அகிலமும் நீயே!!!
அத்தியாயம் 5:
ராம்குமாரின் கொலைக்குக் காரணம் ஜெய்பிரகாஷ் என மித்ரசிம்மன் கூறியதைக் கேட்டு பதட்டமானார் கமிஷனர் விஜயேந்தர்.
"மித்ரா,உன் அம்மா விஷயத்துல உன் அப்பா ஜெய்பிரகாஷ் மேல உனக்கு இருக்க கோபத்துனால அவன் மேலக் கொலப்பழி போடாதடா..."
"நான் Personalலயும் , Proffessionனயும் கண்பியூஸ் பண்ண மாட்டேன் சார். மிஸ்டர் ஜெய்பிரகாஷ் தான் கணேஷை வைத்து ராம்குமாரக் கொன்னார்னு நான் சொல்றதுக்கு ஆதாரம் இருக்கு சார்."
"ஆதாரமா....."
"ஆமா சார்.கணேஷத் தேடி நான் மரவீட்டுக்குப் போனப்போ...அங்க புதருக்குப் பின்னாடி மறஞ்சிருந்த இரண்டு நார்த் இண்டியன்ஸ் என்ன தாக்க வந்தாங்க."
"அவுங்க கிட்ட இருந்து லாவகமாத் தப்பிச்ச நான்... இரண்டு பேரையும் தாக்கி...அதுல ஒருத்தன தூப்பாக்கி முனைல நிறுத்தி நீங்க யாருனுக் கேட்டப்போ...போலீஸ் கைல கணேஷ் சிக்குறத்துக்குள்ள அவனக் கொல்ல ஜெய்பிரகாஷ் அனுப்புன ஆட்கள்னு சொன்னான்."
"ராம்குமாரக் கொலப் பண்ண கணேஷுக்கும்,தொழிலதிபர் ஜெய்பிரகாஷுக்கும் என்ன சம்மந்தம்னு நான் கேட்டதுக்கு...
கணேஷ வச்சு ராம்குமாரக் கொல செஞ்சதே ஜெய்பிரகாஷ் தானு சொன்னான்."
"நான் அடுத்தக் கேள்விக் கேட்க வாய் திறக்க ; அவன் என் கண்ணுல மண்ணத் தூவிட்டான்.கண்ணக் கசக்கிட்டு நான் பாக்கறதுக்குள்ள அவுங்க ரெண்டு பேரும் ஓடிட்டாங்க சார்."
"அப்போ..நீ கணேஷ அரெஸ்ட் பண்ணி
கோர்ட்ல நிறுத்துனா... தன்னோடப் பேர அவன் சொல்லிருவான்னு அவனக் கொல்ல ஆட்களை அனுப்புவான் ஜெய்."
"ஆமா சார்.ஆனா கணேஷ், மிஸ்டர் ஜெய்பிரகாஷ் பேர சொன்னாலும் ,அவருதான் ராம்குமாரக் கொல்ல சொன்னார்னு எந்த எவிடென்சும் இல்ல"
"அதுமட்டும் இல்லாம ராம்குமார் வீட்ல கணேஷுக்கும், ராம்குமாருக்கும் இரண்டு நாளைக்கு முன்னாடி நடந்த வாக்குவாதமும்,அதை விமல் கேட்டதும் மிஸ்டர் ஜெய்பிரகாஷுக்குத் தெரிஞ்சிருக்கும் சார்."
"அதுனால கணேஷத் தூண்டி ராம்குமாரக் கொல்ல பிளான் பண்ணீருக்காரு.ஆனா வழக்கமாப் போற பார்க்குக்குப் போகாம ராம்குமார் வேறப் பார்க் போனதும், அங்க இருக்க சிசிடிவிய பாக்காம கொலப் பண்ணி கணேஷ் போலீஸ் கிட்ட மாட்டுனதும் ஜெய்பிரகாஷே எதிர்பாக்காமே நடந்தது."
"என்னால நம்பவே முடில மித்ரா..ராம்குமாரும்,ஜெய்பிரகாஷும் பிஸ்னஸ் எனிமீஸ்தான்.அதுக்காக ராம்குமாரக் கொல்ற அளவு ஜெய்க்கு என்ன வென்ஜன்ஸ் இருக்கும்."
"அதப்பத்தின இன்வஸ்டிகேஷன இப்பவே ஸ்டார்ட் பண்றேன் சார்"
"ஒகே மித்ரா. இதக் கொஞ்சம் சீக்ரட்டாப் பண்ணுடா..ஜெய் நம்ம சந்தேக வட்டத்துக்குள்ள வந்தது அவனுக்குத் தெரியக்கூடாது."
