தேவ், இன்னிக்கு லாஸ்ட் டே.. ஐ ஃபீல் லைக் கோயிங் டு பீச், வில் யூ டேக் மீ ?.. அங்கே மட்டும் தான் நாம இவ்ளோ நாள்ல போகவே இல்ல
நானும் சின்ன வயசுல போனது, அப்புறம் போனதே இல்லடா, வாட் டூ யூ சே..
ஷ்யூர்.. போகலாம் ஆராத்யா என்றான் தேவ் ஆனந்தமாக.
அந்தி சாயும் நீல வானம், செந்நிறச்சூரியனை கடல்மகள் மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தாள். கடலுக்கு இந்தப்பக்கமும் எழும்பும் அலைபோல் ஆர்பரிக்கும் மக்கள் கூட்டம். வெள்ளிக்கிழமை இரவு, மக்கள் அந்த நாளைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் என்பது போல் சாந்தோம் பீச் கூட்டம் களை கட்டியது.
அருகில் மீனவர் வசிக்கும் பகுதியில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும், அங்கே போகலாம் எனக்கூறி மெல்ல நடந்தார்கள்.
பத்து நிமிடங்களாக நடக்கிறார்கள், ஒரு வார்த்தை பேச்சு இல்லை. நீண்ட மௌனம்.
ஆராத்யா, அப்புறம்.. பேச்சை எடுத்தான் தேவ்.
சொல்லு தேவ், என்றாள் ஆராத்யா புன்னகையுடன்.
நாளைக்கு அப்போ நாம பார்க்க முடியாது இல்ல.
ஆமாடா அது தான் எனக்கும் கஷ்டமா இருக்கு
முப்பது நாள் போனதே தெரியல, அதுக்கு முன்னாடி உள்ளதெல்லாம் மறந்து போச்சு எனக்கு, ஜஸ்ட் இந்த தர்ட்டி டேஸ் மட்டுமே ஞாபகமா இருக்குடா. என்ன செய்யப்போறேன் நாளைக்கு தெரியலையே என்றாள், குழந்தை போல்.
உட்காருடா, என்றாள். அமர்ந்தார்கள்.
தேவ், நெஸ்ட் என்ன பண்ண போறே? கேட்டாள்.
யு எஸ்லே இருந்து மெயில் வந்திருக்கு ஆராத்யா.
நான் அங்கே டாகுமெண்டரி ஃபில்ம் மேக்கர் மைக்கேல் மூர் இருக்காரே, அவருக்கு என்னோட ப்ரீவியஸ் ஒர்க்ஸ்ல்லாம் வச்சு அனுப்பியிருந்தேன். லாஸ்ட் வீக் தான் ஸ்கைப் ல பேசினார், நெஸ்ட் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றார். நெஸ்ட் மந்த் கடைசில கெளம்புறேன் ஆராத்யா, அசிஸ்டன்ட் டைரக்டர் டு ஹிம், ஆல்ரெடி பத்து பேர் அவர்கிட்ட இருக்காங்க. ஆனாலும் கெடச்சது பெரிய விஷயம்.
கூல், ஹேய்.. வாவ் என்னடா எவ்ளோ பெரிய விஷயம், சாதாரணமா சொல்றே, என்றாள் மகிழ்ச்சியாக.
அங்கே தான் லாஸ் ஏஞ்ஜெல்ஸ்ல மிஸ்டர் வைத்யநாதன், என் அப்பா
இருக்கார்.
பரமஹம்ச யோகானந்தர் தெரியுமா?, கேட்டான் தேவ்.
ம்ம்.. ஆட்டோபயோகிராபி ஆஃப் அன் யோகி புக் எழுதியிருக்காரே, அவரா?.
பரவாயில்லையே இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியே. ஏய் என்னப்பா நெனச்ச. எனக்கு ஸ்டீவன் ஹாக்கின்ஸ்யும் தெரியும் பாபாஜி கதையும் தெரியும், சிரித்தபடி சொன்னாள்.
உனக்கு தெரியாததது ஏதாவது இருந்தா சொல்லேன், சிரித்தபடியே கிண்டலாக கேட்டான் தேவ்.
ம்ம் இருக்கு கண்ணா இருக்கு, அது வந்து.. நீ அடிக்கடி டயரில் ஏதோ எழுதிகிட்டே இருக்கியே, அதுல அப்படி என்னதான் இருக்கு, அது எனக்கு தெரியாது என்றாள்.
