அனல் 3
(பொருளடக்கம்)
மணம் காண வந்தவள்
மனம் தடுமாறுவதை காண்பீர்!
மனம் பற்றி அறியா
மனம் குழப்புவதையும் காண்பீர்!
மைதிலி குளித்துவிட்டு தயாராகிய போது.. சரியாக அழைப்பு மணி அடித்தது. யார் என்றுப் பார்ப்பதற்காக கெமராவை ஆன் செய்தவள், அதில் தெரிந்தவர்களைப் பார்த்துவிட்டு… குதுகலத்துடன் கதவைத் திறந்தாள். ஏனெனில் வெளியே நின்றிருந்தவர்கள் அவளது காலேஜ் தோழிகள்! நான்கு வருடங்களுக்கு பின் பார்த்ததில் மைதிலியை அவர்கள் கொண்டாடினார்கள். அவளது அழகும் நிறமும் கூடியிருப்பதாக கூறி புகழ்ந்தார்கள். ஏன் ஃபோன் கூடப் பேசுவதில்லை.. என்று குறை கூறினார்கள். இனி தொடர்பில் இருக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்கள். பின்.. அனைவரும் கல்யாண பெண்ணின் அறைக்கு சென்றார்கள்.
அங்கு சாப்பிட்டு விட்டு.. மாலை நடைப்பெறும் வரவேற்பிற்கு தயாராக சென்றார்கள். நாம் அனைவரும் ஒரே வண்ணத்தில் உடை அணியாலாம் என்று போத்தீஸ் கடைக்கு சென்றவர்கள்.. நான்கு பேரும் ஒரே வண்ணத்தில் லெஹன்கா உடையை தேர்வு செய்தார்கள். அழகுப்படுத்துதல் என்று ஒன்று இருப்பதையே மறந்துப் போயிருந்த மைதிலிக்கு தனது தோழிகள் அவளுக்காக செய்வதைக் கண்டு உற்சாகமாக இருந்தது. மாலை விழாவிற்கு அவர்களே மைதிலியை அழகுப்படுத்தினார்கள்.
மேடையில் அவளது தோழி ப்ரீத்தி கற்கள் வைத்த லெஹன்காவில்.. நாளை தனது கணவனாக வரப் போறவனுடன் அம்சமாய் நின்றிருந்தாள். அவளது முகத்தில் இருந்த பூரிப்பை தோழிகள் கிண்டல் செய்தும், மகிழ்ச்சியுடன் பார்த்தவர்கள்.. தங்களது செல்பேசியில் அந்த காட்சியை படம் எடுத்துக் கொள்வதற்காக மேடைக்கு முன் சென்று நின்றிருந்தார்கள். ஆனால் மைதிலி மட்டும் கண்களில் நிறைத்துக் கொண்டவளை பின்னிருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
அப்பொழுது அவளருகே யாரோ அமர்வது போன்று தோன்றவும், திரும்பிப் பார்த்தவள்.. திகைத்தாள். ஏனெனில் இன்று மதியம் பார்த்த இளைஞன் அவன்!
மைதிலி திரும்பிப் பார்க்கவும், அவன் முறுவலித்தான். அவளும் புன்னகைத்துவிட்டு மதியம் நடந்ததை தனது தோழிகளிடம் கூறுவனோ என்றுச் சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவன் மெல்ல “நீங்க பிரைடலொட பிரெண்ட்ஸா” என்றுக் கேட்டான்.
அதற்கு ஆம் என்றுத் தலையை ஆட்டிய மைதிலி “நீங்க மாப்பிள்ளையோட பிரெண்டா?” என்றுக் கேட்டாள்.
அவன் “இல்ல..” என்றான்.
மைதிலி “மாப்பிள்ளை ரிலேட்டிவ்வா?” என்கவும்,
“இல்ல..”
“ஓ அப்போ ப்ரீத்தியோட ரிலேட்டிவ்வா..” என்றுக் கேட்கவும்,
அவன் அதற்கும் “இல்ல..” என்றுப் பதிலளித்து மைதிலியை திகைப்பில் ஆழ்த்தினான்.
