மயிலிறகு மங்கை 2
இரவு தூவிய சாரல் , குளிர் காற்று , அனைத்தும் அடித்து ஓய்ந்து விட்டது.
இரவும் கடந்து விட, காலை உதய மானது.
மங்கை, எப்போதும் காலை யிலேயே எழும்பும் பழக்கம் உடையவள், எந்த அலாரமும்,
அவளுக்கு தேவையில்லை, அவள் மனதே அவளுக்கு அலாரம்.
எழுந்தவுடன், முருகன் படத்தை பார்க்கும் பழக்கம் கொண்டவள்.....
முருகன் தான் அவளுடைய இஷ்ட தெய்வம்,
அதுவும் ,குழந்தை முருகன் படம், குழந்தை முருகன் சிரிப்பில் அவள் மனம் ஒவ்வொரு நாளும் புதிதாய், பிறந்தது போல் எந்த கவலையும்,சலனமும் இன்றி இருக்கும்.
காலை எழுந்து தன் காலை கடமைகளை, முடித்து விட்டு ,வீட்டின் பின்புறம் வந்தாள்,
வீட்டின் பின்புறம், ஒரு அழகிய குட்டி தோட்டத்தை உருவாக்கி வைத்திருந்தாள்,
ஒரு பக்கமாக காய்கள் இருக்கும் ,மற்றொரு பக்கம் பூஞ்செடிகள் இருக்கும், ஒருபக்கம் வாழை மரம் மற்றும், புதியதாய் அவள் வைத்திருந்த மாஞ்செடி இருக்கும், நான்காவது புறத்தில் ஒரு கிணர் அமைந்து மிக அழகாக காட்சியும்,நிம்மதியும் தரக்கூடிய ஒரே இடமாக அது திகழ்ந்தது.....
காலை கடனை முடித்தவள்,தன் கார்முகிலை சுருட்டி ஒரு கொண்டை போட்டுக் கொண்டு, தோட்டத்திற்கு வந்தாள்...
இரவு விழுந்த சாரலில் அனைத்தும், குளித்து முடித்து, மங்கை தயவு தேவையில்லை என்பது போல் ,அவளை பார்த்தது.
பின் வாசலை தாண்டியவளை தீண்ட
எப்போது வருவாள் என காத்துக்கொண்டிருந்த குளிர் காற்று அவள் உடம்பில் பட ,உடல் சிலிர்த்து,
உனக்கு நான் என்ன சலைத்தவளா என்று போட்டி போட்டுக் கொண்டு மூக்கை அடைந்தது மண் வாசனை.....
இயற்கை க்கு தான் அவள் மேல் எவ்வளவு காதல்......
அவளுடைய அன்புக்கு, இவைகளாவது மரியாதை அளிக்குமா.......
அனைத்தையும், நுகர்ந்தவள்,உணர்ந்தவள் , தனக்கு இன்று தோட்டத்தில் வேலை இல்லை என்பதை அறிந்து, பூக்களை பார்த்து புன்னகையித்தாள், பூக்களும் அவளுக்கு பதில் அளித்தது, காற்றில் தலையாட்டி...
உள்ளே சென்றவள், நேராக சமையல் கட்டிற்கு செல்ல,அங்கு மரகதம், காப்பி தயாரித்து ரெடியாக வைத்து இருந்தாள்,மங்கை க்கு டீ பிடிக்காது என்பதால்.....
ஏண்டி, மங்கா உன் தங்கச்சி எந்திச்சுட்டாளா, ம்ம்ம்.....எந்திச்சுட்டான்னு நினைக்கேன் மா...
என கூறி முடிப்பதற்குள்......
அம்மா, எனக்கு டீ என கோமு வந்தாள்
டீ எல்லாம் இல்ல இன்னிக்கு காப்பி தான் குடி..... என மரகதம் கூற..
ஆமா உன் பெரிய பொண்ணுக்கு டீ பிடிக்காது ன்னு டீயே மோட்டுறாத போம்மா, நானும் இந்த வீட்டில தான் இருக்க என்ன மறந்துடாத மரகதம் என மரகதத்தை இடித்து விட்டு சொன்னாள் கோமதி....
இதை பார்த்து, சிரித்துக் கொண்டே, குளியல் அறை சென்று, குளித்து விட்டு , வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் மங்கை,
தன் அக்கா, குளியல் அறை விட்டு ,வெளியே வந்ததில் இருந்து அவள் பின் குட்டி போட்ட பூனை போல் அவள் பின்னாடி யே அலைந்து கொண்டிருந்தாள் கோமதி......
