வலி 6
பாரதிக்கு நீதிபதி சொல்லப்போகும் தீர்ப்பை எதிர்ப்பார்த்து அனைவரும் காத்திருக்க, நீதிபதி தீர்ப்பு சொல்ல போகும் நாளை குறிப்பிட்டு சொல்லிவிட்டு, கனத்த மனதோடு தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்...
பாரதி தந்தையிடம் கண்ணை காட்டிவிட்டு சென்று விட, அவர் அடுத்த கட்டத்திற்கான திட்டத்திற்கு காய் நகர்த்த சென்றுவிட பாரதி சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டாள்...
பாரதி கேட்ட கேள்விகள் எல்லாம் அனைவரின் மனதிலும் இருந்தாலும் ஏனோ அதை அனைவராலும் வெளியில் கேட்டுவிட முடியவுமில்லை அதை அவர்கள் முயற்சிக்கவும் இல்லை, யாருக்கோ தானே என்ற அலட்சியமும், நமக்கு எதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயமும் தான் அதற்க்கு காரணம்...
அலட்சியமும் பயமும் சரிபாதியாக இருக்க கண்ணுக்கு முன்னாள் அநியாயம் நடக்கும் போதும் பலர் கண்டும் காணாமல் கடந்து சென்று விடுகின்றனர், அவர்கள் அதை கடந்து செல்ல எடுத்துக்கொள்ளும் காலத்தில் யாராவது ஒருவர் தனது அலட்சியதியும் பயத்தையும் தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தால் போதும் கண்டிப்பாக அவர் எடுத்து வைக்கும் அடுத்த அடிக்கு பலம் சேர்க்க பலரின் அடிகள் சேர்ந்து இருக்கும்...
அனைவருக்கும் ஒரு தூண்டுதலும் அதே சமயம் துணையும் தேவைப்படுகின்றது கண் முன்னாள் நடக்கும் அநீதியை தட்டி கேட்க, இது தான் மனித இயல்பு. கதைகளிலும் கற்பனைகளிலும் தான் நாயகன் ஒருவனாக இருபது நபர்களை அடித்து வீழ்த்துவது எல்லாம் சாத்தியம், நிஜம் அப்படி இல்லையே...
நிஜத்தில் ஒற்றை ஆளாக போராடுவது என்பது அசாத்தியம் ஆனால், ஒன்று கூடி போராடினால் அசாத்தியம் நிச்சயம் சாத்தியமாகும்...
தீபேஷ் மகளை காக்க வேண்டி பாரபட்சமின்றி அனைவரிடமும் உதவி வேண்ட, உதிவிக்கு கரங்கள் நீளுமா இல்லை பாரதி வாழ்க்கை இதோடு முடிந்துவிடுமா என்று பயந்து நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தனர் பாரதியின் பெற்றோர்கள்..
சிறையில் இருந்த பாரதியின் நினைவுகளில் இந்த இரண்டு ஆண்டுகளாக அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு தானே தீர்ப்பை நிர்ணயித்த போது, அவள் மனதில் மனித உயிர்களை வதைப்பது சரியா என்ற கேள்வி எழும் போது எல்லாம் அவள் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகளை பற்றிய தகவல்களை எல்லாம் பல்வேறு வழிகளில் சேகரிக்க ஆரம்பித்தாள்..
அப்படி தகவல்களை சேகரிக்கும் போது, அவள் மனது நீ தேர்ந்தெடுத்த வழி மிகவும் சரி என்று சொல்லும், அவள் தனக்காக மட்டும் என்று தொடங்கிய இந்த போராட்டம் தன்னை போன்ற பாதிக்க பட்ட பெண்களுக்காகவும் இனி எந்த பெண்ணும் இப்படி பாதிக்க பட கூடாது என்பதற்காகவும் என்று சுயநலத்தில் இருந்து பொதுநலனாக மாறியது...
இப்போது நம்முடைய அடுத்த கட்ட திட்டம் தவறோ, அது சட்டத்தை அவமதிக்கும் செயலோ என்ற எண்ணம் அவள் மனதில் எழ, அந்த எண்ணத்தை விரட்டி அடிக்க சில புள்ளிவிவர தகவல்களை தனது சிந்தனையில் ஓடவிட்டாள்...
அந்த தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும், அதில் இருக்கும் ஒரே சம்பந்தம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பலியானது என்பது தான்..
