நிலவழகி- அத்தியாயம் - 9
நிலவழகியைக் காணவில்லை என்ற செய்தியை கேட்டதிலிருந்து வசந்தின் மனம் காட்டில் நிலை கொள்ளாது அவளை தேடிச் செல்ல அவனை வற்புறுத்தியது.
வசந்தும் நிலவழகியை தேடிச் செல்ல எத்தனித்தான். அதற்கு முன் அவளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவள் தாத்தாவைப் பார்க்க முடிவு செய்து பெங்களூரு நோக்கிச் சென்றான்.
மிகவும் கலங்கியிருந்த வசந்தின் சிந்தனைகள் வரிகளாய்…. உள்ளங்கவர்ந்த பெண்ணொருத்தி என் உடலைக் கவராமல் மறைந்து விடுவாளோ?
"என் விழியில் விழ வழி தேடி வந்து; என் கனவு தேவதையை உயிர்ப்பித்தவளே...
உன்னோடு சேர்ந்து வாழ ஆசையாய்
மனதோடு நான் கட்டிய கூட்டை வெறும் பிம்பமாக்கி சென்று விட்டதேன்...................."
"இந்தக் கேள்விகளை உன் கண்களைப் பார்த்துக் கேட்காமல் நான் சாக மாட்டேன். என் சகியே நீ இந்த பிரபஞ்சத்தில் எங்கு மறைந்திருந்தாலும், உன்னைத் தேடி உனக்காக நான் வருவேன்" என்று கலங்கிய தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான் வசந்த்.
இன்பம், துன்பம், கோபம், சாந்தம், வெறுப்பு, ஆசை, ஈர்ப்பு, நிராசை இவையெல்லாம் வெறும் மாயை. இவைகளைத் தாண்டி விட்டால் ஒருவன் வாழ்வின் உன்னத நிலையை அடைந்து விடலாம் என சில நூல்களில் படித்ததுண்டு.
ஒரு காலத்தில் மாயையைத் தாண்டி உன்னத நிலையை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணிய என் மனம் இன்று நிலவழகிக்காக வருந்துவது மாயையின் நிழல் என்று தெரிந்தும் அதை விடுத்துச் செல்ல (மனம்) மறுக்கின்றது.
நிலவழகி, உன்னை துறந்து சென்றால் தான் உன்னத நிலையை அடைய முடியுமென்றால், எனக்கு உன்னத நிலை வேண்டாம். உன் நிழல் வாழ்வு போதும்!
இத்தகைய மன ஓட்டங்களுடன் வானூர்தியின் ஓட்டமும் சேர்ந்து வசந்தை பெங்களூரு கொண்டு வந்து சேர்த்தது.
அங்கு ஆகாஷ் ஷர்மாவின் வீட்டை அடைந்த வசந்த் அவரிடம் சென்று தன் நிலையை சொன்னால் தனக்காக பரிதாபப்படுவாரா இல்லை தன்னை மனநிலை சரியில்லாதவன் என புறக்கணித்து விடுவாரோ, என்று எண்ணினான், எதுவாகயிருந்தாலும் அவரிடம் பேசிவிடுவது என்று முடிவு செய்து அழைப்பு மணியை அழுத்தினான்.
அழைப்பு மணி அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பதனை சிறிது நேரம் காத்திருந்ததில் தெரிந்து கொண்ட வசந்த் மீண்டும் அழைப்பு மணியை இயக்கினான். ஆளரவமற்ற அந்தப் பகுதியில் அழைப்பு மணியின் ஓசை வீட்டினுள் பட்டு எதிரொலித்தது. இம்முறையும் யாரும் வரவில்லை.
சரி, கதவை தட்டி அழைத்துப் பார்ப்போம் என்று நினைத்த வசந்த் கதவில் சென்று கை வைத்தான். கதவு திறந்திருந்தது.
உள்ளே செல்வதா வேண்டாமா என்று ஒரு விநாடி தயங்கிய வசந்த்தை அவன் நிலவழகியின் மேல் கொண்ட ஈர்ப்பு உள்ளிழுத்துச் சென்றது. உள்ளே சென்று பலமாக ஆகாஷ் சர்மா என்று அழைத்தான். உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆதலால் அவன் அழைத்துக் கொண்டே வீட்டினுள் சென்றான்.