இதைப் பார்த்துக் கொண்டிருந்த, மரகதம்....
என்னடி குட்டி போட்ட பூனை மாதிரி வேலைக்கு கிளம்புறவ பின்னாடி யே திரிஞ்சுகிட்டு இருக்க என கேட்க....
ஒண்ணும் இல்லமா, போ சமையல் கட்டுல உனக்கு வேலை இருக்கும் போய் அத பாரு என கூறிவிட்டு மீண்டும் தன் அக்கா வையே துரத்திக் கொண்டிருந்தாள்.....
ஏண்டி, என்னாங்கடி நடக்குது இங்க மங்கா நீ சொல்லுமா,சோலியும்,குடுமியும் சும்மா ஆடாது, என்ன நடக்குது உங்க இரண்டு பேருக்கும் .
அது ஒண்ணும் இல்லமா ,எனக்கு தோசை ரெடியா...எனக்கு லேட் ஆகுது....என மங்கை கேட்க,
இதோ எடுத்துட்டு வறேன் மா என சமையல் கட்டிற்குல் வேகமாக நுழைந்தார் மரகதம்...
மங்கை, காலில் உள்ள மர சோபாவில் உட்கார.....
அவள் முகத்தை பார்த்துவிட்டு..... இனியும் பொறுமையாக இருக்காத கோமு என கோமதி அவள் மனதிற்குள் சொல்லி விட்டு நேராக தன் அக்கா வின் முன் வந்து நின்றாள்.....
அக்கா... என வாய் எடுக்கும் முன் .....அவளை தன் கை சைகை காட்டி நிறுத்தியவள்......
போய் ,உன்னோட செல்ப்ல பாரு என மங்கை கூற ,துள்ளி குதித்து கொண்டு உள்ளே சென்றாள் கோமதி..
அதற்குள் ,மரகதம் தோசை கொண்டு வந்து விட, அதை சாப்பிட ஆரம்பித்தாள் மங்கை....
அக்கா... என கத்திக்கொண்டே வெளியே வந்த,கோமதி தன் அக்கா வை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தாள்..
நீ தான் என் செல்ல அக்கா, பட்டு அக்கா, என கொஞ்சி கொண்டிருக்க ...
மற்றொரு தோசையுடன் வெளியே வந்தவள் ,இவர்கள் பாசத்தை கண்டு, மெய்மறந்து விட்டாள்.....
ஏன்னடி, என்ன உன் அக்கா வ இப்படி கொஞ்சி கிட்டு இருக்க,அப்படி உன் அக்கா என்னதான் பண்ணா என்டயும் கொஞ்சம் சொல்லுங்கடி என மரகதம் கூற....
அம்மா, அக்கா எனக்கு பரீட்சை க்காக புது ஜாமன்டரி பாக்ஸ், கீரோ பெண் எல்லாம் வாங்கிட்டு வந்துருக்காமா......
உனக்கு ஒண்ணு தெரியுமாமா, அந்த முக்கு வீட்டு சுமதி இருக்கால்ல மா, .....
ஆமா அந்த பொண்ணும் உன் கூட தான படிக்குது......
ஆமாம்மா,முந்தானேத்து என் தோழி லெட்சுமி,வரலமா,கணக்கு வகுப்பில், ஜாமன்ட்ரி நடத்துனாங்கன்னு ,அவட்ட கேட்டா குடுக்கமாட்டேன்னு சொல்லி ட்டாமா...
கணக்கு செய்யாமல் நான் உட்கார்ந்து ட்டு இருந்தேன்னு மிஸ் நல்லா திட்டிட்டாங்க, எல்லார் முன்னாடியும், அத அக்கா ட்ட சொன்னேன், அதான் அக்கா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வந்துட்டா என் செல்ல அக்கா......
ஏண்டி இத மொதல்லயே சொல்லி இருந்தா ,அவ எப்போதோ வாங்கி கொடுத்து இருப்பாள்ள.... என்றார் மரகதம்...