குடும்பத்துக்குள்ளே நடக்கிற பாலியல் வன்கொடுமைகள் மட்டுமல்ல, பொது சமூகத்தில் உருவாகும் திட்டமிட்ட, திட்டமிடாத கலவரங்களின்போதும் பெண்ணின் உடல்கள் தாக்கப்படுகின்றன.
1994- ல் ருவாண்டா நாட்டின் இனப் படுகொலைகளின்போது 2,50,000 முதல் 5,00,000 பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கின்றனர். சியாரா லியோன் உள்நாட்டுப் போரின்போது சுமார் 6,00,000 பேர். போஸ்னியா, ஹெர்சகோ யுத்தத்தில் 20,000 லிருந்து 50,000 வரை. 1996-லிருந்து காங்கோ நாட்டில் குறைந்தது 2,00,000 பேர் என்கிறது ஐ.நா சபையின் உத்தேசக் கணக்கு.
தெற்காசிய நாடுகளில் பாலியல் வன்முறைகளும் அவற்றுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட மறுக்கும் நிலையையும் பற்றிய விவரங்களைத் தொகுக்கும் முயற்சி முதன்முதலாக நடந்துள்ளது. 1971-ல் வங்கதேச சுதந்திரப் போரின்போதும் 1947-ல் இந்தியப் பிரிவினையின் போதும் 2,00,000 லிருந்து 4,00,000 பேர்வரை பாலியல் வன்முறைக்கு ஆளானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றங்களில் எவரும் தண்டிக்கப்படவில்லை.
இலங்கையில், 26 ஆண்டுகால உள்நாட்டுப்போரில் பெண்களின் மீதான குற்றங்களும் உள்ளன. போரின் முடிவில் 90,000 பெண்கள் விதவைகளாகியுள்ளனர் என்றும், பெண் தலைமையிலான 50,000 குடும்பங்கள் ஆதரவற்ற வறுமையில் உள்ளன என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களின் மீதான பொதுச் சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும் என்றார் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ப்ரேமா ரேவதி.
இலங்கையில் பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்ட பெண் உடல்கள் தேசியவாதப் பிரச்சாரத்தின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அந்தப் பெண்களுக்கான நீதிதான் கிடைக்கவில்லை என்றார் ப்ரேமா ரேவதி.
பெண்ணிய வரலாற்றாளர் பேராசிரியர் உமா சக்ரவர்த்தி ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் பேசுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்பாரிகளை ஒடுக்குவது என்ற போர்வையில் பழங்குடிப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைச் செய்கிற நிலை இன்னமும் தொடர்வதைச் சுட்டிக்காட்டினார்.
இப்படி ஒவ்வொரு சம்பவமாக சுட்டிக்காட்டி கொண்டே சென்றால் நாட்கள் நீளுமே தவிற நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்..
இங்கு கொடுமைகள் ஒரு பெண்ணுக்கு மட்டும் என்று இல்லை ஒட்டுமொத்தமாக ஒரு சமூக பெண்களுக்கு என்று மட்டும் இல்லை பெண் என்றாலே அவளுக்கான கொடுமைகள் வீட்டிலும் நாட்டிலும் பெண்ணவளை தொடர்ந்து துன்புறுத்தி கொண்டே இருக்கின்றது..
பெண்ணவளை துன்புறுத்தி இன்பம் காணும் மனம் இல்லாத மனித இனம் அறியவில்லை பெண் எனப்படுபவள் எத்தைகைய சக்தியென்று
1914 காலகட்டம். முதலாம் உலகப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. போரும், வறுமையும் இணைபிரியா தோழர்கள்தானே.... எதற்காகப் போராடுகிறோம்.. யார் மகிழ்ச்சிக்காக என்று தெரியாமலேயே ரஷ்ய வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்... செத்துக்கொண்டும் இருந்தார்கள்.
தெரிந்தவர்களுக்கு மன்னனை எதிர்த்து கலகம் செய்ய அச்சம். அந்தச் சமயத்தில் போரில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய வீரர்களுக்கு சில தகவல்கள் வருகிறது. மைனஸ் டிகிரி குளிரிலும் நடுங்காதவர்கள், அந்தத் தகவலைக் கேட்டதும் நடுங்கிப்போனார்கள்; உள்ளுக்குள் உடைந்தும்போனார்கள்.