அங்கு நிலவழகியின் புகைப்படத்தைப் பார்த்த அவனது உள்ளுணர்வு அவளை நிச்சயமாக விரைவில் காணப்போகிறாய் என்று அவனுக்கு உணர்த்தியது. அவன் வீடு முழுவதும் சென்று பார்த்து விட்டான். உள்ளே யாரும் இல்லாததைக் கண்டு மிகவும் ஏமாற்றமடைந்தான்.
மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அவனின் கவனத்தை அந்த வீட்டின் ஒரு ஓரத்தில் முற்றிலும் இருள் சூழ்ந்த ஒரு அறை ஈர்த்தது.
மனிதனுக்கு சில நேரங்களில் சில நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே இது இப்படித்தான் நடக்கும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை ஏற்படும். சில நேரங்களில் அது அப்படியே நடந்து விடுவதும் உண்டு. அந்த இருள் சூழ்ந்த அறைக்குள் சென்றால் மேலே விண்வெளியில் தொலைந்து போன நிலவழகியிடம் சென்று விடலாம் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை வசந்த்திற்கு வந்தது.
அந்த நினைப்பு தந்த பரவசத்தினால் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த அறையை நோக்கி ஓடினான், வசந்த் வந்த வேகத்தில் அந்த அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இடித்து தலைகீழாக விழுந்தான்.
விழுந்தவன் தரையில் விழவில்லை ஒரு குழியில் விழுந்து படியில் உருண்டான். மேலே விண்வெளிக்கு கொண்டு சேர்க்கும் என்று நினைத்த அவனை அந்த அறை குழியின் வழியாக அதல பாதாளத்திற்குக் கொண்டு சேர்த்தது.
எதிர்பாராமல் இப்படி விழுந்ததில் தடுமாறிப் போன வசந்த் சுதாரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். சுற்றிலும் இருள் சூழ்ந்து எங்கு இருக்கிறோம் என்று அறிய முடியாமல் தவித்த வசந்த்தின் கண்களுக்கு இருள் பழகப் பழக அது ஒரு சுரங்கம் என்று தெரிந்தது.
நிலவழகியைக் காணவில்லை என்ற செய்தியை கேட்டதிலிருந்து வசந்தின் மனம் காட்டில் நிலை கொள்ளாது அவளை தேடிச் செல்ல அவனை வற்புறுத்தியது.
வசந்தும் நிலவழகியை தேடிச் செல்ல எத்தனித்தான். அதற்கு முன் அவளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவள் தாத்தாவைப் பார்க்க முடிவு செய்து பெங்களூரு நோக்கிச் சென்றான்.
மிகவும் கலங்கியிருந்த வசந்தின் சிந்தனைகள் வரிகளாய்…. உள்ளங்கவர்ந்த பெண்ணொருத்தி என் உடலைக் கவராமல் மறைந்து விடுவாளோ?
"என் விழியில் விழ வழி தேடி வந்து; என் கனவு தேவதையை உயிர்ப்பித்தவளே...
உன்னோடு சேர்ந்து வாழ ஆசையாய்
மனதோடு நான் கட்டிய கூட்டை வெறும் பிம்பமாக்கி சென்று விட்டதேன்...................."
"இந்தக் கேள்விகளை உன் கண்களைப் பார்த்துக் கேட்காமல் நான் சாக மாட்டேன். என் சகியே நீ இந்த பிரபஞ்சத்தில் எங்கு மறைந்திருந்தாலும், உன்னைத் தேடி உனக்காக நான் வருவேன்" என்று கலங்கிய தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான் வசந்த்.
இன்பம், துன்பம், கோபம், சாந்தம், வெறுப்பு, ஆசை, ஈர்ப்பு, நிராசை இவையெல்லாம் வெறும் மாயை. இவைகளைத் தாண்டி விட்டால் ஒருவன் வாழ்வின் உன்னத நிலையை அடைந்து விடலாம் என சில நூல்களில் படித்ததுண்டு.
ஒரு காலத்தில் மாயையைத் தாண்டி உன்னத நிலையை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணிய என் மனம் இன்று நிலவழகிக்காக வருந்துவது மாயையின் நிழல் என்று தெரிந்தும் அதை விடுத்துச் செல்ல (மனம்) மறுக்கின்றது.
