All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உன்னில் நானும் ஓருயிராய்" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

"உன்னில் நானும் ஓருயிராய்" அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்...

கதையின் தலைவன் - எழில் பொழி வேந்தன்
தலைவி - நித்திலா கனி

சங்க காலத்தில் நெய்தல் நில வகை பாட்டில் வாழும் சாதாரண பெண்ணவளை பற்றிய கதை.. அந்த பெண்ணவளை தன் உயிருக்குள் சுருட்டி வைத்திருக்கும் ஆடவனை பற்றியும் இதில் சொல்ல இருக்கிறேன்.
இது முழுக்க முழுக்க காதலும் காதல் சார்ந்த கதையாக மட்டுமே இருக்கும். இதில் வருவன எல்லாமே என் கற்பனை மட்டுமே.
எப்பொழுதும் போல உங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள். இதில் காதலும் மோகமும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும். பிடிக்காதவர்கள் விலகி செல்லவும்.

மேலும் காதல் அதிகம் இருப்பதால் பதிவுகள் போட்ட உடன் ஒரு நாளிலே அழிக்க பட்டு விடும். உதாரணம் இரண்டாம் (அத்தியாயம்) பதிவு போட படும் போது முதல் பதிவு (அத்தியாயம்) அழிக்க பட்டுவிடும். மேற்கொண்டு பதிவுகளை கேட்டு என்னை சங்கட படுத்தாதீர்கள் தோழமைகளே.. இந்த கதையை தளத்தில் போட சொல்லி பல தோழமைகள் வர்ப்புருத்தியதால் இங்கே போடுகிறேன். கதை முடித்த உடன் படித்துக்கொள்ளுகிறேன் என்று இருப்பவர்கள் இப்பொழுதே படிக்க தொடங்கவும்.
கதையை முழுதாக பதிவிட மாட்டேன். போட போட பதிவுகளை நீக்கி விடுவேன்.
உங்களிடம் மறுக்க எனக்கு வருத்தமாக இருக்கு... புரிந்துக்கொள்ளுங்கள் நட்பூக்களே.

என்றும் அன்புடன்
ரம்யாராஜ்...
நன்றி...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையிலிருந்து சின்ன முன்னோட்டம்..

குளிர் நிறைந்த கடல் நீர் அவளை ஆசையோடு வரவேற்க சின்ன புன்னகையுடன் அந்த நீரில் வந்து நின்றாள். இருக்க இருக்க கடலின் அலை அதிகமாக இன்னும் கொஞ்சம் தள்ளி நின்றாள் கடலின் உள்.

கடல் நீர் அலையாக எழுந்து அவளது இடையை தழுவி சென்று தன் தாபத்தை தனித்துக்கொள்ள பார்க்க

“உனக்கெதுக்கு அந்த சிரமம் முழுவதும் நான் உனக்கு தானே” எண்ணியவள் இன்னும் இன்னும் உள்ளே இறங்கி நின்றாள்.

அதில் கடலரசன் அவளை இன்னும் மோகித்து தன்னுள் உள் இழுத்துக்கொண்டான். அவனது அணைப்புக்கு கட்டுண்டு கண் மூடி நின்றவள், அலைகளை தன் கரம் கொண்டு பிடிக்க முயன்றாள்.

ஆனால் அவளை ஏமாற்றி விட்டு அவளது கரங்களை தழுவி சென்றான் அலை வேந்தன்... அதில் சிறு சினம் கொண்டவள், அலைகளில் இருந்து நழுவி நீருக்குள் மூழ்கி மூச்சை அடக்கி தன்னை காத்துக்கொண்டாள்.

அதில் அவன் கோவம் கொண்டு அவளை இன்னும் தன்னுள் இழுத்துக்கொள்ள, சிரிப்புடன் இன்னும் தன்னை குறுக்கிக்கொண்டு நின்றவளை கண்டு பெரும் அலையை எழுப்பி அவளை தன்னுள் இன்னும் இறுக்கி கொள்ள பார்த்தான் கடலரசன்.
--
அவளது நோக்கம் புரிந்தவன் தன் மீது பாயமால் இருக்க சற்றே விலகி கொண்டான். அதில் அவளது குறி சற்றே விலகி போனாலும், அவளது வாளின் நுனி அவனது தோள் பகுதியை சற்றே கீறி தான் சென்றிருந்தது. அதில் பாவையவளின் முகத்தில் மென் நகை ஒன்று அரும்பியது.

அவளின் நகையை ரசித்தவன் அவள் வாள் வைத்திருந்த கரத்தை அவளின் முதுகோடு பின்னால் வளைத்து அவளுக்கு வலிக்க செய்தவன் கொஞ்சமும் தாமதிக்காமல் சற்றே குனிந்து அவளின் மார்பில் தன் முகத்தை பதித்தான்.

அதில் துல்லியவள் தன்னிடமிருந்து அவனை விளக்க போராடினாள். ஆனாலும் அந்த கடலைரசனை அவளால் தள்ள முடியவில்லை. பருவத மலையை ஒத்திருந்தது அவனது திண்ணம்.

திண்மையில் சற்றே கலங்கியவள் குனிந்து அவனது வலிமை வாய்ந்த தோள் பகுதியை கடித்து வைத்தாள். அது அவனை இன்னும் வெறி ஏற்ற, அவனும் பதிலுக்கு அவளை வதம் செய்ய தொடங்கினான்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

அடுத்து வரும் இரு வாரங்களும் இரண்டு கதைகளுக்குமே பதிவுகள் இருக்காது என்பதை தெரிவித்து கொள்ளுகிறேன்.. சில சொந்த வேலைகள் இருப்பதால் இந்த தாமதம். நவம்பரில் எப்பொழுதும் போல கதையை கொடுக்க முயலுகிறேன், நன்றி நட்பூக்களே..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.. அறியாமை என்னும் இருள் ஒழிந்து அகிலமெங்கும் அன்பு நேசம் பாசம் கல்வி செல்வம் பெருகட்டும் அனைவருக்கும்...😍😍

பதிவுகள் 1 வாரம் கழித்து தான் நன்றி நனண்பர்களே..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே....

உன்னில் நானும் ஒருயிராய்.... கதையை மறுபடியும் பதிவு இடுகிறேன்... படிக்கிறவர்கள் படித்து விட்டு கருத்துக்களை கூறுங்கள்...
இதை தொடர்ந்து மீண்டும் கதையை தொடர்ந்து பதிவு இடுகிறேன்....
நன்றி...
 
Status
Not open for further replies.
Top