SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தன்னை கூட்டிவர வேண்டாம் என்று மனைவி போனை அணைத்துவிட்டாலே"... அது ஒன்றே மனதில் பற்றி எறிய அங்குமிங்குமாய் அலைப்புறும் மனதினை அடக்க முடியாது போக நடை பயின்ற வீரபொழிலன் அப்படி அந்த டயரியில் என்ன தானிருக்கும் என்றவாறு அதை கைகளில் தூக்கி கொண்டு வாசலில் அமர்ந்தான்...
"வீர பொழிலன் என் வாழ்க்கை" ஆரம்பத்திலேயே அவள் தன் வாழ்கையே இவன் தானென்று குறிப்பிட்டுத்தானே அந்த டயரியே எழுத ஆரம்பித்திருந்தாள் அப்போதே அவளின் மனதின் காதல் அந்த மூடனுக்கு புரிந்திருக்க வேண்டாமா...
"முதல் முதலாய் ரத்தம் சிந்திச் சென்ற அந்த பையனின் கண்களின் வலி உடலின் வலியை விட அதிகமாய் இருந்ததாலோ எண்ணமோ என் உறக்கங்களை பிடித்துக் கொண்டான அவன் மீதான என் குற்ற உணர்வில்,
உருவ,அந்தஸ்த்து வேற்றுமையில் சமூகம் அவனை ஒதுக்கிய போது இறக்கமும் அழுகையும் ஒரு சேர மனதினை நனைத்தது மீண்டும் அவனது கண்கள் தான் நினைவில் எழுந்தது நீயும் மறைமுகமாய் அதற்கு காரணமாகி விட்டாய் என்று சொல்லும் போது,
மருத்துவ பள்ளியிலே என் சுய மிளந்து நான் தொலைந்து கொண்டிருந்த போது பசி என்ற சொல்லிற்காய் சுடுதண்ணியையும் கடுச் சொற்ஙளையும் வாங்கி கொண்டு இன்னொரு ஒரு உயிரின் பசியை அவன் தீர்த்த காட்டுசி ஒரு நாள் என் கண்களில் பட்டபோது....மீண்டும் அந்த கண்கள் குற்ற சாட்டியது என் மனதுக்குள் நீ இந்த ஞாயத்தை எனக்கு இழைக்க தவறிவிட்டாய் என்று,
முழுதாய் என் படிப்பிற்குள் தொலைத்துவிட்டேன் என் கனவுகளை என்று எண்ணி கோளையாய் நான் ஓடிவிட நினைத்த போதும்..
யாதொன்றும் இல்லாத நிலையில் உன் கணவுகளை நீ மீட்டிக் கொண்டிருந்தாய் ...உன்னால் முடிந்த ஒன்று எண்ணால் முடியாதா என்று என்னை நீ சிந்திக்க செய்ய முதல் நொடி,
திருமணப் பந்தத்தில் என் அன்பு அப்பா பார்த்த மாப்பிள்ளையை பார்த்துமே அவனது முகம் சில நொடி கூட கருத்தில் பதித்து பார்க்க கூட முடியாது என் மனதின் ஓரத்தில் கேள்வி கேட்டு நின்றது உன் கண்கள்,
பொய்யாய் உன் வாழ்வில் காதல் என்னும் நிழல் கொண்டு உள் நுழைந்தேன் உன் கண்களுக்கு பதில் சொல்ல
ஒரு பெண்ணாய் உன் வளர்ச்சியின் பின் நான் மட்டுமிருக்க சுயநலம் கொண்டேன்,
தனித்து ஓட பயந்த என் சிறகுகளை உன் சிறகளுக்குள் மறைமுகமாய் நான் இணைதேன்
பொய் பிழைதான் அன்பே அதன் முடிவில் நலன் மட்டுமே உள்ளடக்கம் என்றால் துணிந்தே இக் காரியதில் இசைந்தேன் ...சுயநலமான இந்த உலகில் நிலைத்து வாழ".....
அதோடு அந்த டயரியில் அந்த கோர்வை எழுதாது நிறுத்தபட்டிருந்தது.
