அத்தியாயம் 8
ராஜி அறைவாயிலில் நிற்பதனை முதலில் கண்ட பரணி அவளினைப் புருவம் உயர்த்தி என்ன எனக் கேட்க.. அவள் அமுதனை விழிகளில் சைகை செய்ய.. பரணி தலையினை அசைத்து எழுந்து வெளியில் சென்று விட்டான். அதுவரையிலும் அமுதன் நிமிரவே இல்லை. ராஜி தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைய..
"என்ன சொல்லு", அமுதன் நிமிராமலேயே கூறவும்.. ராஜி அவன் கேட்கவும் வார்த்தை வராமல் தடுமாறினாள்.
பல நொடிகள் அமைதியில் கழிய அமுதன் அவனது மடிக்கணினியினை மூடியவன் அவளினைக் கூர்ந்து நோக்கவும்..
'இதுக்கு அவன் கீழே குனிந்து இருக்கும்போதே சொல்லிருக்கலாம்' என்றுத் தன்னையே நொந்தவள் அவளும் அவன் விழிகளினைக் கண்டாள்.
"நான் என் ப்ரண்ட்ஸ் கூட வெளியில் போய்ட்டு வரேன். அதான் உங்க கிட்ட", ராஜி.
"உன் விருப்பம்", அமுதன்.
"அப்புறம்", ராஜி இழுக்க..
"அப்புறம்", அமுதன்.
"பார்லர் வைக்கலாம்னு நாங்க ப்ளான் பண்ணோம்.. அதான் நீங்க சரின்னு சொன்னா வைக்குறேன்", ராஜி தயங்கிக் கொண்டே கூற...
"எங்கே? ", அமுதன்.
"ராம் நகர்ல ஒரு இடம்.. அங்கே தான்", ராஜி.
"ரெடி ஆகு.. நான் வரேன்", அமுதன்.
"ம்ம்ம்ம்..", என்று சந்தோசமாக வெளியேறினாள்.
அப்பொழுதுதான் ரம்யா, சசி இருவரும் வீட்டினுள் நுழைய வெளியில் அமர்ந்திருந்த பரணியின் விழிகள் தன்னவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தது.
தன்னவளின் விழிகளும் தன் மேல் ஆர்வத்துடன் படிவதனைக் கண்டவன் காற்றில் மிதந்தான் என்றே கூறலாம்.
வந்தவர்களினை உள்ளே வரவேற்றவன் ராஜி கீழே வரவும் டீ போடச் சென்றுவிட்டான்.
"அவரும் வரேன் சொன்னார் டி. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க", ராஜி.
"பரணி சிறிது நேரத்தில் டீ உடன் வர டீயினைப் பருகிய சசி "என்ன பாஸ்.. டீ நீங்க தான் போட்டீங்களா.. இப்படி இருக்கு", எனவும்
"ஏண்டி நல்லா தான இருக்கு", ரம்யா
"இல்லை இவ்வளவு அருமையா இருக்கேன்னு தான் கேட்டேன். இது நீங்க போட்டது தானா", சசி.
"இல்லை என் ஆவி போட்டது.. பாரு ஆவி கூட மேலே பறக்குது", பரணி.
"ப்ஃபூ ப்ஃபூ... இப்போ பாருங்க உங்க ஆவி காணாம போய்ட்டு", சசி சொல்லி சிரிக்க..
ராஜி அவளினை ஒரு மார்க்கமாக பார்த்தாள் என்றாள்.. ரம்யா அவளினை விசித்திரமாகப் பார்த்தாள். பின்னே யாரிடமும் அவளாக சென்று பேசும் பழக்கம் இல்லை. பின்னே பரணியிடம் அவளாகவே பேசுவதனைப் பார்த்தால் ஆச்சர்யப் படுவதில் தவறில்லையே...
பரணியும் சிறு புன்னகை உடன் உள்ளே சென்றுவிட்டான்.
அமுதனும் கீழே வர... நால்வரும் கடைக்குப் பயணமானார்கள். அமுதன் சசி மற்றும் ரம்யாவிடம் சாதரணமாக தொழில் சம்மந்தமாக பேச.. ராஜிக்கு தான் நம்மிடம் மட்டும் பேச வருத்தம் போல என்று முகத்தினை சுளித்துக் கொண்டாள். அமுதனும் அவர்களிடம் தொழில் சம்மந்தமான அனைத்துக் கேள்விகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். நகருக்கு வந்ததும் காரினை செட்டில் நிறுத்திவிட்டு இவர்களுடன் நடக்க..
தனக்காகத் தான் இங்கு வரை வந்திருக்கின்றான் என்று எண்ணி ராஜி மகிழ்ச்சியில் அவள் கடைக்குச் செல்லும் திசையில் அமுதனை அழைத்துச்செல்ல... அவன் கடைக்குள் கூட நுழையவில்லை..
"சரி வொர்க் முடிஞ்சதும் சொல்லு. எனக்கு இங்கே தான் வொர்க் இருக்கு..பை சசி அண்டு ரம்யா", அமுதன்.