இல்லமா, அக்கா இந்த வீட்டு மொத்த செலவையும் பார்க்கா, அவளுக்கு ஏன் மேலும் சொல்லனும், அது ம் ஜாமன்டரி வாரத்துல ஒரு நாள் தான் எடுப்பாங்க,அதனால லெட்சுமி மிட்ட வாங்கி சமாளித்து விடலாம்னு தான் மா ,சொல்லல....
மரகதம் தன் இரு பிள்ளை களின் பாசத்தை கண்டு, ஆனந்த கண்ணீர் வடித்தாள்......
கோமு வீட்டு செலவு,அதெல்லாம் பத்தி நீ ஏன் கவலைப்படுற, எதப்பத்தியும் யோசிக்காம உனக்கு என்ன வேண்டுமோ அத மட்டும் அக்கா கிட்ட கேளு..... எனக்கு வேற யாருடி இருக்கா, உன்னையும் அம்மா வையும் விட்டா எனகூறி தன் தங்கை யின் நெற்றியில் முத்தம் மிட்டாள் மங்கை
ஆண்டவா, என் காலத்துக்கு பிறகும்,இதுகல இப்படி யே சந்தோஷமா,ஒத்துமையா வைச்சுக்கப்பா,என கடவுளை வேண்டிக்கொண்டார்....
சரிம்மா, நான் கிளம்புறேன்....என மங்கை கூற ..
பேசிக்கிட்டே மதிய சாப்பாட மறந்துட்டு போற...என ஓடி வந்து மதிய சாப்பாடு பாக்ஸை மங்கை யிடம் கொடுக்க....
அதை வாங்கி, தன் ஹேண்ட் பேக்கில் வைத்து கொண்டு, வேகமாக பஸ்டாப்பை நோக்கி நடந்தாள்.....
போகும் வழியில் வழக்கம் போல டீ கடையில் ஒரு பன் வாங்கி, அதை அங்கு குப்பை தொட்டிக்கு அருகில் இருக்கும் ஒரு வயதான நாய்க்கு போட்டு விட்டு,
நேராக தெரு முச்சந்தியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று, அவரையும் கும்பிடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தாள்......
இவ்வளவும், அவளின் தினம் தினம் வாடிக்கையாக செய்யும் செயல்கள்......
வேகமாக பஸ் நிறுத்தத்திற்குன வந்தவள்,பஸ்க்காக காத்திருந்தாள்....
இன்றும் ஆண் துணை அற்ற நடுத்தர குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் தான், அவர்களின் ஒரு சின்ன சின்ன தேவைகளும் அவர்களுக்கு ஒரு பெரிய விஷமாக தோன்றும்,அதற்காக அவர்கள் சில நாட்கள், அல்லது மாதங்கள் கூட காத்திருக்கும் நிகழ்வுகளும் நடக்கும்........
மயிலிறகு மங்கை 3
தன் தங்கையின் ஆசை அனைத்தையும், நிறவேற்ற வேண்டும், தன் அம்மா வை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதே
மங்கை யின் வேண்டுதலே தவிர தனக்கென எந்த ஒரு ஆசையும் அற்றவளாய் வாழ்ந்து வந்தாள்,
பேருந்து நிறுத்தத்தில், தான் ஏறும் பஸ்க்காக காத்திருந்தாள்..
பஸ் வந்து விட்டது, என்று நினைப்பதை விட அதில் எப்படி பயணம் செய்ய போகிறோம் என்பதே மங்கை யின் பெரிய கவலை யாக இருந்தது...
காரணம் பஸ்ஸில் ஆணும், பெண்ணுமாக, கூட்டம் நிரம்பி வழிந்தது.....
நாட்டில் வேற பேருந்தே இல்லை என்பது போல் கூட்டம் ......
தேன் கூட்டில், தேனீக்கள் போல் இருந்த மக்களுக்குல், மங்கையும் ஒரு தேனீ ஆனால்....
மேல் உள்ள கம்பியை பிடித்து கொண்டு நிற்கமுடியாமல் நின்றாள்......
இதில் இலவசமாக கிடைக்கும் சில இடிப்புகளும் , சில தடவல்களும், அவளை அந்த சிறு இடத்திலும் நிற்க விடாமல் செய்து....கொண்டிருந்தது..
என்ன பண்ண , நடுத்தர குடும்பத்து பெண் வேலைக்கு செல்வது என்பதே பெரிய சவாலான ஒரு விஷயம், அதிலும், பேருந்தில் பயணம் செய்வது என்பது அவர்கள் தினம் தினம் ஏறும் இமயமலை மாதிரி.....
