“ராஜா உன் அம்மாவையும் தங்கையையும் பார்த்து இப்படி பேச எப்படி உனக்கு மனசு வந்தது? நீயா இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கிற???” என வினவினார் கஜேந்திரன்.
நக்கலாகச் சிரித்து விட்டு “நான் என்ன பொட்டப் பயலா! பொண்டாட்டியக்
கண்ணீர் விடவிட்டு வேடிக்கைப் பார்க்க! நான் ஆம்பளை! என் பொண்டாட்டி தல முடிய அவ பிடிச்சி உலுக்கி என்ன வாக்கியம் பேசினா?? அவள பிடிச்சி கன்னத்தில இரண்டு குடுத்திருந்தா நீர் பெரிய மனுசன்!! என் பொண்டாட்டிய பார்த்து கண்ட கண்ட தெருவுல பொறுக்குற நாயினு இதோ என்னய பெத்தேன் சொல்லிக்கிட்டு ஒருத்தி நிக்கிறாங்களே இந்த புண்ணியவதி சொல்லும் போது எப்படி இப்படி பேசலாம்னு கேட்டிருந்தா நீங்க பெரிய்ய்ய்ய மனுசன்! ஆனா இது எதையும் நீங்க செய்யலையே! ம்ம்ம்ம்ம் ஏன்? நான் அடிச்சதும் பேசினது மட்டும் கண்ணுக்குத் தெரியுது?? அவளுங்க செஞ்சதெல்லாம் கண்ணுக்கு புலப்படுலை. உங்க வீட்டு பொம்பளைங்க மட்டும் வெள்ள கட்டி, அடுத்தவன் பொண்டாட்டி மழையில கரையிற உப்புக் கல்லா???” என உறுமியபடி வினவினார் ராஜேந்திரன்.
கஜேந்திரனுக்கு பேரன் கூறிய “நான் என்ன பொட்டப் பயலா பொண்டாட்டியக் கண்ணீர் விடவிட்டு வேடிக்கைப் பாக்க?” என்கிறக் கேள்வி தனக்கானதோ என்று எண்ணித் துணுக்குற்றார். பேரனின் இந்த ரூபம் அவருக்குப் புதிது. “நீ பெரிய மனிசன் இல்லை” எனப் பேரன் சொல்லாமல் சொல்லிவிட்டதில் அவர் கொதித்துப் போயிருந்தார். அதோடு “உங்க வீட்டு பொம்பளங்க” எனப் பேரன் தன்னை அன்னியப் படுத்திக் கொண்டதை மனதினுள் குறித்துக் கொண்டார். பேரனின் கொதிப்பின் முன் எவராலும் இப்பொழுது நிற்க இயலாது என்பதனை தெளிவாகப் புரிந்து கொண்டவர், இந்தப் பிரிச்சனையை எப்படிக் கையாள்வது எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
ராஜேந்திரன் தன் விரல்களைச் சொடுக்கி, தன் மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டு “இவள் என் மனைவி சுகுணா. நான் தான் சுகுணா, சுகுணா தான் நான். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்! இன்னைக்கு நடந்த மாதிரி யாராவது அவகிட்ட அத்துமீறி நடந்துக்கிட்டா, வெட்டி பொலிப் போட்டுவேன், ஜாக்கிரதை!” எனக் கடுமையாக எச்சரித்து விட்டுத் தன் மனையாளுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
சுகுணா கணவனின் ருத்ர அவதாரத்தில் வெளு வெளுத்துப் போயிருந்தாள். அதனால் சாவிக் கொடுத்த பொம்மையைப் போல ராஜேந்திரனுடன் சென்றாள்.
உள்ளேச் சென்ற ராஜேந்திரன் தனது பாட்டி சிவகாமியின் படத்தின் முன் மனைவி சுகுணாவுடன் பணிந்து எழுந்தார். சுகுணாவை தனக்கு மனைவியாய் அளித்தமைக்கு சிவகாமிக்கு மனதினில் நன்றிக் கூறிக் கொண்டிருந்தார். பின்பு பூஜை அறையில் சென்று தெய்வங்களை வணங்கிவிட்டு புது மனைவியை விளக்கேற்றும்படி வேண்டினார்.
இவை யாவையும் மொத்தக் குடும்பமும், வேலையாட்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். சிவகாமியின் படத்தின் முன் பேரன் விழுந்து எழுந்தது கஜேந்திரனின் முகத்தைச் சுளிக்க வைத்தது. தர்மேந்திரன் இதற்கு இடையில் அலுவலகத்தில் இருந்து பறந்து வந்துவிட்டார். மகனின் இந்தச் செயலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேகவதி மெல்லியக் குரலில் நடந்தவற்றைக் கணவனிடம் ஒப்புவித்தார். மகளின் நிலையைப் பார்த்த தர்மேந்திரனின் ரத்தம் கொதித்தது. ஆனால் பதறினால் காரியம் சிதறி விடும் என்பதால் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மகனுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்காகக் காத்திருந்தார்.
பூஜையறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திரன் தன் மனைவியுடன் யாரையும் கண்டுக் கொள்ளாது மாடிப் படிகளை நோக்கி நடந்தார். கஜேந்திரன் வாய் திறக்கும் முன் அவரை அமரும் படி செய்கை செய்துவிட்டு, தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டு தன் மகனை “ராஜேந்திரா” என்று அழைத்தார் தர்மேந்திரன். மனைவியையும் மகளையும் அமரச் சொன்னவர், வேலையாட்களை நோக்கி அர்த்தப் பார்வையை வீசினார். அவரது கூரியப் பார்வைக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டுனர் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டு. ராஜேந்திரன், தான் பற்றிய மனைவியின் கரத்தை விடவும் இல்லை, நின்றவர் திரும்பி பார்க்கவுமில்லை.
“ராஜேந்திரா இப்படி நின்னா என்ன அர்த்தம்? வா இங்க வந்து உக்காரு. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்றார் தர்மேந்திரன். மனைவியின் கரத்தை விடாது பற்றிக் கொண்டு அவர்கள் யாவரும் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் மனைவியின்த் தோள்களை அணைத்தவாறு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டார்.
மகனின் இந்தத் தோரணைப் புதிது. எவரின் முன்பும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர மாட்டான், அது மரியாதை இல்லை என்று எண்ணுபவன். அதுவும் தந்தை மற்றும் தாத்தாவின் முன் கண்டிப்பாக இதுவரை இப்படியொரு தோரணையில் அமர்ந்ததில்லை. இன்று அமர்ந்து விட்டான்! இது எதனைக் குறிக்கிறது? அதுவும் மனைவி என்று எவளையோ ஒருத்தியை அருகில் அமர்த்திக் கொண்டு அவளின் தோள்களை அணைத்தவாறு, அவளை அடைகாப்பவன் போல! என்னையன்றி யாரும் என் மனைவியை நெருங்க முடியாது என்பதனை சொல்லாமல் சொன்னது அவன் தோரணை. தர்மேந்திரனுக்காப் புரியாது!! அவர் பற்களை நறநறத்தார்.
“என்ன ராஜேந்திரா தோரணையல்லாம் புதுசா இருக்கு! எங்க இருந்து
கத்துக்கிட்ட இந்த புது பழக்கத்தை எல்லாம்? எங்க முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்காருர பழக்கத்தை எல்லாம்? யாரு கத்துக் கொடுத்தா இதை எல்லாம் உனக்கு?” என சுகுணாவை பார்வையால் சுட்டவாறு வினவினார் தர்மேந்திரன்.
சுகுணா எவரின் பார்வையும் சந்திக்கும் திராணியற்று பயந்து தலை குனிந்து அமர்ந்திருந்தார். சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டு “ம்ம்ம்ம் ஏன் நான் தோரணையா இருந்தா உங்களுக்கு காணாதா? அப்புறம் என்ன கேட்டிங்க? ஆங்! கால் மேல் கால் போட்டு உட்காருர பழக்கத்தை சத்தியமா இந்த வீட்டுல தான் கத்துக்கிட்டேன். என்ன அப்படி பாக்குறிங்க? உங்க பொண்டாட்டியும் மகளும் தான் ஸ்டைலா, ராயலா எல்லார் முன்னாடியும் கால் மேல் கால் போட்டு உட்காருவாங்க. இதோ இப்பவும் அப்படி தான் உக்காந்து இருக்காங்க. நீங்க வேணா கொஞ்சம் திரும்பி பாருங்களேன்.” என்றார் ராஜேந்திரன் நக்கலில் குரலில்.
தர்மேந்திரன் சட்டென தலையைத் திருப்பி தன் மனைவியும் மகளையும் பார்த்தார். அவர்கள் அவ்வாறு தான் அமர்ந்திருந்தனர். மகன் கேலியாக சொன்ன பிறகும் கீழே காலை இறக்கும் நோக்கம் அவர்களுக்குத் தெரிவதாக இல்லை.
“என்ன பார்த்தாச்சா? அப்ப நான் தோரணையா கால் மேல் கால் போட்டு
உட்கார்ரது தான் உங்க பிரச்சனை இல்லையா? எப்பவும் அடங்கி ஒடுங்கி உங்க காலுக்கு கீழே கிடக்கனும்னு நினைக்கிறிங்களா?? ம்ம்ம்ம்! அப்படியொரு நினைப்பு இருந்தா அதை அடியோட மனுசல இருந்து அடியோடு அழிச்சிடுங்க, அது தான் எல்லாருக்கும் நல்லது” என அழுத்திச் சொன்னார் ராஜேந்திரன்.
“அவங்க எப்பவும் அப்படி தான் ராஜேந்திரா, ஆனா நீ அப்படி இல்லையே! எல்லாம் புதுசா இருக்கே அதான் ஏன் அப்படின்னு கேக்குறேன்???” என அமைதியாக வினவினார் தர்மேந்திரன்.
“மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது. கேள்விப்பட்டது இல்லையா?? இங்க நிறையப்பேர் சுழ்நிலைக்குத் தகுந்தாற்படித் தங்களை மாத்திக்கிறாங்க. பச்சோந்தி மாதிரி!! மாத்தி மாத்தி பேசுராங்க. அவங்களை எல்லாம் கம்பேர் பண்ணும் போது நான் எதுவுமே செய்யலியே.” எனத் தன் தாத்தாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி முகத்தில் ஆச்சர்யத்தைக் காட்டி வினவினார் ராஜேந்திரன்.
தர்மேந்திரன் அந்த சாடைப் பார்வைச் சென்ற திசையில் அமர்ந்திருந்த தந்தையை, யோசனையுடனும் ஆராய்ச்சியுடனும் நோக்கினார். முகம் சிவுசிவுக்க அமர்ந்திருந்த கஜேந்திரன், மகனின் ஆராய்ச்சிப் பார்வையை கவனித்து விட்டுச் சட்டென ஒன்றும் அறியாதவர் போல் முகத்தை வைத்துக் கொண்டார். ராஜேந்திரன் தன் தாத்தாவின் முக மாறுதலைக் கவனித்து விட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
கஜேந்திரன் கொதித்துப் போயிருந்தார். பேரன் தன்னைத் தொடர்ந்து சீண்டுவதாகவே எண்ணினார். “நேத்து பேஞ்ச மழையில முளைச்சக் காளா(ன்) இவன், எனக்கே வேட்டு வைக்கிறானா!! இருடா நான் உனக்கு வெடிகுண்டே வைக்கிறேன்” எனப் மனதினுள் பேரனைக் கருவிக் கொண்டு பகைமைப் பாராட்டினார்.
கஜேந்திரன் மகனின் ஆராய்ச்சிப் பார்வையில் இருந்துத் தப்பித்துக் கொள்ள “தர்மா இங்க என்ன நடந்திருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு அவனை ஏன் தோரணையா உக்காந்தி இருக்கன்னு கேள்விக் கேக்குற! இப்ப அது ரொம்ப முக்கியமா???” எனக் கண்டிப்புடன் வினவினார்.
தர்மேந்திரன் மகன் பக்கம் திரும்பி “ராஜேந்திரா உனக்கு நீ யாருன்னு தெரியும் தானே??? எப்படி இவ வலையில விழுந்த??? பெண் பித்துப் பிடிச்சிடுச்சா உனக்கு??? அப்படி பிடிச்சிருந்தா உன் தேவைதைத் தீர்த்துக்கக் காசுத் தூக்கிப் போட்டா ஆயிர(ம்) பேரு வருவாளுங்க, அவளுங்கக்கிட்ட போக வேண்டிய தானே?? அத விட்டுட்டு கல்யாணம் அது இதுன்னு. ராஜ பரம்பரையில் பிறந்தப் பொண்ண உனக்கு சம்பந்தம் பேசி முடிச்சாச்சி. உன் முன்னாடி தானே சம்பந்தம் பேசினோம்? இப்ப ஒன்னும் தெரியாதவன் மாதிரி எவளையோத் தெருவில் போகிறவளைக் கூட்டி வந்து பொண்டாட்டினு சொன்னா, நாங்க அப்படியே பூரிச்சிபோய் பல்லை இளிச்சிட்டு “வாழ்க வளமுடனு” அட்சதை தூவி ஆசிர்வாதம் பண்ணனுமா??? எங்களைப் பாத்தா இளிச்சவாய்ங்க மாதிரி தெரியுதா உனக்கு?” எனக் காட்டமானக் குரலில் வினவினார்.
சுகுணாவுக்கு கண்கள் நிறைந்துவிட்டன. அவள் உடல் ஆடிற்று. அவள் வாழ்நாளில் இப்படிப்பட்ட வார்த்தைகளை இதுவரை செவிமடுத்தது இல்லை. தவறு செய்தாலும் அதை அமைதியுடன் எடுத்துச் சொல்லும் பெற்றோருக்குப் பிறந்தவள். இரு அண்ணன்களின் செல்லத் தங்கை. பாட்டி தாத்தாவிற்கு பாசமிகுப் பேத்தி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த அவளை என்னவெல்லாம் சொல்லிவிட்டார்கள். அப்பப்பா! தாங்க இயலவில்லையே!
“உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!!!”
ராஜேந்திரன் கோபத்தில் மூக்கு விடைக்கப் பல்லைக் கடித்தார், இவர்களை!!!!! “வலை வீசறது, வலைப் போட்டுப் பிடிக்கிறது எல்லாம் உங்கக் குடும்பத்து வேலை. நான் எங்க பாட்டி சிவகாமி மாதிரி ரொம்ப நல்லவன். சில களவானிப் பசங்க மாதிரி இவ தான் என்ன மயக்குனான்னு பிற்காலத்தில பொய் சொல்ல மாட்டேன். நான் தான் இவகிட்ட மயங்கி இவளைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சேன்.