அந்தத் தகவல், “பசியால்... வறுமையால்.... ஒருவேளை உணவு இல்லாமல் வீரர்களின் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கின்றன” என்பதுதான். உள்ளுக்குள்ளேயே மருகினார்களே தவிர, திடமாக என்ன முடிவெடுப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது பெண்கள் முடிவெடுத்தார்கள்... இனியும் நாம் பொறுமையாக இருந்தால் நம் பிள்ளைகளை இருளில் நாமே தள்ளியதுபோல ஆகிவிடும் என்று ரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராடில் பெண் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தார்கள். 1917 மார்ச் 8-ம் தேதி வீதிக்கு வந்தார்கள்.
நெருப்பென்றால் பரவுவது இயல்புதானே... அதுவும் ஏற்கெனவே உள்ளுக்குள் கனன்று கொண்டிருப்பவர்களை அந்த நெருப்பு உடனே தழுவும்தானே... ஆம், அந்தப் போராட்ட நெருப்பு பரவியது... மாணவர்கள், இளைஞர்கள், அரசு அதிகாரிகள் பின், ராணுவத்தினரும் அந்தப் போராட்டத்தில் குதித்தார்கள். சரியாக எட்டாவது நாள்... தம் குழந்தைகளின் நல்எதிர்காலத்துக்காக வீதிக்குவந்த பெண்கள், முடியாட்சியை வீழ்த்தினார்கள். இது சர்வதேச மகளிர் தினம் குறித்த ஒரு நீண்ட வரலாற்றின் சிறு பகுதி.
சரி, இப்போது பெட்ரோகிராடில் வீதிகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலுக்கு வாருங்கள்... அங்கு குழுமியிருக்கும் பெண்களைச் சந்தியுங்கள். அமுதா... கவிதா... லெட்சுமி, வளர்மதி, வசந்தா அம்மா எனப் பெண்கள் கூட்டம் வரலாற்றின் பக்கங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதார போராட்டங்களைத் தாங்களே முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
“வழக்கமான உள் அரசியலால் நெடுவாசல் போராட்டம் பிசுபிசுத்துவிட்டது. போராட்டத் தலைவர்கள் திக்குத்தெரியாமல் திணறுகிறார்கள்” என வழக்கம்போல அதிகாரவர்க்கம் வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்க... போராட்டத்தின் முதல் வரிசையில் பெண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்; போராட்டத்தை முனைப்புடன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
''மொத்த தமிழகமும் நெடுவாசல் நோக்கிவந்து, அரசின் சதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்... இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்'' எனக் கோரிக்கைவைக்கிறார்.
இதேபோல தங்கச்சிமடத்தில், இலங்கைக் கடற்படைக்கு எதிரான போராட்டத்திலும்... பெண்கள்தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள். “எம் பிள்ளைகளை கொன்றுகொண்டே இருப்பார்கள்... அரசு கள்ள மெளனம் சாதித்துக்கொண்டே இருக்குமா...” என அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.
இப்படி பல்வேறு காரணங்களுக்கு பெண்கள் போராடினாலும் அவர்கள் போராட்டத்தில் மொழி நாடு என்ற வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் ஒரே நோக்கம் தங்களுடைய வரும்கால தலைமுறை வளமாக நலமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே, இப்படி போராடும் பெண்களின் போராட்டம் எப்போதும் தனது இலக்கை அடைந்தே தீரும்...
ஏனென்றால் இப்போது போராட்டக்களங்களில் முதல் வரிசையில் நிற்பது பெண்கள்.
பெண்கள் சக்தியெனப்படுக!(நன்றி - மு. நியாஸ் அகமது)
இதேபோல் நாளை பெண்கள் தங்களுக்காக வீதியில் இறங்கி போராடி தான் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நிலை வந்தாள் பெண் சக்தி கொதித்து எழுந்து தீயாய் பரவும் இதற்க்கு எந்த நாடும் விதிவிலக்கு அல்ல, இப்போதும் அவர்களின் போராட்டத்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள் நிற்கவில்லையே..
இன்று மஹாபாரதியின் போராட்டம் நாளை
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
காட்டுக்கு பதிலாக கயவர்கள் வெந்து தணியும் காலம் வரும்...
*********
கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 38,172. அவற்றில் பாலியல் வல்லுறவுகள் மட்டும் 8 ஆயிரத்து 541 என்று தேசிய குற்றப் பதிவுப் பிரிவு தெரிவிக்கிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒட்டுமொத்தக் குழந்தைகளின் கேள்விக்குறியாக்கப்படுகிற எதிர்காலத்தின் குறியீடு..
