All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

karthi1212

New member
ஹாய் மா

உங்களோட கதைகள் ல வர கதாநாயகன் கதாநாயகி ஒவ்வொருதரும் வேற லெவெல் மா... வாய்ப்பே இல்ல...

அதுலயும் இந்த ரிஷி இருக்கானே அப்படி ஒரு பாசக்காறன்... ஆனா எப்போ கோவபடுவான் தெரிய மாடெங்குது. சரியான ரவுடி... மஹி சரியான ஜோடி... அவன மேய்க்க தோதான பீஸ்...

மீரா பார்தி... I love all the characters very very much...

Waiting for பழமலைநாதன் and முகிலாம்பிகை....

Regards
Karthi
 

Samvaithi007

Bronze Winner
காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை மூன்று வார்த்தைக் கொண்டு அதற்கு தலைப்பு தந்து அந்த தலைப்பினுள்ளே அத்தனையும் புதைத்து வைத்தாய்!!!! இந்த ரிஷியின் அன்பில் கறைய வைத்துவிட்டாய்...எத்தனை அன்பு எத்துனை பாசம் .... தாய் மாடி தேடும் கன்றாய் அவள் தவித்து தனித்து சொல்ல தயங்கி...மறைத்து மறைந்து குரும்பு என்னும் முக கவசமணிந்து உள்ளுக்குள்ளே உயிரற்று உலகில் உயிரோடு உலவி வந்தவளை ....தன் கரை காணா காதலில் உயிர்ப்பை கொடுத்து உயிரும் உணர்வுமாய் வாழ வைத்த இந்த கலாப காதலனை ....அவனின் அந்த அதித அன்பை...அதை காட்டும் தருணங்களை எப்படி சொல்வது....அவனுடைய வாழ்வில் அவள் காதலாக வந்தாலென்றால் அவன் அவளுடைய வாழ்வாக ஆனான் என்பதை எப்படி விவரிப்பது.....

அவள் மனம் மறைத்து புன்னகையென்னும் முகமூடியணிந்து காண்பவர் கண்களுக்கு பொறாமையை தூண்டியவளின் வாழ்வுதனில் இருண்ட பக்கங்களை இவள் அறியாமலே இவளை இதயத்தில் சுமந்தவன் அறிந்தான்....
அறிந்த நேரம் துடித்தான்...
தன் அகம் நிரம்பியவளை தன்
தன் காதல் கடலிலே மூழ்கடித்து முத்தெடுக்க வைத்தான்...
பிறப்பிலே அறிய வளர்ப்பினுடே கிடைக்கா பாசம்...அத்தனையும் காட்டினான்....அன்னையாய் தந்தையாய் அவளின் அத்தனையுமாய்....அவனது அத்தனை உறவையும் நேசத்தை பொழிய வைத்து.... அவளுக்கும் தனது நேசத்தை வெளிப்படத்த உறவு படைத்தான்...உயிர் கொடுத்தவர்கள் பெற்றோர் என்றால்...ரிஷி இந்த அடாவடி காதலன் உயிரான நேசத்தை கொடுத்து பெற்றவனினும் பெரியோனானான்.....

அகம்பாவிகள் அவளை பெற்றவர்களே என்னும் நொடியே அவர்களின் இந்த பூமியின் பாரமென நினைத்தான்...
பெரும் பாரமொன்று குடியேறியது அவன் மனதில்.....
அத்தனையும் வெஞ்சினமாய் உருவெடுத்தது அந்நொடியிலே...
வைத்து செய்தான் வசமாய் சிக்க வைத்து வாட்டி வதைத்தான்....
வேண்டாதவர்கள் வேண்டாதவர்களாகவே இருக்கட்டும்...விதி வழி அவர்கள் வாழ்க்கை செல்லட்டும்...என்று காதல் வழி செல்லும் பைங்கிளியின் வாழ்க்கையில் என்றும் பாசமும் நேசமும் குறையாமல் இருக்க வாழ்த்தி விடைபெருவோமாக!!!!
பேபிமா வாழ்த்துக்கள்டா...😍😍😍😍😘😘😘😘😘🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 
Last edited:
உணர்வில் உறைந்து உயிரானாய் by சரணிகா தேவி....
சில கதைகளை படித்து முடித்ததும் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல சுவரை வெறிச்சு பார்த்துகிட்டு படிச்ச நினைவுகளை மனசுல ரசிச்சிகிட்டு இதழோரம் புன்னகையை சிந்துவோமே அப்படி ஒரு தருணத்தை தந்த கதை..