அவளது திகைப்பைக் கண்டு சிரித்தவன், “இந்த ஹாலை தாண்டி போயிட்டு இருந்தேன்! வாசல்ல இருந்து பார்த்த நீங்க உட்கார்ந்திருப்பது தெரிந்தது.. உடனே வந்துட்டேன். அவங்களும் வாங்கனு கூப்பிட்டாங்க..” என்றுச் சிரியாமல் கூறினான்.
அதைக் கேட்டு மேலும் திகைத்த மைதிலி சுற்றிலும் பார்த்தாள். அவன் மேலும் “யாருக்கும் நான் ஸ்டேன்ஞ்சர் என்றுத் தெரியாது.” என்றுச் சிரித்தான்.
மைதிலி “இட் இஸ் நாட் எ குட் மேனர்..” என்றாள்.
அதற்கு அவன் “யா ஐ னொ! ஆனா ஒரு எக்ஸைட்மென்ட்ல தெரிந்தே தான் வந்தேன்.” என்றுச் சிரித்தான்.
மைதிலி “எதுக்கு?” என்றுக் கேட்கவும்,
அவன் “தெரியலை” என்றுச் சிரித்தான்.
உடனே மைதிலி “என்ன பிளர்ட் செய்யறீங்களா..” என்றுக் கேட்டாள்.
அதற்கு அவனோ “அப்படியா தெரியுது. இவ் தட் சோ ஐயம் ரியலி ஸாரி!” என்றுவிட்டு எழுந்துவிட்டான்.
“ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்..” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.
மைதிலிக்கு தான் சுருக்கென்று ஆனது. ஏதோ ஆர்வத்துடன் நட்பு வைத்துக் கொள்ளலாம் என்று வந்தமர்ந்தவனின் மனம் காயம் படும்படி பேசி விட்டேனோ என்றுத் தோன்றியது.
எனவே சட்டென்று எழுந்து வாசலை நோக்கி சென்றாள். அதற்குள் அவன் வெளியேறி இருந்தான். இன்னும் காரிடரை விட்டுச் சென்றிருக்க மாட்டான் என்று.. தரையை உரசும் லெஹன்கா பாவாடை சற்று உயர்த்தி பிடித்துக் கொண்டு.. வெளியே காரிடருக்கு விரைந்தவள், அங்கு சென்றுக் கொண்டிருந்தவனின் முதுகை பார்த்ததும்.. “ஹலோ” என்றவாறு பின்னே ஓடினாள்.
மைதிலியின் குரல் கேட்டு திரும்பியவன், அவள் ஓடி வருவதைப் பார்த்து நின்றுவிட்டான்.
அவன் முன் சென்று நின்றவள் “நான் உங்களை ஹர்ட் செய்யற மாதிரி பேசியிருந்தா ஸாரி!” என்றாள்.
அதைக் கேட்டவன் கீழ் கண்ணால் அவளைப் பார்த்தான். பின் “இதைச் சொல்றதுக்காக ஓடி வந்தீங்களா!” என்றுக் கேட்டான்.
ஏன் குறிப்பாக கேட்கிறான் என்றுப் புரியாது ஆம் என்று தலையை ஆட்டினாள்.
அதற்கு அவன் “நீங்க ஹர்ட் ஆனாலும் சரி.. நான் கேட்கிறேன். நீங்க தான் என்கிட்ட பிளர்ட் ஆனா மாதிரி இருக்கு! அப்படியா!” என்றுக் கேட்டான்.
அதைக் கேட்டு திகைத்த மைதிலி வெடுக்கென்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவனது சிரிப்பு சத்தம் அவளைப் பின் தொடர்ந்தது.