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (பாக்ஸோ) போன்ற மிக வலிமையான சட்டங்கள் இருந்தும், அவை குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது வருத்தமான உண்மை.
பாக்ஸோ சட்டம் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவரையும் குழந்தைகள் என்று கூறுகிறது இந்தச் சட்டம். மன வளர்ச்சி குன்றிய குழந்தை மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் ஆசிரியர், மருத்துவர், குடும்பத்தினர் போன்ற நம்பிக்கைக்குரியவர்களின் தாக்குதலுக்கும் கூடுதல் தண்டனை உண்டு. பாலியல் துன்புறுத்தலை அறிந்து அதைப் பற்றிப் புகார் அளிக்காமல் இருப்பவருக்கும் தண்டனை உண்டு.
காவலர்களே பாதுகாவலர்
விசாரணையின்போது காவல் துறையினரைக் குழந்தையின் பாதுகாவலராகக் கருதுகிறது சட்டம். எனவே ஒரு புகார் எழுந்தவுடன் அக்குழந்தைக்கு தேவையான அடைக்கலம், மருத்துவ வசதிகளைச் செய்துதருவது காவல் துறையின் கடமை.
மருத்துவச் சோதனை குழந்தைக்கு அறிமுகமான நபரின் முன்னிலையில் நடைபெற வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் பெண் மருத்துவர்தான் சோதனை செய்ய வேண்டும்.
இந்த வழக்குகளை விசாரிக்க குழந்தைகளுக்கு ஏதுவான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குழந்தையை அடிக்கடி நீதிமன்றத்துக்கு வரவழைக்காமல் காணொளி மூலம் பேசிக்கொள்ளலாம்.
குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது. அதை அமல்படுத்துவதிலும் தீவிரம் வேண்டும்...
“10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பாடத்திட்டத்திலேயே குழந்தைகளின் உரிமை, குடும்ப வன்முறை, பெண் சமத்துவம் பற்றிய தகவல்களைச் சேர்க்கலாம்.
குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் பெரும்பாலும் நன்கு தெரிந்தவர்களால்தானே நடக்கிறது. இந்தப் புகார்களைப் பதிவு செய்வதே ஒரு சவால் இல்லையா?
பாலியல் குற்றத்துக்கு, பாதிக்கப்படும் பெண் காரணமில்லை என்ற பார்வையே நிர்பயா வழக்குக்கு பிறகுதான் வந்திருக்கிறது. ஒவ்வொருமுறை பாலியல் வன்கொடுமை நடக்கும்போதும் மக்கள் எழுச்சியுற்றுப் போராடி நியாயம் கேட்க முடியாது. சட்டத்தின் மூலமாகத்தான், சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சட்டங்கள் நடைமுறைக்கு வரவே தாமதமாகிறது” (நன்றி அஜிதா)
“குற்றவாளிகளை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கும் போதுதான் அச்சம், அவமானம், தவறான கட்டுப்பெட்டித் தனம் விலகும். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிதான் எழுதப்படுகிறது. அதற்கு மாறாக, குற்றம் இழைத்தவருக்குத் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் எழுதப்பட வேண்டும்”
''குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்திலேயே பலர் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த அநீதியை வெளியே சொல்வதில்லை. ஆனால் இந்தத் தயக்கமே குற்றங்களை அதிகாரித்து விட்டது, அடுத்தவர் வீடு தானே பற்றி எரிகின்றது அமைதி காத்தால் அந்த தீ நாளை கணத்தில் நம் வீட்டிலும் பரவலாம்..''
''உனக்கு நாட்டில் நடக்கும் குற்றங்களை பற்றியும் அதை தடுக்கவும் தண்டனை வழங்கவும் இருக்கும் சட்டத்தை பற்றியும் அது செயல்படும் முறை பற்றியும் என்ன தெரியும், ஒன்பது வயது குழந்தை நீ..'' வழக்கறிஜர் சொல்ல அதில் வெகுண்ட வேதா தனது வாதத்தை தொடங்க வாயடைத்து போனது மொத்த நீதிமன்றமும்...