அவளின் வார்தைகளின் ஓசை முரண்பாடான அர்தத்தை கொடுத்தாலும் அவள் மேல் காதல் கொண்ட கணவனாய் அவன் ஆழ்ந்து வாசித்திருந்தால் அதில் அவளுக்கே விளங்காது போன காதல் அவனுக்கு விளங்கியிருக்கும்.
"மோஜோ நான் ஜித்துவை மகாம்மா கிட்ட விட்டிட்டு வந்திருக்கேன் .... அங்க படம் பிரீமியர் என்னும் இரண்டரை மணி ரேரத்துக்குள்ள ஆரம்பிச்சிரும் நீ எங்க சார்புல போய் அதை கண்கானிச்சுக்குறியா.. அது தொடங்கி முடியிற நேரத்துல எந்த மாற்றமும் இருக்க கூடாது ...நான் வீராவை கூட்டிட்டு வரேன்"
அவர்களுக்குள் ஆரம்பித்திருந்த பனிப்போரை புறிந்தவனாய் மறு பேச்சின்றி மோஜோ கலம்பி சென்றுவிட வீட்டு மொட்டை மாடியில் வெறிச்சோடி இருந்த அமாவாசை வானை இலக்கற்று வெறித்தபடியிருந்த வீரபொழிலனது மனம் தன்னவளின் காதல் பிழைத்து போனதே என்று உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்க அங்கே இன்னொரு புறம் தன் உருவாக்கத்தில் வெளியாகும் படைப்பைக் கூட பார்க்க தோன்றாது யாருக்கோ வந்த விருந்தாக நின்றிருந்தான்.
"வீரா......" என்று அவனது தோளின் மேல் கரம்பதித்தவளிடமிருந்து அழைப்பு மென்மையாக அதே நேரம் அழுத்தமாக வெளிவர அது அவளது உறைந்த நின்ற அவனது உயிரினை தீயில் பட்ட மெழுகாய் உருக்கி எடுத்தது இருந்தும் அவனிடம் பதிலும் இல்லை அசைவுமில்லாது போக
"வீரா மீடியா பேப்பர்னு ஸீபிரெட் ஆஆகுற நியூஸஸ் நல்லதோ கெட்டதோ நம்ம வேலைய நாம கவணிச்சிட்டு அதை தாண்டு வாழ்றது வாழ பழகு அப்ப தான் முன்னேரனும்னு எனக்கு சொல்லித் தந்ததே நீங்க அப்படி இருக்க எதுக்காக இப்படி துவண்டு போய் இருக்கீங்க"...அவனை தன் பக்கமாய் திருப்பி அவள் இவ்வாறு இப்படி கேட்கவும்.
"ஏன் ராவணி உன் குற்ற உணர்வை போக்குறதுக்கு காதலை மையமா வச்சு என்னை கல்யாணம் செஞ்சுட்ட"....அவனோ வேறு கோணத்தில் கேட்டு மொத்தமாய் அவளை அதிர்ச்சியாக்கினான்.
"வீரா....என்னாச்சு உங்களுக்கு ஆர் யூ ஓலீ ரைட்..” என்று நெறுங்கியவளிடமிருந்து விலங்கி நின்றவனை கண்டு கண்கள் சுருங்க
“நமக்குனு ஒரு வாழ்க்கை அதுக்கு அழகான அச்சாரமா நம்ம பையன்னு நம்ம குடும்பம் முழுமையானதுக்கு அப்ரமா எதுக்கு இந்த அபத்தமான கேள்வி...? நாம வேணுன்னா உங்களுக்கான பட பிரீமியர் முடிஞ்சதும் பேசிக்கலாம் இப்போ கலம்புங்களேன் பிளீஸ் ".. இன்று அங்கு நடந்தேறப்போகும் நிகழ்வுக்காய் அவனை விட மறைமுகமாயும் திவிரமாயும் அவள் காத்திருந்து அந் நாளும் மலர்ந்நுவிட அதன் தாற்பறியம் அறியாத கணவனோ அதைவிட அறியாமையில் விளக்கம் கேட்டு நிற்கிறான்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு தானே மனைவியை கண்டு இகழ்சியாய் உதட்டை சுளித்தவனோ
"அதுசரி இந்த படம் உன் புரொடக்சன்ல உருவானதுல..அதான் பதர்ர..
