மகிழ்மதியின் அரசன்!!!
Royal based romantic thriller
(Completed- Now available for kindle readers)
காதல், ரொமான்ஸ், ஊடல், கூடல், மகிழ்ச்சி, ஏமாற்றம், ஆக்ஷன், அரச குடும்பம், ராஜ தந்திரங்கள், சஸ்பென்ஸ், திரில்லர், காமெடி, குடும்பம், நட்பு என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த கலவை...
நாயகன்= Prince துருவ் நக்ஷத்திரன் யதுவீர் சாம்ராட். (Founder of Yaduveer Groups)
நாயகி = Business Lawyer மகிழ்மதி ஹரிக்கிருஷ்ணா.
கதைச் சுருக்கம்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரகஸ்தபுரி சமஸ்தானத்தின், இன்றைய இளவரசன் "துருவ் நக்ஷத்திரன் யதுவீர் சாம்ராட்"-யிற்கும்..
கிட்டத்தட்ட 13,000 கிலோமீட்டருக்கு அப்பால் வசிக்கும், அமெரிக்காவை சேர்ந்த, இந்திய வம்சாவளியை கொண்ட, வணிகவியல் வழக்கறிஞர், "மகிழ்மதி ஹரிகிருஷ்ணா"- விற்கும் இடையில் உருவாக போகும் பந்தமே எனது "மகிழ்மதியின் அரசன்" படைப்பு.
மெல்லிய கீதமான அரசனவனின் வாழ்வில், அதிரடியான மகிழ்மதி சத்தமின்றி அவனுள் நுழைந்து, அவனை வென்று, பல யுத்தங்களை சந்தித்து, தன் சிரசில் அவனை மகுடமாய் சூட்டிக்கொள்ளும் காதல் காவியம்.
பிறந்ததில் இருந்து, அன்பு, பாசம், அக்கறை என்று நேசத்திற்கான அறிகுறி துளியும் இல்லாமல் வளரும் துருவ்..
அதே பாசம், அன்பு திகட்ட திகட்ட அனுபவித்து வளர்ந்த பெண்ணவவள் மகிழ்மதி..
ஆளுமையிலும் சரி, அழகிலும் சரி, அவனுக்கு நிகரானவள் இவள்..
இருவரும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தால் ??
Keywords, #Lawyer_romance, #Prince_romance, #Revenge, #Diplomacy, #Friendship, #Fight for throne,
வாசிக்க
Elegant, Royal, Love, Romance, Comedy, Friendship, Suspense, Action based Happy Ending Novel.
Kindle
" மகிழ்மதியின் அரசன்"
[
ROYAL FAMILY BASED ROMANCE STORY
]
India
Amazon.in
USA
Amazon.com
Canada
Amazon.ca
UK
Amazon.co.uk
Australia
மகிழ்மதியின் அரசன்: Magizmathiyin Arasan (Tamil Edition) eBook : சுவாதி லக்ஷ்மி, Swathi Lakshmi: Amazon.com.au: Kindle Store
வாசகரின் விமர்சனம்: 1
அரியாசனத்திற்கென்றே வளர்க்கப்பட்ட இளவரசன்!!!
பல தடைகளை தாண்டி, அவனுக்கே என்றே படைக்கப்பட்ட மகிழ்மதியின், அரசனாக எவ்வாறு
முடிசூட்டிக் கொள்கிறான் என்பதே இந்த மகிழ்மதியின் அரசன்!!
பிறந்ததில் இருந்து, அன்பு, பாசம், அக்கறை என்று நேசத்திற்கான அறிகுறி துளியும் இல்லாமல் வளரும் துருவ்..
அதே பாசம், அன்பு திகட்ட திகட்ட அனுபவித்து வளர்ந்த பெண்ணவவள் மகிழ்மதி..
ஆளுமையிலும் சரி, அழகிலும் சரி, அவனுக்கு நிகரானவள் இவள்..
இருவரும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தால் ??
மீதி கதையைக் கேட்கத்தான் வேண்டுமா!!
அள்ள அள்ள குறையாத, அட்சய பாத்திரமாய், இவர்கள் காதல், நாளுக்கு நாள் பல்கிப்பெருகி தளும்பி நிற்கிறதே.
அணையை உடைத்து வெளியேறும் வெள்ளமாய், இவர்கள் கொண்ட காதலின் கணம் காணாது, தொடக்கூடாத எல்லையை தொட்டு கரைந்த காதலர்கள் இவர்கள்.
வசுந்தரா தேவி,
தன் எண்ணங்கள் ஈடேற எந்த எல்லைக்கும் செல்பவள். ஏன் தன் உதிரத்தை கூட உதிர்க்க தயங்காதவள்..