அவளிடம் பதில் கேட்கக் கூட இல்லை. அவன் கூறிவிட்டுச் சென்றுவிட... இவளுக்குத் தான் அவனை போய் நல்லவிதமாக நினைத்தோமே என்று தோணியது..
மூவரும் கடையினை சுத்தம் செய்யத் தயாராகினர்.
அது பெரிய மால் இருக்கும் இடம் என்பதால் அங்கு பெரியக் கூட்டம் இருந்து கொண்டு தான் இருந்தது.
மூவரும் ஒரு வழியாக இடம் முழுவதும் சுத்தம் செய்து அங்கு இருந்த அனைத்துப் பொருள்களினையும் அதற்குரிய இடத்தில் வைத்து அலங்காரப் புகைப்படம் பலவற்றினை ஒட்டிக் கடைசியில் தூசியாய் கிடந்த அவ்விடத்தினை அவ்வளவு அழகாக மாற்றினர்.
சுத்தம் செய்து முடிக்கவே மதிய நேரம் கடந்தது. அமுதனுக்கு அழைக்கலாம் என்று அழைக்கும் நேரம் பரணி அங்கு வந்து சேர... அதன் பின் பரணியுடன் மூவரும் வீடு வந்தனர்.
ரம்யா சசி இருவரும் சிறிது நேரத்தில் சென்றுவிட.. அதன் பின் தான் அமுதன் அலுவலக அறையில் இருப்பது அவளுக்குத் தெரிந்தது.
"உங்க அண்ணன் அவர் வேலை முடிஞ்சதும் என்னை மறந்துட்டாரா... நான் கூட என்னை தான் அக்கரையா அழைச்சிட்டுப் போறார்னு நினச்சேன்... ஆனால் அவர்... அவர் வேலைக்கு தான் வந்து இருப்பார் போல", என்று மனத் தாங்கலாக ராஜி கூற...
"என்ன சொல்ற நீ... அண்ணாக்கு அங்க என்ன வேலை.. வொர்க்லாம் அண்ணா சிஸ்டம்லயே முடிச்சிடுவார். அவருக்கு போய் பார்க்க வேண்டிய வேலை எல்லாம் எதுவும் கிடையாது... எதுவும் பார்ட்டினாலும் அவர் வெளியில் போக மாட்டார். நான் தான் பார்மாலிட்டிக்கு டென் மினிட்ஸ் அங்கே போய்ட்டு வருவேன்", பரணி.
"அப்போ என்கிட்ட வேலை இருக்குன்னு போய் பார்க்குறேன் சொன்னது??? எதுக்கு பொய் சொல்லனும்", ராஜி.
"அதான் தெரில... சீக்கிரம் கண்டு பிடிக்கனும்", பரணி.
"என்னடா கண்டு பிடிக்கப் போற...", ராஜி.
"என்னது டாவா???? ", பரணி.
"ஆமாடா... நீ டா தான்... நீ இப்போ எனக்கு ப்ரண்டு... சொல்லு என்ன கண்டு பிடிக்கனும்", ராஜி.
"அது சரி... எல்லாம் என் நேரம்... ", பரணி புலம்ப
"வெட்டியா பேசி டைம் வேஸ்ட் பண்ணாம விஷயத்துக்கு வா", ராஜி.
"அண்ணாக்கு உன் மேல அக்கரை இருக்கு... அப்போ லவ் இருக்குமா...???", பரணி
"லூசுத்தனமா எதுவும் பேசாம அமைதியா இரு.. உன் அண்ணனுக்கு லவ்வா... வாய்ப்பே இல்லை", ராஜி.
"என்ன இப்படி கேட்குற.. என் அண்ணனுக்கு லவ் இருந்துச்சு... பட் பாஸ்ட் அது", பரணி.
ராஜி விழி விரியப் பார்க்க.. அவளின் முக பாவனையில் சிரித்தவன்..
"நம்ப மாட்டியா.. இங்கே பாரு... இந்த ப்ரோகிராமில", என்று கூறியவன் ரெக்கார்டு செய்து வைத்திருந்த ஒரு வீடியோவினை ஆன் செய்து விட அதில்...
ஒரு ப்ரொக்ராமிற்கு அங்கு கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தனர்... அப்பொழுது அமுதனிடம் மைக் கொண்டு சென்ற ஒரு பெண்..
"நீங்க சொல்லுங்க சார்.. நீங்க யாரையாவது லவ் பன்றீங்களா..???", அந்தப் பெண்.
அவன் தலையினைக் கோதி அழகாக முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் முகத்தில் அப்படி ஒரு வெட்கம் கலந்த காதல்... அந்த சிரிப்பினில் ராஜி சிறிது தடுமாறினாள் என்று தான் கூற வேண்டும்...
"எஸ் ஐம் இன் லவ்", என்று அவன் கூற.. இவளுக்கு சிறிதாக நெஞ்சில் வலி.. அது தானில்லையே என்று..
"வாவ் அப்போ மேரேஜ் எப்பொ சார்... ", அந்தப் பெண்.