Punishments for Offences covered in the Act
• Penetrative Sexual Assault (Section 3) on a child — Not less than seven years which may extend to imprisonment for life, and fine (Section 4)
• Aggravated Penetrative Sexual Assault (Section 5) — Not less than ten years which may extend to imprisonment for life, and fine (Section 6)
• Sexual Assault (Section 7) i.e. sexual contact without penetration — Not less than three years which may extend to five years, and fine (Section 8)
• Aggravated Sexual Assault (Section 9) by a person in authority — Not less than five years which may extend to seven years, and fine (Section 10)
• Sexual Harassment of the Child (Section 11) — Three years and fine (Section 12)
• Use of Child for Pornographic Purposes (Section 13) — Five years and fine and in the event of subsequent conviction, seven years and fine Section 14 (1)
ஆங்கிலத்தில் சொன்னவள் அதை அடுத்து விளக்கமாக மொழி பெயர்த்து சொல்லவவும் அதை கேட்ட பலருக்கும் மனம் கூசிப்போனது பெண்குழந்தைகளின் அவல நிலையை நினைத்து,
குழந்தை பாலியல் முறைகேடுக்கு எதிரான சட்டங்கள்:
1.உடலுள் ஊடுருவும் பாலியல் வன்கொடுமை
Penetrative Sexual Assault)
தண்டனை: குற்றவாளிக்கு குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டலாம்.
2.உடல்ஊடுறுவல் இல்லாத பாலியல் வன்கொடுமை
Sexual Assault)
பாலியல் நோக்குடன் குழந்தையின் எந்தவொரு உடல் பாகத்தை தொடுவதோ அல்லது தொடச் செய்வதோ அந்தக் குழந்தையை பாலியல் வன்முறை செய்வதாகும்.
தண்டனை:குற்றம் செய்தவர் யாராயிருப்பினும் 3 வருட சிறைதண்டனை விதிக்கப்படும். அத்தண்டனை 5 வருடத்திற்க்கும் நீட்டிக்கப்படலாம்.
3.மோசமான பாலியல் கொடுமை
Aggravated Penetrative Sexual Assault / Aggravated Sexual Assault)
சில நடவடிக்கைகளை சட்டம் மோசமான பாலியல் கொடுமையாக வரையறுக்கிறது.
தண்டனை:
உடல்ஊடுறுவலுடன் மோசமான பாலியல் கொடுமை செய்தவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படலாம்.
உடல் ஊடுறுவல் அற்ற மோசமான பாலியல் கொடுமை செய்தவருக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
4.பாலியல் துன்புறுத்தல்
Sexual harassment)
குழந்தை கேட்கக் கூடியதாகவோ அல்லது பார்க்கக் கூடிய வகையிலோ பாலியல் எண்ணத்தோடு செய்யப்படும் சத்தமோ அல்லது செய்கையோ அல்லது உடல் உறுப்பை காட்சிப்படுத்துவதோ பாலியல் துன்புறுத்தல் ஆகும். குழந்தையை இடைவிடாது தொடர்ந்து நேரிலோ அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாகவோ அல்லது வேறு வகையில் பார்ப்பதோ, பாலியல் நோக்கில் எந்த ஒரு பொருளை காட்டுவதோ, அல்லது ஆபாச பட நோக்கத்தில் குழந்தையை மயக்குவதோ குழந்தை பாலியல் முறைகேடாக எடுத்தக்கொள்ளப்படும்.
தண்டனை: குழந்தையிடம் பாலியல் முறைகேடாக நடப்பவருக்கு 3 வருட சிறை தண்டனை தரப்படலாம்.
5. குழந்தை ஆபாச படத்திற்கு எதிரான சட்டம்
ஆபாச பட நோக்கில் ஒரு குழந்தையையோ அல்லது பல குழந்தைகளையோ பயன்படுத்துபவருக்கு 5 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். தொடர் குற்றங்களுக்கு 7வருடங்கள் வரை சிறை தண்டனையும் , சில சமயங்களில் அபராமும் விதிக்கப்படலாம்.
6.உடந்தை:
குற்றம் செய்வதற்கு துணை போவதும், நடந்த குற்றத்தைப் பற்றிய உண்மை நிலவரத்தை மறைப்பதும் உடந்தையாக கருதப்படும்
தண்டனை:குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவருக்கு அவரே குற்றம் செய்த்தாக கருதி தண்டனை வழங்கப்படும்.
7. குற்றம் செய்ய முயற்சி:
குற்றம் செய்ய முயல்பவருக்கு, குற்றம் செய்வதற்க்கான தண்டனையில் பாதியளவு சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படலாம்.