ஹேய்.. பார்த்தியா
ம்ம் அவ்ளோதானே,
நீ கேட்குறதுக்கு ரொம்ப வருஷம் ஆகும்னு நெனைச்சேன், நீ ஷார்ப் தான், மறுபடியும் நிரூபிச்சிட்டே, என்றான்.
என்னடா புதிர் போடுறே, என்றாள் சிரித்தபடி
இரு தர்றேன். அவன் ஆசை ஆசையாய் அவளை நினைத்து எழுதிய கவிதை டயரி. மொபைல் வெளிச்சத்தில் படித்தாள், அவள் கண்கள் நட்சத்திரமாய் மின்னியது.
வாவ்.. என்னடா தேவ்.. இவ்ளோ அழகா எழுதிருக்கே
யார்டா இந்த லக்கி கேர்ள், கேட்டாள் அப்பாவியாய்.
அவளா.. தெரியல கோடம்பாக்கத்துல எங்க அப்பார்ட்மெண்ட் எதிர்ல இருக்கா அடிக்கடி பார்ப்பேன். ஆனா பேசுனது இல்ல, என்றான் சமாளித்தவனாய்.
என்னடா சொல்றே, பேசாமலே இவ்ளோ எழுதியிருக்கியா.
டேய் கவிதை நல்லா இருக்கு, அவள் கிட்ட கொடுக்கப்போறியா? எப்போ, எங்கே, ஆவலாய் கேட்டாள்.
இல்ல, இல்ல அவ வெளியூர் பொண்ணு, லீவுக்கு அவங்க அக்கா வீட்டுக்கு வந்திருந்தா போல, இன்னைக்கு.. அநேகமா இப்போ கெளம்பியிருப்பா, என்றான்.
டேய்.. அப்போ சும்மா எழுதினியாடா. இருட்டில் அவளால் அனைத்தையும் படிக்க முடியவில்லை. நாளைக்கு தர்ரேண்டா, எனக்கு இது முழுசும் படிக்கணும்.
நாளைக்கு ஆஃபிஸ் வர்ரியா, கேட்டான்.
ஆமால்ல.. நாளைக்கு பார்க்க முடியாதே. ஆனா எனக்கு உன் கவிதை படிக்கணுமே,
என்றாள் ஆராத்யா.
சரி, எடுத்துட்டு போ, பத்திரம், என்றான் தேவ்.
அந்த பொண்ண ரொம்பப் பிடிக்குமா உனக்கு? வினவினாள்.
தெரியலடா.. தினமும் பார்த்ததினால அப்படி இருக்கலாம், இட்ஸ் ஆல் பார்க்கும் போது தோணுச்சு. பார்காம இருந்து ஒண்ணுமே ஃபீல் ஆகலேன்னா அங்கே ஒன்னும் இல்லன்னு அர்த்தம், அப்படித்தானே தத்துவம் பேசினான் தேவ்.
கரெக்ட் டா, ஆமோதித்தாள் ஆராத்யா.
யூ டேக் லைஃப் வெரி லைட், சூப்பர் டா.
ஆமா.. தேவ்.. உன் அம்மா அப்பா பத்தி நீ ஒன்னும் சொல்லவே இல்லையேடா, என்றாள்
நீ கேட்கவே இல்லையே, என்றான் இவன்.