கொஞ்சம் அசெளகர்யம் பார்த்தாலும் , வேலைக்கு செல்லும் இடத்திற்கு லேட் ஆகிடும்......
அதானலேயே பல பெண்கள் அதை கண்டும் காணாதவாறு கடந்து விடுவார்கள்.....
ஆனால் மங்கை அவ்வாறு இல்லை, அவள் தன் கையில் கேர்பின் ஒன்றை எப்போதும் வைத்திருப்பாள், எதாவது தோள் இடித்தாலோ, இல்லை, தடவினாலோ, அது அவர்களை ஒரு பதம் பார்த்து விடும்....
இவள் ஏறும் பேருந்து நிறுத்ததிற்கு அடுத்த நிறுத்தத்தில் , இவள் தோழி உஷா ஏறுவாள்,..
உஷாவும், மங்கை போன்ற நிலையில் தான் உள்ளால், அவளுக்கு ஒரு தங்கை ஒரு தம்பி,,
தன் தம்பி நாளை படித்து நல்ல வேலைக்கு சென்று தன்னை இளைப்பாற வைப்பான் என்பதே உஷாவின் கனவு, .....
உஷாவும் பேருந்தில் ஏறிவிட்டாள், தோழிகள் இருவரும் தங்கள் பாதுகாப்பு ஆயுதங்களுடன், பயணம் செய்தனர்......
அந்த இடிபாடுகள், கூட்ட நெரிசல் மத்தியிலும், பேசி சிரிப்பதற்கு என்று தோழிகளுக்கு விஷயம் இருக்கும்.......
அவர்கள் இறங்கும் இடமும் வந்தது..........
அருணாசலம் கார்மென்ட்ஸ்,.....
அந்த ஊரிலே,மிகப் பெரிய கார்மென்ட்ஸ்....
அங்கு கிட்டத்தட்ட 200 பெண்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள்,
ஓவ்வொரு யூனிட் க்கு 50பெண்கள் வீதம் நான்கு யூனிட் அந்த காரமென்ட்ஸ் உள்ளேயும் இருக்கும், 4 யூனிட் க்கும் 4சூப்பர்வேசர், ஒரே ஒரு மேனேஜர், ஒரு டசைனர் என்ஜினீயர் என அங்கு வேலை செய்கின்றனர்.
இருவரும், வாசலில் இறங்கி வேக வேகமாக, கார்மென்ட்ஸ்க்குள் நூழைந்தனர்.....
வாங்க மா முதலாளிகளா, வர்ற நேரமா இது என ரங்கசாமி நக்கலாக இருவரையும் பார்த்து கேட்க, ....
சூப்பர்வேசரே... என்ன நக்கலா இரண்டு நிமிடம் தான லேட்டு.....என உஷா கூற....
இரண்டு நிமிடம் உங்களுக்கு நிமிடம் இல்லையா.... வாங்க வந்து இந்த லேட் ரிஜிஸ்டர் ல கையெழுத்து போடுங்கள்....
என்ன சார் பஸ்ல ஒரு கூட்டம், இறங்கி வர்றதுக்குள்ள இரண்டு நிமிடம் ஆகிட்டு இன்னைக்கு ஒரு நாள் விடுங்க சார் என மங்கை கேட்க..
இந்தா பாரு மங்கை நீ எவ்வளவு பவ்வியமா கேட்க, இந்த ராங்கிய பாரு... மங்கை க்காக எதனாலும் விடலாம் என பல் இழிக்க....
அந்த இடத்திலேயே அவன் பல்லை
உடைக்கும் அளவுக்கு, இருவருக்கும் கோபம் வந்தது....
ஆனால் அவனிடம் அதை காட்ட முடியாது, காட்டினால், ரங்கசாமி, ராட்சசனா மாறிடுவான், அவர்கள் தைக்கும் துணி சரியாக இல்லாமல் போய்விடும், ஒரு வேலைக்கு இருவேலை செய்ய வைத்து விடுவான்...
நேற்று மங்கை, வீட்டிற்க்கு லேட் ஆ போனதும் அதனால தான்......
அடியே மங்கா, இவன் பல்லு என்னால தான் ஒரு நாள் உடையும் பாரு என ஆத்திரத்துடன் சொன்னாள் உஷா....