எனக்கு பெண் பித்துப் பிடிக்கலை, இனிமேலும் பிடிக்காது. ஏனா, நான் ஏகப் பத்தினி விரதன். எங்கிட்ட எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. அது தொழில் வட்டாரத்துல கூடத் தெரியும். நீங்களும் உங்க அப்பாவும் எத்தனை பொண்ணுங்களுக்குக் காசத் தூக்கிப் போட்டு இருக்கிங்க?? சுமார் 1000 பேர் இருப்பாங்களா!! நான் வேணா ஹோட்டல்ஸ் பெயரை எல்லாம் ஞாபகப்படுத்தவா? வெளியூர் கூடப் போறது உண்டு போல?? உங்க மகளோட கலேஜ் மேட் கூடப் போன வாரம் போனிங்களே கோவா ரிசார்டுக்கு, மறந்துப் போச்சா!!!
நான் சட்டப்படி கல்யாணம் பண்ணிருக்கேன், எவனாலயும் எங்களை ஒன்னும் பண்ணமுடியாது. அப்புறம் என்னக் கேட்டிங்க ராஜ குடும்பத்து சம்பந்தமா? என்னைக் கேட்டிங்களா? எனக்கு பிடிச்சிருக்கானுக் கேட்டிங்களா? நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணினா! நான் என்ன பொருளா??? மகாராணி அவக் கேட்டானுத் தூக்கிக் கொடுக்கிறிங்க. இதுக்குப் பேரு என்னத் தெரியுமா???
உங்களை மாதிரி ஒருத்தியக் காதலிச்சிட்டுப் பணத்துக்காக வேற ஒருத்தியக் கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது. மனசுக்கப் பிடிச்சவளோட வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு, திறமையா சம்பாதிக்கிறவன் தான் உண்மையான ஆம்பளை. நான் உண்மையான ஆம்பளையா இருக்கேன். இருப்பேன்..
உங்களை யாரையும் எங்களை வாழ்த்தச் சொல்லலியே! என்னோட டிகிரி செர்டிஃபிகெட்ஸ எடுக்க வந்தேன். நான் பார்க் டைம் வேலைப் பார்த்து தான் எட்டாவுதல இருந்து படிச்சேன் தெரியுமா??? உங்க கம்பெனியில நான் பார்த்த வேலைக்கானச் சம்பளத்தை நீங்க கொடுக்கலை. அது இங்க நான் தங்கினதுக்கும் சாப்பிடதுக்கும் எல்லாத்துக்கும் சேர்த்து கழிச்சிடுங்க.
என் பொண்டாட்டியோட இங்க நிம்மதியா இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதோட எங்களுக்குப் புள்ளைங்கப் பிறந்தா அவங்க உங்களை மாதிரி சுயநலம் பிடிச்சப் பணப் பேய்களா இருக்கக் கூடாது பாருங்க! அதனால தான் நான் தனியா போறேன். உங்க சொத்து சுகங்கள் எதுலையும் எனக்குப் பங்கு வேண்டாம். உங்க ஆசை மகளுக்கே எல்லாத்தையும் கொடுங்க. லீகல் டாக்குமண்ட்ஸ் ரெடிப் பண்ணுங்க எல்லாத்துலையும் நான் சைன் பண்ணிடறேன்.
ஏதோ ஒருக் குக்கிராமத்துல பிறந்த குடிப்பெயர்ந்து வந்த மிஸ்டர் கஜேந்திரனும் என் பாட்டி சிவகாமியும் இங்க வந்து வாழ்ந்து காட்டலையா! சாரி மிஸ்டர் கஜேந்திரன் மட்டும் தான் சந்தோசமா வாழ்ந்தாரு. என் பாட்டி ஒரு வினாடிக் கூட சந்தோசம் நிம்மதியும் இல்லாம வாழ்ந்தாங்க. நான் மிஸ்டர் கஜேந்திரனும் இல்லை, என் மனைவி சிவகாமியும் இல்லை. என் பாட்டி சிவகாமி வாழாத சந்தோசமான வாழ்க்கையையும் என் மனைவி சுகுணா சேர்த்து வாழப்போறா என்னோட.
“எலி வலையா இருந்தாலும் தனி வலை வேணும்”. எனக்கே எனக்கான வீட்டில் நான் ராஜாவாவும் என் மனைவி மகாராணியாவும் எங்க பிள்ளைங்களோட நான் சந்தோசமா இருக்கப் போறேன்.
அப்புறம் என் பொண்டாட்டியை அவ இவன்னு சொன்னதுக்கு பல்லத் தட்டிக் கையில குடுத்துருப்பேன். ஆனால் திருந்தாத ஜென்மங்களுக்கு கிலாஸ் எடுக்க என்னால முடியாது, அதுக்கு நான் ஆளும் இல்லை. எப்படியோ போங்க! என்ன ஆள விட்டாப் போதும் .
சுகுணாமா வாடா மேலப் போய் என் திங்கஸ் எடுத்துட்டு நம்ம கிளம்பலாம். பக்கத்துல எதாவது ஹோட்டலில் லன்ச் முடிச்சிக்கலாம். சரியாடா..” என மனைவியிடம் பேசியபடி விறுவிறு என மாடியேறிச் சென்றுவிட்டார்.