அம்மா, ஏஞ்சல். தி லவ் ஆப் மை லைஃப், அப்பா வைத்யநாதனுக்கு ரெண்டு விஷயம் முக்கியம். ஒண்ணு அவரோடஎக்ஸ்போர்ட் பிசினஸ். இன்னொன்னு ஆன்மிகம். மணிக்கணக்கா தியானம் பண்ணுவார். கேட்டா கிருஷ்ணா கிட்டேயும், ஜீசஸ் கிட்டேயும் பேசிட்டு இருந்தேன்னு சொல்வார். மாசக்கணக்கில் அங்கே யூ. எஸ் போய்டுவாரு. ஸெல்ப் ரியலைசேஷன் பெல்லோவ்ஷிப் இன்டர்நேஷனல் ஹெட் குவாட்டர்ஸ்ல, எல் ஏ ல இருப்பார். அம்மா பத்தி கேட்டீயே, ம்ம்.. சொல்றேன், இதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, ஒரே பிள்ளை என்னையும் பார்த்து படிக்க வச்சு அழகு பார்க்கும் அன்பு அன்னை அவள். காதல் திருமணம். அப்பா கல்யாணத்துக்கு அப்புறம் தான் பிஸினெஸ்ல பெரிய ஆளானாரு. அம்மா வோட லக் தான் காரணம்னு சொல்லுவாரு. ஒரு முதியோர் இல்லம், ஒரு அனாதைகள் காப்பகம் இருக்கு, ரெண்டையும் அம்மா தான் பார்த்துக்குறாங்க. அவங்களுக்கு இப்போ மூணு விஷயம் முக்கியம், ஒண்ணு நான், இன்னொன்னு காப்பகங்கள், இன்னொன்னு பைபிள். ரீட் பண்ணிட்டே இருப்பாங்க. அப்பா பத்தி கவலை இல்ல, ஹி டேக்ஸ் கேர் ஆப் ஹிம்ஸெல்ப். திஸ் இஸ் ஆல் அபௌட்மீ அண்ட் மீ அண்ட் மை பேமிலி, சிரித்தபடியே சொல்லி முடித்தான் தேவ்.
ரியல்லி சூப்பர் டா. சாரி டா, உன்னப்பத்தி ஒண்ணுமே இவ்ளோ நாள் நான் கேட்கவே இல்லையே, உன் அம்மாவை ஒருநாள் பார்க்கணும் போல தோணுது டா.
"அக்கா அக்கா சுண்டல் வாங்குக்கா, என்றான் அருகில் வந்த சிறுவன். தேவ் இரு இரு நான் வாங்குறேன், சொல்லி வாங்கி கொண்டான். பீச் வந்தாலே இது தான், இவங்க கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது.
பட் சின்ன பையன் பாரு டா, அது இருக்கட்டும் ஹேய்.. தேவ். உன் அம்மாவை ஒரு நாள் நான் பார்த்தே ஆகணும், என்றாள்
ஸ்யூர் வாயேன் ஒருநாள், புன்னகையோடு சொன்னான், பட் நான் யூ எஸ் போறதுக்கு முன்னாடி வா, அழைச்சிட்டு போறேன்.
எங்கேடா, நான் டெல்லி ஐ ஐ எம் சி யில் மாஸ்டர்ஸ் அப்ளை பண்ணியிருந்தேன், நாளைக்கு காலைல கிளம்புறேன், எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்கு. ஃபிளைட் காலை ஆறு மணிக்கு, ஸ்பைஸ் ஜெட் மீனம்பாக்கம் ஏர்போர்ட் , என்றாள்.
அப்புறம் அக்கா வீடு அங்கே தான் கிரேட்டர் நொய்டாவில், முப்பது நாள் அங்கே தான். அக்கா பசங்க இருக்காங்க, டைம் அங்கேயே போய்டும் நெனைக்கிறேன்.
அப்போ அம்மா என்ன செய்வாங்க, கேட்டான்.
அவங்களா, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் டாக்டரம்மா, அவங்களுக்கு ஹாஸ்பிடல், பேஷண்ட்ஸ் அப்படியே டைம் போய்டும். கைனகாலஜிஸ்ட் எப்பவும் பிஸி, வீட்லேயும் உதவிக்கு மெய்ட்ஸ் இருக்காங்க.
ஷி வில் மேனேஜ் என்றாள் ஆராத்யா.
அப்பா எங்களைப் பிரிஞ்சு போன பிறகு குடும்ப வாழ்க்கை மேல உள்ள நம்பிக்கையே போயிடுச்சு, அவங்களும் லவ் மேரேஜ் தான்.
உன் அப்பா அம்மா கேஸ்ல அது சக்ஸஸ், எங்க அம்மா கேஸ்ல லவ் ஃபெயிலியர். அவ்ளோ தான் டிஃப்ரன்ஸ் டா
சிம்பிள், என்றாள்.
