கேளடி என் கண்மணி
முன்னோட்டம்
................................................
மீண்டும் பிறக்கும் வரம் ஒன்று கிடைக்கட்டும்
சேர்வது உனைமட்டுமே என்றால்!!!!!
................................................
மெல்ல கரையும் இரவு... தென்றலில் மென்மையான தீண்டல்... மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட அந்த தோட்டம், என எங்கும் மகிழ்ச்சியின் பிம்பம் விரிந்த்துகிடக்க அவன் மனம் மட்டும் ஆர்பரிக்கும் கடலென கொதித்துகொண்டிருந்தது...
நேற்றுவரை குளிர்ந்த வெண்நிலவின் ஒளி இன்று சூரியனின் கனலாய் சுட்டெரிக்க அவன் கண்களொ மூடியிருந்த அவளின் பால்கனி கதவையே வெறித்து பார்த்துகொண்டிருந்தன...
“இந்ந நேரம் தூங்க்கிறுப்பாளா??” நீ செஞ்ச காரியத்துக்கு நல்லா தூக்கம் வரும், போடா Fool. என மனசாட்சி சவுக்கால் அடிக்க அங்கிருந்து புறபட்டவனுக்கு மேலும் ஒரு இடி...
மெல்லிய நீல வண்ண உடையில் கார்க்கூந்தல் காற்றில் தவழ, எதுவும் நடகாதது பொல் முகத்தில் புன்னகையுடன் முழு பவுர்ணமியாய் நடந்துவந்த அவளை பார்த்து இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அந்த அதிர்ச்சி உடைவதற்குள் தன் கையில் இருந்த காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.
“என்ன இது?”
“உங்களுக்கு தான். படிங்க.” அதை படித்தவனுக்கு ரத்தம் நாடி நரம்பு என அனைத்தும் கொதித்தது.
“இதுக்கு என்ன அர்த்தம்?” என நெருப்புப்பந்தாய் பாய்ந்தான். நெற்றிக்கண் மட்டும் இருந்திருந்தால் அவளை எரித்தே இருப்பான்.
“அதுல என்ன இருக்கோ அதான் அர்த்தம்.” என்று கூறி கோபத்தின் விளிம்பில் நின்ற அவனை சலனமற்று கூலாக பார்த்தாள். “யார் யாரோ... எதேதோ குடுத்து சொல்லுவாங்க. நான் இத குடுத்து சொல்றேன். என்னை கல்யாணம் பண்ணிகங்க. Just Marry me.”
******************************************************
Teaser எப்படி இருக்கு????? மறக்காம comment ல சொல்லுக மக்களே... நாளைக்கு தமிழ் முதல் நாள் முதல் பகுதியோட உங்கள மீட் பண்றென்.... டாட்டா....