கோபமாய் இடை நிறுத்தியவள்..
"வீரா வந்து விழுந்த வார்த்தைகளை திரும்ப எடுக்க முடியாது பார்த்து பேசுங்க".... கோபமாய் சொன்னவளை கண்டு கேலியாய் உதட்டை சுழித்தவனா அதான் உன் டயரி அது நிறைய பேசியிருக்கே என்று அவளின் மேல் அதை விட்டெறிய எப்போதோ அவள் தூக்கிப்போட்ட டயரி ஆயிற்றே இது இதெப்படி இவன் கையில்
எங்கோ ஒரு தவறு நடக்கிறது அதை ஊகித்து அவள் கண்டு பிடிக்க முன்னராக அவனது பேச்சுகள் கூரிய ஆயுதங்களாய் அவளது அன்பை சோதிக்க என்றே விழுந்தன.
"சொல்லு.... வைபவ் வார்தைக்கு வார்த்தை ராவணி உன்னை காதலிக்கலை அது உன் மேல பரிதாபப்பட்டு அவ வச்ச பாசமினு சொன்னப்போ கூட அவனை அடிச்சு துவைச்சுட்டு உன் மேல இருந்த நம்பிக்கையில தானே இத பத்தி ஒரு வார்த்தை கேட்காம இருந்தன்"......
"ஆனா உன் பரிதாபத்தையும் இறக்கத்தையும் பாசம்னு பிச்சைவாங்கிட்டே இந்த வாழ்க்கையை ஆரம்பிச்சிறுக்கேனு தெரியவந்தப்போ உடம்பெல்லாம் எரியிது ....அந்நைக்கு பகிரங்கமா சுதந்திரமா வாழ்ந்த என் வாழ்க்கை இன்னைக்கு அந்தஸ்த்துக்கு அடிமாயாகி தொலைஞ்சிறுச்சு.." தன் கோபத்தை சுவற்றில் குற்றி தீர்த்து ரத்தம் வர நின்றவனது பேச்சில் அவளது மனமும்தான் ரத்தகண்ணீர் வடிக்கிறது அவள் காதல் என்ற சொல்லின் அர்த்தம் அப்போது சொல்லும் போது வேண்டு என்றால் சந்தர்பத்திற்காக சொல்லியிருக்கலாம் ஆனால் அதன் பின் அவன் மேல் அன்பு கொண்டு தானே தன்னை ஊணோடு உயிராக அவள் சமர்பித்தால் அவனிடம் ..
அவளை பொறுத்த வரை காதல் என்று எதைச் சொல்ல வருகிறான் இவன் என்ற ஆதங்கமே நிரம்பியிருந்தது ...அன்பின் பரிநாமம் காதலெனில் தன்னுடைய அன்பை எப்படி கலங்கபடுத்திட முடியும் எந்த வகையில் பிழைத்து போயிருக்கும்
"எதுக்காக இவ்வளோ கேட்டும் கல்லாட்டம் இருக்க வாயை திறந்து பதில் சொல்லேன்.... உன் முகத்துல இருக்க அமைதி என்னை பயமுறுத்துது" ...
உணர்ச்சி வசப்பட்ட பொழிலனது வார்தைகளை தன்னிலையடைந்தவளுக்கு அதை ஜீரணிக்க முடியவில்லை... எட்டுவருட அவர்களின் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று.
சில நொடி தன்னை நிலைபடுத்தி வந்த கண்ணீரை உள்வாங்கிக் கொண்டவளோ .....
"ஸ்சோ ....பேச வேண்டியதெல்லாம் பேசிட்டிங்களா மிஸ்டர் வீரபொழிலன்...... அவனை பெயரிலேயே தள்ளி நிறுத்தி தீட்சான்யமாய் பேச ஆரம்பித்தவள்...
"நீங்க மட்டுமில்ல நானுந்தான் நம்பிட்டிருந்தன் இந்த உலகத்துல எம் புருஷன் அவர் மட்டும் தான் என்னை நல்லா புரிஞ்சு வச்சவர்னு
ஆனா இப்போ தானே தெரியிது அவருக்கு பாசத்துக்கும் கருணைக்குமே வித்தியாசம் தெரியாதுனு...ஸ்சோ சேட் ல"...