அப்பா விட்டுட்டு போகும் போது எனக்கு மூணு வயசு. ஒண்ணும் ஞாபகம் இல்ல. எங்க அம்மா நான் சின்னவளா இருக்கும் போது அழுதுகிட்டே இருப்பாங்க அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு. என்ன வாழ்க்கைடா இது அப்படின்னு ஆயிடுச்சு. ஆண்கள் மேல உள்ள மரியாதையே போய்டுச்சு. ரொம்ப வருஷத்துக்கப்புறம் தேவ், உன்ன பார்த்ததும் தான் எல்லா ஆண்களும் அப்படி இல்லன்னு தோணுது. உன் கிட்டே பழகின அளவுக்கு நான் யார் கிட்டேயும் பழகியதில்ல. யூ ஆர் அ ஜெம் ஆஃப் பெர்சன். அம்மாவையே பார்த்து வளர்ந்ததால காதல் மேலே நம்பிக்கையே போயிடுச்சு. உன் இடத்துல வேறொருத்தன் இருந்திருந்தான் இந்நேரம் எனக்கு பத்து வாட்டியாவது ப்ரப்போஸ் பண்ணியிருப்பான், சொல்லிக்கொண்டு சிரித்தாள்.
தேவ் அப்படியே அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் பேசத் தோன்றவில்லை. மௌனமாய் சிரித்தான்.
பட் உன் லவ் சக்ஸஸ் ஸ்டோரி எனக்கு சொல்லணும், தேவ். ஐயாம் நாட் லக்கி, நீ அப்படி இல்ல, ஹண்ட்ரட் பெர்ஸன்ட் நீ எலிஜிபிள், என்றாள், ஆராத்யா.
ஒகே ட்ராப் மீ நியர் பை, நாம கிளம்பலாம் என்றாள்.
காதில் விழாதவனாய் கடல் அலைகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான், அலை வந்து அவன் கால்களைத் தழுவி ஆறுதல் சொன்னது. அவள் கைகளில் அவன் கவிதைகள் நிரம்பிய டயரி.
சூழ்நிலை கை மீறிப் போகும் போது மௌனம் மட்டுமே காக்கும் உணர்ந்தவன் தேவ். ஒ.கே எழுதி வைத்தது
தான் நடக்கும், நம்பியவனாய் எழுந்தான் தேவ். யோசித்தபடியே.. போகலாம் ஆராத்யா, என்றான்.
காதல் உனதென்றால் இவள் மீண்டும் வருவாள் இது காதல் இல்லையென்றால் என் வாழ்வின் முப்பது நாள் பக்கங்களில் மட்டுமே வந்து போன ஒரு சிறுகதாபாத்திரம் இவள், நினைத்தபடியே பைக்கை ஆன் செய்தான், பறந்தது, பை தேவ். டேக் கேர், என்றபடி அவன் தோளைத் தட்டியபடி சென்றாள்.
பஸ் நிறுத்தம் அருகில் வேகமாய் வந்து நின்றது அந்தப் பேருந்து, ஆராத்யா ஏறினாள்.
எதையோ எங்கோ தொலைத்து விட்டது போல் இனம் புரியாத உணர்வு அவளுக்குள்.
பேருந்து மெல்ல மறைகிறது.
இரவு இங்கே கனக்கிறது. தேவ் வானின் நட்சத்திரங்களை சில நிமிடங்கள் பார்த்தான். ஒரு எரி நட்சத்திரம் பாய்ந்து எங்கோ விழுந்தது. அவன் கண்களில் ஒரு துளி கண்ணீர். நான் சொல்லியிருக்க வேண்டுமோ, வாய்ப்பே இல்லை. ஏற்று கொண்டிருக்க மாட்டாள். காலம் பதில் சொல்லும் என்று நினைத்தபடி கிளம்பினான் தேவ். இரவு மணி பத்து. செல்போன்கள் இல்லாத காலக்கட்டம் இது. தொன்னூறுகளின் காலம். பேச வேண்டுமென்றால் தொலைபேசி மட்டுமே. பரஸ்பரம் அந்த எண்கள் மட்டும் பரிமாறியுள்ளனர்.
எப்போதாவது தோன்றினால் பேசிக்கொள்ளலாம், அதுவும் அங்கே அவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் ஆராத்யா டெல்லி போகிறாள். தேவ், யூ எஸ் போகிறான். வாய்ப்புக்கள் எப்படி உருவாகும்?
இரவில் கண்மூட இயலவில்லை, ஆராத்யா டயரி எப்போது படிப்பாள், படித்தால் அது என் காதலை கூறி விடுமே, பின் என்னைப் பற்றி என்ன நினைப்பாள். தவறாக நினைத்து விடுவாளோ, நினைத்தான். தூக்கம் வரவில்லை.