அமுதன் அருகில் இருந்தவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு அந்தப் பெண்ணிடம் திரும்பி.."இன்னும் நான் அவகிட்ட சொல்லல... சொன்னா தான் மேரேஜ் ", அமுதன் கூற
"வாவ் இன்ட்ரஸ்டிங்... அப்போ சீக்கிரம் லவ் சொல்லி மேரேஜ் பண்ணுங்க சார்.. வாழ்த்துக்கள்", அந்தப் பெண்.
"ஸ்யூர்", அமுதன் சிரித்துக் கொண்டே செல்ல...
இவனுக்கு இப்படியெல்லாம் சிரிக்கத் தெரியுமா என்று மனதில் கேள்வி எழும்ப.... அந்த வீடியோ உண்மை ஆம் என்று கூறியது..
ராஜி அதிலேயே மூழ்கி இருக்க.. பரணி தான் அவளை அசைத்து நினைவிற்கு கொண்டு வந்தான்.
"இப்போ என்ன சொல்ற... அண்ணாவப் பத்தி", பரணி.
"அதெல்லாம் சரி.. அப்புறம் என்ன ஆச்சு.. அந்தப் பொண்ணுகிட்ட லவ் சொன்னாரா இல்லையா???", ராஜி.
"லவ் சொன்னாரா என்னனு தெரில.. சுமிக்கு இப்படி ஆனதும் நாங்க அதப் பத்திலாம் யோசிக்கல..
அண்ணாக்குக் கல்யாணம் பற்றி நான் பேசவும் தான் அண்ணா நடந்தத சொன்னார்..
சங்கர் தேவன் மூலமாக பேசலாம் என்று எண்ணிய பரணி அவருடன் நின்று "அண்ணா உங்க லவ் பத்தி சொன்னீங்க ஒரு ஸோல.. அந்தப் பொண்ணு யாருன்னு சொன்னீங்கன்ன.." என்று கேட்க
அமுதன் அவனை அழுத்தமாகப் பார்க்க.. "இல்ல அமுதா நான் தான் கேட்க சொன்னேன்.. நீ என்ன சொல்றப்பா", சங்கர்.
"இப்போ என்ன அவசரம்", என்று அதே அழுத்தத்துடன் கேட்க..
"அப்பா இருந்தா இவ்வளவு நாள் விடமாட்டார்ல அமுதா.. என்னையும் அப்பான்னு தான் நினைக்குறத சொல்ற.. எனக்கு சீக்கிரம் பண்ணி வைக்கனும்னு தோணுது..." சங்கர்.
அவர்கள் இருவரினையும் பார்த்தவன் பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டு "இல்லை. அந்தப் பொண்ணுக்கு மேரேஜ் ஆகிட்டு.. இப்போ அது முடிந்த விஷயம்", என்று அமுதன் கூற
அதன் பின் இருவரும் அது பற்றிப் பேசவே இல்லை.
நடந்ததினை பரணி ராஜியிடம் கூற... ராஜிக்கு மகிழ்ச்சியே... அப்பாடா என்று இருந்தது... ஏன் என்று அவள் மனம் கேட்க.. "அப்படித்தான்" என்று அவள் கூறிக் கொண்டாள்.
"இன்னும் விவரமா தெரியனும்னா... உங்க ரூமில் வாட்ரோப் பின்னாடி ஒரு ரூம் இருக்கும்.. அங்க தான் விவரம் இருக்கும்னு நினைக்குறேன்.. அங்க பாத்தீன்னா தெரியும்", பரணி.
"அங்க எங்கடா ரூம் இருக்கு... எனக்குத் தெரியாம", ராஜி.
"இருக்கு... போய் நல்லா பாரு", பரணி.
"சரி பாப்போம்", ராஜி.
அண்ணாக்குத் தெரியாம செய்.. அப்புறம் பின் விளைவு என்று அவன் கன்னத்தினைத் தடவிக் காட்ட.... "ஒரு தடவை தான் அப்படி.. இனியெல்லாம் நாங்க உஷாரா இருப்போம்ல", ராஜி.
அவள் தலையினை லேசாகத் தட்டியவன் "நீ திருந்த மாட்ட", பரணி.
அதன் பின் எப்பொழுதும் போல் சுமியினைக் கவனித்துவிட்டு அமுதன் அவனது அறைக்கு வர இரவு நெருங்கி இருந்தது..
ராஜி அவளது இடத்தில் கால்களினைச் சுருக்கி நன்றாக உறங்கியவாறு இருக்க.. அமுதனும் உறங்கத் தொடங்கினான்.
வெகு நேரம் பின் விழியினைத் திறந்த ராஜி திரும்பி அமுதன் உறங்கி விட்டானா என்று பார்க்க.. அவன் அந்த புறம் திரும்பி உறங்கி இருக்க.. மெதுவாக எழுந்தவள் வாட்ரோப் அருகில் சென்றாள்......!!!
கையில் ஏந்துவான் !
தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி
ஹாய் மக்களே🤗... நிறை குறை கூறி என்னை செதுக்கும் உளி நீங்களே... என்னை செதுக்கத் தயாராகுங்கள்😘😘😘 என்றும் உங்களின் நிவி🤗
www.srikalatamilnovel.com