பின் திருமண ஹாலில் வரவேற்பு முடிந்து.. அதன் பின் நடைப்பெறும் விஷேஷங்களும் நல்லபடியாக நடந்தது. அடுத்த நாள் காலையில் நல்ல முகூர்த்த நேரத்தில்.. மங்கலநாண் அணிவிக்கவும் பட்டது. பின் மற்ற வைபவங்களும் ஃபோட்டோ எடுத்தலும் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது அவர்களது தோழிகளில் இருவர்.. அலுவக வேலை நேரத்தில் அரைநாள் பர்மிஷன் போட்டு வந்திருப்பதாகவும், முழு நாள் விடுப்பு கிடைக்காது என்று கிளம்பி விட்டார்கள். மற்ற இருவரின் கணவன்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் காலை திருமண விழாவிற்கு வந்திருக்கவும்.. அவர்களுடன் இருந்தார்கள். சிறிது நேரம் அவர்களின் இரண்டு வயது மூன்று வயது குழந்தைகளுடன் மைதிலி விளையாடினாள். பின்னர் அவரவர் குடும்பத்துடன் கிளம்பும் போது.. இன்று மாலை வேலை முடிந்து அவர்கள் வந்ததும்.. அனைவரும் மீண்டும் சந்திக்கலாம் என்றுக் கூறிவிட்டு சென்றார்கள். பின் தனித்து விடப்பட்ட மைதிலி.. ப்ரீத்தியின் அன்னையிடம் தானும் செல்கிறேன் என்றுக் கூறவும், அதற்கு அவர் “ப்ரீத்தி உன் கூடத் தனியா ஃபோட்டோ எடுக்கணுனு சொன்னா.. கொஞ்ச நேரம் வெயிட் செய்யுமா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. எடுத்துவிட்டு போகட்டும்.” என்றார். மைதிலி மேடையில் நின்றிருந்த ப்ரீத்தியை பார்க்கவும், அவள் கண்களால் கெஞ்சினாள். சரி என்றுத் தலையை ஆட்டிய மைதிலி போரடித்தவளாய் அங்கிருந்த சிறு பால்கனியிடம் சென்றாள்.
அங்கிருந்து பார்த்தால்.. கோவையின் பரபரப்பான சாலைகள் மட்டுமின்றி.. அந்த ரெஸிடன்ஸியின் வெட்டவெளி காபி ஷாப்பும் தெரியும். அந்த காலை நேரப் பொழுதில் பலர் வட்ட மேசையில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருக்க.. மைதிலியின் கண்கள் ஓரிடத்தில் தானே சென்றது. நேற்று சந்தித்த இளைஞன் மூன்று பேருடன் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தான். கலகலவென சிரித்தவாறு பேசிக் கொண்டிருந்தவனை அவளது கண்கள் மொய்த்தது. அதை உணர்ந்தானோ.. நிமிர்ந்துப் பார்த்தான். உடனே மைதிலியும் பார்வையை திருப்பிக் கொண்டு வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தாள். பின் மெல்ல விழியை மட்டும் அவன் புறம் திருப்பியவள். சடார் என்றுத் திரும்பி அங்கிருந்து சென்றுவிட்டாள். ஏனெனில் அவளின் மீதிருந்து அவன் தன் பார்வையை அகற்றிக் கொள்ளவில்லை. அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
எனவே ஹாலுக்குள் நுழைந்தவள், மேடை அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள். ஏனோ அவளுக்கு படபடப்பாக இருந்தது. தான் ஏன் இப்படி டென்ஷன் ஆகிறேன் என்று அவளுக்கே புரியவில்லை. பின் மணப்பெண்ணின் விருப்பப்படி அவளுடன் ஃபோட்டோ எடுத்துவிட்டு.. ப்ரீத்தியிடம் கூறிவிட்டு தானும் ஓய்வெடுக்க அறைக்கு சென்றாள்.
ஐந்தாவது மாடியிற்கு லிப்டில் வந்தவள், அவளையும் அறியாது ஓரக்கண்ணால் அடுத்து இருந்த திருப்பத்தைப் பார்த்தவாறு சென்றாள். அங்கு அவள் எதிர்பார்த்தது போல்.. அந்த இளைஞன் ஒரு பெண்ணுடன் நின்றுப் பேசிக் கொண்டிருந்தான். மெதுவாக ஓரக் கண்ணால் பார்த்தவாறு சென்றவள், அவனை ஒரு பெண்ணுடன் அதுவும் உரிமையுடன் கையைப் பற்றியபடி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவளையும் அறியாது நின்றுவிட்டாள். அவள் நின்றுவிட்டதை அறிந்து.. அவனும் சரியாக திரும்பிப் பார்த்தான். உடனே மைதிலி வேகமாக தனது அறைக்குள் சென்று மறைந்துவிட்டாள். அறைக்குள் சென்றவள்.. முட்டாள் என்றுத் தன்னையே திட்டிக் கொண்டாள்.