சரி டீ நீ ஏன் நேத்து வீட்டுக்கு லேட் ஆ போன அம்மா எனக்கு பக்கத்து கடைக்கு போன் பண்ணி கேட்டாங்க......
அமாடீ, இந்த ரங்கசாமி நேத்து, நம்ம சுப்புக்காவ உட்கார வைச்சுட்டான்.. அது ரொம்ப பயந்துட்டு, நேத்து வேற நீ லீவா...
அதான் அதுக்கு துணைக்கு நான் உட்கார்ந்துட்டேன்...
ரங்கசாமி என்ன பண்ணன்னு தெரியாமல், இங்கே யே சுத்திட்டு இருந்தான் ..... அதான் வீட்டுக்கு போக லேட் ஆகிட்டு.......
அட சண்டாளப்பாவி, அவன் நல்லா வே இருக்க மாட்டான், கொள்ளையில போறவன் , விளங்குவானா .....
அந்த அக்கா வே ,இரண்டு புள்ளைங்க, உடம்பு சரியில்லாத புருஷன வைச்சுக்கிட்டு, வேலைக்கு வருது,, இதுல இந்த படுபாவி
தொல்லவேற என ஏசிக்கொண்டே இருவரும் தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்தனர்...
வீட்டின் ஏழ்மைக்காக வேலைக்கு வரும் பெண்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல, அதை சொல்லி மாளாது......
இருவரும் தங்கள் இருக்கையில் அமர அவர்களுக்கான துணிகள் வந்தது,
தைக்க ஆரம்பித்தனர் .................
மதிய இடைவெளியும் வந்தது,, கார்மென்ட்ஸ் க்கு பின்னாடி ஒவ்வொரு யூனிட் க்கும் தனியாக செட் அமைத்து கொடுத்திருப்பார்கள்...
அனைவரும் அதில் உட்கார்ந்து தான் சாப்பிடு வார்கள்......
மங்கை சாம்பார் மற்றும் காய் கூட்டு கொண்டு வந்திருந்தாள் , இன்று உஷா வெறும் பழையதும் ஊர்காவும் மட்டுமே .....
என்னடி உஷா, இன்னிக்கு பழையது,என மங்கை கேட்க...
அதுவாடீ நேத்து, என் தம்பி சாப்பிட வேண்டிய சோறு, நாயி நேத்து அவன் பிரண்டு வீட்ல சாப்பிட்டு வந்துட்டு,
அதான் அம்மாவ காலையில சோறு ஆக்காத மா, நான் இதயே கொண்டு போறேன், உங்களுக்கு மட்டும் மதியம் ஆக்கிக்கோங்க ன்னு சொல்லிட்டேன்..........
அரிசி விக்குற விலைக்கு, சோற வீணாக்கலாமா ........என உஷா கூற
சரி வா ,இரண்டு பேரும், இரண்டையும் ஷேர் பண்ணி சாப்பிடுவோம் என மங்கை கூற...
வேண்டாம் டி என உஷா கூறியும் கேட்காது ,இருவரும் இரு வீட்டு சாதத்தையும் பகிர்ந்து சாப்பிட்டனர்.........
ஆம் சில இடங்களில் உணவின் அருமை தெரியாமல் சிலர் இருக்க....
ஒரு சோற்று பருக்கையை கூட வீணடிக்காமல் ,பல பேர் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்....
அன்றைய நாள் நல்லபடியாக முடிய, இன்று ரங்கசாமி யிடம் யாரும் சிக்க வில்லை.....
வீட்டிற்க்கு கிளம்பும் நேரம் வரவும், அனைவரும் வரிசையில் நின்றனர்...
இது அனைத்து பெண்களுக்கும் மற்றும் ஒர் அக்னி வாசல்...
ஆம் இதே ரங்கசாமி தான் அனைவரது பையையும் , சோதனை இடுவான்.....
அவன் தொடுவது பை மட்டும் அல்ல ,பெண்களின் கைகளையும் தான்....
ஆனால் அவனது ,கை மங்கை மேலும் , அவள் தோழி மேலும் பட மிகவும் யோசிக்கும்...
அதற்கும் ஒரு காரணம் உண்டு......
அதற்கு ரங்கசாமி கையே சாட்சி....
அப்படி என்ன காரணம்,,,, சாட்சி பொறுத்து இருந்து பார்ப்போம் நடக்கும் வேடிக்கை யை...... ......
மங்கை வருவாள்