"எஸ் சார்"என சல்யூட் செய்தவன் அவர் தலையசைத்ததும் அவ்வறையை விட்டு வெளியேறினான்.
_____________________________
சாருமதி காப்பகம்.
தன் கைகள் இரண்டையும் மேல் நோக்கி நீட்டி,கால்கள் இரண்டையும் கீழ் நோக்கி நீட்டி,உடம்பை வளைத்து சோம்பல் முறித்தவாரே கட்டிலினின்று எழுந்தமர்ந்தாள் பூவழகி.
கட்டிலுக்கு நேர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து,தன் இரு கைகளிலும் தலையைத் தாங்கியிருந்த மீனாவின் இமைக்காப் பார்வையில் திடுக்கிட்டவள்.
"ஏய் மீனா...ஏன் இப்டி பாக்குறவ?"எனக் கேட்டாள் பூவழகி.
"அம்மாடியோவ்...ஒரு வழியா எந்துச்சுட்டியா ராசாத்தி"
"நான் எப்பவும் 5 மணிக்கெல்லாம் எழுந்துருவேன் மீனா"என பூவழகி பெருமையாய் கூறினாள்.
அவளை ஏறஇறங்கப் பார்த்த மீனா...
"சூரியனே எந்துச்சு 3 மணிநேரம் ஆச்சு..நீ நல்லாப் பப்பரப்பானுத் தூங்கி வழிஞ்சுட்டு,5 மணிக்கெல்லாம் எழுவேன்னு கதை விடுறியா?"என்றாள் மீனா.
"என்னடி உளறுற?"என்ற பூவழகி சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க; பெரிய முள் 12லும் , சின்ன முள் 9லும் இருந்தது.
"ஆத்தாடி மணி 9தாச்சா..."என மனதுள் அதிர்ந்தவள்.
தான் நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதியான உறக்கம் கொண்டதை உணர்ந்தாள்.சில காலங்களாய் அவளின் இறவுகள் அழுகையிலும், பயத்திலுமேக் கழிய, அதற்கு முற்றுப் புள்ளி வைத்தது போல் இருந்தது இன்று அவளின் தாமதமான விழிப்பு.
இதன் காரணத்தை யோசத்தவளுக்கு மித்ரசிம்மனின் முகமே நினைவு வந்தது.அதன் கோர்வையாய் நேற்றிரவு நடந்தவைகளை அசைபோட்டாள்.
மித்ரசிம்மன் கிளம்பியதும்,மீனாவின் அறையில் தன்னையும்,ஆராவையும் சுசிலாமா தங்க சொல்ல;குழந்தையுடன் அவ்வறைக்கு சென்றாள் பூவழகி.
தட்டில் 4 இட்லிகளுடன் வந்த மீனா"இந்தாப் பூவு..இத சாப்பிட்டுக்கோ.அப்பறம் இந்தக் கட்டில நீ எடுத்துக்கோ,பாப்பாக்கு ஒரு தொட்டில் வாங்கிடலாம்."என பேசிக்கொண்டிருக்க
"ஏன் மீனா...என்னைய இங்க கூட்டிவந்தாரே போலீஸ்காரரு அவரு யாரு?"என கேட்டாள் பூவழகி.
"நான் இங்க மூச்சு வாங்க பேசிட்டு இருக்கேன்.நீ ACP மித்ரசிம்மனப் பத்திக் கேட்டுட்டு இருக்கியா"என்க
"அச்சச்சோ...அவுக யாரு ACP மித்ரசிம்மன் ?.நான் கேட்டது நேத்து என்னையக் காப்பாத்திக் கூட்டிவந்தவர மீனா"என பாவம் போல் முழித்தவளைக் கண்டு தன் தலையில் அடித்த மீனா
"என் அறிவுக்கட்டி...உன்ன காப்பாத்திக் கூட்டி வந்தது தான் ACP மித்ரசிம்மன்.
"அப்டியா..."
"உனக்கு அவருப் பேரு தெரியாதா...இரு மித்ராண்ணாப் பத்தி சொல்றேன்."
என்ற மீனா...மித்ரன் சென்னையில் ACPயாய் வந்தநாளிலிருந்து இந்த 5 வருடங்களில் அவன் செய்த வீர தீர பராக்கிரமங்களைப் பற்றி கூறினாள்.