நிலவழகி, உன்னை துறந்து சென்றால் தான் உன்னத நிலையை அடைய முடியுமென்றால், எனக்கு உன்னத நிலை வேண்டாம். உன் நிழல் வாழ்வு போதும்!
இத்தகைய மன ஓட்டங்களுடன் வானூர்தியின் ஓட்டமும் சேர்ந்து வசந்தை பெங்களூரு கொண்டு வந்து சேர்த்தது.
அங்கு ஆகாஷ் ஷர்மாவின் வீட்டை அடைந்த வசந்த் அவரிடம் சென்று தன் நிலையை சொன்னால் தனக்காக பரிதாபப்படுவாரா இல்லை தன்னை மனநிலை சரியில்லாதவன் என புறக்கணித்து விடுவாரோ, என்று எண்ணினான், எதுவாகயிருந்தாலும் அவரிடம் பேசிவிடுவது என்று முடிவு செய்து அழைப்பு மணியை அழுத்தினான்.
அழைப்பு மணி அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பதனை சிறிது நேரம் காத்திருந்ததில் தெரிந்து கொண்ட வசந்த் மீண்டும் அழைப்பு மணியை இயக்கினான். ஆளரவமற்ற அந்தப் பகுதியில் அழைப்பு மணியின் ஓசை வீட்டினுள் பட்டு எதிரொலித்தது. இம்முறையும் யாரும் வரவில்லை.
சரி, கதவை தட்டி அழைத்துப் பார்ப்போம் என்று நினைத்த வசந்த் கதவில் சென்று கை வைத்தான். கதவு திறந்திருந்தது.
உள்ளே செல்வதா வேண்டாமா என்று ஒரு விநாடி தயங்கிய வசந்த்தை அவன் நிலவழகியின் மேல் கொண்ட ஈர்ப்பு உள்ளிழுத்துச் சென்றது. உள்ளே சென்று பலமாக ஆகாஷ் சர்மா என்று அழைத்தான். உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆதலால் அவன் அழைத்துக் கொண்டே வீட்டினுள் சென்றான்.
அங்கு நிலவழகியின் புகைப்படத்தைப் பார்த்த அவனது உள்ளுணர்வு அவளை நிச்சயமாக விரைவில் காணப்போகிறாய் என்று அவனுக்கு உணர்த்தியது. அவன் வீடு முழுவதும் சென்று பார்த்து விட்டான். உள்ளே யாரும் இல்லாததைக் கண்டு மிகவும் ஏமாற்றமடைந்தான்.
மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அவனின் கவனத்தை அந்த வீட்டின் ஒரு ஓரத்தில் முற்றிலும் இருள் சூழ்ந்த ஒரு அறை ஈர்த்தது.
மனிதனுக்கு சில நேரங்களில் சில நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே இது இப்படித்தான் நடக்கும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை ஏற்படும். சில நேரங்களில் அது அப்படியே நடந்து விடுவதும் உண்டு. அந்த இருள் சூழ்ந்த அறைக்குள் சென்றால் மேலே விண்வெளியில் தொலைந்து போன நிலவழகியிடம் சென்று விடலாம் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை வசந்த்திற்கு வந்தது.
அந்த நினைப்பு தந்த பரவசத்தினால் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த அறையை நோக்கி ஓடினான், வசந்த் வந்த வேகத்தில் அந்த அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இடித்து தலைகீழாக விழுந்தான்.
விழுந்தவன் தரையில் விழவில்லை ஒரு குழியில் விழுந்து படியில் உருண்டான். மேலே விண்வெளிக்கு கொண்டு சேர்க்கும் என்று நினைத்த அவனை அந்த அறை குழியின் வழியாக அதல பாதாளத்திற்குக் கொண்டு சேர்த்தது.
எதிர்பாராமல் இப்படி விழுந்ததில் தடுமாறிப் போன வசந்த் சுதாரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். சுற்றிலும் இருள் சூழ்ந்து எங்கு இருக்கிறோம் என்று அறிய முடியாமல் தவித்த வசந்த்தின் கண்களுக்கு இருள் பழகப் பழக அது ஒரு சுரங்கம் என்று தெரிந்தது.