இரவு நீண்டது,
திடீரென்று ஆராத்யா நீ அப்படியில்லை, யூ ர் அ ஜெம் என்று நேரில் சொன்னது போலிருந்தது. ஆறுதல் அடைந்து, தூங்கினான்.
காதல் செய்து
கருவில் சுமந்து
என்னை கரையேற்றிய
என் தாய் தந்தை
இருவர் ஈருயிர்
எனை இயக்குவது
உயிரியல் விதி
இதென்ன ஒரு பார்வையின்
ஸ்பரிசம் பட்ட மாத்திரத்தில்
மரபணுமாற்றம் நிகழ்ந்து
மூன்றாவதாய் எனை
உன் உயிரும் இயக்குகிறதே
அன்பே.. ஆராத்யா..
மூன்றாம் கவிதையை வாசித்திருந்தாள் அவள், இரவு ஒரு மணிக்கு.
கண்கள் ஸ்தம்பித்து இமைக்க முடியாமல் நின்றன. தேவ் என்னை நேசிக்கிறானா? ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்ல வில்லையே.
ஒருவேளை இது முப்பது நாள் பழக்கத்தில் வந்த மயக்கமா?
தேவ். உனக்கு என்னை பிடிக்குமா?அது அவளில்லையா, நானா?
ஒரு சின்ன புன்னகை, வெட்கம், சொல்லவில்லையே என்று சிறு கோபம், இல்லை இது மிகவும் அவசரம் என்ற எண்ணம், அவளை ஒன்றும் மேற்க்கொண்டு பேச விடாமல் செய்ததது.
வாழ்க்கையில் எதுவாயிருந்தாலும் நான் அவசரப்பட்டது போல் அவசரப்பட்டு விடாதே, அம்மா தேவகியின் வார்த்தை காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இல்லம்மா நான் உன்னோட பொண்ணு, என எண்ணியவளாய்.. உறங்கினாள்.
விடிகாலை ஐந்து மணி, காரில் வந்து விமான நிலையம் இறங்கினாள், ஆராத்யா. காரை அனுப்பி விட்டு லக்கேஜை எடுத்தாள்,
ஏய் கொடு நான் கொண்டு வர்றேன், மாய தேவன் போல் வந்து நின்றவன் கேட்டான்.
ஹேய்.. தேவ்.. வாட் எ சர்ப்ரைஸ்.. எப்போ டா வந்தே,
நீயும் ட்ராவலா? என்றாள்.
சொல்லு உன் கூடவே வந்துடுறேன்.. சொன்னான் கிண்டலாக.
டேய்.. நிஜமாகவே என்னை பார்க்கத்தான் வந்தாயா..?
எனக்கு இங்கே வேற யாரையும் தெரியாது ஆராத்யா, என்றான் தேவ்..
என்னடா இப்படி பண்ணிட்டே..? ஆராத்யா கேட்டாள்.
என்னடா நான் செஞ்சேன்..? தேவ் அப்பாவியாய் கேட்டான்.
உன் கவிதைகள் படிச்சேன் டா..
உண்மையில் அது நானா.. ?வெட்கத்தை வீசிவளாய் ஆராத்யா.
என் அப்பார்ட்மெண்டில் உன்ன மாதிரி யாரும் இல்ல ஆராத்யா, சொல்லிச் சிரித்தான் தேவ்.
உன்ன எனக்குப் ரொம்பப் பிடிக்கும்டா, ஐ ரியல்லி மீன் இட். உன்ன மாதிரி ஒருத்தன யாரு மிஸ் பண்ண முடியும்? பட் எனக்கு டைம் வேணும் டா.
எவ்ளோ வருஷம் வேணும், கேட்டான் தேவ்.
நான் மாஸ்டர்ஸ் முடிக்கிறேன். ஜஸ்ட் டூ இயர்ஸ், அப்புறம் பேசுவோமா?
அதுவரைக்கும் நாம பிரெண்ட்ஸ் ஆகவே இருப்போமேடா.
இப்போ நாம பிரெண்ட்ஸ் இல்லேன்னு யாரு சொன்னது.
