒரு முக்கியமான விஷயம், அதற்கு தான் உன்ன வர சொன்னேன்.. இந்தா , இதை படி" என பைலை அவன் புறம் நீட்டினான்.
கிஷோர் அந்த பைலை பார்த்துக்கொண்டிருக்கும் போதே ருத்ரனுக்கு கன்ட்ரோல் ரூமிலிருந்து அழைப்பு வந்தது.
ருத்ரன் , " சொல்லுங்க சார்"
" நீங்க கொடுத்த வெஹிக்கல்ஸ் செக் பண்ணிட்டேன் சார். எட்டு வண்டி கோயம்பேடுக்கு உருளைக்கிழங்கு ஏத்திட்டு வந்தது , நாலு வண்டி பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸோடது , இன்னும் நாலு வண்டி , சென்னை லிமிட் குள்ள க்ராஸ் ஆகலை சார்.. நான் அதோட டீடைல்ஸ் உங்க நம்பருக்கு அனுப்பி வைக்றேன்... அந்த நாலு வண்டில மூன்று லாரி சார்.. ஒரு வண்டி நம்பர் மட்டும் கண்டு பிடிக்க முடியல... நம்பர் தப்போனு தோணுது "
ருத்ரன் , "நான் பார்த் துக்குறேன். ரொம்ப நன்றி சார்"
ருத்ரன் " கிஷோர் , ஒரு வண்டி மட்டும் ட்ராக் பண்ண முடியலையாம்.. மே பி சஸ்பெக்ட் அதுல இருக்கலாம்.. "
"டேய்.. அதெப்படிடா உறுதியா சொல்ல முடியும்.. அவன் வேற ரூட் ல வந்திருந்தா ?? சப்போஸ் ட்ரியின்ல இல்ல ப்ளைட்ல வந்தா ??"
"ப்ளைட்டில் வர சான்ஸே இல்லை, அவன் தப்பின அடுத்த நிமிஷம் செக்யூரிட்டி டைட் பண்ணிட்டாங்க.. மே பி டிரைன் ரூட்ல வர சான்ஸ் இருக்கு.. நான் எக்மோர் அன்ட் சென்ட்ரல் ஸ்டேஷன அலர்ட் பண்றேன் அன்ட் ஏற்கனவே போர்ட் போற எல்லா ரூட்டும் செக்கிங் போயிட்டிருக்கு.. பட் அந்த ஒரு வண்டியை கண்டிப்பா ட்ராக் பண்ணனும்.. நம்பர் ப்ளேட் மாத்தி ஓட்டுற எவனும் யோக்கியனாக இருக்க மாட்டான்.."
கிஷோர் , " சரிடா... வா முதலில் சாப்பிடலாம்.. பின்ன ட்ராக் பண்ணலாம்"
"ப்ப்ச்ச்ச்ச்.. இருடா.. இந்த வண்டி கடைசியா எந்த டோல்கேட்டை க்ராஸ் ஆகிருக்குனு தெரியனும்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு இன்பர்மேஷன் வேணும் , நான் கமிஷ்னர் கிட்ட பேசிட்டு வரேன்.. "
சிறிது நேரம் கழித்து ருத்ரன் வந்தவன் , கிஷோருடன் இரவு உணவை உண்டான்.
**************************
அந்த கருப்பு நிற ஆடி கார் , மிக வேகமாக ஈசிஅர் ரோட்டில் பறந்து வந்துக்கொண்டிருந்தது.. அதிலிருந்தவன் , தன் மொபைலிலிருந்து நூறாவது முறையாக யாருக்கோ அழைத்து, அது எடுக்கப்படாமல் போக , கடுப்பின் உச்சத்திற்கே சென்றான்.
அவனின் பொறுமையை இன்னும் சோதிக்காமல் அவனின் எண்ணிற்கு அழைப்பு வந்தது ஜேபியிடமிருந்து..