அவன் பலப் பெண்களின் வாழ்வைக் காப்பாற்றி இக் காப்பகத்தில் சேர்த்திருப்பதைக் கேட்ட பூவழகியின் மனம் அவளறியாமலே" இவனை ஏன் தான் முன்பே பார்க்கவில்லை.அப்படி பார்த்திருந்தால் தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் தட்டிக்கேட்டு அந்த பாழும்கிணற்றில் இருந்து தன்னை மீட்டிருப்பான் "என எண்ணியது.
தன் மானத்தையும்,தனது உயிருக்குயிரான ஆராவையும் காப்பாற்றிப் பாதுகாப்பான இடத்தில் விட்டுச் சென்ற மித்ரசிம்மனுக்கு ஒரு நன்றியும் சொல்ல மறந்த தன்னை மானசீகமாய் குட்டினாள் பூவழகி.
கடிகாரத்தைப் பார்த்தவாரே சிலையென சமைந்திருந்தவளின் தோழ்பட்டையை உலுக்கிய மீனா.
"இவ்ளோ நேரம் கண்ண மூடிக்கிட்டு தூங்குன ; இப்ப கண்ணத் தொரந்துட்டு தூங்குறியா?பசி உயிர் போகுது பூவு.சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா"என்க
மண்டையை உருட்டிய பூவழகி அறையில் இருந்த குளியலறைக்குள் நுழைய
"ஏய்.டிரஸ் எடுக்காம போற"என கத்திய மீனா.
"இந்தா உனக்கு சுடிதார், பேஸ்ட்,பிரஷ்,சோப் "என அவள் கைகளில் திணித்தாள்.
அவற்றைக் கண்டு பூவழகி கேள்வியாய் தன் புருவத்தைத் தூக்க
"காலேல கடைக்கு போய் என் சைஸ்ல உனக்கு ரெண்டு டிரஸ் ; பாப்புக்கு (ஆராதனா) ரெண்டு டிரஸ் எடுத்தேன்.வீக்கென்ட்ல உனக்கு தேவையான திங்செல்லாம் வாங்கிருவோம்"என்க
சரி என்பதாய் தலையசைத்து விட்டு பூவழகி நக்ர்ந்து விட கட்டிலில் கை ,கால்களை ஆட்டிக் கொண்டு தன்னைப் பார்த்து சிரித்த ஆராவின் அருகில் அமர்ந்த மீனா ;ஆராவிற்கு டவல் பாத் எடுத்து விட்டு,தான் வாங்கிய ஆடையை அணிவித்தாள்.
பூவழகி குளித்துவிட்டு வந்ததும் இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த காப்பகத்தை சுற்றி காட்டினாள்.
தரை தளம் முழுதும் வயதானவர்கள் இருக்க,முதல் தளத்தில் ஒரு பக்கம் நடுத்தற வயது பெண்களும், இன்னொருப் பக்கம் குழந்தைகளும் இருக்க, மூன்றாவது தளத்தில் இளம்பெண்கள் இருந்தனர்.
பூவழகி, ஆராதனாவை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த மீனா ; ஆபீஸ்ரூம் அருகில் இருந்த சமயலறைக்கு அழைத்துச் சென்றாள்.
"பூவு, சமைக்கிறது ,காய் நறுக்குறது, பாத்திரம் கழுவுறது, பரிமாறுறது எல்லாம் காப்பகத்துல இருக்கவங்க தான் செய்யனும்."
"நீ உனக்கு செய்யத் தெரிஞ்ச வேலையை செய்.எனக்கு எப்பவும் சாப்பிட மட்டும் தான் தெரியும் "என்ற மீனா சாப்பிடும் இடத்தில் அமர்ந்தாள்.
ஷாலை பின்புறம் முடிச்சிட்டு; சமயலறை நோக்கிச் சென்றப் பூவின் கைகளைப் பிடித்து தடுத்த மீனா "அம்மா பரதேவத...மொத பிரேக்பாஸ்ட் சாப்பிடலாம்.அப்பறமா நீ சமைக்கப் போமா"என்க
அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்துக் கொண்டே பூவழகியையும், மீனாவையும் அமரவைத்து டிபன் பரிமாறினர்.
ஆராப் பூவழகியை சாப்பிட விடாமல் சேட்டை செய்யவும் அவளைத் தூக்கிய பெண்மணி ஒருவள் விளையாட்டுக் காட்ட ; ஆராவின் கண்ணக் குழி சிரிப்பில் அவள் கண்ணத்தைக் கிள்ளி கொஞ்சினர் கிட்ச்செனில் இருந்த பெண்மணிகள்.
ஆராவின் சிரிப்பு சத்தத்தில் பூவழகியின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வடிய அதற்கு நேர்மாறாக அவளின் இதழ்கள் புன்னகையில் மிளர்ந்தது .
தொடரும்.