All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "அகம் நெக உனதானேன்..." கதை திரி..

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

என்னுடைய அடுத்த கதை "அகம் நெக உனதானேன்.."

தலைவன் - சிங்கத்துரியன், நல்லேந்திரன்.
தலைவி - சிவவல்லபை, நன்னெஞ்சள்..

மற்றவை கதையின் போக்கில் தெரிந்துக்கொள்ளலாம்.. இந்த கதைக்கும் உங்களது ஆதரவை கொடுத்து நிறை குறைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.. நன்றி..

அன்புடன் ரம்யாராஜ்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை முன்னோட்டம்...

“டைவர்ஸ் பண்ணதுக்கு பிறகு என் வாழ்க்கையில உங்களுக்கான இடம் இருக்காது. அதனால என் வாழ்க்கையில நான் தான் என்ன செய்யனும்னு முடிவு எடுப்பேன்.. அதுல தலை இட உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது..” சொல்லி முடிக்கும் முன்பே அவளது கைகள் அவளின் முதுகோடு முறுக்கி ஒடிக்க பார்த்தவன் அவளுக்கு வலிக்கும் படி செய்து விட்டு

“டைவர்ஸ் ஊருக்கும் உலகத்துக்கும் தான்.. என் டார்ச்சர் உன் வாழ்நாள் முழுக்க முழுக்க தொடரும்.. நீ என் வாழ் நாள் அடிமைடி.. அதுக்காக உன் கூட படுப்பேன்னு மட்டும் நினைச்சுக்காத.. என் விரல் நுனி கூட உன்னை சீண்டாது.. காலம் முழுக்க நீ கன்னியாவே இருக்க வேண்டியது தான்” என்று சொன்னவனின் வக்கிர புத்தி புரிய அவள் முகம் சுளித்தால்.

அவளது வெறுப்பின் அளவை அது சொல்ல பிடித்த பிடியை இன்னும் அழுத்தி பிடிக்க அந்த முரட்டு தனமானவனின் பிடி தாங்காமல் கண்களில் நீர் சிந்தியது அவளுக்கு..

“இதோ பாரு எனக்கு முன்னாடி உன் சுண்டு விரல் அசைஞ்சா கூட உன்னை கூறு கூறா வெட்டி போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்.. அதோட இல்லாம உன் அண்ணனோட நிலைமை ரொம்ப கேவலமா போய்டும்.. பல விலை மாந்தர்களோட உன் அண்ணன் இருந்ததா உல்லாச மன்னன் என்ற பட்டத்தோட நாளைய பேப்பர் வரும்.. வசதி எப்படி” என்றவனின் குருரமான உள்ளத்தை கண்டு வேதனை பட்டவள்

“இனி அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.. ப்ளீஸ் அண்ணனை எதுவும் செய்யாதீங்க..”

“ம்ம் அப்படி பேசி பழகு.. என் கிட்ட உன் திமிரை காண்பிச்சின்னா என்னோட அதிரடியை உன்னால தாங்க முடியாது.. அதனால சூதானமா இருக்குற வழிய பாரு..” என்று அவளுடைய கன்னத்தில் தட்ட அவனது தொடுகையில் உள்ளம் கூசி போனாள்.

எதிர்ப்பு இல்லா அவளது நிலை அவனுக்கு ஒரு பக்கம் சுகமாய் இருந்தாலும் இன்னொரு பக்கம் போரடிக்க

“ஆனாலும் நீ அப்பப்போ கொஞ்சம் வாய் பேசு.. அப்போ தான் ஆட்டம் இன்னும் கொஞ்சம் சூடு பிடிக்கும்” என்றவன் அவளின் முன்னே சட்டையை போட அவள் கண்களை அகல விரித்து அவனை பார்த்தாள்.. அவளது பார்வையில்

“பார்றா.. வச்ச கண்ணு வாங்காம மாமன பாத்துக்கிட்டு இருக்க.. அம்புட்டு ஆசையா மாமன் மேல” மேலும் சீண்டியவனை கண்டு ஐயோ என்று வந்தது..