ஓய்வெடுக்க என்று அறைக்கு வந்தவளுக்கு.. ஓய்வு எடுக்க முடியவில்லை. அவனது எண்ணங்கள் முழுவதும்.. அந்த இளைஞனுடன் அவள் உரையாடிய சம்பவங்களே வந்து சென்றது. இதென்ன கொடுமை என்று எழுந்து அமர்ந்துவிட்டாள்.
ஏன் அவனைச் சுற்றியே எண்ணங்கள் செல்கிறது. ஏன் அவனின் மீது தனிக்கவனம் செல்கிறது.. என்று அவள் அறியாள். இப்படி எதையாவது நினைத்து.. பின் ஏன் அப்படி நினைக்க தோன்றுகிறது என்று நினைத்து வருந்துவதை.. விட எதாவது மாலுக்கு சென்று பொழுதை போக்கிக் கொண்டு வரலாம் என்றுக் கிளம்பினாள். கதவைத் திறந்தவள், திகைத்தாள். ஏனெனில் அவன் கதவின் முன் நின்றிருந்தான்.
மைதிலியை பார்த்ததும் “வாட் யு வான்ட்?” என்றுக் கேட்டான்.
மைதிலி திருதிருவென விழிக்கவும், “எனக்கு உன் பேர் கூடத் தெரியாது. உனக்கும் என் பேர் தெரிந்திருக்காது. என்ன பார்த்ததும் லவ்வா.. சேன்ஸே இல்ல! ஆனா இது லவ் இல்லை வேற என்னமோ கேட்கிறே.. சொல்லு என்ன வேணும். நீ என்னை சைட் அடிக்கிற மாதிரியும் தெரியலை. நான் உன்னை சைட் அடிச்சேன். ஆனா எனக்கு அதோட எல்லை தெரியும். யு னோ ஒன் தின்க்! ஐயம் என்கேஜ்டு! அரென்ஜ் மேரேஜ் தான்! நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என் கூடப் பார்த்தே தானே கவுல்சல்யா.. அவ கூடத் தான் இன்னும் இருபது நாளில் மேரேஜ் ஆகப் போகுது. என்னோட சொந்த ஊர் சென்னை.. இங்கே அவ பிரெண்ட்ஸிற்கு இரண்டு பேரும் சேர்ந்து இன்வேடேஷன் கார்ட் கொடுக்கலானு சொன்னா.. அதனால் வந்திருக்கேன். ஆனா நீ என்னை இப்படிப் பார்த்துட்டு இருந்தா.. அந்த மேரேஜ் இன்வேடேஷன்ஸ் எல்லாத்தையும் வீசிட்டு.. உன் பின்னாடி வந்திர தோணுது.” என்றவாறு எட்டுக்களை முன்னே எடுத்து வைக்க, வைக்க.. மைதிலி பின்னால் நகர்ந்திருந்தாள்.
அதற்குள் அறைக்குள் வந்திருக்கவும், சட்டென்று திரும்பி கதவை சாத்திவிட்டு அவளைப் பார்த்தான். மைதிலி கண்களை விரித்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன் ரூமுக்குள்ள வந்து கதவை சாத்தறேனே பயமா இல்லை. அட்லீஸ்ட் நீ பயமா பார்த்திருந்தால் ஆவது.. நான் பேசாம போயிருப்பேன். ஆனா நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்யறே! நான் உன்னை லவ் செய்யணுமா! இல்ல வேற எதாவது ஹெல்ப் செய்யணுமா! இல்லை.. நீ எதாவது என்கிட்ட சொல்லணுமா! இல்ல படத்துல எல்லாம் வர மாதிரி முன் ஜென்மம் விட்ட குறை தொட்ட குறையா! குதிரையோட வந்து உன்னைத் தூக்கிட்டு போறேனு சொல்லிட்டு.. வராம விட்டுட்டேனா! எனக்காக ரொம்ப காத்திருந்தியா..” என்றுப் பேசிக் கொண்டே போகவும், சுயநிலை அடைந்த மைதிலி “ப்ளீஸ் ஸ்டாப் இட்!” என்று அவனது பேச்சில் இடைப் புகுந்தாள்.