8.அறிந்து கொண்டு புகார் அளிக்காமல் இருத்தல்:
குழந்தைக்கு பாலியல் வன்முறை நடப்பதை ஒருவர் அறிய வந்தாலோ அல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தாலோ அதை உடனடியாக காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி நல்எண்ணத்துடன் புகார் செய்பவர் குற்றவியல் மற்றும் குடிமையியல் பொறுப்பில்; பொய்புகார் செய்பவராக கருதப்படமாட்டார்.
தண்டனை: குழந்தை வன்கொடுமை பற்றி அறிந்து இருந்தும் புகார் செய்ய தவறுபவருக்கு (குழந்தைகள் தவிர) 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஒரு அமைப்பு அல்லது நிறுவனப் பொறுப்பில் இருப்பவர்(குழந்தைகள் தவிர) தான் அறிந்த குழந்தை வன்கொடுமை பற்றிபுகார் செய்யாமல் இருந்தால் , அவருக்கு 1 வருட சிறை தண்டனை உடன் கூடிய அபராதம் விதிக்கப்படலாம்.
9.புகாரை பதிவு செய்யாமல் இருத்தல்:
எந்த ஒரு காவலர் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றிய புகாரை பதிவு செய்யவில்லை என்றாலும்; அவருக்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 166ன் கீழ் குறைந்த பட்சம் 6 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
10.மருத்துவ உதவி அளிக்க மறுத்தல் :
மருத்துவ மையத்தில் இருப்பவர் , மருத்துவ உதவி அளிக்க மறுத்தால், அவர் பிரிவு 166Bன் கீழ் சிறை தண்டனை அனுபவிக்கவோ அல்லது அபராதம் கட்டவோ நேரும்.
இத்தகைய தண்டனையை அவர்களுக்கு அளிக்க, பாதிக்க பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்:
1. சம்பவத்தைக் குறித்து காவல் நிலையத்திலோ அல்லது சிறப்பு சீர்திருத்த காவல் நிலையத்திலோ புகார் செய்யலாம்.
2. காவலர்கள், குழந்தையை அருகாமையில் உள்ள மருத்துவ மையத்தற்க்கு 24 மணி நேரத்திற்குள் அழைத்து செல்ல வேண்டும்.
3. மருத்துவ பரிசோதனையின் போது கட்டாயமாக பெண் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மேலும், பெற்றோர் உடன் இல்லாமல் இருந்தால், பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரி 24 மணி நேரத்திற்குள், பெண் காவல் அதிகாரியையோ, உதவியாளரையோ வரவழைக்க வேண்டும்.
4. மருத்துவ உதவிக்கு செல்வதற்க்கு முன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாததால்; மருத்துவ உதவி செய்ய முடியாது என்று எந்த மருத்துவரும் பாதிக்கப்பட்டவரை திருப்பி அனுப்ப முடியாது.
5. 24 மணிநேரத்திற்குள் குழந்தை நல குழுவிற்கும் (எல்லா மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.) காவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
6. 30 நாட்களுக்குள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். 1 வருடத்திற்குள் சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கு முடிக்கப்பட வேண்டும். துரித விசாரணைக்காகவே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் நமது நீதித்துறை, சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறது. அதுமட்டும் இல்லாமல், இதுதான் பாலியல் குற்றம் என்று நீதிமன்றம் செய்துவைத்துள்ள வரையறைகளுக்கு அப்பால் எத்தனையோ பரிமாணங்களில் பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன அவற்றை எப்படிக் கூண்டில் ஏற்றுவது, எப்படி தண்டனை வாங்கி தருவது....
இது தான் நீங்க சொன்ன சட்டமும் தண்டனையும்..'' வேதா சொல்லி முடித்ததும் அங்கிருந்த பலருக்கு மூச்சே அடைத்தது...
தன் பிள்ளை அப்பா என்று அழைத்து பேசுவதை கேட்டு பூரிப்பும் பெருமிதமும் அடையவேண்டிய தந்தை, இன்று தன் உத்திரம் தனக்கு எதிராக வாதாடுவதை கேட்டு தன்னையே அருவெறுத்து நின்றான் சுரேன்....
பிள்ளையின் கிள்ளை மொழியை
கேட்டு ரசித்து மகிழ வேண்டிய தந்தை
தலை குனிந்து நிற்கின்றான்
காரணம்
பொதுவில் பெதும்பை பேசியது
கிள்ளை மொழி அல்ல
உள்ளம் கொண்டவரை
உறுத்தவோ இல்லை உணரவோ செய்யும்
பெண்களின் அவல நிலையின் மொழி.