“என்ன என்னை அரையனும் போல இருக்கா” மேலும் கேட்டவனை கண்டு

“ச்சி சாவடிக்கிறான்” கடுப்புடன் நினைத்தவள் “ஆமா மாமா..” என்று கேவலமான புன்னகை ஒன்றை சிந்தியவளை கண்டு

“வர வர நீயும் கொஞ்சம் சூதானமா தான் இருக்க.. அப்படி தானே இருப்ப.. ஏன்னா உங்க வீட்டுல தான் அந்த அளவு ட்ரைனிங் குடுத்து இருக்காங்களே.. பின்ன நீ இப்படி நடிக்காம என்ன செய்வ..” என்று கேட்க, சட்டென்று அவளது கண்களில் கண்ணீர் முத்துக்கள் தோன்றியது..

“ம்ம் இப்படி அழு மூஞ்சியா இருடி.. அப்பா தான் இந்த மாமன் மனசு குளிரும்..” என்று அவளை சட்டென்று நெருங்கினான்..

அவனது நெருக்கத்தை எதிர் பாராதவள் கதவோடு நெருங்கி பின்னாள் நகர அதில் பட்டென்று அவனுக்கு கோவம் துளிர்த்தது..

“இருடி இதுக்காகவே உன்னை கல்யாணத்துக்கு முன்பே என் புள்ளைக்கு அம்மா ஆக்குறேன்.. அப்போ உன் குடும்பம் மொத்தமும் தலை குனிந்து நிக்கிற அழகை நான் கண் குளிர பார்ப்பேன்..” விசமாய் பேசியவனை கண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

“ம்ஹும் அதுக்குள்ள எல்லாம் உன்னை தொட்டுட்ட மாட்டேன்..” என்று எல்லா பக்கமும் பேசியவனை கண்டு ஓய்ந்து போனாள் சிவவல்லபை..

“இப்போ என்ன தான் பிரச்சனை உங்களுக்கு..” சற்றே ஆத்திரமாக கேட்டாள்.

அதில் அவனது கண்கள் பளபளப்புடன் ஒளிர “நான் காதலிச்ச பொண்ணை என்னால கல்யாணம் பண்ணிக்கிட முடியல.. அதுக்கு தடையா இருக்குறது நீ.. செத்து போறியா..” என்று கேட்டவனை கண்டு கண்கள் கலங்க

“எனக்கும் உங்களை கட்டிக்க விருப்பம் இல்ல. இதை பலமுறை நான் உங்க கிட்ட சொல்லிட்டேன்.. ஆனா நீங்க அதை காதிலே கேட்கல இப்போ குத்துதே குடையுதேன்னு என்னை சாக சொன்னா நான் என்ன பண்றது.. உங்களுக்கா நான் ஏன் சாகனும்.. நான் வாழ்றதை பார்க்குறதுக்காகவே என் அண்ணன் உயிரை வச்சு இருக்கான்.. அவனுக்காக நான் சிறப்பாக வாழ்ந்து காட்டுவேன்.” என்றவளை வன்மத்துடன் பார்த்தான்.. பின் அவன் இதழ்களில் கேலி புன்னகையுடன்

“ஹஹா உன்னை அப்படியெல்லாம் நல்லா வாழ விட்டுடுவனா என்ன.. நீ எப்படியெல்லாம் கஷ்டப்பட போறன்னு அவன் பார்க்க தானே போறான்..” என்றான்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

உங்க அனைவரிடமும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்ளுகிறேன். அகம் நெக உனதானேன் கதை புத்தக வடிவில் வர இருப்பதால் இங்கே பதிவிட முடியவில்லை.. விரைவாக வேறு கதையுடனும். மூன்று மாதம் கழித்து இந்த கதைக்கான பதிவுகளுடனும் வருகிறேன்..

என்னை தேடிய தோழமைகளுக்கு எனது நன்றிகள்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே ...

விடுமுறை முடிந்து வந்துவிட்டேன்... நீண்ட நாள் கேட்ட கதையான அகம் நெக உனதானேன்... கதையை இங்கு பதிவிட போகிறேன்... ஏற்கனவே 5 அத்தியாயம் பதிவிட்டு இருந்தேன்.. அதோடு தொடர்ச்சியான 6 வது அத்தியாயத்தோடு தினமும் ஒரு ஒரு அத்தியாயமாக பதிவிடுவேன்.. இதோடு குறிஞ்சி நாடனும் வருவான். உல்லாசமாய் ஒரு நேச அலை கதையின் மொத்த லிங்கும் கொடுக்கிறேன். படிக்காதவர்கள் படியுங்கள்...

எப்பொழுதும் போல உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் கொடுங்கள் தோழமைகளே...

நன்றி....

ரம்யாராஜ்
 
Status
Not open for further replies.
Top