பின் “நான் நல்லா தான் இருக்கேன். நீங்க தான் குழம்பி போய் என்னையும் குழப்பி விடப் பார்க்கறீங்க! நம்மளோட முதல் மீட்டிங் நார்மலானது இல்லை. அதுக்கு பிறகு நீங்க நடந்துக்கிட்டதும் நார்மலானது இல்லை. அப்பறம் நீங்க நான் உங்க கிட்ட பிளர்ட் ஆகிட்டேன் என்றுச் சொன்னதும் நார்மல் ஆன விசயம் இல்லை. இப்படி எல்லாம் நீங்க செய்துட்டு.. நான் ஒரு இரண்டு தரம் சும்மா பார்த்துட்டேன். அதுக்கு எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் கொடுக்கறீங்க!” என்றாள்.
அதைக் கேட்டவன் சுற்றிலும் பார்த்தான், “ஏன் ஓவர் ரியாக்ட் கொடுக்கறேன்னு தானே கேட்டே..” என்றுவிட்டு.. அவளது கரம் பற்றி இழுத்துக் கொண்டு போய்.. அங்கிருந்த டிரஸ்டேபிளில் இருந்த கண்ணாடியின் முன் இருந்த இருக்கையில் அமர வைத்து கண்ணாடியில் அவளைச் சுட்டிக் காட்டி.. “அதை இங்கே பார்த்து கேளுங்க! நான் ஒன்றும் இடியட் இல்லை. சும்மா பார்த்ததிற்கு ஏன் பார்த்தே என்றுக் கேட்டுட்டு வரதுக்கு..” என்றான்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு திக்கென்று இருந்தது. சிறிது நேரத்திற்கு முன்.. அவளே பார்த்து கேட்ட கொண்ட கேள்வி தானே இது! ஆனால் அவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை. அவ்வாறு இருக்க.. அவள் என்னவென்றுக் கூறுவாள்.
அவளது முகத்தைப் பாா்த்தவன், “ஒகே! ஃபோனில் முழ்கிட்டு என்னோட ரூமிற்கு வர ரெடியா நின்றதை நினைச்சு நீங்க அசடு வழிச்சுட்டு ஓடினது.. எனக்கு இன்டர்ஸ்டிக்கா பட்டுச்சு! அதனால் தான் உங்களைப் பார்த்ததும்.. தெரியாத மேரேஜ் பங்ஷனுக்குள்ள புகுந்துட்டேன். ஆனா அது.. யாருடா இந்த முட்டாள் என்கிற மாதிரி தான் தோணுச்சு என்றால்.. பைன்! அப்பவே ஸாரி கேட்டுட்டேன். இப்பவும் ஸாரி கேட்டுக்கிறேன்.” என்றான்.
மைதிலியும் எழுந்து “ஒ.. ஒகே! நான் உங்களை டி…டி..டிஸ்டர்ப் செய்யற மாதிரி இருக்குனு சொன்னீங்க தானே! அதுக்கு ஸாரி கேட்டுக்கிறேன். நீங்க என்னைப் பற்றி குழம்ப தேவையில்லை. நான் நாளைக்கு டிராபிக் எல்லாம் அடங்கியதும்.. எங்க ஊருக்கு போயிருவேன்.” என்றாள்.
அதற்கு அவன் “சூப்பர்! நான் காலைல ஆறு மணிக்கே ட்ரெயின் ஏறிருவேன். அப்போ அத்தோட எல்லாம் சரியாகிரும் என்று நினைத்தால்.. பைன்! அவ்வளவுத் தான் மேட்டர்! அப்படித்தானே..” என்றுக் கேட்டான்.
அவள் ஆம் என்றுத் தலையை ஆட்டவும்.. அவன் தொடர்ந்து “இப்படி ரூம் வரை வந்து வாயடிச்சுக்கு வெரி ஸாரி! கவுசல்யாக்கு மட்டும் இது தெரிஞ்சுது. அவ அப்பா கிட்ட சொல்லி முதுகு தோலை உறிச்சு போடுவா..! பை..” என்றுவிட்டு கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றான்.
