வலி - 2
முதல் கட்ட தீவிர சிகிச்சைக்கு பிறகு பல மணி நேரங்கள் கடந்து கண் விழித்த மஹாவுக்கு தனக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் நினைவுக்கு வர கதறி அழுது, அனலில் இட்ட புழுவாய் துடித்தாள்...
மயக்கம் தெளிந்த பிறகு தன்னை பரிசோதிக்க வந்த மருத்துவர் செவிலியரை மட்டும் அல்ல பெற்றவர்களையும் கண்டு அஞ்சி நடுங்க, பெற்றவர்கள் கண்ணீரோ இல்லை மற்றவர்கள் ஆறுதல் மொழியோ எதுவும் அவளை எட்டவில்லை...
''கிட்ட வராதீங்க ...கிட்ட வராதீங்க...'' என்று பயம் கொண்டு கதறுபவள் , அருகில் வந்தால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்க ஆரம்பித்தாள், பலமிழந்த உடல் அவளின் உணர்ச்சிகளின் ஆவேசத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தளர்ந்து சரிய, அடுத்து வந்த இரண்டு தினங்களுக்கு அவளை மயக்கத்தில் வைத்தே சிகிச்சையை தொடர்ந்தனர்...
மஹாவின் உடல் நிலை சற்று தேறினாலும் அவளின் மனநிலையில் எந்த ஒரு மாற்றமும் உண்டாக வில்லை, ஆட்கள் வரும் அரவம் (சத்தம்) கேட்டதுமே கண்களை இறுக மூடிக்கொண்டு கத்த ஆரம்பித்து விடுவாள், அதன் பிறகு மயக்க மருந்து செலுத்தி அவளை அமைதி படுத்த வேண்டும் இல்லை அவள் மயங்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்...
இது இரண்டுமே அவள் உடல்நிலைக்கு மட்டும் இல்லை மனநிலைக்கும் ஆபத்து...
தங்களின் உயிரான மகள் துடிப்பதை பார்த்து தீபேஷ் தான் ஒரு ஆணாக பிறந்ததை நினைத்து, வெறி கொண்ட மிருகங்களின் செயலால் வேதனையும் அவமானமும் கொள்ள...
சௌந்தர்யா ''தாயக இருந்தும் என் மகளுடைய வேதனையை என்னால் போக்க முடியவில்லையே..'' என்று கலங்கி தவிக்க நாட்கள் துயரங்களை சுமந்து கடந்தது...
மஹாவை போல பாதிக்க பட்டவர்களுக்கு மட்டும் இல்லை, அவர்களின் குடும்பத்தினருக்கும் மனநல மருத்துவரின் ஆலோசனைகள் மிகவும் அவசியம், பாதிக்கப்பட்டவர்களின் மனதை மாற்றுவதோடு உடனிருப்பவர்களுக்கு தைரியம் அளிக்க வேண்டியது மிகவும் முக்கியம்....
பாதிக்கப்பட்டவர்களை அதன் பாதிப்பில் இருந்து விடுவிக்கவும், குடும்பத்தினர் அதற்க்கு துணையாக இருக்கும் மருத்துவரின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானதும் இன்றி அமையாததும் கூட...
இப்போது மஹாவை விட அவளின் அம்மா அப்பாவுக்கு தான் கவுன்சலிங் முக்கியம் என்று நினைத்த மனநல மருத்துவர் திரு பரிக்ஷித் அவர்கள், தீபேஷ் மற்றும் சௌந்தர்யாவை அழைத்து ஒரு காணொளியை போட்டு காண்பித்தார்...
அந்த காணொளியில் ஒரு பூனை தனது ஆறு குட்டிகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டு இருந்தது, தாய் பூனை மீது குதிப்பதும் தங்களுக்குள் வாலை பிடித்து இழுத்து விளையாடுவதும், தாயிடம் வந்து பால் குடிப்பதுமாக பார்ப்பதற்கு அத்தனை இனிமையாக இருந்த காட்சி நொடி பொழுதில் இன்னலாக மாறி போனது....
குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்த தாய் பூனை அங்கு தீடீர் என்று ஆண் பூனை ஒன்று வரவும் பயந்து நடுங்கி தனது குழந்தைகளை பாதுக்காக்க போராட ஆரம்பித்தது, அதன் போராட்டம் எல்லாவற்றையும் முறியடித்த ஆண் பூனை ஒவ்வொரு குட்டியாக கடித்து தூக்கி எரிந்தது...
ஆண் பூனை அருகில் வரும் போது அஞ்சி நடுங்கி உச்சகட்ட பயத்தில் அலறிய குட்டிகள் எல்லாம் ஆண் பூனையின் கோர பற்களுக்கு பலியாகி உயிரற்ற உடல்களாக, அதை கண்ட மற்ற குட்டிகள் பயத்திலும், தாய் பூனை குழந்தைகளை காப்பாற்ற முடியாத நிலையிலும் கண்ணீர் நீர் வழிய கத்தி கொண்டு இருந்தது....