"என்ன ஜேபி ஸார்... நான் எவ்வளவு பதட்டமா இருக்குறேன் , என் போன் கூட அட்டன் பண்ண மாட்றீங்க.. "
"முட்டாள்.. நானே கூப்பிடற வரைக்கும் கால் பண்ணாதேனு சொன்னேனா இல்லையா??.. நீ நீலாங்கரை வந்ததும் அங்க உள்ள ஆர். ஆர் கார் வொர்க்ஷாப்பில் இந்த வண்டிய விட்டுடு, அங்க இருக்கும் ப்ளூ பென்ஸ் ல நீ கிளம்பு.. நான் நீ தங்க போகும் விலாசம் கார் டேஷ்போர்ட் ல இருக்கும் , அங்க போய் ஷங்கர்னு உன் பேர சொல்லு , ரூம் கீ தருவாங்க , நாளை காலையில பத்து மணி வரைக்கும் வெளிய வராதே.. உனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் வரும்.. புரியுதா ?"
"ஓகே ஸார்"
"நான் இப்ப கட் பண்றேன்.. ப்ளீஸ் கால் பண்ணிடாதே.. அப்புறம் முக்கியமான விஷயம் , இந்த போனை இந்த கார்குள்ளையே விட்டுடு.. தூக்கிட்டு சுத்தி என்னை மாட்டி விட்றாதே.. "
"ஓகே சார்" ஷமீத் போனை கட் செய்தவன் நீலாங்கரைக்கு வேகமாக பறந்தான்.
*********************************
ருத்ரனிற்கு கமிஷ்னரிடமிருந்து வந்த தகவலின் படி , அந்த கார் விழுப்புறம் அருகே உள்ள ஒரு சுங்க சாவடியில் கடைசியாக ரெக்கார்ட் ஆகியிருந்தது.. அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுபவனின் முக்கால்வாசி முகம் வீடியோவில் பதிய, அவன் ஷமீத் தான் என உறுதியானது...
ஆனால் அந்த வாகானம் செங்கள்பட்டு டோல் கேட்டிற்கு வந்து சேரவில்லை.. இடையில் எங்கோ அவன் தப்பி இருக்கிறான்..
ருத்ரன் கிஷோரிடம் , "மச்சி , அவன் இன்னும் சென்னையை தான்டி போகலை டா.. என் உள் மனசு சொல்லுது , இங்க தான் பக்கத்தில இருக்குற மாதிரி, நீ ஒன்னு பண்ணு , சென்னையிலுள்ள எல்லா ஸ்டார் ஹோட்டலுக்கும் தகவல் சொல்லு, யார் நைட் தங்க வந்தாலும் ஆதார் வெரிபை பண்ண சொல்லு, யாரவது இல்லைனு சொன்னா இல்ல சந்தேக படுற மாதிரி இருந்தா உன் நம்பருக்கு உடனே கால் பண்ண சொல்லு .."
"அது எப்படி டா சொல்ற அவன் ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவானு ?"
" நம்பர் ப்ளேட் தப்புனாலும் அவன் வந்த கார் ஆடிடா... அது மட்டுமில்ல , ஸ்டார் ஹோட்டல்னா போலீஸ் தொல்லை இருக்காதுனு நினைப்பிருக்கும்.. "
"சப்போஸ் அவன் எங்கையும் தங்காமல் வேகமா எஸ்கேப் ஆக ட்ரை பண்ணினா??"
"பாஸிபல்... பட் போர்ட்க்கு போற எல்லா ரோடும் க்ளோஸ் பண்ணியாச்சு.. ரெண்டு நாளைக்கு கமிஷ்னர் பர்மிஷன் இல்லாமல் யாராலையும் நுழைய முடியாது... பார்க்கலாம்.. அவனா இல்லை நாமலானு.. "
கிஷோர் நண்பனின் உத்தரவு படி அனைத்து உயர் தர ஸ்டார் ஹோட்டலுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டிருக்க , ருத்ரனின் போன் ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது.. வேறு யார்?? நம்ம நந்து பேபி தான்..
பத்து முறைக்கும் மேல் அடித்துக்கொண்டிருக்க, அவளை கடித்துக்கொதரும் வெறியோடு அதனை அட்டன் செய்தான்.
"அறிவிருக்காடி உனக்கு , நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா தான் போற? எத்தனை தடவை சொல்லிருக்கேன் என்னை தொல்ல பண்ணாதேனு?"