கொஞ்சம் கொஞ்சமாய் காரசாரமாய் அவளது பேச்சு தொணி ஏற தொடங்கியது கண்ணின் வெம்மை அவளது உறவுக்கு அவள் நேர்மையாய் தான் இருந்தாள் என்பதை வலியுறுத்த.
அவனது சேர்ட் கோலரை பிடித்து தன்னருகில் நெறுங்கச் செய்தவள் அவனது கண்களையே ஆழ்ந்து பார்த்த படி....
"பதினேழு வயசுல இருந்தே பிஸ்நஸ் அது இது எங்க அப்பா கூடயும் தாத்தா கூடயும்வேலைய கத்திட்டிருக்கும் போதும் சரி நானே தனிச்சு அதை ஆரம்பிச்சதுக்கு அப்பரமும் சரி எத்தனையோ பேர் தெரிஞ்சும், தெரியாமலும் என்னால பாதிக்கபட்டிருக்காங்க, சில நேரம் பரிதாபட்டு அவங்களுக்கு உதவி செய்திருக்கேன் அதை இல்லேனு மறுக்கல, ஆனா சில நேரம், அதை தூசு மாதிரி கடந்து போய்ட்டே இருந்திருக்கன்....ஆனா அவங்கள்ள யாருக்கும் என் வாழ்கையையும் சரி, ப....கைளையும் சரி நான் வேற யார் கூடயும் வெறும் இறக்கத்துக்கும் கருணைக்காகவும் பங்கு போடலை".....
"பாப்பா.....!!!!!....ஏண்டி இப்படி பேசுற" அதிர்ந்து போன வீரபொழிலன் அவசரமாக விரைந்து அவளது வாயை மூடிவிட அதில் வெளிப்பட்ட நடுக்கமே சொல்லாமல் சொல்லியது அவளை நேசிக்கும் அவனது இதயத்திலும் பேச்சிலும் அவளை கலங்கபடுத்தி கேட்க அவனால் முடியவில்லை என்பதை.
அவனை இதில் நாளில்லாத அளவில் தன்னோடு பலம் கொண்ட மட்டும் இழுத்தனைத்துக் கொண்டு அவனுள் புதைந்தவளின் வெம்மை அவளின் வதனங்களிலிருந்து வெளிப்படுத்தாத காதலை போலவே தன் செயல்களில் விளக்கியது,
சண்டை போட்டு உறவினை வெட்டி எறிந்திட ஆயிரம் காரணங்களும் ஒரு நொடியும் போதும்... ஆனால் எனக்கு வேண்டியது அவனுடனான பிரிவினை இல்லை ஒரு முறை விட்டு யுகம் தாண்டி கிடைத்த வரத்தை தன்னிடத்தே தக்க வைத்துக் கொள்ள பிடிவாதமாய் நின்றது அவளின் மனம் .. அதே நேரம் அவளது சீண்டபட்ட தன்மானமும் பற்றி எறியாது கனலாய் ஒரு ஓரம் புகைந்து கொண்டிருந்தது.
அவனது இருபாதங்களும் அவளது பாதங்கள் ஏறிக் கொள்ள தனது பாதங்களில் தன் தலைவியின் பாரத்தை சுமந்து தாங்கியபடி அவளை தன்பிடியின் சிறையில் அவனது கைகள் மூடி வளைத்து பிடித்திருக்க தூர ஆம்பித்த மழைசாரலில் நனைந்த படி பின்னோக்கி நகர்ந்தான் அவள் அதில் நனைந்துவிடக் கூடாது என்று.
அவளோ அவனையே ஆழப் பார்தபடி அசைய மறுத்த்தால் “பார்வைகள் குற்றம்சாட்டி ஞாயம் கேட்க...இதழ்களோ அவனிடம் சண்டை போட்டு விடக்கூடாது என்று இறுக மூடிக் கொண்டிருந்தது..
இவ்வளவு நேரமாய் அவளை சாடிய அவன் தான் இப்போது ஒரு நொடி தளர்ந்து போனான் அருகாமையில் அவளின் அமைதி அவனுள் அவளுக்காக இருக்கும் வக்கீலை தட்டி ஞாயம் கேட்டது... அவசரபட்டாயோ மூடா என்று போர் கொடி காட்ட.
கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த அவளிடம் தானாகவே அவனது இதழ்கள் முனுமுனுத்தது “மன்னிக்க மாட்டாயா”..என்றவன் தன்னுடைய நெற்றி மூக்கு இதழ்களை அவளோடு உரசிக் கொள்ளும் நெறுக்கத்தில் அவளின் முகம் மேல் குணிந்து தன் முகத்தை சாய்ந்திருக்க..
அங்கே வன்மையான யுத்தம் ஆரம்பிக்காது நெறுக்கத்தின் வழியே மென்மையாய் தங்கள் மனதினை மௌணத்தின் பாசையில் பகிர்ந்து கொண்ட இருவரது அமைதியினை உடைந்தத மழையின் வேகமானவருகை
இந்த எட்டுவருடத்தில் கையிலெடுக்கலாத வன்மையில் அதை முற்றுப் பெறச் செய்திருக்க.
முத்தமிட்டு தன் தேடலை அவன் சீக்கிரத்திலேயே முடிக்கும் அளவுக்கு நடந்து கொண்ட பெண்ணவளின் தீவிரத்தில் அவன் யோசனையில் விலகிய போது உணர்வுகள் துடைத்த முகத்தோடு எழுந்தவள் அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் பழைய காயம் இருந்த அதே இடத்தை அங்கிருந்த கண்ணாடி குவலையை உடைத்து காயப்படுத்திக் கொள்ள...
“ஏய் பைத்தியமாடி ஏன் இப்போ கையை கிழிச்சு கிட்ட” கர்ஜித்து கத்தியபடி அவன் அவளை நோக்கி ஓடிய போது...
“கிட்டவராதே அங்கயே நில்லு” அவனை விலக்கி நிறுத்தியவள் “எனக்கு நீ தேவையில்லாம கேள்வி கேட்கும் போது உள்ளுக்கு ஏற்கனவே வலிச்சு முடிஞ்சிறுச்சு....இது ஜஸ்ட் உனக்கான டெமோ தான்
“உங்கூட நடந்து முடிஞ்ச சம்மவத்தையும், இதையும் உன் கணக்குள எப்படி வேனா எடுத்துக்கோ....ஐ நெவர் மைன்ட் பட் உனக்கு பொண்டாட்டியா வலைஞ்சு குடுக்குற இந்த ராவணியால ஆப்பிசியலா எதுக்கும் சலிஞ்ச்சு போக முடியாது கெட் ரெடி ப்போர் யுவர் மூவி பிரிமியம்”
தன் வலியை அவனுக்கு கொடுத்த திருப்தியில்
கபோட்டில் அவனுக்காக எடுத்து வைத்திருந்த கோட் ஷுட்டை எடுத்து கட்டிலில் விட்டெறிந்நவள் கடகடவென்று தன் மாற்று உடைகளை கைகளில் எடுத்துக் கொண்டவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டால்.
பெண் என்பவள் சரியாக ஒரு கடலைப் போன்றிருப்பாலாம். சில நேரங்களில் புயலைப் போன்றிருப்பவளோ இன்னும் சில நேரங்களில் அமைதியாகவும் இருப்பாள். கடலில் அலைகள் எழுந்து வருவதைப் போல் ஒரு பெண்ணின் மாறுதல்களும் எந்த நேரத்தில் வருமென்று சொல்ல முடியாது
மனைவியின் மாறுதல்களில் மலைத்துப் செய்வதறியாது விலகியவளையே வெறித்தபடி உறைந்து போய் இருந்த வீரபொழிலனின் மனதில் என்றோ படித்த பேர்னாட் ஷாவின் இவ்வரிகள் தன் முன்னே உருப்பெற்ற உலவும் மனைவி வழியே அது நிஜம் தான் என்று நம்ப தோன்றியது.