நான்கு குட்டிகளை கடித்து கொன்ற பூனை ஐந்தாவது குட்டியை கடிக்க போகும் போது பூனைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கே வந்த அந்த பூனைகளை வளர்க்கும் பெண் ஆண் பூனையை அடித்து விரட்டிவிட்டு, இறந்த குட்டிகளை கண்டு கண்ணீர் வடித்தவள்,
அஞ்சி நடுங்கி கொண்டு இருந்த இரண்டு குட்டிகள் அதன் தாய் அருகில் நெருங்கும் போது இன்னும் அதிகமாக கத்த, தாய் பூனை மிகவும் பாவமாக அழுதது,
அந்த பெண் தயங்கி தயங்கி இரண்டு குட்டிகளின் அருகில் சென்று அவற்றின் தலையை வருட அமைதி அடைந்த பூனை குட்டிகள் தாய் பூனையை மட்டும் அருகில் நெருங்க விடவில்லை. தாய் பூனை விலகி நின்றே ''மியாவ்.. மியாவ்...'' என்று பாவமாக கத்தி கொண்டு இருந்தாலும் ஒரு சிறு அசைவுக்கும் அதன் கண்களும் காதுகளும் கூர்மை அடைந்து, அதன் உடல் மொழி மாறியது. மீண்டும் ஆண் பூனை வந்துவிடுமோ என்ற பயத்தில்..
அந்த பெண்ணிடத்தில் அடைக்கலமான பூனை குட்டிகள் கொஞ்ச நேரம் சென்றதும் தாயின் அருகில் வந்து பால் குடித்த குட்டிகளை தாய் நக்கி ஆறுதல் படுத்த குட்டிகள் உறங்கி விட்டது, தாய் பூனை சிறு சத்தத்தையும் கூர்மையாக கவனித்தபடி அந்த ஆண் பூனை மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் படுத்திருந்தது, அத்தோடு அந்த காணொளி முடிந்து இருந்தது...
தீபேஷ் சௌந்தர்யா இருவருக்கும் காணொளி ஆரம்பித்த போது இருந்த மனநிலை முடியும் போது ஓரளவிற்கு மாறி இருந்தாலும், காணொளி ஆரம்பித்த போது இதை எதற்கு போடுகிறார் என்று
தோன்றினாலும், இதற்க்கு எதாவது முக்கிய காரணம் இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்க ஆரம்பித்தவர்களின் மனதுக்கு மிகவும் கஷ்டமாக...
மனதின் துயரத்தை ஒதுக்கி இப்போது இதில் இருந்து நாங்க தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை புரிந்துகொள்ளவேண்டியது என்ன இருக்கின்றது என்ற பாவனையில் மருத்துவரை குழப்பமாக அவர்கள் பார்க்க,
மருத்துவர் பேச ஆரம்பித்தார் '' ஒரு விதத்தில் சொல்லப்போனால் அந்த காப்பாற்றப்பட்ட பூனை குட்டிகளின் மனநிலையில் தான் இப்போது உங்களின் மகள் இருக்கிறாள், தனக்கு பாதிப்பை ஏற்படுத்திய அந்த மனித இனத்தை கண்டாலே அஞ்சி நடுங்கிக்கொண்டு....
தங்களை மீண்டும் மரணம் நெருங்கிவிடுமோ என்ற பயம் மட்டுமே அவைகளை ஆட்டுவிக்க, உங்கள் மகளின் மனதை பயத்தையும் தாண்டி இன்னும் பல்வேறு உணர்ச்சிகள் ஆட்டுவிக்கின்றது, இப்போது நீங்கள் அவள் முன்னாள் கண்ணாடியை கொண்டு சென்றால் அதில் தோன்றும் அவள் பிம்பத்தை பார்த்தும் அவள் பயப்படுவாள்...
இப்போது அவள் இருக்கும் மனநிலையில் அவளால் எதையும் சிந்தித்து பார்க்க முடியாது, முதலில் அவள் மனதில் இருக்கும் அந்த பயம் நீங்க வேண்டும், அந்த பயத்தின் அடிப்படை தன்னை அருவெறுத்து ஒதுக்கிவிடுவார்களோ என்பதும், இனி வாழக்கை எப்படி இருக்குமோ என்பது தான்...
நீங்கள் அவளை நெருங்கி ஆறுதலும் சொல்ல வேண்டாம், அவளை நெருங்கமுடியவில்லையே என்று வருந்தி விலகி போகவும் வேண்டாம், தள்ளி நின்று உங்களின் தவிப்பை அவளுக்கு உணர்த்துங்கள், அவளிடம் மாற்றங்கள் உண்டாகும் அதற்க்கு பொறுமை மிகவும் அவசியம்...