"ருத்து... " என்று அவள் அழைத்ததில் சோகம் அப்பட்டமாக இருக்க , அதற்கு மேல் அவனால் கோவத்தை இழுத்துப்பிடிக்க முடியவில்லை.
"அம்மு இங்க பாரு நான் ரொம்ப முக்கியமான வேலையிலிருக்கேன் தயவு செய்து ரெண்டு நாள் என்னை தொல்லை பண்ணாதே " என அவள் பதிலையும் கேட்காது கட் செய்துவிட்டான்..
*************************************
"கீதா பாலஸ்" என்ற பெயர் பலகையை தாங்கிய ஐந்து அடுக்கு நட்சத்திர ஹோட்டல் கம்பீரமாக நின்றது..
ஷங்கர் என்னும் ஷமீத் கம்பீரமாக முகத்தில் மாஸ்க் அணிந்துக்கொண்டு ரிசப்ஷன் ஏரியாவிற்கு சென்றான்
ஷமீத் , " ஹெலோ ஸார்.. தெர் இஸ் அ ரூம் புக்ட் இந் த நேம் ஆப் ஷங்கர் , மே ஐ ஹவ் த ரூம் ப்ளீஸ்"
ரிசப்ஷனிஸ்ட் மோகன் லெட்ஜரை சரி பார்த்து , "ஸ்யூர் சார், வி ஹாவ் அ புக்கிங் இன் யுவர் நேம்.. ப்ளிஸ் வெயிட்" என சாவியை எடுக்கப்போக ,
அப்போது அங்கு இன்னொரு ரிஸப்ஷனிஸ்ட்டாக பணி புரிந்த ப்ரியங்கா "ஸார் மே ஐ ஹவ் யுவர் ஆதார் ஆர் பான் கார்ட்??"
அதற்க்குள் மோகன் , "ப்ரியா என்ன இது , ஸார பார்த்தா அப்படியா இருக்கு , சும்மா இவர் கிட்டலாம் இப்படி கேட்காத.. "
ப்ரியங்கா ," ரூல்ஸ் ஈஸ் அ ரூல்ஸ் மோகன்.. , ஸார் கிவ் மீ யுவர் ப்ரூப் ப்ளீஸ்.. "
ஷமீத் , " சாரி, நான் ஏதும் கொண்டு வரல.. நாட் இன் மை ஹாண்ட்.. "
ப்ரியங்கா, " பரவாயில்லை சார் , ப்ளீஸ் ஷோ மீ எனி ஈ காப்பி , தட் ஷுட் பீ பைன்.. "
ஷமீத் , " அதெல்லாம் காட்ட முடியாது.. நோ யுவர் லிமிட்ஸ்.. நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க தெரியுமா.. "
ப்ரியங்கா, "ஐ டோன்ட் கேர் ஸார்.. ரூல்ஸ் ஆர் ரூல்ஸ். "
அவன் வாக்குவாதத்தில் ஈடுபட , உடனே கிஷோர் எண்ணிற்கு தகவல் அளித்து விட்டாள் ப்ரியங்கா...
ஷமீத் கோபத்துடன் அங்கிருந்து கிளம்ப, சற்று நேரத்தில் அங்கு வந்த கிஷோரும் ருத்ரனும் அவனை பின் தொடர்ந்தார்கள்..
கிஷோர் , "அவனை அரஸ்ட் பண்ணாம ஏன்டா லவ்வர் மாதிரி பின்னாடியே போற.. ?"
ருத்ரன் , "அவன் இவ்வளவு தூரம் தைரியமா வாரானா நம்ம ஊரில யாரோ சப்போர்ட் பண்றாங்க மச்சி.. அதை நம்ம கண்டு பிடிக்க வேண்டாமா.. ?"
கிஷோர் , "உன் அறிவுல தீயை வைக்க.. போய் தொல.. "
"டேய்.. அது மட்டுமில்ல, அவன் கிட்ட ஆய்தம் ஏதாவது இருந்தா? அதான் நம்ம ஸ்க்வாட வர சொல்லிருக்கேன் , அவுட் ஆப் சிட்டி தான்டுனதும் வேட்டை தான்.. மூடிட்டு வா.. "
-- தொடரும்