All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உருக்கி கோர்த்தாய் உன் உயிரில்..." கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஸ்பென்ஸ் வச்சு முடிச்சுட்டீங்களே... அது என்ன காகிதக்கத்தை? மிருதிக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் மிருதன் என்ன மறைக்கிறான்னு சொல்லுங்க @RamyaRaj சிஸ்.
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதானே, மிருதன் அவனோட நிறுவனப் பங்கை அவன் மனைவி மிருதிக்கு கொடுக்கிறான்; அதுல எதுக்கு மகேந்திரனுக்கு கோபம் வரணும்?

மகேந்திரனுக்கு நேரடியாக மோத தைரியமில்லாமல் அப்படி செஞ்சா, பதிலடியும் இப்படித்தான் வரும்.

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj sis.
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிருதன்-மிருதியுடைய வாய்ப்பைதான் தடுக்குறார்னு பார்த்தா, இவங்களைப் பிரிக்கிற அளவுக்குக் கீழான யோசனையா மகேந்திரனுக்கு 😠😠😠

மிருதிக்குத் தெரியவந்தது ஒருவேளை, மிருதன் அப்பா பத்தின விஷயமா?

Interesting epi @RamyaRaj sis
ஆமாம் மா. மகேந்திரனின் நடவடிக்கை அடுத்த அத்தியாயத்திலும் அங்காங்கு வரும்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மகேந்திரனுக்குக் கடைசியில் குற்றவுணர்வே தண்டனையாக மாறப்போகிறது‌.

மிருணாளினி-ம்யூசிக் கம்போசர் இடையிலயும் மகேந்திரன் எதுவும் பிரிக்கிற மாதிரி செஞ்சதுனாலாதான், அவனும் மிருணாவைத் தவிர்க்கிறானோ?

இருந்தாலும் மிருதி ஆசையை நிறைவேற்றியே தீருவான் மிருதன்.

Interesting @RamyaRaj sis.
உங்க கெஸ்ஸிங் கரெக்ட்.
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.

மிருத்தஞ்சயன் - மிருதி

தன்னையும் உயர்த்தித் தன் இணையையும் உயர்த்தும் தூய நேசம்; சின்ன ஏக்கங்கள் கூட இல்லாமல் நிறைவாக்குதல்னு ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிட்டாங்க.

எந்த அங்கீகாரமும் மிருதனுக்குக் கிடைக்கக்கூடாதுனு தடுத்த மகேந்திரன், இனி தனக்குரிய உரிமையைக்கூட கேட்க முடியாத இடத்தில்... சபாஷ் மிருதா👍

லவ்லி எபி @RamyaRaj sis.
அதுதானே வாழ்க்கை யின் அடிப்படை தார்ப்பரியமே❤❤❤ அந்த புரிதல் வாழ்க்கை யை கொண்டு செல்ல எளிதாக இருக்கும். நன்றி மா❤😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் சுவாரஸ்யமான கதை....இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் கேட்கிறது...மிருதன் - மிருதி இடையே உள்ள பிணைப்பு மிகவும் அருமை...ஒவ்வொரு கதை மாந்தருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைத்த விதம் அருமை...
விரிவாக கொடுக்காவிட்டாலும் சம்பூர்ணவதி மிருதன் இடையே உள்ள பாசம் நெஞ்சில் நீங்காமல் நிற்கிறது...

இந்த கதை மனதுக்கு நெருக்கமாக அமைய மற்றொரு காரணமாக நான் பார்ப்பது நீங்கள் இடைவிடாமல் கொடுத்த அத்தியாயங்கள்...பதிவுகள் தொடர்ந்து எழுத எந்தளவு கடின உழைப்பு தேவை என்பது புரிந்து கொள்ள முடிகிறது...உங்கள் கடின உழைப்புக்கு பலன் தரும் வகையில் மிகவும் நன்றாக இந்த கதை அமைந்துள்ளதாக எண்ணுகிறேன்...
மென்மேலும் வளர்க
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤

உங்கள் எண்ணங்களை மிக அழகாக சொல்லி எழுத்தாளர் எனக்கு மிக பெரிய ஓர் உத்வேகத்தை கொடுத்து இருக்கீங்க❤😍❤😍 மிக மிக மிகுந்த நன்றிமா❤😍 இந்த கதை உங்களை கவர்ந்ததில் எனக்கு அலாதி மகிழ்வு
 
Top