அதுவரை அடக்கி வைத்திருந்த காற்றை ஊப் என்று வெளியே விட்டு அந்த இருக்கையில் அமர்ந்த மைதிலிக்கு உடல் சுடுவது போல் இருக்கவும், கழுத்து கன்னத்தை தொட்டு பார்த்தாள். காய்ச்சல் அடிப்பது போல் சூடாக இருந்தது கண்டு திகைத்தாள்.
எனவே மாலையில் தோழிகளுடன் அவளால் உற்சாகமாக கலந்துக் கொள்ள முடியவில்லை. வருத்தத்துடன் அவளைப் பார்த்தவர்களிடம்.. கிளைமேட் ஒத்துக் கொள்ளவில்லை.. என்றுப் பொய்யுரைத்தவள், அடுத்த முறை கோவை வரும்போது.. சந்திக்கலாம் என்றுக் கூறிவிட்டு தங்கியிருந்த அறைக்கு சென்றுவிட்டாள்.
படுக்கையில் விழுந்தவளுக்கு மீண்டும் அவனது நினைவு.. கூடவே கடைசியாக ‘அவ்வளவுத்தானே பை’ என்ற அவனது குரலும் கேட்கவும், அவளையும் அறியாது அவளது கண்களில் இருந்து நீர் வழிந்தது.
‘இதென்ன பைத்தியக்காரத்தனம்’ என்றுத் தன்னையே கடிந்தவளாய்.. போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முயன்றாள்.
—-------------------------------
ஊதுபத்தியின் புகையும் மணமும்.. அந்த அறை முழுவதும் நிறைந்திருக்க.. சாந்தி, கணேஷன், ரவீந்தர்.. அவனது மனைவி பிரியா.. என்று நான்கு பேரும்.. கைக்கூப்பி அமர்ந்திருக்க.. அவர்களுக்கு முன்னால்.. தோளை தொட்ட பரட்டையான முடியும்.. நெற்றி நிறைய சிவப்பு குங்குமத்தையும் அப்பி கொண்ட ஜோசியன் ஒருவன் கவனமாக ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.
பின் தலையை நிமிராமலேயே “அங்கே கோபக்கார ஆத்மா உலாவறது உண்மைங்க! அது உங்களை தலை நிமிரவே விடாது. காவு வாங்கிட்டே.. உங்களை நடுரோட்டிலும் நிறுத்திடும்.” என்றான்.
கணேஷன் “அது எங்களுக்கு தெரியும். அதை அடக்க என்ன செய்யணும்? அதுக்கு தானே உங்க கிட்ட வந்திருக்கோம்.” என்றான்.
அந்த ஜோசியன் “எல்லாத்தையும் பார்த்துட்டேன். அந்த ஆத்மா எந்த பில்லி சூனியம் ஏவி எல்லாம் அடக்க முடியாது. அது பயங்கர கோபத்தில் இருக்கு! அந்த மாகாளியினால் தான் அடக்க முடியும். அதுக்கு மாகாளிக்கு நீங்க இரத்தபலி கொடுக்கணும்.” என்றதும்.. நால்வரும் அதிர்ந்தார்கள்.
அந்த ஜோசியன் தலையை நிமிராமலேயே “உங்க பரம்பரையிலேய இந்த தலைமுறையோட ஒத்த பெண் புள்ளை இருக்கா! அவ இரத்தம் காளிக்கு திருப்தியை கொடுக்கும்.” என்று முடித்தான்.
நான்கு பேரும் திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அந்த ஜோசியன் தொடர்ந்து “கன்னி கழியாம.. உடல் முழுக்க தங்கத்தோட அந்த பொண்ணை பழிக் கொடுங்க! உங்க காணாம போன பொன் புதையலே கிடைக்கும்.” என்று நிமிர்த்தவனின் கண்கள் பளபளத்தது.
அந்த நான்கு பேரின் கண்களில் ஆசை எட்டிப் பார்த்தது.