நக்கலாகச் சிரித்து விட்டு “நான் என்ன பொட்டப் பயலா! பொண்டாட்டியக்
கண்ணீர் விடவிட்டு வேடிக்கைப் பார்க்க! நான் ஆம்பளை! என் பொண்டாட்டி தல முடிய அவ பிடிச்சி உலுக்கி என்ன வாக்கியம் பேசினா?? அவள பிடிச்சி கன்னத்தில இரண்டு குடுத்திருந்தா நீர் பெரிய மனுசன்!! என் பொண்டாட்டிய பார்த்து கண்ட கண்ட தெருவுல பொறுக்குற நாயினு இதோ என்னய பெத்தேன் சொல்லிக்கிட்டு ஒருத்தி நிக்கிறாங்களே இந்த புண்ணியவதி சொல்லும் போது எப்படி இப்படி பேசலாம்னு கேட்டிருந்தா நீங்க பெரிய்ய்ய்ய மனுசன்! ஆனா இது எதையும் நீங்க செய்யலையே! ம்ம்ம்ம்ம் ஏன்? நான் அடிச்சதும் பேசினது மட்டும் கண்ணுக்குத் தெரியுது?? அவளுங்க செஞ்சதெல்லாம் கண்ணுக்கு புலப்படுலை. உங்க வீட்டு பொம்பளைங்க மட்டும் வெள்ள கட்டி, அடுத்தவன் பொண்டாட்டி மழையில கரையிற உப்புக் கல்லா???” என உறுமியபடி வினவினார் ராஜேந்திரன்.
கஜேந்திரனுக்கு பேரன் கூறிய “நான் என்ன பொட்டப் பயலா பொண்டாட்டியக் கண்ணீர் விடவிட்டு வேடிக்கைப் பாக்க?” என்கிறக் கேள்வி தனக்கானதோ என்று எண்ணித் துணுக்குற்றார். பேரனின் இந்த ரூபம் அவருக்குப் புதிது. “நீ பெரிய மனிசன் இல்லை” எனப் பேரன் சொல்லாமல் சொல்லிவிட்டதில் அவர் கொதித்துப் போயிருந்தார். அதோடு “உங்க வீட்டு பொம்பளங்க” எனப் பேரன் தன்னை அன்னியப் படுத்திக் கொண்டதை மனதினுள் குறித்துக் கொண்டார். பேரனின் கொதிப்பின் முன் எவராலும் இப்பொழுது நிற்க இயலாது என்பதனை தெளிவாகப் புரிந்து கொண்டவர், இந்தப் பிரிச்சனையை எப்படிக் கையாள்வது எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
ராஜேந்திரன் தன் விரல்களைச் சொடுக்கி, தன் மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டு “இவள் என் மனைவி சுகுணா. நான் தான் சுகுணா, சுகுணா தான் நான். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்! இன்னைக்கு நடந்த மாதிரி யாராவது அவகிட்ட அத்துமீறி நடந்துக்கிட்டா, வெட்டி பொலிப் போட்டுவேன், ஜாக்கிரதை!” எனக் கடுமையாக எச்சரித்து விட்டுத் தன் மனையாளுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
சுகுணா கணவனின் ருத்ர அவதாரத்தில் வெளு வெளுத்துப் போயிருந்தாள். அதனால் சாவிக் கொடுத்த பொம்மையைப் போல ராஜேந்திரனுடன் சென்றாள்.
உள்ளேச் சென்ற ராஜேந்திரன் தனது பாட்டி சிவகாமியின் படத்தின் முன் மனைவி சுகுணாவுடன் பணிந்து எழுந்தார். சுகுணாவை தனக்கு மனைவியாய் அளித்தமைக்கு சிவகாமிக்கு மனதினில் நன்றிக் கூறிக் கொண்டிருந்தார். பின்பு பூஜை அறையில் சென்று தெய்வங்களை வணங்கிவிட்டு புது மனைவியை விளக்கேற்றும்படி வேண்டினார்.
இவை யாவையும் மொத்தக் குடும்பமும், வேலையாட்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். சிவகாமியின் படத்தின் முன் பேரன் விழுந்து எழுந்தது கஜேந்திரனின் முகத்தைச் சுளிக்க வைத்தது. தர்மேந்திரன் இதற்கு இடையில் அலுவலகத்தில் இருந்து பறந்து வந்துவிட்டார். மகனின் இந்தச் செயலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேகவதி மெல்லியக் குரலில் நடந்தவற்றைக் கணவனிடம் ஒப்புவித்தார். மகளின் நிலையைப் பார்த்த தர்மேந்திரனின் ரத்தம் கொதித்தது. ஆனால் பதறினால் காரியம் சிதறி விடும் என்பதால் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மகனுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்காகக் காத்திருந்தார்.
பூஜையறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திரன் தன் மனைவியுடன் யாரையும் கண்டுக் கொள்ளாது மாடிப் படிகளை நோக்கி நடந்தார். கஜேந்திரன் வாய் திறக்கும் முன் அவரை அமரும் படி செய்கை செய்துவிட்டு, தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டு தன் மகனை “ராஜேந்திரா” என்று அழைத்தார் தர்மேந்திரன். மனைவியையும் மகளையும் அமரச் சொன்னவர், வேலையாட்களை நோக்கி அர்த்தப் பார்வையை வீசினார். அவரது கூரியப் பார்வைக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டுனர் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டு. ராஜேந்திரன், தான் பற்றிய மனைவியின் கரத்தை விடவும் இல்லை, நின்றவர் திரும்பி பார்க்கவுமில்லை.
“ராஜேந்திரா இப்படி நின்னா என்ன அர்த்தம்? வா இங்க வந்து உக்காரு. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்றார் தர்மேந்திரன். மனைவியின் கரத்தை விடாது பற்றிக் கொண்டு அவர்கள் யாவரும் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் மனைவியின்த் தோள்களை அணைத்தவாறு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டார்.
மகனின் இந்தத் தோரணைப் புதிது. எவரின் முன்பும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர மாட்டான், அது மரியாதை இல்லை என்று எண்ணுபவன். அதுவும் தந்தை மற்றும் தாத்தாவின் முன் கண்டிப்பாக இதுவரை இப்படியொரு தோரணையில் அமர்ந்ததில்லை. இன்று அமர்ந்து விட்டான்! இது எதனைக் குறிக்கிறது? அதுவும் மனைவி என்று எவளையோ ஒருத்தியை அருகில் அமர்த்திக் கொண்டு அவளின் தோள்களை அணைத்தவாறு, அவளை அடைகாப்பவன் போல! என்னையன்றி யாரும் என் மனைவியை நெருங்க முடியாது என்பதனை சொல்லாமல் சொன்னது அவன் தோரணை. தர்மேந்திரனுக்காப் புரியாது!! அவர் பற்களை நறநறத்தார்.
“என்ன ராஜேந்திரா தோரணையல்லாம் புதுசா இருக்கு! எங்க இருந்து
கத்துக்கிட்ட இந்த புது பழக்கத்தை எல்லாம்? எங்க முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்காருர பழக்கத்தை எல்லாம்? யாரு கத்துக் கொடுத்தா இதை எல்லாம் உனக்கு?” என சுகுணாவை பார்வையால் சுட்டவாறு வினவினார் தர்மேந்திரன்.
சுகுணா எவரின் பார்வையும் சந்திக்கும் திராணியற்று பயந்து தலை குனிந்து அமர்ந்திருந்தார். சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டு “ம்ம்ம்ம் ஏன் நான் தோரணையா இருந்தா உங்களுக்கு காணாதா? அப்புறம் என்ன கேட்டிங்க? ஆங்! கால் மேல் கால் போட்டு உட்காருர பழக்கத்தை சத்தியமா இந்த வீட்டுல தான் கத்துக்கிட்டேன். என்ன அப்படி பாக்குறிங்க? உங்க பொண்டாட்டியும் மகளும் தான் ஸ்டைலா, ராயலா எல்லார் முன்னாடியும் கால் மேல் கால் போட்டு உட்காருவாங்க. இதோ இப்பவும் அப்படி தான் உக்காந்து இருக்காங்க. நீங்க வேணா கொஞ்சம் திரும்பி பாருங்களேன்.” என்றார் ராஜேந்திரன் நக்கலில் குரலில்.
தர்மேந்திரன் சட்டென தலையைத் திருப்பி தன் மனைவியும் மகளையும் பார்த்தார். அவர்கள் அவ்வாறு தான் அமர்ந்திருந்தனர். மகன் கேலியாக சொன்ன பிறகும் கீழே காலை இறக்கும் நோக்கம் அவர்களுக்குத் தெரிவதாக இல்லை.
“என்ன பார்த்தாச்சா? அப்ப நான் தோரணையா கால் மேல் கால் போட்டு
உட்கார்ரது தான் உங்க பிரச்சனை இல்லையா? எப்பவும் அடங்கி ஒடுங்கி உங்க காலுக்கு கீழே கிடக்கனும்னு நினைக்கிறிங்களா?? ம்ம்ம்ம்! அப்படியொரு நினைப்பு இருந்தா அதை அடியோட மனுசல இருந்து அடியோடு அழிச்சிடுங்க, அது தான் எல்லாருக்கும் நல்லது” என அழுத்திச் சொன்னார் ராஜேந்திரன்.
“அவங்க எப்பவும் அப்படி தான் ராஜேந்திரா, ஆனா நீ அப்படி இல்லையே! எல்லாம் புதுசா இருக்கே அதான் ஏன் அப்படின்னு கேக்குறேன்???” என அமைதியாக வினவினார் தர்மேந்திரன்.
“மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது. கேள்விப்பட்டது இல்லையா?? இங்க நிறையப்பேர் சுழ்நிலைக்குத் தகுந்தாற்படித் தங்களை மாத்திக்கிறாங்க. பச்சோந்தி மாதிரி!! மாத்தி மாத்தி பேசுராங்க. அவங்களை எல்லாம் கம்பேர் பண்ணும் போது நான் எதுவுமே செய்யலியே.” எனத் தன் தாத்தாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி முகத்தில் ஆச்சர்யத்தைக் காட்டி வினவினார் ராஜேந்திரன்.
தர்மேந்திரன் அந்த சாடைப் பார்வைச் சென்ற திசையில் அமர்ந்திருந்த தந்தையை, யோசனையுடனும் ஆராய்ச்சியுடனும் நோக்கினார். முகம் சிவுசிவுக்க அமர்ந்திருந்த கஜேந்திரன், மகனின் ஆராய்ச்சிப் பார்வையை கவனித்து விட்டுச் சட்டென ஒன்றும் அறியாதவர் போல் முகத்தை வைத்துக் கொண்டார். ராஜேந்திரன் தன் தாத்தாவின் முக மாறுதலைக் கவனித்து விட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
கஜேந்திரன் கொதித்துப் போயிருந்தார். பேரன் தன்னைத் தொடர்ந்து சீண்டுவதாகவே எண்ணினார். “நேத்து பேஞ்ச மழையில முளைச்சக் காளா(ன்) இவன், எனக்கே வேட்டு வைக்கிறானா!! இருடா நான் உனக்கு வெடிகுண்டே வைக்கிறேன்” எனப் மனதினுள் பேரனைக் கருவிக் கொண்டு பகைமைப் பாராட்டினார்.
கஜேந்திரன் மகனின் ஆராய்ச்சிப் பார்வையில் இருந்துத் தப்பித்துக் கொள்ள “தர்மா இங்க என்ன நடந்திருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு அவனை ஏன் தோரணையா உக்காந்தி இருக்கன்னு கேள்விக் கேக்குற! இப்ப அது ரொம்ப முக்கியமா???” எனக் கண்டிப்புடன் வினவினார்.
தர்மேந்திரன் மகன் பக்கம் திரும்பி “ராஜேந்திரா உனக்கு நீ யாருன்னு தெரியும் தானே??? எப்படி இவ வலையில விழுந்த??? பெண் பித்துப் பிடிச்சிடுச்சா உனக்கு??? அப்படி பிடிச்சிருந்தா உன் தேவைதைத் தீர்த்துக்கக் காசுத் தூக்கிப் போட்டா ஆயிர(ம்) பேரு வருவாளுங்க, அவளுங்கக்கிட்ட போக வேண்டிய தானே?? அத விட்டுட்டு கல்யாணம் அது இதுன்னு. ராஜ பரம்பரையில் பிறந்தப் பொண்ண உனக்கு சம்பந்தம் பேசி முடிச்சாச்சி. உன் முன்னாடி தானே சம்பந்தம் பேசினோம்? இப்ப ஒன்னும் தெரியாதவன் மாதிரி எவளையோத் தெருவில் போகிறவளைக் கூட்டி வந்து பொண்டாட்டினு சொன்னா, நாங்க அப்படியே பூரிச்சிபோய் பல்லை இளிச்சிட்டு “வாழ்க வளமுடனு” அட்சதை தூவி ஆசிர்வாதம் பண்ணனுமா??? எங்களைப் பாத்தா இளிச்சவாய்ங்க மாதிரி தெரியுதா உனக்கு?” எனக் காட்டமானக் குரலில் வினவினார்.
சுகுணாவுக்கு கண்கள் நிறைந்துவிட்டன. அவள் உடல் ஆடிற்று. அவள் வாழ்நாளில் இப்படிப்பட்ட வார்த்தைகளை இதுவரை செவிமடுத்தது இல்லை. தவறு செய்தாலும் அதை அமைதியுடன் எடுத்துச் சொல்லும் பெற்றோருக்குப் பிறந்தவள். இரு அண்ணன்களின் செல்லத் தங்கை. பாட்டி தாத்தாவிற்கு பாசமிகுப் பேத்தி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த அவளை என்னவெல்லாம் சொல்லிவிட்டார்கள். அப்பப்பா! தாங்க இயலவில்லையே!
“உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!!!”
ராஜேந்திரன் கோபத்தில் மூக்கு விடைக்கப் பல்லைக் கடித்தார், இவர்களை!!!!! “வலை வீசறது, வலைப் போட்டுப் பிடிக்கிறது எல்லாம் உங்கக் குடும்பத்து வேலை. நான் எங்க பாட்டி சிவகாமி மாதிரி ரொம்ப நல்லவன். சில களவானிப் பசங்க மாதிரி இவ தான் என்ன மயக்குனான்னு பிற்காலத்தில பொய் சொல்ல மாட்டேன். நான் தான் இவகிட்ட மயங்கி இவளைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சேன்.