**************
அங்கே அந்த தியேட்டர் வலாகத்தில் நடக்க இருந்த சினிமா பிரீமியருக்காய் சினிமா விஐபி , ஸ்பான்சர்ஸ், மீடியா, உடன் ராவணியின் அழைப்பை ஏற்று எக்ஸ்.எம்மல்யேவும் வைபவின் தந்தையுமான திருநாவு , சுபாஷ் உடன் அவளது தந்தை,தாய்,தம்பியார் என்று அங்கே கூடியிருந்தனர்.
“அண்ணா...பொழிலு அண்ணும் மேடமும் என்னும் வந்து சேரலையானு கேள்வி மேல கேள்வியா வந்திட்டிருக்கு” மோஜோவின் காதுக்கருகில் அவர்களது யுனிட்டை சேர்ந்த பையன் முனுமுனுக்க “அவங்களுக்கு தாண்டா கோல் பன்னிட்டேயிருக்கேன் ரெண்டு பேர்ல ஒருத்தரும் எடுத்து துளையிறாங்க இல்ல”
அது அப்படியிருக்க தங்களுக்கு ரிசவ் செய்ய பட்ட சீட்டில் தந்தையின் அருகில் அமர்ந்திருந்த மைதிலி...
“ப்பா நீ செய்யுறது கொஞ்சம் கூட ஞாயமே இல்ல..இந்த ராவணி தனக்காக எவ்வளவு விளக்கம் சொன்னாலும் இப்போவுமே அவங்களை சுத்தமா பிடிக்கலை அப்படியிருக்க இதுக்க நீங்க வாறதே தப்பு இதுல என்னை வேற கட்டாயபடுத்தா உட்கார வச்சிறுக்கீங்களே”
இங்கே வந்தில் இருந்தே முகத்தை தூக்கி வைத்தபடி அடிக்குரலில் நச்சரித்துக் கொண்டிருந்த மகளை நோக்கி தீர்க்கமான பார்வையோடு...”ஜஸ்ட் ஸ்டாபிட் மைதிலி டோன்ட் பீ சில்லி ...எனக்கு எங்க வரனும் வரக்கூடாதுனு தெரியும்.இங்க வரும் போது எதுக்கு நைட் டைம்ல பொண்ணை விட்டிட்டு வரனும்னு நெனச்சுட்டு தான் கூட்டிட்டு வந்தேன் பிடிக்கலைனா கலம்பி மோய்ட்டேயிரு எனீனை தொந்தரவு பன்னாதே”...
“பல நாட்களுக்கு பின் எரிச்சலாய் வந்து விழுந்த தகப்பனின் வார்தைகளில் அவள் அமைதியாகிப்போனால்”..
அப்போது எதேர்சையாய் அவள் திரும்புகையில் இனியன் அவர்கள் அருகில் இருப்பதை கண்டு “ஹலோ மிஸ்டர் ஊர்ல போய் கேசை கண்டு பிடீங்கனா...அதெல்லாம் விட்டிட்டு படம் பாக்க வந்திருக்கீங்க உங்களை நம்பி இந்த கேசை ஒப்படைச்சவன் மட்டும் கையில கிடைச்சான் அவ்வளோ தான்” தகப்பனது காண்டை அவளோடு தோழமையில் அடிக்கடி பேசிவிட்டு சென்ற இனியன்மீது வெளிபடுத்தப்பட “இது நல்லா இருக்கே கேக்க அப்போ வீட்டுக்கு போயா உங்க. அப்பா கழுத்தை தான் நீங்க பிடிக்கனும்” அவளுக்கு நக்கலாகவே அதற்கு பதில் அழித்தவன் அங்கு இடம் முழுக்க இருள் சூழபட்டு திரை ஆன் செய்யவும் அமைதியானான்...
“இதெல்லாம் விருப்பம் இல்லாட்டியும்....வணி சொன்ன ஒன்னுக்காக இந்த படத்தை பார்க்க ஒரே ஆர்வமா இருக்கு” வாசுகி சொல்லவும் பிரபாகரன்
“வணிம்மா சொன்ன ஒன்னா அதென்ன இதை பத்தி நீ எனக்கு சொல்லலை”
பிரபாகரன் அப்படி கேட்டதும் “சிறித்துக் கொண்டே வாசுகி சொன்னார் அங்கே உருவாயிருக்கிறது என் நர்முகிலியின் கதை என்று...
நிகழும்...