ரிஷி மஹியோட காதல் ஓவியம்.

ரிஷி.இவன் தாயுமானவன்.மஹியின் காதலை உணரும் முன்பே அவள் மேல் பைத்தியமானவன்.

மஹி.ரிஷியின் காதலி.மனதின் சோகத்தை எல்லாம் தன் சிரிப்பின் மூலம் மறைக்கும் குரும்புக்காரி.அனைவரும் இருந்தும் அநாதை.இரவின் தனிமையில் தல்லாடும் குழந்தை.

Strict officer ஆ ஆரம்பமாகும் ரிஷி...அவன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கும் மஹி..இப்படி அட்டகாசமா comdey ஆ ஆரம்பிக்கும் கதை...
அதன் பின் இருவரும் காதலிக்கும் விதம், அவர்களின் காதல் வாழ்வு , அதில் ரிஷியின் நேசம், பாசம் ,தாய்மை , ஒரே வீட்டில் இருந்தாலும் அவனின் கண்ணியம் எல்லாமே மஹியை அவன் மீது பித்தாக்கின்றது.(என்னயும் தான்😍😘)
சந்தோஷமாக போகும் இவர்களின் காதல் வாழ்க்கையில் மஹியின் கடந்த கால மனிதர்களால் தடை ஏற்படுது...
அதிலிருந்து ரிஷி மஹியை எப்படி வெளியே கொண்டு வர்ரான்? மஹியின் கடந்த காலம் என்ன? ரிஷி என்பவன் உண்மையில் யார்? அவனுக்கும் மஹியின் கடந்த காலத்துக்கும் என்ன சம்பந்தம்? என்பது தான் கதை.
கதை ஆரம்பத்துல இருந்து இறுதி வரை தொய்வு இல்லாமல் விறுவிறுப்பா காதலோடு நகர்த்தி இருக்காங்க..
மஹி ரிஷியிடம் காதலை வெளிப்படுத்திய விதம்;
ரிஷி மஹிக்கு உணவு ஊட்டுவது ; தாலாட்டு பாடி தூங்க வைப்பது;
அவ ஆசை பட்டதும் வெடி பத்துவது;
அவளுக்காக அவ மீதே கோவப்படுவது;
அவளுக்கு முடியாம இருக்கும் போது அவன் பண்ற வேலைகள்;
அவர்களுக்கான நிச்சயதார்த்தம் (wooowwwww semmmma);
அவளுக்காக பழி வாங்குவது ; எல்லா இடங்களிலும் காதல் மட்டும் தான் இருக்கு..
பார்த்தி மீராவோட மோதல் ச்சே ச்சே காதல் சூப்பர்.
வருண் , தாத்தா பாட்டி இவர்களின் அலப்பறைகள் comdey ஆ இருந்துச்சி...
அருமையான காதல் கதை.. சிரிச்சிட்டே படிக்கலாம்.
வாழ்த்துக்கள் 💌🤙🏻
 

Kowsalya21

Active member
Superb story sis...rishi,mahi rendu Peru characterization sema sis...rishi love ah pathutu Ena oru love nu prammikka vachitenga sis...mahi patta kastathuku Kan kalanga vachitenga.... Rmba rmba nalla love story padicha oru feel kidaichirukku sis... Amazing writing... Idhu pola thodarnthu pala story ezhutha vazhthukal sis :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை, 👌👌
கோபத்தை கூட தகுதி உள்ள இடத்தில தான் காட்டணும்,, மஹி தூள் 👏👏
ரிஷி சூப்பர் லவர் 🥰🥰🥰🥰
THANK YOU SO MUCH MAA...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹி தன் குடும்பத்தை பார்த்து தான் கோபத்தை காட்டா கூட தகுதியில்லை இந்த குடும்பத்திற்கு என்று சொல்லியது தடியால் அடித்ததை விட இந்த வார்த்தைகள் சாட்டையாடியாக அவர்கள் உள்ளத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் சகோ

😲😲😲😲😲😲😲😲
THANK YOU SO MUCH MAA.. KOVAM KAATTA KOODA THAKUTHI VENUM...:love::love::love:
 
Status
Not open for further replies.
Top