இவள் வயதிற்கு முன்பும்!!
ஆசைகளுக்கு முன்பும்!!
அனுபவங்களுக்கு முன்பும்!!
அகங்காரதிற்கு முன்பும்!!
புத்திசாலிதனத்தின் முன்பும்!!
இக்காதல் பறவைகள், கடலில் கலந்த கடுகாய் தொலைந்து தான் போயின..
இவ்வஞ்சகியின், நயவஞ்சக செயலால், இந்த இளம் சிட்டுக்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்சமா நஞ்சமா.
இச்சதிகாரியோடு, காதல் தேவதையும் தான் கூட்டணி வைத்து கொண்டதோ.
மகிழ்மதி இவள் உடம்பில் விழுந்த ஒவ்வொரு அடியையும், தன் இதயத்தில் தாங்கி நின்ற கண்ணாளன் அல்லவா இந்த துருவ் நட்சத்திரன்.
இவன் மீள்வது எப்பொழுது ??
மீண்டு தன் இணையுடன் சேர்வது எப்பொழுது??
முடியா இரவு, ஓர் நாள் முடிய தானே வேண்டும்.
விடியா பகல், ஒரு நேரம் விழிக்கத் தானே வேண்டும்.
அதர்மம் மண்ணோடு மண்ணாக அழிந்து போகவும்.
தர்மம் தழைத்தோங்கி நிமிர்ந்து நிற்கவும்.
கால மாற்ற சுழற்சி தேவைப்பட்டதோ இந்த நீதி தேவதைக்கு.
மைத்ரேயி,
என்ன பெண்ணவள் இவள்!!
பிரமிக்க வைக்கிறாள்!!
இவள் பாசம் மீதூறிய நக்ஷத்திரத்தை, எரி கற்கள் உரசி செல்லும் போதும் கூட, பக்க பலமாய் துணை நின்று, அவன் விரும்பிய நிலவை அவனுக்கு சாத்தியமாக்கிய தேவதை பெண் அல்லவோ இவள்.
ஆக மொத்தத்தில், மகிழ்மதியின் அரசனும் சரி,
நட்சத்திரத்தை மையமாக சுற்றி சுழலும் வெண்மதியும் சரி..
ஏழ் பிறப்பிற்கும் இவன் கொண்ட சொந்தம் இவள் தானே!!
அண்டம் உள்ளவரை இவள் கொண்ட ஆதாரம் இவன் தானே!!
வாசகரின் விமர்சனம்: 2
துருவ் நட்சத்திரன்:
இன்னும் வெட்டி எடுக்கப்படாத வைரம்..
அரியணைக்காக பட்டை தீட்டப்பட்ட பகடை..
அன்பின் அரிச்சுவடி அறியா அபலை..
சுதந்திர காற்றை சுவாசிக்கா சூரியன்…
உலகை ஆளும் வலு கொண்ட வேங்கை...
தன் உள்ளமதை ஊழி சூழ ஆளத் தெரியாதவன்...
கள்ளம் கபடமில்லா காதலில்
மகிழ்வை உடைமையாக்கி
மதியை காக்க
விதியிடம் தோற்று
சதியில் சிக்கி கொண்டவன்..
காதலி வந்த பிறகே..
வாழ்வின் மகிழ்வை கண்டவன்..
தன் தந்தையின் முடிசூடா ராணி அவளை..
முடிசூட்டி தன்னில் பாதியாக்கி..
அவளில் மீதியை கண்டவன்..
மிச்சம் வைக்காமல் உச்சம் கண்டவன்..
எச்சம் வைக்காது
அவள் மச்சம் கண்டவன்..
பேராசைக்கொண்டு
பிணம் தின்னும் கழுகின் கதை முடிக்க..
நவீன வாள் கொண்டு...
நங்கை நின்றாள் காளி அவதாரம் கொண்டு....
சதி ராணியின் சதுரங்க ஆட்டத்தில்,
எதிர் ராணியாய் களமிறங்கி,
தன் ராஜனைக் காக்க, ராஜாளியாய்
எதிர்த்து நின்று,
பகை முடித்து பட்டம் சூட்டிக் கொண்டாள்,
நக்ஷத்திரனின் ராணியாக…
**********
வாசிக்கும் தோழமைகள் தங்களின் கருத்துக்களை மற்றும் ஸ்டார்களை, ஆரோக்கியமான முறையில் அமேசான் கிண்டில் ஆப்பிலேயே பகிரும் மாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் நட்புடன்,
சுவாதி லக்ஷ்மி (Swathi Lakshmi),
நன்றி.