இல்ல டா, நான் அப்படி சொல்லலே
நீ எப்படியும் சொல்ல வேண்டாம்
எக்ஸாம் நல்ல எழுது, அக்கா வீட்டுக்கு போ, லேண்ட் லைன் நம்பர் இருக்குல்ல,
கால் பண்ணு பேசலாம்,
நீ வேற.. எங்கிட்ட பேசாமலே போய்டுவியோ, பார்த்தா பேசுவியோ பேசமாட்டியோ
நான் பயந்தே போய்ட்டேன்,
நீ வேற மத்தவன் எவனாவது இருந்தா.. பத்து வாட்டி காதலை சொல்லியிருப்பான், அது இது அப்படின்னு சொன்னே, என்றான்.
தேவ், மத்தவனும் நீயும் ஒண்ணாடா, என்றாள்.
வைத்த கண் வாங்காமல் ஆராத்யாவையே பார்த்தான் தேவ் மீண்டும்.
அருகில் வந்தாள்.
இருவரும் மெல்ல ஆரத் தழுவிக்கொண்டனர், நீண்ட ஐந்து நொடிகள் . வெளியே வீசும் வாடைக் காற்றில் இதயம் இன்னும் குளிர்ந்தது, உள்ளுக்குள் இனித்த கணம் அது.
கிளம்புறேன் தேவ். ஐ லவ் யூ டா.. உன்ன ரொம்ப மிஸ் பண்ண போறேன், நாணத்துடன் சிரித்தாள்.
யூ ர் மை லைஃப் ஆராத்யா.. என்றான் தேவ் உணர்வுபூர்வமாய்.
நான் உன் கூடவே இருக்கும் போது எப்படி மிஸ் பண்ணுவே, என் கவிதை படி, நான் அதிலேயே இருப்பேன், என்றான்.
எனக்கு உன் முகம் போதும். அது இங்கேயே இருக்கு என்று தன் நெஞ்சில் கை வைத்து சொன்னான்.
உருகி ஒரு காதல் பார்வையை முதன் முதலாய் வீசினாள், மெல்ல நகர்ந்தாள்
டேக் கேர் தேவ்.. என்றபடி திரும்பி அவனையே பார்த்தவளாய் கடந்து சென்றாள் ஆராத்யா.
அவள் மெல்ல மறையும் வரை அவள் செல்லும் திசையையே பார்த்து நின்றான் தேவ்.
அருகில் ஒரு டீ ஸ்டாலில்.
அண்ணா, ஒரு டீ, ஸ்டராங்கா கொடுங்க, பெருமூச்சு விட்டபடி புன்னைகைத்தான்,
டீ மாஸ்டர் கேட்டார் , என்ன தம்பி காலையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?
அது ஒண்ணும் இல்லன்னா, ஒரு ஹாப்பி மூட் என்றான்.
இந்தாங்க அப்படியே இதை சாப்பிடுங்க,
ஆல் ரைட், இவள் பிம்பத்துகள் அல்ல, என் வானவில்லின் வண்ணம் என்று நினைத்தான். அவளின் ஸ்பரிசம் விட்டுச்சென்ற வாசனைகள் அவன் நாபிக்கமலம் புகுந்து ஆன்மாவில் ஆழம் வரை பாய்ந்தது , கண்கள் மூடி மயங்கினான் தேவ். இதுவரை இப்படி அவன் உணர்ந்ததில்லை.
ஆராத்யா தன் முன்னின்று புன்னகைச்சாரல் தூவியதாய் உணர்ந்தான்.. காதல் மழையில் நனைந்தான்.. ஆஹா!
என்ன ஆயிற்று எனக்கு, தேவ் நேரில் வந்ததும் ராத்திரி நான் நினைத்தது எல்லாம் ஒன்றும் இல்லாமல் போயிற்றே, அம்மாவிடம் என்ன சொல்வது, அப்போதுதான் உணர்ந்தாள், அவன் கவிதை புத்தகத்தை திருப்பியபடி, மெல்ல அதன் பக்கங்களை வருடினாள். என் வாழ்வின் அர்த்தமாகப்போகும் ஆண்மகன், இருளிலும் நிழல் போல் என்னுடன் வரப்போகிறவன் நீதானா தேவ் என்று நினைத்தபடி மெல்ல புன்னகைத்தாள், கண்களில் ஏனோ சிறு ஈரம்.
முப்பது நாளில் என்னை கொள்ளை கொண்டவனே, என் அன்பே.. தேவ் என்றது அவள் இதயம்.
விமானம் மட்டும் அல்ல ஆராத்யாவும் மேகங்களுக்கிடையில் மேலே மேலே பறந்தாள்.