எனக்கு பெண் பித்துப் பிடிக்கலை, இனிமேலும் பிடிக்காது. ஏனா, நான் ஏகப் பத்தினி விரதன். எங்கிட்ட எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. அது தொழில் வட்டாரத்துல கூடத் தெரியும். நீங்களும் உங்க அப்பாவும் எத்தனை பொண்ணுங்களுக்குக் காசத் தூக்கிப் போட்டு இருக்கிங்க?? சுமார் 1000 பேர் இருப்பாங்களா!! நான் வேணா ஹோட்டல்ஸ் பெயரை எல்லாம் ஞாபகப்படுத்தவா? வெளியூர் கூடப் போறது உண்டு போல?? உங்க மகளோட கலேஜ் மேட் கூடப் போன வாரம் போனிங்களே கோவா ரிசார்டுக்கு, மறந்துப் போச்சா!!!
நான் சட்டப்படி கல்யாணம் பண்ணிருக்கேன், எவனாலயும் எங்களை ஒன்னும் பண்ணமுடியாது. அப்புறம் என்னக் கேட்டிங்க ராஜ குடும்பத்து சம்பந்தமா? என்னைக் கேட்டிங்களா? எனக்கு பிடிச்சிருக்கானுக் கேட்டிங்களா? நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணினா! நான் என்ன பொருளா??? மகாராணி அவக் கேட்டானுத் தூக்கிக் கொடுக்கிறிங்க. இதுக்குப் பேரு என்னத் தெரியுமா???
உங்களை மாதிரி ஒருத்தியக் காதலிச்சிட்டுப் பணத்துக்காக வேற ஒருத்தியக் கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது. மனசுக்கப் பிடிச்சவளோட வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு, திறமையா சம்பாதிக்கிறவன் தான் உண்மையான ஆம்பளை. நான் உண்மையான ஆம்பளையா இருக்கேன். இருப்பேன்..
உங்களை யாரையும் எங்களை வாழ்த்தச் சொல்லலியே! என்னோட டிகிரி செர்டிஃபிகெட்ஸ எடுக்க வந்தேன். நான் பார்க் டைம் வேலைப் பார்த்து தான் எட்டாவுதல இருந்து படிச்சேன் தெரியுமா??? உங்க கம்பெனியில நான் பார்த்த வேலைக்கானச் சம்பளத்தை நீங்க கொடுக்கலை. அது இங்க நான் தங்கினதுக்கும் சாப்பிடதுக்கும் எல்லாத்துக்கும் சேர்த்து கழிச்சிடுங்க.
என் பொண்டாட்டியோட இங்க நிம்மதியா இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதோட எங்களுக்குப் புள்ளைங்கப் பிறந்தா அவங்க உங்களை மாதிரி சுயநலம் பிடிச்சப் பணப் பேய்களா இருக்கக் கூடாது பாருங்க! அதனால தான் நான் தனியா போறேன். உங்க சொத்து சுகங்கள் எதுலையும் எனக்குப் பங்கு வேண்டாம். உங்க ஆசை மகளுக்கே எல்லாத்தையும் கொடுங்க. லீகல் டாக்குமண்ட்ஸ் ரெடிப் பண்ணுங்க எல்லாத்துலையும் நான் சைன் பண்ணிடறேன்.
ஏதோ ஒருக் குக்கிராமத்துல பிறந்த குடிப்பெயர்ந்து வந்த மிஸ்டர் கஜேந்திரனும் என் பாட்டி சிவகாமியும் இங்க வந்து வாழ்ந்து காட்டலையா! சாரி மிஸ்டர் கஜேந்திரன் மட்டும் தான் சந்தோசமா வாழ்ந்தாரு. என் பாட்டி ஒரு வினாடிக் கூட சந்தோசம் நிம்மதியும் இல்லாம வாழ்ந்தாங்க. நான் மிஸ்டர் கஜேந்திரனும் இல்லை, என் மனைவி சிவகாமியும் இல்லை. என் பாட்டி சிவகாமி வாழாத சந்தோசமான வாழ்க்கையையும் என் மனைவி சுகுணா சேர்த்து வாழப்போறா என்னோட.
“எலி வலையா இருந்தாலும் தனி வலை வேணும்”. எனக்கே எனக்கான வீட்டில் நான் ராஜாவாவும் என் மனைவி மகாராணியாவும் எங்க பிள்ளைங்களோட நான் சந்தோசமா இருக்கப் போறேன்.
அப்புறம் என் பொண்டாட்டியை அவ இவன்னு சொன்னதுக்கு பல்லத் தட்டிக் கையில குடுத்துருப்பேன். ஆனால் திருந்தாத ஜென்மங்களுக்கு கிலாஸ் எடுக்க என்னால முடியாது, அதுக்கு நான் ஆளும் இல்லை. எப்படியோ போங்க! என்ன ஆள விட்டாப் போதும் .
சுகுணாமா வாடா மேலப் போய் என் திங்கஸ் எடுத்துட்டு நம்ம கிளம்பலாம். பக்கத்துல எதாவது ஹோட்டலில் லன்ச் முடிச்சிக்கலாம். சரியாடா..” என மனைவியிடம் பேசியபடி விறுவிறு என மாடியேறிச் சென்றுவிட்டார்.